tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3332044891169847840..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தெரியுமா உங்களுக்கு ?தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5734834300363417232014-09-18T15:47:01.917+05:302014-09-18T15:47:01.917+05:30//இ.பு.ஞானப்பிரகாசன் பற்றி இங்கு யாரும் குறை கூற வ...//இ.பு.ஞானப்பிரகாசன் பற்றி இங்கு யாரும் குறை கூற வேண்டாம் அவருடைய தரப்பிலிருந்து பார்க்கும் பொது தவறாக தெரிபவை என்னுடைய தரப்பிலிருந்து தவறாக தெரியவில்லை அதனால் நானும் வருத்தபடவும் இல்லை// - உங்கள் புரிதல் வியப்புக்குரியது! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61143953607669572742014-09-18T15:45:57.620+05:302014-09-18T15:45:57.620+05:30இஃது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக எனக்கும் மகிழ்ச...இஃது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக எனக்கும் மகிழ்ச்சிதான். மக்களிடையே தமிழ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தத்தான் பாலகுமாரன் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் முதல் என்னைப் போல் எளிய பதிவர்கள் வரை தலையால் தண்ணீர் குடித்து வருகிறோம். 'ஒரத்தநாடு கார்த்திக்' போன்ற இலவசத் தளங்களால் அந்த மாற்றத்தை இவ்வளவு எளிதில் ஏற்படுத்த முடியுமானால் அதை விட மகிழ்ச்சி தருவது என்னைப் போன்றவர்களுக்கு வேறு ஏதுமில்லை.<br /><br />ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், 'ஒரத்தநாடு கார்த்திக்' போன்ற வலைப்பூக்களிலிருந்து நூல்களை இலவசமாகப் பெறுபவர்களில் எத்தனை பேர் உங்களைப் போல் மாறுவார்கள் என்பதை நீங்களும் புள்ளி விவரப்படி எடுத்துக்காட்ட முடியாது; எத்தனை பேர் நான் கூறுவது போல் காசு கொடுத்து வாங்கும் வழக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள் என்பதற்கு என்னாலும் கணக்குக் காட்ட இயலாது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73108565356332049162014-09-14T12:05:13.889+05:302014-09-14T12:05:13.889+05:30உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி பூபதி , ந...உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி பூபதி , நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதே போல் பல நண்பர்கள் என்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவிதுள்ளர்கள் .இதுதான் எனக்கு ஊக்கம் நண்பரே .என் மன சாட்சி படி நான் என் பணியை செய்வேன் .<br /><br /> <br /><br />இ.பு.ஞானப்பிரகாசன் பற்றி இங்கு யாரும் குறை கூற வேண்டாம் அவருடைய தரப்பிலிருந்து பார்க்கும் பொது தவறாக தெரிபவை என்னுடைய தரப்பிலிருந்து தவறாக தெரியவில்லை அதனால் நானும் வருத்தபடவும் இல்லை .<br /><br />பூபதி ,பாலா ,ஜெயசங்கர் .சுப்ரமணி அனைவர்க்கும் என்னுடைய நன்றிகள் .<br /><br />என்றும் உங்கள் சேவகன் ,<br /><br />ஒரத்தநாடு கார்த்திக் .ORATHANADUKARTHIKhttps://www.blogger.com/profile/02087868141036738407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73344336546209799562014-09-14T10:57:49.162+05:302014-09-14T10:57:49.162+05:30நான் காலேஜ் முடித்தபிறகும் கூட புத்தகம் படிக்கும் ...நான் காலேஜ் முடித்தபிறகும் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே கிடையாது. எதேச்சையாக இணையதளத்தில் தமிழ் வரலாற்று நாவல் படித்தேன். அதிலிருந்து தமிழ் புத்தகங்களை தேடிப்பிடித்துப் படிக்கிறேன். கிட்ட தட்ட இதுவரைக்கும் 4000 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கியுள்ளேன். இன்னும் வாங்குவேன். என்னைப் பொருத்தவரைக்கும் ஒரத்தநாடு கார்த்திக் போன்றோர் தெரிந்தோ தெரியாமலோ " புத்தகம் படிக்கும் விழிப்புணர்வை " ஏற்படுத்தராங்க. இது என்னுடைய தாழ்மையான கருத்து. <br /><br />பூபதி தங்கராஜ். Anonymoushttps://www.blogger.com/profile/02765893643848979184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15763383340130839882014-09-13T17:35:30.332+05:302014-09-13T17:35:30.332+05:30//ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,...//ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,,, அத்தனையும் இணைய வெளியில் கிடைப்பவையே// - கள்ளக் குறுவட்டை (pirated DVD) உற்பத்தி செய்வதுதான் தவறு; பர்மா பசாரில் வெளிப்படையாக விற்பனைக்கு வைப்பது தவறில்லை என்பது போல் இருக்கிறது!<br /><br />இணையத்தில் நூல்களைப் பகிரும் எல்லோருமே கூறுகிற சமாளிப்புதான் இது. உண்மையில் இந்தச் சமாளிப்பு எதிர்மறையானது. இணையத்தில் வெறுமனே தரவேற்றி வைத்தால் கூட அது வெளியில் யாருக்கும் தெரியாது. கூகுள் போன்ற தேடுபொறிகளில் அவை எளிதில் சிக்கா. ஆனால், அதையே இப்படி வலைப்பூ ஒன்றின் மூலம் சரியான பெயர், அறிமுகம் போன்றவற்றுடன் இணைப்புத் தரும்பொழுது மிக மிக எளிதில் அது பொதுமக்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆகவே, இணையத்தில் நூலைத் தரவேற்றி வைப்பது கூடப் பெரிய பாதிப்பைத் தருவதில்லை; தரவேற்றிய அந்த இணைப்பை இப்படிப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்பொழுதுதான் பாதிப்பே தொடங்குகிறது.<br /><br />தொகுத்ததோ புதியதோ! ஆக மொத்தம், அவருடைய தளத்தில் இத்தனை நூல்கள் இலவசமாக உடனுக்குடன் கிடைக்கும்பொழுது அவற்றை யாராவது காசு கொடுத்து வாங்க முன்வருவார்களா?<br /><br />//இவரால் பதிப்பக துறையே அழிந்துவிடப்போகிறது என்று கூக்குரலிடவேண்டிய அவசியம் இல்லை// - கூக்குரலிட எனக்கு அவசியம் இல்லை என்றால், அதை விமர்சிக்க உமக்கு மட்டும் என்ன அவசியம்?<br /><br />//இவர் நிறுத்திவிடுவதால் நான்கு புத்தகம் கூட விற்றுவிடப்போவதில்லை ஆனர்ல் யாராவது ட்வுண்லோடு செய்து படித்து,,, அதனால் அவருக்கு புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆவல் கூடி வரும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது// - அஃது உமது கருத்து. எனக்கு அப்படித் தோன்றவில்லை என்பதால் நான் அப்படிக் கூறுகிறேன். உமக்கென்ன?<br /><br />//நல்லது செய்யாவிட்டாலும் குறைகூறாதிருப்பது நன்று// - நல்லது எது கெட்டது எது என்பதே தெரியாத இந்தச் சமூகத்துக்கு எதைச் செய்தால் என்ன?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88024400382489114092014-09-13T17:28:29.082+05:302014-09-13T17:28:29.082+05:30கள்ளக் குறுவட்டை (pirated DVD) உற்பத்தி செய்வதுதான...கள்ளக் குறுவட்டை (pirated DVD) உற்பத்தி செய்வதுதான் தவறு; பர்மா பசாரில் வெளிப்படையாக விற்பனைக்கு வைப்பது தவறில்லை என்பது போல் இருக்கிறது ஐயா நீங்கள் சொல்வது!<br /><br />இணையத்தில் நூல்களைப் பகிரும் எல்லோருமே கூறுகிற சமாளிப்புதான் இது. உண்மையில் இந்தச் சமாளிப்பு எதிர்மறையானது. இணையத்தில் வெறுமனே தரவேற்றி வைத்தால் கூட அது வெளியில் யாருக்கும் தெரியாது. கூகுள் போன்ற தேடுபொறிகளில் அவை எளிதில் சிக்கா. ஆனால், அதையே இப்படி வலைப்பூ ஒன்றின் மூலம் சரியான பெயர், அறிமுகம் போன்றவற்றுடன் இணைப்புத் தரும்பொழுது மிக மிக எளிதில் அது பொதுமக்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆகவே, இணையத்தில் நூலைத் தரவேற்றி வைப்பது கூடப் பெரிய பாதிப்பைத் தருவதில்லை; தரவேற்றிய அந்த இணைப்பை இப்படிப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்பொழுதுதான் பாதிப்பே தொடங்குகிறது.<br /><br />தொகுத்ததோ புதியதோ! ஆக மொத்தம், அவருடைய தளத்தில் இத்தனை நூல்கள் இலவசமாக உடனுக்குடன் கிடைக்கும்பொழுது அவற்றை யாராவது காசு கொடுத்து வாங்க முன்வருவார்களா? சிந்தியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10725339249992014812014-09-13T17:16:45.888+05:302014-09-13T17:16:45.888+05:30ஒரு துறையின் உற்பத்தியை இலவசகமாகக் கிடைக்கச் செய்வ...ஒரு துறையின் உற்பத்தியை இலவசகமாகக் கிடைக்கச் செய்வது அவர்கள் பிழைப்பில் மண் போடுவதா அல்லது அதைத் தடுக்க முயல்வது மண் போடுவதா? நீங்கள் நூலை ஒருமுறை முன்னோட்டம் பார்த்துவிட்டுப் பிறகு அதையே காசு கொடுத்து வாங்கிச் சேகரிப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் நூல் சேரிப்பாளர். உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. ஏற்கெனவே படித்ததை மீண்டும் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும், அந்தக் காசுக்கு வேறு ஏதாவது படிக்காத நூலை வாங்கலாமே என்று நினைப்பவர்கள்தாம் கூடுதல். எனவே, ஒரத்தநாடு கார்த்திக் போன்ற தளங்களால் விற்பனை பாதிக்கப்படத்தான் செய்யுமே தவிர, கூடாது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26150544028611176902014-09-13T17:09:11.832+05:302014-09-13T17:09:11.832+05:30அன்பரே! உங்கள் மீது எனக்குச் சினம் (கோபம்) எதுவும்...அன்பரே! உங்கள் மீது எனக்குச் சினம் (கோபம்) எதுவும் கிடையாது. இணையத்திலோ வெளியிலோ உங்களுக்கும் எனக்கும் பழக்கம், அறிமுகம் கூடக் கிடையாது. அப்படியிருக்க உங்கள் மீது நான் ஏன் சினம் கொள்ள வேண்டும்! அப்படி உங்கள் மீது காழ்ப்புணர்வு ஏதாவது இருந்தால் ராணி காமிக்சு போன்ற அழிந்து போன இதழ்களை நீங்கள் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு நான் ஏன் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்? சிந்தியுங்கள்!<br /><br />நல்ல இதழ்களையும், நூல்களையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால், அதை அந்தந்த இதழாளர்களின், நூலாசிரியர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் தாராளமாகச் செய்யலாமே? அப்படிச் செய்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என இரு தரப்பினருக்குமே புகழும் வருமானமும் கிடைக்கும். அப்படியில்லாமல், எழுத்தாளர்களின் பல நூல்களை நீங்கள் இணையத்திலேயே படிக்கக் கொடுத்துவிட்டால் அந்தக் குறிப்பிட்ட நூல்களின் விற்பனை பாதிக்கப்படாதா? ஒரு நூலை வெளியிடுவது என்பது எப்பேர்ப்பட்ட முயற்சி தெரியுமா? அதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது தெரியுமா? நூலை முதலில் தட்டெழுத வேண்டும்; பிறகு, கண் வலிக்க வலிக்கப் பிழை திருத்த வேண்டும்; பிறகு, நூலை வடிவமைக்க வேண்டும்; பிறகு அதையும் சரி பார்க்க வேண்டும்; இதன் பிறகு அச்சுக்கு அனுப்புதல்; அதன் பிறகு விநியோகம்; நூலகக் கேட்பாணை (order); நூலகக் கண்காட்சியில் இடம் பிடித்தல்... - இவ்வளவுக்கும் பிறகு விற்பனை என இத்தனைக்கும் எவ்வளவு பேர், எத்தனை மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது தெரியுமா?<br /><br />தமிழ் இதழ்களோ, நூல்களோ வெளிநாட்டில் கிடைப்பதில்லை என்கிறீர்கள். உண்மைதான். ஆனால், இணையக் கடைகள் மூலம் எல்லா நூல்களுமே உலகெங்கும் இப்பொழுது கிடைக்கின்றன. நூல் உலகம், அமேசான், அது இது என ஏராளமான இணையக் கடைகள் இப்பொழுது வந்து விட்டன. அவற்றின் மூலம் நீங்கள் எந்தத் தமிழ் நூலையும், எந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்ததையும் வீட்டிலிருந்தபடியே எளிதில் வாங்கலாம்.