07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 15, 2011

நகைச்சுவை தொகுப்பு 1


வலைப்பூக்களை பார்வையிடுபவர்களில் பெரும்பாலோனர் விரும்புவது நகைச்சுவைப் பதிவுகளே. இவை நம் இறுக்கத்தை குறைத்து மனதை லேசாக்குகின்றன. அப்படிப்பட்டவைகளில் 5 பதிவுகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

முதலில் சீரியசான பதிவுகளை எழுதி வந்த இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு நகைச்சுவையுடன் பதிவுகளை எழுதுகிறார். படிக்க படிக்க புன்னகை பூக்க வைக்கின்ற இவரது பதிவுகள். தன் பெயருக்கான காரணத்தை எவ்வளவு நகைச்சுவையாக சொல்கிறார் பாருங்கள்.

படிக்கும்போதே நல்லா சிரிச்சிகிட்டே படிக்கிற மாதிரியான பதிவுகள் எப்போதாவது காண்போம். அப்படிப்பட்டவைகளின் ஒன்று இப்பதிவு: உன்னைக் கொல்லாம விட மாட்டேன். இவரும் கலவையான விசயங்களை எழுதுகிறார், இவரின் நகைச்சுவைகளும் நன்றாக உள்ளன.


இவர் ஒரு டாக்டர். நல்ல கதை கவிதைகள் எல்லாம் எழுதுவார். இவரின் ஒரு பதிவு ரொம்ப சிரிச்சிகிட்டே படிச்சேன். இவர் எதைச் சொல்ல வந்தாரோ...ஆனால் செம காமெடியா இருந்தது பதிவு.

முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவுகளை எழுதுபவர்களில் இவரும் ஒருவர். ஒரு எழுத்து தேர்வை எவ்வளவு நகைச்சுவயாக சொல்லியிருக்கிறார். இரு பாகங்களையும் படித்துப் பாருங்கள்.

கதை, கவிதை, விமர்சனங்கள், சமூகப் பதிவுகள் என சீரியசான பதிவுகள் எழுதி வந்தாலும் அவ்வப்போது இது போன்ற நகைச்சுவையான பதிவுகளையும் எழுதுவார். இப்பதிவை படியுங்கள் அப்பாவி கணவர்களின் நிலை தெரியும்.

நகைச்சுவை என்பதால் மட்டும் அதற்கு இரு பதிவுகள் வெளியிடுகிறேன். இன்னொன்றிலும் ஐந்து பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.:-)
மேலும் வாசிக்க...

Monday, March 14, 2011

சில தொழிற்நுட்ப வலைப்பூக்கள்



பல விதமான பதிவுகளை எழுதி வந்தபோதும் என்னை அடையாளம் காட்டியது தொழ்ற்நுட்ப பதிவுகளே! இங்கு பலர் எந்த வித பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லாமலேயே அனுபவத்தின் மூல பல தொழிற்நுட்ப விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை மற்றவர்களுக்கு கற்றும் தருகிறார்கள். அப்படிப்பட்ட வலைப்பூக்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

தொழிற்நுட்ப வலைப்பூக்கள்

  தமிழ் CPU
  ந.ர.செ. ராஜ்குமார்
எளிமையாக பல தொழிற்நுட்ப விசயங்களை சொல்பவர்களில் இவரும் ஒருவர். இவரின் தனிச்சிறப்பு புரோக்ராமிங் போன்ற நுட்பமான விசயங்களை கூட எளிய தமிழில் எளிமையாக சொல்லித் தருவதாகும். இவரின் ஜாவா புரோகிராம் அடிப்படைகள் - ஜாவா தொடர் மூலம் சிறப்பாக ஜாவா புரோமிங்கை எளிய முறையில் கற்கலாம்.
  தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
  Varma
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவித எலக்ட்ரானிக் பொருட்கள் எப்படி செயல்படுகிறது என்பது போன்ற விசயங்கள் நமக்கு முழுமையாக தெரிவதில்லை. இவர் அப்படிப்பட்ட விசயங்களை புரியும்படியும் விரிவாகவும் விளக்கியுள்ளார். GPRS என்றால் என்ன? என்ற பதிவின் மூலம் அழகாக் ஜிபிஆர்எஸ் பற்றி விளக்குகிறார். WAP என்றால் என்ன? என்கிற பதிவில் செல்போனில் பயன்படுத்தும் வேப் பற்றி நன்றாக விவரித்துள்ளார்.
   FARHA COOL
   FARHATH
இவரும் ஏராளமான பயனுள்ள தகவல்களை அளிக்கிறார் உதாரணமாக Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..இவர் இது மட்டுமின்றி நகைச்சுவைகளையும் தனது தளத்தில் அளிக்கின்றார்.
 Geetha Tech Blog
   Geetha anjali
சின்ன சின்ன தகவல்களாக பல உபயோகமான தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கின்றார் இவர்.ஏராளமான விசயங்கள் இவர் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஒரு வலைப்பூவில் எவ்வளவு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என அறிய. தொழிற்நுட்ப தகவல்கள் மட்டுமின்றி Geetha's Womens Special மற்றும்News ஆகிய இரு வலைப்பூக்களில் சமூகம் மற்றும் மகளிர் தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார்.
   ::Nishan Archives::
   T.Nishan
தொழிற்நுட்பம், சமூகம் போன்ற கலவையான பிரிவுகளில் எழுதி வரும் இவரின் இந்த தொழிற்நுட்ப பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.மூளையை வளர்க்கும் இணைய தேடல்.இவரின் இக்கட்டுரை [வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம் ] கூட நன்றாக இருந்தது.
   வெட்டிக்காடு
   ரவிச்சந்திரன்
இவர் பெரும்பாலும் சமூகப் பதிவுகளே எழுதுபவர். இருப்பினும் இவரின் இரு தொழிற்நுட்ப பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும் புரியும்படியும் இருந்தன. தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது? மற்றும் இப்பதிவு அடுத்த தலைமுறை கட்டமைப்புகளை பற்றி நன்கு புரிய வைக்கின்றது *3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு
   kuttytamilish
   Thomas Ruban
இவரும் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கை பிரபலப்படுத்த சுலபமான வழி போன்று பல சிறிய சிறிய தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கின்றார். தொழிற்நுட்ப தகவல்கள் மட்டுமின்றி சமூகம் விளையாட்டு சார்ந்த பதிவுகளும் படைப்புகளையும் கூட இங்கே காணலாம். இவர் பங்கு சந்தை பற்றி தனி வலைப்பூவில் எழுதி வந்தார் ஆனால் இடையில் அதைநிறுத்தி விட்டார்.
   தமிழ் கம்ப்யூட்டர்
   இரா.குமரேசன்
இதுவரை சிறிய தகவ்ல்களாக கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட தகவல்களை எளிமையாக அளித்துள்ளார். ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSizeMS-WORD 2007-ல் Greeting Cards உருவாக்குவது எப்படி.. போன்று ஏராளமான தகவல்கள் இவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
   பொன்மலர் பக்கம்
   பொன்மலர்
இவரும் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க மென்பொருள் FileASSASSIN, ஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்கள் போன்று பல நல்ல தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கிறார்.இது தவிர Cute StillsHot Cinema Zoneபோன்ற சில வலைப்பூக்களையும் நடத்தி வருகிறார்.
   Saran R
   சரண்

இவர் ஒரு வெப் டிசைனர். வெப் டிசைனிங், இணையம் , இணையம் வழியே சம்பாதித்தல், வலைப்பூக்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதுகிறார். மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? , கணிணியில் வேலை செய்பவர்களுக்காக ஒரு 20-20மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? போன்று பல விதமான பதிவுகளை எழுதி வருகிறார்.
   அஃகேனம்
   மிதுன்
இவர் தொழிற்நுட்பம், அறிவியல், சமூகம் , படைப்புகள் என பலவித தலைப்புகளில் எழுதுகிறார்.

இவரின் சார்பியல் விதி தொடர்பான அதே நேரம்.. அதே இடம் என்ற பதிவும் HTML பற்றிய தொடரும் என்னைக் கவர்ந்தவை ஆகும். இவர் சமீபகாலமாக எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன்.
   லினக்ஸ் வலைப்பூக்கள்
பெரும்பாலான தொழிற்நுட்ப பதிவுகள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்த்திற்கு மட்டும் பொருத்தமானதாகவோ அல்லது அவற்றை சார்ந்தோ இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க லினக்ஸ்/உபுண்டு ஆபரேடிங் சிஸ்டம் தொடர்பான சில வலைப்பூக்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
மேலும் வாசிக்க...

அறிமுகம்


அனைவருக்கும் வணக்கம்!

என்னை வலைச்சரத்தில் எழுத அழைத்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன்.
வேலைகளுக்கு நடுவே பொழுது போக்குக்காக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்த எனக்கு ஆர்வம் ஏற்பட்டு, சென்ற வருடம் ஜூலை மாதம் மனம்+ வலைப்பூவை தொடங்கினேன். உளவியல் பற்றின விசயங்களை எழுதுபவதற்காகவே மனம்+ என்ற பெயரையே வைத்தேன். கூடவே வேறு ஏதாவது எழுதலாம் என தொழிற்நுட்ப விசயங்களை எழுத ஆரம்பித்து ஒரு முழுமையான தொழிற்நுட்ப பதிவராகி விட்டேன்:-)

தனித்துவமாக எதைப்பற்றியாவது எழுதவேண்டுமென்றுதான் அடோஃப் பிளாஷ் பற்றி எழுத ஆரம்பித்தேன். நிறைய நுட்பங்கள். எல்லாம்  இணையம் வழியே பல இடங்களில் கற்ற விசயங்கள் எளிமையாக புரியும்படி தமிழில் சொன்னவை மட்டுமே.

பின்னர் ஃபோட்டோஷாப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். சமீபத்தில் ஃபயர்வொர்க்ஸ் பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன். இன்னும் பல மென்பொருள்களின் நுட்பங்களைப் பற்றியும் வழிமுறைகளைப் பற்றியும் சொல்ல யோசனையுண்டு. சில மாதங்களாக சரியாக பதிவிட முடியவில்லை. அடுத்த மாதத்திலிலிருந்து பழையபடி பதிவிடுவேன்.

மற்ற விசயங்களை எழுதலாம் என நினைத்தபோது அதற்கு தனி வலைப்பூ தொடங்கலாம் என ஆரம்பித்ததுதான் எதுவும் நடக்கலாம் வலைப்பூ. கதைகள், மற்ற பதிவுகள், கட்டுரைகள் எழுதுகிறேன்.

உலக அழிவை பற்றி பலவித செய்திகள் தகவல்கள் ஆங்காங்கே வந்தவாறு உள்ளன. அவற்றில் அறிவியல் ரீதியாக சொல்லப்படும் காரணங்களை விரிவாக  ஆராய்ந்து தகவல்களை சேர்த்து  உலகத்தின் கடைசி நாள் என்ற பெயரில் ஒரு பிரசண்டேசனாக எழுதினேன். 

பீட்டரும் ரோஸியும் -  நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை. கதைகளில் வித்தியாசம எழுதலாம் என முயற்சித்து எழுதிய கதைதான் கருணை. கதை முழுவதும் ரிவர்ஸிலேயே போகும்படியான ஒரு சிறுகதை இது.
நாவல் எழுதலாம் என மூன்று பாகங்கள் பதிவுலக நண்பர்களின் பெயர்களை வைத்து காலப்புதிர்களை எழுதினேன். பின்னர் இதேபோல் கொஞ்சம் பெரியதாக சினிமா போல ஒரு திரில்லர் கதை சமீபத்தில் எழுதினேன். BLACK RIVER.

மற்றபடி இங்கே இன்னும் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எழுதுவதற்கு பல யோசனைகள் உள்ளன. வேலைப்பளு உடல்நிலை அதற்கேற்ப ஒத்துழைக்க மறுக்கின்றன. இருப்பினும் இன்னும் நல்ல பதிவுகளை படைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த வலைச்சர வாரத்தில் இத்துடன் சேர்த்து 14 பதிவுகள் எழுத எண்ணியுள்ளேன். ஒரு நாளைக்கு 2 வீதம் 7 நாட்களுக்கு போடலாம் என்றிருக்கிறேன். வெவ்வேறு வகைகளில் வலைப்பூக்களையும் அதிலிருந்து ஓரிரு பதிவுகள் பற்றியும் சொல்லப் போகிறேன். தங்கள் ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, March 13, 2011

மிக்க நன்றி ராமலக்ஷ்மீ - வருக எஸ்.கே

அன்பின் பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி ராமலக்ஷ்மி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுஇடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 37 பதிவர்களை அறிமுகம் செய்து, அவர்களீன் நூறுக்கும் மேற்பட்ட இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். முன்னூறுக்கும் மேலான மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பில் பெருமை அடைகிறேன்.

நாளை 14ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் எஸ்.கே. இவரது முழுப் பெயர் சுரேஷ் குமார். இவர் மொழி பெயர்ப்பு வேலைகள் செய்து வருகிறார்.

மனம்+ இதுதான் இவர் முதலில் ஆரம்பித்த வலைப்பூ. உளவியல் படித்திருப்பதால் அதைப் பற்றி எழுதலாம் என்றே இப்பெயருடன் ஆரம்பித்திருக்கிறார். கூட இவர் கற்ற சில கணிணி தொடர்பான தகவல்களை எழுதலாம் என ஃபிளாஷ் பற்றி எழுத ஆரம்பித்து நாளடைவில் ஒரு தொழிற்நுட்ப பதிவராகி விட்டார்.

கதைகள் எழுதும் ஆர்வம் இருந்ததால் அதை எழுதுவதற்காகவும் மற்ற பதிவுகளுக்காகவும் எதுவும் நடக்கலாம் என்ற பெயரில் மற்றொரு வலைப்பூவையும் சில மாதங்களுக்கு பிறகு ஆரம்பித்திருக்கிறார்.

நண்பர் எஸ்.கேயினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
நல்வாழ்த்துகள் எஸ்,கே

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

அணில் சுமந்த கற்களாய்.. நன்றியுடன்.. வலைச்சரம் ஞாயிறு

நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.
அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது