07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 31, 2011

முன்னுரையாக என்னுரை


என்னைப் பற்றி என்பதனை பதிவுலகில் நான் என்கிற அர்த்தத்தில் இதை எழுதுகிறேன்

கல்லூரி நாட்கள் முதலே எனக்கு எழுத்தில் அதிக நாட்டம் கொண்டு எழுதி வந்தாலும் கூடஎழுதியதைக் கொண்டு பத்திரிக்கையைத் தீர்மானிப்பது அல்லது குறிப்பிட்ட பத்திரிக்கைக்கென யோசித்து அதற்கேற்றார்போல எழுதுவது எல்லாம் கொஞ்சம்  பித்தலாட்டமாகப் பட்டதால்
எழுதுவதில் கொஞ்சம் நாட்டம் குறைந்து  கொண்டு வந்தது

அதேசமயம் படிப்பின் நிமித்தமும் வேலையின் நிமித்தமும் பெண்கள் அதிகமாக அடுப்படி விட்டும் வீடு விட்டும் வெளியேறத் துவங்க அவர்களது நடை உடை பாவனைகள் காலத்திற்கு ஏற்றார்போல மாறி யாக வேண்டிய அவசியம் நேர்ந்ததை போல ,அவசர யுகத்தில்இலக்கியத்தின்பால் மக்கள் கொண்டிருந்த அதிகப் பிடிப்பு குறைந்து மிக இலகுவாகச் சொல்லக் கூடிய விஷயங்களை மட்டுமே படிப்பது ரசிப்பது என்று உண்டான
மாறுதல் கூட என்னுள்ளும் ஒரு மாறுதலை ஏற்படுத்திப்போனது

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் பதிவுலகு பற்றி நண்பர்கள் மூலம் அறிந்து
படிக்கத் துவங்கியபோது எனக்கு இது சரியாக வரும் போலப் பட்டது

இப்பதிவுலகில் யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய சிந்தனையை
மாற்றிக் கொள்ளவேண்டியதில்லை.நாம் சொல்ல நினைப்பவைகளை
சொல்ல நினைக்கிற வகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சொல்லக் கூடிய
சுதந்திரம் இருக்கிறது.அதனாலேயே நமக்கு பொறுப்பும் அதிகம் இருக்கிறது
எனவே இதில் கொஞ்சம் முயன்று பார்க்கலாமே என கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்பதிவிடத் துவங்கினேன்

கனமான விஷயங்களையே கருவாக எடுத்துக் கொள்வது என்றும்
அதனை எத்தனை எளிதாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல முயல்வது என்றும்முடிவெடுத்து எழுதத் துவங்கினேன்.அதற்காகவே வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான ஒரு நடையை அமைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதி வருகிறேன்

சிவாஜி நடித்த மோசமான படங்கள் உண்டு ஆனால் சிவாஜி மோச மாக நடித்த
படங்கள் ஏதும் இல்லையென நடிகர்திலகம் நடிப்புக் குறித்து சொல்வார்கள்
அதை போலவே  சில விஷயங்களை மிகச் சரியாக என்னால் நான் பதிவில்
சொல்ல முடியாது போனாலும் கூடநான் மோசமான விஷயங்களை பதிவிட்டதில்லை இனி பதிவிடப் போவதும் இல்லை என்கிற மன உறுதியோடு தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்

மாதம் சராசரியாக நான்கு அல்லது ஐந்து பதிவுகள் என்ற கணக்கில் இதுவரை சுமார்ஐம்பது பதிவுகள் மட்டுமே எழுதி உள்ளேன் முதல் பத்து பதிவுகள் வரை
பின் தொடர்பவர்களோ  பின்னூட்டம் இ டுபவர்களோ இல்லை
ஆயினும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வந்தேன்.
பின்னர் தொடர்பவர்கள் தொடர்ந்து வர வர முன்னர் எழுதிய பதிவுகளையே
மீள்பதிவு எனச் சொல்லாமல் புதிய பதிவாகப் போட்டு அனைவரின் அங்கீகாரத்தை பேற்றேன் என் கதைச் சுருக்கம் அவ்வளவே

மிக குறைந்த காலம்தான் பதிவுலகத் தொடர்பில் இருக்கிறேன் என்றாலும்
மிகக் குறைந்த பதிவுகளே கொடுத்துள்ளேன் என்றாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித் துவலைசர ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புக் கொடுத்த பதிவுலகத் தந்தை திரு சீனா ஐயா அவர்களுக்கு ம்வலைசர ஆசிரியர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதுவரை என் பதிவினைத் தொடராதவர்கள் கீழ்குறித்த பதிவுகளை வாசித்து
நான் மேலே சொன்னவைகளுக்கு ஒத்துப் போகிறதா என மதிப்பிடலாம்


மேலும் வாசிக்க...

சென்று வருக மோகன் ஜி - வருக வருக ரமணி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மோகன் ஜி - தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் எட்டு பதிவுகள் போட்டு ஏறத்தாழ இரு நூற்றைமபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ முப்பத்து நான்கு நண்பர்கள்.

இவர் புதுமையாக, அறிமுகத்தினைத் தவிர முன்னுரையாக கதை கவிதை நகைச்சுவை எனப் பலவும் பதிவினில் சேர்த்திருக்கிறார். நண்பர் மோகன் ஜீயினை நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் நண்பர் ரமணி . இவர் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார்.

இவர் மதுரை மண்ணின் மைந்தர். சிறு வயது முதலே இலக்கியத்தின் மீது காதல் கொண்டு, கல்லூரி நாட்களிலேயே சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியிட்டும், வீதி நாடகங்கள் எழுதியும், நடித்தும், பிறகு நிஜ நாடக இயக்கத்தில் பங்கேற்றும் பொறுப்பினை வகித்தும் இருக்கிறார். சங்கீத நாடக அகடமியின் சார்பில் நடைபெற்ற இந்தியாவின் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகத்தில் - டெல்லியில் நடித்தும் பங்கேற்றும் இருக்கிறார்.

பணி நிறைவு செய்த பின்னர் - ஓய்வு நேரத்தினை - மற்றவர்களுக்குப் பயன்படும்படியாக - அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வலைப்பூ ஆரம்பித்து எட்டு மாத காலமாக ஏறத்தாழ ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகள் போட்டிருக்கிறார்.

நண்பர் ரமனியினை வருக ! வருக ! என வரவேற்று - அறிமுகங்களை அள்ளித் தருக என்ற வேண்டுகோளுடன் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மோகன் ஜி
நல்வாழ்த்துகள் ரமணி

நட்புடன் சீனா


மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-8




அன்பின் வலைச்சொந்தங்களே!

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன்.  வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது.

நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என எனக்குத் தோன்றிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் .

பல முக்கிய பதிவர்களை என்னால் சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் நேரமின்மையே தவிர வேறொன்றில்லை.

வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்.. நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள். இலக்கியம் நுகர ,பொழுது போக்க, சமையல் கலை அறிய, அரட்டைத் தளமாக, தொழில் நுட்பம் அறிய ,இசை பகிர என அத்துணையும் வலையுலகில் இருக்கிறது.

பதிவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். வலை மேய்வதை ஒரு தளையாக  உங்களைச் சுற்றி பின்னிக் கொண்டு,  உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதற்குமே ஒரு அளவு உண்டல்லவா?. வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ? இதை அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.

வானவில்லுக்கு வருகை தந்து பதிவுகளை படிக்கும் அன்பர்களுக்கும் ,பின்னூட்டங்கள் இட்டும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் அன்பு செலுத்தும் நட்பு நெஞ்சங்களுக்கும்,  இந்த ஒரு வாரத்தில் முதன் முறையாய் அறிமுகமான பதிவர்களுக்கும் என் நன்றி கூடிய வணக்கங்கள் .

இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும், சகோதரர் சீனா அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும். திரு. சீனா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. பதிவுகளுக்கும் படிப்பவர்களுக்கும் இடையே பாலமாய் விளங்கும் 'வலைச்சரம்' பதிவுலகில் ஒரு பள்ளிக் கூடம்.

மீண்டும் சந்திப்போம் சொந்தங்களே.. வானவில்லுக்கும் அடிக்கடி வாருங்கள்..  காத்திருப்பேன் அங்கே...

என்றென்றும் அன்புடன்

மோகன்ஜி
ஹைதராபாத்.
பட உதவி :Google Image




மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7



என் கவிதையொன்று.... 

ஓர் பின்னிரவுப் பயணத்தில் 

நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.

காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.

சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.

மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.

சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.

(பெங்களூர் 1979)
பட உதவி : Google Images 

இன்னுமொரு கவிதை......

வாழ்க்கை

உலைபொங்கி கொதிவழிந்து
      பொறுக்குச் சுவடுகள்
               கோடிட்ட கலயம்....
பற்று நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.


மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...

கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
        உடையும் வரை.


ஒரு கணக்கு

நம்மாளு ஞொய்யாந்ஜி ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும், சம்பள உயர்வையோ, பதவி உயர்வையோ தராமல் இருந்தது அவர் பணிபுரிந்த அலுவலகம். ஒரு நாள் அவர் மேலதிகாரியைப் பார்த்து இதுபற்றி பேசப் போனார்.

மேலதிகாரி : என்ன ஞொய்யாந்ஜி? இன்னா விஷயம்.?

ஞொய்யாந்ஜி : சார் ! நாலு வருஷமா சம்பள உயர்வோ,
               பிரமோஷனோ இல்லாம இருக்கேன். உடனே
                அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. சார்

மேலதிகாரி:    எதுக்காக உனக்கு தர வேண்டும்?

ஞொய்யாந்ஜி  வேலை செஞ்சேன் சார்! வேலை..

மேலதிகாரி:   எப்போ செஞ்சே? நான் கேக்குறதுக்கெல்லாம்
              பதில் சொல்லு .. ஒரு வருசத்துக்கு எத்தினி நாள்?

ஞொய்யாந்ஜி:  365 சார்!

மேலதிகாரி: ஒரு நாளின் 24 மணி நேரத்துல எவ்வளவு நேரம்
             ஆபீஸ்ல இருப்பே?

ஞொய்யாந்ஜி: 8 மணி நேரம் சார்!

மேலதிகாரி: அதாவது ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம்
            இங்கிருக்கே. அப்பிடின்னா ஒரு வருஷத்தின்
            மூன்றிலொரு பங்கு 122 நாள் தான். சரியா?

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!


மேலதிகாரி: வாரத்துல லீவு எப்போ?

ஞொய்யாந்ஜி : சனி,ஞாயிறு ரெண்டு நாள் சார்!

மேலதிகாரி: வருஷத்துல மொத்தம் எத்தனை சனி ,ஞாயிறு?

ஞொய்யாந்ஜி: உம்... 52 சனி 52 ஞாயிறு மொத்தம் 104 நாள்

மேலதிகாரி: அப்போ ஏற்கெனவே நான் சொன்ன 122 நாளில் 104
             கழிச்சா மீதி 18 நாள் தான்

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!

மேலதிகாரி:  வருசத்துக்கு எத்தினி நாள் கேஷவல் லீவு எடுப்பே?

ஞொய்யாந்ஜி :12 நாள் சார்

மேலதிகாரி: 18இல் 12 போன மீதி 6 நாள் தான். அதுவுமில்லாம
             பொங்கல்,தீபாவளின்னு அரசு விடுமுறை 10 நாள்
             வேறு. அப்படின்னா வேலைநாள் எதுவுமே மீதி இல்லே.
           எப்படி சம்பள உயர்வு, பிரமோஷன் உனக்கு தருவது?

ஞொய்யாந்ஜி: அதானே? உங்களை தொந்தரவு பண்ணிட்டேன். 
               ரொம்ப சாரி சார்! வரேன்..


இனி சில  வலைத்தளங்கள் அறிமுகம் 

சங்கப்பலகை வலைப்பூவின் பதிவர் திரு. அறிவன். அரசியல், இலக்கியம் பற்றி ஆராய்ச்சி அணுகுமுறையுடன் எழுதுகிறார்.   வானவில் மனிதனில் வந்த காமச்சேறு எனும் அருணகிரி நாதர் பற்றிய என் பதிவில், இவர் இட்ட பின்னூட்டங்கள் இவர் நோக்கின் கூர்மையைப் புலப்படுத்துகின்றன.இவர் அதிகம் எழுத வேண்டும் எனும் பேராவல் எனக்குண்டு.

வெங்கட் நாகராஜ்  தலைநகரில் கால்பதித்த நற்றமிழன். எளிமையும், யதார்த்தமும் நிறைந்தது இவர் எழுத்து. இவரின் பார்வையின் வீச்சை உணர்ந்ததினால் சொல்வேன்.. இவர் ஒரு சிறந்த விமரிசகராய் பரிமானிக்க முடியும். களத்துல இறங்குங்க நண்பரே!


மனவிழி திரு சத்ரியன் அவர்களின் வலைப்பூ. கவிதைகள், நாட்டு நடப்பு என்று கொடி நாட்டும் பதிவுகள்.. கவிதைகள் சிக்கனமாய் ரசிக்கும் படி இருக்கின்றன.  சட்டு புட்டுன்னு இந்த வலைப்பூவைப் பார்த்துடுங்க.

பா.ராகவன்  பா.ராகவன் அவர்கள் அமுதசுரபி, கல்கி, குமுதம் போன்ற பல இதழ்களில் தடம் பதித்தவர். அவ்ர் அறிமுகம் பதிவே சுவையாக இருக்கிறது. நல்ல எழுத்தை பழக வேண்டுமெனில் இவ்வகை வலைப்பூக்கள் 'பாடத்திட்டம்' போன்றவை. கருத்தும் எழுத்தும் கலந்து காட்சியாய் மனத்துள் விரிவடையச செய்வது எளிதல்ல. எழுத்து முலாம் பூசும் வேலை அல்ல. அதற்கு பொன்னகை செய்யும் சூட்சமம் தேவை. இந்த தளத்தில் அது காணக் கிடைக்கின்றது.

அழியாச்சுடர்கள்  இந்த வலைப்பூவை தொடங்கி நடத்தும் அன்பர்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரம். இதை வலைப்பூ என்று சொல்ல மனம் வரவில்லை.. திராட்சைக் கொத்து?...  தேன் கூடு? நவரத்தின ஹாரம்? காலத்தின் பொக்கிஷம்??.. சொல்லத்தெரியவில்லை. சிறந்த படைப்புகள்  சிங்காரிக்கும் வலைமகுடம்.. சத்திரத்து விருந்துக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு..  அழியாச்ச்டர் அழைக்கிறது. அமிழ்ந்து முத்தெடுங்கள்....
மேலும் வாசிக்க...

Saturday, July 30, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -6



எனைக் கவர்ந்த சில புதுக் கவிதை வரிகள்

கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க 
என் முகத்தின் அழுக்கு 
மேலும் தெளிவாகத் தெரிகிறது 
                                                                     (வைதீஸ்வரன் )
                     
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றனவாம்
என் கல்யாணம் மட்டும் ஏன்
செட்டிப் பாளையத்தில் நிச்சயிக்கப் பட்டது?
                                                               
                                                                  (சக்திக்கனல்)

உனக்கும் எனக்கும் ஒரே ஊர் 
வாசுதேவ நல்லூர் 
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும் 
உறவினர்-மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே    
                                                                          (மீரா )   


அழுகை

இன்று நான் அழுதேன்; ஊமை 
          ஏக்கத்தால் அழுதேன் -ஏழைக் 
கன்று போல் அழுதேன். ஆனால் 
          கவிதையில் அழுதேன்.;இந்த 
மன்றத்தில் அழுத என்னை 
          மறுபடி அழவைக்காமல் 
சென்றுவா தமிழே! நாளை 
          திரும்பவும் சந்திக்கின்றேன்.
                                                                    (கண்ணதாசன் )
நானும் இலவு காத்த 
                                கிளிதான்.
ஆனாலும்
தலையணை செய்யும் 
தந்திரம் அறிவேன்          
                                                       (ஹா! கவிஞர் பேர் மறந்துடுச்சே!) 

இன்றைய பதிவர் தேர்வு 
  
எம்.ஏ.சுசீலா  இந்தப் பதிவர் தமிழ்பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் இவற்றில் தன் புலமையை வெளிப்படுத்தும் விதமாய் தமிழ்மணம் பரப்பும் தமிழம்மா. ஜெயமோகன் அவர்களின் வலைக்குழுமத்தில் பல திரிகளில் இலக்கியம் பேசும் இவர் பதிவுகளை நீங்கள் உடனே படிக்க வேண்டும். சொல்லிட்டேன்!

மதுரை சரவணன்  மதுரையில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரியும் சரவணன் சமுதாய நோக்குள்ள நல்ல பதிவர்.  தன் அனுபவங்களை எளிய பதிவுகளாய் வெளியிடும் இந்த நண்பரின் வலைப்பூவை அவசியம் நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்.

தியாகராஜ வைபவம்  தியாகராஜர் கீர்த்தனங்களை பாடல்களின் அர்த்தத்துடன்  எழுதப்படும் வலைப்பூ. கர்நாடக இசைப் பிரியர்களுக்கு பிடித்துப் போகும் இந்த சங்கீதப்பூ.

வடலூரான் கழுகுப் பார்வை என்று பேனர் போட்டிருந்தாலும் ஹாஸ்யப் பார்வை தான் பார்க்கப் படுகிறது. ட்வீட்ஸ்-ரிவீட்ஸ் என்ற ஒரு கலக்கல் பதிவை நினைவுப் படுத்தித்தான் இங்கு அறிமுகம் செய்கிறேன். ஏனோ அதிகம் பதிவுகள் இடாமல் இருக்கிறார் இதன் பதிவர் கலையரசன். எழுதுங்க சார்!

என் சமையலறையில்  தேவசுகந்தி அவர்களின் வலைப்பூ. சுவையான சமையல் குறிப்புகள் . இவரின் பின்னூட்டங்கள் கூட சுவையானவை தான். அடிக்கடி பதிவு போடுங்க மேடம்.    

ரசித்தவை நினைவில் நிற்பவை  திரு சூரி அவர்களின் வலைப்பூ.  சுகமான பாட்ல்களின் வீடியோப் பதிவுகள். பல வலைப்பூக்களை தன் களமாய் வைத்திருக்கும் இவர் தளத்துக்கு ஞாயிறு மதியம், தூங்காமல் போய் மேயலாம்.

என் வாசகம் : திரு ஜீவா அவர்களின் இந்த வலைப்பூ திரு வாசகம்ங்க!. ஆன்மீகம், நற்சிந்தை என நிராய விஷயம் சொல்கிறார். ஒரு சுத்து சுத்திப்பார்த்துடுங்க

பெருங்குளம் ராமக்ரிஷ்ணன் பக்கங்கள்   ஜோக்கு வலைன்னு நினைச்சீங்களா? இது ஜோசிய வலைங்க. அகஸ்மாத்தா கண்ணுல பட்டுதூ. ஆர்வமிருக்கிறவங்க  போய்ப் பாருங்க. கிரிக்கெட்டுல்லாம் கூட எழுதியிருக்கிறார். சில உபயோகமான ஆன்மீகத் தகவல்களும் காணக் கிடைக்கின்றன. ஏதோ நல்லது நடந்தா சரி!

மேலும் வாசிக்க...

Friday, July 29, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5




ஒரு கவிதை
அப்பா

சட்டைப் பித்தான்களை வரிசைமாற்றாமல்
போட்டதில்லை என்றும் நீ.

இடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல்
தடுக்கித் தடுமாறும் உன் கால்கள்.

லைஃப்பாய்மணக்க குளித்து வந்தபின்னும்
சோப்புமிச்சம் காதோரம் குழைந்துமின்னும்.

அன்னம் தரைசிதறாமல்
உண்ணத் தெரியாதுனக்கு

வேயுறுதோளிபங்கன் தவிர
வேறுபாட்டு நீ சொன்னதில்லை

கால்மாற்றி செருப்பு நுழைத்துதற
பால்மாறாது உன் கவனக் குறைவு.

காசெண்ணக்  கைநடுங்கும் இரகசியம்
சூசகமாய் சொல்ல அறியாய் நீ

அப்பா!

ஈதெல்லாம் இனியும் சொல்லி
கேலி செய்ய மாட்டேன் உன்னை.
பட்டுமாலை சார்த்திய
படம்விட்டு இறங்கிவந்து
என்
பக்கத்தில் உட்காரேன்!

********************************************
இரண்டு ஜோக்குகள்

ஆசிரியர்: ஞொய்யாஞ்ஜி! உணவு செரிமான முறையை இரண்டே வரிகளில் சொல்லு பார்ப்போம்?
ஞொய்யாஞ்ஜி:  அதுவா? வலது கையோடு ஆரம்பிச்சி இடது கையால முடியும் சார்


###########

ஞொய்யாஞ்ஜி ஒரு பத்திரிகையைக் காட்டி தன் மனைவி பல்லெலக்காவிடம் சொன்னார்,
இதுல என்ன போட்டிருக்கான் பார்த்தியா? ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு!!
பல்லெலக்கா: அது ஏன்னா பொம்பளை ஒவ்வொரு விஷயத்தையும் திரும்பவும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கு ஆம்பிளைக்கு
ஞொய்யாஞ்ஜி: என்ன சொன்னே? திரும்ப சொல்லு?  




இன்றைய வலைப்பதிவர்கள் தேர்வு

எட்டயபுரம் : இது கவிஞர் கலாப்ப்ரியாவின் வலைப்பூ. என் அபிமானக் கவிஞர் . இவரது எழுத்துக்கள் ஒரு தெள்ளிய நீரோடை போல் சீரானது. தாகூரை ஆதர்சமாய்க் கொண்ட கவிஞர் இவர். கண்டிப்பாய் பாருங்கள் இந்த கவிவனத்தை.

பொன் மாலைப் பொழுது.: சகோதரர் கக்கு-மாணிக்கம் அவர்களின் வலைப்பூ.  நல்ல ரசனையுள்ள இவர் படைப்புகளும் வித்தியாசமானவை. இவர்பதிவிடும் பாடல்களின் தேர்ச்சி  இவரின் ரசனையை எண்ணி வியக்க வைக்கும்.

கலியுகம்: தினேஷ்குமாரின் வலைப்பூ. அவர் கவிதை பூனையும் வேகம் அசாத்தியமானது. இவரின் பாடுபொருள் தெரிவுகள் சில சமயம் பிரமிப்பூட்டுபவை. வார்த்தை சாரலில் தொலைந்து போய்விடுகிறாரோ அவ்வப்போது.? தினேஷ்! கொஞ்சம் பார்த்துக்குங்க. கைத்தட்ட நாங்க இருக்கிறோம்.

(லிங்க் கொடுப்பதில் மடிகணனி பிரச்னை உள்ளதால் பதிவர் அறிமுகம் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடருகிறேன், மன்னிக்கவும் )
மோகன்ஜி    என்னுடைய இளஞ்சாராயத்தை
என் கோப்பையு


மேலும் வாசிக்க...

Thursday, July 28, 2011

வலைச்சாரத்தில் ஒரு குயிலிறகு-4


கவிதைகள்

சூத்திரம்
மான்குட்டியை கவ்வும் வேங்கை 
தன்குட்டியை கவ்வும் பாங்கை
                       புரிந்து கொள்கிறேன்.
,
உறவுகளுக்கும் சூத்திரம் 
                            அதுதானென்பதோ,
பிறழ்வுகள் நேரும்வரை 
                        புரிவதேயில்லை.

மயக்கம் 

என்னதான் சொல்லு 
எச்சில் மாங்காய் 
என் விரதத்தைக் கலைத்ததேயில்லை

உன் பல்பதிந்த பகுதி.தவிர்த்து
மறுபுறம் சுவைக்கிறேன்.

உன் வாய்ப்பட்ட மாங்காய் 
புளிப்பானதென்று 
உன் முகச்சுழிப்பு ஒன்றாலேயே
தெரிகிறதெனக்கு.


முகமாயம் 

இற்றுப் போன குடிசைக் கூரைக்கு
மஞ்சள் பூசி அலங்கரிக்கும் 
                  பூசணிப் பூக்கள். 

சாந்துப்பொட்டாய் உச்சியில் ஒரு குயில் 

இருபுறமும் புருவமாய்   
வாலசைக்கும் அணில்களும். 

கண்களாய் சார்ந்த
கருப்பு டயரிரண்டு .

மூக்காய் முதிர்ந்த பூசணிக்காய்.
வாயாய் அகன்ற குடிசை வாசல் .

குடிசைக்கு எல்லாம் தான் இருக்கிறது 
வயிறொன்றைத் தவிர.


சலிப்பு 
எனக்கு பழகிவிட்டது
உன் ஈர முத்தமும் 
கண்டக்டர் எச்சிலும்  

உலரும் ஈரங்கள் 
ஊர்ப்பட்ட வாகனப்புகை 
உள்ளிழுக்கும் போக்குவரத்து போலீசை,
பார்க்கும் போதெல்லாம் 
பாவமாய்த்தான் இருந்தது.....

சாலைக் கடந்த தள்ளுவண்டி மடக்கி,
ஆப்பிள்களை அள்ளியதை காணும்வரை.

 இனி பதிவர்கள் அறிமுகப் படலம் 

எங்க கலையாத சங்கத்து சாமியாடிகள்!

மூன்றாம் சுழி : பதிவர் அப்பாதுரை அவர்களின் வலைப்பூ. இதில் இவர் வெளியிடும் கதைகள், நாடகங்கள், தேர்ந்த திரையிசைப் பாடல் அனைத்துமே இவரின் புதுமையான, வழக்கமான சிந்தனையை தவிர்த்தவையாய், தனித்து நிற்கின்றன. சட்டெனத் தலையில் தட்டி திருப்பும் வரிகள். கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம், நிறைய வியப்பு, கொஞ்சமே கொஞ்சம் சீண்டலெல்லாம் கலந்துகட்டிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
இவரின் நசிகேத வெண்பா இவரின் மேதைமையை வெளிப்படுத்தும் இன்னொரு வலைப்பூ. கடோபநிஷதத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கட்டுமானத்தை மீறாமல், இவரின் சில கொள்கைகளுக்கும் பங்கம் வராமல் எடுத்தாண்டிருக்கும் ரசவாதத்தை நீங்களே படித்தால்  மட்டுமே அனுபவிக்க இயலும். தளைதட்டாத வெண்பாக்களின் அழகா, வந்துவிழுகின்ற வார்த்தைகளின் வசீகரமா, தொடரும் விளக்கங்களா... எதைச் சொல்வேன்?..

தீராத விளையாட்டுப் பிள்ளை : ஆர்.வீ.எஸ் அவர்களின் புன்னகைப்பூ.இந்த ஐ.டீ அசுரன் தொடாத துறையில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவை லாரியில் அள்ளிக் கொண்டு வந்து அதகளப்படுத்தும் பொல்லாத பிள்ளை.
எதையும் நகையுணர்வோடு பார்க்கும் இவரின் எழுத்துக்களில் வார்த்தை ஜாலம், நக்கல் , சுய எள்ளல்எல்லாமும் உண்டு. 'சூப்பர், கலக்கல்' என்று பின்னூட்டம் போட்டுவிட்டு அலைபேசியில் திட்டும் உரிமை எனக்குண்டு. கொஞ்சம் மூடு கெடும் போதெல்லாம் இந்த வலைத்தளத்துக்கு செல்லுங்கள். விசிலடித்துக் கொண்டு திரும்புவீர்கள்!

ஆனந்த வாசிப்பு: பத்மநாபன் அவர்களின் வலைப்பூ. இவர் பதிவுகளை அத்திப்பூ என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி தென்படாத குறிஞ்சிப்பூ. ஆனாலும் ரசமான பின்னூட்டங்களால் அனைவர் தளத்தையும் அழகுபடுத்தும் வண்ணத்துப் பூச்சி இவர். வானவில்லின் நிறப்பிரிகையில் இவரின் சாயம்கூட ஒட்டிக் கொண்டிருக்கிறது. நன்றி பத்மநாபன்.

சிவகுமாரன் கவிதைகள் : கவிதையை சுவாசிக்கும் என் அன்புத்தம்பியை படித்தால் நீங்களும் நேசிப்பீர்கள். சந்தங்களின் அந்தம் காட்டும் இவர் கவிதைகளின் சொல் புதிது. பொருளும் புதிது. அருட்கவியென்று இன்னொரு ஆன்மீகப்பூவும் இவர் தோட்டத்தில் உண்டு. சென்று பாருங்கள். இருந்தமிழை இருந்து படியுங்கள்.

கைகள் அள்ளிய நீர் : சுந்தர்ஜி அவர்களின் வலைப்பூ. நானும் இவரின் கருத்துப் புனலை கைகளில் அள்ளி விடத்தான் பார்க்கிறேன். இயலவில்லை.  சங்கோஜ நடையுமுண்டு.. சாட்டை அடியுமுண்டு. பொலிவான சுந்தர்ஜீயின் வலையை அவசியம் பார்க்கவேண்டும் நீங்கள்..

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் அழகு வலைப்பூ. இவர் தேவன், கல்கி ஜாதி. 'மூவார்முத்து' என்று நான் சூட்டிய பேருக்கு இதுவரை சண்டை போடாதவர்.மெல்லிய நகைச்சுவை இழையோடும் உறுத்தாத தமிழை ரசிக்கலாம். தரனின் கீர்த்தனாஞ்சலி எனும் இன்னொரு வலைப்பூவில் இவரின் கீர்த்தனை சமைக்கும் அழகையும் பார்க்கலாம்.

ரிஷபன்: தோளில் தூக்கிய குழந்தை படம் போட்ட வலைப்பூங்க!. இவர் கதைகளைப் படித்தால் நீங்களும் அவர் தோளில் அமைதிமாய் கவலை மறந்து வாசிப்பானுபவம் கொண்டு மிதக்கலாம். சிறுகதை செதுக்கும் வித்தையை இவர் சில பதிவுகள் போட்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டும் என்பது என் ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து பாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.

 வானம் வெளித்த பின்னும் ஹேமா: என் கோபக்கார, சுவீகாரத் தங்கை. இவரின் இன்னொரு வலைப்பூ உப்புமட சந்திஎன் தங்கையாக இவள் இருப்பதால்தானோ என்னவோ, எதுஎழுதினாலும் எனக்கு பிடித்து போகிறது. அதனால் நீங்களே பார்த்துவிட்டு  மார்க் போடுங்கள். ( கொஞ்சமா போட்டீர்களானால் நான் அழுதுடுவேன் !)

மைத்துளிகள் மாதங்கி மௌளியின் வலைப்பூ . சிக்கனமான வார்த்தைப் பிரயோகத்தில் மனக்காட்சியை ஏற்படுத்தும் நல்ல எழுத்து. வித்தியாச பார்வை. இன்னமும் நிறைய எழுதுங்கள் மாதங்கி!

பாகீரதி :எல்.கே அவர்களின் வலைப்பூ. பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. புதுமையான கருத்துக்கள் கொண்ட இந்தப் பதிவர்  ஒரு நல்ல நாவலை செதுக்க வேண்டும். இது இந்த அண்ணனின் அன்புக் கட்டளை!

உள்ளதை (உள்ளத்தை)சொல்லுகிறேன் :சாய் அவர்களின் வலைப்பூ. ஒளிவு மறைவு இல்லாத எழுத்து. இவருடையது. ரசமான பதிவுகள் உண்டு. பாருங்கள் உடனே!

மணிராஜ் இராஜராஜேஸ்வரி: இவரின் ஸ்தல யாத்திரை பதிவுகள் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைக்கும். மேடம் பிடியுங்க இந்தப் பட்டத்தை...
"லையுலக சுந்தராம்பாள்  .K.P.S போல பக்தியை பரப்புங்கள்.

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் வலைப்பூ. நாங்கள் அவரை அழைப்பதென்னவோ பின்னூட்டப் பெருமாளு என்று. சுவையான கருத்துக்களை பதியும் இவரின் பதிவுகளை கண்டிப்பாய் ரசிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.

இன்னமும் இருக்குங்க 'பதிவார் திருக்கூட்டம்' . நாளை சந்திப்போம்.   
  
      






              
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது