tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1404536948685985089..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரசியலும் அரசியல் மௌனமும்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82073768448672949042008-05-11T11:39:00.000+05:302008-05-11T11:39:00.000+05:30வாங்க காயத்ரி...அது என்ன கோழிக்கால்னு பெரியதம்பி ட...வாங்க காயத்ரி...<BR/><BR/>அது என்ன கோழிக்கால்னு பெரியதம்பி டிபிசிடி அண்ணாகிட்ட சாட்டிட்டேன். அப்பறம் அந்த கோழிக்கால் கதை சொன்னார். சுட்டியையும் படித்தேன். இங்க கோழி கால்களை மட்டும் பிரித்து தனியாக விற்கிறார்கள். உங்களுக்கு வசதிதான்.<BR/><BR/>ஹாஸ்டலில் எனது நிலை எதிர்மறையானது. நான் சுத்த-வெஜ்ஜாக இருந்து எனது ஹாஸ்டல் என்னை நான்-வெஜ்ஜாக மாற்றிவிட்டது. இன்றும்கூட.. நான்-வெஜ்தான் விரும்பி சாப்பிடுவேன். என்ன செய்வது? சரியான மாமிசப் பட்சினிகளிடம் வந்து மாட்டிக் கொண்டுவிட்டேன். மகன் கோழி, மனைவி மீன், மகள் நண்டை வைத்து வெளுத்து வாங்குகிறார்கள். “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2747463440339022442008-05-10T22:05:00.000+05:302008-05-10T22:05:00.000+05:30டிபிசிடி... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏனிந்த கொலைவெ...டிபிசிடி... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏனிந்த கொலைவெறி அண்ணா? :(<BR/><BR/>ஜமாலன் அவர் சொல்வது உங்களுக்குப் புரிய வேண்டுமானால் இந்தச் சுட்டியிலிருக்கும் படு மொக்கைப் பதிவொன்றை நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.<BR/><BR/>http://papaasangam.blogspot.com/2007/06/5.html<BR/><BR/>இந்த சோதனை தேவையா உங்களுக்குன்னு யோசிச்சுக்கோங்க.. அப்புறம் உங்க இஷ்டம். :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73720997421232182292008-05-10T21:59:00.000+05:302008-05-10T21:59:00.000+05:30என்னை முன்வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்த்த்த்...என்னை முன்வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்த்த்த்னை விவாதங்களின் முன்பாய் வெகு தாமதமாய் வந்து சேர்ந்த ஒரு பார்வையாளராய் மட்டுமே என் பங்களிப்பு இருக்கிறது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்! :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78283514350462547252008-05-10T17:38:00.000+05:302008-05-10T17:38:00.000+05:30நண்பர் வளருக்கு..விரிவான பிறிதொரு வசிப்பையும் வாசி...நண்பர் வளருக்கு..<BR/><BR/>விரிவான பிறிதொரு வசிப்பையும் வாசிப்பின் பன்முக சாத்தியங்களையும் அலசி எடுத்துள்ளீர்கள். நன்றி. <BR/><BR/>//இந்த வாசிப்பை முன்வைத்து, எழுப்ப முனையும் கேள்விகள்://<BR/><BR/>எனக்கு தெரிந்தவரை பதில சொல்ல முனைகிறேன்.<BR/><BR/>//1) கவிதைக்குள் உள்ள மொழி, அது கட்டமைக்கும் நிகழ்வுகள் சில வாசிப்புகளைக் கோருகின்றனவா இல்லையா?//<BR/><BR/>நிச்சயமாக. கவிதை என்பது பிற பிரதிகளைவிட குறுக்கும் மறுக்குமாக நெய்யப்படுவதும், மொழியில் அரூபத்தன்மையும் கொண்டது. கவிதையின் தோற்றம்தான் இலக்கியப் பிரதிகளில் முன்னதாக இருப்பதற்கான ஊகமே இதனை மெய்ப்பிப்பது. அதனால் கவிதைமொழி என்பது மற்றப் பிரதிகளைவிட அதற்கான வாசிப்புகளை அதிகதிமாக கோரும் ஒன்று. சங்க கவிதைகள் துவங்கி நமது உரைகூறும் மரபு இதற்கான சான்றாகும். <BR/><BR/>//2)ஆசிரியன் இறந்து விட்டான் என்ற கருத்துகோளால், வாசகர் (ideal reader/critic) எத்தகைய வாசிப்பை வேண்டுமானால் தந்து கொண்டிருக்கலாமா?