07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2007

சிவாஜிக்குப் பின்..




சிவாஜிக்குப்பின், அடுத்த பிரம்மாண்டம் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

தமிழ்த் திரையுலகில் நடிப்பில் தனக்கென ஒரு தனித்துவத்தைக்காட்டி மறைந்த, நடிகர்திலகம் சிவாஜிக்குப்பின்னான ஒரு திறமை பற்றி, அல்லது மாராட்டிய வீரன் வீர சிவாஜிக்குப் பின்னான, ஒரு பெரும் வீரம்பற்றி, சிந்திப்பதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வியென இதை எண்ணும் அளவுக்கு சிந்தனை வீச்சு அற்றவர்களாக உங்களை நான் எண்ணிவிடவில்லை.

ஆக நீங்கள் எண்ணியபடியே, சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்துக்குப் பின், வரக் கூடிய அடுத்த பிரம்மாண்டம் பற்றிய தகவல்கள் மெதுவாகக் கசியத் தொடங்கிவிட்டன...

இதுபற்றி நீங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லையா...அப்படியானால் கட்டாயம் இந்த இடுகையை , இந்தப் பதிவுகளை , நீங்கள் பார்க்க வேண்டும். அவற்றில் ஆங்காங்கே அத்தகவல்கள் கசிந்துள்ளன. கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். பார்ப்போம்....
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2007

குறிவைக்கப்படும் இந்திய இளந்தகமை.

நேற்று என் முதலாவது இடுகையை இட்டதும் பலர் நினைத்திருக்கக் கூடும், ஈழவிடுதலைப்போராட்டம் குறித்த விடயங்களைப்பற்றியே பேசப்போகின்றேன் என்று. பலர் வந்து பார்த்தும், மெளனமாய் போனதற்கும் இதுவே காரணம் என்பதையும் நன்கறிவேன். ஆனால் என் நோக்கம் அதுவல்ல. கட்டுப்பெட்டிகளாக இருந்த எங்கள் கண்களைத்திறந்து ஈழவிடுதலைப்போராட்டம்தான். தேசிய விடுதலைப்போர் என்ற எண்ணப்பாட்டினூடே எங்கள் தேசத்திலுள்ள ஏனைய ஒடுக்குமுறைகளையும் நாங்கள் அறியத் தொடங்கினோம்...

கிராமத்துத் தெருக்களிலும், வயல் நிலங்களிலும், கடற்கரைகளிலும், திரிந்தவர்களால், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் துயர்களையும், துன்பங்களையும், நேரிடையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைவிடவும், அதுபோன்ற துயர் நிகழுமிடங்களை அடையாளங்காணவும் முடியும். அண்மையில், விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பேசிய ஒரு தமிழக இளைஞனின் உரையில், வளர்ந்துவரும் இந்தியாவின் வளங்கள் மீது வைக்கப்படும் குறிகள் பற்றி விளக்கமாகச் சொன்னான். யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாத ஆணித்தரமான வாதம். அந்தளவில் அதைவிட்டுவிட்டேன்.

சென்றவாரத்தில் சுவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், இந்தியா மீதான ஒரு பார்வை ஆராயப்பட்டது. நிகழ்ச்சியின் காட்சிப்படிமத்தில் கமலும் சிநேகாவும் சுவிஸ் மலைகளில் நடனமாடுக் காட்சியைப்படமாக்கப்படுவதும் கூடக்காட்டப்பட்டது. ஆகா நம்ம தமிழ் நட்சத்திரங்கள் சுவிஸ் தொலைக்காட்சியில் என ஒரு கணம் புல்லரித்துப்போனாலும், நிகழ்ச்சி சொன்ன செய்தி, சூடாகவே இருந்தது. சுருக்கமாகச் சொல்வதாயின், தொழில்நுட்பத் தகமைகளில், திறன் பெற்றுவரும், இந்திய இளைஞர்களின் உழைப்பை, உழைப்பாகவும், உல்லாசமாகவும், பெற்றுக்கொள்வதற்கான திட்டமாகவே எனக்குப் பட்டது. இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இனிவரும் காலங்களில் உலகெங்கிருந்தும் வரலாம். அவற்றில் கணேசாவும்(விநாயகர்), கமலஹாசனும், கைகோர்த்தும் வரலாம். அவற்றினூடு இந்தி இளைஞர்களின், திறமை, உழைப்பு, ஊதியம் என்பன, அவர்களறியாமலே உறிஞ்சப்படலாம். இதைப்பபற்றி, இளைய இந்தியா எண்ணிப்பார்க்கவில்லையா என்ற சிந்தனையோடு வலைப்பதிவுலகில் பார்த்த போது சில பதிவுகள், இடுகைகள், கண்ணில் பட்டன..

அசுரனின் இந்த இடுகையும், வேறுபல இடுகைகளும் இதுகுறித்துப் பேசியுள்ளது. இதுபோன்று ஆழியூரானின் நடைவண்டி., வரவனையான், ராஜாவனஜ், சபாபதி சரவணனின் துள்ளிவருகுது வேல் , என அவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன். இதனால், இவர்கள்தான் என்றல்ல, இந்தப்பதிவர்களின் எல்லா இடுகைகளையும் படித்தவனும் என்றல்ல. ஆனால் இவர்களது ஏதோ ஒரு இடுகையைப் படித்தபோது இவர்களுள் உறைந்துபோயுள்ள உணர்வினைக் கண்டுகொண்டதால், குறிப்பிட்டுள்ளேன். இந்திய தேசத்தின் பரப்பு விசாலத்திற்கு இந்த உதாரணங்கள் ஒரு துளி மட்டுமே....
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2007

ஒளிபடைத்த கண்ணினாய்...


என் தமிழ்மண நட்சத்திரவாரப் பதிவுகளில் ஒன்று, என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். இதைப்படித்த தமிழக நண்பர் ஒருவர் மடலிட்டிருந்தார். அப்பதிவு வாசித்ததின் பின் சில தினங்களுக்கு ஒரு சிறுமியின் சிரித்த முகம் தன் நினைவில் வந்தபடியே இருந்ததென்று. அது என் எழுத்தின் வலிமை என்று நான் எண்ணவில்லை, என்தேசத்தின் வலியென்றே உணர்ந்தேன். அதனை மற்றொருவருக்கும் உணர்த்த முடிந்ததே என்பதில் நிறைவு. சில தினங்களுக்கு அவருக்கு நினைவில் வந்த சிறுமியின் முகம், அதுதான் சிகப்பியின் முகம் இருபது வருடங்களாக என் நினைவில் நிற்கிறதே.

நெடுந்தீவுக்கடலில் குமுதினிப்படகில் பயனித்தவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். செய்தி தெரிந்ததும், யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவான் துறைமுகத்துக்குச் சென்ற செய்தியாளர்களுடன் நானும். அப்படியொரு கோரத்தை அதுவரையில் கண்டதில்லை. கண்டவற்றைப் படமாக்கியபடியிருந்த என் கமெராத் திரையில் நெஞ்சில், பைனைட் கத்தியால் குத்தப்பட்டிறந்த அந்தக் குழந்தை தெரிந்தபோது நடுநடுங்கிப்போனேன். காட்சி மங்கலாயிற்று. என்கண்களில் கண்ணீர் முட்டிற்று. கைகள் நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அப்படியே அருகிலிருந்த கல்லொன்றில் அமர்ந்து கொண்டேன். எத்தனை இரவுகள் பகல்கள் கழிந்த போதும் அந்தக்காட்சி அழியவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அதைவிடப் பயங்கரமான காட்சிகளை அதிர்வின்றி, ஏற்றுக் கொள்ள, மரணத்துள்ளான வாழ்வு எம்மை தயார்படுத்தியிருந்தது.

எண்பத்தைந்தில் ஒருபொழுது, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிப்போயிருந்த சமயம், தொடர்ச்சியாகப் பதினெட்டுமணிநேர எறிகணைவீச்சு. எத்தனைபேர் இறந்தார்கள் என உடனே சொல்ல முடியாவாறு சதைப்பிண்டங்களின் சிதறல். உதவிக்குழு ஒன்றோடு செல்கின்றேன். உடலில் அசைவு இருந்தால் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு அனுப்பு, இல்லையெனில் சவக்காலைக்கு அனுப்பு, என்றவகையில் வகைப்படுத்திய பரிதாபம். ஆனால் பணியாற்றிய யாரும் சளைக்கவில்லை. வைத்தியர்கள், உதவியாளர்கள், கடைநிலைப்பணியாளர்கள், தொண்டர்கள், போராளிகள், யாரும் சளைக்கவில்லையே. ஏன் மக்களும்தான். சதைப்பிண்டங்களாய் கூட்டி அள்ளிக் கொண்டுபோய் கொட்டிக் களைக்கையில், மக்கள் வெட்டித்தந்த இளநீரை எந்தவித அருவருப்பும் இல்லாது குடிக்க முடிந்த, மரணத்துள்ளான வாழ்வின் அனுபவம் அது.

எங்கள் தாயக விடுதலைப்போராட்டத்தின் நெடும்பயணத்தில், மகிழ்ச்சி, துக்கம், இணைவு, பிரிவு, என எல்லாம் வந்துபோயிருக்கிறது. முதற்தடவை பார்க்கும் எந்த மனிதருள்ளும் என்ன சோகம் மறைத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியாதவாறு மரணத்துள் வாழப்பழகிக்கொண்டோம். ஆனாலும் என்றாவது, ஏதாவது ஒரு பொழுதில் விழித்துக்கொள்ளும் துயரம், சிலபொழுதுகள் விழிமூட விடுவதில்லை. கடந்த இரு தினங்களில் அப்படி நினைவைத் திரும்பத்திரும்பத் தோற்றுவித்த இடுகையது. அச்சம்பவம் நடைபெற்ற பொழுதுகளில் நான் புலம்பெயர்திருந்தேன். ஆனாலும் கொடூரம் அறிந்திருந்தேன். இருதினங்களுக்கு முன் சயந்தனின் சாரால் பதிவில் வந்திருந்த ஆனந்தன் அண்ணா நேற்றும் உங்களை நினைத்தேன்.அந்தப் இடுகை மீளவும் என்னைப் பாதித்தது. சாப்பிடமுடியவில்லை. தூங்கமுடியவில்லை. வலைப்பதிவுலகில் சிரித்துக் கொண்டே வரும் அந்த இளையவனின் உள்ளத்துக்குள் இப்படியொரு சோகம், ஒழிந்திருக்குமென எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?. பதிவைப் படித்தபின் எதுவும் செய்யத்தோணாவேளையில் சயந்தன் தொடர்பு கொண்டபோது சொன்னேன் “ இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களில் நிரம்பப்பிடிக்கும் வரிசையில் ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்,எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால் மாத்திரை, அரை மாத்திரை அளவிலெல்லாம் இசைப்புள்ளி வைத்து, ராஜா இசைக்கோலம் பண்ணியிருப்பார். எண்ணி ரசிக்கும் அந்தப்பாடலை இனி கேட்கும் போதெல்லம் எனக்கும் ஆனந்தண்ணை ஞாபகத்துக்கு வரப்போகிறார் “ என்று. அதுதான் மரணத்துள் வாழப்பழகிக் கொண்ட மனதின் திண்மை.

சயந்தனுடன் இணைந்து, சிரித்துக்கொண்டு வரும் சோமிதரனின் காற்றோடு வலைப்பதிவில் வந்த ஒரு இடுகை நிர்வாணராணுவம். இது சொல்லும் செய்திகள் பல. எங்கள் நிலத்தில் நெரிக்கப்படுகின்ற குரல்வளைகளால், ஒலிக்க முடியாமற்போன கதறலை இப் பதிவு ஒலித்ததாகவே உணர்கின்றேன். புலம்பெயர்ந்திருந்த போதும், நிலத்தோடிருக்கும் நேசத்தில், சோமியின் நெஞ்சின் வலி, வார்த்தையாகியிருப்பதை வாசிக்கலாம்.

ஈழத்தின் துயர் மட்டுமே எண்ணப்படும் என்றில்லை. ஏனென்றால் ஒடுக்கப்படும் மக்கள் உலகெங்குமிருக்கிறார்கள். ஆகையால் எண்ணங்கள் தொடரும்... தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பென்னவென்று கேட்கிறீர்களா? இந்தவாரத்தின் இறுதிவரை வந்திருந்து உறவாடுங்கள். உங்களுக்கே புரியும் அப்போது...

படம்: நன்றி, "மரணத்துள் வாழ்வோம்" ஈழத்துக்கவிதைகள் தொகுப்பு


மேலும் வாசிக்க...

எழுத்து என்பது...

வணக்கம் நண்பர்களே!

மற்றுமோர் அவதாரம். வலைச்சரத்தின் இந்தவாரத் தொகுப்பாசிரியராக.

வலைச்சரத்தின் ஆசிரியர் சிந்தாநதியிடமிருந்து, சென்றவாரத்தில் தேடிவந்த இப்பொறுப்பை, பணிகள் காரணமாக இவ்வாரத்திற்கென மாற்றிக் கொண்டேன். ஆனால் இப்போது நினைக்கின்றேன் சென்ற வாரமே செய்திருக்கலாம் என. காரணம், சென்றவாரத்தில் ஆசிரியராக இருந்த, சுப்பையா ஆசிரியர், அந்தளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சும்மா, சிலம்பம், கம்பு, வாள், எனப் பந்தாவாக, பக்காவாகச் சுழற்றி விளையாடியிருக்கிறார். அப்படி ஆர்ப்பாட்டமாக விளையாடிய களத்தில் , மருள விழித்தபடி நான். என்ன செய்யப்போகின்றேனோ?... எனும் ஒருவித அச்சத்துடனேயே வந்திருக்கின்றேன்.


என்னைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. என்னசெய்யலாமென்பதை மட்டுமே இப்போது பேசலாமென் றெண்ணுகின்றேன்.


வலைப்பதிவில் எழுத வருவதென்னவோ பலருக்கும் உள்ளதைப் போன்ற ஒருவித ஆசையில்தான். ஆனால் அதே ஆசையில்தான் தொடர்கிறோமா? இல்லையென்றே எண்ணுகின்றேன். ஏனெனில் ஆசையில் எழுதுவதென்றால் அது ஒருகாலத்தின்பின் சலித்துவிடும். ஆனால் ஆசையால் எழுதுவதென்பது தொடரக் கூடியது. என்ன ஆசையால் என்பது அவரவர் விருபத்தேர்வு. ஆனால் ஒடுக்கப்படுகின்ற மக்களின் ஆசையென்பது விடுதலை நோக்கியதாகவே இருக்கும்.

சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஆசையால் எழுதுபவர்களுக்கு,
எழுத்து, வெறும் ஊட்டமல்ல
எழுத்து, வெறும் சுவாசமல்ல
எழுத்து, வெறும் நேசமல்ல
எழுத்து வெறும் இயக்கமல்ல
எழுத்து வெறும் ஆயுதம் அல்ல

எழுத்து, ஒரு போராட்டம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசித்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும், ஒரு போராட்டம். அதை எழுதும் எல்லோரும், ஒரு சமூகப் போராளி. அப்படியாக நான் அடையாளங் கண்டு கொண்ட எழுத்துக்கள் சிலவற்றை இவ்வார வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியுள்ளேன், தொடரும் உங்கள் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றியவாறே.....
மேலும் வாசிக்க...

குறிஞ்சி பூக்கும் வாரம்

வாத்தியார் ஒரு வாரத்தில் 9 பதிவுகள் இட்டு சாதனையே செய்து விட்டார். வாத்தியாரும் அவரது மாணவர்களுமாக வலைச்சரத்தை கலகலப்புக் கூடாரமாக்கி மகிழ்வித்து விட்டார்கள். ஒரு வாரம் சென்றதே அறிய முடியாமல் சுடச்சுட பதிவுகள் இட்டு வலைச்சரம் தொடுத்த வலைப்பதிவு வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு நன்றி.

விதவிதமாக தொகுப்புகள் இட்டு மகிழ்வித்தார். நண்பர்கள் சுட்டிக் காட்டியபடி பல தலைப்புகளில் வலைப்பதிவுகள் என்பதை தமிழ்மணத்தைச் சுட்டியே கூறியது அவர் தமிழ்மணத்திலிருந்தே தொகுப்புகளை தேர்ந்தெடுத்தார் என்பதனால் என்று தோன்றுகிறது. வலைப்பதிவு அறிமுகம் இல்லாமல் பதிவு வந்திருக்கிறதே என்று இன்னும் சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர். தன் கோட்டாவை நிறைவு செய்த பின்னரே வலைப்பதிவு அறிமுகம் இல்லாத ஒரு பதிவை இட்டார். அது கூட சுவையான சில தகவல்களோடு தான். அவர் வலைச்சரத்தை மாறுபட்ட முறையில் அணுகி நிறைய உழைப்புகளோடு தொகுத்து தந்திருக்கிறார். மிக்க நன்றி ஐயா.

அடுத்து உங்களுக்கு வலைச்சரம் தொடுத்துத் தர வருகிறார் குறிஞ்சிமலர் மலைநாடான். இணையத்தில் இன்பத்தமிழ் என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகத்தை வான்வெளியில் பரப்பிவரும் இவர் தன் வலைப்பதிவுகளுக்கும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் என தமிழ் திணைப் பெயர்களால் அழகுற அமைத்து கிராமிய மணத்துடன் படைப்புக்களை தந்து வருகிறார்.

மலைநாடானுடன் இணைந்து அடுத்த ஒரு வாரகாலம் வலைச்சர வாசம் வாசித்து சுவாசிப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, March 28, 2007

புதிய கீதை


=====================================================
புதிய கீதை

எது கிடைத்ததோ
அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காம்ல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!
=====================================================

விடைபெறும் நேரம் வந்து விட்டது!

இந்த புதிய கீதை எனக்காக நானே எழுதி வைத்துள்ளது!

வலைச்சரம் இணைய இதழின்
ஒரு வார ஆசிரியர் வேலை
நான் கேட்காமலேயே வந்தது
கிடைத்ததைக் கொண்டு
ஒரு வாரம் சந்தோஷ்மாக இருந்தேன்!
இப்போது விடை பெறுகிறேன்!


நன்றி
வணக்கம்!
அன்புடன்
SP.VR சுப்பையா
--------------------------------------------------------------------------
வாய்ப்புக் கொடுத்த வலைச்சரம் (அதிபர்:-))
நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும்
ஒத்துழைத்த
என் இனிய வலைப் பதிவு நண்பர்களுக்கும்
ம்ற்றும் என் வகுப்ப்றைக் கண்மணிகளுக்கும்
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும் வாசிக்க...

தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!


=======================================================
தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் முதல்
சிறப்பு அம்சம் அங்கே வந்து சேரும் பலவிதமான
மக்கள் கூட்டம்தான்.

அதோடு அந்தக்கூட்டத்தை நம்பி டென்ட் அடித்துக்
கடைவிரிக்கும் வியாபாரிகளும், ஜவ்வு மிட்டாய், பலூன்
போன்ற சில்லுண்டிச் சாமான்களை விற்கும் (நடை)
ராஜாக்களும், குடைராட்டிணம், ராட்சச சுழலும் சக்கரம்
இத்யாதி போன்ற குழந்தைகளைக் கவரும் வித்தைக்
காரர்களும் அங்கே கூடுவது கூடுதல் சிறப்பு.

ஒரே கலகலப்பாக இருக்கும்!

தமிழ்மணமும் அப்படித்தான் தினமும் திருவிழா
நடக்கும் இடமாகி விட்டது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை
நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும்
அவ்வளவுதான். மற்றபடி வருடம் 365 நாட்களுமே
திருவிழாதான்

கலகலப்பிற்கும், வேடிக்கைகளுக்கும், உற்சாகத்திகும்
உரசல்களுக்கும் என்றும் குறைவில்லை!

இங்கே வந்துபோகும் எண்ணிக்கையற்ற தமிழ்
வாசகர்கள்தான் மக்கள் கூட்டம்..

பதிவர்கள் அத்தனை பேர்களுமே வியாபாரிகள் அல்லது
நடைராஜாக்கள் (இதற்கு விளக்கம் மேலே உள்ளது)

சில பல பதிவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு
நாட்கள் பதிந்து விட்டு மற்ற நாட்களில் அவர்களும்
பொதுமக்களுடன் மக்களாக விழாவில் கலந்து கொள்ள
வருவார்கள்!

Monetary Benefit' என்ற ஒன்று துளிக்கூட இல்லாவிட்டாலும்
தங்கள் பதிவுகளின் மூலம் தங்கள் எண்ணங்களையும்,
கருத்துக்களையும், திறமையான எழுத்தாற்றல்களையும்
இலவசமாகக்கொடுத்து ஒன்று பெயர் வாங்க அல்லது
மனத்திருப்திகொள்ள வருபவர்கள் அவர்கள்!

நான் இந்தத் திருவிழாவிற்குள் 23.12.2005 அன்று காலெடி
எடுத்து வைத்தபோது இருந்த ராஜாக்களின் எண்ணிக்கை
800க்கும் குறைவு . இந்தப் பதினைந்து மாத காலத்தில்
அந்த எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்திருக்கிறது.

அதுபோல மக்கள் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.

சரி இவ்வளவு கூட்டத்தையும் தாங்கும் அளவிற்குத் தமிழ்
மணத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி
மேம்பட்டிருக்கிறதா என்றால் மேம்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் சற்று அதிகப்படியான வசதிகள்
செய்து தரப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிகத்தான் திருவிழா
சிறப்பாக இருக்கும். அதனால் அதை வரவேற்போம்.

ஆனால் ராஜாக்களுக்கும் உரிய வசதிகள செய்து தரப்பட
வேண்டும்!

சரி இங்கே தினமும் வந்து கடைவிரிக்கும் ராஜாக்களின்
எண்ணிக்கையையும், அவர்கள் கொண்டுவரும் பதிவுகளின்
வகைகளையும் கீழ்க்கண்ட அட்டவனைகள் மூலமாகப்
பார்ப்போம்.

இதற்காக நான் எடுத்துக் கோண்டது 15.3.2007 முதல் 22.3.2007
வரை வந்த பதிவுகள் . அவைகள் மொத்தம் 1028 (7 நாட்களில்)

சராசரியாகத் தினமும் 150 பதிவுகள் வருகின்றன!

==================================================

எண்ணிக்கை வரிசையில் பதிவு வகைகளின் பிரிவுகள்

=========================================================

தமிழ்மணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசையில் பிரிவுகள்


============================================================

சதவிகித அடிப்படையில் பிரிவுகள்

=======================================================

இந்த அட்டவணைகளின் நோக்கம் எந்தப் பிரிவில்

எத்தனை பதிவுகள் இடப்படுகின்றன. நெருக்கடி எங்கே

அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்!

==================================================

முகப்பில் அண்மையில் எழுதப்பெற்றவை என்னும்
இடத்திற்குக் கீழே இடம் பெறும் பதிவுகள்தான் அதிகம்
பேர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை!! படிக்கும் வாய்ப்பை அதிகமாகப் பெறுபவை!

சுமார் 20 அல்லது 22 பதிவுகளுக்குத்தான் அந்த வாய்ப்பு
அதுவும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரைதான்
பதிவுகள் அங்கே நிற்கவும் முடியும்!.

சகபதிவர்களும், வாசகர்களும் பல தேசங்களில்
வசிப்பவர்கள் ஆதலால் இரவு, பகல் என்று எந்தப்
பாகுபாடும் இன்றி, அவரவர்கள் வசிக்கும் தேசங்களைப்
பொறுத்து வந்து போகும் நேரமும் மாறுபடுவதால்,
முகப்பை மட்டும் வைத்துப் பதிவுகள் பார்க்கப்பட்டுவிடும்
என்று சொல்வதற்கில்லை!

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட
இடுகைகள் என்ற பக்கத்தில் உள்ள 16 பிரிவுகளில்
பதிவுகளைக் காண முடிகிறது.

ஆனாலும் அங்கேயும் இட நெருக்கடி.

பல பிரிவிகளில், கடைசியாக வந்த 5 இடுகைகள் மட்டுமே
பதிவரின் பெயர், பதிவின் தலைப்பு, பதிவின் Pofile படம்,
மற்றும் பதிவின் ஆரம்ப வரிகள் என்று அசத்தலாகக்
கண்ணில் பட்டு கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்

அதற்கு முன் வந்தைவைகள் எல்லாம் நெருக்கடிபட்டு
சடடை கசங்கி, தலை கலைந்து காணப்படும்! உற்றுப்
பார்த்தால்தான் அவைகள் கண்ணுக்குத் தெரியும்

அந்தப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளூமே நாள்
முழுவதும் பொலிவோடு தெரிவதற்கு வகை செய்யப்பட
வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்!

நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை
அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!

அதுதான் ஒரு நல்ல தீர்வு!

தமிழ்மணம் நிர்வாகத்தினர் இதைச் செய்வார்களா?

நாம் அனைவரும் ஏகமனதாக எடுத்துரைத்தால்
செய்யமாட்டார்களா என்ன?

உங்கள் மேலான கருத்து என்ன?

பின்னூட்டத்தில் சொல்லுபடி கேட்டுக்கொள்கிறேன்!

அன்புடன்
SP.VR. சுப்பையா,
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

======================================

மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2007

கைவந்த கலை

=========================================================
கைவந்த கலை

எனக்கு மிகவும் கைவந்த கலை என்று சொன்னால்
அது கதை சொல்வதும், கதை எழுதுவதும்தான்.

கதை சொல்வதிலும்,எழுதுவதிலும் ஒரு டெக்னிக்
இருக்கிறது

கேட்பவரையோ, அல்லது படிப்பவரையோ ஈர்க்கும்
சக்தியுடன் அது சொல்லப்பட வேண்டும் அல்லது
எழுதப்பட வேண்டும்.

Jeffery Archerரின் சிறுகதைகளைப் படித்தீர்களென்றால்
இது சட்டென்று பிடிபடும்.

அவர் கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து
விடுவார். கடைசி வரிவரை கதையைச் சுவாரசியமாகச்
சொல்லிக்கொண்டு போவார். உள்ளே வந்துவிட்ட வாசகன்
நகராமல் பார்த்துக் கொள்ளும் விதமாகக் கதையின்
போக்கு இருக்கும்.

கதையின் முடிவு பஞ்ச்சிங்காகவும், எதிர்பாராத
விதமாகவும் இருக்கும்.

நடை எளிமையாகவும், அழுத்தமாகவும் இருக்கும்
தேவையில்லாத சொற்கள் இருக்காது!
எல்லாம் வித்தியாசமாக இருக்கும்

அவருடைய இரண்டொரு கதைகளைப் படிப்பவன்
அவருடைய ஆத்மார்ந்த ரசிகனாகிவிடுவான்

Twist in the tale என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பில்
மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கும். அத்தனையுமே
விதம் விதமான களங்களில் விதம் விதமான பாத்திரப்
படைப்புக்களுடன் அசத்தலாக எழுதப்பெற்றிருக்கும்

அவருடைய கதைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகனுக்கு
நாமும் இது போல ஒர் சிறுகதையாவது எழுத வேண்டும்
என்ற உந்துதல் வந்து விடும்

அதுதான் சிறுகதையின் இலக்கணம்!

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் அடியவன் எழுதிய
முதல் பதிவே ஒரு சிறுகதைதான்.

மகாபாரதத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்டிருந்த
ஒரு சம்பவத்தை என்னுடைய கற்பனையில் விரிவாக்கிக்
கதையாக எழுதிப் பதிவிட்டேன்.

அந்தப் பதிவிற்கு வந்தது ஒரே ஒரு பின்னூட்டம்தான்
அதில் இருந்த வாசகங்கள் நூறு பின்னூட்டங்களுக்குச் சமம்
அதை இட்டவரின் பெருமைபற்றி அப்போது எனக்குத்
தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன்

அவர்தான் வலைப்பதிவுலகின் ராஜகுரு
திரு. ஞானவெட்டியான் அய்யா அவர்கள்.

நான் வலையுலகிற்கு வரும் முன்பே மாதப்பத்திரிக்கை
யொன்றில் தொடர்ந்து சிற்கதைகளும், கவிதை ஆய்வுத்
தொடர் ஒன்றையும் எழுதிக் கொண்டிருந்ததால், முதல்
பதிவிற்குப் பிறகு 7 நாட்களுக்குள் அடுத்தடுத்து பல
சிறுகதைகளைப் பதிவிட்டேன்

அவைகளெல்லாம் நான் எதிர்பார்த்த அளவிற்கு
வரவேற்பைப் பெறவில்லை!

என்ன காரணம் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்

என் கண்களைத் திறந்து பதிவுலகின் உண்மை நிலையைப்
பல கோணங்களிலும் பார்க்க வைத்தவர் அந்த சிங்கைக்காரர்
ஜி.கே தான்.

இதுவரை வெளிப்பத்திரிக்கைகளில் 36 கதைகள்
எழுதியுள்ளேன்.

அவைகள் ஒவ்வொன்றும் A4 Size Paperல் 6 பக்கங்கள்
அளவிற்கு வரும். சில 8 பக்கங்கள் வரும். அதையெல்லாம்
படிக்ககூடிய பொறுமை பதிவுலக இளைஞர்களிடம்
(அவர்கள் 81%) இருக்கின்ற மாதிரி எனக்குத் தெரியவில்லை!

இருந்தாலும் இன்று துணிச்சலாக என்னுடைய
6 சிறுகதைகளுக்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன்
படிக்க விருப்பமிருப்பவர்க்ள் மட்டும் படித்து விட்டுச்
சொல்லுங்கள் அவைகள் எப்படி இருக்கின்றன என்று!
--------------------------------------------------------
எனது சிறுகதைகள்

1.கலியுகத்தின் முதல் தீர்ப்பு
எனது முதல் பதிவு (23.12.2005)

2. மதிப்பும் மரியாதையும்
26.12.2005

3. தந்தி மீனி ஆச்சி
26.12.2005

4. ஆயா வீடு
26.12.2005

5.மேங்கோப்பு மேனா
29.12.2005

6. உல்லாசம் பொங்கும் தீபாவளி
31.12.2005

---------------------------------------
அன்புடன்,
SP.VR. சுப்பையா
இந்த வார ஆசிரியர்,
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
--------------------------------------------------
மேலும் வாசிக்க...

அது ஒரு தனி உலகம்

அது ஒரு தனி உலகம்!

உலகம் என்பது ஒன்றுதானே - அதில் எப்படித் தனி
உலகம் என்று ஒரு பிரிவு வரும் என்று கேட்பவர்களுக்கு,
ஒரு வார்த்தை!

உலகம் ஒன்றல்ல!

குழந்தைக உலகம் தனி They are living in a momentary life
அவரகள் அந்தக் கணநேரத்தில் வாழ்கிறவர்கள்
அதுபோல பெண்கள் உலகம், இளைஞர்கள்
உலகம், 'குடி' மக்கள் உலகம், வயதானவர்கள்
உலகம் என்று பலவகை உலகங்கள் இருக்கின்றன!

அந்தந்த உலகத்தின் முழுமை அதிலே உள்ளவர்
களுக்கும், அதில் சுய அனுபவப் பட்டவர்களுக்கும்
மட்டும்தான் தெரியும்!

கவிதை உலகம் என்பது சிறப்பானது!

கவிதை உலகம்தான் நம்மை மெய்மறக்கச்
செய்வது!

அதிலேயே உழல்பவர்களுக்கும், உணர்ந்தவர்களுக்கும்
தான் அது பிடிபடும்!

எனக்குப் பல கவிஞர்கள் நண்பர்களாக உள்ளார்கள்
பட்டியல் இட்டால் இருபது கவிஞர்களுக்குமேல் தேறும்

அதுபோல பல கவிஞர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்
கவியரசர் கண்ணதாசன் அவர்களை இருமுறை சந்தித்துப்
பேசியிருக்கிறேன். கவிஞர் வைரமுத்து அவர்களையும்,
கவிஞர் மேத்தா அவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

அவர்களெல்லாம் அற்புதமான கவிஞர்கள். அவர்களுடைய
பல பாடல் வரிகள் என் மனதிற்குள் குடியிருக்கின்றன!

இந்தப் பதிவில் என்னுடைய நெருங்கிய நண்பரும்,
எங்கள் பகுதியைச் சேர்ந்தவருமான கவித்தென்றல்
திரு. காசு. மணியன் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த
விரும்புகிறேன்

அவரைப் பற்றிய விவரங்களை முழுமையாக எழுதி நான்
முன்பு (23.09.2007) பதிந்த பதிவின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
அதில் அவர் எழுதிய அசத்தலான பல கவிதை வரிகள் உள்ளன
அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன!
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

சிலர் படித்திருக்கலாம். சிலர் கண்களில் படாமல் பதிவு
மறைந்திருக்கலாம். ஆகவே மீண்டும் ஒருமுறை அனைவரும்
படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பதிவின்
சுட்டியை உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்

"நெஞ்சத்தில் கருவுற்றால் நிமிடத்தில் பெற்றெடுப்பான்"
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்களால்

பாராட்டுக்களைப் பெற்றவர் அவர்.

அதைவிட அவருக்கு வேறு பெருமை என்ன வேண்டும்?

சுட்டி இங்கே உள்ளது!

=======================================================


11.3.2007 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு
விழா ஒன்றில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர்

திரு.ப.சிதம்பரம் அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்

==========================================================

2.6.2006ல் நடைபெற்ற ( நான் எங்கள் ஊரைப்பற்றித் தொகுத்து
வெளியிட்ட) புத்தக வெளியீட்டு விழாவில்
உச்ச நீதிமன்ற நீதியரசர் டாக்டர்.திரு.AR. லெட்சுமணன்
அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்.
படத்தில் இடது ஓரம் நான் நிற்கின்றேன்.


கவிஞர் திரு.வைரமுத்து அவர்களுடன் திரு.காசு. மணியன அவர்களும் நானும். இடது ஓரம் திரு.காசு மணியன் அவர்கள். வலது ஓரம் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் திரு. வேலாயுதம் அவர்கள்

=============================================================


கவிஞர் திரு.மேத்தா அவர்களுடன் திரு.காசு. மணியன்

========================================================


திரு.மு.மேத்தா அவர்களுடன் அடியவன்


கவித்தென்றல் காசு.மணியன் அவர்களும் நானும்!
என்னுடைய மேடைச் சொற்பொழிவு ஒன்றின் முடிவில்
அவர் எனக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தபோது
எடுத்த படம்

==========================================================

அன்புடன்,

SP.VR.சுப்பையா,

இந்தவார ஆசிரியர்,

வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

---------------------------------------------------



மேலும் வாசிக்க...

அசத்திய பதிவுகள் - பகுதி 2

========================================================
அசத்திய பதிவுகள் - பகுதி 2

இதற்கு முன் பதிவில் என்னை வியக்கவைத்த
தமிழ்மணப் பதிவுகள் என்ற தலைப்பில் 27 பதிவுகளை
உங்களுக்காகத் தேடிப்பிடித்துக் கொடுத்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 23 பதிவுகளுக்கான
சுட்டியைக் கொடுத்திருக்கிறேன்

அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.
படித்த பதிவுகள் சில இருக்கலாம். அதனால் என்ன?
மீண்டும் ஒருமுறை படியுங்கள்!
--------------------------------------------------------------

28. தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்
பதிவர் பெயர்: கொழுவி

சென்ற மாதம் தமிழ்மணத்தில் ஒரு இறுக்கமான
சூழ்நிலை நிலவியபோது - நகைச்சுவையோடு
அசத்தாலாக வந்த பதிவு. இந்தப்பதிவு!.
பதிவிற்கு வந்த பின்னூட்டங்களும் அதற்கு கொழுவி
கொடுத்திருந்த பதில்களும் பதிவிற்கு மேலும் சுவை
சேர்த்தன! படித்திராதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய
பதிவு!!!!

29. கவிதைகளில் வரும் முருங்கைக்காய்
பதிவர் பெயர் - செல்லி

30. இன்னும் இருக்கிறது ஆகாயம்.
பதிவர் பெயர்: பெருசு

33 அந்தக் காலப் பிரபலங்களின் போட்டோ
பதிவர் பெயர்: சின்னக்குட்டி

34. தமிழ் சினிமாவின் தலை சிறந்த பத்து வசனங்கள்
பதிவர் பெயர்: வெளிகண்ட நாதர்

35 குறும்பாறு
பதிவர் பெயர்: குறும்பன்

36. மேற்கில் கலாச்சாரம் உண்டு - ஆன்மீகம் இல்லை!
பதிவர் பெயர்: எழில்

37. ஆழி என்றொரு உலகம்
பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்

38. பெண்ணல்ல...மழை!
பதிவர் பெயர்: சிவனாம்ஜி

39. LET'S HIT THE NAILS!
பதிவர் பெயர்: தருமி

40. படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்
பதிவர் பெயர்: மா.சிவகுமார்


42. சேரனின் முத்தையாவும் என் முத்துவும்
பதிவர் பெயர்: முத்து குமரன்


43. மகளின் தத்துவம்
பதிவர் பெயர்: பாஸ்டன் பாலா

45. பாரதியின் பாடல்களில் அறிவியல் படிமங்கள்
பதிவர் பெயர்: ஜடாயு

46. கோவை ஐ.டிபார்க் படங்கள் & பரப்பளவு
பதிவர் பெயர்: சிவபாலன்

47. எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ?
பதிவர் பெயர்: நரசிம்ஹன் ராகவன் (டோண்டு)

48. சுவாமியே சரணம்!
பதிவர் பெயர்: மணியன்

49. கனவில் சென்னைi
பதிவர் பெயர்: தமிழி

50. மென்ட்டாலிட்டி மாற்றப்படுமா?
பதிவர் பெயர்: மோகன் தாஸ்
--------------------------------------------------------
இந்தப் பதிவுத் தேடலுக்கு எனக்கு சுமார் 6 மணி
நேரம் பிடித்தது! பதிவு மனதில் இருந்தாலும் சுட்டியைப்
பிடிப்பதற்கு நான் பட்ட பாடு - அதற்கு ஒரு தனிப்பதிவு
போடலாம்!

இன்னும் பல பதிவுகள் நினைவில் உள்ளன!
பதிவின் நீளம் கருதியும், அதைவிட உங்களின் பொறுமை
கருதியும் இத்துடன் அதை நிறைவு செய்கிறேன்
வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது மேலும் ஒரு
ஐம்பது பதிவுகளை அடையாளங்காட்டுகிறேன்

இந்த ஐம்பதில் பெயர் வாராத நண்பர்கள் என்னைத்
தவறாக நினைக்கவேண்டாம். மீண்டும் ஒரு வாய்ப்பு
வரும் போது என்னை அசத்திய உங்கள் பதிவு
அதில் நிச்சயம் இடம் பெறும்!!!!!!!!!!!!!!!

வேறு ஒரு தலைப்பில் ஒரு ஆய்வு பாக்கி உள்ளது
அந்த ஆய்வுடன் மீண்டும் சந்திக்கிறேன்!

அன்புடன்,
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
=================================
(தொடரும்)

மேலும் வாசிக்க...

Sunday, March 25, 2007

என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!

=========================================================
என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!
பகுதி - 1

ஒன்றைப் படித்தவுடன் அந்தப் படைப்பு, படிப்பவனை
'அட!" என்று சொல்ல வைக்க வேண்டும்.அதுதான்
சிறந்த படைப்பு. அது எதைப் பற்றியதாக வேண்டு
மானாலும் இருக்கலாம். ஆனால் படிப்பவனை அது
சென்றடைய வேண்டும்

படைப்பின் அளவுகோல் அதுதான்!.

அதன் விளைவாகப் படித்தவன் மனதிலும் அந்தப்
படைப்பாளி தங்கி விடுவான். தங்கிவிடுவான் என்பது
மட்டுமல்ல நிரந்தரமாகக் குடியேறிவிடுவான்

நான் முதலில் சிறந்த வாசகன்.
எழுத வந்ததெல்லாம் விபத்து!

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகப் படித்து
வருகிறேன்.

கனமான புததகங்கள் முதல் (முன்பு) மளிகைச்
சாமான்கள் கட்டிவரும் காகிதம்வரை அச்சடிக்கப்
பெற்ற எதையும் வாசித்து மகிழ்வது என் பழக்கம்.

பல படைப்பாளிகளை அவர்களது மாஸ்டர் ஃபீஸ்
என்னும் படைப்புக்களைக் கொண்டுதான் நான் என்
மனதில் அமர்த்தி வைத்திருக்கிறேன்

பாலகுமாரன் என்றால் 'பச்சை வயல் மனது'
என்ற அவருடைய குறு நாவலும்,
சுஜாதா என்றால், 'காகிதச் சங்கிலிகள்" என்ற
அவருடைய குறு நாவலும்,

அனுராதா ரமணன் என்றால் அவருடைய
'பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா' என்ற
குறு நாவலும்,

Jeffery Archer என்றால் "Twist in the tale" என்ற
அவருடைய சிறுகதைத் தொகுப்பும்தான் என் மனதில்
முன்வந்து நிற்கும்.


அதற்குப் பிறகுதான் அவர்கள் என்
மனக்கண்ணில் தெரிவார்கள்

அதுபோல தமிழ்மணத்தில் நான் வந்த குறுகிய
காலத்திற்குள் (15 மாதங்களாகின்றன) ஒரு 100 பதிவுகளுக்கு
மேல் ஒருவிதமான சந்தோசமான மனத்தாக்கத்துடன்
என் மனதில் தங்கிவிட்டன1

அவைகள் சும்மா தங்கவில்லை - பதிவருடைய பெயருடன்
சேர்ந்தே தங்கிவிட்டன!.

கைப்புள்ள என்றால் எனக்கு "பஸ் பயணங்களில்"
என்ற அவருடைய பதிவுடன்தான் நினைவிற்கு வருவார்.
அதுபோல வெட்டிப்பயல் என்றால் எனக்கு அவர் பதிந்த
கர்ணனும் - கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என்
நினைவிற்கு வருவார். செல்வன் எண்றால் கம்யூனிசமும்

கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என் நினைவிற்கு
வருவார்

இப்படி ஒவ்வொருவரையும் சொல்லிக்கொண்டே போகலாம்!

ஒவ்வொரு பதிவிலும் ஒரு சிறப்பு உள்ளது
அவைகள் என்னை 'அட' என்று வியக்க வைத்திருக்கின்றன
எல்லாப் பதிவுகளையும் குறிப்பிட எனக்கு ஆசை!
இடம், நேரம், பதிவின் நீளம், உங்களுடைய
பொறுமை என்று பலவற்றையும் மனதில் அசைபோட்டு
ஒரு முடிவிற்கு வந்தேன்.

அவ்வளவு பதிவுகளையும் இந்கே குறிப்பிட்டுச் சுட்டி தருவது
என்பது அசாத்திய வேலை! ஆகவே கிடைக்கும் சில
பதிவுகளை மட்டும் இங்கே தரவுள்ளேன்

சிலவற்றை இந்த முதல் பகுதியிலும், மீதமுள்ளவற்றை
அடுத்த 2ம் பகுதியிலும் தருகிறேன்.

அவைகளில் பல நீங்கள் படித்ததாகவும் இருக்கலாம்
அதனால் என்ன? மீண்டும் ஒரு முறை படித்து மகிழுங்கள்!
இந்தப் பதிவைப் Book Mark செய்து வைத்துக் கொண்டு
நேரம் இருக்கும் போது படித்து இன்புற வேண்டுகிறேன்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

-------------------------------------------------------

1. பஸ் பயணங்களில்
பதிவர் பெயர்: கைப்புள்ள

2. கம்யூனிசமும் கண்ணன் கோவிலும்
பதிவர் பெயர்: செல்வன்

3. ஒளவையின் அகவல்
பதிவர்:பெயர்: கண்ணபிரான் ரவிசங்கர்

4. கற்பக மரம் = தமிழ்மணம்
பதிவர் பெயர்: குமரன்

5. கண்ணன் - கர்ணன்
பதிவர் பெயர்: வெட்டிப்பயல்

6. வாங்க 3க்கு போலாம்
பதிவர் பெயர்: லக்கி லுக்

7. பாட்டுப் பிடிக்கும் வேலை
பதிவர் பெயர். வடுவூர்.எஸ்.குமார்

8. வலைப்பதிவர்களுக்கு பட்டமளிப்பு விழா
பதிவர் பெயர்: வரவனையான்

9. விவேக சிந்தாமணி - பாடல் எண் 69
பதிவர் பெயர்: ஞானவெட்டியான்

10. வாத்தியாரின் வீட்டுப்பாடம்
பதிவர் பெயர்: துளசி கோபால் (அக்கா)
அக்கா என்பது ஒரு மரியாதைக்காக
அல்லது என் துண்டைக் காப்பபற்றிக்கொள்ள
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொளலாம் !:-)))

11. ஏற்றம் தரும் யோகா கலை!
பதிவர் பெயர்: செந்தழல் ரவி

12. சாதிகள் இருக்குதடி பாப்பா
பதிவர் பெயர்: வி.எஸ்.கே

13. இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி
பதிவர் பெயர்: ஸ்ரீதரன் கனக்ஸ்

14. பா.க.ச.வில் சேர்வது எப்படி?
பதிவர் பெயர்: ஜெயசங்கர்.நா.
(இந்தப் பதிவில் பின்னூட்டங்களும் கலக்கலாக
இருக்கும்)

15. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
பதிவர் பெயர்: விடாது கருப்பு

16. விக்கிபீடியா கூட்டுழைப்பு
பதிவர் பெயர். மு.மயூரன்

17. யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?
பதிவர் பெயர்: வல்லி சிம்ஹன்

18. பீர்பல் கதைகள்
பதிவர் பெயர்: ஹரிஹரன்

19. ஆறிப்போகுமுன் ஒரு ஆறு பதிவு
பதிவர் பெயர்: இலவசக்கொத்தனார்

20. இன்னிசை வேந்தர்
பதிவர் பெயர்: யோகன் பாரிஸ்


21. ஆன்மிகம் ஆனந்தமானது
பதிவர் பெயர்: கால்கரி சிவா

22. ரெளத்திரம் கொள்
பதிவர் பெயர்: வற்றாயிருப்பு சுந்தர்

23. கழுகு மலை
பதிவர் பெயர்: ஜி.ராகவன்

24. யாருக்காக எழுதுகிறோம்?
பதிவர் பெயர்: ஆசிப் மீரான்

25. கொச்சின் விட்டகுறை - தொட்டகுறை
பதிவர் பெயர் - கானா பிரபா

26. பழனி மலையாண்டி தரிசனம்
பதிவர் பெயர்: கார்மேக ராஜா

27. தராவி குடிசைப் பகுதியா?
பதிவர் பெயர்: எஸ்.பாலபாரதி
-----------------------------------------------------------------
( மீதமுள்ளவைகள் அடுத்த பதிவில்)

அன்புடன்.
SP.VR.சுப்பையா,
இந்த வார ஆசிரியர்,
வலைச் சரம் - தமிழ் - இணைய இதழ்
------------------------------------------------------------------
மேலும் வாசிக்க...

தமிழ்மணத்தை கலகலக்கவைக்கும் வ.வா. சங்கம்!




============================================================ தமிழ்மணத்தை கலகலக்க வைக்கும் வ.வா. சங்கம்!

தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்று
பார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பது
வருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே!

2006ம் ஆண்டில் 129 பதிவுகளையும், 2007ல் இன்றுவரை
50 பதிவுகளையும் தந்து பலரையும் மகிழ்வித்திருப்பவர்கள்
அவர்கள்தான்.

அதனால் அந்த சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு
Hats Off!

அவர்களுடைய பெரும்பாலான பதிவுகள் அசத்தலாக
இருக்கும் என்றாலும் இடம் கருதி சில பதிவுகளை மட்டுமே
குறிப்பிட்டுள்ளேன்

"ஒரு புன்னகை எதையும் சாதித்து விடும்
ஒரு மகிழ்ச்சியான தருணம் எதையும் போக்கிவிடும்!"

'மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையும்,
உப்பு இல்லாத உண்வும் ஒன்றுதான்'

அனைவரும் படித்து மகிழுங்கள்

இடம் பெறாத வேறு பதிவுகளை எழுதியவர்கள்
தவறாக நினைக்க வேண்டாம்!

இது என்னுடைய அன்பான வேண்டுகோள்!
---------------------------------------------------------------------------------

1. வடிவுக்கு போறாத காலம்
பதிவர் பெயர்: டி.பி.ஆர்.ஜோசப்

2. கவுண்டர் -Devil Show - வெட்டிப்பயல்
பதிவர் பெயர்: இராம்

3. முதுகலை இல்லறத்தியல் - M.Sc, wifeology
பதிவர் பெயர்:பினாத்தல் சுரேஷ்

4. வருததப்படாதீங்க ப்ளீஸ்!!
பதிவர் பெயர்: ஜொள்ளுப் பாண்டி

5. கோவியாரின் நாடக சபா - பாகம் 1 & 2
பதிவர் பெயர்: தேவ்

6. Sangam Technologies Part (Farmer) 1 & 2
பதிவர் பெயர்: இளா

7. மாடு மேய்ப்பது எப்படி?
பதிவர் பெயர்: கப்பி பய

8. ச்சிரிப்பு வருது..ச்சிரிப்பு வருது!
பதிவர் பெயர்: கைப்புள்ள

9. செயற்குழு கூட்டம்
பதிவர் பெயர்: நாகை சிவா

10. நான் ஒரு தடவை சொன்னா....!
பதிவர் பெயர்: நாமக்கல் சிபி

------------------------------------------------

அன்புடன்,
மகிழ்ச்சியுடன்,

SP.VR.சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
---------------------------------------

(ஆய்வு தொடரும்)
மேலும் வாசிக்க...

Friday, March 23, 2007

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!

கவிதை என்றால் என்ன?

உரைநடையில் எழுதாத - நெஞசைத்தொடும்
ஆக்கங்கள் அனைத்துமே கவிதைதான்!

என் நண்பர் கவித்தென்றல் காசு மணியன்
கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்வார்:

“உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு
தெரிந்துரைப்பது கவிதை!”

என்னுடைய இன்னொரு நண்பர், மகாகவி,
கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்றவர். என்னைவிட பத்து வயது
பெரியவர். அற்புதமான மரபுக் கவிஞர்
அவர் எழுதிய கவிதை ஒன்றைக் கீழே கொடுத்
துள்ளேன்

"காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!"

இப்போது மரபுக் கவிஞர்கள் எல்லாம் அரிதாகி
விட்டார்கள்

எல்லோரும் புதுக் கவிதை வடிப்பவர்கள்தான்
திரு.மு.மேத்தா அவர்கள்தான் புதுக்கவிதை
யுகத்தைத் துவக்கிவைத்தவர்.

நாட்டிற்கு சுதந்திரம் சுதந்திரம் கிடைத்தது
பற்றி ஒரு கவிஞன் இரண்டே வரிகளில்
எழுதினான். அது மிகவும் பிர்சித்தமான
கவிதை.

தலைப்பு : சுதந்திரம்
"இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை"


கடலோர ஊர்களில் புயல் வந்துவிட்டுப்
போனபிற்கு அது ஏற்படுத்திவிட்டுப்போன
சேதங்களைத்தான் அனைவரும் பேசுவார்கள்
ஆனால் ஒரு கவிஞன் புயலுக்குப் பரிந்து
கொண்டு எழுதினான்:

"என் வீடு
இடிந்தாலென்ன
உன் வீடு
இடிந்தாலென்ன
புயலுக்கோ
பாதை தேவை!

எப்படி நச் சென்று இருக்கிறது பார்த்தீர்களா?

திருடன் ஒருவன் வீடொன்றுக்குள் நுழைந்து
அனைத்தையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டான்
ஒன்றே ஒன்றை ம்ட்டும் விட்டுச் சென்றுவிட்டான்
வந்த திருடன் விட்டுச் சென்றது என்ன?

ஒரு கவிஞன் எழுதினான்

"வந்த திருடன்
வீட்டிகுள்
வீட்டுச் சென்றான்
நிலவொளியை!"

பலரின் பற்குழிகளை நிரப்பிய பல்வைத்தியர்
இறந்து அடக்கம் செய்யப்பட்டவுடன், ஒரு
கவிஞன் எழுதினான்

"மெதுவாகவே நடந்து செல்லுங்கள்
பல் வைத்தியர்
தன் கடைசிக் குழியை
நிரப்பிக் கொண்டிருக்கிறார்"

வெளிநாட்டில் தனியாகக் காரில் சென்று
கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, வழிப்பறிக்
காரர்களிடம் தன் உடமைகள் அனைத்தையும்
பறிகொடுத்துவிட்டாள் - தன் ஆடைகள் உட்பட
ஒரு கவிஞ்ன் அதை ஒற்றை வரியில் இப்படி
எழுதினான்.

She lost everything except her smile!

இதுபோல இன்னொரு நிகழ்வை ஒரு கவிஞன்
படு சூப்பராக இரண்டே வரிகளில் எழுதினான்
ஆனால் அது Adults Only கவிதை
இங்கே சொல்வதற்கில்லை.

என் வகுப்புக் கண்மணிகள் வந்து போகும்
இடம். எனக்கு டின் கட்டிவிடுவார்க்ள்

எப்போதாவது நடேசன் பூங்கா போன்ற இடங்களில்
அதுதான் வலைப் பதிவர்கள் கூட்டாகச் ச்ந்திக்கும்
இடங்களில் நினைவு படுத்துங்கள் சொல்கிறேன்
--------------------------------------------
வலைப் பதிவுகளில் கவிதை என்ற தலைப்பில்
என்ன தேறுகிறது என்று பார்த்தேன்

Randum ஆக ஒருவாரப் பதிவுகளைப் படித்துப்
பார்த்தேன் 16.3.2007 முதல் 22.3.2007
தேதி வரை மொத்தம் 84 பதிவுகள் இருந்தன.

அதிகமான கவிதைகளைச் சும்மா காள்மேகம்
கணக்காக எழுதித தள்ளி முன்னனியில்
இருப்பவர் தொட்டராய சாமி.

அவருக்கு வாழத்துக்கள்

பெரும்பாலான- ஏன் 80% கவிதைகள் காதலிக்காக
எழுதப்பெற்றவைதான். காதலைத்தாண்டி பலர் வெளியே
வரவில்லை. காரணம் தமிழ் மணத்தில் 81%
இளைஞ்ர்கள்தான்.

பிற்காலத்தில் இவர்களெல்லாம் சமூகத்தைப்
பார்க்க ஆரம்பித்துக் கவிதைகள் எழுதுவார்கள்
என்று நம்புகிறேன்

இப்போது அந்த 84ல் சில கவிதைகளைக் கீழே
கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் கொடுக்க
எனக்கு ஆசைதான். பதிவின் நீளம் கருதி
அவ்வாறு செய்ய முடியவில்லை
-------------------------------
1. கோவை மணி

"அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்!"
-------------------------------
2. தொட்டராயசாமி

"எந்த சாபம்
வேண்டுமானாலும்
வாங்கிட
தயாராக உள்ளேன்

நான்
உனக்கு குழந்தையாக
பிறக்க வேண்டும்
அவ்வளவுதான்."

-------------------------
3. யாழினி அத்தன்

"சொல் ஒரு சொல்
உன்னோடு வரச் சொல்
இல்லை தூரப் போகச் சொல்
போதும் உன் விழிச் சொல்
வேண்டும் உன் வாய்ச் சொல்
சொல்லாமல் தினமும் சொல்லும் சொல்லுக்கு
வாய்திறந்து அர்த்தம் சொல்
சொல்வதை நான் சொல்லிவிட்டு நிற்கிறேன்
உன் சொல்லுக்கு!"

------------------------------------------------
4. சென்ஷி

"காலம் காயத்தை ஆற்றும்;
காதலை..?
கைசேராத காதலிக்காக
காத்திருக்கும் ஒற்றைக்கை;
உடைந்த மனசுடன்..
உறக்கத்திற்கு காரணம் தெரியவில்லை..
நான் உறங்காததன்
காரணம் நீ!
உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!"

-------------------------------------------
5. சி.வி.ஆர்

"பெண்ணே உந்தன் விரல் அழகு
என் வேதனை கூட்டும் விழி அழகு
எனை சோதனை செய்யும் சொல் அழகு
உன் புருவம் இரண்டில் கண்டேன் வில் அழகு!"

------------------------------------------------
6. சத்தியா

"என் வீட்டு வாசலில்
அழுத்தமாய் அழைக்கும்
அழைப்பு மணி
நீயாக இருக்காது
என்று தெரிந்தும் கூட
அந்தரித்து
உனை தேடி நிற்கிறது
என் ஆத்மா!
ஒரு தடவையேனும்
உன் குரல் கேட்காதா
என்ற ஏக்கம்
எனை வாட்ட...
ஒவ்வொரு தடவையும்
சிணுங்கும் தொலைபேசியில்...
நீயாக இருக்க வேண்டுமென்று
நீண்ட பிரார்த்தனையோடு
மூச்சிறைக்க ஓடிச் சென்று...
ஏமாற்றத் தீயில்வேகி
ஒடிந்துதான் போகின்றேன்!
சூரியனின் வட்டப் பாதையை
சுற்றிச் சுற்றியே பழக்கப்பட்ட
பூமிப் பந்தைப் போல..
உன்னையே சுற்றி சுற்றியே
எப்போதும்
வலம் வருகிறேன் நான்!"


------------------------------------------------------------
7.அமிழ்து

"தோட்டத்து ரோஜா செடியில் முள்ளில்லை...
வியப்பில்லை...
சரி தான், உன் வீட்டுச் செடியல்லவா!
பூச்செடியென்றால் இலை, தண்டு எல்லாமுண்டு தானே
நீ என்ன செய்கிறாய்...?
உன் வீட்டுச் செடியில் மட்டும் பூக்களாகவே உள்ளனவே!"

------------------------------------------------------
8.கென்

"பிறை நிலா புன்னகையில்,
ப்ரியங்கள் வழிந்திட,
உறைபனி மேகமாய் .
உள்ளம் மிதக்கும்.
கடக்கும் நொடியினில்,
தடதடக்கும் மின் தொடராய்,
இதயத்தின் துடிப்போ
இமயத்தை எட்டிடும்.
தெய்வம் பார்த்திட்ட பக்தனாய்,
சாபம் தொலைத்திட்ட அரக்கனாய்,
விழிகள் பெற்ற பயனை,
நொடியினில் தந்து மறைகிறாய்.
கடந்து போய்விட்ட காதல்பார்வைக்காய்
காத்திருக்கிறேன்,
காலத்தின் சூதில் பார்வை இழந்தப்பின்..."

----------------------------------------------
9.அருட்பெருங்கோ

"மழையில் குடை
குடைக்குள் நாம்
நமக்குள் மழை!"

-----------------------------------------------------
10. கோவி.கண்ணன்

"இந்த வழி ஆபத்தானதல்ல
இதோ பார் எனக்கு நன்றாகவே
இருக்கிறது என்றார்
செருப்பணிந்த ஒருவர் !

காலுக்குச் செருப்பின்றி நடக்கும் நான்
அதே வழியில் முட்கள் கிடந்து
தைப்பதை உணர்ந்தேன்.

இந்த செருப்பே வேண்டாம் !
என நினைத்து
ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது
பாதையை தூய்மைப் படுத்த போராட வேண்டும்

செருப்பணிந்தவர் சொல்கிறார்
என்னளவில் இந்த வழி நல்வழியே !
இதில் மாற்றம் தேவை இல்லை !

எப்போதும்,
நன்மை - தீமை என்ற பகுப்பில்,
பார்வையில் காணாமல் போகிறது
உண்மைகள் ! "

-------------------------------------------
அடுத்து, வேறு ஒரு தலைப்பில் தமிழ் மணப் பதிவுகள்
ஆயவு செய்யப்பட்டு, பதிவிடப்படும்

அன்புடன்
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
'வலைச்சரம்' இணையத் தமிழ் இதழ்
மேலும் வாசிக்க...

Thursday, March 22, 2007

வாத்தியார் ஆசிரியரான கதை



வாத்தியார் ஆசிரியரான கதை
By SP.VR.SUBBIAH

வாத்தியார் என்றாலும் ஆசிரியர் என்றாலும் ஒன்றுதானே
இது என்ன புதுக்குழப்பமாக இருக்கிறதே என்கிறீர்களா?

வகுப்பறையில் வாத்தியாராக அல்லல் பட்டுக்கொண்டிருந்தவன்
இப்போது இந்த வலைச்சரப் பத்திரிக்கையின் ஆசிரியாராகி விட்டேன்

பயப்பட வேண்டாம்!

சும்மா ஒரு வாரத்திற்கு மட்டும்தான். அப்புறம் பழையபடி
வகுப்பறைக்கே போய்விடுவேன்

நண்பர் சிந்தாநதி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.
உடனே ஓடி வந்து விட்டேன்.

என் வகுப்புக் கண்மணிகளிடம் கூடச் சொல்லவில்லை
அங்கே பண்ணுகிற ரகளை பத்தாதா? இங்கேயும் வந்து
பண்ணுவார்கள். அதனால் சொல்லவில்லை!

முதல்வன் படத்தில் வரும் நாயகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராகக்
கலக்கியதைப்போல நானும் ஒருவாரம், பத்திரிக்கை ஆசிரியராகக
இருந்து தமிழ்மணத்தை ஒரு கலக்குக் கலக்குவது என்று முடிவு
செய்து விட்டேன்

அதனால் துண்டோடு வந்துவிட்டேன்!

தோளில் துண்டு போட்டுக் கொண்டு ஆசிரியர் ஸீட்டில் அமர்வது
என்பது என்னுடைய நீண்டநாள் கனவு.

அந்தக் காலத்தில் கல்கி, தேவன், கி.வா.ஜ ஆகியோர்கள் எல்லாம்
தோளில் துண்டு போட்டுக்கொண்டுதான் பணி செய்வார்கள்
படத்தில் பார்த்திருக்கிறேன்

அவர்களைப் போல எழுதமுடியாவிட்டலும், துண்டாவது இருகட்டுமே
என்ற நைப்பாசைதான் - வேறு ஒன்றுமில்லை!

“சரி, உங்கள் புராணம் போதும்!” என்று படிப்பவர்கள் முனுமுனுப்பதற்குள்
விஷயத்திற்கு வருகிறேன்.

தமிழ்மணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பலர் குழுக்களாகச் சேர்ந்து,
செயல்பட்டுப் பல அரிய பதிவுகளைத் தருவது!..

அதில் பதிவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது.
அத்துடன் பல திறமையாளர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றும்போது
நிறைவான, உபயோகமான பதிவுகளும் கிடைக்கின்றன

அதைபபற்றிய விவரங்களை - எனது கண்ணோட்டத்தில் இங்கே
சொல்ல விழைகின்றேன்.

என் அறிவிற்கும், பார்வைக்கும் எட்டியவரை குழுக்களின் பெயர்களைக்
கொடுத்திருக்கின்றேன். என்னை அறியாமல் ஏதாவ்து குழுவின் பெயர்
விடுபட்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
SP.VR. சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - தமிழ் இணைய இதழ்
++++++++++++++++++++++++++++++++++++

1. தமிழ் வலைப் பதிவாளர்கள் உதவிப்பக்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)

புதிதாக வரும் பதிவர்களுக்கும் சரி, அல்லது
கணினித்தொழில் நுட்பத்தில் அதிகப் பரீட்சயம்
இல்லாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கும் சரி,
கை கொடுத்து உதவும் பதிவு இது
--------------------------------------------------------------------------------
2. வேலை வாய்ப்பு கல்வி வலையிதழ்
(5 பேர்கள் கொண்ட குழு)

இலைஞ்ரகள் பாணியில் சொன்னால் சூப்பரான பதிவு இது
வேலை தேடும் அல்லது வேலையில் முன்னேறத்துடிக்கும்
பல இளைஞர்களுக்கு இந்த வலையிதழ் ஒரு வரப்பிரசாதம்.
என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு - வயது காரணமாக
எவரும் வேலை தரமாட்டார்கள். ஆனால் நான் எனக்குத்
தெரிந்த பல இளைஞர்களைப் பார்க்கச் சொல்லும் பதிவு இது.
----------------------------------------------------------------------------------------
3. தமிழ் சங்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)


4. இலக்கணம்
(4 பேர்கள் கொண்ட குழு)

5. சொல் ஒரு சொல்
(4 பேர்கள் கொண்ட குழு)

இந்த மூன்று பதிவுக்ளுமே - பெயரிலேயே
பதிவின் நோக்கத்தைக் கொடிபிடித்துச்
சொல்கிறது!
இவர்கள் தமிழுக்கு அறிய சேவைகள்
செய்து வருகிறார்கள்.
பல அறிவு ஜீவிகளின் பின்னூட்டங்களைங்களை
நிறையக் காணலாம். சுவாரசியமாகவும், உபயோகமாவும்
இருக்கின்றது!
-------------------------------------------------------------------------------------
6. திராவிடத் தமிழர்கள்
(5 பேர்கள் கொண்ட குழு)

தங்கள் நிலைப் பாடுகளைச் சொல்லாற்றலுடன்
சொல்லும் குழு.
பெயரிலேயே குழுவின் சிறப்பான நோக்கம் தெரியும்
உடன்பாடான கருத்துக்களும் இருக்கும். சமயங்களில்
சில எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும்
நான் இவ்ர்களுடைய பதிவுகளை விரும்பிப் படிப்பதுண்டு!
------------------------------------------------------------------------------------
7. விக்கி பசங்க
(11 பேர்கள் கொண்ட குழு)

அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்
உடனே தயக்கமின்றிப் பதில் வரும்
(நான் இவர்களிடம் கேட்க விருபும் கேள்வி –
எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
சந்தித்திருக்கிறீர்களா?
அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?
-------------------------------------------------------------------------------------
8. சாப்பிட வாங்க
(4 பேர்கள் கொண்ட குழு)

விதம் விதமாக உணவுகளைப் பற்றி - த்யாரிக்கும்
முறையுடன் எழுதுகின்றார்கள். அதற்குத்
தொடர்பான படத்தைப் பார்த்தாலே போதும்
அப்போதே செய்து சாப்பிடத்தோன்றும்
இந்தக் குழுவினரிடமும் கேட்டுத் தெரிந்து
கொள்ள ஒரு கேள்வி உள்ளது.
பாலாபாய் அவர்களை உங்கள் குழுவில் எப்படி
சேர்த்துக் கொண்டீர்கள்?
அவர் நல்லவர் - வல்லவர்
அவருக்குச் சாப்பிடத் தெரியும், மற்றவர்களுக்கு
விருந்து வைக்கத்தெரியும்!
ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
அவருக்கு ஏதாவ்து தெரியுமா?:-)))
------------------------------------------------------------
9. கடல் கன்னி
(9 பேர்கள் கொண்ட குழு)

கடலையும், கடல் சார்ந்த நகரங்களையும்
சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் குழு
--------------------------------------------------------------------
10. திரைப்பார்வை
(3 பேர்கள் கொண்ட குழு)

பெயரிலேயே இந்தக் குழுவின் செயல்பாடுகள்
தெரிவதால் விளக்கம் தேவையில்லை!
--------------------------------------------------------------------------
11. வலைச்சரம்
( 3 பேர்கள் கொண்ட குழு)

மிக மிக ந்ல்ல குழுவினரின் பதிவு.
(நான் ஆசிரியராக இருக்கிறேன் அல்லவா –
அதனால் தான் இரண்டு மிக மிக!)
இதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை
நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பதிவு
பல நல்ல பதிவுளை அடையாளங்காட்டும்
அருமையான வேலையைச் செய்து கொண்டிருக்கிரார்கள்
இவர்கள் என்னைபோன்ற ஆசாமிகளைக் கூப்பிட்டு
ஆசிரியராக ஒருவாரம் பணி செய்யப் பணிப்பதைக்
குறைத்துக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------
12. வருத்தப் படாத வாலிபர்கள் சங்கம்
(9 பேர்கள் கொண்ட குழு)

சிரிக்க, சரிக்க மட்டுமே என்று நகைசுவையாக எழுதி
வலைப் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைபெற்ற
குழு இதுதான் என்றால் அது மிகையல்ல
கவனிக்கவும் - வலைப்பதிவர்களில் 40% நகைசுவை
விரும்பிகள்
------------------------------------------------------------------------------
13. முருகனருள்
(6 பேர்கள் கொண்ட குழு)

14. கண்ணன் பாட்டு
( 5 பேர்கள் கொண்ட குழு)

மேற்கண்ட இரு குழுவினரும் இறைத்
தொண்டாற்றுபவர்கள். அருமையான்
இறை வழிபாட்டுப் பாடல்களையும், மனதை
நெறிப்படுத்தும் கட்டுரைகளையும் எழுதிக்
கொண்டிருப்பவர்கள்.
இவ்ர்களின் பதிவுகள் - என்னைபோன்ற
வயதான் ஆசாமிகளுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும்:-))))
-----------------------------------------------------------------------------------
15. சக்தி
( 3 மாதரசிகள் கூட்டாக கலக்கும் பதிவு)

பெண்களின் தேவைகள், பெண்களின் பிரச்சினைகள்
அதற்கான் தீர்வுகள், யோசனைகள் என்று சிறப்பாக
எழுதுகின்றார்கள்
----------------------------------------------------------------
16. சென்னப்பட்டிணம்
( 8 பேர்கள் கொண்ட குழு)

சென்னையின் சிறப்புக்களையும் பிரச்சினைகளையும்,
அதற்கான சீரமைப்பு யோசனைகளையும் எழுதிக்
கொண்டிருக்கும் குழுவினர்
-----------------------------------------------------------------------
17. இயன்ற வரையிலும் இனிய தமிழில்
( இருவர் கூட்டணிப் பதிவு)

தனிதமிழ் ஆர்வலர்களுக்கான் பதிவு. அரிய
தமிழ்ச் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்
----------------------------------------------------------
18. சற்று முன் ( Breaking News)

தமிழ் வலைப் பதிவுகளில் ஒரு புதிய, அற்புதமான
முயற்சி - செயல் பாடுகள் கொண்ட பதிவு
இந்திய மற்றும் வெளி நாட்டுச் செய்திகளை சுடச் சுடச்
தொகுத்துக் கொடுக்கிறார்கள்
16 நல்ல இதயங்கள் Cum வல்லுனர்கள் சேர்ந்து செயல்
படுகின்றார்கள். அதோடு நம் மின்னஞ்சல் முகவரிக்கே
செய்திகள் வந்து சேரும் இணைப்பையும் கொடுத்து
உதவுகிறார்கள்.
ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே 537 பதிவுகள்
இட்டிருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி
இப்போது தமிழ்மணத்தில் மிகவும் Popular ஆன பதிவு
இவர்களுடைய பதிவுதான்
ந்ல்ல வளர்ச்சியும், எதிர்காலமும் இந்த்ப் பதிவிற்கு உள்ளது
இன்னும் சில மாதங்களில் கூகிள் நிறுவன்மே (Tamil Division)
இவர்கள் பதிவின் மேல் ஒரு கண் வைத்து, நல்ல விலை
கொடுத்து வாங்கிவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது!:-))))

(க்ண்ணோட்டம் தொடரும்)

--------------------------------------------------------------------
Blogger சொதப்புகிறது. அதனால் இந்த
18 குழுக்களுக்கும் பெயரின் மீது அழுத்தி
சுட்டி வரும்படி செய்ய இயலவில்லை! (செஞ்சாச்சு-சிந்தாநதி)
பொருத்தருள்கவும்!
மேலும் வாசிக்க...

வருகிறார் வாத்தியார்

சராசரியாக தினம் ஒரு பதிவு வீதம் போல வலைச்சரம் தொடுத்து மகிழவைத்த நெல்லை சிவாவிற்கு நன்றி. வகைகளைப் பிரித்து சின்னதாக தொகுப்புகளை இட்டு பதிவுகளை அறிமுகம் செய்ததும் ரசிக்க வைத்தது.

ஒருசில பதிவுகள் முந்தைய ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப் பட்டவை திரும்ப வந்தது தவிர வேறு பிரச்சினை இல்லை. இந்த பிரச்சினையை தவிர்க்க பதிவுகளை அறிமுகம் செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட இடுகைகளை அறிமுகம் செய்வது அவசியம். இதன்மூலம் அடுத்த ஆசிரியர் அதே பதிவரின் இன்னொரு இடுகையைக்கூட வேறொரு காரணத்திற்காக அறிமுகம் செய்யலாம். பரிந்துரைக்கலாம். இது இனிவரும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய ஒன்று.

வாழ்த்துக்கள் சிவா.

இனி வலைச்சரத்தின் நான்காவது ஆசிரியர் யாரென்று பார்ப்போம். பலவகை புதிர்களும் கண்ணதாசன் புகழ்பரப்பும் பல்சுவை விருந்தும் தந்து தமிழ்வலைப்பதிவுகளில் வாத்தியாராக வலம் வந்து கொண்டிருக்கும் SP.VR.சுப்பையா அவர்களே வலைச்சரத்தின் அடுத்த ஆசிரியர்.

ஓவர் டு வாத்தியார்.
மேலும் வாசிக்க...

சுட்டிச்சுட்டி ஒரு வாரம் ஓடிடுச்சு!

சடுதியில் 21-ஆம் தேதி வந்துவிட்டது. நாட்கள் நகருவது ஒலியின் வேகத்தைவிட அதிகமாயிருப்பது போல் தோன்றுகிறது. அதுவும், இணையத்தில் உட்கார்ந்து, வலைப்பூக்களை சுற்றிச் சுற்றி வந்தால், பொழுது போவதே தெரியாது. பூமிப்பந்தை சுருட்டி இணையத்தில் ஓட விட்டது போல், எல்லாவித தகவல்களும் கிட்டுகிறது.

இன்றோடு என் சுட்டுதலை முடிக்க வேண்டும், அடுத்த ஆசிரியர், அதிரடியாய் வந்து கொண்டிருப்பார், அதற்குள் இன்னொரு ஆட்டம் ஆடிரலாமா?

புதுசா வலைப்பதிவு ஆரம்பிக்கிறவங்களுக்கு டெக்னிகலா சில சமாசாரங்கள் புரியாது. அதெல்லாம் தெளிவு படுத்தவும், புதியதகவல்கள் தரவும் நிறைய மக்கள் பதிவுகள் பதிஞ்சிருக்காங்க.

ரவிசங்கர், வலைப்பதிவில் பாடலை எப்படிப் பதிவது குறித்துச் சொல்லியிருக்கிறார், பாருங்க.

தமிழ்ப்பித்தனும், நிறைய தகவல்களைத் தருகிறார், பாட்காஸ்ட் எனப்படக்கூடிய வலைஒலிபரப்பினைக் குறித்த தகவல்கள் படிக்கச் சுவை.

புதிய ப்ளாக்கருக்கு மாறிய பிறகு, பழைய பின்னூட்டங்களில் தெரிந்த பூச்சியை விரட்டிய கோபியின் பதிவுகள், 'ஜெகத்'தோட பதிவுகளப் படிச்சா, இன்னும் பல புதுமைகள் புரியும்.

சின்னக்குட்டியோட வீடியோ தளமும், சிறந்த பொழுதுபோக்குக்கு உதவும், கமலோட பேட்டி, இதன் மூலமாகத்தான் பார்த்தேன். நாம தேடிப் போய், இந்த மாதிரி வீடியோவைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, இவரோட தளத்த அப்பப்ப பார்த்தாலே போதும்!

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம், நாளுக்கு நாள் வளர்கிற வலையுலகில், பதிவுகளுக்கு என்றும் பஞ்சமிருக்காது. நிறைய புதிய பதிவர்கள் தினமும் வருகிறார்கள், துவக்கத்தில் இருக்கின்ற ஆர்வம், போகப்போக காணாமல் போய்விடுகிறது. எல்லா வலைப்பதிவுகளும், எல்லா நேரமும், உபயோகமாய் செய்தி தந்து கொண்டிருக்கமுடியாது, நிறைய வலைஞர்கள், நாட்குறிப்பு போல பயன்படுத்துகிறார்கள். அது போல் செய்தால் கூட, வலைப்பதிவுகளை இடைவெளிவிடாமல் பதிவுகளைத் தரலாம்.

எப்படியோ எல்லோரும் ரசிக்கும் விதமாய், பதிவுகள் பதியப் படட்டும்.

கிடைத்த வாய்ப்பில், நான் கண்ட வலைப்பதிவுகளை உங்கள் சுவாரஸ்யத்திற்கும், பகிர்ந்திருக்கிறேன். சிந்தாவுக்கு நன்றியுடன்..உங்களுக்கும் நன்றி சொல்லி, வலைச்சரத்திலிருந்து விடைபெறுகிறேன்!

நட்புடன்..
நெல்லை சிவா.
மேலும் வாசிக்க...

Wednesday, March 21, 2007

வலைச்சரம் சுட்டும் வளைக்கரங்கள்

வளையோசை கலகலக்க வலைப்பதிவும் களைகட்டுகிறது. ஆமாங்க, சமீபமா, பூக்கள் எல்லாம் புயல்களாக வலைப்பூவை கலக்கிக் கொண்டு வருகின்றன. வாசப் பூக்களின் நறுமணங்கள் சில அறிவோமா?

Image and video hosting by TinyPic



கவிதை வரிகளின் கனவு தேசத்தில் எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ணல் வேண்டும்
என்று சொல்லும் பைங்கிளி
.



நடைபாதையில்
புத்தகம் விமர்சிக்கும்
புதிய ராதை


ஆங்கிலத்தில் அரட்டை
கொஞ்சம் தமிழிலும் கதைப்பு
என்று வழக்கப்படுத்திக் கொண்ட வலைப்பூ

சிவம் சொல்ல வரும் சிதம்பர ரகசியம்

வலையில் தவழும் பாட்டியம்மா
பகிரும் அனுபவத் தகவலம்மா

பெண்ணியம் குறித்த சூரியப்பார்வை

நட்பாய் போர்க்கொடி தூக்கி
இருநூறுக்கு அருகில்
ஜொலிக்கும் பதிவுகளோடு!

ஊருக்கு ஊர் சென்று
இருபத்தியெட்டாவது நட்சத்திரம் காணும்
கண்மணி கண்டுசொன்ன
இன்னொரு பாட்டியம்மா!

விதவிதமாய் வித்தியாசமாய் சுட்டு சுட்டு
வலையில் பரிமாறி
வயிற்றுக்கும் ஈகும் அன்னலட்சுமி
மேலும் வாசிக்க...

Tuesday, March 20, 2007

கருப்பொருள் சுட்டும் பதிவுகள், கண்டுபிடிங்க பார்க்கலாம்!

புதுசா ப்ளாக் தொடங்குறப்ப, என்ன பெயர் வைக்கலாம், ப்ளாக் பத்திச் சொல்றப்ப, என்ன முன்னுரை கொடுக்கலாம்னு குழப்பமா இருக்கும். அதை அழகாச் செய்திருக்கிற, நம்ம ப்ளாக்கர்ஸ் சில பேரோட 'ப்ளாக்கின்' கருப்பொருள் கீழே கொடுத்திருக்கிறேன், பெரும்பாலானவை, அடிக்கடி நீங்க படிக்கிற ப்ளாக்-ஆகத்தான் இருக்கும், கருப்பொருளை வைத்து ப்ளாக்கர் யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க.. முடியலைன்னா, அதனை 'க்ளிக்' பண்ணித் தெரிஞ்சுக்கங்க... :)



காற்றின் மொழி: ஒலியும்...இசையும்....!

சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்

கற்றது கைமண் அளவாம்! இன்னொரு கையளவு மண்ணைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன்!

பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவன்!

தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)

வீதிக்கொரு கட்சி உண்டு..ஜாதிக்கொரு சங்கம் உண்டு..நீதி சொல்ல மட்டும் இங்க யாரும் இல்ல. இத கேக்க

வானம் திறந்திருக்கு பாருங்கள், என்னை வானில் ஏற்றி விட வாருங்கள்...

மெல்லிய இதயம்..தூய சிந்தனை...அவ்ளோதாங்க நான்..
(இவங்க முதல் பதிவுலேயே முப்பத்து எட்டு பின்னூட்டம் கண்டவங்க, அத்தனைக்கும் பதில் சொல்லியிருந்தா 76 பின்னூட்டமாயிருக்கும், அவ்வளவு கவர்ந்தவங்க..)

மனிதா மகத்தான பணிகள் செய்ய நீ பிறந்திருக்கிறாய்

வருடியதை நண்பர்களிடம் கூறுங்கள்... வருடாததை என்னிடமே கூறிவிடுங்கள்..!

உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது!

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்

கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்

நான்..." நேற்றைய என்னை வெல்லத் துடிக்கிறேன்... நாளைய என்னிடம் தோற்கப்போவது தெரிந்திருந்தும்

மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
மேலும் வாசிக்க...

Monday, March 19, 2007

காமெடி கலக்கல்ஸ்

ஒரு முறை நம்ம வலைவாத்தியார் SP.VR சுப்பையா அவர்கள் வலைப்பதிவுகளிலே எவ்வகையான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகிறது என்று ஒரு சர்வே போட்டிருந்தார். பெரும்பாலான பேர் எதை தெரிவு செய்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?... 'நகைச்சுவை..நையாண்டி'-யைத்தான் கணிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு நீங்களே 'ஒரு சபாஷ்' போட்டுக்கங்க.

நகைச்சுவையை ரசிக்கிறது எளிது, ஆனா, நகைச்சுவையா எழுதுறது அவ்வளவு சுலபமில்லை. இதுலயும் நம்ம மக்கள், புகுந்து விளையாடி வலைப்பூவை ஜாலிப்பூவாக்கி விடுறாங்க.

அபிஅப்பாவோட 'அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்' படிச்சீங்களா? பாப்பாவின் குறும்போட, இவரது குறும்பையும் சேர்த்து சுவாரஸ்யமா சொல்லியிருப்பாரு. படிச்சதில்லைன்னா, படிச்சுப் பாருங்க, உங்க வயிறு, சிரிச்சுசிரிச்சு புண்ணாகிறதுக்கு நான் கியாரண்டி.

பொதுவாக பெண்கள், அழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அளவுக்கு நகைச்சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க, (இப்படிச் சொல்லி, எதுவும் வாங்கி கட்டிக்கப் போறேனோ?) அப்படிங்கிற நினைப்பை, தகர்க்கிற மாதிரி இருந்தது கண்மணியோட 'ச்சுப்ரமணிக்கு இனிஷியல்' பதிவு.

தலைப்பிலேயே உள்ள இழுத்து வச்சு, படிக்க வைக்கிறதும் ஒரு கலைதான். அந்த வகையில 'குட்டின்னாலே தனி 'கிக்'குதான்' ஜொள்ளுபாண்டியும் தன்பங்குக்கு ஜாலியா ஜொள்ளுவிட்டிருக்காரு. ஜொள்ளுவிட்டுட்டே படிங்க. :)).

ஜாலியா எழுதுறதுல ரொம்ப முக்கியமா குறிப்பிட வேண்டிய ஒருத்தர் இருக்கார், இவரோட எழுத்தோ, இல்ல எழுத்துக்கு கிடைச்ச பின்னூட்டமோ, ஏதோ ஒன்னு இவர தமிழ்மண முகப்புல காட்டிகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு வசீகரிச்சு வச்சிருக்கார், யாரைச் சொல்ல வாரேன்னு வழக்கமா தமிழ்மணம் படிக்கிறவங்க தெரிஞ்சிருப்பீங்க.. , சமீபமா இவெரெழுதின உள்குத்து பதிவும், வழக்கமான அவரது பதிவு போல சிறப்புதான்.

கலாய்க்கிறதுக்குன்னே பதிவு ஆரம்பிச்சு, கலாய்ச்சிகிட்டு இருக்காரு இவரு. அவரோடபதிவுகளும் ஜாலியா இருக்கும்.

இன்னும் நிறைய மக்கள் ஜாலியா எழுதுறாங்க, சிலர் ஜாலியா பின்னூட்டத்தில கதைக்கிறாங்க, நீங்க உங்களுக்கு தெரிஞ்ச பிற ஜாலிப் பதிவர்களையும் குறிப்பிடுங்களேன், பின்னூட்டத்தில்.
மேலும் வாசிக்க...

Saturday, March 17, 2007

சாகரன் வாயிலாய் அறிமுகமான பதிவுகள்

முதன்முதலில் நான் வலைப்பதிய தொடங்கிய போது, எனக்குத் தமிழ்மணம் மட்டுமே அறிமுகமாயிருந்தது. 'தேன்கூடு போட்டி..போட்டி' என்று மாற்றி மாற்றி பதிவுகள் வரவே, தேன்கூடும் அறிமுகமானது. மாதாமாதம் ஒரு தலைப்பு கொடுத்து, தலைப்புக்கு கதை கவிதை கட்டுரைகளை, பதிவர்களை எழுதத் தூண்டியது, தேன்கூட்டின் சிறப்பம்சம்.

ஒரு வகையில், அது வலைஞர்களை ஒன்றிணைத்தது என்றால், மிகையில்லை. என்ன எழுத என்று ஏங்கிக் கொண்டிருந்த என்போன்ற பலருக்கு தேன்கூடு போட்டி, கற்பனைக் கதவைத் திறந்துவிட்டது. வாராந்திர, மாதாந்திர பத்திரிக்கைகளில் மட்டுமே, கதை படித்துக் கொண்டிருந்தவர்களை, எழுதவும், படிக்கவும் தூண்டிய இனிமையான போட்டி அது.

அந்தப் போட்டியில் என்னைக் கவர்ந்த கதைகள் என்றால், ஒரு பெரிய பட்டியலே போடலாம். இளவஞ்சியாரின் 'விட்டில் பூச்சிகள்' , அருள் குமாரின் 'பெரிய மனுசன்' , கெளதமின் 'ஒரு நண்பனின் நிஜம்', வினையூக்கியின் 'அவள்', கடல்கணேசனின் 'ஓர் இரவில்..தீபாவை மீட்க'
போட்டிகளில் ஆக்கங்களை அள்ளிப்படைத்த வசந்தின் 'வாசம்', ஷைலஜா வின் 'ஒன்றா..இரண்டா..இலவசம்', மயூரேசனின் ' யாருக்கு இலவசம்', எனது 'வலைப்பூ..தலைப்பூ..வாழப்பூ', பேடுநியூஸிந்தியாவின், 'லாட்டரி கோவிந்தன்', சரவ்-வின் 'திருமணம் 1.0', அரைபிளேடின் 'கல்யாணராமனுக்கு லவ் மேரேஜு', முத்துவின் 'டன் டன் டன் டகா' என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேன்கூடு போட்டி வலையில் கூட்டிய சுவாரஸ்யம், மறக்க முடியாத ஒன்று. அவர் வழியைப் பின்பற்றி, சர்வேசனும் ஒரு கதைப்போட்டி வச்சிருக்காரு. உங்களுக்கும் கதை எழுத ஆர்வமிருந்தா, நீங்களும் இந்த சுவாரஸ்யத்தில கலந்துக்கலாம்.

இப்ப உங்களுக்கு சில கதை வலைப்பூக்கள் அறிமுகமாயிருக்கும், அடுத்த அறிமுகத்துக்கு காத்திருங்க..
மேலும் வாசிக்க...

Thursday, March 15, 2007

நானா? 'வலைச்சரம்' தொடுக்கிறேனா?

நானா? வலைச்சரம் தொடுக்கிறேனா? - வாவ்.. ஆச்சரியம்தான். போன வாரம் 'மின்மினி'க்கு மெயிலில் வந்த கருத்துக்களை படித்துக் கொண்டிருக்கையில், 'சிந்தாநதி'யிடமிருந்து, 'சமீபத்தில் நான் ரசித்த ப்ளாக்' என்பதற்கான பின்னூட்டத்தில், 'மின்மினி'யின் மெயில் முகவரி கேட்டிருந்தார்.

என்னடா இது, மனுசன் கமெண்ட் ஏதும் போடாம, தனியா மெயில் முகவரி கேட்டிருக்காரே, என்ன விசயமாயிருக்கும்?னு மண்டை குடைஞ்சது. 'ஏதாவது, தனியா மெயில்ல கூப்பிட்டு அர்ச்சனை பண்ணிடுவாரோ-ன்னு ஒரு சின்ன கிலியும்தான். :). 'காசா, பணமா அனுப்பி வை'-ன்னு பட்சி சொன்னதுல, அனுப்பி வச்சா, 'வருகின்ற வாரத்துக்கு வலைச்சரத்தின் ஆசிரியரா இருக்க முடியுமா?'ன்னு கேட்டிருந்தார். 'கரும்பு திங்க கூலி கொடுக்கிறேங்கிறார்', வேணாமுன்னு உட்டுடுவோமா என்ன?' , கபக்-னு புடிச்சுட்டேன். பதிவுகளின் படைப்பாளன் என்பதை விட, பதிவுகளின் படிப்பாளன் என்பது எனக்குப் பிடித்த ஒன்று.

நாளொன்றுக்கு குறிப்பிடத்தக்க அளவில், புதிய ப்ளாக்குகள் அறிமுகமாகிற வேளையில், 'வலைச்சரம்' போன்ற முயற்சிகள் நல்ல எழுத்துக்களைப் 'பத்தோடு பதினொன்றாய்'ப் போய்விடாமல், எல்லோரும் அறிய இனம் காட்ட கண்டிப்பாய் உதவும். இது போன்ற எண்ணம், எனக்கும் உண்டு. அவ்வகை எண்ணத்தின் பிரதிபலிப்புதான் 'மின்மினியில்' நானெழுதிய 'சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்' மற்றும் 'சமூகப்பொறுப்புணர்த்தும் பதிவுகள்' போன்றன.

தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும் புதிய வலைப்பூக்கள் அறிமுகப் பகுதி, எனக்குப் பிடித்த ஒன்று. தமிழ்மணத்தில் போர்க்களமாய் இருந்த, சில சந்தர்ப்பங்களில், இம்மாதிரி புதியவர்களின் அறிமுகங்கள் சில, குழந்தையின் வருகையாய் மகிழ்ச்சியளித்ததுண்டு.

இந்த வலைச்சரத்தின் முக்கிய நோக்குகளின் ஒன்று, புதியவர்களை அறிமுகம் செய்வதும்! ஸ்டார் பதிவர்களின் படைப்புகளுக்கு முன்பு, 'நமது பதிவுகளுக்கும் அங்கீகாரம் கிடைக்காதா?' என்ற புதியவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வலைச்சரத்தின் பங்கு பாராட்டுக்குரியது, இதனைத் தான் மட்டுமே செய்யாது, வலைஞர்களின் பங்களிப்போடு, செய்ய முயற்சித்திருக்கும், சிந்தாவுக்கு ஒரு 'ஸ்பெஷல்' பாராட்டு.

'பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?'ங்கிற விதமாய், நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்பெறும்' என்று வாளா இருக்காமல், அதனை இனம் காட்ட முயற்சிக்கும் வலைச்சரத்திற்கு, என்னை இவ்வவர தொகுப்பாசிரியராக்கிய சிந்தாவுக்கு நன்றியுடன் தொடங்குகிறேன், இந்த வாரத்தினை.

கூடவே வாங்க, என்னோட பார்வையில இந்த வலைப்பூக்களைக் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தின் மூன்றாவது ஆசிரியர்

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. இந்த வாரம் சிறில் ஆசிரியராக இருந்து பதிவுகளை தொகுத்தார். ஆனால் அவரே சொன்ன மாதிரி நல்லா ஏமாத்திட்டார்னு தான் சொல்லணும். இதைவிட மிகச்சிறப்பா அவரால செய்திருக்க முடியும்.

இந்தப் பொறுப்பை அவரிடம் கொடுக்கும் போது வலைச்சரத்திற்காக நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். அதன்படி செய்திருந்தால் மிகச்சிறப்பாக வந்திருக்கும். ஆனால் வேலைப்பளு காரணமாக அவரால் திட்டப் படியான பதிவுகளை தேடித் தொகுக்க முடியவில்லை.

அதனால் எப்படியோ வாரத்தை ஒப்பேத்தி விட்டுட்டார். என்றாலும் அந்த நெருக்கடியிலும் இங்கும் பங்களித்ததற்காகவே அவருக்கு சிறப்பு நன்றி. முடிந்த அளவுக்கு அறிமுகம் செய்த பதிவுகளையும் நல்லா தொகுத்திருந்தார். நன்றி.

அடுத்து வலைச்சரத்தை தொகுத்து வழங்க ஆசிரியராக வருபவர் நெல்லை சிவா. மின்மினி வலைப்பதிவாளர். சமீபத்தில் சர்வேசன் புகைப்படப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறார்.

தனது வலைப்பதிவில் கடந்த வாரம் சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்... என்று ஒரு தொகுப்பு இட்டிருந்தார். வலைச்சரத்தின் நோக்கங்களை புரிந்து தொகுக்க இவரால் முடியும் என்று அதைப் பார்த்தவுடன் தோன்றியது. இதோ உங்களுக்காக பதிவுகளை அறிமுகம் செய்ய நெல்லை சிவா.!
மேலும் வாசிக்க...

பூச்சு பூச்சா பதிவருங்கோ

பதிவுலகில் நான் வரும்போதே சாதி, சமயக் காய்ச்சல் பிடித்திருந்தது. இத உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருந்தால் நமக்கும் மஞ்சக் காமலை வந்திடும். பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன் ஆனால் சிறில் எனும் தனிப்பட்ட மனிதனுக்கு சாதி மதம் குறைந்தபட்சமாகவே தேவையாயும், பெருமையானதாயும் இருந்திருக்கிறது. ஆனால் பதிவுகளப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் சளிபிடித்தது. இருந்தாலும் அப்பப்ப தும்முவேனே தவிற காறித் துப்புவதில்லை.

ஏன் இதப் பத்தி சொல்றேன்னா என் நண்பர்களை பதிவுகளைப் படிக்க அழைக்கும்பொது இரண்டாம் நாளே அவர்கள் சொல்வது என்னடா இப்டி சண்ட போட்டுக்கிறானுங்கன்னுதான். எனக்குத் தெரிந்து பத்துபேரு போடுற சண்டையில சில நூறுபேரின் பெயரும் அடிவாங்குது.

ஆனா இப்போது நிலமை நல்லாயிருக்கு. பல புதியவர்கள் வந்து கலக்கு கலக்குன்னு கலக்கி நம்பிக்கை நட்சத்திரங்களாய் மிளிர்கிறார்கள். (இப்டியெல்லாம் சொன்னா நம்மள சீனியர் பதிவர்னு நினைப்பாங்கல்ல?)

என் கண்ணில் மின்னும் புதியவர்கள். (புதியவர்கள் = June 2006க்குப் பின் பதிவை துவக்கியவர்கள்)

உலகக்கோப்பை 2007 - மணிகண்டன். சிறப்பாக, சுவாரஸ்யமாக உலகக் கோப்பை பற்றி தகவல்களைத் தருகிறார் மணிகண்டன். வெறும் பதிவு என நின்றுவிடாமல் போட்டியெல்லாம் வச்சு சுவாரஸ்யத்த அதிகப் படுத்திட்டார். உ.கோப்பைக்கபுறம் என்ன செய்யப் போறார்னு தெரியல.

ரிச்மாண்ட் தமிழ்சங்கம். ஒர் தமிழ் சங்கம் வலைப்பதிவு வச்சிருக்கிறது என்பதே பெரிய விஷயம். வெளிநாட்டு தமிழ் சங்கங்களில் அரசியலும் பிரிவினைகளும் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இவங்க தொடர்ந்து பதிவுகளத் தந்தபடி இருக்கீறார்கள். வாழ்த்துக்கள்.


செல்லி. பல விஷயங்கள அலசுறாங்க குறிப்பா திரைப்படங்களும் நோய்களும் எனக்குப் பிடிச்சிருந்தது. இவங்க URL பாத்தீங்களா? எல்லாம் தெரியும்போலிருக்கு.

ஊரோடி. இவர் பதிவ வடிவமைச்சிருக்கும் விதமே வித்தியாசமாயிருக்கும். இணைய பக்கங்களை வடிவமைப்பதுபற்றி பல விஷயங்களை தெரியத் தருகிறார்.

அலசல் சேவியர். பல தலைப்புகளிலும் அலசல் கலக்கல்.

மாற்று. இது பதிவல்ல, நல்ல பதிவுகளை அடையாளம் காட்டும் தளம். நிச்சயம் பயன்படுத்தவேண்டியது எனச் சொல்லுவேன்.

விக்கி பசங்க. சீரியசான விஷயங்களுக்குன்னு ஆரம்பிக்கப்பட்ட அருமையான குழுப்பதிவு. சிறப்பான தலைப்புகளில் கலக்குவாங்க.

சற்றுமுன். என்னடா இதுன்னு கேக்காதீங்க :) சற்றுமுன் குழு நிச்சயமா பாராட்டுக்குரியது, நானும் குழுவில் ஒருத்தன் என்பதில் பெருமை. துவங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது. 400+ செய்திகள்(பதிவுகள்) தந்திருக்குது சற்றுமுன். இன்னும் கலக்குவோம்.

இத்தோட நான் மூடிக்கிறேன். இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தால் பாப்போம்.

அன்புடன்

சிறில் அலெக்ஸ்

மேலும் வாசிக்க...

Wednesday, March 14, 2007

பாழாய் போகாத பழசுகள்

பொன்ஸ் மின்னும் புதியவர்களை அறிமுகப் படுத்தினார் நான் கொஞ்சம் பழையவர்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆயிரக்கணக்கில் பதிவுகள் பெருகப் பெருக பழையவர்களின் முகங்கள் கூட்டத்துல காணாமப் போயிடுச்சோன்னு வருத்தம்தான். :)

எனக்குப் பிடித்த சில பதிவர்கள் ஒரு சின்ன அடைமொழியோடு...

ஈ தமிழ் - ஊக்கமளிக்கும் உயர் நண்பர் (Linkசாமி)
துளசி - அன்பான அக்கா
ஜோ - முதல் இணைய நண்பர் (எங்க ஊர்க்காரர்)
தருமி - இவர் சொன்னா பெருமாள் சொன்னமாதிரி
ஜி. ரா - ஈ மயிலார்
மதி - சீனியர்
பத்ரி - செய்தி விமர்சகர்
சுரேஷ் கண்ணன் - இலக்கிய வட்டம்
இட்லிவடை - செய்திகள் வாசிப்பது
பொன்ஸ் - தளபதி(யானைப் படை)
செல்வன் - கடவுளே! கடவுளே!
மோகன் தாஸ் - இவர்கதை சிறுகதை
குமரன் - ஆன்மீகத் தமிழர்
சிவபாலன் - ஆல் இன் ஆல் தமிழர்
கோவி. கண்ணன் - சிங்கை சிங்கம்
SK - மனதுக்கு மருத்துவர்
முகமூடி - புரியாத புதிர்
இ.கொத்ஸ் - பின்னூட்ட நாயகன்
இராமநாதன் - இரசிக்கத்தகும் ரஷ்யர்
பிரபுராஜதுரை - Your honor
ராஜ்வனஜ் - இளங்கன்று (பயமறியாதவர்னு சொல்றேன்)
அண்ணாக்கண்ணன் - நூல் எழுத்தாளர்
நிர்மல் - அலசி ஆராய்பவர்
இளா - சங்கம் கண்ட சிங்கம்
தேவ் - என் இணைய பார்ட்னர்
வெட்டிப்பயல் - விகடன் கண்ட வித்தகர்
உதயகுமார் - சவுண்டில்லாத சவுண்ட் பார்ட்டி
நீலகண்டன் - இந்துத்வாவின் இணையக் குரல்
கால்கரி சிவா - கால்கரி கல(க்)கர்
வஜ்ரா - இடித்துரைப்பவர்
விடாது கறுப்பு - பெரியாரின் இணையக் குரல்
விட்டுது சிவப்பு - விடாது கறுப்புவின் எதிர்ப்பதம்
சிந்தாநதி - பாராட்டும் பண்பாளர்
சுப்பையா சார் - மரியாதைக்குரியவர்
பெனாத்தல் சுரேஷ் - காமெடி கிங்
நாமக்கல் சிபி - காமெடிக் கவிஞர்
சந்தோஷ் - சந்தோஷப் பக்கங்கள்
முத்து(தமிழி) - சீரியஸ் தமிழர்
இறைநேசன் - இறையை நேசிப்பவர்
செல்லா - வித்தியாசம்
அரை ப்ளேடு - செம மொக்க
அஞ்சலி பாப்பா - சூப்பர் குழந்தை
இராமகி - இலக்கிய வித்தகர்
மா. சிவகுமார் - அடக்கமாய் அமரருள் உய்ப்பவர்
செல்வபாரதி - 'சட்டை' செய்யாதவர்
கைப்புள்ள - அடி, மிதி, திட்டு வாங்குபவர்
பத்மா அர்விந்த் - சமூக சிந்தகி
லக்கிலுக் - விளம்புபவர்
சமுத்ரா - போர் வீரர்
திரு - சமூக சிந்தகர்
வெளிகண்டநாதர் - சினிமாக்காரர்
அசுரன் - அசுரர்
ஷைலஜா N - ஊக்கு' 'விக்கும்' புதிய நண்பர்
செந்தழல் ரவி - சமூக சேவ்கார்(பிழையல்ல)
விக்கி - எல்லாம் சொல்பவர்
ரவிசங்கர் - பதிவு கில்லாடி

அடைமொழி இல்லாமல்...

குழலி
டி.செ தமிழன்
நிவேதா
மலைநாடான்
நண்பன்

இன்னும் நிறையபேர் பலரையும் விட்டுவிட்டேன். இதுல உங்களுக்குத் தெரியாத, முதல் முறை பார்க்கிற பெயராயிருந்தால் கூகிளில் பெயரை இட்டுத் தேடிப் படியுங்கள். It's worth the effort.

பணி நிமித்தம் வலைச்சரத்தை ஒழுங்காக நினைத்தபடி செய்ய இயலவில்லை.

வலைச்சரத்தின் பேராசிரியர் என்னை மன்னிப்பாராக. நீங்களும்தான். ப்ளீஸ்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது