07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 2, 2009

கவிஞர்கள் வகை

கவிஞர்கள் இரண்டு வகை

ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....

மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......

ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!


பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!

புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......

மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......

வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......

கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!

உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு

இன்றைய அறிமுகங்கள்


புதிய பதிவர்கள்



மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!




அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்



நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!

சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!



ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!



சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....



மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!
மேலும் வாசிக்க...

Monday, June 1, 2009

முன்னுரையும் என்னுரையும்




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்
என்னை பற்றிய அறிமுகம் ஆசிரியர் சீனா அவர்கள் வழங்கிவிட்ட போதிலும்
இந்த வலைப்பூ உலகத்திற்கு நான் வந்த கதையை கூறிவிடுகின்றேன்.

நான் அதிகம் கதை புத்தகம் படிப்பது தான் வழக்கம் அதுவும் ரமணிசந்திரன் அம்மாவின் 120 புத்தகங்கள் + கல்கியின் பொன்னியின் செல்வன்,சிவகாமியன் சபதம் என கிட்டத்தட்ட 500 புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.அதுவும் இலக்கிய தரமிக்க கவிதைக்கும் எனக்குமான தொலைவு கொஞ்சம் அதிகம் வலைப்பூ உலகத்திற்கு என் நண்பர் சாய்ராபாலாவின் வலைப்பூவிற்கு பின்னூட்டமிடுவதற்காய் நுழைந்தேன் பாலாவின் வழிகாட்டுதலோடு கடந்த ஆறு மாத காலமாக கவிதைகளை எழுதி வருகிறேன்.அதிலும் இந்த தளத்தில் 4 மாதகாலமாக தான் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்....

கவிதை எழுத முக்கிய காரணம் கதை என்றால் அதிகம் தட்டச்சு செய்ய வேண்டும் கவிதை என்றால் பத்தே வரிகளில் முடிந்துவிடும் என்பதே மிக மிக முக்கியமான காரணம்.

அத்தனை கடினமாய் இருந்தது எனக்கு தமிழில் தட்டச்சு செய்வதற்கு பின்பு நான் சந்தித்த சகோதரர் நம் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டும் நம் அண்ணா ஜமால் அவர்கள் தனது யுனிகோட் மூலமாகவும் தன் பின்னூட்டம் மூலமாகவும் எனை மேலும் மேலும் கவிதைகளை எழுத ஊக்கப்படுத்தினார்.

இவர்களே எனதிந்த வலைப்பூ உலகத்தின் ஆசான்கள்
கடல்புறாவின் சகோதரி இந்த வீட்டுபுறா.எனக்கு கவிதை எழுதுவதை விட நல்ல கவிஞர்களின் கவிதைகளுக்கு பின்னூட்டமிட பிடிக்கும் சிலர் எனக்கு பின்னூட்டபுயல் என்ற பெயர் கூட வைத்திருக்கின்றார்கள் ஏதோ நம்மால் முடிந்த அளவு கவிஞர்களை ஊக்குவித்தல்
அவ்வளவுதான் எனது அறிமுகப்படலம் பா இனி எனது கவிதைகளில் சில உங்கள் பார்வைக்காய்

அவளின்றி ஒரு அணுவும் அசையாது....

இதயம் ரணமானது....

அவளோடான என் நாட்கள்.......




தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் தற்குறியாய்

ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளிகளாய்

நினைக்கப்படும் காலமிது தமிழ் நிராகரிக்கப்படும் சூழலில் உள்ளது.

ஆனால் நிராகரிக்கப்படுபவை எல்லாம் நிராயதபாணியல்ல அவைகளே

நிற்பவை நிலைப்பவை..............................

தமிழை சங்கம் வைத்து நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம்


இணைந்து வளர்ப்போம் வாருங்கள்....................................


பிரபல பதிவர்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்!!!!!!!

புதிய பதிவர்களை பற்றிய அறிமுகத்தொகுப்பாய் இருக்கட்டும் எனது பதிவுகள்

நம்மால் இயன்ற அளவு தமிழை வளர்போம்,,,,,,,,,,

புதிய பதிவர்களுக்கு வாய்பளிப்போம்........இங்கு யாரும் எடுத்தவுடன்

வைரமுத்துவாகவோ,வாலியாகவோ முடியாது............

கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை அவர்கள் மேம்படுத்தி கொள்ள

நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் புதிய பதிவர்களுக்கு!!!!!!!!!!!!!


இதோ சில அறிமுகங்கள் இங்கு..........


ஆதவா குழந்தை ஓவியம் எனும் பதிவில் எழுதும் அருமையான கவிஞர்!!!!!!!

கதை கவிதை இலக்கியகட்டுரை என இவரின் படைப்புகள் அனைத்துமே பிரமாதம்.....

இவரின் கவிதைகள் அனைத்தும் ஆழமான வரிகளை உள்ளடக்கியது!!!!!!

அற்புதமான சொற்றொடர் அர்த்தம் பொதிந்த வரிகள்.........ஆம்

இவரின் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை........

கீற்றில் வெளியாகியுள்ள இவரின் கவிதைகள் அத்தனையும் அருமை!!!!!



அ.மு.செய்யது இவரின் கதை தொகுப்பு கவிதை தொகுப்பாய் தான்

என் கண்களுக்கு காட்சியளிக்கின்றது .................

வித்தியாசமான நடை மிகச்சிறந்த படைப்பாளி............

சமீபத்திய பதிவை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது கவிதை தானே.....

சந்தேகமேயில்லை இது தான் கவிதை என்பீர்கள் கவிதையை சற்றே உரை நடை வடிவில்

தந்திருக்கிறார் அவ்வளவு தான் வித்தியாசம் அற்புதமான வரிகள்,ரசனையான வார்த்தைகளின்

வளம் இவரின் பலம்




பதின்மரக்கிளை எனும் வலைப்பூவில் அழகான கவிதைகளை

வழங்கிக் கொண்டிருந்த இவர் சில காரணங்களால்

அந்த வலைப்பூவை இழந்துவிட்டார்!!!!!!!!!!!!

இப்பொழுது ”பென்சில்” எனும் புதிய தளத்தில் தனது கவிதைகளை

எழுதும் இவரின் வலைப்பதிவு என்னை போன்ற புதிய கவிஞர்களிடம்

ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது கவிதை ரசனையாளர்கள் மீண்டும்

இவரின் கவிதை தளத்தை தொடருங்கள் மீண்டும் அவருக்கு ஊக்கமளியுங்கள்!!!!!!!!!!!!!



ஒரே தலைப்பில் 50 கவிதை படைத்த சாதனையாளர்!!!!!!!!!!!!!!!!

இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.....

இவரை பற்றி சொல்லாவிட்டால் கவிதை எனும் அறிமுகம் பொலிவிழக்கும்!!!!!!!

இவரின் கவிதைகளை படித்தால் கல் மனம் கொண்டவர்கள் கூட

தம்மை காதல் வசமிழப்பர்.......

நமது மதிப்பிற்குரிய ”புதியவன்” அண்ணா அவர்கள்............

அவரின் படைப்பில் நான் மிகவும் ரசித்த தேவதைகள் கொண்டாடும் தினம் உங்களுக்காக



ஒரு மிகச்சிறந்த பதிவர்...........குறுகிய காலத்தில் விசுவரூபமாய்

”எழுத்தோசை ”எனும் தளத்தில் தினம் தினம்

கவிதை மழை பொழியும் கவிதாயினி இவர் பெயர் தமிழரசி

தினமும் கவிதை வாசிக்க வேண்டுமா?

கவிதை தொழிற்சாலை எனும் பட்டம் பெற்றிருக்கும்

இவரின் தளத்திற்கு செல்லுங்கள்!!!!!!!

விகடனில் வந்துள்ள இவரின் படைப்புகள் கணக்கிலடங்காதவை!!!!!!

விகடனை தொடர்ந்து தமிழிஷில் தினமும்

ஹிட் கொடுத்துகொண்டிருக்கின்றார்.............

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது