07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 26, 2011

எங்கே நிம்மதி?...எங்கே நிம்மதி? :-))

அனைவருக்கும் வணக்கம்,

நேற்று வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி படித்திருப்பீர்கள்.. வேலை கிடைக்கும்வரைதான் மனது வேலை பணம் பற்றியே சிந்திக்கும்! மனதுக்கு நிறைவான வேலையும் போதும் என்ற பொருளாதார நிலையம் வந்துவிட்டால் நம் மனது அடுத்த கட்ட சந்தோசத்துக்கு ஏங்க ஆரம்பிக்கும்! அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.. சிலர் ஆன்மீக தேடலில் இறங்கி கோவில் கோவிலாக சுற்ற நினைப்பார்கள்.. சிலர் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை..பயணம் செய்ய வேண்டும்..இன்னும் சிலர் மனது விட்டு சிரிக்க நினைப்பார்கள்! சுருக்கமா சொல்லனும்னா ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒவ்வொரு ஃபீலிங்.. தொடந்து படிங்க..உங்க ஃபீலிங் எதோட ஒத்துப்போகுதுன்னு பாருங்க! 






ரத்தம் சூடாக இருக்கும்வரை கடவுளே இல்லை என்பவர்கள் கூட குறிப்பிட்ட வயதிற்கு மேல் சுற்றி இருப்பவர்களின் கண்களை கட்டிவிட்டு கடவுளை தரிசிப்பதை கண்கூடாக பார்க்கிறோம்..இப்ப அது இல்லை விஷயம்.. இலங்கையில் உள்ள இந்த திருக்கேதீச்சரம் கோவிலை பற்றியும் அங்கு சென்று வந்ததைப்பற்றியும் திருமதி பக்கங்கள் என்று வைத்துக்கொண்டு திருமதி கோமதி அரசு விவரிக்கிறார் சென்று பாருங்கள்.. நீங்கள் அங்கு செல்லவே வேண்டாம்..சென்று வந்த உணர்வு வரும்!


அட என்னங்க இலங்கை கோவிலா சொல்றீங்க?  நம்ம நாட்டுக்குள்ளே ஒரு அருமையான கோவில சொல்லுங்கன்னு சொல்றீங்களா? அப்ப உங்களுக்காக மைசூரையும் அங்க உள்ள கோவிலையும் ராம்வி எப்படி ரசிச்சு சொல்றாங்கன்னு மதுரகவில போய் பாருங்க.


சிலருக்கு ஏதாவது வெளிநாடு செல்லவேண்டும் என்று நினைப்பார்கள் உடல்நிலையும் பொருளாதாரமும் ஒத்துழைத்தால் உலகத்தில் எங்கு வேணாலும் செல்லலாம்.. இன்றைக்கு உலகம் அப்படி சுருங்கி விட்டது! அதிலும் பூலோக சொர்க்கம் சுவிஸ் பயணம் என்றால் கேட்க்கவா வேண்டும்? அதற்காக கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்க சொல்லவில்லை...நிலா முகிலன் எழுதும் பூலோக சுவர்க்கம் சுவிஸ் பயணம் படியுங்கள்.. ஓசியில் சென்று வந்த உணர்வு வரும்!


உழைத்து களைத்து வீட்டில் இருப்பவர்கள் தனது பேரன் பேத்திகளோடு நேரத்தை கழித்து ஆனந்தமடைவார்கள்! ஆனால் வாண்டுகள் எப்போதுமே கதை கேட்க்கும் ஆர்வமுடையவர்கள்.. அடிக்கடி ஏதாவது கதை சொன்னால்தான் உங்களோடு ஒன்றுவார்கள்! நமக்கு எந்த கதையும் தெரியவில்லையே என்று வருந்தாதீர்கள்..உங்களுக்காகவே ஆனந்த வெளியில் கேணிப்பித்தன் கதைகளை படித்துக்கொண்டிருக்கிறார்..சென்று பார்த்து பிள்ளைகளை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்துங்கள்!


சிலருக்கு வீட்டில் ஓய்வெடுத்தாலும் அந்த நேரத்திலும் உருப்படியாய் ஏதாவது பணம் செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள்! அப்படி யோசிப்பவர்களின் முதல் தேர்வு பங்கு வர்த்தகம்! ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாது.. அவர்களுக்காகவே M.R என்ற நண்பர் பங்கு வர்த்தகம் என்ற தளத்தில் சொல்லுகிறார்! சென்று பாருங்கள். 


சிலருக்கு வேண்டியது தனி உலகம் ஆளே இல்லையென்றாலும் எதையாது படித்து சிரித்துக்கொண்டிருந்தால்  போதும்! அப்படி நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக இந்த அதிரடிக்காரன் எழுதிய எவண்டி உன்னை பெத்தான் ரீ மிக்ஸ் பாட்ட பாருங்க! கண்டிப்பா முழுவதும் உங்களால் படிக்க முடியாது! இடையிலேயே வயிற்று வலி வரலாம்!


அட எதுவுமே வேண்டாம்.. ஓய்வுக்கு பிறகு அறிவும் ஆற்றலும் வீணா போகுதேன்னு கவலைப்படற ஆளா நீங்க? அப்ப வாங்க உங்களுக்காகத்தான் டெரர் கும்மில ஹன்ட் ஃபார் ஹின்ட்னு போட்டிநடத்துனாங்க.. திறமை இருந்தா விளையாண்டு பாருங்க! ஏன்னா இது அறிவாளிகளுக்கான விளையாட்டு! 


என்னதான் நல்ல வேலையிலிருந்து நன்றாக பொருள் ஈட்டி நிம்மதியாக ஓய்வெடுத்தாலும் இல்லாதவனுக்கு கொஞ்சம் உதவி செய்து அவன் வாயால் கொஞ்சம் வாழ்த்துக்களை வாங்கி பாருங்கள்.. அது ஒரு போதை.. அந்த நல்ல போதையை அனுபவித்து பாருங்கள்.. இந்த இணைய தளங்கள் உங்களுக்கு தேவையில்லை!

நன்றியும் வாழ்த்துக்களுடனும்,
 
வைகை

47 comments:

  1. இனிய வணக்கங்களுடன்....

    மாணவன் :)

    ReplyDelete
  2. உங்கள் பகிர்வுகளுக்கு நன்றிகள்....வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  3. இனிய வணக்கங்களுடன்....

    மாணவன் :)

    ReplyDelete
  4. இன்று மசாலா(பல ரக) பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  6. வணக்கம் வைகை.வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வழக்கம்போலவே உங்கள் பாணியில் பயனுள்ள வலைத்தளங்களங்களை அறிமுகபடுத்தி உங்களுக்கு உரிய முத்திரையைப் பதித்து அசத்திவிட்டீர்கள் :)

    ReplyDelete
  8. அறிமுகபடுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! மென்மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்.... :)

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள் இந்தவார விடுமுறையில் லிட்டில் இந்தியா குடை கேண்டீன் உணவகத்தில் ஸ்பெஷலாக காத்திருக்கிறது. :))

    வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்... வாய்ப்பளித்தமைக்கு நன்றி வணக்கம்! :)

    ReplyDelete
  10. நல்லதொரு அறிமுகம்.

    அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்லதொரு அறிமுகம்.

    அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மாணவன் said...
    இனிய வணக்கங்களுடன்....

    மாணவன் :)

    ReplyDelete
  14. இனிய வணக்கங்களுடன் .சொலி எல்லோர் போரையும் போட்டு வச்சிருக்கான் ரமேஷ் ...

    அனைவர்க்கும் காலை வணக்கம் ...

    ReplyDelete
  15. காந்தி பனங்கூர் said...
    இன்று மசாலா(பல ரக) பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி அண்ணா.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. நாகராஜசோழன் MA said...
    :))////

    :>>>>

    ReplyDelete
  17. விக்கியுலகம் said...
    உங்கள் பகிர்வுகளுக்கு நன்றிகள்....வாழ்த்துக்கள் மாப்ள!////

    நன்றி மாப்ள!

    ReplyDelete
  18. @ வைகை மாம்ஸ், போதும் மாம்ஸ் நன்றி சொல்லியே டையர்ட் ஆகிட்டேன்.. நீங்க எப்படித்தான் அசராம சொல்றீங்களோ...

    ReplyDelete
  19. karthikkumar said...
    காந்தி பனங்கூர் said...
    இன்று மசாலா(பல ரக) பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி அண்ணா.////

    நன்றி நண்பரே! //


    என்ன கருமண்டா இது? பேரையாவது விட்டுட்டு காப்பி பண்றா :)

    ReplyDelete
  20. karthikkumar said...
    @ வைகை மாம்ஸ், போதும் மாம்ஸ் நன்றி சொல்லியே டையர்ட் ஆகிட்டேன்.. நீங்க எப்படித்தான் அசராம சொல்றீங்களோ...//


    அது கம்பெனி ரகசியம் மச்சி :))

    ReplyDelete
  21. வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் :)

    ReplyDelete
  22. நண்பர் வைகை அவர்களுக்கு

    எம்மை தங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  23. இவ்வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்ல அறிமுகங்கள் அண்ணே ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. புதுவிதமா அறிமுகம் செய்யறீங்க நல்லாயிருக்கு! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. மச்சி அப்போ வெட்டியா இருக்கவங்களை கேம் விளையாட சொல்லுற....

    ReplyDelete
  27. வைகை,

    இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை ராசா.

    கடைசியா வெச்சிருக்கீங்க பாருங்க ஒரு பஞ்சி. ரியலி சூப்பர்.

    இந்தா பிடி “பூங்கொத்து”.

    ReplyDelete
  28. இனிய வணக்கங்களுடன்....

    பன்னி:)

    ReplyDelete
  29. உபயோகமான விடயங்கள் தான்.

    கூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா ?500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்

    ReplyDelete
  30. தங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  31. @வைகை :


    அறிமுகத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  32. அருமையான பகிர்வு வைகை....

    அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  33. அழகாய் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி வைகை.

    ReplyDelete
  34. என் தளத்தை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  35. நன்றி மாணவன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது