07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 31, 2008

4. நிஜமா நல்லவருக்கும், மங்களுர் சிவாக்கும் சமர்பணம்... நல்ல தமிழ் பதிவுகள்

வலைசரத்துக்கு வர சொன்னப்ப அக்கா போட்ட கன்டிசன் இதாங்க அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.

Kodumai da saami Nitham nitham nellu soru...

Me, Myself n Nonsense........ India trip - as it happened - Part 1

freeyavedu Elixir

சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம் :)
மேலும் வாசிக்க...

3. வாங்க கலாய்க்கலாம் (பா.க.ச ஸ்பெசல்)

’தல’ என்றால் நீ தான் பெருந்’தல’
அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல’
பலர் ’தல’ கருந்’தல’சிலர் ’தல’ வெறுந்’தல’
உனக்கு மட்டுமேவட்டமாக ’தல’பட்டமாக ’தல’
கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல’
புத்தி சொல்லியும் திருந்’தல’
உமக்கும் அதொன்றும் உறுத்’தல’
அதனால் பெருசா வருந்’தல’
என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல’
அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல’

எந்த விதிமுறைகளும் இல்லாமல் கலாய்க்கலாம். ஒருவரே எத்த்த்த்த்த்த்த்த்தனை முறை வேண்டுமானாலும் கலாய்க்கலாம்.

அண்ணன் பால பாரதி

நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து எடுத்துவிட்டார், இங்கு புதிதாக கலாய்க்கும் பதிவு போட யார் வந்தாலும் அவர் கையில் பாபா துணை (பால பாரதி துணை) என்று பச்சை குத்தி காதில் 1)பால பாரதி 2)பால பாரதி 3)பால பாரதி என்று மூன்று முறை பெயரை சொல்லி அவர் சங்கத்தில் உறுப்பினறாக ஆன பின்பே பதிவு போடுவது வழக்கம், இதுவரை எப்படி நீ அவரை தெரியாமல் இருந்தாய் என்று அடித்தார்.

பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க). நீங்களே அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொன்னார். நான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மண வாசகராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்து முன் தேதி இட்டு உறுப்பினர் அட்டை வழங்கி (அத்தனை மாதங்களுக்கும் சந்தா தொகையும்) என்னையும் அதில் உருப்பினர் ஆக்கிகொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.

பா.க.ச புரடக்ஸன்ஸ் பெருமையுடன் வழங்கும் பாலபாரதி இன் அண்ட் அஸ் பா(ட்)சா
பாகச புதுவரவுகள்
பாலா "ஜக்கு" பாய் (பாகச சிறப்பு பதிவு)
பொன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்!!!
பாலபாரதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா
லொல்லுசபா மனோகரும் தல பாலபாரதியும்
வேணாம்.. விட்டுடுங்க.. அளுதுடுவேன்
கனவில் வந்த பாலாபாய் (பா.க.ச பதிவு)

பாலா அண்ணா உங்களுக்கு என்னை தெரியாது ஆனா நானும் உங்க பாகச மன்ற அனானி உறுப்பினன் அதனால உங்க அனுமதி இல்லாம இந்த பதிவு எல்லாம் எடுத்து போட்டதுக்கு கோச்சிக்காதிங்க. என்ன இப்ப எல்லாம் பதிவு அதிகம் போடரது இல்ல.

இதுக்கு முன்ன போட்ட பதிவு கொஞ்சம் சீரியஸ் பதிவு போல யாருமே எட்டி பாக்கல
மேலும் வாசிக்க...

2. சீனியர் சரம் (அப்பா)

சீனியர் அப்படின்னா வயசானவங்க இல்லங்க இவங்க எல்லாம் பதிவுலகத்தில என்ன விட சீனியர்.

இவர பத்தி நான் என்ன சொல்லரது எல்லாருக்கும் தெரியும். அவரோட அப்பாவ பற்றிய பதிவு யாருய்யா இவரு? யாருய்யா இவரு - 2 யாருய்யா இவரு - 3

அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன் இவர் : அப்பத்தா , அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்

வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு அப்படின்னு சொல்லும் இவரோட அன்பான அப்பா...

நான் சுஜாதாவோ, பாலகுமாரனோ அல்ல. அதனால் என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்! :-) "குமரன் குடில்" இன்னா :-(

இவங்க ரொம்ப பெரிய சீனியர்ங்க, நல்லா இருக்கும் படிச்சி பாருங்க இவரோட கதை : எனது கதை!

http://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html நன்றி இளா

அடுத்து வர இருப்பது? கரும்பு தின்ன கூலி குடுத்த கதை தான்.
மேலும் வாசிக்க...

1. இம்சை கவுன்ட் டவுன் ஸ்டார்டிங் :)

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைசரம் குழு என்ன பத்தி சரியா புரிஞ்சி வெச்சிருக்காங்க. இந்த வாரத்துக்கு கரெக்டான ஆளத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க. அட நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.

என்ன மாதிரியான அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இதுவரைக்கும் பதிவு ஒன்னும் யோசிச்சி கைவலிக்க டைப்பினது இல்ல, 99% காப்பி பேஸ்ட், மொக்கை, கும்மி பதிவு தான் அதனால நேரடியா நான் ரசிச்சி படிச்ச, கேட்ட, பாத்த பதிவுகளுக்கு போயிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானே அப்படின்னு ரொம்ப சந்தோசபட வேண்டாம் காலை, மதியம், இரவு அப்படின்னு பெரிய இம்சை விருந்து போடலாம்னு இருக்கேன்... நடு நடுவே நீங்க விருப்பப்பட்டா ஸ்னாக்ஸ் கூட உண்டு.

மொதல்ல தேசிய கீதத்தில இருந்து துவங்குவோம், அப்படியே இங்க போய் மாதினி பாடியிருக்க பாட்டு கேட்டுட்டு வாங்க.

பாட்டு முடிஞ்சதா சரி இனி பாடம் படிக்கலாம், நம்ம நிலா குட்டியின் பாடம் படிச்சிட்டு வாங்க.

பாடம் படிச்சி போர் அடிக்குது இல்ல சரி அப்ப விளையாட போலாம், இந்த விளையாட்டெல்லாம் இப்ப யாரும் விளையாடரது இல்ல

விளையாடி களைச்சி பொயாச்சா, ரொம்ப பசிக்குதா அப்ப எல்லாம் சாப்பிட வாங்க வகை வகையா குட்டீஸ்க்கு பிடிச்ச சாப்பாடு நம்ம டாம் & ஜெர்ரியோட அம்மா சொல்லிதராங்க.

சாப்பிட்டாச்சா இனி என்ன ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அட மொக்கைய தான் சொல்லரேன் நிறையா இருக்கு போய் வேண்டியத பாத்துக்கோங்க.

ஆப்பு வாங்க நான் ரெடி , ஸ்டார்ட் மீஜிக்...ஜூனியர் பதிவு முடிஞ்சது அடுத்து சீனியர் பதிவு , மதிய விருந்துடன் திரும்ப வரேன்.
மேலும் வாசிக்க...

செயல்ப் புயலின் சரம் :)

வலைச்சரத்திற்காக தொடர்பு கொள்வதற்கு முன்பு எப்படியோ .. ஒத்துக்கொண்ட பின் ஏறக்குறைய அனைவருக்குமே வேலைச்சுமை வந்து ஒட்டிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சரி யார் தான் சும்மா இருக்கிறார்கள் அவரவருக்கு அவர் வேலை இருக்கத்தானே செய்கிறது. நந்தா, மூச்சுவிடக்கூட நேரமில்லை அதற்கும் ஒரு ஆளைத்தான் போடவேண்டும் என்ற நிலையிலும் நீள நீள மாக எழுதித்தள்ளிவிட்டார். ஒவ்வொரு சரத்திலும் அவர் இணைப்புகளை கொடுப்பதற்கு முன் நம்மோடு மிகப்பெரிய உரையாடலை நடத்திவிட்டிருக்கிறார்.
சுட்டிகளும் சிறப்பு விமர்சனங்களும் சிறப்பு.. நன்றி நந்தா.
-----------------------------
இந்த வாரம் வலைச்சரம் தொடுக்க இருப்பவர் இம்சை என்னும் பேபி பவனின் அப்பா. இம்சையை பவனின் அப்பா என்றால் தான் சிலருக்குத் தெரியுமாம். அத்தனைக்கு அவர் பதிவில் எழுதுவது குறைவாக இருக்கிறது. எனினும் இவர் "செயல் புயலாக" இருப்பார் என்று தோன்றுகிறது.( யார் யாரோ தானாகவே பட்டமெல்லாம் குடுத்துக்கிறாங்க நல்லது செய்யறவங்களுக்கு குடுத்தா என்ன தவறு ?) இவரது பதிவுகளிலும் நீங்கள் காண்பது பல வித்தியாசமான பொதுநல நிறுவனங்கள் பற்றிய அறிமுகங்கள். "ஃப்ரெண்ட்ஸ் ஆப் சில்ட்ரன்" ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு கனவு ; உங்களிடம் அதை நிறைவேற்றும் சக்தி;
என்கிற அமைப்பினை ஆரம்பித்து அவர்களின் குழு தொடர்ந்து இதுவரை 450 குழந்தைகளின் மேற்படிப்புக்கு உதவுகின்றதாம்.
மேலும் வாசிக்க...

Sunday, March 30, 2008

நன்றி சொல்லிக் கொள்கிறேன்

ஒரு வாரம் ஓடியேப் போய் விட்டது. வலைச்சரம் என்ற பெயரில் எனக்குப் பிடித்த, என் மனதுள் பல சலனங்களை ஏற்படுத்திய பதிவுகளை சரம் சரமாய் தொடுத்தும் விட்டாயிற்று. சொல்லப்போனால் இதில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நல்ல புத்தக விமர்சனங்களைப் பற்றிய பதிவுகள், சிறந்த திரை விமர்சனங்கள் பற்றிய பதிவுகள் என்று வகை தொகையில்லாமல் எழுதித் தள்ள ஆசைப்பட்டதுண்டு. இருப்பினும் நேரம் என்ற ஒன்று என் குரல் வளையைப் பிய்த்து நெறிப்பதாலும், ஒரு வாரம் முடிந்து விட்டதாலும், இத்துடன் எனது பகிர்தலை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி.
மேலும் வாசிக்க...

அழகியல் சார்ந்தவை

அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு மெயிலில் இருந்த தமிழ்மணம் லிங்கை கிளிக்கிப் பார்த்ததுதான் நான் வலையுலகை எட்டிப்பார்ப்பதற்கு முதல் காரணமாய் இருந்த ஒன்று.

அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்காமலிருந்திருந்தால் ஒரு வேளை நான் பதிவுலகிற்கு பார்வையாளனகவோ, படைப்பாளியாகவோ வந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு வேளை தாமதப்படுத்தப்படிருக்கலாம். இந்த இடத்தில் என் தன்னடக்கத்தை வெளிப்படுத்த வேண்டி “நீங்களும் தப்பித்திருக்கலாம்” என்று நான் சேர்க்க வில்லையென்றால், என்னை பெரும் கர்வக்காரன் என்று நீங்கள் எண்ணி விடும் அபாயமிருப்பதால் அதை இங்கே சேர்த்துக் கொள்கிறேன். நீங்களும் தப்பித்திருக்கலாம்.

காலங்கள் செல்லச் செல்ல நாம் நம்மை ஏதேனும் சில விஷயங்களில் நம்மை மேம்படுத்திக் கொண்டே போகிறோம்.அது நமது டெக்னிக்கல் நாலெட்ஜாக இருக்கலாம்.அல்லது வாசிப்பனுபவமாய் இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்பிருந்த வாசிப்புகளிற்கும், இப்போதிருக்கும் வாசிப்புகளிற்குமான வித்தியாசத்தையே என் பரிணாம வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது பதிவுலகமும், இலக்கிய உலகமும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் ஃபோபியாவின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். எடுத்துக் கொள்ளக்கூடிய ஆட்களைப் பொறுத்து நிலைப்பாடுகள் மாறிக் கொண்டே இருக்கிறது.

வாசிப்புகளைப் போலவே வாசிப்புகளைப் பற்றிய பகிர்தலும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாய் இருக்கிறது. நான் இந்த இந்த புத்தகங்களைப் படித்தேன் என்று சொல்வது படித்ததை பறை சாற்றிக்கொள்ளவா? அல்லது தேடலும், தேடலைப் பற்றிய பகிர்தலின் வேட்கையா? சொல்லப்போனால் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வெளிப்படுத்துகின்ற முறைகளே இவற்றை தீர்மானிக்கின்றன. நான் சொல்லப்போகும் சிலவையும் அப்படிப்பட்ட ஒரு வேட்கையின் வெளிப்பாடுதான்.

அருள்குமார்:

தனது நிறுவனத்தை முழு மூச்சில் நடத்த வேண்டியோ என்னவோ, இவர் இப்போதெல்லாம் வலையுலகில் காணப்படுவதேயில்லை. ஆனால் இவரது ஒரு சில பதிவுகள் என்ன காரணத்தினாலோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

மரணம் என்றொரு நிகழ்வ தேன்கூடு போட்டிக்காக எழுதப்பட்ட இந்த கதையில் எல்லா உணர்வுகளும் பொதிந்து கிடக்கின்றன. கதையின் இறுதியில் மெல்லியதாய் நிலவோடும் காதல் உணர்வும் ஒரு வித சந்தோஷத்தைத் தருகிறது.

மங்கையர்க்கரசி என்ற இவரது கவிதையில் இருக்கும் யதார்த்தம் மனதைச் சுடுகிறது.

இவர் தொடர்ந்து எழுதினால் இன்னும் பல நல்ல படைப்புகளை தரலாம்தான். கால ஓட்டத்தில் இவர் திரும்பி வரலாம்.

பத்மப்ரியா:

இவர் இப்போ சுத்தமாய் எழுதுவதே இல்லை. இருந்தாலும் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பு படித்த அழகியல் சார்ந்த கதைகளில் இவருடையதும் ஒன்று. வயதின் காரணமாயோ என்னவோ சில காலங்களாகவே காதல் சார்ந்த படைப்புகள் மிக எளிதில் என் மனதை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் இவர் தொடராக எழுதிய நிலா கதை எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கின்ற ஒன்று.

தேவ்:

தேவ்வின் பல கதைகள் எனக்கு ஒரு வகை இனம் புரியா சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. பல கதைகள் மெலோ டிராமேடிக் வகையைச் சேர்ந்தவைதான், இந்த இடத்தில் இந்த சம்பவம் நடைபெறும் என்பதை ஒரு தேர்ந்த வாசகனால் கண்டுப்[இடித்து விட முடியும்தான் என்றாலும், இவரது இந்தக் கதைகள் ரொம்பவே பிடித்துதான் இருக்கின்றது.

நட்பெனும் தீவினிலே
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
ஒரு சாரல் பொழுது...

வெட்டிப்பயல்:

வலையுலகில் ரொம்பவே அறிமுகமான இவரின் ஆரம்பகால கதைகளில் உள்ள காதல் உணர்வும், ஏன் என்ற கதையில் உள்ள சோக உணர்வும் ரொம்பவே பிடித்துப் போனது. இவரது கதைகளில் உள்ள ஃபேண்டஸி தன்மை ஒரு வித குதூகலத்தைத் தருகிறது.

ஏன்???
கொல்ட்டி
H-4

திவ்யா

வலையுலக கும்மி ப்ரியர்களில் ஒருவரான இவரின் சில கதைகள் ஏற்கனவே சவலையுலகில் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வதில் சந்தோஷமே.

ரயில் சிநேகம்
கல்லூரி கலாட்டா


நான் மேலே குறிப்பிட்டிருப்பவற்றில் பெரும்பாலானவை அழகியல் சார்ந்த கதைகளே. தீவிர வாசகர்களுக்கும் எதிர் அழகியலை கொண்டாடுபவர்களுக்கும், இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்த முனைபவர்களுக்கும் ஒரு வேளை இது போன்ற படைப்புகளின் ஃபேன்டசி தன்மை சாதாரணமானதாய் இருக்கலாம். ஆனால் வாசிப்பனுபவத்தில் எவரும் இது போன்ற படைப்புகளை ஒரேயடியாக தாண்டிச் சென்றிருக்க முடியாது. தேவையில்லாமல் ரொம்ப வாசிக்கிரோமோ என்றோ, அட என்னத்தை படிச்சு என்னத்தை கிழிக்கிறது என்றோ எரிச்சல் கொள்ளும் போது ஆசுவாசப் படுத்துவது போல இது போன்ற சில படைப்புகள் அடுத்த கட்ட் தளத்திலும் இது போன்ற பல உணர்வுக்குவியல்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கைய ஏற்படுத்தி வாசகனின் முதுகில் கை வைத்து தொடர்ந்து உந்தித் தள்ள வைக்கின்றன. இவற்றை நினைவு கூர்வதில் பெருமையே.
மேலும் வாசிக்க...

Saturday, March 29, 2008

பாப்லோ நெரூதா,கவிதைகள், இணைய கவிகள் - சில தொடர்பற்ற குறிப்புகள்

”இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞன் நெரூதாதான்” -காப்ரியேல் கார்சியா.

நெஃப்தாலி 1904 ஜூலை12ல் பிறந்தான்.தனது 13வது வயதில் நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான “லா மனானா”வில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தான். நெஃப்தாலியின் முதல் கவிதையும், அதில்தான் வெளியாகியது. 1920களில் “செல்வா ஆஸ்த்ரால்” எனும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான். இதைத் தொடர்ந்து “அந்தி வெளிச்சம்” என்ற தனது முதல் கவிதைத்தொகுப்பை நெஃப்தாலி வெளியிட்டான். இதற்கு அவன் தனது அப்பா வாங்கிக் கொடுத்திருந்த கடிகாரத்தையும், அச்சுக்கூலிக்காக கொடுத்திருந்த வீட்டுச் சாமான்கள் சிலவற்றையும், கவிஞன் என்று பொது அரங்கில் அறிமுகப்படுத்தப் படும் போது போட வைத்திருந்த தனது ஒரே ஒரு கோட்டையும் விற்க வேண்டியிருந்தது.

செக்கோஸ்லோவியக் கவிஞரான யான் நெரூதாவின் நினைவாக நெப்தாலி தனக்கு 'பாப்லோ நெரூதா” என்ற புனை பெயரை வரித்துக் கொண்டான். 1924ல் வெளியான “இருபது காதல் கவிதைகளும், ஒரு நிராசைப் பாடலும்”என்ற தொகுப்பு நெரூதா என்ற கவிஞனை உலகுக்கு அறிமுகப் படுத்தியது. அவரை மாபெரும் புகழுக்குள்ளாகியது. இன்றும் அதிகம் சிலாகிக்கப்படுவதும், அதிகப் பதிப்புகளில் வெளியானதும், அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதுமான நூல் அவரது இந்த இருபது வயது படைப்புதான்.

1927 முதல் 35 வரையிலான எட்டாண்டுகள் இவர் பல நாடுகளில் பணியாற்றினார். “தனிமைத் துயரங்களின் காலம்” என்று நெரூதா கசந்து கொள்ளும் இந்தக் கட்டத்தில்தான் “பூமியின் வசிப்பிடம்” கவிதைகள் உருவாயின. 1936ல் ஸ்பானிய உள்நாட்டுப் போர் வெடித்தது. லோர்க்கா படுகொலை செய்யப்பட்டார். தன்னுணர்வும், சர்ரியலிச அணுகுமுறையும் மையமாயிருந்த நெரூதாவின் படைப்பு மெல்ல அரசியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தது. “என் இதயத்தில் ஸ்பெயின்” என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது. யுத்தத்தால் அடைக்கப்பட்டிருந்த குடிமக்களின் நாவில் நெரூதாவின் கவிதைகள் மொழியாயின.

”காண்டோ ஜெனரல் ஆஃப் சிலி” என்ற அவரது நீண்ட கால முயற்சி 1950ல் அப்போது வெளியிடப்பட்டது. மெக்ஸிகோ உள்ளிட்ட பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் வரவேற்புப் பெற்ற இந்த நூல் நெரூதாவின் தனது சொந்த நாடான சிலியில் தடை செய்யப் பட்டது. தனது அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாய் சொந்த நாட்டிலேயே இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை நடத்தினார்.1954ல் வெளியான “திராட்சையும் காற்றும்” தொகுப்பு அவரது தலை மறைவுக்கால நாட்குறிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.

1958ல் வெளியான “எக்ஸ்ட்ராவகாரியோ” நெரூதாவின் இன்னொரு பரிமாணத்தை முன்வைத்தது. சார்புநிலை அரசியலால் மனங்கசந்து போன போன கவிஞனின் துக்கச்சாயலை வெளிப்படுத்தியது.இதைத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பயணங்களும், அரசியல் நிலைப்பாடு சார்ந்த செயல்களும் பலத்த முக்கியத்துவம் பெற்றது.

1971ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு”ஒரு கண்டத்தின் விதியையும், மக்களின் கனவுகளையும்” கவிதைகளில் நிரந்தரமாக்கிய பாப்லோவுக்கு வழங்கப்பட்டது.

1973 செப்டபர் 23 ஆம் தேதி ஞாயிறு இரவு பத்தரை மணி, மருத்துவமனைப் படுக்கையில் ”நான் போகிறேன்” என்ற வாசகத்துடன் அவரது உடல் சலனமற்று அடங்கியது. நெரூதாவின் இறுதி ஊர்வலம் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷோவுக்கு எதிரான மக்கள் எழுச்சியுடன் தொடங்கியது.

பாப்லோ நெரூதாவின் கவிதைப்பரப்பை பொருளடிப்படையில் ஆறு பகுதிகளாகப் பிரித்து விடலாம். காதல், தனிமை, இயற்கை, மரணம், அரசியல், வரலாறு என்ற பெரும் பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நெரூதாவின் கவிதை சாட்சியாக இருந்திருக்கிறது. ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், நாஜிசம், ஸ்லாலினிசம், இரண்டாம் உலகப் போர், கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மறைமுகப் போர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள், ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி, வியட்நாம் போர், மாணவர் கொந்தளிப்பு, சொந்த மண்ணில் சோஷலிச வருகை, அதற்கெதிரான ராணுவக் கலவரம் - சம காலச் சரித்திரத்தை நெரூதா தனது கவிதைகளில் பதிந்தது போல நவீனக் கவிஞர் வேறு எவராவது செய்திருக்கக் கூடுமென்பது சந்தேகமே.

-------------------------------------
கவிதையுலகில் நெரூதா அறிமுகமானதும், இடத்தை நிறுவிக் கொண்டதும் ஓர் இளங்காதலனாக.பெண் மீதும், பெண்ணுடல் மீதுமான அவரது குதூகலம், இயற்கை மேலுள்ள மோகத்தின் இன்னொரு சாயல். அவரது அந்தரங்கம் பெண்களால் நிரம்பியது. மூன்று மனைவியர், அநேக தோழியர், கணக்கிலடங்கா படுக்கையறைப் பங்காளிகள். அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ஜோஸி ப்ளீஸ் அவர்களில் ஒருவர். பர்மியப் பெண்ணான அவர் நெரூதாவை விரட்டி விரட்டிக் காதலித்தவர். தன்னை மணந்து கொள்ளும் படி வற்புருத்தியவர்.

வெறி கொண்ட ஜோஸியின் காதல் வதைக்குப் பயந்து அவர் பர்மாவை விட்டே வெளியேறியனார். நெரூதாவின் உணர்ச்சிக் கொந்தளிப்பான காதல் கவிதைகளில் அந்த அசட்டு காதலியை முன்னிறுத்தி எழுதிய “மனைவி இழந்தவனின் டாங்கோ” தனியிடம் பெறும்.வெவ்வேறு காலகட்டத்தில் பாப்லோ உறவு கொண்டு விலகிய பெண்கள் ஏராளம்.

எப்போதும் விவாதங்களின் மையமாகவும், விமர்சனங்களின், இலக்காகவும் இருந்தவர் நெரூதா.காப்ரியேலைப் பொறுத்தவரை அவர் “நூற்றாண்டின் மகத்தான கவிஞர்”. நோபல் பரிசு பெற்ற யுவான் ரமோன் ஜிமனேஸைப் பொறுத்தவரை “மகத்தான மட்ட ரகக் கவிஞர்”. போர்ஹே அவரை “முதல் தரக் கவிஞர், ஆனால் மனிதர் என்ற முறையில் அவ்ர் மீது மதிப்பில்லை” என்றார்.

நெரூதா தனது விமர்சகர்களோட் உதாசீன மனப்போக்கையும், அருவருப்பும் காட்டியவர். இலக்கியவாது செயல்பாட்டாளனாவதில் மிரட்சியடையும் மத்திய தர வர்க்கத்தின் சக்கிப்பின்மைதான் இந்த விமர்சனக்கள் என்று புறம் தள்ளியவர் அவர்.

இந்த விமர்சன்ங்கள் இன்றும், இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்துக் கொண்டுதன் இருக்கின்றன. இவற்றில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, வீக்லி ஸ்டாண்டர்டு இதழில் வெளிவந்த ஸ்டீபன் ஸ்வார்ட்சின் கட்டுரையே இதற்கு உதாரணம். அதன் தலைப்பு, “மோசமான கவிஞன், மோசமான மனிதன்”.

---------------------------------------------------------------------
தமிழிலும் பாப்லோவை ஆய்வுக்குட்படுத்தி பல கட்டுரைகள் பல்வேறு தளங்களில் அவ்வப்போது வந்துக் கொண்டுதான் இருக்கிறது. உயிர்மையிலும், திண்ணை இணையத் தளத்திலும், யமுனாராஜேந்திரனாலும், இன்னும் பலராலும் பாப்லோவை ஆதரித்தும், எதிர்த்தும், கடுமையாய் விமர்சித்தும் பல கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பொடிச்சியின் பாப்லோவைப் பற்றிய பாப்லோ நெரூதா மற்றும் பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டு காலத் துரோகம் எனும் கட்டுரைகள்தான் அவரது தளத்தில் முதன் முதலில் படித்தவை. அதற்குப் பிறகு மாய்ந்து மய்ந்து பொடிச்சியின் எல்லா எழுத்துக்களையும் படித்து வருகிறேன். இவரது எழுத்துக்கள் படு தீவிரத்தன்மை கொண்டவை. கவிஞர்கள், தீவிர விமர்சகர்கள் இவரது பாப்லோவைப் பற்றிய இந்த கட்டுரைகளை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாகப் படிக்கப் பட வேண்டியவை இவை.

இதைத் தொடர்ந்து இவரது சிறந்த கட்டுரைகளில் ஒரு சில:
எழுத்து வன்முறை
நான் நீ நினைக்கும் பெண்ணல்ல
இரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 1
இரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 2

--------------------------------------------------

பாப்லோ தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை எளிமையாக இப்படிச் சொல்லி இருக்கிறார் மீனாக்ஸ் இங்கே பாப்லோ நெரூதா என்ற பதிவில்.

---------------------------------------

கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் எப்போதும் என் நினைவில் வந்து நிற்கும் பதிவாய் இருந்திருக்கிறது வா.மணிகண்டனின் இந்த பலருக்கும் பிடிக்காத ஒன்று!!! பதிவு.

கவிதைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும் முயற்சியாய்,மறு வாசிப்புக்குட்படுத்தவும், வெங்கட் சாமிநாதன், போன்ற சில விமர்சகர்களும், மொழிபெயர்ப்புக் கவிஞர்கள் சிலரும் பல காலமாகவே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிற்றிதழ்களிலும், இலக்கிய பத்திரிக்கைகளிலும் பரவலாய் காணப்படும் கவிதைகளுக்கும், விமர்சனக் கட்டுரைகளுக்கும் சற்றும் குறைவில்லாது, நல்ல கவிதைகளும், விமர்சனங்களும் இணைய உலகிலும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அய்யனார், சுகுணா, வா.மணிகண்டன்,கென்,அனிதா,ஜ்யோவ்ராம், தமிழ்நதி,காயத்ரி, நிவேதா இவர்களில் எவர் வேண்டுமானாலும் தமிழ்க் கவிதையுலகில் ஒரு அசைக்க முடியா ஆளுமையாய் இனி வரும் காலங்களில் உருவெடுக்கலாம்.
-----------------------------
பி.கு: பாப்லோவைப் பற்றிய விவரங்கள் சுகுமாரன் அவர்களின் பாப்லோ மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

கவிதைகளைப் பற்றியோ, கவிஞர்களைப் பற்றியோ கருத்து சொல்லுமளவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எவரேனும் கேட்கலாம்.இதை எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்று நான் ஒரு சேஃப்டிக்கு என்று டிஸ்க்ளெய்மர் போட்டுக்கொள்ளலாமா அல்லது இவை என் உணர்வுகள் இதை எங்கு வேண்டுமானலும் நான் சொல்வேன, அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று மல்லுக்கு நிற்கலாமா என்ற குழப்பத்துடனேயே முடிக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Thursday, March 27, 2008

விட்டுத்தள்ளு ரோஜாவுக்கு பெயரா முக்கியம்.

"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட ஒருவர் கிடைக்கும் போது, வேகமாய் பழசை அசை போடும் தருணங்களில் வந்து விழும் வார்த்தைகளில் ஒன்றாய் இவை நிச்சயம் இருக்கக் கூடும். நானும் இதை அவ்வப்போது சொல்லித் திரிந்திருக்கிறேன்.

நான், செந்தில், விஜய், மாத்யூ, என்று ஒரு க்ரூப்பாய் கடைசி பெஞ்சுகளில் உட்கார்ந்துக் கொண்டு நாங்கள் செய்து வந்த குறும்புகளை எண்ணிப் பார்க்கும் எங்களில் எவருக்கும் சரவணன் நினைவில் வந்து போவான். பல நேரங்களில் நாங்கள் சிரித்துக் கொண்டிருந்ததற்கு காரணமாய் அவனே இருந்திருக்கிறான். நாங்கள் செமினார் எடுக்கும் போது எல்லாம் தூங்கி வழியும் வகுப்பு சரவணனின் செமினார் அன்று இருக்கிறது என்றால் மட்டும் வெகு உற்சாகமாய் இருக்கும். "Peer to peer Networking" என்ற தலைப்பில் செமினார் எடுக்கும் போது கூட சுத்தமாய் சம்பந்தமில்லாமல் "அன்றொரு நாள் நான் அமெரிக்க தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன்" என்றதொரு சுய தம்பத்துடன் ஆரம்பிப்பான். 40 நிமிட செமினாரில் 35 ந்மிடங்கள் தான் இதுவரை பார்த்திராத அமெரிக்காவையும், சிங்கப்பூரைப் பற்றியும் பேசி விட்டு கடைசி ஐந்தாவது நிமிடத்தில் ஆகவே யுவர் ஆனர் இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் என்று டாபிக்கை எப்படியாவது கோர்த்து விட்டு இறங்குவான்.

எங்கள் வகுப்புப் பெண்களில் ஒரு சிலர் நிஜமாலுமே அவன் பல நாடுகளைச் சுற்றி விட்டு வந்திருக்கிறான் என்று கடைசி வரை நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்து அவன் சோகமாய் இருந்தோ, ரொம்ப வருத்தப்பட்டு பேசியோ பார்த்ததேயில்லை. எங்களுடைய மற்றும் அவனுடைய உலகம் என்பது எப்போதும் சிரிப்பு என்ற ஒன்றைச் சார்ந்ததாயே இருந்திருந்தது. கல்லூரி முடிந்து வேலை தேடி நாங்கள் எல்லாம் சென்னைக்கு குடி பெயர்ந்த போது, அவன் மட்டும் ஏனோ மறுத்து விட்டான். கேட்டதற்கு ஒரு சில பிரச்சினைகள் என்று பொதுவாய்ச் சொல்லி விட்டான்.

இது நடந்து ஒரு ஏழு மாதமிருக்கும். எப்படியோ அடித்து பிடித்து ஒரு வேலை வாங்கி விட்ட இறுமாப்பும், நாங்களும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வமும், எதிர்ப்படும் எவரையும் அலட்சியமாய் பார்க்க ஆரம்பித்திருந்த திமிருமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்தின் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் எனக்கு ஒரு போன் வந்தது. அடடடடடா இந்த க்ரெடிட் கார்டுகாரனுங்க தொந்தரவு தாங்கலைப்பா. எப்படித்தான் நம்ம நம்பர் எல்லாம் இவங்களுக்கு கிடைக்குதோ என்று ஒரு கர்வத்துடன் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லி விட்டு, Ya.. This is Nandha என்று ஆரம்பித்தேன். "மச்சான் நான் சரவணன் பேசறேண்டா" என்று பிண்ணனியில் பலத்த இரைச்சல்களுடன் அவன் பேசினான். ஏதோ ஒன்று அவனுடைய குரலில் இடறியது. நினைவு தெரிந்து அவன் இவ்வளவு அமைதியாய் பேச ஆரம்பித்ததில்லை.

நான் திருச்சி ஏர்போர்ட்ல இருந்து பேசறேண்டா.நாங்க எங்க ஊருக்கே போகலாம்னு இருக்கோம். இங்க எங்க அப்பாவாலயும் ஏதும் தொழில் பண்ண முடியலை. நிறைய பிரச்சினை வருது. எங்க சொந்தக்காரங்களும் இங்க வா பார்த்துக்கலாம்னு கூப்பிட்டுட்டே இருக்காங்க. அதனால கிளம்பிட்டோம். உங்ககிட்ட சொல்ல வேணாம்னுதான் பார்த்தேன். ஆனால் அங்க போய்ட்டா மறுபடி உங்களை எல்லாம் நான் எப்ப பார்ப்பேன், பேசுவேன்னு தெரியலை. அதான் இங்க ஏர்போர்ட் பூத்திலிருந்து போன் பண்றேன்டா என்று சொன்னான்.

என்ன சொல்வதென்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்க வில்லை. என்னடா மச்சான் திடீர்னு இப்படி சொல்ற. டேய் அப்ப உங்க சொத்தை எல்லாம் என்னடா பண்ணீங்க. பணம் இருக்கா? அங்க தங்கறதுக்கு என்னடா பண்ணப் போறீங்க??? என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கினேன்.

என்னத்தை பெரிய சொத்து. வர்ற விலைக்கு இருக்கிறதை எல்லாம் வித்துட்டோம். போற இடத்துலயும் சொத்துன்னு எதுவும் இல்லை. கைல கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்பித்தான் போறோம். மீதி எங்க சொந்தக்காரங்களைத்தான் நம்பணும்.

டேய் உங்க அப்பா அம்மா வேணா அங்க போகட்டுமே. நீ வேணா இங்க சென்னை வந்திடேண்டா என்று நான் சொன்னேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் நான் கேட்டது எவ்வளாவு கிறுக்குத் தனம் என்று புரிகிறது. கையில் பேகுகளுடன் திருச்சி ஏர்போர்ட்டில் விமானத்திற்காய் காத்துக் கொண்டிருந்த ஒருத்தனைப் பார்த்து "மச்சான் நீ இங்க வந்திடுடா" என்று சொன்னால் கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பெரிய சிந்தனைகள் எல்லாம் எதுவும் அப்போது இல்லை. ஏதாவது நடந்து அவன் வாழ்க்கை விடியாதா என்ற ஆதங்கத்தில் விழுந்த வார்த்தைகள் அவை. சோகமான தருணங்களில் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாரும் பைத்தியக்காரர்களே.

அப்படி ஒரு நாள் அவன் எங்களை விட்டுப் போய் விடுவான் என்று எங்களில் எவரும் அறிந்திருக்க வில்லை. வேலை தேடி சென்னை வந்ததற்கப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் அவனைச் சற்றே மறந்து விட்டோமே என்று அவ்வபோது ஆதங்கப் படவும், சென்னை வந்த பின்பு அவனிடம் அடிக்கடி போனாவது பேசி இருந்திருக்கலாம் என்று எங்கள் மீது நாங்களே கோபம் கொள்ளவும் மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது.

அதற்கடுத்த இந்த மூன்றரை வருடங்களில் அவனிடமிருந்து யாதொரு தொடர்பும் இல்லை. எங்கேயோ அவன் நன்றாய் இருந்துக் கொண்டிருக்கிறான் என்று எங்களை நாங்களே திருப்திப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி அவன் போவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்ற அந்த அவனது அந்தச் சொந்த ஊர் இலங்கை.

இது நான் குறிப்பிட்ட ஒருவனது வாழ்க்கை. இது போன்ற பலரது வாழ்க்கைகள் இங்கே சொல்லாய் வடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நதியின் சோகம் தோய்ந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் நன்றாய் நினைவிருக்கிறது.

"இன்னமும் இது போன்று திருவான்மியூர் கடற்கரையிலும், மெரீனா சாலையிலும், வற்றிப் போன கண்களுடனும், இருள் அப்பிய முகத்துடனும், துயரம் நிரம்பிய மனதுடனும் எங்கள் இளைஞர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் செய்து கொண்டிருப்பதுதான் ஒன்றே ஒன்றுதான். அது உயிருடன் இருப்பது."

இருப்பற்று அலையும் துயரையும், எதுவுமில்லாத சூன்யமாய் மனம் வெறிச்சிட்டிருப்பதையும், இவரது கவிதைகளில் நாம் காணப் பெறலாம். நல்ல வேளையாய் இலக்கியவாதிகளின் அரசியல் இவர்களுக்கு புரியாததாலோ என்னவோ இவர் தனது கவனத்தை கவிதைகளில் மட்டும் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதனாலேயே நல்ல கவிதைகளை இவரால் படைக்க முடிகிறது.

பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது
இருப்பற்று அலையும் துயர்
மீண்டும் அகதி

என்று இவரது கவிதைகளில் எனக்கு பிடித்தமானவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"சூரியன் தனித்தலையும் பகல்" பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இவரது கவிதைத் தொகுப்பு. இதற்கான விமர்சன கூட்டம் கூட சமீபத்தில் நடந்தது. போக முடியாமல் போனவர்களில் ஒருவன். இந்தக் கூட்டத்தில் என்ன விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. "தமிழ் நதி இது வரை கவிதையே எழுத வில்லை. இனி வரும் நாட்களில் இவர் நல்ல கவிதைகளை எழுதலாம்" என்று குட்டி ரேவதிக்கு (வெ.சா என்று நினைக்கிறேன்) சொன்ன மாதிரி இவரையும் சொல்லி இருக்கலாம். அல்லது "தமிழ் கவியுலகின் அசைக்க முடியாத ஆளுமை தமிழ்நதி" என்று புகழ்ந்திருக்கலாம். எது வேண்டுமானாலும் சொல்லி இருந்திருக்கலாம். எனக்கு தெரிய வில்லை. ஆனால் அவை எதுவுமே இவரது கவிதைகளைப் படித்த உடன் என் விழிகளில் ஏற்படும் கசிவையும், மனதில் ஏற்படும் சூனியத்தையும் தடுக்க முடியாது.

"யாரும் வராமல் பசித்து பட்டினியாய் யாருமற்ற இந்த மணல்காட்டிற்குள்ளேயே நால்வரும் சாகப்போகிறோமா. விடியட்டும் ஏதேனும் படகுகள் வரும் காலடியில் சொரிந்து கிடந்த நம்பிகையைக் கூட்டி அள்ளி நிமிர்த்த முயன்றேன். அவன் கரையென்று காட்டிய திசையைப் பார்த்தேன் இப்போதும் கரை தெரிகிற மாதிரித்தான் இருந்தது. கரை கிட்டத்தான் இருக்கிறது. எப்படியும் போய்விடலாம் யாரேனும் வருவார்கள் அல்லது இந்தியன் நேவியாவது வராதா: மனசுக்குள் பிரார்த்தித்தேன். அம்மா ஏற்கனவே அழுது ஓய்ந்து செபமாலையோடு இருந்தாள். நான் சூரியனுக்காக காத்திருந்தேன். கரையின் தொலைவைக் கண்களால் அளந்தேன் மனசுக்குள் நம்பிக்கையை நிரப்பினேன். நாளைக்கு நிரஞ்சனியைப் பார்க்கலாம் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு கொஞ்ச முத்தங்களைப் பரிசளிக்கலாம் நம்பினேன்."

த.அகிலனின் கரைகளிற்கிடையே பதிவும் அதே போன்ற ஒன்றை தொட்டுச் செல்கிறது.இதை படித்து முடித்ததும் நம்மால் கையாலாகாத ஏதோ ஒன்றை நினைத்து நமக்கு கோபம் வருவது நிச்சயம். இவரது பதிவுகளிலும் இதே போன்று பல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. மரணத்தின் வாசனை என்ற பகுப்பின் கீழ் இருக்கும் இவரது அனுபவங்களை படியுங்கள். இன்னும் இரண்டு நாளைக்கு உங்கள் உறக்கம் தொலைத்துப் போங்கள்.

"நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை"

செல்வநாயகியின் இந்த கோபம், மாலன் அவர்களுடனான உரையாடலின் நீட்சியாய், அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் பதிவில் எழுதப்பட்டது. திரும்பத் திரும்ப பல முறை என்னை வாசிக்கத் தூண்டியது. அப்படி என்ன இதில் இருக்கிறது என்ரு நீங்கள் கேட்டால் எனக்கு சொல்லத்தெரியாது. தனது எல்லாப் பதிவுகளிலும் தனது ஆளுமையை பலமாய் நிரூபிக்கும் திறமை செல்வநாயகி அவர்களுக்கு மிக எளிதில் கைகூடப் பெறுகிறது.

"ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போது. ஒரு மாலையில் சந்திக்கும் நபர் தன் குரல்கிழித்து, வியர்வை துடைத்துப் பேசிக்கொண்டிருந்தாலும் நான் "நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அடிக்கும் தொலைபேசியில் உயிர்நண்பன் அழைத்தாலும் அது அவனுக்குரிய எண்ணென்று தெரிந்தாலும் எடுக்காமல் அதேபோல் பார்த்துக்கொண்டிருப்பேன். "இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"

"இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். ஒருவருக்கு அதைச் சொல்லாது விட்டதை ஒரு பத்துப் பேருக்காவது சொல்லிப் பாரம் குறைக்க முயன்றாலும் விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான்."

""Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம்."


அவர்களின் இந்த கிறுக்கியாக வாழும் ஆசை பதிவு பல நாட்கள் என்னை அழைக்கழித்த ஒன்று. தனது கிறுக்குத் தனங்களைக் கூட ஒருவரால் இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று கிறங்க வைத்த பதிவு இது.

"இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான். மிகச்சமீபத்தின் ஈராக் போரில் இதுபோன்று நடந்தவைகளையோ, இராணுவத்தின் தொடரும் அத்துமீறல்களாய் இலங்கையில் நடந்ததை, நடப்பதை சமீபத்தில் தன் பதிவில் தமிழ்நதி எழுதியதையோ நான் இங்கு மீள்பதிப்புச் செய்யாமலே தினம் உலகச்செய்திகள் படிக்கிற யாரும் அறியமுடியும். வீரப்பனைப் பிடிக்கப் போகையில் வழியில் அகப்பட்ட சின்னாம்பதி கிராமத்துப் பெண்களைச் சின்னாபின்னம் செய்தவர்களின் கதையைத் தமிழகச் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் யாரும் மறக்க முடியாது.

இந்தப் பெண்கள் செய்த குற்றமென்ன? உறங்கிக்கொண்டிருப்பவர்களையும், உணவருந்திக்கொண்டிருப்பவர்களையும் வீடுபுகுந்துஇழுத்துக்கொண்டுபோய் வன்புணர்ந்த ஆண்களின் கண்களுக்கு முன்னால் தங்களை மூடிக்கொள்ளாமல் வந்து மோகினி ஆட்டம் ஆடியா அந்த ஆண்களின் காம உணர்வை எழுப்பிவிட்டார்கள்? மூடிக்கொண்டிருப்பது பெண்களுக்கு நல்லதாம், பேசுகிறார்கள் எம் கற்றறிந்த நண்பர்கள்."


சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனும் அவரது இப்பதிவில் பெண்கள் அணிய வேண்டிய உடை குறித்து மதவாதிகள் கற்பித்து வரும் போலித்தனங்களை கடும் கோபத்துடன் சாடுகிறது. மனசாட்சியுள்ள எவரும் இதில் கூறி இருக்கும் உண்மையை வெறுமனே மதத்தின் பெயரைச் சொல்லி மறுத்து விட முடியாது.

கூட்டத்தினருடன் இருக்கும் போதும் தனது தனித்தன்மை தொலைந்து விடாது என்பதை அவரது இந்த ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் பதிவின் மூலம் இனங் கண்டுகொள்ள முடியும். ஒட்டு மொத்த வலையுலகமும், ஞானி யின் பூணூலை விமர்சித்துக் கொண்டிருக்க, தனது தனித்துவமான கருத்தை இந்த பதிவின் மூலம் ஆணித்தரமாய்ச் சொன்னவர். இதே கருத்தாக்கத்தை தருமியும் தனது பாணியில் சொல்லி இருக்கும் பதிவு ஞாநியும் என் நண்பர்களும்.

பதிவுலகில் திடீர் திடீரென்று ஒரு ஃபோபியா வந்து விடும். ஒட்டு மொத்த பதிவுலகமே அந்த ஃபோபியாவினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாய் பதிவுகளை எழுதிக் குவித்து கொண்டிருக்கும் வேளைகளில், தனது தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் இது போன்ற ஒரு சில பதிவுகளும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை எனக்குள் பல நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இது போன்று நான் அறிவிக்கத்துடிக்கும் பல பதிவுகள் இன்னும் வரிசையில் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சரத்தை பெண்ணியச் சரம், காதல் சரம், கவிதைச் சரம் என்று பிரித்து பிரித்து தொடுப்பார்கள். ஆனால் என்னால் இப்பதிவை எந்த வித சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தொடுக்க முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த பதிவுகள் என்னுள் தங்கிப்போனவை. இவற்றுள் சில என்னை உலுக்கிப் போட்டவை.

இப்படி எந்த வித சட்ட திட்டங்ககளுக்கும் பொருந்தாத பதிவுகள் நிரம்பிய இந்தச் சரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம். எனக்கு பிடித்த பதிவுகள் என்றா? இல்லை இப்படி வைக்கலாமா? "என்னுடன் தங்கி விட்ட மேகக் கூட்டங்கள்" என்று. ஹ்ம்ம்ம்ம் வேறு எப்படித்தான் சொல்வது. "தொடர்பற்றதாய்ச் சில பதிவுகள்" என்று கூடத்தான் வைக்கலாம். அட விட்டுத் தள்ளு. "ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்". (உபயம்: விஜய் மில்டன்).
மேலும் வாசிக்க...

Wednesday, March 26, 2008

மகளிர் சக்தி

எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும் வழக்கம் போல சண்டித்தணம் செய்ய ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் எட்டாவது முறையாக எழுதிய வரிகளை அழித்து விட்டு, இப்படி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப் பதிவில் கோலோய்ச்சிய, கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் பெண் பதிவர்களை, அடையாளப்படுத்த (ம்ஹூம் யாருக்கு யார் அடையாளம் தருவது? வார்த்தையை மாத்து),முன்னிலைப்படுத்த(டேய் ராசா, அவங்க ஏற்கனவே முன்னிலையிலதான் இருக்காங்க. வேற வார்த்தையைப் போடு), சரி பிரகடனப் படுத்த(மொக்கை வார்த்தை இது. ஏன் ரொம்ப யோசிக்கிற? சிம்பிளா எதாவது போடு) அறிமுகப்படுத்த(கண்ணு அவங்க பதிவுகளை ஏற்கனவே பலபேரு படிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. நீ என்ன அறிமுகம் பண்றது?)............கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாராவது என்னை பாடாய் படுத்தும் என் மனசாட்சியிடமிருந்து காப்பாத்துங்களேன்....

சரி இப்போ ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்றேன்.

வேற ஒண்ணுமிலைங்க இன்னிக்கு பெண் பதிவர்களைப் பற்றி வலைச் சரத்தில் எழுதப் போகிறேன்.அவ்ளோதாங்க. (அடக் கண்றாவி பிடிச்சவனே இதுக்கா இந்த சீன் விட்ட)

சூரியாள்: பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். செறிவான கருத்துக்களுக்குச் சொந்தக்காரர். உடல் அரசியல், பெண் மொழி, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும், வெகு தீவிரமாய் இயங்கி வருபவர். பொதுவாக மற்றவர்களது வலைப் பதிவுகளில் காணப்படமாட்டார். ஆனால் என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியவர்.

இம்சை அரசி: இவங்களுக்கு மொக்கை மன்னி என்று பெயர் வைக்கலாம். சூப்பரா மொக்கை போடுவாங்க. கும்மின்னு வந்துட்டா வீடு கட்டி அடிப்பாங்க. சைலண்டா நல்ல நல்ல கதைகளையும் எழுதுவாங்க. இவங்களோட எடுத்த சபதம் முடிப்பேன் அக்மார்க் மொக்கை என்று சான்றிதழ் பெற்ற பதிவு. இவங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சினை இவங்க சீரியஸ ஏதாவது எழுதினா கூட அதை பின்னூட்டங்களில் ஒண்ணாம் நம்பர் காமெடி பதிவாக மாற்றி விடும் நட்பு வட்டாரம்தான்.

லட்சுமி: இவங்களைப் பத்தி அதிகம் எதுவும் சொல்லத் தேவையே இல்லை. இவங்க பொதுவாவே பிரச்சினையா போர்வையா போத்திக்கிட்டு தூங்கற ஆளு. இவங்க எதை பத்தி எழுதினாலும் அது விவாதத்துலதான் முடியும். இவங்க பதிவுகள்லயே இவங்க எழுதி யாரும் சண்டைக்கு வராத ஒண்ணே ஒண்ணு இருக்குதுன்னா அது இவங்களோட ப்ரொஃபைல் பேஜாத்தான் இருக்கும். இவங்களோட படித்ததில் பிடித்தது மூலமாய் பல நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

காட்டாறு: கவிதை, அனுபவங்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் எழுதும் இவர்களின் சமீபத்திய இடுகையான மரணத்தின் சுவடுகள் ஏனோ என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது.

ராதாஸ்ரீராம்: இவர் பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார். மிகவும் சொற்பமாகவே வலைப் பதிவுகளில் எழுதினாலும், புத்தகங்களைப் பற்றி எழுதும் போது இவரது தீராக்காதல் வெகு எளிதில் நமக்கு புலப்பட்டு விடும். மனதை அறுத்துப் போட்ட புத்தகம்,சிறுவர் புத்தகம்இரண்டையும் எனது வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறேன்.

அனாமிகா: இவரது http://meysun.blogspot.com/2008/02/blog-post.html கர்வம் மற்றும் http://meysun.blogspot.com/2007/11/blog-post_24.html ஆயிரம் ஜன்னல் கவிதையும் எனக்கு பிடித்திருந்தது. வலையுலகில் இப்போது இவர் அதிகம் நடமாடா விட்டாலும், எதேச்சையாக ஒரு முறை இவரது பதிவிற்கு போனதிலிருந்து, தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருகிறேன்.

பவித்ரா: பெண்பதிவர்களில் அதிகபயணக் கட்டுரைகள் எழுதுபவர்களிலில் இவரும் ஒருவர் என்றும் சொல்லலாம். இவரது கங்கை கொண்ட சோழபுரம் தொடர் பதிவுகள் மிக அருமையானவை. ஃபோட்டோ மற்றும் வரலாற்று பிரியர்களுக்கு பெரிதும் பயனளிப்பவை.

தாரா: இவர் பயணக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், சிறுகதை, செய்தி விமர்சனம் என்று பல துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம் என்ற பதிவு எனக்கு பிடித்திருந்தது. ஓரளவு எனக்கும் பிடித்த படங்களை இதில் லிஸ்ட் செய்து இருப்பார்.

தாணு: வெகு சீரியஸான பதிவர். சமுதாயப் பிரச்சினைகள் குறித்த விவாதம், கட்டுரைகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். இவரது கட்டுரைகள் மனிதத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கும். இவரது காண்டேகரின் கிரெளஞ்சவதம் தான் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த பதிவு.

அருணா ஸ்ரீநிவாசன்: இவர் வலைப்பதிவில் எழுதி ரொம்ப நாள் ஆகிறது. ஆனால் இவரது கடைசி இடுகையான http://aruna52.blogspot.com/2007/10/blog-post_02.html காந்திஜி & கஸ்தூரி பா மிகச் சிறந்ததாய் இருந்தது. ஏன் இப்போது எழுதுவதில்லை என்று தெரிய வில்லை.

ஜெயந்தி சங்கர்: நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலங்களில், இணையமும், வலைப்பதிவுன்னா என்னா என்று நான் தெரிய ஆரம்பித்திருந்த காலங்களிலும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்) இடுகை இவரது பதிவுகளில் மிகவும் பிடித்த ஒன்று. இப்போ இவர் வலைப் பதிவுகளில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

கிருத்திகா: இவர் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உடையவர் என்பதை இவரது இடுகைகளை படிக்கும் எவரும் சொல்லி விடலாம். சமீப காலமாய் மொக்கைப் பதிவுகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தீவிர வாசிப்பனுபவம் உடையவர் என்பதும் இவரது யாமம் பதிவில் அறிய முடிய முடிகிறது.

வேதா: கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது மொக்கையிலும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தனது வலைப்பதிவின் டெம்ப்ளேட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இவரது கடைசி இரண்டு டெம்ப்ளேட்களை வைத்துச் சொல்லி விடலாம்.

காயத்ரி: இவங்க இப்போ எல்லாம் பொது வெளியில் பரவலாய் னடமாடுவதில்லை. அனேகமா இவங்க ரொம்ப பிஸியா இருக்கணும்னு நினைக்கிறேன். கடைசி பதிவுக்கு தலைப்பு கூட போட முடியாத அளவுக்கு பயங்கர வேலையில இருப்பாங்க போல. மிக சிறந்த கவிதாயினி என்று தைரியமாய்ச் சொல்லலாம்..

இதையும் தாண்டி மதி அவர்களையோ, ஆனையக்கா அவர்களையோ, பத்மா அரவிந்த் அவர்களையோ, கீதா சாம்பசிவம்,போன்றவர்களை நான் தனியாக வரிசைப்படுத்த தேவையில்லாத அளவிற்கு அவர்கள் வலையுலகில் மிகப் பரவலாய் அறியப்பட்டிருப்பதால், அவங்க கிட்ட நான் டூ விட்டுக்கிறேன்.

நான் குறிபிட்ட பதிவர்கள் எல்லாரையுமே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது ஒரு சிலரை மட்டும் தெரியாமல் போய் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை தவற விடப்படாத பதிவர்கள் இவர்கள் என்பதால் எவரேனும் வாசிக்காமல் இருந்திருந்தால், இது அவர்களுக்கு தொடக்கப் புள்ளியாய் அமையக் கூடும் என்ற எண்ணத்தில் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 25, 2008

காதல் என்ற தலைப்பின் கீழ் எழுதப்படும் எதையும் கவிதை என்று சொல்லலாம்

அணு ஆயுத ஒப்பந்தம், நந்திகிராம், ஈழத்தமிழர்கள், பேரரசுவின் பேட்டி, ஹவுஸ்லோன் பாக்கி, அடுத்த உலகக்கோப்பை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி, தசாவதாரம் ரிலீஸ் தள்ளிவைப்பு, சமஸ்கிருதம் தேவ பாஷையோன்னோ, சார் சாப்ட்டு நாலு நாள் ஆச்சு சார், ஜெயமோகன் மன்னிப்பு கேட்க வேண்டும், சுஜாதா செத்துட்டார், தமிழக பட்ஜெட்...........

ஒவ்வொரு நாள் விடியலிலும், உட்கார்ந்து அழவும், கோபப்படவும், காறி உமிழவும், அய்யோ பாவம் என்று பரிதாபப்படவும் ஏதேனும் சில நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவிலும் அடிக்கடி சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். துன்பத்தை நினைவுபடுத்தும், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நடுவில் சிலீரென்று மனதை வருடிச் செல்லவும், அடுத்த நாளுக்கான நமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவும், இனி வரும் நாட்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும்,

"இன்னிக்கு ஃபுல்லா எனக்கு நீ ஒரு மெசேஜ் கூட அனுப்பலை. போடா உன்கிட்ட பேச மாட்டேன் போ"

"சீக்கிரம் குட் நைட் சொல்லு, நான் தூங்க போகணும்"

"நைட் 10 ஆச்சு. இன்னுமா ஆஃபிஸ்ல இருக்க. சரி வீட்டுக்கு வந்துட்டு சொல்லு.
இல்லைமா நான் வர லேட் ஆகும். நீ தூங்கு.
...
...
...
ஹல்லோ சார் சொல்றதை மட்டும் செய்யுங்க. நாங்க முழிச்சுக்கிட்டு இருந்தா ஒண்ணும் குறைஞ்சு போய்ட மாட்டோம்."

"டேய் டேய் டேய் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு அந்த பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுடா... என் செல்லம் இல்லை"

"சரி நேரமாச்சு. இதே லேட் நீ தூங்கு. வெச்சுடட்டுமா.

ஹ்ம்ம்ம்.குட் நைட்.

ஏய் ராட்சஸி. இன்னும் ஒரு மாசத்துலதான் கல்யாணம் நடக்க போகுதே.
இப்பவாவது குட் நைட்டுக்கு பதிலா ஒரு முத்தம் கொடுத்து வெக்க்கறியா. கடன்காரி.

ஹ்க்கும் நான்தான் வெக்கப் படறேன்னு தெரியுது இல்லை. நீதான் கொடுத்துட்டு வெக்கறது.
போடா லூசு."

இது போன்ற சில உணர்வுகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காதல் என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால் நம்மில் பலர் பைத்தியமாகி இருக்கக் கூடும். அஃப்கோர்ஸ் காதலால் பைத்தியமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றோம். இருப்பினும் இந்த மூன்றெழுத்துச் சொல் நம் வாழ்விலும், உடலிலும் ஏற்படுத்தி இருக்கும் ரசாயன மாற்றங்களை பட்டியலிட்டு கூற முடியாது. அதைவிட மிக முக்கியமான ஒன்று தமிழ் சினிமா நாசமத்துப் போயிருக்கும். (இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்காதீர்கள்)

சங்க கால இலக்கியங்கள் பல வகையான காதல்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. களவொழுக்கத்தையும் கூட காதலில் வகைப்படுத்தி பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறுந்தொகை, வள்ளுவனின் காமத்துப்பால், ஆண்டாள் என்று எல்லாரும் காதலைக் கொண்டாடித்தான் இருக்கிறார்கள்.

"உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே"

இதைப் படித்ததற்கப்புறம் ஆண்டாளின் அனைத்து பாசுரங்களையும் வாசித்துத் தள்ள வேண்டும் என்று உன்மத்தம் கொண்டுத் திரிந்திருக்கிறேன்.

எந்த காலத்திலும் காதல் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சங்ககால கவிதைகளுக்கும் சற்றும் குறைவில்லாது இப்போதும் காதலைப் பற்றிக் கவிதைகள் அதே அழகுணர்ச்சியுடன், இன்னும் பல பரிணாமங்களுடன் வலையுலகில் ஒரு இளவரசியைப் போல ஏகபோகமாய் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் இவர் ஞாபகம் வராமல் இருக்காது என்று சொல்லுமளவுக்கு சராமரியாக காதலைப் பற்றி எழுதிச் சென்றிருக்கிறார் அருட்பெருங்கோ. இவரது கவிதைகளில் சிறந்த கவிதைகளை எடுத்துக் காட்ட விரும்பி தேடிக் களைத்துப் போய் விட்டேன். பார்த்தீபன் தனது கவிதைகளில் சொல்லி இருப்பார். "இந்த மூங்கில் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?" என்று. ஆனால் இவரது மூங்கில் காட்டில் எல்லா மூங்கில்களுமே புல்லாங்குழலாய்த்தான் இருக்கின்றன.

காதலைப் பற்றி எழுதி இருக்கும் கவிதைகள் எல்லாமே தானே அழகு பெறுவது போல, முத்தத்தைப் பற்றி எழுதும் எவையும் அழகாகவே இருக்கின்றன. இதற்குக் காரணம் நிறைவேறா பாலின ஏக்கமா? இல்லை இயல்பாய் நமக்குள் ஒளிந்திருக்கும் ரசனையுணர்ச்சியா என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள நேரிடுகிறது. கோபாலின் நித்தம் ஒரு முத்தம் முத்தத்தின் சுவையை நமக்கு அழகாய் சொல்லி இருக்கிறது.

"காதலைப் பற்றி எழுதுகிறவர்கள் எல்லோரும் கவிஞர்களாய் மட்டுமே இருக்கிறார்கள். வாசிப்பவர்கள்தான் காதலர்களாய் இருகிறார்கள்" என்ற வார்த்தை எங்க ப்ரியனுக்குப் பொருந்தாது. தலைவர் தனது வலைப்பூ முழுதும் காதலை தோரணங்களாய்த் தொங்க விட்டிருக்கிறார்.

"காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!"

"மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!"

"விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!"

இந்த மூன்றுக் கவிதைகளையும் பார்த்து விட்டும் நீங்கள் ப்ரியன் தளத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால் உங்களிடம் ஏதோ கோளாறு :) என்று நான் அர்த்தப் படுத்திக் கொள்வேன்.

நவீன் ப்ரகாஷின் கவிதை வரிகளை ரசிப்பதா அல்லது அவரது கவிதைப் படங்களில் உள்ள குறும்புத்தனங்களை, விடலைத் தனங்களை ரசிப்பதா என்ற குழப்பம் ஒவ்வொரு முறை அவரது பதிவிற்கு போகும் போதும் எனக்கு ஏற்படும். மனுஷன் சும்மா பின்னிப் பெடலெடுத்திருக்காரு. இவரது கவிதைகளை படித்தால் எவருக்கும் தனது வயதில் ஒரு 10 குறைந்துவிட்டாற் போன்று ஓர் உணர்வு தோன்றுவது சர்வ நிச்சயம்.

"பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !"

"ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?"

"இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?"

ப்ராக்டிக்கல்லி ஒரு அட்வைஸ். உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் சண்டையா? கவிதைகளுக்கு நடுவே பயங்கரமா டிப்ஸ் கொடுத்திருப்பாரு மனுஷன். உபயோகப் படுத்திக்கோங்க. நவீன் வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் தொண்டு.

சேவியரின் கவிதைகள் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே படித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அவருடைய எழுத்துக்கள் இன்று பல தளங்களில் இயங்க ஆரம்பித்து விட்டாலும் அவரது சில கவிதைகள் ரம்மியமாய் நம் முகம் வருடிச்செல்லும். அந்த வகையில் அவரது முத்தக் கவிதைகள் இதோ.

நித்யகுமாரன் காதலை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது அவரது சில இடுகைகளைப் பார்க்கையில் தெரிந்து விட்டது. அவரது இந்த காதோரக் கவிதைகள் சிறியதாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே சாம்பிள்தான். இதில் நான் காதல் கதைகள் எழுதுபவர்களை சேர்க்கவே இல்லை. சேர்த்திருந்தால் உண்மைத்தமிழனை தோற்கடித்த நந்தா என்ற தலைப்பில் லக்கி நாளைக்கு ஒரு பதிவு போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்பதால் இதனுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனாலும் இன்னும் ஒரு முழு திருப்தியை அடையவில்லை எனது மனம். எதையோ மறந்து விட்டாற்போன்று ஏதோ ஒன்று இந்தப் பதிவில் நெருடத்தான் செய்கிறது. அது சரி காதலைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா என்ன????
மேலும் வாசிக்க...

Monday, March 24, 2008

என்னைப் பற்றி நானே...

My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........

நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேச
ஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.
மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்
என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்
இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவே
அவை இருந்திருக்கின்றன.

இவற்றைத் தாண்டி தனக்கான ஒருத்தியை உறுதி செய்த பின்பு, அவளுடன் தனித்து
இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் இது போன்ற ஒரு கேள்வியை வெகு நிச்சயம்
நம்மில் பலர் எதிர்கொள்ள நேரிடும். போலிப்பூச்சுகளையும், போதையினையும் கலந்து அந்த
தருணங்களில் வந்து விழும் வார்த்தைகள் நம்மில் பலருக்கு பெரும்பாலும்
தமிழில்தான் இருக்கக்கூடும். நம்முடைய முதல் தமிழ் சுய பிரசங்கம்
அதுவாகக் கூட இருக்கலாம்.

முகத்திற்கு நேராய் ஒருவர் நம்மை புகழும் போது நாம் காட்டும் ரீயாக்ஷன்
என்னவாய் இருக்க வேண்டும் என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
கிடைக்கும் பதில்கள் எதுவுமே திருப்தி தருவதாய் மட்டும் இருப்பதில்லை.
நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்.என்னை ரொம்ப புகழறீங்க" என்று பொய்யாய்,
தன்னடக்கத்துடன் நெளியலாம்.... இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம் என்று
ஒரு சாதனையாளனைப் போல் கர்வமாய் முகத்தை வைத்துக் கொள்ளலாம்.... அதுவும்
இல்லையா நீங்க பண்ணி இருப்பதோட ஒப்பிடறபோ நான் பண்ணது எல்லாம் எந்த
மூலைக்கு" என்று திருப்பிப் புகழ ஆரம்பிக்கலாம். தன் சுயம்
திருப்திப்படுத்தப்பட்ட சந்தோஷத்துடன் எதிராள் ஒரு வேளை நகர்ந்து
விடக்கூடும். எது எப்படியாயினும் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று
அந்த விநாடிகளில் நாம் உணர்ந்துதான் இருப்போம்.

வேறு ஒன்றுமில்லை. உங்களைப் பற்றி நீங்களே ஒரு சுய அறிமுகம் செய்து
விட்டு வலைச் சரத்தை ஆரம்பியுங்கள் என்று வெகு எளிதாய் சரப்பொறுப்பாளர்கள்
சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்கள்.ஆனல் உட்கார்ந்து யோசிக்கையில்தான்
புலப்படுகிறது இது எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது என்று. புகழ்ச்சியோ,
சுயபுராணமோ,கிண்டலோ,லிப்ஸ்டிக்கோ எதுவுமே கண்களை உறுத்தாத வரையில்தான்
நமக்கு நன்றாய் இருந்து வந்திருக்கிறது. விஞ்சி நிற்கும் எதுவும் வெகு எளிதில் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது.

யாரோ ஒருத்தியுடன் தனித்திருக்க நேர்கையில் ஆரம்பித்திருக்க வேண்டிய என் சுய புராணத்தை, இதோ இங்கே, அதிகம் கண்ணை உறுத்தா மேல்பூச்சுகளைக் கலந்தே ஆரம்பிக்கிறேன்.

நந்தாவின் கிறுக்கல்கள் இது என் வலைப்பதிவு.

எரிச்சலும் கோபமும் நிறைந்த ஒரு சில கணங்களில், பெரிதாய் இதில் என்ன எழுதி சாதித்து விட்டேன் என்ற கேள்வியை எனக்குள் நானே அவ்வப்போது எழுப்பிக் கொள்வதும் கனத்த மவுனத்தை பதிலாய் பெற்றுக் கொள்வதுமாய் இருந்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நம் பெரும்பாலாரின் வலை எழுத்துக்கள் பெரிதாய் எதையும் சாதித்து விட வில்லைதான் என்றாலும் அட்லீஸ்ட் நம் சிந்தனைகளில் கொஞ்சமேனும் தெளிவு பெறுவதற்கேனும், நம் தமிழ் அறிவை சற்றே விசாலப் படுத்திக்கொள்ளவேனும் இவை பெரிய அளவில் உதவி செய்துதான் இருக்கின்றன.

என் வலைப்பதிவுகளில் நான் எழுதிய எல்லா எழுத்துக்களுமே எனக்குப் பிடித்துதான் இருந்திருக்கின்றன. எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு கவிதை என்றால் இந்த பத்தினிப் பெண்கள் கவிதையைச் சொல்லலாம். இதில் படிமங்கள், இன்னபிற இத்யாதிகள் எதுவும் இருக்காது என்பதால் இதை வசன கவிதை என்றோ, கவிதை மாதிரி என்றோ ஏதேனும் ஒரு பெயரில் அழைத்துக் கொள்ளலாம்.

ஒற்றை முத்தம் என்ற கான்செப்டில் நான் எழுதிய சில கவிதைகளும்,கதைகளும் (ஒற்றை முத்தம் - கதை, கவிதைகள், சமாதானமாய் ஒரு முத்தம் காதல் எனப்படுவது யாதெனின்) என்னை வலையுலகில் காதல் பற்றி பிதற்றித்திரியும் கூட்டத்தில் ஒருத்தனாயும், நண்பர்களின் நடுவே வேறு ஒரு மொக்கைப்பெயரை வைத்து கூப்பிடும் அளவுக்கும் மாற்றி இருக்கிறது.

வலையுலகிலும் சரி சமூக வெளியிலும் சரி பெண்ணியம் பேச முற்படுபவர்களை கலாச்சார எதிரியாகவே துவேஷம் பாவித்து வரும் சூழலில் என்னை சுற்றியுள்ள, நான் பார்த்த சில பெண்கள் என் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் அவ்வப்போது கட்டுரைகளாக உருமாற்றம் பெற்று வந்திருக்கின்றன. பெண்ணியம் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகள், கதைகள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடித்தவையாயும், ஆத்ம திருப்தியத் தருவதாயும் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருத்தியல் ரீதியில் நான் சொல்வது மிகச் சரிதான் என்ற இறுமாப்பையும், இது தொடர்பான கருத்து மோதல்கள் எங்கே நடந்தாலும் போய் களத்தில் குதிக்கும் தைரியத்தையும் தந்திருக்கிறது. அந்த வகையில் எனது சில இடுகைகள்
காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்
கனவுகளைத் தொலைத்தவள்
நல்லதோர் வீணை செய்தே


இதைத் தாண்டி இன்றும் நான் வருந்தும் ஒரு விஷயம் பலத்த வெற்று விளம்பரங்களுடன் ஆரம்பித்த என் இந்திய வரலாறு தொடர் பதிவை இன்னும் தொடராமல் இருப்பதுதான். இதற்கான முழு முயழற்சிகளும் பிண்ணனியில் நடந்தேறி வருகின்றன. கூடிய சீக்கிரம் இவை அரங்கேறலாம்.

இதற்கு மேலும் பேசினால் ஓவராய் இருக்கும் என்பதால் இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.
மேலும் வாசிக்க...

பகுத்தறிந்த கிறுக்கல்கள் :-)

மணியன் அவர்கள் தொடுத்த வலைச்சரம் மிக வித்தியாசமான வலைச்சரமாக இருந்தது.. விஞ்ஞானத்தை நன்றாகவே வளர்த்தார் நம் வலைச்சரத்தில்.."ப்ரபஞ்சத்தின் புதிர்கள்" போன்ற அவர் அளித்த பதிவுகள் மிக அருமையான பதிவுகள் .... சுற்றுலாபதிவுகளும் நல்ல தொரு தொகுப்பே...சொல்லைச்செயலாக்கியவர்கள் தலைப்பே சிறப்பு. வார்த்தைகளால் இங்கே நிரப்புவதை விட செயலாற்றியவர்களை கண்டுகொண்டு அதனை இங்கே பதிவாக்கியது சிற்ப்புச்சரம்.
நேரமில்லை என்று ஓடிக்கொண்டிருந்துவிட்டு ஒத்துக்கொண்டவராகிலும் மிக தமிழ்வலைப்பதிவுகள் சொல்லிலும் பொருளிலும் மேம்பட்டதாக விளங்கவேண்டும் என்ற விருப்பத்தைச்சொல்லி
அருமையாக கவனமெடுத்து தொடுத்த சரத்திற்காக மணியன் அவர்களுக்கு நன்றி.
-----------------------------
வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி...இப்படி சொல்லிக்கொள்ளும் நந்தா, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுகிறார். பெண்ணியம் , சினிமா ,வாழ்க்கையின் அனுபவங்களை விமர்சிப்பதில் ஆர்வம் கொண்டவர் .. நந்தாவின் கிறுக்கல்கள்( என்ன ஒரு தன்னடக்கம்) என்ற பதிவில் அதிகம் கிறுக்கவில்லை என்றாலும் தான் வாசித்த நல்ல பதிவுகளை இந்த வாரம் நமக்கு வலைச்சரமாக்க வருகிறார்
மேலும் வாசிக்க...

Sunday, March 23, 2008

வணக்கம் ! சுபம் !

வலைச்சரத்தில் விடை பெறும் நாள் வந்துவிட்டது. படித்த பதிவுகளை மீண்டும் அசை போட ஒரு நல்ல வாய்ப்பு.சென்ற வருடமே பொன்ஸ் எழுத அழைத்திருந்தும் இதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் செய்து கொள்ளாமல் கடைசி நிமிடத்திலேயே அட்ரினல் சுரப்பது நமது இயல்பாக போயிற்று (நன்றி:TBCD). மாற்று! தள பங்களிப்பிற்காக கூகிள் ரீடரில் வகைபிரித்து வைத்திருந்தபோதிலும் காலத்தை வென்ற சில பதிவுகளுக்காக சுட்டிதேடி அலைந்ததும் பிற இனிய பதிவுகளில் மூழ்கி சுகமாகத் தான் இருந்தது.மர்பி விதி சொல்வதுபோல் ஈயடித்துக் கொண்டிருக்கும் கடைக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கும்போதுதான் வேலைக்காரர்கள் விடுமுறையில் செல்வார்கள் என்பதாக அலுவலகத்திலும், பண்டிகை தினங்களில் வீட்டிலும் ‘ஆணி பிடுங்கும்' வேலை மற்றுமோரிரு இடுகைகள் இட தடங்கலாயிற்று. ஆனாலும் சிந்தாநதியின் எதிர்பார்ப்பான மூன்று இடுகைகளுக்கு குறைவில்லை.வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றி.

கதை,கவிதை,இசை,ஆன்மிகம் மற்றும் நடப்புநிகழ்வுகளைப் பற்றிய சீரிய பதிவுகளை முந்தைய வலைச்சர ஆசிரிய்ர்கள் சுட்டியிருந்ததால் சற்றே மாறுபட்ட பதிவுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கலின் ஒரு முக்கிய புள்ளியில் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருக்கிறது.வெளிநாட்டு முதலீடு ஒருசாராருக்கு பலனளித்தப்போதிலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைகள் மிகுந்த கவலையை தருகின்றன. பிரகாஷின் இந்தப்பதிவு ரமன் மக்சேசே விருது பெற்ற சாய்நாத்தின் சொற்பொழிவின் சாரத்தை கொடுத்து பிரச்சினையின் முழு வடிவத்தை விவரித்தது.மா.சிவகுமார் அவர்களின் விவசாயி - என்னதான் தீர்வு மற்றும் (தொடர்ச்சி), இரு பதிவுகளும் பின்னூட்டங்களும் வலைபதிவர்கள் கொண்ட கவலையை வெளிப்படுத்தின.அண்மைய நடுவண் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என கேள்விகேட்கிறார் சம்சாரி. அரசு வகிப்போர் தேர்தல் வெற்றிகளைத் தாண்டிய கண்ணோட்டம் கொள்வார்களா ?

தமிழ் வலையுலகில் புதிய பலபதிவர்கள் தங்கள் தாக்கங்களை பதிவுசெய்ய வந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பொருளற்ற விவாதச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் எட்டுதிக்கிலும் உள்ள கலைச்செல்வங்களை தமிழிற்கு கொண்டு சேர்த்து தமிழனை சொல்லிலும் பொருளிலும் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும்.இந்த சுட்டிகள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமையுமானால் நான் மகிழ்வுறுவேன்.

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்.
மேலும் வாசிக்க...

Saturday, March 22, 2008

விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி !

இயல்,இசை,நாடகமென இருந்த முத்தமிழுக்கு அழகு சேர்க்க அறிவியல் தமிழ் அரும்பிவர வலைப்பதிவுகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. தமிழ்ப்பதிவுகளிலே எனக்கு முதலில் அறிமுகமானதே வெங்கட்டின் உள்ளும் புறமும் பதிவுகளில் வந்த இயற்பியல் கட்டுரைகளே. அவரின் அறிவியல் சார்ந்த தமிழ்சொற்கள் மற்றும் கட்டமைப்புகள் எனக்கு புதிய வடிவமாக விளங்கின.நேருக்கு நேர் சொற்களை மொழிமாற்றுவதன் அபத்தத்தை சுட்டிய அவரது பதிவு எனக்கு கிடைக்கவில்லை.அவருடைய பழைய தளத்தை அணுக இயலவில்லை.இடையில் காணாமல் போயிருந்த அவர் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் மருத்துவத்துறையில் நடைமுறையில் உள்ள மூலக்கூறுகளை அவற்றின்மீதான காப்புரிமம் தீரும்நிலையில் சற்றே மாற்றி காபபுரிமத்தை நீட்டிக்கொள்ளும் வணிக ஏமாற்றை விவரிக்கும் அவரது முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 1 மற்றும் பகுதி 2 அவரது அறிவியல் மற்றும் மொழி மேலாண்மையை விளக்கும்.

இவரைப்போலவே இந்திய அணுசக்தி துறையிலிருந்து கனடா சென்றிருக்கும் ஜெயபாரதனும் அழகான அறிவியல் கட்டுரைகளை தந்து வருபவர். இவரது பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல்
எப்படி ஆள்கிறது ?
பதிவையும் படியுங்கள். இவர் சீதையின் துன்பத்தை பதிவுசெய்யும் சீதாயணம் என்னும் முழுநீளநாடகத்தையும் எழுதியுள்ளார்.தாகுரின் கீதாஞ்சலியையும் தமிழில் தந்துள்ளார்.

தமிழார்வமுள்ள நுட்பவியலாளன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இராம.கி ஐயா அவர்கள் வேதியியல் பொறியாளர்.தமது வாகை மாற்றங்கள் என்ற பூதியலும் வேதியலும் அடிப்படையாகக் கொண்டெழுதிய பதிவில்
தமிழில் அறிவியற் கட்டுரைகள் எழுத விழைவு மட்டுமே, நமக்கு வேண்டும்; மற்றவை தானாகவே வரும். எழுதும் போது, நான் கூறிய சொற்களைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. ஒரே கருத்திற்கு 4 சொற்கள் வெவ்வெறு ஆட்களால் பரிந்துரைத்து வந்தால், எது ஆழமான பொருளுடன், பரந்து பட்டு, பல்வேறு பயன்பாட்டுக்கும் ஏற்ற முறையில் பொருந்தி வருகிறதோ அந்தச் சொல்லை நடைமுறையில் நிலைக்கச் செய்யும் பாங்கு பொதுத் தமிழருக்கு என்றுமே உண்டு. எனவே கவலுறாமல் தமிழில் எழுத முயலுங்கள்.

எனக் கூறுகிறார். வானிலிருந்து பெய்யும் பனியில் படிகங்கள் உருவாவதெப்படி என எங்கும் பனிமழை பொழிகிறது! பதிவில் விளக்குகிறார் வைசா.விஞ்ஞானம் வளரும்போது அழிவுசக்தியும் அதிகரிப்பதை, கணினி பற்றி பல கேள்விகளுக்கு
தமது பதிவில் தீர்வு கூறிவரும் பிகேபி போட்டு தாக்கு என்ற இந்தப் பதிவில் விவரித்திருக்கிறார்.

நமது விக்கிபசங்க பதிவர்களின் கேள்விகளையொட்டி அறிவியல் ஆக்கங்களை தங்கள் குழுப்பதிவில் இட்டுவந்தார்கள்..சற்று ஆர்வம் தொய்ந்துள்ளதாகத் தெரிகிறது.வானவெளியில் குறுங்கோள்களைப் பற்றிய இந்த பதிவு பயனுள்ளது.

ஐன்ஸ்டைனுக்கும் அடி சறுக்கும்,சுஜாதாவுக்கும் என அண்மையில் பத்ரி எழுதியுள்ள கட்டுரை அறிவியலை குமுகாய அரசியல் எவ்வாறு பாதிக்கறது என வெளிக்கொணர்கிறது.

முந்தைய வலைச்சர ஆசிரியர் விஎஸ்கே அவர்களின் லப்டப் தொடர் இதயத்தைப் பற்ரியும் இதய நோய்களைப்பற்றியும் பல பயனுள்ள விதயங்களை விவரித்தது. சற்றுமுன்னில் அறிவியல் செய்திகளுக்கான போட்டியில் வென்ற
சிவீஆரின் நில் கவனி கேன்சர் தொடர் புற்றுநோயின் விவரங்களை பதிவு செய்தது.மனதின் சைகான்களை ஆராய்கிறார் சீனு என்கிற சீனிவாசன் கிருட்டிணசாமி.

பதிவின் நீளம்கருதி இத்துடன் முடித்துக் கொள்வோம்.நிச்சயமாக சுட்டியுள்ள பதிவுகளைப் படியுங்கள். பள்ளிப்பாடங்கள் போல கட்டடித்து விடாதீர்கள் :)
மேலும் வாசிக்க...

Thursday, March 20, 2008

ஊரெல்லாம் பாரு..உல்லாசம் ஜோரு..

பதிவுலகில் கணினிமுன் அமர்ந்தபடியே உலகம் சுற்றி பார்க்க நமது பதிவர்கள் அழகான படங்களுடன் பயாஸ்கோப் காண்பிப்பதை இன்று காண்போமா ? பயணக்கட்டுரைகள், எழுதுபவருக்கும் இனிமை, படிப்பவர்களுக்கும் இனிமை. உள்ளூர்,வெளியூர் என விரவியிருக்கும் பயணக்கட்டுரைகளில் சிலவற்றை இங்கே சுட்டுகிறேன்.

அருகிலிருக்கும் யாழ்பாணத்திற்கு இன்று செல்லமுடியாதநிலையில், வி ஜே சந்திரன் அவர்கள் தமது அனுபவங்களை யாழ்பாணம்: இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும் என சுட்டுகிறார். யாழ்பாணத்தின் திருவிழாவொன்றிலே கலந்து கொண்ட இன்பம் கிடைக்கிறது நமக்கு. அவரே கனடாவின் வல்மோரின் முருகன் கோவில் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறார். கனடாவில் அமைதியான ஈழம் போல உள்ளது.
இனி சில பதிவுகளின் பட்டியல்:
கனடாவின் க்யூபெக் மாநிலத்தின் மாண்ட்மொரென்சி அருவி : சினேகிதி
அமெரிக்கா:
கிராண்ட் கன்யான் தேசியப்பூங்கா : நக்கீரன் பரமசிவம்
சிகாகோ: SHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள் : சிவபாலன்
வாஷிங்டன் - ஒருநகர்வலம் (முதல் பகுதி) கல்யாண மாப்பிள்ளை மு.கார்த்திகேயன்

எழிலின் ஐரோப்பா: எழிலுலா
நார்வே: நாடு நல்ல நாடு - நோர்வே 1 கலை

கிழக்காசியா:
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சக்கரம் வடுவூர் குமார்
மலேசியா: லங்காவி போகலாம்..வர்றீங்களா? மைஃபிரண்ட்
பாலி : ஒரு புகைப்பட கண்காட்சி எம்கே குமார்

ஆஸ்திரேலியா:
சிட்னி:"Bondi Beach" போனோம்் கானாபிரபா

இவ்வளவு சொன்னபிறகு உலகம் சுற்றும் வாலிபியான துளசி டீச்சரின் பயணக்கதைகளை அனைவருக்கும் தெரிந்தவர் என்று குறிப்பிடாமல் விட்டால் பதிவு முழுமையடையுமா? ஆஸ்திரேலியா: கோல்ட்கோஸ்ட்டில் எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? என்று அவர் அடிச்ச லூட்டியைச் சொல்லலாமா? அல்லது நியுசிலாந்து வரலாற்றை கட்டாயக்கல்வியாக்கிய கொடுமையைச் சொல்லலாமா?
நீங்க அங்க போய் செட்டிலாகவும் சொல்லிக் கொடுக்கிறார்: நியூசிலாந்து: பகுதி 68

மண்ணில் மட்டுமா, விண்ணிலும் தொட்டில் கட்டுவோம்...என்று வலைப்பதிவுலகிலேயே முதன்முதலாக பலூனில் பறந்தவரும் அவர்தான். ஆகாயத்தில் தொட்டில்கட்டி........ அவரைத் தொடர்ந்து ஜிரா எனப்படும் ராகவனும் இறக்கைகட்டி பறந்தார் .நான் பறக்கிறேனே மம்மி

என்ன அடுத்துவரும் பண்டிகை விடுமுறையில் சுற்றுலா செல்லத் தயாராகி விட்டீர்களா ? திரும்ப வந்ததும் உங்கள் அனுபவங்களையும் படங்களையும் பகிருங்களேன் !

புனிதவெள்ளி, மிலாது நபி, பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள் !!
மேலும் வாசிக்க...

Wednesday, March 19, 2008

படித்ததில் பிடித்தவை 1

வலைச்சரத்தில் ஒரு இடுகை இடுவதை விட நமது பதிவில் நாம் எடுத்துக்கொண்ட விதயத்தை விவரிப்பது எளிதாக தோன்றுகிறது. நினைவிலிருக்கும் ஆக்கத்திற்கான இணையத்தொடர்பை கண்டுபிடித்து கோர்த்து எழுதுவதற்குள் வேறொரு இணைய கோர்ப்பில் வேறெங்கோ சென்றுவிடுகிறோம். முந்தைய ஆசிரியர்களின் பொறுமையையும் முனைவையும் இன்றுதான் புரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் எனது நினைவுகளில் சிக்கிக்கொண்ட சில பதிவுகளை இன்று பதிகிறேன்.

காசி ஆறுமுகம் அவர்களை தமிழ்மணத்தினை ஆக்கியவர் என்றளவிலே அனைவரும் அறிந்திருப்பார்கள். அவரது எழுத்தாற்றலின் முழு திறன் அவரது வலைப்பதிவில் இன்றைய பொறுப்புகளால் வெளிப்படுவதில்லை.அவரது முன்பதிவுகளில் நுட்பங்களைப் பற்றி அழகான தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் விக்கியில் இடம் பெறத் தகுந்தவை.அவரது தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள் , என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு ஆகியன தமிழ்மணத்தில் பதிவுகள் கீற்றில் உள்ளன. படக்கோப்புகள் குறித்த அவரது கணினியில் கையாளப்படும்படங்கள் கட்டுரை மிகவும் எளியமுறையில் நல்ல விளக்கம் வழங்குகிறது. அவர் வலையில்லா பின்னல் என்ற தொடர் WiFi பற்றி விளக்கியது. தவிர அவரது சமையல் குறிப்புகளும் நன்றாக இருக்கும். பான்கேக் செய்வது பற்றி அவர் இட்டிருந்த ஒரு இடுகையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்பிள்ளை சமையல் பற்றிய இந்த இடுகையைப் படியுங்கள்.

உருப்படாதது நாராயண்:இவரது நட்சத்திரப் பதிவுகளின்போது அறிமுகமானவரின் எழுத்து என்னை மிகவும் ஈர்த்தது.பன்முகத்தன்மையோடு சமூகம், நுட்பம், அரசியல்,சினிமா என எல்லா துறைகளிலும் சிறப்பாக எழுதக்கூடியவர். இவரது சில பதிவுகளை இங்கு சுட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவின் மென்பொறியாளர்களின் அபரிமித வளர்ச்சியை யொட்டி எழுந்த விவாதங்களின் பின்னணியில் சமச்சீரின்மை குறித்த இவரது பதிவு தொடர் பிரச்சினையின் பலபக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது.....சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்

இவரது பதிவுகளில் சில:
சிலுக்கு சுமிதா புராணம்
கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1

பெனாத்தல் சுரேஷின பிளாஷ் படங்களும் அங்கதப் பதிவுகளும் அனைவராலும் விரும்பப்பட்டாலும் எனக்கு அவரது இந்த Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05 பதிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

டிபிஆர் ஜோசஃப் சாரின் ஆற்றொழுக்கான நடையில் அவரது திரும்பிப் பார்க்கிறேன் தொடர் ஒரு வங்கியில் அவரையடுத்து நாம் பணிசெய்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.அடுத்து என்னவரப்போகிறது என வார இதழ்களில் வரும் நாவல்களைப் போன்று விறுவிறுப்பாக எழுதிவந்தார். அவரது சூரியன் கதைத்தொடரும் மனித இயல்புகளை மிக அழகாக வெளிக்கொணர்ந்தது.

இனி அடுத்த தொகுப்பை நாளை காணலாம்...
மேலும் வாசிக்க...

Monday, March 17, 2008

சொல்லை செயலாக்கியவர்கள்!

தமிழ்மண முகப்பில் எதிர்மறையான செய்திகளையே பார்த்து சலித்தவர்களுக்கு செயலில் இறங்கி சாதனைகள் புரிந்துவரும் சக பதிவர்களை இங்கே பதிகிறேன்.

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்தியதோடல்லாமல் அவர்களது பலவேறு துயரங்களின்/வலிகளின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தவர் லிவிங்ஸ்மைல் வித்யா. இவரது பதிவுகள் உண்மை உறைந்திருப்பதால் சூடானவை.

மங்கை: நலவாழ்வில் எய்ட்ஸ் நோயினால் துன்புறுவதே கொடுமையானது.அதிலும் கள்ளம்கபடில்லா பெண்கள் கல்யாண பந்தத்தால் அக்கொடுமைக்கு உள்ளாவது எத்தனை கொடியது... அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழும்வகைக்கு துணைசெல்லும் மங்கையின்் சேவை மானுடம் போற்றுதற்குரியது. அவரது பதிவில் மீனாட்சி என்ற பாதிப்புக்குள்ளானவரின் இந்த இடுகை நிச்சயம் படிக்கவேண்டியவைகளில் ஒன்று.

சாலைகளின் குறுக்கே கட்டப்படும் கோவில்களா ? தொடர்வண்டிகளில் மனிதக்கழிவுகளை சூழலை பாதிக்காது வெளியேற்ற வழிவகை காணவேண்டுமா?காவல்துறைகளின் குறைகளை உரிய இடத்தில் சேர்த்துக்களைய வேண்டுமா ? நமது தருமி இருக்கிறார். இவரது இடஒதுக்கீட்டிற்கான பதிவுகள் அரசியல்சத்தங்களுக்கு அப்பால் தெளிவாக கேட்பவை. அவற்றை நிறைவேற்றுவதில் UPSC செய்யும் தில்லுமுல்லுகளை காட்சிப்படுத்தியவர்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் எனக் கூறியதால் கோவில்களின் மாநிலமாயுள்ளது தமிழ்நாடு. ஆனால் மக்கள் பெருந்திரளெனக் கூடும் சில கோவில்களைவிட்டால் பெரும்பாலானவை கவனிப்பாரின்றி சிதிலமடைந்து வருகின்றன. இந்நிலை மாற திருநாவுக்கரசரின் உழவாரப்பணி போல ஆலயம்தோறும் திருப்பணி செய்துவரும் மரபூர் சந்திரசேகரன் பழமையைப் பாதுகாக்கும் உன்னதப் பணியை செய்துவருகிறார்.

குழந்தைகளின் கல்விக்காகவும் ஊரக கல்வி மேம்பாட்டிற்காகவும் தனது நேரத்தை செலவிட்டு நமது கவனத்தைக் கவர்ந்த இம்சையின் இந்தப்பதிவு எவரது மனதையும் கரைக்கும். இவர் பங்காற்றும் Friends of Children அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக வேண்டும்.

தமிழகத்தின் மோசமான இயற்கைச்சீற்றமான சுனாமி பாதிப்பின்போது தமிழ் வலைப்பதிவினரின் தரப்பில் ரஜினி ராம்கியும், பத்ரியும் தீவிரமாய் மீட்புபணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரோசாவசந்த் அவர்கள் சுனாமி நிவாரணத்திற்கு பதிவர்களின் முயற்சிகளை இந்தத் தளம் அமைத்து ஒருங்கிணைத்தார்.

வறியவர்களின் கல்விக்காகவும் மருத்துவசெலவுகளுக்காகவும் பதிவர்கள் என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல்ரவி ஆகியோர் ஒருங்கிணைத்து உதவியதும் பதிவர்களின் சமூக அக்கறையை காட்டுவதாக அமைந்தது. தற்சமயம் பாலா அன்புக்குரிய அந்தோணிமுத்து அவர்களுக்கு உதவிட பதிவிட்டதும்அதன் தொடர்ச்சியாக பலநல்ல உள்ளங்களின் பொருளுதவியை ்வேஅடுத்தகட்ட வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனைக் கொண்டு சக்கரநாற்காலி கொடுத்திட பண உதவி கேட்டுள்ளார்.
நற்பணிக்கு நாமும் நம் பங்காற்றிடுவோம்.

எனது நினைவில் நின்றவர்களைச் சொல்லி விட்டேன்...இனி பின்னூட்டங்களில் உங்கள் நினைவிற்கு வந்தவர்களைக் குறிப்பிடுங்களேன் !
மேலும் வாசிக்க...

சரம் தொடுக்க வரம் வேண்டி...

வலைப்பதிவுகளின் ஆரம்பகட்டத்தில் ஒரு திசைகாட்டியாய் அமைந்த மதியின் வலைப்பூ என்ற கருத்தை சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் கயல்விழி கூட்டணி ‘வலைச்சரமாக' தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் ஆங்கில சாகரத்திலிருந்து தமிழ்முத்துக்களை தேடிட உதவிய தளம் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில் படிக்கத் திணறும் வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.தமிழ்மணத்திலே நட்சத்திர பதிவரை அடுத்து தனியிடம் கொண்டு சிறப்புற விளங்கும் தளம்.இதனை அழகுற நடத்தும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! இங்கு என்னை பங்கு பெற அழைத்தமைக்கு நன்றிகள்!

53 வலைச்சர ஆசிரியர்கள் எனக்குமுன் மிகச் சிறப்பாக சிறந்த வலைப்பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் அழகான வகைகளில் தொகுத்தளித்து ஒரு பாரம்பர்யத்தை உருவாக்கியுள்ளார்கள்.நாளும் பதியும் துளசி டீச்சர் போன்றவர்களே அலசி முடித்ததை மறுஅலசல் செய்திருக்கையில் பேருக்கு பதியும் நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. அதிலும் சென்றவாரத்தில் ஆத்திக நண்பர் வி எஸ் கே யின் அசத்தலான தொகுப்பின் பின்னணியில் கதிகலங்கி இருக்கிறேன்.இரண்டு ஆண்டுகளாக மணிமலர் என்ற வலைப்பதிவை எழுதிவந்தாலும் கடந்த ஆறுமாத காலம் எந்தவித மன உந்துதலும் ஊக்கமும் இன்றி வாசகனாக மட்டும் வலையுலகில் வலம் வருகிறேன்.இந்த மனநிலையில் பொன்ஸ் அவர்களின் தொடர்ந்த உந்துதலாலும் கயல்விழி முத்துலெட்சுமியின் அன்புகட்டளையாலும் இம்முயற்சியில் இறங்குகிறேன்.இந்தவாரம் இனிய வாரமாக அமைய தொடர்ந்து முருகனருள் முன்னிற்க !

முதல்பதிவு சுருதிசேர ‘ஸ ப ஸ' எனக் கனைத்துக் கொள்வதைப்போல நம்மைப் பற்றி சொல்லிக் கொள்ள வேண்டுமாம். இவ்வளவு வலைச்சர ஆசிரியர்கள் கண்ணில்படாமல் இரண்டுவருடத்திற்கும் மேல் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதிலிருந்தே நம்ம சரக்கு எப்படியென்று தெரிந்திருக்கும்..சுப்பையா சார்மட்டுமே எனது சபரிமலை பயணத்தை குறிப்பிட்டுள்ளார்.வருகை எண்ணிக்கையை கொண்டு நான் ஆட்சிமொழிபற்றி அரசியல்சட்ட வடிவமைப்பு மன்றத்தில் நடந்த விவாதத்தை சுட்டிக்காட்டிய இந்த பதிவு பலரின் கவனத்தைக் கவர்ந்தது.எனது நட்சத்திரவாரத்தில் எனது இளமை மீள்நினைவுகளை பதிந்த
ஞாபகம்வருதே..தருமமிகு சென்னையில்
நான்மாடக்கூடலில் நான்!
ஓ கொல்கொதா !
...இந்த பதிவுகள் எனக்குப் பிடித்தவை.

இந்தளவு அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்..நாளையிலிருந்து எடுப்பதும் தொடுப்பதும் நிகழும்.
மேலும் வாசிக்க...

ஒரு பத்திரிக்கையாசிரியர் வலைச்சர ஆசிரியராகிறார்

வாடாமாலை.. யாழ்மாலை இசைமாலை என மாலைகள் பல செய்து நமக்களித்தார்கள் வி.எஸ்கே . மயிலை மன்னார் திருக்குறள் விளக்கத்தோடு வந்து விஎஸ்கே அவர்களின் நண்பர்களை நமக்கு அறிமுகம் செய்து தந்தார்.. இந்த வாரம் வலைச்சரத்தில்
பழய பதிவர்கள் புதுப்பதிவர்கள் இருவரையும் சம நேரத்தில் அனைவருக்கும் அறிமுகம் தந்து சிறப்பித்தார்.அவருக்கு நன்றிகள்.


-------------------------------------------------------------
சற்றுமுன்னில் தடலாடியாக செய்திகளை சுடச்சுடதந்துவருபவர்.மாணவப்பருவத்தில் மணிமலர் என்ற கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்தவரும் பத்துவயசிலேயே விநாயகருக்கு கவசம் எழுதியவருமான ...மணிமலர் என்கிற பதிவிற்கு சொந்தக்காரரான மணியன் அவர்கள் நமக்காக இவ்வார வலைச்சரம் தொடுக்கவருகிறார்.
மேலும் வாசிக்க...

Sunday, March 16, 2008

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

தொடுக்க முடியுமா என மலைப்பாக இருந்த வலைச்சரத்தை ஒருவழியாக கட்டிவிட்டேன். உங்களால் நிச்சயம் முடியும் என ஊக்கம் அளித்த கயல்விழி முத்துலட்சுமிக்கு எனது மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிலையிலும் பொறுமையாக அவர் கூட இருந்து இதைக் கட்ட உதவியதை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அதேபோல, முதல் பதிவு தொடங்கி, இந்தப் பதிவு வரையில் கேட்டபோதெல்லாம் பதிவர்களின் சுட்டியை அலுக்காமல் எடுத்துக் கொடுத்த கோவியாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இவருடைய உதவி இல்லாமல் என்னால் இதை இவ்வளவு மனநிம்மதியுடன் கட்டி முடித்திருக்க முடியாது என நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நினைவுகளுடன் மயிலையில் மாடவீதியில் சென்றுகொண்டிருந்த போது, வழக்கம் போல நாயர் கடைக்கும் சென்றேன். நானே சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு டீயை உறிஞ்சியபடி மயிலை மன்னார்!

"இன்னா? ஒரே நன்றிமளையில நனைஞ்சுகிட்டு வர்றமாரி இருக்கேபோல!" எனக் கிண்டலடித்தான்!

'அதெப்படி உனக்கு தெரிஞ்சுது?' என ஆச்சரியத்துடன் வினவினேன்.

"இன்னாமோ
கயல்விளி, கோவின்னு பொலம்பிகிட்டு இருந்தியே! நமக்கு பாம்பு காது சாமி! நட்பு பத்தி நான் சொன்னதைப் பதிவாப் போட்டவந்தானே நீ! எனக்கா புரியாது! வா! வந்து குந்து இந்த வடையைக் கடிச்சுக்கினே நம்ம நாயர் டீயை அடி! இப்ப இன்ன, நீ அடிக்கடி கண்டுக்கற ஆளுங்களைப் பத்தி சொல்லணும் அவ்ளோதானே! மிச்சத்த நான் சொல்லிக்கறேன்!" என்றவனை நன்றியுடன் பார்த்தேன்!

நீ இந்த மாரி வலைப்பூ எளுதறதுக்கு
அருண் வைத்தியநாதன்ற ஒருத்தர்தான் காரணம். அவர் இப்ப தமிழ்ல எளுதறதில்ல அதுனால அவரை பேரை மட்டும் சொல்லிட்டு விட்டுருவோம்! சரியா! ஆனா, அவருக்கு ஒரு 'டேங்க்ஸ்' மட்டும் சொல்லிருவோம்! மிமிக்ரில தொடங்கி இப்ப குறும்படம் என்ற நிலையையும் தாண்டி, ஒரு முழுநீள திரைப்படத்தையும் இவர் தயார் பண்றாருன்னு கேள்விப் பட்ட்டேன்! வாள்ஹ இவர் முயற்சி!

'
மொகமூடி'ன்னு ஒருத்தரு! குஜாலா எளுதுவாரு! செமையா உள்குத்து வைச்சு எளுதறதுல மன்னன்! இவரோட பதிவுல பின்னூட்டம் போடணும்னுதானே நீ வலைப்பூவே ஆரம்பிச்சே!

அப்போ, எப்படி ஒரு வலைப்பூவைத் தொடங்கறதுக்கு ஒனக்கு ஒதவி பண்ணினது
டோண்டு என்னும் ஒரு பெரியவரு.

அப்புறம் ஒனக்கு இதுல ஒதவி பண்ணி நீ இப்ப வைச்சிருக்கியே, அந்த முருகன் படத்த ஒனக்கு கொடுத்து, ஒதவி பண்ணினது
செல்வன்ற ஒரு பதிவர். புரட்சிகரமான கருத்துகளை அஞ்சாது சொல்ற ஒரு ஆளு! வேலை ஜாஸ்தியாச்சுன்னு ரொம்ப எளுதறதில்ல இவரு!

எலவசக்கொத்தனார்னு ஒருத்தர்! ஒனக்கு ரொம்பவே ஒதவில்லாம் பண்ணிருக்கார்னு அடிக்கடி சொல்லியிருக்கே! பின்னூட்ட நாயகன்னு வேற இவருக்கு ஒரு பேரு இருக்குன்னும் சொல்லியிருக்கே! ரொம்பவே சிந்திச்சு எளுதற ஆளு! அதுவே கொஞ்சம் இவரோட பதிவுக்கு ஒரு ஆபத்தான விஷயம். இருந்தாலும், அதையெல்லாம் ஒரு அட்டகாசப் பின்னூட்டம் போட்டு திசை திருப்பி ஒரு 1000, 500 பின்னூட்டம் வாங்கி சொன்னதுலேர்ந்து எங்கியோ போயி.... சரி விடு! அடுத்த ஆளைப் பாப்பம்!

அதாரு? ஆங்! ஆசான் ஆசான்னு எப்ப பாத்தாலும் சொல்லிகிட்டே இருப்பியே!
சுப்பையா வாத்தியாரு... கண்ணதாசனைப் பத்தி எளுதினாரு பாரு! அத்த அடிச்சுக்க இதுவரைக்கும் ஆரும் இல்லேன்னு அடிச்சு சொல்லுவேன் நானு! இன்னாமோ தெரியல, அத்த அம்போன்னு விட்டுட்டாரு! சோசியம்லாம் கூட எளுதறாருன்னு சொன்னேல்ல! அவரையும் தவறாம படிச்சிருவோம்!

குழலின்னு ஒருத்தரோடத்தான் நீ மொத மொதல்ல சண்டை போட்டேன்னு சொன்னேல்ல! ஒரு கொள்கை வீரன்யா அவன்! தப்போ ரைட்டோ, எடுத்த சொல்லை தாண்ட மாட்டாரு.! இவரைப் படிச்சு வைக்கறது நல்லதுன்னு நீ சொல்லியிருக்கே! சரின்னுதான் எனக்கும் படுது!

சாமி சாமின்னு அலையுற ஒனக்கு தீனி போடற மாரி
கொமரன், ரவி, ராகவன்ன்னு சில தோஸ்துங்க இருக்காங்கன்னு தெரியும்! அல்லாரும் நல்ல ஆளுங்கதான்னுன்னாலும், அப்பப்ப ஒரு கொளப்பத்துல நாம இன்னா பண்றோம்னு தெரியாம, சிலது பண்ணிடறாங்க! கீதாம்மா, வல்லிம்மா, தி.ரா.ச., ஜீவா மாரி தான் செய்ய வேண்டியது இன்னான்னு இவங்களுக்கு இன்னமும் புரியலைன்னுதான் நான் சொல்லுவேன்! ஆண்டவனைப் பத்தி புரிஞ்சுகிட்டா, நடுவுல நடக்கற எதுவும் நம்மளை உறுத்தக் கூடாது. அல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடக்குதுன்றது புரிஞ்சிரும். அப்ப, நாம போயி கேள்வி கேட்டுகிட்டு இருக்க மாட்டோம்! அத்தக் கேக்கறதுக்குத்தான் சாமியே சில ஆளுங்களை வைச்சிருக்காரே! பொறவால, நமக்கு எதுக்கு அந்த வேலை? ஆனாக்காண்டியும், இவிங்க பதிவெல்லாமே நல்லாத்தான் இருக்கும். படிக்கறதுக்கு சுவையாவும் இருக்கும்!

சர்வேசன்னு ஒரு ஆளு! பதிவுன்னு ஒண்ணும் ஜாஸ்தியா எளுதறதில்லியாம்! ஆனாலும், இவரு சொல்றதைப் பாக்க பலபேரு இங்க வருவாங்க! போட்டி, சர்வேன்னு எல்லாரையும் தன்கிட்ட இழுக்கற இவரை படிச்சே ஆகணும்!

வடுவூர் குமாருன்னு ஒரு எஞ்சினீயர். சிங்கப்பூர்ல இருக்காரு. கட்டடக் கலை பத்தி ரொம்ப நல்லா எளுதுவாரு. தங்கமான மனுசன்! வம்பு தும்புக்கே போவாதவரு! சுவையா இருக்கும் இவரோட பதிவுங்கல்லாம்!

துபாயிலேர்ந்து ஒன்னோட தோஸ்த்து, அதான் முந்தி ஒரு தபா இட்டாந்தியே, சுல்தான்னு ஒருத்தர், சுருக்கமா ஆனா அதே சமயம் ஆழமா நல்ல கருத்தெல்லாம் சொல்லி பதிவு போடறாரு. அவரும் ஒரு மறக்க முடியாத ஆளுப்பா! நீ கூட ஒரு தபா அவரைப் போயி பாத்தேல்லே துபாய் போயி!

அல்லாத்தியும் சொல்லியாச்சுன்னுதனே நெனைக்கறே! ஒன்னோட தோஸ்த்து கோவி கண்ணனைச் சொல்லலைன்னா, இந்த வலைச்சரம் நீ எளுதினதுக்கே அர்த்தம் இல்லே! நீ சண்டை அதிகமா போடற ஆளும் இவருதான்! சந்தோசப்படற ஆளும் இவருதான்! இவருக்கும் ஒனக்கும் இன்னா பொருத்தம்னு பல நாளு யோசிச்சிட்டு, சரி, அது நமக்கு வேண்டாத வேலைன்னு விட்டுட்டேன்! இவரு பாட்டுல்லாம் ரொம்ப கட்டுவாரு. அதான் எனக்கு பிடிச்சது! எளுத மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாராமில்ல! ஆனா, அந்த கவிதைப் பதிவுலியாவது இவரு வந்து எளுதினா நல்லதுன்னு நெனைக்கறேன்!

இத்தோட நீ ஆட்டத்த முடிச்சுகிட்டு பளையபடி, ஒனக்குத்தெரிஞ்ச வேலைக்கு போறதுதான் நல்லதுன்னு சொல்லிக்கறேன் சாமி! ' என்றான் மயிலை மன்னார்!

'அதெப்படி ஒரு குறள் கூட சொல்லாம நீ முடிக்கலாம்?' என நான் செல்லமாகக் கோபிக்க,
'அட! இதானா? அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு!


"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" [100]

ஏதோ ஒரு ஆசையில இங்க வந்து எளுதற நீ! ஒன்னால நல்லா இனிப்பா சொல்ல முடியும்னா சொல்லு. இல்லாட்டி 'கம்'முன்னு இரு. இது எப்டி இருக்குன்னா, நல்ல இனிப்பான பளம் கண்ணுக்கு எதுருல இருக்கறாப, அத்த விட்டுட்டு, புளிக்கற காயைத் தின்ற மாரின்னு ஐயன் சொல்றாரு. புரிஞ்சா சரி!" எனச் சொல்லி விடை பெற்றான் மயிலை மன்னார்!

அதுதாங்க நானும் சொல்லிக்கறேன் உங்க எல்லாருக்கும்! சந்தோஷமா இருக்கத்தான் இந்த வலைப்பதிவுக்கு வந்திருக்கோம்! இங்க இருக்கற நேரத்தில் எல்லாரையும் மகிழ்த்தி, நல்ல கருத்துகளைச் சொல்லி, இங்கு வருபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்க வைக்க வேண்டியது உங்கள் கடமை எனச் சொல்லி எனக்கு இந்த நல்வாய்ப்பினை அளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

நன்றி.
வணக்கம்.
முருகனருள் முன்னிற்கும்!


மேலும் வாசிக்க...

Saturday, March 15, 2008

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள"

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள !!"

இது பெண்கள் மாதம்!

எல்லாத் துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்துவரும் பெண்கள் வலைப்பூக்களையும் விடவீல்லை! வலைத்தளத்தில் தங்கள் பூக்களை விரித்து மணம் பரப்பி வரும் பெண் பதிவர்களைப் பற்றி எழுத எண்ணினேன்! யாரைச் சொல்வது, யாரை விடுவது என ஒரே குழப்பம்! பாரபட்சமின்றி எல்லாரையும் எழுதலாம்னு பார்த்தா, இன்னிக்கு பூரா எழுதிக்கிட்டே இருக்கணும்! எனவே, இதோ நான் படிக்கும் ஒரு சில பெண் பதிவர்களைப் பற்றிய சிறு குறிப்பு!

"கயல்விழி முத்துலட்சுமி"
இனிய நல்ல பதிவர்! இவர் தொடாத தலைப்பே இல்லை! ஆனாலும் அடக்கமானவர்! பன்முகம் கொண்ட இவர் எல்லார்க்கும் நல்லவர்! திரைக்குப் பின்னால் இருந்து இவர் ஆற்றிவரும் பணி அளப்பரியது! எனக்கு இவர் செய்திருக்கும் உதவிகள் என்றுமே என்னால் நன்றியுடன் நினைவு கூறத் தக்கது!

"செல்வி ஷங்கர்"
புதிய பதிவர் என்னும் உணர்வே வராமல் எழுதும் ஒரு இனிய பதிவர். இலக்கியம், வள்ளுவம், கவிதை எனப் பல முகங்களைக் காட்டுகின்ற இவரது பதிவுகள் ஒரு இனிய உணர்வைத் தருவதென்னவோ நிஜம்! நல்ல தரமான பதிவுகள் இவரிடமிருந்து வரும் என எதிர்பார்க்கிறேன்!

"முத்துலட்சுமி"
தன் நிலையைத் தான் உணர்ந்த பின்னர், தன்னுள் விளைவது ஒரு தன்னம்பிக்கை! இவரது பதிவுகளப் படித்தால் இது உங்கள் எல்லாருக்கும் புரிய வரும்! நியாயமான கோபத்தையும் இவர் பாங்காகத் தெரிவிக்கும் விதம், பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும்!

"மதுமிதா"
அபரிமித அறிவு இருப்பது ஒரு விஷயம்! அதைத் தெரிவிப்பது மற்றொரு விஷயம்! எடுத்துக் கொண்ட தலைப்புகளை இவர் அலசி ஆரய்ந்து அளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்! சொல்லப்போனால், இவரது ஒரு 10 பதிவுகளாவது படித்து உணர்ந்த பின்னரே எவருமே பதிவெழுத வரலாம் என ஒரு சட்டம் வந்தால் கூட சரியோ என நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இவரது பதிவுகள் ஆளுமை வாய்ந்தவை என்றல் மிகையில்லை!

"பத்மா அர்விந்த்"
மிக மிகப் படித்தவர்! பொறுப்பான ஒரு வேலையில் இருப்பவர்! தனக்குத் தெரிந்தது மற்றவருக்கும் பயன்படட்டுமே எனத் துடிப்பவர்! பொதுநலச் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர்! இவரது பதிவுகள் எல்லாமே ஒரு ஆழ்ந்த சிந்தனையை உங்களுக்குள் உருவாக்கும். இவரை நான் சந்தித்து உரையாடியது ஒரு இனிய அனுபவம்!! தவற விடாதீர்கள்!"

"வல்லி நரசிம்மன்"
தமிழில் எழுதுவதையே தன் மூச்சாகக் கொண்டவர்! திருமாலின் பத்து அவதாரங்களையும் தன்னுள் கொண்டவர்!! ஆமாம்! தான் ஆசையுடன் வளர்க்கும் மீன் தொடங்கி, நடுவில் ஒரு நரசிம்மனையும் தனதாக்கிக் கொண்டு, சித்திர ராமாயணம் வரைந்த அருந்தகையவர்! எந்தத் தலைப்பிலும் எழுதக்கூடிய புலமை படைத்தவர்!

"ராமச்சந்திரன் உஷா"
தமிழ் வலைப் பதிவுலகில் மிகவும் அறிந்த ஒரு பெயர்! தளராது எழுதிக் குவிப்பவர்! தமிழ்மணம், தேன்கூடு, நிலாச்சாரல், தமிழ் ஓவியம், வெகுஜன பத்திரிக்கைகள் என இவர் எழுத்து புகாத் இடமே இல்லை எனச் சொல்லலாம்! எத்தனையோ சோதனைகளத் தாங்கியும்,ஒரு பெண்ணுக்கே உரித்தான அததனை தைரியத்துடன் அனைத்தையும் எதிர் கொண்டவர்! இவரது காலத்தில் நாமெல்லாமும் வலைப்பூ எழுதுகிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை!

"கீதா சாம்பசிவம்"
"தலைவி" என அனாஇவராலும் அன்புடன் அழைக்கப்படும்ம் இவர் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்! ஆன்மீகப் பதிவின் இலக்கண்ணம் என இவரை நான் கொள்வேன்! ஒரு குழந்தையாய், விறுவிறுப்பான இளைஞியாய், முதிர்ந்த ஆன்மீகப் பழமாய் பன்முகங்களில் இவரது எழுத்துகள் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்! இவரை நான் சந்தித்து பழகியது எப்போதும் என் நினைவிருக்கும்!

"மதுரா"
புரட்சியின் மொத்த உருவம்! இவரைப் போல் எழுத மாட்டோமா என பல பெண் பதிவர்களையே ஏங்க வைத்தவர்! இப்போது ஏதோ சில காரணங்களினால் தமிழில் பதிவிடவில்லை! ஆனால், ஆங்கிலப் பதிவுகள் எழுதி வருகிறார்!! மீண்டும் நம்மை எல்லாம் மகிழ்விக்க இவர் வர வேண்டுமெனவிரும்புகிறேன்!

"துளசி கோபால்"
தமிழ்ப் பதிவுலகக் கடவுள் என இவரை நான் வைக்கிறேன்! 'டீச்சர்' என அன்புடன் எல்லாராலும் அழைக்கப் படுபவர்! அதை முழுக்க முழுக்க நியாயப்படுத்துபவரும் கூட! விரிவான, சுவையான், கண்ணைக் கவரும் படங்க்களுடன் இவர் அளிக்கும் பதிவுகள் எப்போதும் இன்பம் பயப்பவை!
எல்லாருக்கும் நல்லவர்! வல்லவரும் கூட!


"பொன்ஸ்"
எனது இனிய நண்பர்! பல சண்டைகள் இவருடன் போட்டிருக்கிறேன்! ஆனாலும், இன்றும் என் நலம் விரும்பும் ஒருவர்! யானையின் மேல் ஆஅசையுள்ளவர்! யானை போலவே நினைவாற்ற்றல் மிக்கவர்! கதை, கவிதை, கட்டுரை என இவர் எழுதியவை எல்லாமே மிக மிக நல்ல பதிவுகள்!


விட்டுப் போனவர் இன்னமும் எத்தனையோ பேர்! எல்லாரையும் சொல்ல இங்கு இடம் போதாது என்பதால் விடுக்கிறேன்! ஆனால், எல்லாருமே படிக்கத் தக்கவர்!

பெண்மையே நீ வாழ்க!
மேலும் வாசிக்க...

Friday, March 14, 2008

"இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"

இசை என்பது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் கூடவே இழைந்து வரும் ஒன்று.

தாயின் தாலாட்டில் தொடங்கி இறுதிவரை கூடவே வருவது.
நமது பதிவர்களில் பலர் இந்த ஒரு துறைக்குத் தாங்கள் கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுப்பதில்லையோ எனும் எண்ணம் வரும் அளவுக்கு, உரைநடைப் பதிவுகளை எழுதிக் குவிக்கிறார்கள்...அல்லது அவ்வப்போது மட்டுமே இதைத் தொட்டுச் செல்கிறார்கள்.
ஒரு சிலர் மட்டுமே இது ஒன்றையே, விடாது நமக்கெல்லாம் அளித்து மகிழ்விக்கிறார்கள்.

இங்கு குறிப்பிட்டிருக்கும் பதிவர்களின் பதிவுகள் அத்தனையும் ஒரு இசைக் களஞ்சியம்.
அடிக்கடி வரமாட்டார்கள் என்றாலும் நம்ம ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா.. 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா' வருவாங்க! அப்படி வரும் போதெல்லாம் இவர்களைக் "கேட்டு ரசிக்க" நான் தவறுவதில்லை.
நீங்களும் ரசித்துவிட்டுச் சொல்லுங்களேன்!


"கானா ப்ரபா":

வேறு சில பதிவுகள் எழுதி வந்தாலும், இவரது கவனம் முழுவதும் இசை மீது மட்டுமே! யாழ் பதிவர் வரிசையில் இவர் வந்திருந்தாலும், இவர் இருக்க வேண்டிய இடம் இதுதான்! இசை மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை வாய்ப்பு வரும் போதெல்லாம், தெரிவிக்க இவர் தயங்குவதே இல்லை. கர்நாடக இசை தொடங்கி, திரை இசை வரை இவர் தொடுக்கும் இசைமாலைகளை இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!

"பெப் சுந்தர்" என்கிற பத்மநாபன் சுந்தரேசன்:

'பாடும் நிலா' திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியன்!
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் அறிந்த ஒரு பெயர்!

தன் கந்தர்வ கானக் குரலால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைத் தன் இசை என்னும் இன்ப வெள்ளத்தால் நனைத்து, குளிப்பாட்டி மகிழ்த்தி வரும் ஒரு அற்புத இசைக் கலைஞர்!

இவருக்காக மட்டுமே தன் வலைப்பூவை அர்ப்பணித்து, இவரது பாடல்களைத் தொடர்ந்து அளித்து வரும் 'பெப்' சுந்தரின் சேவை மகத்தானது! பிரமிக்க வைப்பது!

தனக்குப் பிடித்த ஒருவரை மதிப்பது வேறு! அவரை அனைவரும் அறியும்படிச் செய்வது வேறு!

இதனை ஒரு தவம் போலச் செய்து வரும் [இது எப்படி என்பது எனக்கும் தெரியும்!] இவரைப் போற்றி, இவரது பதிவுகள் மூலம், 'மணி'க்குரலோனை
இங்கு சென்று கேளுங்கள்!

"CVR"

"CVR" என்கிற புனைப்பெயரில் ஒளிந்து,
உங்கள் முகத்தில் புன்னகை மட்டுமே பார்க்க விரும்பும் ஒரு எளிய நண்பன்!! :) A Simple friend who wants to put a smile in your face!! :)
என ஒரு அப்பாவி போலச் சொல்லி, அடுத்து,


உங்களுக்கு என்னதான்டா வேணும்?? ;-(

என ஒரு அதிரடி கொடுக்கும் வித்தியாசமான பதிவர்.

இத்தனை இளைய வயதில், இசையில் இவருக்கு இருக்கும் புலமை என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்!
ரவி கண்ணபிரான் தொடங்கி, வெட்டிப்பயல் வரை ஒரு பாடலைப் பதிவு செய்ததுமே இவரை அழைத்து "பாருங்க சார்'னு சொல்வதில் இருந்தே இவரது பெருமை புலப்படும்.
இவரை
இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!

"ரவி கண்ணபிரான்":

'இசை இன்பம்' என்னும் தலைப்பில் ஒரு வலைப்பூ, இவரது பன்முகங்களில் ஒன்று!

இசையில் ஈடுபாடுள்ள மற்றும் சிலரைக் கூட்டு சேர்த்து, இந்தப் பதிவை நடத்தி வருகிறார்!
பலவிதமான இசை அனுபவங்கள்
இங்கு உங்களுக்கு கிடைக்கும்!

"ஸிமுலேஷன்':

திரை இசை அல்லது அதை ஒட்டிய இசையையே சொல்லிவரும் இசைப் பதிவர்கள் நடுவே, இவர் ஒரு வித்தியாசமான பதிவர்!
கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
இதை ரசிக்கும் "தமிழ்மணப் பதிவர்"களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஒரு சில பதிவர்களை மகிழ்விக்கப் பதிவிடும் இவர், என் மதிப்பில் மிகவும் உயர்ந்தவர்!

இவரது ப்ரொஃபைலுக்கும் சென்று, மேலும் சில வலைப்பூக்கள் மூலம் இவர் ஆற்றி வரும் பணியைப் போற்றி, கேட்டு, மகிழுங்கள்!
மனமிருந்தால், ஒரு பின்னூட்டமும் போடுங்கள்!

"CA. CHANDRASEKARAN ramaswamy" என்கிற "கௌசிகம்"

60 வயது இளைஞர்!

தி.ரா.ச. என பலருக்கும் தெரிந்த ஒரு மிகச் சிறந்ந்த மனிதர்!
அருந்தமிழ் இசைகாக மட்டுமே தன்னை அர்ப்பணித்திருப்பவர்!
இவரது வலைப்பூக்களைப் பார்த்தாலே தெரியவரும், இவருக்கு இசை மீது இருக்கு ஆர்வம் எவ்வளவு என!!

சொல்லித் தெரிவதல்ல இசைக்கலை!

அனுபவிக்கணும்! அனுபவிங்க...
இவரது பதிவுகளை!


"யாழ் சுந்தர்"

பாட்டுடைத் தலைவனென்று இவரைக் கடைசியில் வைத்தேன்!
இசை ஒன்றே இவரது மூச்சு!
திரை இசை பற்றி இவருக்கு இருக்கும் காதலைப் பார்க்கும் போது, பொறாமையாக இருக்கும் எனக்கு!
இவரைப் படிக்கப் புகுவதற்கு முன், இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
வெளிவரவே மனமிருக்காது உங்களுக்கு!

என்றும் மங்காத, எவரும் ஈடு சொல்ல இயலாத டி.எம்.சௌந்தர்ராஜனைப் பற்றிய இவரது பதிவுகள் இனிக்க இனிக்க இன்பம் தருபவை!

எனது இனிய நண்பர் சுல்தான் சொன்னது போல விடுப்பு எடுத்து படிக்கவேண்டிய பதிவர் இவர்!!

எண்டெர் அட் யுவர் ஓன் ப்ளெஷர்!!!!!! [எப்போதும்.... எப்ப வேண்டுமென்றாலும்!!]

என்ன சொல்லிப் பாடிடுவேன்!
மன்னுதமிழ் இசையினையே
தன்னுடைய தவமெனவே
பின்னூட்டம் ஏதும் பாராது
இங்கெமக்கு வழங்கிவரும்
இவர்களது சேவையினை!

இசையென்பது இவர்கள் மூச்சு!
வசை பாடும் பதிவர்க்கு நடுவினிலே
இசை ஒன்றை இசைவாய்க் கொண்டு
தசையினைத் தீ சுடினினும் கருதாது
அசையாது இசைபாடும் இவர் சேவை
இசைவாகப் போற்றிடுவேன் வாழ்க இவரென்று!

இசைமாலை தருகின்ற இவர்களுக்கு
இசைசரம் தொடுத்து வாழ்த்தி வணங்குகிறேன்!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது