கார்ப்புச்சுவை நம் எலும்புகள் வளர பெரிதும் துணை புரிகின்றது. கார்க்கிறது என்றால் என்ன? உப்பு கார்க்கும்,உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
ஆம், நமக்கு அன்றாடம் உணவில் உப்பிடும் சகோதரிகள், சமையல் குறிப்பு மட்டுமின்றி சகல விஷயங்களிலும் கலக்கி வரும் பதிவுகள் இன்று உங்கள் பார்வைக்கு:
இந்தத் தளத்தைப்படித்தால்குறை ஒன்றும் இல்லை. ஆன்மீகப்பயணம் இருக்கும், அனுபவங்களும் இருக்கும். கற்பனை இருக்கும், காமெடி யும் இருக்கும். கண்டுதான் பாருங்களேன்.
தளத்தின் பெயர் பாலைத்திணை. குவைத்தில் வசிப்பதால், குறிப்பிட்ட இந்த பெயரோ! மழலைத்தினைதான் மயக்க வைக்கிறது. குழந்தை அமுதினி பற்றி விவரிக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளுக்குள் நம்மை சிக்க வைக்கிறது.
இனி வருவன பெண்களைக்கவரும் பதிவுகள்:
பயணங்களும், பார்த்த இடங்களும் , பாதித்த விஷயங்களும் இங்கே பகிரப்படுகின்றன. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு சென்ற அனுபவத்தை தல புராணங்களை சேர்த்து சொல்லும் விதம் நமக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும்.
ஆன்மீகம் தொடர்பான தேடலுக்கு ஒரு தளம். திருவையாறு வரலாறு, தியாகராஜா சுவாமிகள் வரலாறு, தஞ்சை பெரிய கோவிலை பற்றிய ஆய்வு கட்டுரை என பல தகவல்களை விரிவாக எழுதி உள்ளார். அம்மா இங்கே ஆராதிக்கப்படுகிறார். தேவாரத் திருப்பதிகங்கள் தலவிபரம், பாடியவர் விபரம், ராகம், தாளம் எனத் திகட்ட வைக்கும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை, பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. சடங்குகள் பற்றிய தாத்பரியங்களும், சடங்கு நடத்த தேவைப்படும் பொருள்களின் பட்டியலும் விரிவாக இங்கே காணலாம்.
உப்பு குறித்த சிறு தகவல் ஒன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில், சோடியம் இருக்கும். அந்த சோடியம், இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகும். இரத்த அழுத்த அறிகுறிகள் உள்ளோர் உண்ணும் உணவில் பயன்படுத்த, சோடியம் குறைவான/இல்லாத சமையல் உப்பும் உள்ளது.
இந்த சுவை எப்படியிருந்தது? நாளை பிரிதொரு சுவையினை, சுவைபடக் கொணர்கிறேன்.
மேலும் வாசிக்க...
இன்சுவை மட்டுமே சுவையாகாது. எந்த சுவையையும், நல்ல சுவையாக எடுத்துக்கொள்வதே இனிதாகும். கசப்புச்சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றது. அந்த வகையில், கசப்பு மருந்து கொடுக்கும் பதிவர்களின் பதிவுகளிலுள்ள சிறப்புக்களை இன்று பார்ப்போம்.
அகடவிகடங்கள் என்றிவர் தலைப்பிட்டாலும், தன்னைச்சுற்றி நடக்கும் உலக நடப்புகள் மீதிவர் பார்வையிருக்கும். சமூக அவலங்கள் மீதிவர் சாட்டையிரங்கும். நாட்டைக்காக்க போரிட்ட வரலாறுமிருக்கும். பட்ட அனுபவங்கள் பாதி,சுட்ட அனுபவங்கள் மீதி.கிச்சிளிக்காஸ் காட்டுவார், மானிட்டர் மூர்த்தி பேசுவார், அறுநூறு பதிவுகள் தாண்டிவிட்டாலும்,அனைத்தையும் விஞ்சி நிற்கும் ரத்தக்கறை டைரி பேச்சு, என் மனம் கொள்ளை போச்சு.
வைகை எனும் காட்டாற்றில் குளிக்க, வகையாய் அழைத்திருப்பார். மதங்களைக்கடந்த மஜீத் இங்கே மனங்கவருவார். விமான நிலைய விபரீதங்கள் விரிவாய்ச் சொல்லி எச்சரிப்பார். நகைச்சுவை,நையாண்டி, அரசியல் என அனைத்திலும் காட்டாற்று வெள்ளமாய் பாய்கிறது இந்த வைகை.
காற்றைக்கொண்டு கவிதை பேசும் இலை கரடிபொம்மை. இவர் கவிதையில், சமூக அவலங்கள் மீதான கோபம் கொப்பளிக்கும். இப்படிக்கு அம்மா!இதற்கோர் எடுத்துக்காட்டு. பரிசுகளால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவிப்பார், ஒரு பண்பட்ட மனிதன் இங்கே. எடக்கு மடக்குன்னு எகத்தாளமாச்சொன்னாலும், எல்லோருக்கும் பயன்படும் பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் பற்றியும் இங்கே பதிவுண்டு. விழிப்புணர்வு மட்டுமின்றி, சில கசப்பு மருந்துகளும் இங்கே தரப்படுவதுஉண்டு. கல்லூரிக்கு போனா கர்ப்பமாக வந்தா... என்று சமுதாயத்தின் மீது ஒரு கண்ணும் உண்டு.
நாளை நல்லதொரு சுவையுடன் நாம் சந்திப்போமா!
அன்பு வேண்டுகோள்: "www.unavuulagam.in" என்ற என் வலைத்தளத்தைப் பல நண்பர்களால் பார்க்க இயலவில்லையென தொடர்ந்து தெரிவித்து வந்ததால், எனது தளம்," www.unavuulagam.blogspot.in" என்ற வலைப்பூ முகவரியில் தெரியுமாறு மாற்றம் செய்துள்ளேன்.
மேலும் வாசிக்க...
அறுசுவைகளில் முதற்சுவை இன்சுவை. இளவயதில் தசையை வளர்க்க, இனிப்புச்சுவை மிக அவசியம். வயது ஏற, ஏற இனிப்பைக் குறைச்சுக்கணும். ஆனால், நகைச்சுவை எனும் இன்சுவை எந்த வயதிலும் ஏற்புடையதே. இன்னும் சொல்லப்போனால், சிரிக்கத்தெரிந்த ஜீவராசி மனித குலம் மட்டுமே. வாய் விட்டுச்சிரித்தால், நோய்விட்டுப்போகும். அதற்கேற்ப, நம்ம பதிவர்கள் நகைச்சுவையாய் சொல்லும் செய்திகள் ,எந்த வயதிலும் திகட்டாதவை.
இந்த நகைச்சுவைக் கலைஞன் ஸ்டார்ட் மியூசிக் என்று சொன்னால், நக்கல்,நையாண்டி என நவரசமும் அதிலிருக்கும். கோடீஸ்வரன் நிகழ்ச்சி, கேள்விகள் வெளியானது...! என்பார். இவரின் ஆனந்தத்தொல்லை தாங்கலைப்பா! பதிவை மிஞ்சும் பின்னூட்டமிருக்கும்.
தேர்ந்த எழுத்தாளர்போல், தெளிவான நடையிருக்கும். சிரிக்கவும், சில நேரம் சிந்திக்கவும் வைக்கும் செல்வா கதைகள். மொக்கையென்றாலும், முடிவில் ஒரு நீதியுமிருக்கும். ஒரு வட்டம் மாவட்டம் சாரி மூவட்டம் ஆகுமா என்பார்.
தைரியமா சிரிச்சிட்டு வரலாம் தக்குடு தளம் சென்றால். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் நக்கல் இரண்டும் கலந்து இனித்தே இருக்கும். அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்.... அவர் தரப்பு நக்கல்.
கலாய், கலாய், கலக்கலாய் கலாய். கார்டூன் இருக்கும், கலாய்த்தலும் இருக்கும்.ஆனாலும் குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான். டரியள் டக்ளஸ் அரசியல் நையாண்டி அசத்தலா இருக்குமே.
அன்பானவர், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர். விரசமில்லா நகைச்சுவை வேண்டுவோர், நிஜாம் பக்கம் விரைந்து செல்லலாம். குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனச்சொல்லி குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.
புத்தகங்களின் காதலர், புதுப்புது நகைச்சுவை எழுத்தாளர்,கொஞ்சம் லக, லக சாரி கல, கல, மிஞ்சும் சாரி கொஞ்சம் வள, வள என சுய அறிமுகம் காண கடுகு தாளிப்பு. ஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி என்று அலற வைக்கிறார்.
டவுசர் பாண்டி யிடம்,கவிதையும் இருக்கும், கற்பனை பேட்டியுமிருக்கும். தலைப்பிலும் பல நக்கல் சொல்லிருக்கும். டவுசரு வாங்கின அவார்டு என்று டபாய்க்கிறார்.
நகைச்சுவையும், நக்கலும் நாய்நக்ஸ் பக்கத்தில் இருக்கும். ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், தனித்துவமாய் நகைச்சுவை நர்த்தனமாடும். பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ பலரையும் கவர்ந்ததில் பழுதில்லை.
இன்னல் தரும் இனிப்பு நோய்க்கு இவரிங்கே மருத்துவம் கூறுகிறார். அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.
இன்சுவையை இனிதே ர(ரு)சித்தீர்களா? இனி பிரிதொரு சுவையுடன் நாளை சந்திப்போமா?
மேலும் வாசிக்க...
”தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”-எனும் வள்ளுவன் வாக்கினிற்கிணங்க, தான் கற்றதையும்,பெற்றதையும்,சக பதிவர்களும்,இணைய வாசிப்பாளர்களும் கற்றும்,பெற்றும் மகிழ்ந்திட உருவாக்கப்பட்டதே வலைச்சர ஆசிரியர் பொறுப்பு. அந்த மதிப்புமிக்க பொறுப்பு இந்த வாரம்,எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனா அய்யா மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகளை தெரிவித்துத் தொடர்கிறேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர்,புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதுபோல்,எறும்பு வலைத்தளம் மூலம் அறிமுகமாகி, எனக்கும் ஒரு வலைப்பூ துவக்கிவைத்தேன். ஆம்,அது 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதி. துவக்கத்தில் சமைத்து வைத்த உணவை, ருசிக்க வந்த நெஞ்சங்கள் குறைவே. சமையல் சரியாய் ருசிக்கவில்லையோ,சமைத்துவைத்த உணவின் ருசியை சரியாய் எடுத்துரைக்கவில்லையோ! வருடம் ஒன்றும் உருண்டோடியது, சகோதரி கௌசல்யா அவர்தம் மனதோடு மட்டும் வலைப்பூவில், இன்று ஒரு பதிவர்-விமரிசனம் பகுதியில் இனிமையாய் அறிமுகம் செய்து வைத்து, என் வலைப்பூவை பதிவுலக நண்பர்கள் பக்கம் எடுத்துச்சென்றார். அத்தோடு வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்த மூத்தோர் பலர்.பழக இனிமையான பண்பாளர் ஸ்டார்ட் மியூசிக் ராம்சாமி சார்,அவர் இதயத்தில் ஓர் இடமளித்தார். ஆம்,அவர் ப்ளாக்கில்,’உணவு உலகம்’தளத்திற்கு தனியிடம் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து,’மனோ நாஞ்சில் மனோ’வும், மனசார அவர் தளத்தில் தனியிடம் கொடுத்தார். 17.06.11ல் நடைபெற்றநெல்லைப்பதிவர்சந்திப்பு,உணவு உலகத்தை உங்களருகே எடுத்துவந்தது. ப்ளாக்கிலிருந்து டொமைன் வாங்கியது அடுத்த கட்ட பயணம்.
என்பக்கம் குறிப்பிட்டுச்சொல்லும் பதிவுகள் இவை:
துறைசார்ந்த தகவல்கள் மட்டும் என் ஆங்கில வலைப்பூ FOOD SAFETYல் எழுதி வருகிறேன்.
உணவு உன்னதமாய் அமைந்திட,அறுசுவையும் அவசியம். ஆறில் ஒன்று குறைந்தாலோ,கூடினாலோ இன்சுவை அதிலிருக்காது.இனிப்பு,கசப்பு(கைப்பு),கார்ப்பு,உவர்ப்பு(கூர்ப்பு),துவர்ப்பு, புளிப்பு. இந்த அறுசுவைகளின் அடிப்படையிலேயே,பதிவர்களின் பல்சுவையைப்பகிரப்போகிறேன். இத்துடன், கூடுதல் ருசிக்குக் கூட்டாஞ்சோறும், கண்ணாமூச்சி ரே ரேயும் வ்ந்து உங்களை வசப்படுத்தும். நாளைக்குப் பார்ப்போமா!
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
அனைவருக்கும் வணக்கம்.
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஹாரி பாட்டர் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் நான்கு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ 67 - பதிவுகளோ 50.
ஹாரி பாட்டரை நன்றி கலந்த வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சங்கரலிங்கம். நண்பர் சங்கர லிங்கம் பிறந்த ஊரோ அம்பாசமுத்திரம். வசிப்பதோ நெல்லை மாநகரம். நாற்பத்தெட்டே வயதான் இளைஞர். உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணி புரிகிறார்.
இவர் உணவு உலகம் என்ற தளத்தினில் நவம்பர் 2009ல் இருந்து எழுதி வருகிறார். 340 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறார். உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் மற்றும் பயணங்கள், பதிவர் சந்திப்புகள், ரசித்தவை பார்த்தவை பற்றியும் எழுதி வருகிறார்.
நண்பர் சங்கர லிங்கத்தினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஹாரிபாட்டர்
நல்வாழ்த்துகள் சங்கர லிங்கம்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...