07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 22, 2012

மனம் கவர்ந்த பதிவுகள்



வணக்கம் நண்பர்களே! வலைச்சர புதனில் இன்று என்னைக்கவர்ந்த பதிவுகளின் வழியாக அறிமுகப்பதிவர்களுடன் உங்களை சந்திக்கவருகின்றேன்.எல்லா பதிவுகளை தினம் தினம் வாசித்து வந்தாலும் சிலரது பதிவுகளை வாசித்தவுடன் ஏதோ நமக்கே நடந்தது போன்ற ஓர் உணர்வு வருவது இயற்கையே.அத்தகைய பதிவுகளில் என்னை கவர்ந்த சில பதிவுகளை பூச்சரமாக தொடுத்து உங்களிடம் சமர்பிக்கின்றேன்.

முதலில் சென்னைமண்ணின் சூப்பர் ஸ்டார் சென்னை பித்தன் அவர்களின் அசத்தல் பதிவு. நான்தான் சமையல்காரி அலமேலு.வீட்டுவேலைக்கு செல்லும் தாய்மார்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகிறார்

இவர் நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். சகோதரி ஆமினா  வர்கள் எழுதியதில் பிடித்தது ஆணாதிக்கத்துக்கு காரணம் ஆண்களா? பெண்களா ஒரு பட்டிமன்றமே பதிவுல நடத்திக்காட்டியிருக்கார்.

 அடுத்து காணாமல் போன கனவுகள் வலையெழுதும் ராஜி அக்கா அவர்கள் தன் தந்தை குறித்து எழுதிய நெகிழ்வான பதிவு படித்ததும் ஒரு கணம் விக்கித்தது மனம்.குடும்ப உறவுகளில் தந்தை மகள் பாசத்தின் பிரதிபலிப்பாய் இப்பதிவுடன் உன்வீட்டு சுவற்றில் ஓர் புகைப்படமாய் கவிதையை வாசியுங்களேன்.

ஒரு பெற்றோராக தனது பிள்ளைகளுக்கு உணவு,உடை,இருப்பிடம் கல்வி மட்டும் அளிப்பது கடமையல்ல.பாதுகாப்பான பழக்க வழக்கங்களை சொல்லித்தரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பர்தா போபியா.இதனை அழகுற செதுக்கியவர் சகோதரி ஹுசைனம்மா.

அடுத்து இரவுவானம் சுரேஷ். திருப்பூர்காரர். எப்போதாவது பதிவிடுவார். ஆனாலும் இவரின் பதிவு பேசப்படும். அதில் ஒன்றினைப் பார்ப்போம்.இவரின் நாய்கள் V/S மனிதர்கள் பதிவினை வாசித்து பாருங்களேன்.நண்பர் தொடர்ந்து எழுத அவரது சூழ்நிலைகள் ஓத்துழைக்கட்டும்.

நா. மணிவண்ணன். மதுரைக்காரர்.மதுரை வட்டார வழக்கில் இவர் எழுதுவது சுவாரஸ்யமாக இருக்கும். இவரது பதிவுகளில் மிகவும் கவர்ந்தது அத்த மக ரத்தினமே.நீங்களும் வாசித்துவிட்டு வரலாமே.இப்போது எழுதுவதை வெகுவாக குறைத்து கொண்டது எல்லோருக்கும் வருத்தமே. 

அடுத்தது சேலம் தேவா.இவரது தளம் தேவாவின் தேடுதல்கள்.சர்க்கஸ்.இவரது பதிவு ஒன்று சர்க்கஸ் அனுபவம்.குழந்தை பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுபடுத்துக்கிறது 

அடுத்தது சுடச்சுட அரசியல் பதிவுகளை எழுதும் ரஹீம்கஸாலி. அவரது பதிவுகளில் தொலைபேசி நிறுவனத்தால் அவருக்கு நேர்ந்த கதி பற்றி எடுத்துச்சொல்லி அதற்க்கு தீர்வு காண்கிறார்.இந்த கதி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

அடுத்தது நண்பர் ரெவரி இவரின் வலை மெல்லத்தமிழ் இனி வாழும்.இவருடைய படம் வரைந்து பாகம் குறி தொடர் பிரபலமானவைகளில் ஒன்று.அவரின் புத்தாண்டுத் தீர்மானங்களையும் அதனை அவர் கடைபித்தவிதமும் நம் சார்பாக பதிவிட்ட மாதிரிதான் எனக்குத்தெரிகிறது.

அடுத்தது நண்பர் ஆரூர் முனா செந்தில்.இவர் தோத்தவண்டா என்ற பெயரில் வலை நடத்தி வருகிறார்.சொந்த ஊரின் சுவாரசியத்தினை அழகுற பகிர்ந்துவைத்துள்ளார். நாமும் சென்று பார்த்துவிட்டு வரலாமா..

அடுத்தது நண்பர் கோகுல்மனதில் கோகுல் சமுதாயத்தில் தினம் தினம் காணும் விஷயங்களை கருவாக கொண்டு மனதில் பட்டதை விழிப்புணர்வு பதிவாக வெளியிடுவதில் கெட்டிக்காரர்.தற்சமயம் தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாதிக்கப்பட்ட போது வலையுலக நிதி திரட்டி முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியவர்.இவரின் பதிவு ஒன்று இங்கே குடிகாரன் பேச்சு விடிஞ்சா...?

அடுத்து நண்பர் ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.



பதிவர் அறிமுகம் :

இன்றைய அறிமுகப்பதிவர் திரு S.S பூங்கதிர் அவர்கள்.இவர் பூங்கதிர் போர்ட்டூன்ஸ் என்ற பெயரில் தற்போது வலை நடத்தி வருகிறார்.பிரபல இதழ் பாக்யாவில் எதிரொலி என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது ஊர் திருவிழா பற்றிய கவிதை ஒன்றினை காணலாமே.

அடுத்த அறிமுகப்பதிவர் திரு ராஜ் அவர்கள்.இவர் அரசியல் ஆர்வமுள்ள, சமூக அக்கறை உள்ள,சினிமாவை விரும்பும் ஒரு சராசரி வாலிபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றார்.ஹோலிவுட்ராஜ் என்ற பெயரில் வலையில் இருந்தாலும் விமர்சனம் செய்வது ஹாலிவுட் படங்களே.

அடுத்த அறிமுகப்பதிவர் திருமதி மு.சரளாதேவி அவர்கள்.பெண் என்னும் புதுமை என்ற பெயரில் வலைத்தளம் நடத்திவருகிறார்.கடந்த ஜனவரி முதல் கவிதைகளை எழுதி வருகிறார்.இவரது பதிவில் பெண் என்னும் இலக்கியம் வாசிக்கலாமே. 


நன்றி நண்பர்களே ! நீங்கள் தொடர்ந்து வளமோடும் நலமோடும் எழுத வலைச்சரத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.

மீண்டுமொரு பதிவில் புதிய அறிமுகங்களுடனும் மனதை கவர்ந்த பதிவுகளுடனும் உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


மேலும் வாசிக்க...

Tuesday, February 21, 2012

ப்ளாக்கர் டிப்ஸ் 2012



வணக்கம் அன்பு நெஞ்சங்களே !

நேற்றைய அறிமுகப்பதிவினை சுவாசித்து மகிழ்ந்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இன்று தமிழில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் தேவையான ப்ளாக்கர் டிப்ஸ்களை காண்போம்..இதற்கு முன் கடந்த வருடம் இதே நாளில் அன்பு நண்பர் பிலாஷபி பிரபாகரன் அவர்கள் ப்ளாக்கர் டிப்ஸ் -ஒன் ஸ்டாப் ஷாப் தொகுத்து அளித்திருந்தார்.அதனுடன் இணைந்து இன்று வரை புதியதாய் வந்த ப்ளாக்கர் டிப்ஸ்களை வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் உதவும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் சரமாக தொடுத்துள்ளேன்.

ப்ளாக்கர் டிப்ஸ்

1.ப்ளாக் தொடங்கணுமா ? முற்றிலும் புதியவர்களுக்காக...
http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html

2.உங்க ப்ளாக்கை மேம்படுத்த டாப் டென் டிப்ஸ்
http://ponmalars.blogspot.in/2010/11/tips-for-improve-blogging.html

3.உங்கள் ப்ளாக்கிற்க்கு தேவையான் சிறந்த TEMPLATE
http://www.tamilvaasi.com/2011/09/blog-template.html

4. உங்க ப்ளாக்குக்கு ஏன் டொமைன் வாங்கணும் ?  
http://www.vandhemadharam.com/2011/09/com-net-org.html

5.ப்ளாக்கரிலிருந்தே டொமைன் எப்படி வாங்குவது ?  
http://www.bloggernanban.com/2012/02/how-to-buy-custom-domain.html

6.வாங்கிய DOMAIN ற்க்கு SUB DOMAIN அமைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/4-sub-domain.html

7.ப்ளாக்கிற்க்கு அவசியமான META TAG இணைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/06/search-engine-meta-tag.html

8.பதிவினை PUBLISH பண்ணுவதற்க்கு முன்பு கவனிக்க…
http://www.vandhemadharam.com/2011/12/blog-post_12.html

9.பதிவுகள் AUTO PUBLISH ஆக வேண்டுமா ?
http://www.vandhemadharam.com/2011/03/auto-publish.html

10.பதிவின் தலைப்பை சரியாக தேர்ந்தெடுக்க
http://ponmalars.blogspot.in/2010/11/create-suitable-permalinks-for-blogger.html

11.ப்ளாக்கை பேக்கப் எடுப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/back-up.html

12.உங்களுக்கான GOOGLE GROUP உருவாக்க / NEWS LETTER அனுப்ப…
http://www.karpom.com/2011/08/newsletter.html



13.GMAIL லில் இருந்தே உங்கள் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.thangampalani.com/2011/11/post-to-blogger-from-gmail-gmail-post.html

14.ப்ளாக்கர் முகவரி மாறியதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

15.பதிவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய கூகுள் வெப்மாஸ்டர் டூல்
http://www.bloggernanban.com/2011/09/labs.html

16.ப்ளாக்கரில் READ MORE பட்டன் வைப்பது எப்படி ?
http://www.tamilvaasi.com/2011/10/automatic-read-more-with-thumbnails.html

17.பதிவுகளின் இடையில் கோப்புகளை சேர்க்க
http://wesmob.blogspot.com/2012/01/embed-pdf-doc-docx-ppt-pptx-xls-xlsx.html

18.ஜீமெயில் அக்கவுண்டை இழந்தால் உங்கள் ப்ளாக்கையும் இழப்பீர்கள் மாற்று வழி என்ன ?
http://tipsblogtricks.blogspot.in/2011/05/blog-post_15.html

19.பதிவுகளின் முடிவில் அதன் இணைப்பை வரவழைக்க
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post_9590.html

20.பதிவர்கள் செய்யும் தவறுகள் அதனை திருத்தும் வழிகள்
http://www.vandhemadharam.com/2011/12/2.html


 கமெண்ட் பாக்ஸ் டிப்ஸ்

1.ப்ளாக்கர் பின்னூட்டத்தில் html மொழி பயன்படுத்த
http://ethirneechal.blogspot.in/2012/01/html.html

2. ப்ளாக்கருக்கு அழகான கமெண்ட் பெட்டிகள் வைப்பதற்க்கு
http://vairaisathish.blogspot.in/2011/09/comment.html

3.ப்ளாக்கரில் கமெண்ட் REPLY வசதி ஆக்டிவேட் செய்ய
http://www.vandhemadharam.com/2012/01/comment-reply-threaded-comment-system.html



4.பிளாக்கரின் comment பாக்சில் பதிவின் லிங்க் இணைக்க
http://www.thangampalani.com/2011/12/how-add-your-blogpost-link-comment.html

5.FACEBOOK ஸ்டைலில் கமெண்ட் பாக்ஸ் வைக்க..
http://www.vandhemadharam.com/2011/08/comment-box.html

6.ப்ளாக்கரில் கருத்துரைகளை சுருக்க விரிக்க..
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post.html

7.படத்துடன் கூடிய RECENT COMMENT விட்ஜெட் அமைக்க
http://www.tamilvaasi.com/2012/01/recent-comment-widget.html

8.மறுமொழி வரிசையை தலை கீழாக்க
 http://ethirneechal.blogspot.in/2011/11/comment-sort.html


மேற்படி அறிமுகப்படுத்திய அனைத்து இடுகைகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிமுகம் தேவையில்லை என நினைக்கின்றேன். பொதுவாக நாம் வலையுலகில் என்ன நினைத்து எழுத வருகிறோமோ அதை வாசகர்களிடம் அழகுற கொண்டு செல்ல, இதுபோன்ற தொழில்நுட்பப் பதிவர்கள் செய்யும் உதவிக்கு இந்த நேரத்தில் உங்களின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளவனாகின்றேன்.

நன்றி நண்பர்களே ! தொடரட்டும் உங்கள் நற்பணி..

உறவுகளே ! பதிவின் நீளம் கருதி இந்த சரத்தின் தொடர்ச்சி கூகுள் ப்ளஸ் டிப்ஸ்,பேஸ்புக் டிப்ஸ்,பீட்பர்னர் டிப்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் வெளிவரும்.காத்திருங்கள்.

நட்புடன்
சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

Monday, February 20, 2012

வலைச்சரத்தில் தமிழ்பேரண்ட்ஸ்



வணக்கம் அன்பிற்கினிய பதிவுலக உறவுகளே..இந்தவார வலைச்சர ஆசிரிய பணியை முதல் பதிவாய் சுய அறிமுகத்துடன் தொடங்குகின்றேன்.இந்த வாய்ப்பினை நல்கிய பின்னூட்டப் பிதாமகன் சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த பதிவுலக நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் நிர்வாகி தமிழ்ப்பிரியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

நான் சம்பத்குமார் .சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம்.தற்சமயம் கோவையில் தனியார் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஸ்பேர் பார்ட்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகின்றேன்.பணிச்சுமை போக கிடைக்கின்ற நேரங்களில் நான் கற்றதையும் பெற்றதையும் வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் பகிர்ந்து விட்டுச் செல்ல தமிழ் வலையுலகில் எனது கவிதை கிறுக்கல்களோடு பகிர்ந்து வருகின்றேன்.கடந்த ஜூலையில் பதிவுலகில் தமிழ்பேரன்ட்ஸ் வலைத்தளம் ஆரம்பித்து இன்று வரை சுமார் 130 பதிவுகளை கடந்து இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.சென்ற செப்டம்பர் முதல் CUTEPARENTS என ஆங்கிலத்தளமும் ஆரம்பித்து அதிலும் பதிவுகளை தொடர்ந்து கொண்டுள்ளேன்.பதிவுகளில் பெரும்பாலும் குடும்ப உறவுகளில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள விஷயங்களை பதிவாக பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.


குழந்தைகளின் வளர்ப்புமுறை சரியில்லையென்றால் அவர்களின் பாதை தவறாகப் போய்விடுகிறது.அதே சமயத்தில் அவர்களின் வழிகாட்டல் சரியாக இருந்தால் சாதனைகளாக மாறிவிடுகின்றன.

இனி பதிவுகளின் பூச்சரம் 

படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது.குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? என்ற பதிவில் காணலாம் 

குழந்தையை ஈன்றெடுத்து வளர்ப்பதில் பெற்றோகளின் மனப்போங்கை வைத்து ஐந்து வகைகளாக பிரிக்கலாம் அவர்களை பார்த்துவிட்டு வாங்களேன்.

பள்ளியிறுதித் தேர்வு நெருங்கிவிட்டது.வாழ்க்கையில் சாதனை புரிய அடித்தளமாய் விளங்கப் போகும் இந்த தேர்வு நேரத்தில் குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்யவேண்டியவை. 

வளரும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து தான் என்ன ? இங்கு சென்று பார்த்து விட்டு வரலாமே 

குழந்தைகளை இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்.மொத்தத்தில் அவர்கள் என்ன பந்தயக்குதிரைகளா ? 

பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.வேண்டாமே இந்த ஆசிரியர்ப்பணி 

நம் குடும்பத்தில் ஒன்றிற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் போதும்.விடியற்காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை வீட்டையே அமர்கள்ப்படுத்திவிடுவார்கள்.இது மாதிரி சண்டையிடும் குழந்தைகளை சாமளிக்கும் வழிகள்



வரைந்ததில் கவர்ந்த கவி வரிகள் சில : 

தூங்க நினைத்து முகம் புதைக்கும் போது 
எஞ்சின் தடதடப்பில் கனவு மறந்து போயிருக்கும்....!


வாழைத் தோட்டங்கள் விழித்திருந்தன
புலர்ந்த போதுவெளிரிய நிலா
வயல் நீரில் தேய்ந்துபோனது..!



தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்…வாழ்க்கையைத்
தருகிற கொடி ஒன்று வரும்வரை
கொடிகள் தைப்பதைத் தள்ளி வைக்கலாமென்று….


அம்மாவின் அணைப்பிலிருந்து நீங்கிய நினைவில்
அழுதும் வந்தவுடனே தூங்கியும்
கனிவாய்க் குறுகுறுப்பாய் நோக்கியும் ...


என் தாய் கொடுக்கத் தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம் அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…! விட...



இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன்.எனது படைப்புகளை தவறவிடாமல் வாசித்து தளத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து நல் இதயங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கின்றேன்.புதிய உறுப்பினர்களை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்

தமிழ் தளத்திற்க்குச் செல்ல : தமிழ் பேரன்ட்ஸ்

ஆங்கிலத் தளத்திற்க்கு செல்ல : Cute Parents

நன்றி நண்பர்களே ! நாளைய தினம் பதிவுலகில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் உதவப்போகும் பதிவிகளின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்.

நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

Sunday, February 19, 2012

விச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருகிறார்!

அன்பின் சக பதிவர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த விச்சு அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் தனது சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஏழு இடுகைகள் வரை பதிவிட்டுள்ளார். சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து இவர் சுமார் 125 இடுகைகள் வரை அறிமுகம் செய்து சுமார் 190-க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த திரு. விச்சு அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் திரு. சம்பத்குமார் அவர்கள். தமிழ் பேரன்ட்ஸ் என்ற வலைப்பூ எழுதி வரும் இவரது பூர்வீகம் தேனிப் பக்கம். இயந்திரவியலில் பட்டைய படிப்பை முடித்துள்ள இவர் தற்சமயம் கோவையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல்ஸ் டீலர்சிப்பில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இவர், தனது வலைப்பூவில், வாழும் பெற்றோர்களுக்காகவும், வருங்கால பெற்றோர்களுக்காகவும் உதவும் வகையில், அவர் கற்றதையும், பெற்றதையும் அருமையாக தொகுத்து இடுகைகளாக எழுதி வருகிறார். இவர் தனது கியூட் பேரன்ட்ஸ் (cuteparents) என்ற ஆங்கில தளத்திலும் குழந்தைகளுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் இடுகைகள் எழுதி வருகிறார். 

சம்பத்குமார் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் விச்சு...
நல்வாழ்த்துக்கள் சம்பத்குமார்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க...

ரசித்த பதிவுகள்

கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
                                        - மகாகவி பாரதியார்.


         பல்வேறு தலைப்புகளில் பல தளங்களை அறிமுகப்படுத்தினாலும் அது நதிபோல் நீண்டு கொண்டே போய்கொண்டிருக்கிறது. பல தளங்கள் விடுபட்டிருக்கின்றன. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு பல சிறப்பு வாய்ந்த பதிவுகளை அறிமுகப்படுத்தி வருகிறேன். அந்த வகையில் இன்று நான் ரசித்த பல பதிவுகளில் சில வரிசைகளைச் சரமாக தொடுத்துள்ளேன்.

     இராஜராஜேஸ்வரி அம்மா பதிவு செய்த எங்கள் ஊர் ஸ்ரீ ஆண்டாளின் வைர மூக்குத்தி சேவையைத் தரிசனம் செய்வோம். பழமையிலே புதுமை கண்ட இஸ்லாம் என்று ஆமினா சொல்வதைக் கேளுங்கள்.ஷைலஜாவின் அன்புபூ ஒன்று வந்தது என்ற அருமையான கிருஸ்துமஸ் கவிதை என்று மூன்று மதங்களுமே அன்பை மட்டுமே வலியுறுத்துகிறது.




        மேலும் ஆன்மீகப் பயணத்தில் கீதா சாம்பசிவத்தின் மாரியம்மாவையும் வணங்கி, கோமதி அரசுவின் திருமங்கையாழ்வார், கடம்பவன் பூங்காவின் எங்கெங்கு காணினும் சக்தி என்றும் சக்திபிரபாவின் கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் என்று கற்பனையிலும் ஆன்மீகம் தொடர்கிறது.

   முத்துச்சரத்தில் ராமலட்சுமி அம்மாவின் கூண்டுப்பறவையின் சோககீதத்தையும் கேளுங்கள். கன்னாபின்னானு கதம்பம் படைக்கிறார் கவிதா பார்வைகள் தளத்தில். சே.குமார் அவர்கள் மனசில் கிராமத்து நினைவுகளை வடிக்கிறார். ஸ்ரவாணியின் கிராமத்திலும் நகரத்திலும் காதல் வித்தியாசங்கள்  பாருங்கள். அட நிஜம்தான்!!. ஊர்சுத்தி வந்தால் காடெங்கும் ததும்புகிறது காமம்

    நான் வலைப்பூவிற்கு வந்த புதிதிலும் இன்றும் விரும்பி படிக்கும் ஒன்று ஜாக்கிசேகரின் சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ். அட்ரா சக்க சி.பி.செந்தில்குமாரை மறந்தால் யாரும் என்னை மன்னிக்கமாட்டார்கள். அவரின் சினிமா விமர்சனமும் அதற்குரிய படங்களும் அருமையாக இருக்கும். சிவகார்த்திகேயன் பெண்களை கலாய்த்த ஜோக்குகளை சொல்கிறார். பதிவுலக உறவுமுறைகளை காமெடியாய் கலாய்க்கும் நாய் நக்ஸ்.

      சிவகுமாரின் மெட்ராஸ் பவனில் ஸ்பெசல் மீல்ஸ் உண்ண வாருங்கள். சூப்பராக இருக்கும். சூர்யஜீவாவின் மால்குடி சித்தனும் சுவராஸ்யமான ஒன்றுதான். செவிலியன் அவர்கள் பசியையும் ருசியையும் படம் போட்டு காண்பிக்கிறார். என்ன கொடுமையான உலகம் என எண்ணத்தோணும்.


        பிரியமான வசந்த் மொக்கைத் தத்துவங்களை உதிக்கிறார்.விக்கியின் அகடவிகடங்களில் கைகொடுத்தல் பற்றி விளக்குகிறார். ரம்யமான வேளையில் மாதேவியின் பூபூக்கும் ஓசையை கேட்டுப்பாருங்கள். நீங்கள் பாடல்களை ரசிக்க வேண்டுமானால் ரசித்த பாடல் தளத்திற்கு சென்று "கண்ணில் என்ன கார்காலம்" என்ற பாடலைக் கேளுங்கள்.

      கடற்கரயின் பதிவான ஊர்ப்புராணம் தொடரில் எனக்குத் தெரிந்த மெட்ராஸ் வாசித்துப் பாருங்கள்.வழிப்போக்கனது உலகத்தில் உலகின் வரலாறு தொடரை ரசியுங்கள்

      வேதா லங்காதிலகத்தின் வேதாவின் வலையில் வெள்ளைக்காரரும் விரும்புவார் என்ற சிறுவர் பாடல் வெகு சிறப்பாக உள்ளது. மஞ்சுசுபாஷிணியின் எங்கேயடா பாரதி நீ? அற்புதமான கவிதையில் இன்னொரு பிறப்பெடுத்துவாயேன் என்று பாரதியை அழைக்கிறார். வனப்பு பதிவில் சந்திரகௌரியின் ஆடைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீககும் வழிமுறைகளை தொடர்பதிவாகத் தருகிறார்.

 அறிமுகம் :

1. நா.முத்துநிலவனின் வளரும் கவிதை  வலைப்பூ. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்த இவரின் படைப்புகளையும் பாருங்கள்.இவரது வலைப்பூவினை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகப்பெறும் மகிழ்ச்சி.

2. S.இராமனின் ஒரு ஊழியனின் குரல் தளம். நிறைய சுவராஸ்யமான அரசியல் மற்றும் தகவல்களைக் கொண்டுள்ளது.


 ரிலாக்ஸ் ஆகிட்டேன்!!!

நன்றி :
        இதுவரை தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவு எழுதியதேயில்லை. அதுவும் மற்றவர்களின் தளங்களை அறிமுகம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு. அதனை வலைச்சரத்தில் தொடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த  சீனா ஐயா மற்றும் அவரது குழுவினர்களுக்கும் எனது முதல் நன்றி. இந்த வாரம் முழுவதும் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் கணினியிலேயே அமர்ந்திருப்பதை பொறுமையாகவும் கோபத்தை அடக்கிக்கொண்டும் இருந்த எனது அன்பு மனைவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் எனது நன்றிகள்.

இப்படிக்கு



அலையல்ல சுனாமி - விச்சு... 
         
                                       படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை (எனது போட்டோவைத் தவிர). இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துக்களையும்  இடுங்கள்.  


       
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது