07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 17, 2007

ஒரு சில தனி மலர்கள்

மாலையில் தொடுக்காமல் இருந்தாலும் தங்கள் அழகான வர்ணத்தால் கவர்ந்து இழுக்கும் தனி மலர்களையும் நாம் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம் அவற்றில் சில இன்று:

"மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..."
- எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.

கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள், நகராப் பகல் பொழுதின் கனத்தை என் மேல் அழுத்துகின்றன.
மூச்சுத் திணறி, முனகி, தத்தளித்து, தான் தவித்து இயல்பிற்குத் திரும்புகையில், வெல்ல முடியாத அரக்கனின் நிழலாய் என்னைச் சூழ்கின்றன, காலியான வயிறும், காற்றில் படபடக்கும் வெற்றுப் பாக்கெட்டும்..! காலையின் நீர்த்துளிகள், நிறைத்த வயிற்றின், காலிப் பகுதிகளை மதியத்தின் அகோரப்பசி கொல்கின்றது.
கொம்பு முளைத்த வறுமை - வெறுமை என்னும் தனது ஒரு இடுகையில் எழுதியிருக்கும் பவானி வசந்தக்குமார் சமீபத்தில் வலைப்பதிய ஆரம்பித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் வருங்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளனாக வரமுடியும் என பறைச்சாற்றுகிறார்.


எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும்
உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.
சுருக்கென்று தைக்கும் வரிகளை கொண்டிருக்கும் அந்திமக் காலம் என்னும் கவிதை கணேஷ் குமார் ஜோதிராஜனின் கவிதைத்திறமைக்கு ஒரு சிறிய உதாரணமாகும். தொடர்ந்து தனது கவிதைப் பக்கங்கள் பதிவில் எழுதிவரும் இவர் வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தரவுத் தளம் என்றால் தகவல்களை சேர்த்து வைக்கும் முறை.
* நம் சட்டைப் பை குறிப்பேட்டில் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருப்பதும் தரவுத்தளம்தான். அதிலிருந்து தகவலைப் பெறுவது, புதிய தகவலைச் சேர்ப்பது ஒவ்வொன்றுக்கும் வழிமுறைகள் வைத்திருப்போம்.
* விரிதாள் (spreadsheet) மென்பொருளில் தரவுத் தளம் இருக்கலாம்.
* அல்லது ஒரு உரைக் கோப்பாகக் (text file) கூட வைத்திருக்கலாம்.
தரவுத் தள வடிவமைப்பு என்னும் தொடர்கட்டுரையில் உள்ள இந்த எளிய தமிழ் வரிகளே நம்மை அக்கட்டுரை தொடர் முழுவதையும் படிக்க தூண்டுகிறது. மிக அழகான எளிய தமிழில் கணினி சம்பந்தமான பல சிறந்தக் கட்டுரைகளை மா.சிவக்குமார் தனது பொருள் செய்ய விரும்பு என்னும் பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு அதி முக்கிய சேவையாகும் இது.

கடலில் மட்டும் தான் அலைகள் வருமா? மலர்ச்செடிகள் காற்றில் ஆடுகையில் அவற்றிலிருந்தும் சுகந்தமான அலைகள் வரும். ஆம் 2003 முதல் தொடர்ந்து எழுதிவரும் அருணா சீனிவாசனின் அலைகள் வலைமலர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
"எங்களது சரியான வெளி நாட்டு இந்தியர் வாழ்க்கை; வார இறுதியில் தவறாமல் நண்பர்களுடன் "இந்தியாவைப் பற்ற்யும் அதன் பிர்ச்சனைகளைப் பற்றியும் பேசிவிட்டு - ' இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் - என்கிற ரீதியில்.' முடியும். ஆனால் இத்தனைக்கு அடியிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அடுத்த நாளைப் பற்றி யோசிக்காமல் தொலை தூரத்தில் மனப் பார்வையை ஓட விட்டால், ஏதோ ஒரு வெறுமை தெரிந்தது. அந்த உண்மை முகத்தில் அறைவதுபோல் இருந்தது." என்று தனது ஒரு பதிவில் எழுதியிருக்கும் அருணா அவர்கள் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். நிர்வாகவியலைப்பற்றிய அவரது தொடர் கட்டுரை மிகவும் பிரசித்தமானது மேலும் படிக்க Management Mantras


தெருவின் மூலைகளில் பூக்கள்
சுமந்து காத்திருக்கிறார்கள்,
நவீன யுகத்து கண்ணகிகள்
காற்சிலம்பிற்கு பதிலாய் உடலை விற்றபடி...
நள்ளிரவு நகரம் என்னும் கவிதையிலுள்ள இவ்வரிகள் நகரின் நள்ளிரவின் நிதர்சனத்தை படம்பிடித்து காடுகின்றன. இக்கவிதையை எழுதிய கென்னின் திருவிளையாட்டம் பதிவில் உள்ள பல கவிதைகளும் நிதர்சனங்களே.

விரைவில் முடியும்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது