23-11-2009ல் தொடங்கும் வாரம்

இந்த வார ஆசிரியர்

அண்ணன் வணங்காமுடி




சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி

சீனா ... (Cheena) - அசைபோடுவது

முத்துலட்சுமி - சிறுமுயற்சி

பொன்ஸ் பக்கங்கள்

பதிவுத் தொகுப்புகள்

நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines
வலை அலங்காரம், துணைக்கருவிகள்

Saturday, April 4, 2009

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன

வணக்கம் !! இந்த வாரத்தொடக்கத்தில் இருந்து வலைச்சரம் தொடுக்க எனக்கு வாய்ப்பு அளித்த சீனாஜி க்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டு நவரத்தினங்களை பற்றி நானும் நிறைய அறிந்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறோம். இந்த வாரங்களில் இட்ட பதிவுகளை வரிசைப்படுத்த விரும்புகிறேன்....



நவரத்தினங்களின் தொகுப்பு - (Summary)


30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர்கள்

02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழுத்தாளர்கள்

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

04.04.09 – கோமேதகச்சரம் – (Sappire )– வலைச்சரம் பற்றி பதிவர்கள்

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன



அணில் குட்டி அனிதா : ஆமாம் கிளம்பறோம், சீனா அண்ணாச்சி ரொம்ப நன்றி நன்றி நன்றி..!! .. உங்க வலைச்சரம் கவி பென்டை சூப்ப்ரா நிமித்துச்சி... :)) பின்ன சரம் தொடுக்கறதுன்னா சும்மாவா? அம்மணிக்கு முதுகுவலி ன்னு புலம்பல்ஸ் ஆஃப் வேளச்சேரி ஆயிட்டாங்க.. :) ஸ்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கலாம்... முதுகு சரியா ஆகிறவரைதான்...!!



பீட்டர் தாத்ஸ் :- வைடூரியச்சரம் - (Cat's Eye )- Some Quality of Cat's Eye • Smoothness• Brilliance of chatoyance• High specific gravity - heavier than average stone of the same size• Having three streaks of light, similar to the sacred thread worn by Brahmins in India• Straightness of the chatoyance


Read more about Cat's Eye


04.04.09 – கோமேதகச்சரம் (Sapphire )–வலைச்சரம் பற்றி பதிவர்கள்

வலைச்சரம் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எனக்கு தோன்றவில்லை, எல்லாம் இந்த ஐந்து நாட்களில் பெற்ற அனுபவம் தான். சரி நம்மை போல மற்ற நண்பர்களின் அனுபவமும் கேட்டு தெரிந்துக்கொண்டு அப்படியே வலைச்சரத்தின் பழைய புதிய நினைவுகளை கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டு அனைவரிடமும் அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. இதோ...(இதுவரை அனுப்பியவர்கள் வரை,) வலைச்சரம் பற்றிய அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் :-

கயல்விழி முத்துலெட்சுமி :- வழக்கம்போலத்தான் நம்மளையும் நம்பி கூப்பிடறாங்களேன்னு முதலில் குஷி.. நாமபாட்டுக்கு தினம் வர பதிவுன்னு தமிழ்மணத்துல காட்டுற எல்லாமே படிச்சு குவிக்கிறோமே.. அதுல இருந்து எழுதிடலாமேன்னு தோணிச்சே தவிர.. இதைப்படிங்க ..நீங்க தவறவிட்டறாதீங்கன்னு சொல்லனும்ன்னா அதுஎப்படிப்பட்ட நல்ல பதிவா இருக்கனும்ன்னு ஒரு விதமான தடுமாற்றம் ஆகி எப்படியோ பொறுப்பை முடிச்சிட்டேன்னு தான் சொல்லனும்.. ஆனால் அதுக்கப்பறம் சொந்தப்பதிவுகளை பொறுப்பா எழுதனும்னு தோன்ற ஆரம்பிச்சது .. :)

குட்டி கண்ணம்மா (G3) :- கவிதாயினி காயத்ரிக்கும் ஜி3 காயத்ரிக்கும் குழப்பம் வந்து தான் நான் சிக்கினேன் வலைச்சரத்துல. இல்லாட்டி நம்மள எல்லாம் யாரு சீண்ட போறா... சரி.. அந்த கதைய விடுங்க. ஆனா ஒரு வாரம் போட வேண்டிய பதிவுக்காக பழைய பதிவுகள் எல்லாம் படிச்சப்போ, திரும்ப அந்த நாட்களுக்கே போன மாதிரி ஒரு அனுபவம். பதிவுகள்ல பின்னூட்டங்கள் அதை தொடர்ந்த ஜி-டாக் அரட்டைகள்னு எல்லாத்தையும் திரும்பிப்பாக்க ஒரு வாய்ப்பா இருந்துது. நான் தொகுத்த அந்த ஒரு வாரம் மத்தவங்களுக்கு எப்படி இருந்துதுனு தெரியலை (டெர்ரராத்தான் இருந்திருக்கும் :) என்ன இருந்தாலும் அதை நானே சொல்லக்கூடாதில்ல :P ) ஆனா தொகுத்த எனக்கு மனநிறைவா இருந்துது :)

ஆயில்யன் :- எழுதுவதை மட்டுமே யோசிக்க வைக்கும் பதிவுலகில்
எழுத்துக்களை வலைச்சரம் வாசிக்க வைக்கிறது !

கடந்து போன நிமிடங்களில் மலர்ந்து மறைந்த வலைப்பூக்கள்
பின் மீண்டும் மலர்ந்து வாசம் வீசச்செய்யும் வலைச்சரம்

வலைச்சரத்தில்
எழுதுபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தில் வலம் வருபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தினை வாசிப்பவர்களுக்கும் உற்சாகம்!

பழமையான வலைச்சர பக்கத்தினை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் யாவரும் வலம் வந்து வரிகள் கண்டு வாசித்து செல்ல....!

கோபிநாத் :- இருவர் மனதில் எப்போதும் விழா மேடைகள் பெருமையான விஷயமாக இருக்கும். ஒன்று பரிசை வாங்குபவர் மற்றொருவர் பரிசை தருபவர். அப்படி ஒரு பெருமைக்குறிய மேடை தான் நம்ம வலைச்சரம். அதில் நானும் இந்த இரண்டு நிலைகளில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மிக பெருமையான விஷயம். என்னையும் தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவுகள் போட வைத்தவர்கள்.அவர்கள் செய்யும் பணி மிக பெருமைக்குறிய விஷயம். தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ;) இந்த வாய்ப்பை தந்தமைக்கு கவிதா அக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றி ;)

ஜமால் :- அது நாள் வரை, வலைச்சரத்தில் அறிமுகமே செய்யப்படாத நான் ஒரு தொகுப்பாளராக, மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. முதல் நாள், ஒரு வித பயம் கலந்த எதிர்ப்போடு போயிற்று, வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் கண் விருந்து வைக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. முடிந்த அளவு புதியவர்களை அறிமுகம் செய்தேன். ஐந்து நாட்கள் தான் முடிந்தது பின்னர் சற்று சோர்வடைந்துவிட்டேன். மொத்தத்தில் மெத்த மகிழ்ச்சி.

கோவி கண்ணன் :- வலைச்சரம் தொகுப்பு என்பது 'படித்ததில் மனதில் பதிந்தவை' வகை, பின்னே தெரியாததை எப்படி எழுத முடியும் ? நாலு பேருக்கு நாம் என்ன என்ன மண்டையில் ஏற்றிவைத்திருக்கிறோம் என்பதாக மறைமுகமாக புரிய வைக்கும், பிடித்தவற்றை எழுதுவது எல்லோருக்கும் எளிமையானது தான். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவங்களை பதிவுல குறிப்பிடலையேன்னு யாரும் வருத்தப்படுவாங்களோ ன்னு கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். இந்த 'பதிவை' விட்டுட்டிங்களேன்னு சிலர் கேட்பாங்க, வலைச்சரம் விளம்பரத்துக்கானது அல்ல, அது அவரவர் பார்வையிலான தொகுப்பு என்ற எண்ணத்தில் தான் எழுதினேன்.

