கலை மலர்.
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று ஆறாவது பதிவில் - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து பாராட்டி
மகிழ்ந்த - மகிழ்வித்த, நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தில் ஏழாம் நாளாகிய இன்றும் - முதலில்
ஆலய தரிசனம் செய்வோம்.
வருக... நண்பர்களே..
ஊர் சுற்றிப் பார்ப்பதிலும் ஓய்வு நாட்களில் சுவையாக உண்டு மகிழ்வதிலும்
யாருக்குத் தான் ஆசையிருக்காது!..
தமிழ்!..
நம் எல்லோருக்கும் பேச்சும் மூச்சும் ஆனது அதுவே!.. அந்தத் தமிழ் இன்பத் தமிழ் - எங்கள் தமிழ் காட்டும் - முதல் குரு
அருட்திரு அகத்திய மாமுனிவர்.
அவர் வடதிசைக் கயிலையில் இருந்து நடை வழிப்பயணமாக - சிவசக்தியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க தென் திசைக்கு வந்து - அருள் பெற்றதையும்,
தமிழகம் எங்கும் சிவ பிரதிஷ்டை செய்து வணங்கி - பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு - கமண்டல காவிரி நதி உள்பட - உறுதுணையாக இருந்ததையும் பற்பல நூல்களின் வாயிலாக அறியமுடிகின்றது. அப்பர் ஸ்வாமிகள் தமது தேவாரப் பாடல்களிலும் அகத்திய மாமுனிவரைக் குறிப்பிடுகின்றார்.
அகத்தியர் தவமிருந்த மலை பொதிகைமலை. அந்த மலையில் அவருடைய தவபீடத்தைத் தரிசிக்க - இப்போது பலரும் பலசிரமங்களுக்கு இடையே சென்று வருகின்றனர். வாருங்கள் - நாமும் செல்வோம்.
நிகழ்காலத்தில் நம்மை அழைத்துச் செல்பவர் -
திரு.சிவா.
இங்கே தென் பொதிகை தரிசனம் நிறைவடைந்ததும் -
அகத்திய குருவுக்கும் குருவான ஆதி குரு வீற்றிருக்கும் மாமலை -
அதுதாங்க -
திருக்கயிலாய மாமலை!..
அங்கேயும் சிவா - அவர்களே
அழைத்துச் செல்கின்றார்.
வாருங்கள்!.. இறைவன் துணையுடனும் - நண்பர் சிவா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திருக்கயிலாய மாமலையைத்
தரிசிப்போம்!..
வழிகாட்டி உடன் வந்த அன்பின் சிவா அவர்களுக்கு மிக்க நன்றி!..
அடுத்து ஒரு பயணம் -
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
வழித்துணையாய் வந்த அன்பின்
வெங்கட் நாகராஜ் , வசிப்பது
தலைநகர்.
ஐயனின் ஜோதி மலைக்கு அடுத்து அப்பனின் ஜோதி மலை - அண்ணாமலை!..
காலெல்லாம் வலிக்குதே... கொஞ்ச தூரம் தான் .. இன்னும் வாங்க!...
இங்கே மலையே கோயில் . எனவே
கிரி வலம் பிரசித்தம் .
அது சரி கூட வர்றது யாருங்க?!..
அவங்கதான் -
கனவுகளைத் தேடி
திருவல்லம் பரசுராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற -
ராஜி!..
குருநாதர்களைக் கும்பிடுவது என்றால் கொள்ளை இன்பம் தான் . அந்த இன்பத்தை மகிழ்ச்சியை
சீரடி சாய்பாபா தரிசனத்தின் மூலம் வழங்குபவர்
குடந்தையூர் R.V.சரவணன்.
அப்படியே - அவருடன்
திருவெண்காடு கோயிலையும் தரிசனம் செய்யலாம்.
இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. வயலும் ஓடையும் தோப்பும் துரவும் என - தூய வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
அவர்களுடைய அந்த வாழ்வுக்குத் துணையாய் எண்ணற்ற காவல் தெய்வங்கள். அந்த
காவல் தெய்வம் முனீஸ்வரனை மனசு நிறைஞ்சு - நமக்குக் காட்டுகின்றார் -
திரு. சே. குமார்.
மயிலைக் காளைகளைக் காணோம் - என்று மனம் வருந்தும் குமார் - தற்போது
காதல் ஜோடிகளைக் காப்பாற்றும் களப் பணியில் தீவிரமாக இருக்கின்றார்.
பாதுகாப்பு வேண்டுபவர்கள் இவரை அணுகலாம். ஏனெனில்
முனீஸ்வரன் கூட இருக்கார் அல்லவா!..
அடுத்த இடம். தவறு. இதுவும் ஒரு தலம் -
கொடுமணல் .
இங்கே தான் நம் சங்க கால தமிழ் மக்கள் வெளி நாட்டுத் தொடர்புடன் வாழ்ந்தார்களாம். மண்ணைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வோம்!..
அழைத்துச்சென்ற
மழைக்காதலனுடன் -
நல்ல திரைப்படம் ஒன்றும் பார்த்தாகி விட்டது.
வழியில் - நமது
அன்பின் ஐயா அவர்கள் -
தஞ்சை மாநகரில். பிறந்து வளர்ந்த வீட்டைத் தேடிச் சென்று கண்டு மகிழ்ந்தோம்.
இதுவரைக்கும் இயன்றவரை கோயில் மலை - ன்னு சந்தோஷ சுற்றுலா!..
தகவல் தொடர்பில்
இணைந்திருந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
வழி நெடுக கலகலப்புடன்
அரட்டைஅடித்து மகிழ்வித்தவர் - அன்பின்
ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.
குடும்ப இஸ்திரி .. ன்னு நிரூபிச்ச
பக்கத்து வீட்டுப் பொண்ணு
மலரும் நினைவுகளாக பல தகவல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டவர் -
தமிழ் இளங்கோ அவர்கள்.
தனிமரமாய் நின்றாலும்
ஸ்நேக கவிதையும் கானமும் நன்று!.
பயணம் செய்யும் போது
தன் இனிய குரலால் நம் அனைவரையும் கட்டிப் போட்டவர் -
நகைச்சுவை வித்தகர் நமது
மதிப்புக்குரிய சுப்பு தாத்தா அவர்கள்.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கூடவே நமக்கு சொல்லிக் கொண்டு வந்தவர்
அன்பின் திரு பாண்டியன்!.. அவர்கள்.
இப்போது - பசிக்குதே!..
பசிக்குதா!?.. அதனால தானே -
இங்கே வந்திருக்கின்றோம்..
அன்பின் வித்யா விஜயகுமார் அவர்களின் கை வண்ணத்தில் -
அஞ்சரிசி பணியாரம் பர்பி ஜவ்வரிசி உருண்டை -
எல்லாம் நமக்காக...
இங்கே
கோலமிட்டு விளக்கேற்றி வைத்திருப்பவர் -
சின்னு ஆதித்யா.
அதோ!..
தமிழ்வாசி பிரகாஷ் கபீரன்பன் கவிஞர் இராய செல்லப்பா
கிருஷ்ணாரவி சக்கரகட்டி மலர்த்தரு S. மாது
நவ்சின் கான் நிஜாமுத்தீன் சித்ரா சுந்தர் ரூபன்
கோமதி அரசு கரந்தை சரவணன் துளசிதரன் பிரியா ராம்
ஸ்கூல் பையன்
அனைவரும் வந்து விட்டார்கள்.
அறிமுகம் ஆனதில் இருந்து நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை அன்பின் உறவுகளும் இங்கே குழுமி இருக்கின்றார்கள்.
மனம் நிறைவான பயணம் .
இது நிறைவடைந்ததாக ஒரு பாவனை தான். ஆனால் -
பயணங்கள் முடிவதே இல்லை!.. மீண்டும் அனைவருக்கும் நன்றி!..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!..
பசுமை நிறைந்த நினைவுகளே!.. பாடித் திரிந்தபறவைகளே!..
பழகிக் களித்த தோழர்களே!..
மீண்டும் நல்லதொரு வேளையில் சந்திப்போம்!..
வணக்கம்.