<br /><br />அரசு நூலகங்கள் வெளிநாட்டில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அரசு இணையக் கல்விக்கழகம், ஓபன் ரீடிங் ரூம், மதுரைத் திட்டம் போன்ற இணைய நூலகங்களில் நாட்டுடைமையாக்கப்பட்ட ஏராளமான நூல்கள் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துத் தீர்க்கவே வாழ்நாள் ஒன்று போதாது. அப்படியிருக்க எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இவற்றை நம்பியிருக்கும் ஏராளமானோரைப் பாதிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படாத நூல்களைப் பகிர்வது தேவையா என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன்!<br /><br />அப்படி எத்தனை பேர் உங்கள் தளத்திலிருந்து நூல்களைத் தரவிறக்கிப் படித்துவிடப் போகிறார்கள், ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது தவறு! நானும் தமிழில் எத்தனையோ முன்னணி வலைப்பூக்களைப் படிக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பின்தொடரப்படும் வலைப்பூக்களைக் கூட ஒரே நேரத்தில் மிஞ்சிப் போனால் 4 பேருக்கு மேல் படித்துக் கொண்டிருந்து நான் பார்த்ததில்லை. ஆனால், உங்கள் தளத்துக்கு நான் ஒவ்வொரு முறை வரும்பொழுதும் என்னுடன் சேர்ந்து மேலும் 10, 11 பேர் அதே நேரத்தில் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒரே நேரத்தில் படிப்பவர்கள் எண்ணிக்கையே இத்தனை என்றால், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை எத்தனை, தரவிறக்குவோர் எண்ணிக்கை எத்தனை, ஆக எத்தனையாயிரம் பேர் காசு கொடுக்காமலே குறிப்பிட்ட நூல்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!<br /><br />'நானும் தமிழ் வெறியன்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வெளியில் கிடைக்காத, இனி கிடைக்க வாய்ப்பே இல்லாத பல அரிய இதழ்களும் நூல்களும் உங்கள் தளத்தில் மட்டுமே கிடைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் வருடிப் (ஸ்கேன் செய்து) பதிவேற்ற ஒற்றை ஆளாக உங்களுக்கு எந்தளவுக்கு உழைப்புத் தேவைப்படும், எத்தனை மணி நேரம் தேவைப்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது! இந்த அளவுக்கு வேலை வினைகெட்டு இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் இவற்றைப் பாதுகாப்பதிலும், மக்களுக்குப் படிக்கத் தருவதிலும் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்க வேண்டும் என்பது உங்கள் தளத்தைப் பார்க்கும்பொழுதே தெரிகிறது.<br /><br />உங்களைக் குறை சொல்வது என் நோக்கம் இல்லை. நீங்கள் நல்லது செய்வதாக நினைத்துச் சில கெடுதல்களையும் சேர்த்துச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதே என் அவா! இப்பொழுது கூட, விற்பனையில் இல்லாத நூல்களையும், இதழ்களையும் தவிர மற்றவற்றை உங்கள் தளத்திலிருந்து நீக்கி விட்டால் உங்கள் தளத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களில் நான்தான் முன்னணியில் இருப்பேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89340008249546391452014-09-13T13:51:17.049+05:302014-09-13T13:51:17.049+05:30ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,,,...ஒரத்தாநாடு கார்த்திக் செய்வது ஒரு தொகுப்புதான்,,,, அத்தனையும் இணைய வெளியில் கிடைப்பவையே,,, அதற்காக அவரை பாராட்டுகிறேன்<br /> இவரால் பதிப்பக துறையே அழிந்துவிடப்போகிறது என்று கூக்குரலிடவேண்டிய அவசியம் இல்லை,,,, இவர் நிறுத்திவிடுவதால் நான்கு புத்தகம் கூட விற்றுவிடப்போவதில்லை ஆனர்ல் யாராவது ட்வுண்லோடு செய்து படித்து,,, அதனால் அவருக்கு புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆவல் கூடி வரும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது,,,,, நல்லது செய்யாவிட்டாலும் குறைகூறாதிருப்பது நன்று கார்த்திக்கின் முயற்சிக்கு பாராட்டுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83407144443508747612014-09-08T02:01:04.057+05:302014-09-08T02:01:04.057+05:30இங்கே இன்னொரு விசயத்தையும் தெரிவிக்க விரும்புகின்ற...இங்கே இன்னொரு விசயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரத்தநாடு கார்த்திக் அவர்கள் அளிப்பது ஏற்கனவே, இணையத்தில் கொட்டிகிடக்கும் நாவல்களின் ஒரு தொகுப்பு நிலையமே என்றால் அது மிகையாகாது. இங்கே இருக்கும் நாவல்கள் நூல்களில் 98% இணையத்தில் ஏற்கனவே பலரால் தரவேற்றம் செய்யப்பட்டவைதான். இவருடைய வலைச்சரத்தை நான் ஒரு தொகுப்பு நூலகமாக மட்டுமே பார்க்கின்றேன்.Jayashankarhttps://www.blogger.com/profile/06560313595977149146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87721690967932993182014-09-07T00:29:58.384+05:302014-09-07T00:29:58.384+05:30நான் இந்திரா சௌந்தராஜன் நாவல்களின் பிரியன் எனது ஊர...நான் இந்திரா சௌந்தராஜன் நாவல்களின் பிரியன் எனது ஊரில் அந்த நாவல்கள் கிடைப்பதில்லை. அதனால் இங்கு கிடைக்கும் நாவல்களை டவுன்லோட் செய்து படித்து கொண்டிருக்கிறேன் மற்றும் நல்ல நாவல்கள் அனைத்தையும் படித்துவிட்டு பின் நல்லா இருந்தால் அதை வாங்கி சேகரித்து கொண்டிருக்கிறேன். முன்னோட்டம் பார்க்க மட்டுமே நான் அவர் வலைப்பூவில் இருந்து டவுன்லோட் செய்கிறேன், ஏதோ இந்த மாதிரி நல்லவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்கிற சந்தோசம் அதில் ஏன் அண்ணே மண்ன போடுறிங்க :\Dayahttps://www.blogger.com/profile/03497513822418146807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72198578763125484882014-09-06T23:42:40.724+05:302014-09-06T23:42:40.724+05:30ராஜபாட்டை - ராஜா சார் ஏன் நீங்க இனிமேல் இது போல் த...ராஜபாட்டை - ராஜா சார் ஏன் நீங்க இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று சொல்றீங்க ? இப்பவே அதற்கு முடிவு கட்ட வில்லையா? நீங்கள் உடனே என்னுடைய தளத்தின் அறிமுக பகுதியை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . ஏன் என்றால் தமிழுக்கு துரோகம் செய்பவர்கள் என்றுமே அழிய வேண்டும் அல்லவா ? இனிமேலாவது தமிழுக்கு நல்லது செய்பவர்களை அறிமுகம் செய்யுங்கள் சார் . <br /><br />நீங்கள் உங்களுக்கு தெரியுமா ? என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக தமிழுக்கு நல்லது செய்பவர்களை உங்களுக்கு தெரியுமா என்று பதிவுலக நல்லவர்களை அறிமுகம் செய்யுங்கள் .நன்றி சார் ....என்னால் உங்கள் தளமும் ஆசிரியர்களுக்கும் அவ பெயர் ஏற்பட்டதை நினைத்து வருத்ததுடன் விடை பெறுகிறேன் .ORATHANADUKARTHIKhttps://www.blogger.com/profile/02087868141036738407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45248257651124684862014-09-06T22:58:19.201+05:302014-09-06T22:58:19.201+05:30அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோப...அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோபமோ தெரிய வில்லை .அந்த சமயத்திலும் என்னை பாராட்டி எழுதிருக்கிறார் அதற்கு என்னுடைய நன்றி .உங்களின் எதிர்புக்கும் நன்றி .ஏன் என்றால் உங்கள் கோபம் நியமானது .தப்பு எங்கு நடக்கவில்லை 150 கோடி எடுத்த படம் முதல் ஷோ முடிந்த உடனே இணையத்தில் 1 லட்சம் பேர் டவுன்லோட் செய்கிறார்கள் அங்கு தப்பு நடக்க வில்லையா ? அது காப்புரிமை செய்ய படவில்லையா ? அது தமிழ் மொழி இல்லையா ? அதை நம்பி 1000 இல்லை ,லட்சம் தொழிலார்கள் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? அது தொழில், வணிகம், ஊடகம், தொழில்நுட்பம், அறிவியல் என்ற வகையை குறிப்பது இல்லையா ? அது திரை உலகுக்குக் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லையா ?இது போல தவறுகளை கூறி கொண்டே போகலாம் ,தவறு எங்கு நடக்கவில்லை 5 ரூபாய் பான்பராக் இலிருந்து 90 ரூபாய் அரசு மதுபானம்(tasmac ) வரை தவறு நடக்கிறது .<br /><br /> <br /><br />இதற்காக நான் செய்வதை சரி என்று கூறவில்லை .நான் கொடுக்கும் இதழ்களை 1000 பேர் கூட டவுன்லோட் செய்ய மாட்டார்கள் .நீங்கள் சொல்வது போல அரசு நூலகம் வெளிநாட்டில் இல்லை , குடும்பத்தை பிரிந்து தனிமரமாக நிற்கும் வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு தின செய்திதாள் , வார இதழ்கள் மற்றும் நாவல் எதுவும் கிடைபதில்லை அவர்களுக்காக தொடங்க பட்ட தளமே இந்த ஒரத்தநாடு கார்த்திக் .<br /><br /> <br /><br />நான் ஒன்று கூற விரும்புகிறேன் இந்த நாவல்களை என்னுடைய வலைத்தளத்தில் கொடுக்கவில்லையெனில் மக்கள் யாரும் வரிசையில் நின்று நூலகத்தில் வாங்குவது கிடையாது . உங்களுக்கு எத்தனை நாவல் ஆசிரியர்களை தெரியும் ? சிறியவர் ,பெரியவர் எல்லாருக்கும் எத்தனை நாவல் ஆசிரியர்கள் தெரியும் எல்லாருக்கும் தெரிந்தது சுஜாதா ,பால குமாரன் மற்றும் ராஜேஷ்குமார் மட்டுமே இது என்னுடைய குற்றம் கிடையாது .அதே போல தமிழ் வார இதழ்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டு பாருங்கள் எல்லாரும் சொல்வாங்க அதற்கு என்ன காரணம் அதுவும் என்னுடைய குற்றம் கிடையாது . நான் என்னுடைய வலைத்தளத்தில் நாவல்கள் கொடுத்தது பிரபலமான நாவல் ஆசிரியர்களின் சிறந்த நாவல்களின் தொகுப்பு மட்டுமே . இதை இந்த நாவல் ஆசிரியர்களையும் இந்த நாவல்களையும் எத்தனை நண்பர்கள் புதியதாகவும் , பிடித்து போய் கூட டவுன்லோட் செய்திருக்கலாம் .என்னால் எத்தனை நாவல் ஆசிரியர்களின் திறமைகள் நண்பர்கள் படித்ததன் மூலம் அது வெளி கொணர பட்டுள்ளது .நான் எப்போதுமே என்னுடைய மனசாட்சிக்கு கட்டுபட்டவன் நான் தமிழுக்கு துரோகம் இளைத்தவன் இல்லை இனியும் இல்லை என்னால் நாவல் ஆசியர்களின் திறமை உலகுக்கு உணர்த்துவதன் நோக்கம் மட்டுமே இதை எத்தனை பேர் படித்து விட்டு நூலகத்திற்கு சென்று பிடித்த நாவல் ஆசியர்களின் நாவல் புதியது என்ன வந்திருக்கு என்று உண்மையான ஓவ்வொரு தமிழனும் கேட்பான் .......<br /><br /><br /><br />டிஸ்கி 1 : அம்மா உணவகம் வந்துட்டு டா அங்க இட்லி 1 ருபாய் தெரியுமா ?<br /><br />டிஸ்கி 2: அப்படியா எல்லா உணவகத்தையும் மூடிடு வாங்கடா ..<br /><br />டிஸ்கி 1: அப்படியெல்லாம் மூடிட மாட்டங்க<br /><br />டிஸ்கி 2: என் அப்படி சொல்றே ?<br /><br />டிஸ்கி 1: எல்லார்க்கும் ஒரு டேஸ்டு இருக்கு மச்சி .<br /><br />டிஸ்கி 2: அதுவும் சரிதாண்ட நானும் அங்க கம்மியா கொடுக்குறாங்க அப்படின்னு நினைச்சிகிட்டு போனேன் ஆனா எனக்கு என்னவோ நம்ம<br /><br />ரா க்கா யி சுடுற இட்லி தான் மாப்பு எனக்கு புடிச்சிருக்கு .<br /><br />டிஸ்கி 1: இத புரிய வைக்கிறது எவ்வளவு கஷ்டம்டா சாமியோ ......<br /><br />டிஸ்கி 2: அத விடுடா ஐ படத்தோட teaser யூ tubela யாரோ திருட்டு தனமா upload பண்ணியிருகானமே வாடா பார்போம் .<br /><br />டிஸ்கி : திரும்பவும் முதல்லேந்தா ............................<br /><br />இது யார் மனதையும் புண் படுத்துவதன் நோக்கம் அல்ல .உண்மை உலகு அறிய வேண்டும் நானும் தமிழ் வெறியன் அய்யா ...........<br /><br /> <br />உங்கள் மனது புண் படும் படி நான் கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் சார் .<br />ORATHANADUKARTHIKhttps://www.blogger.com/profile/02087868141036738407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77460015021291870472014-09-06T22:55:06.453+05:302014-09-06T22:55:06.453+05:30அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோப...அய்யா ,ஞானப்பிரகாசன் அவர்களுக்கு என் மேல் என்ன கோபமோ தெரிய வில்லை .அந்த சமயத்திலும் என்னை பாராட்டி எழுதிருக்கிறார் அதற்கு என்னுடைய நன்றி .உங்களின் எதிர்புக்கும் நன்றி .ஏன் என்றால் உங்கள் கோபம் நியமானது .தப்பு எங்கு நடக்கவில்லை 150 கோடி எடுத்த படம் முதல் ஷோ முடிந்த உடனே இணையத்தில் 1 லட்சம் பேர் டவுன்லோட் செய்கிறார்கள் அங்கு தப்பு நடக்க வில்லையா ? அது காப்புரிமை செய்ய படவில்லையா ? அது தமிழ் மொழி இல்லையா ? அதை நம்பி 1000 இல்லை ,லட்சம் தொழிலார்கள் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? அது தொழில், வணிகம், ஊடகம், தொழில்நுட்பம், அறிவியல் என்ற வகையை குறிப்பது இல்லையா ? அது திரை உலகுக்குக் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லையா ?இது போல தவறுகளை கூறி கொண்டே போகலாம் ,தவறு எங்கு நடக்கவில்லை 5 ரூபாய் பான்பராக் இலிருந்து 90 ரூபாய் அரசு மதுபானம்(tasmac ) வரை தவறு நடக்கிறது .<br /><br /> <br /><br />இதற்காக நான் செய்வதை சரி என்று கூறவில்லை .நான் கொடுக்கும் இதழ்களை 1000 பேர் கூட டவுன்லோட் செய்ய மாட்டார்கள் .நீங்கள் சொல்வது போல அரசு நூலகம் வெளிநாட்டில் இல்லை , குடும்பத்தை பிரிந்து தனிமரமாக நிற்கும் வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு தின செய்திதாள் , வார இதழ்கள் மற்றும் நாவல் எதுவும் கிடைபதில்லை அவர்களுக்காக தொடங்க பட்ட தளமே இந்த ஒரத்தநாடு கார்த்திக் .<br /><br /> <br /><br />நான் ஒன்று கூற விரும்புகிறேன் இந்த நாவல்களை என்னுடைய வலைத்தளத்தில் கொடுக்கவில்லையெனில் மக்கள் யாரும் வரிசையில் நின்று நூலகத்தில் வாங்குவது கிடையாது . உங்களுக்கு எத்தனை நாவல் ஆசிரியர்களை தெரியும் ? சிறியவர் ,பெரியவர் எல்லாருக்கும் எத்தனை நாவல் ஆசிரியர்கள் தெரியும் எல்லாருக்கும் தெரிந்தது சுஜாதா ,பால குமாரன் மற்றும் ராஜேஷ்குமார் மட்டுமே இது என்னுடைய குற்றம் கிடையாது .அதே போல தமிழ் வார இதழ்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டு பாருங்கள் எல்லாரும் சொல்வாங்க அதற்கு என்ன காரணம் அதுவும் என்னுடைய குற்றம் கிடையாது . நான் என்னுடைய வலைத்தளத்தில் நாவல்கள் கொடுத்தது பிரபலமான நாவல் ஆசிரியர்களின் சிறந்த நாவல்களின் தொகுப்பு மட்டுமே . இதை இந்த நாவல் ஆசிரியர்களையும் இந்த நாவல்களையும் எத்தனை நண்பர்கள் புதியதாகவும் , பிடித்து போய் கூட டவுன்லோட் செய்திருக்கலாம் .என்னால் எத்தனை நாவல் ஆசிரியர்களின் திறமைகள் நண்பர்கள் படித்ததன் மூலம் அது வெளி கொணர பட்டுள்ளது .நான் எப்போதுமே என்னுடைய மனசாட்சிக்கு கட்டுபட்டவன் நான் தமிழுக்கு துரோகம் இளைத்தவன் இல்லை இனியும் இல்லை என்னால் நாவல் ஆசியர்களின் திறமை உலகுக்கு உணர்த்துவதன் நோக்கம் மட்டுமே இதை எத்தனை பேர் படித்து விட்டு நூலகத்திற்கு சென்று பிடித்த நாவல் ஆசியர்களின் நாவல் புதியது என்ன வந்திருக்கு என்று உண்மையான ஓவ்வொரு தமிழனும் கேட்பான் .......<br /><br /><br /><br />டிஸ்கி 1 : அம்மா உணவகம் வந்துட்டு டா அங்க இட்லி 1 ருபாய் தெரியுமா ?<br /><br />டிஸ்கி 2: அப்படியா எல்லா உணவகத்தையும் மூடிடு வாங்கடா ..<br /><br />டிஸ்கி 1: அப்படியெல்லாம் மூடிட மாட்டங்க<br /><br />டிஸ்கி 2: என் அப்படி சொல்றே ?<br /><br />டிஸ்கி 1: எல்லார்க்கும் ஒரு டேஸ்டு இருக்கு மச்சி .<br /><br />டிஸ்கி 2: அதுவும் சரிதாண்ட நானும் அங்க கம்மியா கொடுக்குறாங்க அப்படின்னு நினைச்சிகிட்டு போனேன் ஆனா எனக்கு என்னவோ நம்ம<br /><br />ரா க்கா யி சுடுற இட்லி தான் மாப்பு எனக்கு புடிச்சிருக்கு .<br /><br />டிஸ்கி 1: இத புரிய வைக்கிறது எவ்வளவு கஷ்டம்டா சாமியோ ......<br /><br />டிஸ்கி 2: அத விடுடா ஐ படத்தோட teaser யூ tubela யாரோ திருட்டு தனமா upload பண்ணியிருகானமே வாடா பார்போம் .<br /><br />டிஸ்கி : திரும்பவும் முதல்லேந்தா ............................<br /><br />இது யார் மனதையும் புண் படுத்துவதன் நோக்கம் அல்ல .உண்மை உலகு அறிய வேண்டும் நானும் தமிழ் வெறியன் அய்யா ........... <br /><br /> <br />உங்கள் மனது புண் படும் படி நான் கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் சார் .<br />ORATHANADUKARTHIKhttps://www.blogger.com/profile/02087868141036738407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2661783957504369042014-09-06T19:14:56.340+05:302014-09-06T19:14:56.340+05:30தவறாக எடுத்துக் கொள்ளாமல் கருத்தை ஏற்றுக் கொண்டதற்...தவறாக எடுத்துக் கொள்ளாமல் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26356481077102084842014-09-06T18:53:11.749+05:302014-09-06T18:53:11.749+05:30நன்றி நண்பா நன்றி நண்பா rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89024162281551903482014-09-06T18:49:12.438+05:302014-09-06T18:49:12.438+05:30வலைசர பதிவுகள் தணிக்கை செய்யபடுவதில்லை . இதில் வரு...வலைசர பதிவுகள் தணிக்கை செய்யபடுவதில்லை . இதில் வரும் தவறுகளுக்கு அந்த அந்த வார ஆசிரியர்களே பொறுப்பு . இனி இதுபோல நடக்காமல் பார்த்துகொள்கிறேன் . நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11809261933175385922014-09-06T18:47:16.737+05:302014-09-06T18:47:16.737+05:30தங்கள் கருத்துகளுக்கு நன்றி .. தங்கள் கருத்துகளுக்கு நன்றி .. rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84356946067547003152014-09-06T18:45:55.260+05:302014-09-06T18:45:55.260+05:30நன்றி அய்யா நன்றி அய்யா rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41735933495928859752014-09-06T18:45:17.405+05:302014-09-06T18:45:17.405+05:30நானும் நன்றி சொல்லிகொள்கிறேன் நானும் நன்றி சொல்லிகொள்கிறேன் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60069899980808102632014-09-06T18:44:27.174+05:302014-09-06T18:44:27.174+05:30நன்றி அய்யா நன்றி அய்யா rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-248875490077357142014-09-06T18:43:22.459+05:302014-09-06T18:43:22.459+05:30நன்றி குருவே நன்றி குருவே rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38954731901993102472014-09-06T18:41:13.962+05:302014-09-06T18:41:13.962+05:30வருகைக்கு நன்றி சகோ வருகைக்கு நன்றி சகோ rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49720898376644667322014-09-06T18:40:50.531+05:302014-09-06T18:40:50.531+05:30thanksthanksrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20828530180705622042014-09-05T17:41:41.564+05:302014-09-05T17:41:41.564+05:30என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய 'ராஜபாட்ட...என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய 'ராஜபாட்டை ராஜாவுக்கு' என் நன்றி. இது எனக்கு 'நான்காவது' அறிமுகம், வலைச்சரத்தில். மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக, 'ஒரத்த நாடு கார்த்திக்' பற்றி அறியப் பெற்றேன்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.com