//<BR/><BR/>இதில் எனக்கு உள்ள ஒரு சின்ன விலகல் என்னவென்றால், ஆசிரியன் இறந்து விட்டான் என்பதனால் பிரதி பல வாசிப்புகளை தருவதில்லை. பிரதி என்பதே நுழைவதற்கான பல வாசல்களைக் கொண்டதுதான். ஆசிரியன் என்கிற கருத்து இல்லாமல்தான் நமது உரைகூறும் மரபு காலங்காலமாக பல வாசிப்புகளை நிகழ்த்தி வந்துள்ளது. சான்றாக, வாசகன் பிரதியை மீறி அல்லது பிரதியிலிருந்து விலகி ஒரு வாசிப்பு நிகழ்த்துவதாகக் கொள்வோம் அதுவும் வாசிப்பு என்கிற வகையில் அதற்கான அடிப்படைகளைக் கொண்டதே. ஒன்றை முன்வைத்து பேசுகிறான் அவ்வளவே. அந்த ஒன்றைப் பற்றியே அவன் பேசவேண்டும் என்பதில்லை. பிரதியை தனது சாத்தியப்பாட்டுக்குள் மீள்கட்டமைப்பு செய்வதே அது. ஒற்றை அல்லது மையமான அர்த்தம் ஒன்றை கற்பிதம் செய்தால்தான் இந்த கேள்வியே வரும். அந்த அர்த்தத்தை ஏன் அவன் சொல்லவில்லை என்று? அப்படி ஒனறு புதிய விமர்சன முறையில் சாத்தியமில்லை என்பது நீங்கள் புரிந்துக் கொள்ளக் கூடியதே.<BR/>இங்கு காயத்ரி கவிதையில் அவரது கருத்து என்பதுகூட அதை எழுதிய காயத்ரி என்கிற ஆசிரியரின் கருத்து அல்ல. காயத்ரி என்கிற வாசிப்பாளரின் கருத்துதான் அது. வியாசன் சொல்ல விரும்பிய இராமயணத்தையா நாம் சொல்லிக் கொண்டுள்ளோம். நாம் விரும்பிய ராமயணத்தைதான் இன்று சொல்லிக் கொண்டுள்ளோம். பிரதியின் கருத்து அப்பிரதிக்குள் சொல்வோனாக உள்ளவனின் கூற்று கேட்போனின் கூற்றாக மாறும்போது உருவாகும் இணைப்பில்தான் பொருள் உருவாக்கம் நிகழ்கிறது. காயத்ரி எனன சொல்ல வருகிறார்? என்கிற துப்பறியும் சாம்பு வேலை புதிய விமர்சனமாகாதுதானே? ரசனைவாத விமர்சனம்கூட கருத்தயில் சார்ந்த பிறிதொரு வாசிப்புத்தானே?<BR/><BR/>//3) வேறு வகையில் கேட்பதென்றால் unlimited semiosis என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறோமா அல்லது அதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு என்பதை அங்கீகரிக்க போகிறோமா?//<BR/><BR/>இதனை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். ஒரு சொல் குறிகளாக உள்ளது என்பதில் குறிப்பீடு என்பது சொல்லை ஒரு சூழலில் நிறுத்துவதுதான். அதாவது ஒரு பொருளை தரும் வண்ணம் அச்சொல்லின் இயக்கத்தை தனது வாசக-பிரதிக்குள் கட்டுப்படுத்தி நிறுத்துவது. ஆனால் குறிப்பான் என்பது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அக்குறிப்பான் பிறிதொரு சூழலால் வேற குறிப்பீட்டுக்கு ஆளாகலாம். அதனால்தான் ”பொருட்குத் பொருட் தெரியின் அது வரம்பற்றது“ என்கிறார் தொல்காப்பியர். ஒரு பொருளை குறிப்பீடு செய்வதும் பிறதொரு சொல்லால்தான். அச்சொல்லும் ஒரு குறிப்பானே. இந்த குறிப்பான் சங்கிலியை விளக்க வேண்டியதில்லை. அதனால் எல்லை என்பது நமது அங்கீகாரம் மட்டுமே தவிர, அதற்கு ஒரு எல்லை இருப்பதற்கான சாத்தியமில்லை என்பதே எனது புரிதல்.<BR/> <BR/>//4) வாசகர் தம் விருப்பத்திற்கு ஏற்றவாரு பிரதிக்கு அர்த்தம் தந்து கொண்டே போகலாமா அல்லது பிரதிக்குள் அது சாத்தியப்படுத்தும் அர்த்தங்களுக்கு, இடம் - காலம் - வாசிப்பு சூழல் சார்ந்து சில எல்லைகள் இருக்கின்றனவா?//<BR/><BR/>பிரதி என்பது இயக்கத்தில் இருப்பது அல்லது இணைப்பின்வழி உருவாகுவது. நமது விருப்பம் என்பது நமது சூழல் சமூகம் அரசியல் புரிதல் சார்ந்தது. ஒரு பிரதிக்கு முற்று முடிவான அர்த்தம் சாத்தியமில்லை. இல்லாவிட்டால் இன்று நாம் ராமாயணத்தை வாசிக்க முடியாது. அர்த்தம் என்பது வழங்கப்படுவது அல்ல. புரியப்படுவது. அதனால் பிரதிக்கான அர்த்தம் பிரதி இணையும் பல இணைப்பு புள்ளிகளால் ஆனாது. இணைப்புகள்வழிதான் அர்ததம் உருவாகுமே தவிர ஒரு வாசிப்பின் வழியாக “தரப்படுவதால்“ அல்ல. அதனால் பிரதிக்கு எல்லை இல்லை. பிரதியை அதன் வாசிப்பின்ப அடிப்படையில் வகைப்படுத்தி அறியலாமே தவிர.. அதற்கான அர்த்தம் இதுதான் என்று எல்லைப்படுத்த முடியுமா? ஒரு பிரதியின் வாழ்வை அதன் பன்முக அர்த்த சாத்தியங்களே தீர்மானிக்கிறது. <BR/><BR/>வேட்கைகள் குறித்த இரண்டாவது பகுதியை தனிப் பின்னொட்டமாகத் தருகிறேன்.<BR/><BR/>நன்றி<BR/>அன்புடன் <BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72371600849913544672008-05-10T11:17:00.000+05:302008-05-10T11:17:00.000+05:30//ஆரிய-வாசகப் பிரதிகள்//”ஆசிரிய-வாசகப் பிரதிகள்”என...//ஆரிய-வாசகப் பிரதிகள்//<BR/><BR/>”ஆசிரிய-வாசகப் பிரதிகள்”<BR/>என திருத்தி வாசிக்கவும். சுட்டிக்காட்டிய டிபிசீடி ஐயாவிற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82584193444210131562008-05-10T11:13:00.000+05:302008-05-10T11:13:00.000+05:30நண்பர் சுந்தருக்கு..காயத்ரி கவிதையை முன்வைத்து ஆரி...நண்பர் சுந்தருக்கு..<BR/><BR/>காயத்ரி கவிதையை முன்வைத்து ஆரிய-வாசகப் பிரதிகள் பறறிய ஒரு காத்திரமான உரையாடலைச் சாத்தியப்படுத்திய வகையில் அக்கவிதை சற்று அடுத்த தளத்திலானதே. இருப்பினும் உங்கள் புரிதல் குறித்து முன்னமேயே வளர் தனது கருத்தில் எழுதியுள்ளார். கவிதை என்பது உணர்வின் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றவகையில் வெவ்வேறான உணர்வுகளுக்கும் பொறுந்தும் தன்மை கொண்டதுதானே?<BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30029188491026819752008-05-10T11:08:00.000+05:302008-05-10T11:08:00.000+05:30நணபர் வளர்மதிக்கு நீண்ட பின்னோட்டத்திற்கு நன்றி. ...நணபர் வளர்மதிக்கு நீண்ட பின்னோட்டத்திற்கு நன்றி. மேலதிகமான புரிதலை கொண்டு செல்லும் உங்கள் கேள்விகள் மற்றும் கருத்தக்கள் பற்றிய விரிவான எனது பகிர்தலை நேரமின்மையால் உடனடியாக எழுத வாய்க்கவில்லை. உரையாடலை மேற்கொண்டு செல்ல முயல்கிறேன் சீக்கிரத்தில்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48214904869110046332008-05-09T11:19:00.000+05:302008-05-09T11:19:00.000+05:30காயத்ரி எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர். அவரத...காயத்ரி எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர். அவரது மழை கவிதை பிடித்திருக்கிறது. ஆனால் அதற்கு நீங்களும் வளர்மதியும் கொடுத்திருக்கும் விளக்கங்கள்... எப்பா..:)<BR/><BR/>அந்தக் கவிதையை நான் புரிந்து கொண்ட விதம் : இரவில் மழை பெய்து முடிந்து விட்டது, காலையில் விழும் நீர்த்துளிகள் பார்க்காமல் விட்ட (மழைத்) தருணங்களை ஞாபகப் படுத்துகிறது. மழையைத் தவற விட்டதற்காக வருத்தப் படும் ஒரு கவிதையாக இதைப் படித்தேன்.<BR/>simple.<BR/><BR/>இப்பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டக் கவிதை :<BR/><BR/>இன்று வேகவேகமாய்<BR/>வந்து போய் விட்டிருக்கிறது<BR/>பிகர்கள்.<BR/>வந்து போன பின்னும்<BR/>அங்கிருந்து வரும்<BR/>சென்ட் வாசனைகள்<BR/>நினைவூட்டியபடி எரிச்சலூட்டுகின்றன<BR/>நான் தவறவிட்ட பிகர்களை!<BR/><BR/>ஆசிரியன் இறந்து விட்டானா அல்லது வாசகன் இறந்து விட்டானா :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84399149915945210722008-05-08T20:50:00.000+05:302008-05-08T20:50:00.000+05:30அன்புடன் ஜமாலன் அவர்களுக்கு,நீண்ட நாட்களுக்குப் பி...அன்புடன் ஜமாலன் அவர்களுக்கு,<BR/><BR/>நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவை முழுமையாக உட்கார்ந்து வாசித்த மனநிறைவு.<BR/><BR/>தேர்ந்திருக்கும் கவிதைகளை வைத்து உங்களது வாசிப்பில் ஒரு பிரதியை முன்மொழிந்திருக்கிறீர்கள் என்பதில் மாறுபாடில்லை :)<BR/><BR/>பல மாறுபாடுகள் இருப்பினும் விரிவாக உரையாடவும் தற்சமயம் நேரம் வாய்க்கவில்லை. <BR/><BR/>மன்னிக்க வேண்டுகிறேன்.<BR/><BR/>எனினும் தாங்களும் வாசகர்களும் அசைபோட இரண்டு குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள விருப்பம்.<BR/><BR/>முதலாவது காயத்ரி அவர்களின் கவிதையை முன்வைத்து:<BR/><BR/>தங்களுடைய வாசிப்பில் கவிதை பாலியல் அமைவு குறித்ததாக உருவெடுக்கிறது.<BR/><BR/>இங்கு இன்னொரு வாசிப்பை முன்மொழிய விழைகிறேன்.<BR/><BR/>கவிதை மழை குறித்தது. <BR/><BR/>ஓரிரவு பொழிந்து சிறிது நேரத்திற்கு முன்னர் கடந்துவிட்ட மழை <BR/><BR/>[போய்விட்டிருக்கிறது <BR/>மழை ... <BR/><BR/>(இன்னமும்) <BR/><BR/>இலைகளிலிருந்து <BR/><BR/>துளித்துளியாய்ச் சிந்தும் <BR/><BR/>நீர்த் துளிகள்] <BR/><BR/>கிளறிவிடும் நினைவுகள் குறித்தது.<BR/><BR/>அந்த நீர்த்துளிகள் "நான் தவறவிட்ட தருணங்களை" நினைவூட்டுபவை.<BR/><BR/>காயத்ரி என்ற கவிஞரின் அனுபவமாக வாசித்தால், அவர் ஒரு பெண் கவிஞர் என்ற உடல் சார்ந்த பாலியல் அடையாளம் வாசிப்பில் குறுக்கிட்டு, அன்றிரவு பெய்துவிட்டுச் சென்ற மழை, அவரிடம் கிளர்த்திவிட்டுச் சென்ற, "தவறவிட்ட தருணங்கள்" குறித்த நினைவுகள் காதல் குறித்தவை என்று உடனடியாக வாசிப்பர் ஒரு கற்பனை உலகில் மிதக்கத் தொடங்குவார்.<BR/><BR/>[அவர் திருமணமாகாதவர் என்பதாக ஒரு தகவல் சேர்ந்தால், ஒரு பெண்ணின் - தலைமகள் - காதல் வெளிப்பாடு எனவும், சங்க மரபின் தொடர்ச்சியான கவிதை எனவும் வாசிப்பு நீளலாம். <BR/><BR/>திருமணமானவர் என்பதாக ஒரு தகவல் சேர்ந்தால், பெண்கள் தற்போது தமது பாலியல் வேட்கைகள் {அதாவது திருமணம், குடும்பம் போன்ற கட்டுக்களுக்குள் அடங்கிவிடாமல்} குறித்து துணிச்சலாக எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்றும், இதுபோன்ற பொன்ற பெண்களும் அவர்தம் கவிதைகளும் சங்க காலம் தொட்டே இருப்பவை எனவும் {பாணிணிகள், விரலியர், ஒளவை} வாசிப்பு நீளலாம்.]<BR/><BR/>ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருதுகோளை அதன் செறிவுகளோடு ஒப்புக்கொண்டு இக்கவிதையை அணுகமுற்படுவோர், முதற்படியாக காயத்ரி என்ற கவிஞரின் தனிப்பட்ட அனுபவமாக இதை வாசிக்க முனையமாட்டார்கள் என்பதில் தங்களுக்கு மறுப்பிருக்காது என்று எடுத்துக் கொள்கிறேன்.<BR/><BR/>காயத்ரி என்ற கவிஞரின் தனிப்பட்ட அனுபவமாக அல்லாமல் அணுகி வாசித்தால் என்ன நிகழலாம்?