தருமி :- வலைச்சரத்தின் அந்த ஒரு வாரப் பொறுப்பில் நான் செய்த தவறுகள் தான் அதிகம். சரியான புரிதல் இல்லாமல் என் பதிவுகளுக்கு ஒரு முன்னோட்டம் ஏதும் முதல் பதிவில் சரியாகக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்த பதிவுகளிலும் முழுமையான அளவில் மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு இடம் கொடுத்ததாக நினைவில்லை. மொத்தத்தில் சரியான முன்னேற்பாடு ஏதுமின்றி ஒரு வார வலைச்சரத்தை கெடுத்த 'பெருமை' மட்டும் என்னைச் சேரும். மன்னிக்கணும்.

சென்ஷி :- வலைச்சரம் ஆரம்பித்த புதிதிலேயே அதில் ஆசிரியர் பொறுப்பு கொடுத்திருந்தார் நண்பர் சிந்தாநதி.. (இப்ப எங்க தலைவா இருக்கீங்க?). அன்றைய பதிவுகளில் இப்போது இருப்பதை போல நிறைய்ய பதிவர்கள் இல்லாது இருந்த போதும் நண்பர்கள் அல்லாது மற்றையோர் எழுதும் பதிவர்களில் ரசனைக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு போயிருந்தேன். (இப்போதும் நல்ல பதிவுகளை யாரேனும் தொடுப்பு அனுப்ப வேண்டி உள்ளது.) இப்போது வலையுலகத்தில் நிரம்பி வழியும் பதிவுகளிலும் சிறந்ததை தேர்ந்தெடுத்து தொடுத்து கொடுக்கும் பதிவர்களை பார்க்கும்போது வலைச்சரத்தின் பங்கு மற்றவர்களை விட எனக்கு மிக அதிகமாய் பயன்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது.

வலைச்சரத்தின் அத்தனை ஆசிரியர்களுக்கும், வலைச்சரம் என்ற புதுவலையை தொடுத்து தந்த சிந்தாநதி மற்றும் இதர பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் ரசிகர்களின் சார்பாய் நன்றிகளை

தெகாஜி :- ம்ம்... நான் வலைச்சரம் தொடுக்கும் பொழுது ரொம்ப யோசிக்க வேண்டியதா இருந்தது யாரையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றதுங்கிறதில. ஏன்னா, அதிகம் கவனிக்கப்படாத அதே நேரத்தில் என் மனதில் நின்றவங்கங்கிற முறையில நான் கொடுக்க முனைந்திருப்பேன். சந்தோஷத்தை கொடுத்தது! ரொம்ப எக்ஸ்சைட்டடா இருந்தேனாம் கவனிச்ச ஒரு நண்பன் சொன்னான்.

நாகைசிவா :- விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்தலை பாக்கு என்பது போல் தான் நான் வலைச்சரம் ஆசிரியர் ஆனதும். அதனால் ரொம்ப எல்லாம் ஹோம் வொர்க் பண்ணாமல் 2006ல் வந்த பதிவுகள் எவை என்று யோசித்து மனதில் சட்டேன ஞாபகம் வந்த பதிவுகளை ஒரு வாரம் சரமாக தொடுத்தேன். ஞாபகம் வந்த போதிலும் அதை தேடி எடுத்து சுட்டி தருவது என்பது ஒரு இமாலய சவால் தான். இருந்தும் அதை பிடித்து மறுபடியும் படிக்கும் போது பள்ளி காலத்து தோழனை சந்தி்த்த மகிழ்வு இதில் கிடைத்தது. சுருக்கமாக இனிமையான அசை போடலாக அமைந்தது.


அணில்குட்டி அனிதா:- ம்ம்.. எல்லாரையும் சொன்னாங்களே அம்மணியின் அனுபவத்தை சொன்னாங்களா...? சொல்ல மாட்டாங்க.. ஏன்னா.. ஹி ஹி.. பெண்டு நிமுந்து போச்சி இல்ல... ..... ..எனக்கும் ஒரு அனுபவம் கிடைச்சது.. பட்னி கிடந்த அனுபவம் தான்.... ஆனாலும்... ஓசில ஜூஸ் வாங்கி குடிக்க நானு என்ன வேணுனாலும் செய்வேனில்ல.. ! :)


பீட்டர் தாத்ஸ் :- கோமேதகச்சரம் (Sapphire)–Sapphire is the most precious of blue gemstones. It is a most desirable gem due to its color, hardness, durability, and luster. The most valuable color of sapphire is cornflower blue, known as Kashmir sapphire or Cornflower blue sapphire.
Read More About Sapphire :-
http://www.addmorecolortoyourlife.com/gemstones/sapphire.asp
http://en.wikipedia.org/wiki/Sapphire
http://www.cwjewelers.com/stonesapph.htm

Friday, April 3, 2009

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

பவளச்சரத்தில் இன்று பழப்பச்சடி'யாக (Fruit Salad) மூன்று வித தலைப்பில் பதிவர்களை கலந்திருக்கிறேன் அவர்கள் முறையே கவிஞர்கள், கதைக்காரர்கள், புகைப்படம் பிடிப்பவர்கள்

I. கவிஞர்கள் :- ஒன்றும் சொல்லுவதற்கு இல்லைங்க… ஒவ்வொருத்தரும் எழுதற கவிதைகள் இருக்கே… மயக்கம் வருதுங்க.. நீங்களும் போங்க திரும்ப மாட்டீங்க மயங்கி அங்கேயே விழுந்துவிடுவீர்கள்

1. தமிழரசி

2. கவிதாயிணி காயத்திரி

3. இனியவள் புனிதா

4. உமா சக்தி

5. சுடர்விழி

6. நான் சித்தன் - இது வலி! அனைவரும் பார்க்க, படிக்க உகந்தது அல்ல.. !!


II. கதைக்காரர்கள் : எல்லாருமே கதை எழுதறாங்க, என்னையும் சேர்த்து, யாரையென்று குறிப்பிட்டு சொல்லுவது, எனக்கு பிடித்த, அதனால் படித்த சில கதைக்காரர்களின் கதைகள்.

1. தேவ் : ப்ளாகிற்கு வந்து முதன் முதலில் படித்தது இவருடைய கதையை தான். ரொம்ப சுவாரசியமாக இருந்தது.. கதை என்றால் என் சாய்ஸ் முதலில் தேவ்' தான், அடிச்சிக்க ஆள் இல்லை.. இதோ உங்களின் பார்வைக்கு ஒன்று

இது விச்சுவின் கதை

2. செந்தழல் ரவி :
எங்களின் நட்பை சினிமாவில் தான் பார்க்கமுடியும், அடிச்சிக்குவோம்.. கொஞ்சிக்குவோம்.. எப்போ எது நடக்குமென்று எங்களுக்கே தெரியாது. இவரின் எல்லா பதிவுகளுமே ஏதோ ஒரு கருத்தை கொண்டு இருக்கும், கும்மியாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். குறிப்பாக சமூகபார்வை ஆச்சரியப்படவைக்கும். இவரின் கதைகள் ரொம்பவும் யதார்த்தமானவாய் நம்மில் பலர் இதை அனுபவித்தவர்களாகவும் இருப்போம். எனக்கு பிடித்தவை

a. கோழித்திருடன்

b. தேங்காய்பொறுக்கி

3. ராயல் ராம் :- இவரை பற்றி என்னங்க சொல்றது.. ராயலோட கதைகள் எல்லாம் ஒரே செண்டிமென்டு டச்….. அழவச்சிடுவாரு…. அப்படி அழுத ஒன்று

மாணிக்கமலர்

4. நாமக்கல் சிபி :- நயன் நாயகன், நக்கல் மன்னன், சும்மாவே கதைக்காரர், சுட்டிக்காரர், ஆனால் பெரிய சோம்பேரி ஒரு கதையை எழுதிட்டு தொடராமல் இருக்கிறார். நல்ல விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருந்தது, அப்படியே நிறுத்திவைத்து இருக்கிறார், தொடருவார் என்ற நம்பிக்கையுடன்...

நாலாம்பிறை திதி 1

4. ஆதவா : இவரைப்பற்றி எனக்கு தெரியவில்லை, இவரின் மற்ற கதைகள் கூட சுவாரசியமாகவே உள்ளன. ஒரு வித்தியாசமான விஞ்ஞான கதை

யாழினியின் காதல்

5. ஜி: மிக சமீபத்தில் இவர் எழுதிய கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அட.. நம்ம ஜி'க்கு இவ்வளவு அருமையாக கதை எழுத தெரியுமா என்று வியந்தேன், ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். .நீங்கள் ரசிக்க...

மயிலிறகு பக்கங்கள்...



III. புகைப்படக்காரர்கள்
:
நாங்களும் தான் கேமரா வைத்திருக்கிறோம், ஆனால் இங்க இருக்க படங்களை பாருங்கள்... எதுக்கு நம் கையில் கேமரா'? என்று தோன்றும்.

1. ராயல் ராம்: - இவருடைய புகைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு என்னோட புகைப்பட அறிவு இல்லை.. இவரு வல்லவர், ரொம்ப நல்லவர், போட்டோ பாருங்க… உங்களுக்கே புரிந்துவிடும்.. ஆல்பத்திற்கு பெயர் வைக்கவில்லை அதனால் நானே வைத்துவிடுகிறேன்.

Royal Raam's Rock collections

2. மாதவன் – சொல்வதற்குவார்த்தைகள் இல்லை, இவரோட போட்டோஸ் பார்க்கவே இவர் பதிவுக்கு போவது வழக்கம். ராயல் ராம் நீங்களும் பாருங்க.. சூப்பரா இருக்கும்..

Maddy Made us Mad

3. நாகை சிவா பாம்பு படம் எடுக்கும் பார்த்து இருப்பீங்க இங்க புலி படம் எடுக்குது பாருங்க… அவரோட ப்ளாக் போட்டோ பார்த்து, வாயப்பொளந்து கிட்டு, நீங்களா எடுத்தீங்கன்னு கேட்டேன்.. இல்லைங்க.. ஆள் வைத்து எடுத்ததுங்க' ன்னு சொன்னாரு, ஆள் வைத்து எடுத்த போட்டோவை பாருங்க..
a. சிசெல்ஸ் - புகைப்படங்கள் - வாய்பிளந்து பார்த்தது
b. பொங்கலோ பொங்கல் 2009 - அடுத்தவருடம் அக்கம் பக்கம் பொங்கலையும் சேர்த்து எடுங்க.

c. பாலைவன பூக்கள் - சூப்பர்

( சிவா முடியல!! தயவுசெய்து போட்டோ ஆல்பம் தனி ப்ளாக் பண்ணுங்க.. ஒரே லிங்க்'காக கொடுக்கலாம்.. ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே... இன்னும் நிறைய இருக்கே.. !! )

d. சாலைகள் பலவிதம் - Exclusive
e. கண்ணுக்கு விருந்து! - நிஜமான விருந்து

f..குண்டு 1 வச்சி இருக்கேன்! : Unique Collection
g. வண்ணக் கோலங்கள் - வண்ணங்கள் !



4. ஆனந்த்
: ஆஹா.. மை லென்ஸ் ன்னு ப்ளாக் பெயரோட போட்டோ பதிவிட்டு இருக்கிறார். எப்படித்தான் இப்படி போட்டோ எடுக்கறாங்களோ தெரியல..

மை லென்ஸ்

5. தீபா : முதலில் பார்த்தவுடன் பொறாமையாக இருந்தது… நாமும் தான் கேமரா வைத்து இருக்கிறோம்.. எங்க..?!! புகைப்படங்களை பாருங்க.. வகை வகையா பிரித்து ச்சும்மா கலக்கியிருக்காங்க...

Keep Watching Deepa's Collections

6. ஓவியா: இப்பத்தான் படம் எடுக்க பழகறேன் னு சொல்றாங்க.. ஆனா... புகைப்படம் எடுப்பதை தன் பொழுது போக்கில் ஒன்றாக வைத்து சரிவர எடுக்க பழகியும் வருகிறார்கள் போல் தெரிகிறது..

ஓவியாவின் கலக்ஷன்ஸ்

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்...! நான் இன்னும் உண்ணாவிரதம் முடிக்கல... ஏன்னா யாருமே என்னை கண்டுக்கல..!! அவ்வ்வ்வ்!! இப்பவாச்சும் போட்டோ பாத்துட்டு எனக்கு அப்படியே ஃபிரஷ் ஜூஸ் கொடுத்துட்டு போவிங்களாம்...!! வெக்கத்தவிட்டு சொல்றேன்........பசிக்குதுங்க...!!

பீட்டர் தாத்ஸ் : பவளச்சரம் (coral ) :- Since ancient times, Coral gemstone has been given recognition by all astrologers. It is not a mineral. Coral is kind of organic substance. Coral gemstone is prepared by non-vertebrate sea organism which are called Isis Nobiles. Coral gem is found in the shape of vine branch at about 600-700 feet deep into the sea. Scientists regard it as a component of calcium carbonate. Read More About Coral :-

http://www.rudraksha-ratna.com/coral-gemstones.html

http://www.mineralszone.com/gemstones/coral.html

http://www.addmorecolortoyourlife.com/gemstones/coral.asp

Thursday, April 2, 2009

02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழுத்தாளர்கள்

தனியாக பெண்களுக்கு என்று ஒரு சரம் தொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. தனித்துக்காட்ட வேண்டாம் என்றாலும், என்னை உற்சாகப் படுத்தவும், பெண்கள் அவ்வளவு சுலபமாக எழுதிவிட முடிவதில்லை என்னையும் சேர்த்து என்பதாலும் இந்த மாணிக்கச்சரத்தை தொடுக்கிறேன்.

யாரைவிடுவது யாரை தொடுப்பது என்ற அளவு நம் தோழிகள் அடிச்சி ஆடறாங்க… பார்த்தவரையில் நிறைய பெண்கள் கவிதை எழுதறாங்க…. சமீபத்தில் மகளிர் தினத்தன்று நம் தோழிகளின் பதிவுகள் நிறைய விகடனில் வந்தது. பார்க்க சந்தோஷமாக மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கும் எதிலும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் நம் வலை தோழிகள் ஜொலித்துக்கொண்டு இருந்தாலும், என்னை கவர்ந்த சில மாணிக்கங்கள்

1. மங்கை : முதல் பதிவிலியே என்னை கவர்ந்தவர்'ன்னு சொல்லிவிட்டேன். இன்னொரு முறை சொல்லுங்க..!! ன்னு சொல்ல வைத்து விட்டார்கள்..(அவங்க சொல்லல என்னையே சொல்லவைத்துவிட்டார்கள்) இதிலும் அவரே முதலில்… சொல்லிவிட்டேன்..

2. தமிழச்சி : இவங்க இப்ப இருக்கற தமிழச்சி இல்லைங்க.. இவங்களோட எழுத்து நடை திருநெல்வேலி தமிழ் என்று நினைக்கிறேன்.. ஒன்னும் புரியாது.. என்ன என்னவோ எழுதுவாங்க. .ஆனா எழுதுகின்ற ஒவ்வொரு விஷயமும் சூப்பரா ரொம்ப இண்டர்ஸ்டிங்காக… மேலும் நகைச்சுவை கலந்து எழுந்துவாங்க… வெள்ளேந்தி ன்னு சொல்லுவாங்களே அப்படி இருக்கும் எழுத்து.. பேச்சும் அப்படித்தான், இப்போது எழுதுவதே இல்லை , இருந்தாலும் எனக்காக.

3. பொன்ஸ் : சொல்லனும்மா… அறிமுகமே தேவையில்லையே.. வலையுலகில் அத்தனை பேரும் அறிவார்கள், இவர்களுக்காக தனி பதிவே எழுதி இருக்கேன்.


4. உஷாஜி : சிறந்த எழுத்தாளர், எல்லாவித பிரிவுகளில் எழுதுபவர். பிரச்சனைன்னு சொன்னா போதும் முதலில் ஓடி வந்து என்னம்மா ஆச்சி அமைதியா இரு பார்த்துக்கலாம்னு சொல்வதோடு இல்லாமல் பின்னூட்டத்தில் பின்னி எடுப்பாங்க.

5. அமிர்தவர்ஷணி அம்மா : இவங்க நிஜ பெயர் தெரியவில்லை. இவர்களின் எண்ண ஓட்டம் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததை விடவும் என்னுடைய பதிவுகளில் இவரின் பின்னூட்டங்கள் என்னை கவர்ந்தவை.

6. பூர்ணிமா சரண் :- என்னுடைய நவீன் மாதிரி இவங்களும் ஒரு ரவுண்டு குட்டி. சூப்பரா கும்மி அடிப்பாங்க.. பல சமயம் உருகி உருகி கவிதை எழுதுவாங்க…நாம் எதிர்ப்பார்க்காத போது தீடிரென்று ரொம்ப தீரமா பேசுவாங்க.. எல்லாத்தும் மேல் பதிவுகளை போய் பாருங்க.. சீக்கிரத்தில் 1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாகர்லேடி ன்னு பேரு வாங்கினாலும் வாங்குவாங்க..

7. தூயா : முடியலைங்க..இவங்க சமையல் குறிப்பு இருக்கே…. ம்ம்.. விடமாட்டேங்கறாங்க.. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. .இல்ல சமையல் செய்து காட்டிட்டு தான் மறுவேலைன்னு சொல்றாங்க..…. நாம எல்லாம் ரொம்ப பாவம்தான்.. ஆனா அவங்களுக்கு தெரியலையே…

8. அம்மாக்கள் வலைப்பூக்கள் : மிகவும் அவசியமான ஒரு குழுவாக இதை நினைக்கிறேன். 2008-ல் சந்தனமுல்லை தொடங்கியிருக்காங்க. இந்த குழுவைப் பற்றிய விவரங்கள் இந்த பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார்கள். இதை அம்மாக்கள் படிப்பதை விடவும் அப்பாக்கள் படித்தால் இன்னும் கூடுதல் பலன் தரும் என்று நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம், கடவுள் எல்லோரிடமும் இருக்கமுடியாது அதனால் அம்மாவை கொடுத்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள், அப்படி கடவுளாக நினைக்காவிட்டாலும், ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்பதற்கு இந்த குழுவில் இடப்படும் பதிவுகள் ஒரு உதாரணம்.

குழுவை ஆரம்பித்த சந்தனமுல்லை பற்றிய ஒரு சிறு தகவல், மிக அற்புதமான ஒரு அம்மா, நான் வியந்துப்போய் வாய்பிளக்கும் ஒரு அம்மான்னு சொல்லலாம்..இப்போது எல்லாம் அம்மா என்றாலே எனக்கு சந்தனமுல்லை தான் நினைவுக்கு வருகிறார், (நானும் என்னை தத்து எடுத்துக்கோங்கன்னு சொல்லி பார்த்தேன்.. பப்புவை கூட மேய்பேன் உன்னை முடியாது ஓடி போ கண்மறவா!! ன்னு டிரெக்டா ரிஜெக்ட் செய்துட்டாங்க) அடுத்து விடுதலைக்காக போராடியா வீர பெண்மணி அஞ்சலை அம்மாவின் கொள்ளுபேத்தி, வாவ்… !! எழுதும் போதே மெய்சிலிர்க்கிறது !!

அணில் குட்டி அனிதா: கவிவீஈஈஈஈஈ........அவ்வ்வ்வ்வ்வ்வ்!! அவ்வளவுதானா லிஸ்ட்டு...! ஏன் எப்பவும் என் லிஸ்ட் டை செக் பண்ணவே மாட்டேன்ங்கறீங்க.. திஸ் ஈஸ் டூ பேட் !! . நான் கோச்சிக்கிட்டேன்..... அப்படி ஓரமா போயி உட்காந்து உண்ணாவிரதம் இருக்கேன்.. இந்த பக்கம் வரவங்க எல்லாரும் எனக்கு இரு டம்ளர் பிரஷ் ஜூஸ் (நோட் ஒன்லி ஃபிரஷ் ஜூஸ்) கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சி வைங்க சரியா...?!!

பீட்டர் தாத்ஸ் :- மாணிக்கச்சரம் (Ruby) :- For thousands of years, the ruby has been considered one of the most valuable gemstones on Earth. It has everything a precious stone should have: magnificent colour, excellent hardness and outstanding brilliance. In addition to that, it is an extremely rare gemstone, especially in its finer qualities.


Read More About Ruby :
http://www.gemstone.org/gem-by-gem/english/ruby.html
http://www.kamalkapoor.com/gemstones/ruby.asp
http://en.wikipedia.org/wiki/Ruby

Wednesday, April 1, 2009

01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர்கள்

புதிய பதிவர்கள் என்று எழுத ஆரம்பிக்கும் போதே நான் புதிதாக இங்கு வந்தபோது எனக்கு உதவியவரை நினைவு கூறவது சரி என்று நினைக்கிறேன். ப்ளாக் எனக்கு அறிமுகம் செய்தவர் ஒருவர் என்றாலும் அதற்கு மேல் அவர் எந்த வழிகாட்டுதலையும் செய்யவில்லை. என்னுடைய அறிமுக பதிவின் போதே, பாலா(பாரதி) தானாக ஓடி வந்து உதவி செய்தார், அவருக்கு அப்போது எல்லாம் அது தான் முழுநேர வேலையாக இருந்தது. யாராவது புதிதாக வந்துவிட்டால் போதும் குடுகுடுகுடு'ன்னு ஓடி வருவார், "இந்த பக்கம் பாலா", அந்த பக்கம் உங்களை பற்றி சொல்லுங்கள்" என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிரை வாங்கி அதற்கு பின் நாம் வேணும்னு நினைப்பதற்கு மேலேயே உதவியும் செய்வார். என்னை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டது, என்னுடைய டெம்லெட் டில் எல்லாவித தேவையான மாற்றங்களை செய்து கொடுத்தது, எல்லாமே பாலா தான். பாலா இல்லைன்னா நான் தமிழ்மணத்திற்குள் எல்லாம் கண்டிப்பாக வந்து இருக்க வாய்ப்பு இல்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கேன்.

சரி சரி ரொம்பவும் கொசுவத்தியை கொளுத்தி உங்களை எல்லாம் அழவைக்காமல், புதியவர்களின் அறிமுகத்திற்கு செல்லுவோம். :-

ரத்தினங்களாக நான் கண்ட சில புதியவர்களை அறிமுகம் செய்வதில் சந்தோஷம் அடைகிறேன். படித்து விட்டு சும்மா செல்லாமல் எல்லோருக்கும் அவரவர் பதிவில் சென்று வாழ்த்து சொல்லிட்டு போகனும் டீல் சரியா..!!

1. சுபஸ்ரீ இராகவன் கவிதை நிறைய எழுதறாங்க.. கவிதைகள் நன்றாகவே உள்ளன, அதற்கு அவரின் ஆத்திசூடி கவிதை ஒரு உதாரணம். அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரை உற்சாகப்படுத்தலாமே..

2. நிலா – ராஜா, கோமதி தம்பதியின் குழந்தை நிலா குட்டி பெயரில் அவர்கள் ஆரம்பித்துள்ள பதிவு. கோமதி இது வரையில் எழுதியதில்லை, இந்த ப்ளாக் மூலம் நிலா குட்டியியுடன் தன் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்கிறார்கள். நிலாவை பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கனுமா.. வாங்க வாங்க....

3. கிருஷ்ணாபிரபு என்பவர் இந்த ப்ளாகை எழுதுகிறார். சற்று வித்தியாசமாகவே இருந்தது. அவருக்கு பிடித்த புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதுகிறார், புத்தகங்களை புரட்டி பாருங்களேன்.

4. சிம்பா என்பவர் எழுதுகிறார், அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். எனக்கு பிடிந்திருந்தது.. நீங்களும் பாருங்களேன்..

5. கலகலபிரியா.. :- ஆஹா பெயரே கலகல..வென இருக்கு, பதிவுகளும் கலக்கல்ஸ் ஆ இருக்கும், உங்களுக்கு எப்படி இருக்குன்னு முயற்சி செய்து பாருங்க..

6. மாதவன் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடுவார், அதை கொண்டு அறிவேன், அவ்வப்போது படிப்பேன், இவருடைய புகைப்படங்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.

7. ஜஸ்டின் , பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்களின் மூலம் பதிவுகளை எழுதுகிறார். நன்றாகவே உள்ளன.

8. தமயந்தியின் நிழம்வலை என்ற பெயரிட்டு சூப்பர் பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். ஆனால் யாரும் படிப்பதாக தெரியவில்லை. .இவர்களை போன்றவர்களை குழுக்களில் சேர்த்துவிட்டால் படிப்பவர்கள் அதிகமாகும்.

9. ஒரு வார்த்தை :- என்ற பெயரில் எழுதுகிறார், திரைபடதுறையில் பணியாற்றும் இவரை பற்றி அறிமுகமே என்னை கவர்ந்தது, தைரியமாக அரசியல் பதிவில் ஆரம்பித்து இருக்கிறார், படித்துதான் பாருங்களேன்..

10. வெங்கிராஜா:- வாவ்!! இவருடைய பாதசாரி டெம்ளேட்.. சூப்பர்.. !! இதற்காக ஒருதரம் சென்று பார்த்துவிட்டு அப்படியே பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்..

11.பொன்னிலா , பெயர் தான் நிலா வென்று முடிகிறது ஆனால் நிலா சுடுகின்றது… சுடுவதை நீங்களும் உணர்வீர்கள் சென்று படியுங்கள்.

புதிய பதிவர்களுக்கு எனக்கு தெரிந்த சில டிப்ஸ்' :

1. முகம் தெரியாமல் எழுதினால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்னு என்ற நினைப்பை விட்டுவிடுங்கள்
2. உங்களுடையது எப்படிப்பட்ட முகமாக இருந்தாலும் நான் இப்படித்தான் என்று காட்டிக்கொள்ள தயங்காதீர்கள்
3. எத்தனை கும்மி அடித்தாலும் நடுவே ஒரே ஒரு நல்ல பதிவாவது எழுதுங்கள்

அணில் குட்டி அனிதா :- என்னை அடக்கி அராஜகம் செய்வதால் நானும் ஒரு புது பதிவு ஆரம்பிக்கிறேன் மக்கா… அல்ரெடி இங்க யூ.ஆர்.எல் ரெடி செய்துட்டேன், சோ...எல்லாரும் இனிமே அங்க வந்து சேருங்க. .அம்மணிய எல்லாரும் Boycott பண்ணுங்க….. நோ மோர் டீலிங் வித் திஸ் லேடி !! கவி நோ மோர் ரீடர்ஸ் டூ யூ !! ...ஹாங்... ஐ சேலஞ்சு..!!

மக்கா உங்கள நம்பி சேலஞ்சு எல்லாம் ஓவரா சவுண்டு விட்டுட்டேன்.. சோத்துல மண்ணை போட்டுடாதீங்க… !! அவ்வ்வ்வ்வ்!! ஆதரவு கொடுங்கோஓஓஓ!!

பீட்டர் தாத்ஸ் : ரத்தினச்சரம் - (lapiz lazuli) :
Photobucket Lapis Lazuli with deep azure blue color, often flecked with golden pyrite inclusions, was treasured by ancient Babylonian and Egyptian civilizations and often worn by royalty. Lapis lazuli was widely used by Egyptians for cosmetics and painting . Persian legend says that the heavens owed their blue color to a massive slab of Lapis upon which the earth rested. Lapis Lazuli was believed to be a sacred stone, buried with the dead to protect and guide them in the afterlife.
Read more about Lapiz Lazuli
http://www.astroshastra.com/gemstore/lapiz.asp
http://en.wikipedia.org/wiki/Lapis_lazuli
http://www.all-that-gifts.com/se/lapis_lazuli.html

Tuesday, March 31, 2009

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

பிளாகரக்கு வந்த பிறகு மோசமாக தமிழ் பேசுவதாக அதாவது நல்ல தமிழ் அல்லாது கொச்சை தமிழ், வீட்டில் பேச்சு வழக்கில் இல்லாத தமிழ் பேசுவதாக பழைய நண்பர்களும், என் கணவரும் சொல்ல ஆரம்பித்தார்கள். குறிப்பாக சில வார்த்தைகள் பேசும் போதும் என் கணவரின் கோபத்திற்கு ஆளாவேன். வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசி பழக்கமில்லை, ஏன் என் நண்பர்களுடன் கூட பேசி பழக்கமில்லை. அவற்றில் சில

1. டுபுக்கு
2. மொக்கை
3. கடலை
4. உள்குத்து (இதற்கு அர்த்தம் தெரியாமல் பல மாதங்கள் இருந்தேன்)
5. ஆப்பு – இதை ஒரு முறை வீட்டில் சொல்லி, திட்டு வாங்கினேன்.. வாழ்க்கையில் நான் உபயோகபடுத்தவே கூடாது என்று முடிவெடுத்துவிட்ட வார்த்தை என்று சொல்லலாம். (வாங்கிய திட்டு அப்படி)
6. அடங்கு
7. இதோடா

இன்னும் பல வார்த்தைகள் உள்ளன, சட்டென்று நினைவில் வந்தது இவை தான். 2006 ல் பதிவுலகிற்கு வந்த புதிதில் ஒரு சிலரின் எழுத்துக்கள் ரொம்பவும் என்னை கவர்ந்தது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் டுபுக்கு. என் அலுவலக நண்பர் மூலம் இவருடைய பதிவிற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். என்னை அதிகம் எழுத்தின் மூலம் கவர்ந்தவர்கள், இவர்களின் எழுத்துக்கு ஒரு ரசிகை மட்டும் இல்லாது ரொம்பவும் மரியாதையும் கூடவே இருக்கிறது எனலாம். இதோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரங்கள். உங்கள் பார்வைக்கு :

1. டுபுக்கு இவரின் பதிவுகள் படித்து சிரிப்பதுதான் முதல் வேலையாக வைத்து இருப்பேன். இப்படி எல்லாம் காமெடியாக எழுத முடியும் என்று கற்றுக்கொண்டதே இவரிடம் தான்.

2. சிவகுமார்ஜி :- இவரை பற்றி நான் சொல்ல தேவையே இல்லை. சூப்பர் மேன்!. எதற்காகவும் தன் எழுத்து பாணியை / பணியை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர். சமூக அக்கறை அதிகம் உள்ளவர். இவருடைய பதிவுகளில் பின்னூட்டம் இடவே தேவை இருக்காது, அவ்வளவு தெளிவாக விஷயங்களை எழுதி இருப்பார். இவருடைய பொருளாதாரம் பற்றிய தொடர் என்னை மிகவும் கவர்ந்தது.

3. கல்வெட்டு :- ரொம்பவும் Informative ஆக பதிவெழுதுபவர்களில் ஒருவர். ஆரம்பித்திலிருந்தே சில பல பின்னூட்டங்களின் மூலம் எனக்கு நல்ல பல தகவல்களை தந்து கொண்டு இருப்பவர்.

4. தெகாஜி :- டாக்டர் இயற்கை நேசி இவர். எல்லா பிரிவுகளிலும் அலசி எழுதுபவர். இவருடைய சில பதிவுகள் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று என்னை யோசிக்கவைப்பவை.

4. மங்கை : மங்கை பதிவுலகிற்கு ஒரு கங்கை எனலாம். இவரின் சமூகம் சார்ந்த விழுப்புணர்வு பதிவுகள் வியக்கவைக்கும்,. சத்தமே இல்லாமல் யுத்தம் நடத்துபவர். இவரிடம் நான் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது..

5. ஆசிப் மீரான் : இவருடைய “நல்லா இருங்கடே” க்காகவே படிக்க செல்லுவேன். இவரின் எழுத்து நடை எனக்கு ரொம்பவும் பிடித்தது.

6. முத்து தமிழினி பதிவுக்கு வந்த புதிதில் இவருடைய பதிவுகளும் அடிக்கடி படிக்க நேரிடும், நடுவே தீடிரென்று வேலைநிமித்தம் காணாமல் போனார், திரும்பவும் இப்போது எப்போதாவது வந்து அப்டேட் செய்கிறார். பிடித்த எழுத்துக்களில் இவருடையதும் ஒன்று.

7. சுகுனாதிவாகர் எல்லாம் கலந்த கலவை’ன்னு சொல்லனும்,. சில பதிவுகள் படிக்கும் போது உடம்பு சிலிர்க்கும்.

8. எஸ்.கே’ஜி மருத்துவம் சார்ந்த பதிவுகள், இவருடைய இதயம் “லப் டப்” தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். பிறகு எய்ட்ஸ், பாலியில் சம்பந்தப்பட்ட தொடர்கள், தொடர்ந்து முடியாவிட்டாலும் முடிந்தவரை படித்து இருக்கிறேன். மெயில் அனுப்பி வேறு தொல்லை தந்து இருக்கிறேன்.

9. புருனோ :- Informative ஆக எழுதும் இன்னொரு பதிவர். எனக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் மூலம் நல்ல பல தகவல்களை தருபவர்.

10. வ.வா.ச : இப்போது வரையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு குழுமம் என்றால் அது வ.வா. ச தான். ரொம்ப Active ஆக இருந்தார்கள், இப்போது முன்பு போல் இல்லையென்றாலும் விடாமல் குழுமத்தை நடத்திவருவது சந்தோஷமாக இருக்கிறது. அதில் அதிகம் படித்தது, ஜொள்ஸ் பதிவுகள். ஆஹா ஜொள்ளுவிடறதுக்கு எந்த வித வெட்கமும் படாமல், அதுவும் ரொம்ப இனவேடிவ் ஆக யோசித்து விதவிதமாக ஜொள்ளுவிட இவரை விட்டால் யாரும் இல்லை. அடுத்து தேவ், சில பதிவுகளில் முற்றுபுள்ளியே இருக்காது, ஒரே கமா’க்கள் தான், மூச்சு விடாமல் எழுதி இருப்பார்.. அதுவும் இவரின் சொல்லாடல் சான்சே இல்ல.. எப்படிங்க இப்படி எல்லாம் ?? நெக்ஸ்ட் நம்ம கைப்பூ.. எப்பவும் போல எனக்கு புரியாது, ஒரு 2, 3 தரம் திருப்பி திருப்பி படிக்கனும், அதற்கு என்னுடைய மோசமான தமிழ் மொழி அறிவு தான் காரணம் என்று சொல்லலாம். புதிய வார்த்தைகள் நிறைய இவருடைய பதிவுகளில் இருக்கும், சில சமயம் ஒன்றுமே புரியாமல் "சே! இந்த பழம் புளிக்கும்"என்று வந்து விடுவதும் உண்டு.

மற்ற சிங்கங்களின் தனி பதிவுகளை தான் அதிகம் படித்ததுண்டு, சங்கத்து பதிவுகளை படித்தாக நினைவில்லை. இதோ சிங்கங்களின் லிஸ்ட்.

அணில் குட்டி அனிதா :- ம்ம் முடிச்சாச்சா…???? அவ்வளவு தானா லிஸ்ட்..டு? இன்னும் இருக்கா.?. எனக்கு பிடிச்சவங்கள நீங்க சேர்க்கவே இல்லையா கவி?? என்ன அநியாயம் இது.. ?!! என்ன அக்கிரமம்? என்ன ஒரு வில்லத்தனம் இது? கேப்பாரு இல்லையா? அதெல்லாம் முடியாது, என் பங்குக்கு எனக்கு பிடித்தவர்களை இங்கே சொல்லாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.. ..

கவிதா : நகராதே..!! தயவு செய்து இங்கேயே உட்கார்ந்துக்கோ. .நானும் தாத்ஸ்’சும் கிளம்பறோம்………….பை ' ஐஐஐஐ!!

பீட்டர் தாத்ஸ் :- வைரச்சரம் (Diamond) : - Diamond, composed of carbon, is the hardest natural substance in the world. Each carbon atom is surrounded by four neighboring carbon atoms in a tetrahedral coordination that is the result of a covalent bond and a face-centered arrangement in the cubic unit cell. Diamond is in the isometric crystal system, which is reflected in the commonly found octahedral or cubic crystal form. The external crystal class is 4/mBar32/m, while the space group designation is F41dBar32/m. Twins are common on the {111} plane. It has perfect four directional cleavage, adamantine luster, and both a high refractive index, 2.42, and specific gravity, 3.52. Color is usually pale yellow to colorless, but can also be brown, blue, green, orange, red, and black .
Read more about Diamond
http://www.emporia.edu/earthsci/amber/go340/diamond.htm
http://www.galleries.com/minerals/elements/diamond/diamond.htm
http://en.wikipedia.org/wiki/Diamond

Monday, March 30, 2009

வலைச்சரம் – தொடுப்பவர்கள் அணில், பீட்டர்தாத்ஸ் & கவிதா

அனைவருக்கும் வணக்கம், திரு.சீனா அவர்கள் எங்களை வலைச்சரத்தை தொடுக்க அழைத்திருக்கிறார். அவருக்கு முதலில் எங்களுது நன்றி. அழைக்கும் போதே வானமே எல்லை’ ன்னு சொல்லிவிட்டார். இதில் அதிக சந்தோஷப்பட்டது அணில். அதனால் பீட்டர்தாத்ஸ்’ க்கும், எனக்கும் அது என்ன ஆட்டம் போட போகுதோன்னு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. கொஞ்சம் அதட்டி உருட்டி அமைதியா இருக்கனும், இது நம்மவீடு இல்லை என்று சொல்லி அழைத்துவந்து இருக்கிறோம்.. வலைச்சரத்தில் எழுதும் நாட்களை ஏழுவித கற்களை கொண்டு சரமாக தொடுத்துவிட எண்ணியிருக்கிறோம் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

பார்வைகள் தொடங்கியது ஏப்ரல் 4, 2006, என் வாழ்க்கையில் நான் எப்போதும் மறக்கமுடியாத நாள் இது. நீங்கள் அனைவருமே பார்வைகள்’ ஐ பார்வையிட்டு இருப்பீர்கள், அதனால் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது அதிகமாக (எனக்கு) தேவையில்லாத சர்ச்சைகளுக்கு உள்ளாகும் ஒரு பதிவர் ன்னு சொல்லிக்கலாம். :). இதை தவிர்த்து பார்வைகளில் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எழுதிவிடவில்லை. :)இது வரையில் பதிவுகள் 192, என்னுடன் சேர்ந்து எழுதும் அணில்குட்டி’க்கு தான் அன்றும் இன்றும் ரசிகர்கள் அதிகம், பீட்டர்தாத்ஸ்’சின் பீட்டரை படிக்க வருபவர்களும் அதிகம். ஆக கவிதா’வை கண்டுகொள்பவர்கள் குறைவு :(. பரவாயில்லை, கவிதாவின் அருமை பலருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்கிறேன். :) . பார்வைகளில் லேபில் வாரியாக சென்றால் எளிதாக பிடித்த பதிவுகளை வரிசை படுத்திவிடலாம்

I. அணில் குட்டி அனிதா:- அணில் என்றாலே நகைசுவை தான். அணில் குட்டியின் அனைத்து பதிவுகளும் இதனுள்ளே அடக்கம்.
1. நான் அடிவாங்கியதை அணிலு அல்வா சாப்பிடற மாதிரி சொல்லுது
2. எடை குறைக்கிறேன் என்று.. நான் பட்ட அவஸ்தையை அணில் ரசித்தது அவஸ்தை பாகம் 1, அவஸ்தை பாகம் 2

II. அப்பாவிற்காக :- என்னுடைய அப்பாவிற்கு பிடித்த விஷயங்களை இதில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
1. விமானத்தில் டர்புலன்ஸ்
2. 4D திரைப்படங்கள் அரங்க அமைப்பு – (இது யூத் விகடனில் வந்தது)
3. அப்பாவின் கையேடு

III. கதை/கவிதை :- ஏதோ எழுத முயற்சி செய்து இருக்கிறேன்.. :) கவிதைகள், பதிவுகள் எதையுமே மணிக்கணக்காக யோசித்து எழுதியதில்லை, ஆன் தி டேபிள்… வேகவேகமாக எழுதி பதிவிடுவேன். இன்னும் பொறுமையாக எழுதினால் நன்றாக வருமோ என்னவோ.
1. இனிமையான சில தருணங்கள் – ஒரு காதல் கவிதை
2. அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!! - என்னை சுற்றியுள்ள நல்லவர்களை :) எனக்கு புரியவைத்த கவிதை
3. பெண்ணின் நிர்வாணம் அழகு...........!! - இது என்னுள் ஒரு மரணத்தை கண்ட கவிதை
4. ரயில் பயணங்களில்... : கதை என்ற சொல்ல ஒரு ஊறுகாய் !! :)

IV. கேப்பங்கஞ்சி – ஹை லைட்ஸ்’னு சொன்னால், கைப்புள்ள பதிவின் நீளம் அதிகமாக எழுத்துக்களின் அளவை குறைத்து பதிவிட்டது, குறைந்த நேரத்தில் (அரைமணி நேரத்தில்) தேவ் ‘வுடன் சேட்'டி மிக விரைவாக பதிவிட்டது, லிவிங்ஸமைல் வித்யாவின் கேள்விகளுக்காக மண்டையை உடைத்துக்கொண்டது, சந்தோஷ்’ க்காக எல்லோரிடமும் கேள்விகேட்டு சிரமப்பட்டது, எல்லாவற்றையும் விட கருப்பு'வின் பேட்டி இன்னும் என் பதிவில் இருப்பது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு பிடித்தவை
1.லிவிங்ஸமைல் வித்யா - வித்யா(க்களை) வை பற்றி அறிந்துகொண்டேன்
2. கைப்புள்ள - என்னை நம்பி முதலில் கேப்பங்கஞ்சி குடிக்க வந்தவர்.

V. கார்த்தி ஆபிஸ் – சின்ன அண்ணன் பெயரில், துறை சார்ந்த பதிவுகள், அலுவலக குறிப்புகள் அடங்கியது.
1. மேனேஜர் vs டேமேஜர்
2. முதல் பெயர் கடைசி பெயர்
3. வேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்

VI. பத்மாஸ் கிட்சன் – என் அப்பாவின் அம்மா (ஆயா) தான் எனக்கு சமையல் கற்று கொடுத்தது. அதனால் அவர்களின் பெயரில் இதில் சமையல் குறிப்புகள்.
1. மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்
2. கேழ்வரகில் செய்யும் உணவுகள்

VII. பழம்-நீ – என் அனுபவங்கள் அத்தனையும் என் கணவருக்கே சொந்தமாக்குகிறேன். என் அனுபவங்கள் அழுவாச்சியாக இருக்கும் அதனால் ரசிக்க முடிந்தவை தருகிறேன்.
1. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…
2. மருமகளை பழிவாங்கிய மாமியார்

VIII. சமூகம் – சமூகம் சார்ந்த பதிவுகள் அத்தனையும் இதனுள் அடக்கம். நிறைய பதிவுகள் இதில் தான் எழுதி இருப்பதாக தெரிகிறது
1. ஆண்களில் நிழலில்
2. கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்
3. ஐந்தறை பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்
4. மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்
5. கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது
6. மனிதனின் மறுபக்கம் (யூத் விகடனில் இடம்பெற்றது)
7. வாழ்க்கையை இழந்து வரும் இன்றைய மங்கைகள் (பெண்கள் பலரின் கோபத்தை பெற்றுதந்த பதிவு)
8. ஆண்கள் என்ற மிருகங்கள் (ஆண்கள் சிலரின் கோபத்தை இன்னமும் வாங்கிதந்து கொண்டிருக்கும் பதிவு)
9. வெட்டியான் யூத் விகடனில் இடம்பெற்றது.

IX. கதம்பம் - பொதுவான பதிவுகளை இதில் இடுகிறேன். பதிவர்களின் கருத்துக்களை நட்பு வாரத்திற்காக ஒன்று சேர்த்து பதிந்தது. மறக்கமுடியாத அடிக்கடி படிக்கும் பதிவு இதுதான். இது ஒரு நிலாகாலம். இதோ இதோ என்று எப்பவும் போல சிரமம் கொடுத்தது சிவா, கடைசி வரை கொடுக்காமல் ஏமாற்றியது தேவ். இருப்பினும் அவருடைய பதிவுக்கு சென்று நானே எடுத்து அவர் பெயரில் சேர்த்துவிட்டேன்.. :)
1. நட்பு வாரம் 1
2. நட்பு வாரம் 2

X. ஓவியம் புகைப்படம் : ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் உள்ளன. அதிகமாக பதிவுகள் இன்னும் இடவில்லை.

அணில் குட்டி அனிதா: ஓ.. சொந்த வீட்டில் ஆடற ஆட்டம் பத்தாதுன்னு இப்ப அக்கம் பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கிளம்பிட்டீங்களா..?! . ம்ம்…விதிய யாராச்சும் மாத்த முடியுமா? “பிடிச்சிது பிசாசு ஒன்னு வலைச்சரத்தை… !!” அப்புட்டுத்தான் நான் சொல்லமுடியும்…

சீனா அண்ணாச்சி. .நீங்க ரொம்ப நல்லவரு… கூப்பிட்டீங்க பாருங்க நல்ல ஆளா பாத்து.. !! ம்ம்..உங்கள சொல்லி குத்தம் இல்ல.. உங்களுக்கு கவி ய கூப்பிட சொல்லி ஒருத்தர் சொன்னாரு பாருங்க அவரு மட்டும் என் கையில் கிடைச்சாரூஊஊஊஊ…………..!! ஹி ஹி..ஹி… .ஒன்னுமே செய்ய மாட்டேன்… டேரக்ட்டா.....“சங்கு....தான்.....!!

பீட்டர் தாத்ஸ் :- முத்து (Pearl) :-
Pearls are created from a core. The core of a natural Pearl is simply a fragment of shell or fishbone, or a grain of sand that strays into the unsuspecting Pearl oyster's shell. To protect itself from this irritant the oyster secretes multiple layers of nacre, forming a Pearl.
Read more about Pearl-
http://www.mikimotoamerica.com/about_jewelry/pearls/birth.html
http://en.wikipedia.org/wiki/Pearl
http://www.youtube.com/watch?v=VbF9uGlGoro&feature=related

நன்றி கைப்புள்ள - வாங்க வாங்க கவிதா

கடந்த ஒரு வார காலமாக நண்பர் கைப்புள்ள ஆசிரியராகப் பொறுப்பேற்று பதிவர்களை அறிமுகப்படுத்தி - விளக்கமாக பதிவுகள் இட்டு - பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றி விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.



இன்று தொடங்கும் இவ்வாரத்திற்கு கவிதா பொறுப்பேற்கிறார். அவருக்குத் துணையாக அவரது செல்ல அணில் குட்டியும் பீட்டர் தாத்தாவும் இருக்கிறார்கள். அவர் பார்வைகள் என்னும் வலைப்பூவினில் அவரது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார். அவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் கவிதா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக

சீனா

Sunday, March 29, 2009

இசையமைப்பாளர் வி.குமாருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பென்ன?

1960களில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் வி.குமார். கே.பாலச்சந்தர் அவர்களின் பல படங்களுக்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கியவர் இவர். மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் முதலிய பேர் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். கேபி- வி.குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு திரைப்படம் "வெள்ளி விழா". இத்திரைப்படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில் திரையில் ஜெயந்திக்காகப் பாடியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி திரையில் பாடியுள்ள பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் துள்ளலான பாடல்கள் தான் என அனைவரும் அறிவார்கள். அதே படத்தில் பி.சுசீலா அவர்கள் வாணிஸ்ரீக்காகப் பாடிய ஒரு பாடல் "நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்". எப்போதும் இனிமையான மெலடி பாடல்களே பாடும் பி.சுசீலா அவர்கள் வித்தியாசமாக சத்தம் போட்டு பாடியிருப்பார். மேற்கண்ட தகவல்களைப் பல வருடங்களுக்கு முன் வி.குமார் அவர்களே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு திறம் வாய்ந்த பாடகர், இன்னுமொரு விதத்தில் பாட வேண்டும் என்றால் அவரால் பாட முடியாது என்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டு அவர்களுடைய ஸ்டைலத் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

நம் தமிழ் வலையுலகத்திலும் அத்தகைய ஒரு சூழல் நிலவுகிறது. சிரிப்பு பதிவர்கள், கும்மி பதிவர்கள், ஆன்மீகப் பதிவர்கள், பொதுவான பதிவர்கள் என்று ஏதாவது ஒரு வகைக்குள் ஒரு குறிப்பிட்ட பதிவரை வகைப்படுத்தலாம். ஆனால் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவைத் தாண்டியும் அவர் சில பதிவுகளை எழுதியிருப்பார். அதை படிக்கும் போது மிகவும் காண்ட்ராஸ்டிங்காக இருக்கும்.

புகைப்படக்கலை, வெண்பா எழுதுவது இவற்றிற்காகப் பேசப் பெறும் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியின் பின்நவீனத்துவ புனைவு பதிவு காமெடி ஒன்னு.
பாவமன்னிப்பு - கடைசி பாகம்

இலக்கியம், கவிதைகள், துபாய் அனுபவங்கள் பற்றிய பதிவுகளுக்காக அறியப் பெறும் தம்பி கதிரின் ஒரு மெகா காமெடி பதிவு.
தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

கலில் ஜிப்ரன், இளையராஜா பாடல்கள், கவிதைகள் என்று பல பிரிவுகளில் எழுதும் கொங்கு ராசாவுக்கு இயற்கையிலேயே ஒரு subtle ஹியுமர் சென்ஸ் அதிகம். கோயில் உற்சவத்தைப் பற்றிய செய்தி படிச்சதும் இவருக்கு என்ன தோணிருக்குன்னு பாருங்க.
காரமடை ரங்கநாதன்

காமெடின்னா டுபுக்கு, டுபுக்குன்னா காமெடிங்கிற அளவுக்கு காமெடியில பின்னி பெடலெடுக்குற டுபுக்கு அண்ணாத்தையின் படு சீரியஸான முகத்தைப் பாருங்கள் இந்த சிறுகதையில். தேன்கூடு சிறுகதை போட்டியில் 'மரணம்' என்ற தலைப்பில் இவர் எழுதியது.
சாமியாண்டி

பதிவுகளுக்கு நடுவுல காண்ட்ராஸ்ட் காட்டும் பதிவர்களுக்கு இடையில் ஒவ்வொரு பதிவுலயும் காண்ட்ராஸ்ட் காட்டுறவங்க கவிதா. "அவர்கள்" படத்துல கமல் கதாபாத்திரம் ஒரு பொம்மையை வைத்து கொண்டு பேசுவார். அக்கலையின் பெயர் Ventriloquism. வலையுலகில் அத்தகைய வெண்ட்ரிலாகுவிஸம் முயற்சி தான் இவங்களோட வலைப்பதிவு. படிக்கிறவங்களை "அவர்கள்" படத்து ஹீரோயின் சுஜாதா மாதிரி ஆக்கிவச்சிடுவாங்க. இவங்க படு சீரியஸா எழுத, இவங்களோட இன்னொரு பாதியான அணில்குட்டி அனிதா காமெடியா கலாய்ச்சி எழுதும்.
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...

வெண்பா எழுதுதல், மாதாந்திர குறுக்கெழுத்து புதிர் என்று பட்டையைக் கிளப்பி வரும் இலவசக் கொத்தனார் சரக்கு மேட்டர் பத்தி ரெசிப்பியோட சொல்லிருக்காரு பாருங்க.
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நாட்குறிப்புகள், பாடல்கள் பற்றிய கருத்துகள், ஆன்மீகக் கருத்துகள் எனப் பல பிரிவுகளில் எழுதும் மகரந்தம் ராகவன் அண்ணாச்சி எழுதுன முழுக்க முழுக்க கிராமிய வழக்கில் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை கதை. இப்பதிவில் நாமக்கல் சிபி சொல்லியிருப்பது போல "இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க..."
சீனியம்மா - வடக்க சூலம்

இது தான் வலைச்சரம் ஆசிரியராக நான் எழுதும் கடைசிப் பதிவு. நான் வலைச்சர ஆசிரியராக இருந்த இந்த ஒரு வாரத்தில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சில பதிவுகளை அவர்கள் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த போது இணைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய சீனா ஐயாவுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டு
தமிழ் திரட்டிகளின் தொகுப்பு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

திரட்டி மட்டுமல்ல...
ஓடைகளால் ஒரு வலைவாசல்!

அண்மைய மறுமொழிகள்

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

மகளிர் சக்தி