<BR/><BR/>எளிமையான ஒரு வாசிப்பில், மழை குறித்த சாதரணமான ஒரு கவிதை என்று அணுகுவது ஒரு சாத்தியம்.<BR/><BR/>மற்ற சாத்தியம் ஒன்றை கவனத்திற்குக் கொண்டுவருவதாக இருந்தால் இப்படியான ஒரு வாசிப்பை நிகழ்த்திக் காட்டலாம்.<BR/><BR/>"வந்து போய்விட்டிருக்கிறது மழை" என்பதில் மழை "கிறது" என்ற படர்க்கை நிலையில் சுட்டுப்பட்டிருக்கிறது.<BR/><BR/>இந்த படர்க்கை நிலை அஃறிணையைக் குறிப்பதாகுமா?<BR/><BR/>தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில், ஆண்பால், பெண்பால், பலவின்பால் ஆகிய முப்பால் நிலைகளில் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளுக்கும் தெளிவான குறிப்புகள் தமிழில் உண்டு என்பதில் எவருக்கும் மறுப்பிருக்காது என்றே கருதுகிறேன் (எனது மிக மேலோட்டமான இலக்கண அறிதலை ஒப்புக்கொண்டு மேற்செல்ல விழைகிறேன்.)<BR/><BR/>இவற்றில் மழை எந்த இடத்தில், பால் நிலையில், திணையில் பொருத்துவது?<BR/><BR/>மழை ஒரு நிகழ்வு என்பதால் சாத்தியமாகாது என்று ஒப்புக் கொள்ளலாம்.<BR/><BR/>அப்படியிருப்பின் மழை போய்விட்டிருக் "கிறது" என்ற படர்க்கை நிலை எதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்?<BR/><BR/>இத்தகைய நிகழ்வுகளைக் குறிக்கும் படர்க்கை நிலைகளை "Fourth It" எனலாம். <BR/><BR/>இந்நிகழ்வுகள் "நமது" கட்டுக்குள் அடங்குபவை அல்ல ('நமது' கட்டுக்குள் என்னதான் இருக்கிறது).<BR/><BR/>வெறும் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் என்று சுருக்கி விடவும் முடியாது.<BR/><BR/>They can be some unforseen "event" that is a sign of the coming times.<BR/><BR/>கவிதைக்குள் வரும் மழையை (புற உலகில் வரும் மழை அல்ல) இத்தகைய ஒரு "நிகழ்வு" எனக் கொண்டால், அது எதற்குரிய குறித்தலாக (sign) வருகிறது?<BR/><BR/>கவிதைக்குள் வரும் மழை என்கிற "நிகழ்வு" "நான் தவறவிட்ட தருணங்களை" நினைவூட்டுவதாக அமைகிறது.<BR/><BR/>கவிதைக்குள் வரும் மழையும், "நான் தவறவிட்ட தருணங்களும்" நிகழில் (present)அமைந்திருக்கின்றன.<BR/><BR/>"நிகழின்" (present) ஒரு "நிகழ்வு" (event) கடந்த காலங்கள் (past) குறித்த நினைவுக் கிளர்த்தலாக அமைகிறது.<BR/><BR/>ஆனால், அந்தக் கடந்த கால நினைவுகள் எவை என்ற குறிப்பு கவிதைக்குள் இல்லை. <BR/><BR/>சில குறிப்பிட்ட நினைவுகளைக் கவிதை குறிக்கவில்லை (ரசனைவாத வாசிப்பு இந்த நினைவுகளை காதல் நினைவுகள் என்று கற்பனை செய்து கொள்கிறது.)<BR/><BR/>"நிகழுக்குள்" (present) பொதிந்து கிடக்கும் "பொதுவான அல்லது ஒட்டுமொத்த கடந்த காலங்களைப்" பற்றிய, அதாவது, "மெய்மையான ஒரு கடந்த காலத்தைப்" (virtual past) பற்றிய குறிப்பாக கவிதைக்குள் வரும் "தருணங்களை" கொள்ள இடமிருக்கிறது.<BR/><BR/>இந்த "மெய்மையான கடந்த காலத்திலிருந்து" (virtual past) ஒவ்வொரு தனிப்பட்ட தருணங்களைக் கிளர்த்துவையாக அமைபவை ஒவ்வொரு சொட்டு நீர்த்துளியும் (ஒவ்வொன்றும் ஒரு நிகழ்வு). <BR/><BR/>"முன்வாசல் மரங்களின் <BR/><BR/>இலைகளிருந்து <BR/><BR/>துளித்துளியாய்ச் சிந்தும் <BR/><BR/>நீர்த்துளிகள்" <BR/><BR/>ஆக, கவிதையை மழை எனும் ஒரு நிகழ்கால நிகழ்வு கிளர்த்தும் மெய்மையான கடந்த காலமும், அதோடு இயைந்து, மழை பொழிந்து முடிந்து, இலைகளிலிருந்து சொட்டும் சிறு சிறு நீர்த்துளியான மற்றொரு நிகழ்வும் கிளர்த்தும் தனிப்பட்ட கடந்த கால நிகழ்வுகள் குறித்த சுட்டுதலாகவும் வாசித்துப் பார்க்கலாம்.<BR/><BR/>சுருங்கக் கூறினால், கவிதை காலம் குறித்தது. காலத்தின் அடுக்குகள் குறித்து உணர்வுத் தளத்தில் சிந்திக்கத் தூண்டுவது.<BR/><BR/>ஆகக் கடைசியில், ரசனாவாத விமர்சனம் வந்து சேரக்கூடிய அதே முடிவிற்கு வந்து சேரும் வாசிப்பு :)<BR/><BR/>கவிதையை எழுதிய காயத்ரியோ அல்லது வேறு வாசகர் ஒருவரோ இதையே, <BR/><BR/>"நினைவுகளை அசை போடுவதை, ஒரு இரவுப் பொழுது மழையை வைத்து எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்" <BR/><BR/>என்று எளிதாகச் சொல்லிப் போய்விடலாம்தான்.<BR/><BR/>ஆகையால், மெலுள்ள வாசிப்பை நிகழ்த்தும் ஒரு வாசகருக்குக் கிடைக்கும் அனுபவம் இதைவிடவும் ஆழமானதாக இருக்குமா என்ற கேள்வியை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவதே நல்லதெனப் படுகிறது.<BR/><BR/>இந்த வாசிப்பை முன்வைத்து, எழுப்ப முனையும் கேள்விகள்:<BR/><BR/>1) கவிதைக்குள் உள்ள மொழி, அது கட்டமைக்கும் நிகழ்வுகள் சில வாசிப்புகளைக் கோருகின்றனவா இல்லையா?<BR/><BR/>2)ஆசிரியன் இறந்து விட்டான் என்ற கருத்துகோளால், வாசகர் (ideal reader/critic) எத்தகைய வாசிப்பை வேண்டுமானால் தந்து கொண்டிருக்கலாமா?<BR/><BR/>3) வேறு வகையில் கேட்பதென்றால் unlimited semiosis என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறோமா அல்லது அதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு என்பதை அங்கீகரிக்க போகிறோமா?<BR/><BR/>4) வாசகர் தம் விருப்பத்திற்கு ஏற்றவாரு பிரதிக்கு அர்த்தம் தந்து கொண்டே போகலாமா அல்லது பிரதிக்குள் அது சாத்தியப்படுத்தும் அர்த்தங்களுக்கு, இடம் - காலம் - வாசிப்பு சூழல் சார்ந்து சில எல்லைகள் இருக்கின்றனவா?<BR/><BR/>மன்னியுங்கள் ஜமாலன், எழுந்த சில கேள்விகளைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இவ்வளவு நீண்டுவிட்டது :) இரண்டாவது கேள்வியைச் சுருக்கமாக கேட்டுவிடுகிறேன்.<BR/><BR/><BR/>பதிவில் ஒரு இடத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்:<BR/><BR/>"வேட்கை என்பது ஒரு குறை. அதாவது குறை இருந்தால்தான் அதை நிறைவு செய்ய வேண்டிய விருப்பம் ஏற்படும். அந்த விருப்பமே வேட்கையாக மாறுகிறது."<BR/><BR/>இது குறித்த எனது புரிதல் வேறு விதமானது.<BR/><BR/>வேட்கை என்பது குறையிலிருந்து எழுவது என்ற கருத்தமைவு, நான் அறிந்தவரையில் உளவியல் சார்ந்து லக்கான் - லிருந்தும் தத்துவம் சார்ந்து Hegel - லிலிருந்தும் எழுந்தவை.<BR/><BR/>இதற்கு மாற்றாக, நீட்ஷே, தெல்யூஸ் போன்றவர்கள் வேட்கை என்பதை "over flowing fullness", என்பதன் வெளிப்பாடாக கருத்தமைவு செய்திருக்கிறார்கள்.<BR/><BR/>அவை குறித்த தங்களது பார்வைகள் என்ன?<BR/><BR/>அறிய ஆவலாக இருக்கிறேன்.<BR/><BR/>என்றாலும் மீண்டும் மன்னியுங்கள் ... <BR/><BR/>திரும்பவும் இதே போன்ற நீண்ட பகிர்தலொன்றை இங்கு செய்வது தற்சமயம் எனக்கு சாத்தியமில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.<BR/><BR/>தங்களுடைய செறிவான எழுத்துக்கள் வலையுலகில் தொடர வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்<BR/>வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57146281290630688392008-05-08T11:20:00.000+05:302008-05-08T11:20:00.000+05:30டிசே தமிழன் said... //ஜமாலன், கவிதைகளுக்கான விமர்ச...டிசே தமிழன் said... <BR/><BR/>//ஜமாலன், கவிதைகளுக்கான விமர்சனங்கள் செய்வதற்கான காலம் போய்விட்டட்தென குரல்கள் எழுப்பப்படும் நேரம் ஈழக்கவிதைகள், தமிழகக்கவிதைகள் என்ற இரண்டு பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பது மனதுக்கு உவப்பாக இருக்கின்றது. //<BR/><BR/>கவிதைகளே செத்துவிட்டது என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படாததற்கு மகிழச்சியடைய வேண்டும் முதலில். காரணம் கவிதைகள் ஒழுங்கமைக்கப்பட்ட மொழியால் எழுதப்படுவதாகவும் அவை மத உணர்விற்கு நெருக்கமானவையாகவும் உள்ளது. மத உணர்வே இன்றைக்கான கலை உணர்வாக உள்ளது என்பதான சில கற்பிதங்கள் எனக்கும் உண்டு. இது குறித்து கவிதையும் சிதைவாக்கமும் என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் 90-களில். அவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதை இக்கட்டுரைகள் எழுதும்போது உணர்ந்தேன்.<BR/> <BR/>//நீங்கள் - காயத்ரியின் கவிதையை முன்வைத்து - உங்களுக்கான வாசிப்பை உருவாக்கியது போலத்தான் கவிதைகளை அணுகி நாம் அவற்றின் மீதான எமது பார்வைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டு நாம் நமது வாசிப்பைக் கோரும் பிரதிகளை முன்வைக்கின்ற காலகட்டத்திலிருக்கிறோம் போலும்.//<BR/><BR/>உங்கள் கருத்து சரியானதே. ஆசிரியன் இறந்துவிட்டான் என்பதை ஆசிரியனாக தன்னை நிறுவிக் கொள்ளும் எழுத்து இயந்திரத்தின் “தானை“ குறித்ததாகவே நான் கருதுகிறேன். நான் ரோலான் பர்த் அதிகம் வாசித்ததில்லை. தனிமனிதனாக கருதி எழுதும் ஆசிரியன் தன்னை எழுத்தின் மையமாக கருதிக்ககொள்ளும் ஆசிரிய முதன்மைவாதத்திற்கு எதிரானதாகவே அக்கூற்றை நான் கருதிக்கொள்கிறேன். அவனது படைப்பிற்குப் பிறகு அந்த ஆசிரியனே ஒரு வாசகனாக மாறிவிடுகிறான் என்பதே. (இதுகுறித்து எனது ”யதார்த்தவாதம் எனும் பாசிச வேர்களில்” என்ற கட்டுரையில் விவாதித்துள்ளேன்.அது எனது பதிவில் மீள்பதிவும் செய்ய்ப்பட்டுள்ளது. வாய்ப்பிருப்பின் பாருங்கள்.http://jamalantamil.blogspot.com/2008/02/blog-post_25.html )<BR/><BR/>//மற்றது, மற்ற ஊடகங்களில் ஒரே மாதிரியான, ஒரே குறிப்பிட்ட கவிஞர்களின் (சிற்றிதழ்களில் கூட) கவிதைகள் வெளிவந்து, கவிதை வாசித்தல் மீது சலிப்பு கவிழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வலைப்பதிவுகளில் வந்த சிலரது கவிதைகள் அந்தச் சோர்வை நீக்கியிருந்தன என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். நன்றி.//<BR/><BR/>உண்மைதான். நான் கவிதைகள் வாசித்து பல வருடங்கள் ஆகிறது. வலைப்பதிவிற்கு வந்தப்பிறகே கவிதைகள் வாசிக்கிறேன். அந்தவகையில் என்னை பாதித்த கவிஞர்கள் அறிமுகமே அது.<BR/><BR/>நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80590481255065917792008-05-07T21:07:00.000+05:302008-05-07T21:07:00.000+05:30ஜமாலன், கவிதைகளுக்கான விமர்சனங்கள் செய்வதற்கான கால...ஜமாலன், கவிதைகளுக்கான விமர்சனங்கள் செய்வதற்கான காலம் போய்விட்டட்தென குரல்கள் எழுப்பப்படும் நேரம் ஈழக்கவிதைகள், தமிழகக்கவிதைகள் என்ற இரண்டு பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பது மனதுக்கு உவப்பாக இருக்கின்றது. நீங்கள் - காயத்ரியின் கவிதையை முன்வைத்து - உங்களுக்கான வாசிப்பை உருவாக்கியது போலத்தான் கவிதைகளை அணுகி நாம் அவற்றின் மீதான எமது பார்வைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டு நாம் நமது வாசிப்பைக் கோரும் பிரதிகளை முன்வைக்கின்ற காலகட்டத்திலிருக்கிறோம் போலும். மற்றது, மற்ற ஊடகங்களில் ஒரே மாதிரியான, ஒரே குறிப்பிட்ட கவிஞர்களின் (சிற்றிதழ்களில் கூட) கவிதைகள் வெளிவந்து, கவிதை வாசித்தல் மீது சலிப்பு கவிழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வலைப்பதிவுகளில் வந்த சிலரது கவிதைகள் அந்தச் சோர்வை நீக்கியிருந்தன என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62277699836114270712008-05-07T14:40:00.000+05:302008-05-07T14:40:00.000+05:30கோவி.கண்ணன் said... //உங்கள் எழுத்துக்களை தொடர்ந்த...கோவி.கண்ணன் said...<BR/> <BR/>//உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருவதால் தொடர்ந்து எனக்கு பெருமூச்சே வருகிறது.<BR/><BR/>"சிறந்த எழுத்தாளர் ஒருவர் வெகு ஜன ஊடகத்தால், வாசிப்பாளர்களால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்//<BR/><BR/>வெகுசன ஊடகம் என்பது இருப்பதால்தான் நாம் இப்படி சீரியஸ் பேசி காலத்தை ஓட்டுறோம். அதனால் அது கண்டுகொள்ளாமல் இருப்பதே நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழி.<BR/><BR/>உங்கள் ஊக்கத்திற்கும் புரிதலுக்கும் நன்றி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85687494612712935762008-05-07T14:38:00.000+05:302008-05-07T14:38:00.000+05:30பெரிய தம்பி டிபிசீடிக்கு..எனனவச்சி காமெடி கீமெடி எ...பெரிய தம்பி டிபிசீடிக்கு..<BR/><BR/>எனனவச்சி காமெடி கீமெடி எதுவம் பன்னலையே..)))<BR/><BR/>நிங்க என்ன சொல்ல வர்ரீங்க.. புதசெவி....ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28592740110204355342008-05-07T14:22:00.000+05:302008-05-07T14:22:00.000+05:30உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருவதால் தொடர...உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருவதால் தொடர்ந்து எனக்கு பெருமூச்சே வருகிறது.<BR/><BR/>"சிறந்த எழுத்தாளர் ஒருவர் வெகு ஜன ஊடகத்தால், வாசிப்பாளர்களால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்"கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81622071026764757962008-05-07T14:21:00.000+05:302008-05-07T14:21:00.000+05:30நீங்க அவங்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்லவில்லை என்...நீங்க அவங்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்லவில்லை என்றுத் தோணுகிறது ஜமாலன் ஐயா.<BR/><BR/>இப்ப பாருங்க..நான் சொல்லுற மாதிரி சொல்லியிருந்தா அவங்களுக்கு கப்பென்று புரியும்..<BR/><BR/><BR/>////இந்த (கோழிக்கால்)இரண்டுவரிகளை (கோழிக்கால்)ரொமாண்டிசைஸ் (கோழிக்கால்)பண்ணாமல் (கோழிக்கால்)யதார்த்ததில் (கோழிக்கால்)பொறுத்தினால்..<BR/><BR/>இதற்குள் (கோழிக்கால்)ஒடுங்கி கிடக்கும்(கோழிக்கால்) ஒரு (கோழிக்கால்)அமைப்பு (கோழிக்கால்)பாலியல் (கோழிக்கால்)குறித்த(கோழிக்கால்) அவதானிப்பைக் கோருகிறது. (கோழிக்கால்)<BR/>////<BR/><BR/>இப்படிப் போட்டிங்கன்னா தெளிவா படிச்சி புரிஞ்சியிருப்பாங்க...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com