07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2007

சுவாரசியமானவர்கள்

புதுசா வரவங்கள்ள [நான் எழுதவந்தே ஆறுமாசமாகல ]
என் கண்ணுக்குப்பட்ட சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்..சிலவற்றை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கலாம்..சிலவற்றை நீங்கள் கடந்துபோயிருக்கலாம்.. சிந்தாநதி ஆரம்பித்திருக்கும் முறையால் ஒருத்தருக்கொருத்தர்
நாம் பிடித்ததை அறிமுகப்படுத்திக் கொள்ள வசதியா இருக்கிறது.
நிறைய படிக்கிறேன் சிலவற்றை ஏற்கனவே வந்தவர்கள்
அறிமுகப்படுத்தி விட்டார்கள் உதாரணத்திற்கு ராதாவின் பதிவு.
இன்றைக்கு ஒரு மூன்று புதிய தளங்கள்.


அப்படியா ன்னு ஒருதளம்..அதன் படமே பாருங்க அருமையா இருக்கு.
உலகம் ஒரு சுவாரசியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே ஆரம்பிக்கறார் அதுல நிஜமாவே சுவாரசியமான வற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்

உலகத்தில் ஆபத்தான சாலைகளாம் பாருங்க்ளேன் அய்யோ ,,,
மரணத்தை அருகில் பார்த்தவர் இருக்கார் பாருங்க..ஒரு பெட்டியா இரண்டு பெட்டியா பத்து போகியும் தட தடன்னு தாண்டிப்போனா எப்படி இருக்கும் ...நினைச்சுப்பார்க்கவே முடியலயே...

பனிக்கரடியோடு ஒன்னா குளிக்கலாமாம் அது அப்படியே முகத்துக்கு நேரா வந்து அதோட வாயைத்திறந்து கர்கர்ன்னு ஒரு உறுமு உறுமுனா எப்படி இருக்கும்...பாருங்க படத்தை.


கிரிக்கெட் எழுத வந்தேன்ன்னு சொல்லிக்கிட்டு வந்தாலும் நிறைய சென் கதையெழுதி இருக்காங்க போய் படிச்சுப்பாருங்க கொஞ்சம் வாழ்க்கையில் பின்பற்ற கஷ்டமா இருந்தாலும் ஒரு விதமான அறிவுரைக்கதைகள். முயற்சி செய்யலாம் .
இந்த வயசுல படிக்கறதும் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதும் மட்டுமே
முக்கியம்ன்னு இல்லாம இப்படி அறிவை விசாலப்படுத்திக்கறது அவசியம்.
வாழ்த்துக்கள் ம்மா.


கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு நம்ம கூட குதுகலமா திருநெல்வேலிக்காரங்க
வந்துருக்காங்க ஒரு எட்டு போய் வந்துருங்க...ஊர் ஊருக்கு ஒரு விசேஷம் சொல்லி இருக்காங்க..சிலது நமக்கும் ஆசையை உண்டாக்குது.

அந்த அல்வா மேக்ரூன் எல்லாம் ஹ்ம்ம்...
அந்த அந்த ஊருல
இருக்கறவங்க கொடுத்து வச்சிருப்பாங்க போல.

அடுத்த பதிவோடு நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

வலைச்சரம் தொடுப்பவர் யார்?

வலைச்சரம் இருவாரங்களாக தன் செயல்பாட்டை தொலைத்திருந்தது. அதற்கு முழுமுதற் காரணமும் நானே!

எனது கணினியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் நினைத்த நேரத்தில் எழுத முடியாமல் போனதும் வேறு சில பிரச்சினைகளுமாக சரியான தொடர்புகள் ஏற்படுத்த முடியாமல் போனதும் கடந்த வாரம் நானே எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டு தொடர இயலாது போனது. எனினும் இனி இம்மாதிரி நிகழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்ய முனைகிறேன்.

இந்த வாரம் யார்?

அனைவரும் விரும்பும் அழகான பதிவுகள் மூலம் மனதைக் கவரும் தலைநகரத் திருமகள் சிறுமுயற்சி வலைப்பதிவாளர் முத்துலட்சுமி இதோ வருகிறார்.

கணினி நுட்ப பதிவுகள் தவிர மற்ற எல்லா விஷயங்கள் பற்றியும் பதிவு எழுதியிருக்கிறார். அவரது பதிவுகளிலேயே அவரது பல்துறை ஆர்வமும் முயற்சிகளும் தெரிகின்றன. அதனால் அவரது வலைப்பதிவுக்கும் சிறு முயற்சி என்று பெயர் வைத்திருப்பது பொருத்தம் தான்.

இனி ஓவர் டு முத்துலட்சுமி.
மேலும் வாசிக்க...

Friday, April 20, 2007

வந்தேன் நானே வலைச்சரம் தொடுக்க...

ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் உண்மை. தமிழ்மணத்தில் இந்த வாரம் நட்சத்திரமாக தமிழ்மணமே இருக்கும் இதே வாரத்தில் வலைச்சரத்திலும் அதே நிலைமை!

தமிழ்மணத்தில் நட்சத்திரத் தேர்வு என்பதும் வலைச்சர ஆசிரியர் தேர்வு என்பதும் பாரட்சமின்றி தேர்வு செய்யப் படும் ஒன்று. இதற்கு வெறுமனே யாராவது வருகிறீர்களா என்று அறிவிப்பு சொல்லி விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்வு செய்ய இயலாது. அப்படி எவரும் விண்ணப்பிக்கவும் மாட்டார்கள். குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வலைப்பதிவர்களில் இந்த வாரம் யாரை அழைக்கலாம் என்பதை நேரங்காலம் அறிந்து யோசித்து கேட்டு அவர்களின் சம்மதம் அறிந்து விவரம் தந்து தயார்ப்படுத்தி வர வேண்டிய விஷயங்கள் இவை. இன்னும் பலர் வர வேண்டியிருக்கிறது. நிறைய பேரை அழைக்கவே இல்லை. அழைக்காததற்கு காரணம் உதாசீனமல்ல. நேரக்குறைவே.

மின்னஞ்சல் முகவரி கிடைத்து அவர்களின் வசதி அறிந்து தர வேண்டும். இரண்டாவதாக வலைச்சரத்தைப் பொறுத்தவரை முந்திய வலைப்பூ ஆசிரியராக இருந்தவர்களை சற்று தாமதமாக அழைக்கலாம் இப்போதைக்கு புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று தீர்மானம். தேடுதல் அதிகரிக்கிறது.

உண்மையில் இது போன்ற முயற்சிகளும் சரி அதில் பங்கேற்பவர்களுக்கும் சரி மகிழ்ச்சிக்குரிய பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் நேரக்குறைவால் இதில் தேவைப்படும் கடுமையான உழைப்புக் காரணமாக தடுமாற்றங்கள் நிகழ்கின்றன.

தமிழ்மண நட்சத்திரத் தேர்வு பற்றி பலரும் பேசுவதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதையும் பாரபட்சமாக பேசுபவர்கள் இருப்பார்கள் தானே? புரிந்து கொள்ளவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

இடைவெளி, தாமதம் குறித்து இங்கே சொல்லிவிட்டதால் மீண்டும் சொல்லி போரடிக்கவில்லை.

-oOo-

நான் படித்த பதிவு இடுகைகளில் சில....

இலக்கணப் பிழைகள் பற்றிய பதிவென்றதும் உள்ளே நுழைந்து பார்த்தால் அது ஆங்கில இலக்கணம். ஆனாலும் நமக்கெல்லாம் ஏற்படும் சின்னச்சின்ன பிழைகள் பற்றி கூறியிருக்கிறார் பகீ.

இந்த பூமிக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை நீக்கி சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்! குறித்து பேசுகிறார் இவர்.

சமீபத்தில் விவாதத்துக்குள்ளாகிய இரு பிரபலங்களின் தேசப்பற்று பற்றாக்குறை சார்ந்த விவாதம் பற்றி இவரது கருத்தையும் பார்ப்போம்.

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11 என்று 11வது பதிவாக விளக்கி வருகிறார் இந்த சங்கத் தோழர்.

தொடர்ந்து தொழில் நுட்ப பதிவுகளாகத் தரும் தமிழ்ப்பித்தன் இங்கே உரையாடல் களைப் பதிவு செய்ய ஒரு தளத்தை அறிமுகம் செய்கிறார்.
மேலும் வாசிக்க...

Monday, April 16, 2007

ஆசிரியர் பராக்

வித்தியாசமான தொகுப்புகளை இட்டு போனவார வலைச்சரம் தொகுத்து தந்தார் சென்ஷி.அவர் இட்ட ஆறு பதிவுகளில் நான்கு பதிவுகளுக்கு வெவ்வேறு தீம்களை எடுத்துக் கொண்டு அதனுள் பதிவுகளை அறிமுகம் செய்திருந்தது (உ-ம் : புத்தக விமர்சகர்கள்) முன்மாதிரியான வரவேற்கத்தகுந்த முயற்சி. வாழ்த்துக்கள் சென்ஷி.

அடுத்த ஆசிரியர் யார் என்று அறிவிக்க வேண்டும் இன்று...

இதழுக்கான வேலை மற்றும் விடுமுறைக்கால உறவினர்கள் காரணமாக நண்பர்களைத் தொடர்பு கொள்ள தவறி விட்டேன். ஏற்கனவே தொடர்பு கொண்டு வலைச்சரம் தொடுக்க கேட்டிருந்த நண்பர்கள் வேலை நெருக்கடி காரணமாக தொடரும் வாரங்களில் செய்யலாம் என்று சொல்லிவிட கடைசியாக ஆர்வமாக முன்வந்த நண்பர் கூட வலைப்பதிவுகளில் நடந்து வரும் கூத்துகளைப் பார்த்து விட்டு இந்த வாரம் நமக்கு வேணாம்பா ஒரேயடியா ஆட்டை இல்ல ஆபரேசன் இதுதான் இருக்கு இந்த வாரம் முழுக்க. இதுல வலைச்சரத்தில் எதைப் போட என்று சென்று விட்டார். கடைசியில் பயங்கர யோசனைக்குப் பிறகு மாட்டியவருக்கு வேறு வழியே இல்லை.

ஆகவே நண்பர்களே இந்த வாரம் வலைச்சரம் தொடுப்பவர் இவர்தான். இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, April 14, 2007

உயிர் எழுத்துக்கள் மூன்று

தலைப்பை ஆசான் டைப்படித்ததும் கோவிஞ்சாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

"வாத்யாரே.. நீ பெரியாளாக்கீறேப்பா... இவ்ளோ நாளா நான் தமிழ்ல உசுர் எழுத்து அதிகமா இருக்குதுன்னு நெனெச்சுக்கிட்டிர்ந்தேன்...
உனக்கெப்படி இப்படி"

"கோயிஞ்சாமி, தமிழ்ல நிறைய்ய இலக்கியங்கள் இருக்குது. ஆனா நம்மாளுங்க திருக்குறளையும், ராமாயணத்தையும் விட்டா உதாரணம் காட்ட வேற எதையும் தொட மாட்டேங்கிறாங்க."

"நீ என்னப்பா... எப்பவுமே தாடிய விட்டுக்கொடுக்காம பேசுவ.. இப்போ இப்படி ஜகா வாங்கிட்ட?"

"கோயிந்த், நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே... திருக்குறள படிக்குற எல்லோருமே அத்தோட நிறுத்தாம பண்டைய இலக்கியங்களையும் படிக்கணும்னு சொல்ல வர்றேன்"

"நீ வேற வாத்தியாரே, நம்ம இம்சை ரவி ஏற்கனவே தேவையில்லாத பாடத்த நடத்துன வாத்தியார் மேல ஆசிட் ஊத்தனும்னு அலையறாரு. இந்த நேரத்துல நீ வேற இப்படி பழச பத்தி ஆரம்பிச்சா ஆசிட், பினாயில்ன்னு கைக்கு கிடைச்சத எடுத்துக்கினு வந்திடப் போறாரு.."

"ஒரு விஷயம் தெரிஞ்சுக்கனும் கோயிந்த், எந்த ஒரு விஷயத்தையும் வெளியில இருந்து பாக்குறப்ப அது கஷ்டமாத்தான் தெரியும். ஆங்கிலத்தை உலகமொழியா மாத்துனதுல தமிழோனட பங்கு இல்லைன்னு நினைக்குறியா.. !

நாம நம்ம இலக்கியத்த வளர்க்காம வேற யாரு செய்வா?

நம்ம இலக்கியத்துல இல்லாத காதலையா நீ சேக்ஸ்பியரோட ஹாம்லெட்ல தேடப்போற... இல்லை நம்ம ராஜாக்கள் வீரத்தை விட நெப்போலியன் எந்த விதத்துல பெரியவனா காட்டப்போறே..?"

"அய்யோ மன்னிச்சுக்க வாத்தியாரே... தமிழன் வாழ்க..
இப்போ ஒத்துக்குறியா.. சரி இன்னிக்கு எந்த பதிவு சொல்லப்போறேன்னு இவ்வளவு பில்டப்பு..."

'அடப்பாவி.. நான் உணர்ச்சிவசப்பட்டு பேசறத கிண்டல் பண்றியா..

அருணா ஸ்ரீநிவாசனோட அலைகள்ங்கற பதிவுல கேள்விகள் ஆயிரம்ங்கற படைப்ப படிச்சுப்பாரு.. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்.."

"அதுக்கில்ல வாத்தியாரே... தமிழ வளர்க்கணும்ன்னு சொல்றப்ப ஒரு விஷயம் புரியல எனக்கு.. அத்த யார் அழிக்கப்போறா, நாம வாழ வைக்கிறதுக்கு.."

"இதுக்கு நான் பதில் சொல்றதவிட ஜெசிலா மேடம் எழுதுன தமிழ் சாகடிக்கப்படுகிறதாங்கற பதிவு படிச்சா உனக்கே எல்லாம் புரியும்.."

"சரி ஆசான்.. எனக்கும் இலக்கியத்துமேல ஆச வந்து அத்த படிக்கனும்னு வை. யாராண்ட போறது. எதுனா ஐடீயா கொடு.... இத்த சாக்கா வச்சிக்குனு உன்னோட கிளாஸ்லயே 5வதா என்னயும் உக்கார வச்சிடாதே..!"

"சொல் ஒரு சொல் ங்கற பதிவுக்கு போய் எல்லா பதிவயும் படி.. பிறமொழி சொல் கலப்பில்லாம எத்தனை வார்த்தைகளை நாம பேச முடியும்ன்னு வகைப்படுத்தியிருக்காங்க...

இது 4 பேர் கொண்ட குழு பதிவு... இவங்களோட பதிவுல செருங்கற பதிவு நகைச்சுவையா கருத்து சொல்றாமாதிரி அமைச்சிருப்பாங்க.. உனக்கு ஏதாவது இலக்கியத்தப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடு.. பதில விக்கிப்பசங்க மாதிரி தேடித்தருவாங்க.."

"எனக்கு கூட ஒரு இலக்கியப்பாட்டு தெரியும் வாத்யாரே...
ஓராயிரம் யானை கொன்றால் பரணின்னு ஒரு பாட்டு கேட்டிருக்கேன், இதுக்கு என்ன அர்த்தம், பரணின்னு பேர வைக்க 1000 யானைய கொல்லணுமா?"

"அதுக்கு அர்த்தம் அது இல்ல கோவிந்த்.. அந்த காலத்துல போர்ல ஜெயிச்ச மன்னர்களை புகழ்ந்து கவிஞர்கள், பாணர்கள்லாம் பாட்டு பாடி பரிசு வாங்கிப்போவாங்க.. அப்படி ஒரு கவிஞர் எழுதுன கலிங்கத்துபரணிங்கற நூல்ல மன்னன் வீரத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சதுக்காக இந்த பரணிப்பாட்டு எழுதினாங்க...."

"பொன்ஸ் அக்கா ஒரு யானைக்கு அடிப்பட்டாலே வருத்தப்படுவாங்க.
1000 யானய கொன்னது தெரிஞ்சா என்ன செய்வாங்க...!

நான் மறந்துட்டேன் பாத்தியா... அதென்ன உயிர் எழுத்துக்கள் மூன்று.. அத்த சொல்லு வாத்திய்யாரே.."

"அது ஒண்ணுமில்ல கோவிந்த்... யோசிப்பவர் ஸ்டைல்ல நானும் ஒருபதிவு போடலாம்ன்னு நினைச்சேன். அதான் இப்படி"

"எப்படி?"

"உயிர்-ங்கற வார்த்தையில இருக்குற எழுத்து எத்தனை?"

"மூணு"

"அதான் தலைப்பு.."
மேலும் வாசிக்க...

சித்திரை திருநாள்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வலைச்சரம் சார்பாக எங்கள் ஆசிரியர் குழுவினரின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

சென்ஷி
மேலும் வாசிக்க...

Friday, April 13, 2007

சில சிறந்த சிறு கதைகள்...

மன்னிக்கவும் நண்பர்களே...

கடும் அலுவலக பணியின் காரணமாய் என் தமிழ்மண பணியினை சரிவர செய்ய இயலாமல் சென்றதற்கு என்னை மன்னிக்கவும்..

எனக்கு சிறுகதை ரொம்ப பிடிக்கும். அநாவசியமா வர்ணனை இல்லாம கருத்தை சரியா பதிய வைக்கிற முயற்சி எல்லோருக்கும் வரும்ன்னு எனக்கு தோணல. அப்படி என்னை பாதிச்ச சில கதைகள இங்க பட்டியல் போட்டிருக்கேன்.

முதலில் சேவியர் இவரது ஏலி ஏலிலெமா சபக்தானி கதையை திண்ணையில் படித்து இருக்கிறேன்.. இது முதல் பரிசு பெற்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பக்க வடிவமைப்பு, நிறம் மிக நேர்த்தியானது. அதே போல் இவரது கடவுள் கேட்ட லிப்ட் கதையும் எனக்கு பிடித்தமானது. இவரது பதிவுகளில் கதைகளில், கவிதைகளில் மயங்குவோர் கண்டிப்பாக திரும்பியும் வருவார்கள்.

அடுத்து சத்யராஜ்குமார் இவரது அமெரிக்க சிறுகதைகளும் பிரபலம். எனக்கு பிடித்த பக்கங்களில் வருபவை... எளிமையாய் விஷயத்தை அருகில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் இவரது கதைகளில்..

அப்புறம் மோகன் தாஸ், இவர் பக்கத்தை நான் கூகிளில் பார்த்தது தபூசங்கரின் கவிதைகளுக்காக.. ஆனால் மனிதர் சிறுகதைகளில் அடி பின்னியிருந்தார். இவரது நாயகி, என்றும் மாறியதில்லை. யாஹூ குழுமத்தில் போட்டோ போட்டிருந்தார். சரி நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள ஒரு நபர். அநியாயத்துக்கு புரியாத வண்ணம் (எனக்கு) கிரிப்டோ கிராஃபி, ஜல்லி போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்தியவர்.


அப்புறம் எங்க வாத்தியார்.... என் வலையுலக முதல் நண்பர், குரு எல்லாமே... எங்களை கிளாஸ்ல சேத்துக்கிட்டு எங்க அதகளத்தையும் பொறுத்துக்கிட்டு புது விஷயங்களை கத்துக் கொடுக்கறவர். அவரோட கிளாஸ்ரூம்ல எனக்கு இடம் இருக்குங்கறது எனக்கு சந்தோஷமான விஷயம். இவரும் சிறுகதை எழுத்தாளர்ன்னு சொன்னா என் கிளாஸ்மேட்ஸ் என்னை அடிக்க வருவாங்க. கிளாஸ்ரூமுக்கு வர்றதால சிறுகதைய மறந்துட்டாருன்னு நினைக்கிறேன்.. மறுபடியும் அவர் எழுதணும்னு ஆசைப்படுறேன்.


அடுத்து சஞ்சீத்... பெங்களூர் வாசி.. இவரும் சிறுகதை எழுத்தாளர். இவருடைய கதைகள் விமர்சனம் செய்வது எளிதல்ல. இவரது என் பெயர் சித்ரா கதையை படித்த அன்று தூக்கம் வராமல் இருந்திருக்கிறேன்..

இப்போது இவர் எழுதுகிறாரா.. இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

இன்னும் நிறைய பேர் சிறுகதை எழுதறாங்க..

ஜோசப் சார், உஷாக்கா, வெட்டிபாலாஜி, பொன்ஸ், முத்துலட்சுமி.. இன்னும் நிறைய பேர சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. மன்னிச்சுக்குங்க..

இன்னும் உங்களுக்கு தமிழ் கதை படிக்க ஆசைன்னா இந்த லிங்க தட்டுங்க.

இது மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்துல பழைய கதைகள், தொடர்கள், இலக்கிய பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தி வச்சிருக்காங்க. நான் இதுல தான் முதன் முதல்ல பொன்னியின் செல்வன் படிச்சேன்.. அழகா pdf செஞ்சு வச்சிருக்கறதால ப்ரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்..

படிச்சு பாத்துட்டு ஜமாயுங்க...........


அன்புடன்

சென்ஷி
மேலும் வாசிக்க...

புத்தக விமர்சகர்கள்

"மன்னிச்சுக்க வாத்யாரே" என்றபடி உள்ளே நுழைந்த கோயிந்தசாமியை வாத்தியார் முறைத்தார்.

"நான் என்ன பண்றது வாத்யாரே.. டிராபிக்ல மாட்டிக்கினேன்.. அத்த வுடு.. இன்னிக்கு நான் படிச்ச ஒரு மேட்டர் செம்ம சூப்பரா இருந்ததுப்பா.."
"அப்படியா.. யார் அது..."

"மதியழகன் சுப்பையான்னு ஒரு பதிவர், ரொம்ப அருமையா 'அடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தாமல் லாபத்தை பெறுவது எப்படிங்கறத தமிழாக்கம் பண்ணியிருக்காரு.. படிக்கச்சொல்ல செம்மயா இருந்தது. தெரியுமா?"

"சரி.. அவ்வளவுதான் உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்.. மும்பையிலிருந்து எழுதுற இந்த பதிவரோட கவிதைகள் வித்தியாசமான படிமங்களை கொண்டது. அதிலும் இவர் ஹிந்தியிலேந்து மொழிமாற்றம் செஞ்சு கதைகளை கொடுப்பாரு. சிட்டுக்குருவிங்கற கதை ரொம்ப நல்லா இருக்கும்"

"சரி தல... இந்த மாதிரி வெளிநாட்டு கதைய தமிழ்ல சொல்றவங்க வேற யாரெல்லாம் இருக்காங்க"

"இதுக்கு நீ சுருக்கமா யாரெல்லாம் புத்தக விமர்சனம் பண்ணுவாங்கன்னு கேட்டுருக்கலாம்..

புரட்டிப்போட்ட புத்தகங்கள் ங்கற பதிவுல மா.சிவகுமார், யோசிப்பவர், வசந்த் இவங்க மூணுபேரும் குழு பதிவரா இருந்து அவங்க படிச்ச சிறந்த புக்ஸை பத்தி ரொம்ப சுவாரசியமா விமர்சனம் செய்றாங்க... அதுல ஹைலைட் பதிவு வெற்றிக்கு ஏழு வழிகள்ங்கறது, இங்கிலீஷ்ன்னு இல்லாம தமிழ் புக்ஸைப்பத்தியும் விமர்சனம் இங்கே கிடைக்கும். நிறைய புக்ஸைப் பத்தி தெரிஞ்சுக்க இது ஒரு சுவாரஸ்யமான பதிவு... அப்புறம் பாலபாரதி தன்னோட படித்ததில் பிடித்ததுலயும் இதே வேலைய செய்யறாரு.. அவரோட ஸ்டைல்ல..

மலையாளக்கரையோரத்தப் பத்தி ஆசிப்மீரான் கலக்குறாரு.. இப்படி எல்லோருமே ஒரு ஸ்டைல் வச்சிருக்காங்க்.

சினிமாவுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தவிட இவங்க புக்ஸுக்கு கொடுக்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம்"

'உண்மைதான் வாத்யாரே.... இதுல இன்னொரு முக்கியமான விமர்சனம நந்தாங்கறவரு இன்னிக்கு தமிழ்மணத்துல வந்திருக்கு.. சினிமாவ விமர்சனம் பண்றதுக்கு எது அளவுகோலுன்னு நல்லா கேட்டாருப்பா ஒரு கேள்விய... சூப்பர் பதிவுப்பா.. அப்பால நாம சினிமா கண்டுக்கலனு யாரும் சொல்லிடக்கூடாது பாரு.. அதனால தான் இது.. அக்காங்.."
மேலும் வாசிக்க...

Tuesday, April 10, 2007

லிவிங்ஸ்மைலுக்கு வாழ்த்துக்கள்

கணிணியில் அன்றைய தினத்தந்தி செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த ஆசான் கோயிந்ஞ்சாமியின் வருகையில் நிமிர்ந்தார்.

"வா கோயிந்தசாமி... விஷயம் தெரியுமா? நம்ம பதிவர்ல ஒருத்தவங்க சினிமாவுல நடிக்கப்போறாங்க"

"யார் நம்ம தலயா?.... இன்னா வேஷம்பா... சும்மா ஆளு ஹீரோ கணக்கா கீறாருன்னு மெய்யாலுமே சினிமாவுல பூட்டாரா.. இனிமே பதிவெல்லாம் எழுதுவாராமா... நான் அர்ஜீண்டா போயி ஒரு சலாம் போட்டுட்டு வந்துடறேன்"

"டேய்... அது நம்ம தலயும் இல்ல, வாலுமில்ல.. லிவிங் ஸ்மைல் வித்யா தான் அது.. "கருவறை பூக்கள்' ன்னு ஒரு படத்துல நடிக்குறாங்க.. இரு...
தினத்தந்தியில என்ன போட்டுருக்கோ அதை அப்படியே படிக்குறேன் கேளு..

"வாழ்த்து சொல்லிடுவோம் வாத்தியாரே"

'சொல்லிட்டா போச்சு... வாழ்த்துக்கள் வித்யா.. அப்புறம் கோயிந்து இவங்க எப்பவுமே வித்தியாசமா கோபமா எழுதுறவங்க.. அவங்க எழுத்துல உனக்கு ரொம்ப பிடிச்சதா ஒரு பதிவு சொல்ல சொன்னா எதை சொல்வே"

"இன்னா வாத்யாரே இப்படி சொல்லிட்டே.... அந்த மரணம் கவித எவ்ளோ நல்லா இருந்தது.. தெரியுமா... "

"அப்பால இன்னிக்கு எதுனா ஸ்பெசல் இருக்குதா வாத்யாரே"

"ஏன் இல்லாம... காட்டாறுன்னு ஒருத்தர் வந்திருக்காங்க.... பதிவும் தலைப்பு மாதிரியே காட்டமா இருக்கும்ன்னு உள்ள போனா அதிர்ச்சிதான் இருக்கும். ஒரு பதிவு எழுதி அது சம்மந்தமா ஒரு அழகான கவிதையையும் தர்றாங்க..
அதுல எனக்கு பிடிச்சது டி.வி.யைப் பத்தி எழுதுனது இந்த கவிதை...

"ஆனாலும் நம்மள ஓவரா சிந்திக்க வைக்கிறது இந்த அண்ணாச்சிதான்... ஒரு கவுஜ எழுதுனா.. அவரு என்ன எழுதியிருக்குறாருன்னு நாம சிந்திக்குறதுக்குள்ள அது புரிஞ்சவங்க பதில கவுஜயா போட்டுடுவாங்க... அதுல தமிழ்மணத்த பதிவுகளால வாழ வைக்குறதுல முக்கியமான ஆளு இவரு"

"உண்மைதான் கோயிந்து... உன்ன மாதிரி எங்க வம்பு கிடைக்கும்ன்னு அலையறவங்களுக்கு எல்லாம் அவர்தான் குரு"

"அப்பால யாழினி அத்தன், சில்வண்டு, கார்மேக ராஜா இவங்க கவுஜய கூடத்தான் நான் படிக்குறேன்.. நல்லா எழுதுறாங்கப்பா கவுஜய."

"ஆனா வாத்தியாரே... நான் காதல் கவுஜ எழுதுறவங்களை பத்தி சொல்லலன்னா நல்லா இருக்காது.."

"அத எழுதாதவங்க யாராச்சும் இருந்தா சொல்லு.. அவங்க பேர சொல்வோம்"
மேலும் வாசிக்க...

Monday, April 9, 2007

உப்புமா கேசரி ஆகும் கதை....

பொதுவா எல்லோர் வீட்லயும் உப்புமா செய்வாங்க. ரவாவுல, அரிசியில, கோதுமையில் இன்னும் விதவிதமா உப்புமா செய்வாங்க.

ஆனா நமக்கு உப்புமா பிடிக்காதுன்னு வைங்க.. அதுல ரெண்டு முந்திரி பருப்பு, திராட்சை அப்புறம் சக்கர எல்லாம் போட்டு கொஞ்சம் கலர் பவுடர தூவி அதுக்கு கேசரின்னு பேர் வச்சு தருவாங்க.

நாமளும் அதுக்கு கேசரிங்கற பேர் வச்சதால இனிப்புன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுவோம். :)

அப்படித்தான் நானும் என் பதிவு எல்லாமே உப்புமா. இருந்தாலும், பாராட்டி பின்னூட்டம் போடுறதுல கேசரி இல்லன்னா சில பார்ட்டிங்களுக்கு அல்வாவே கொடுத்துருக்கேன்.. அவங்களும் இவன் ரொம்ப நல்லவனா இருக்காண்டா... என்னத்த எழுதுனாலும் படிக்குறான்னு நெனச்சுக்கிட்டு அநியாயத்துக்கு மொக்க போட்டாலும் (இம்சை ரவி மாதிரி) சில நேரம் முடியாம நல்ல பதிவு கிடைச்சிடும். இந்த மாதிரி நல்ல பதிவு படிக்கணும்ங்கறதுக்காகவே எல்லோரோட பதிவயும் படிக்க வேண்டியிருந்தது..

முதல்ல பதிவுலகுக்கு வந்து முதல் பதிவு எழுதி வச்சப்புறம் பின்னூட்டத்துல யாரயுமே காணோம். அப்புறமா போனாப்போகுதுன்னு நாட்டம ஷ்யாம் வந்து முதல் பின்னூட்டம் போட்டாரு. அதுக்கப்புறம் காணாம போன ஆளுதான் (அவரு பதிவு பேரு - தினமும் என்னை கவனி) நம்ம பக்கம் இன்னிவரைக்கும் எட்டிப்பாத்துக்கறேன். முதல் பின்னூட்டம் போட்ட வகையில நாட்டாமைக்கு என் நன்றிகள்... :)

நான் தனியா எல்லா பதிவையும் படிச்சு எழுதப்போறேன் போலருக்குன்னு நினைக்காதீங்க. சிட்டிசன்ல அஜீத் சொல்றாமாதிரி நான் தனியாளு இல்லன்னு கத்த ஆசைதான் :)

உண்மைதான்... இனிமே அடுத்த பதிவுலேந்து ஒரு வாரம் உங்களை இம்சைபடுத்த நான் தனியா வரப்போறதில்ல.

என்கூட கூட்டு, பொறியல், அவியல் எல்லாம் செய்யப்போறது....

அடுத்த பதிவுல பாத்துக்குங்களேன்....

[பி.கு. : என்னடா... உப்புமா ஆரம்பிச்சு அவியல்ல முடிக்கறானேன்னு யோசிக்காதீங்க... நான் எல்லாத்திலயும் ஒரு தொடர்ச்சி இருக்கணும்னு எதிர்பார்க்குறேன் :)]

காதலுடன்

சென்ஷி

மேலும் வாசிக்க...

வருகிறார் வலைப்பதிவுக் காதலன்

வலைச்சர தொகுப்பில் இலக்கிய நயம்தோன்ற ஆறு பதிவுகள் இட்டுள்ளார் நண்பர் மலைநாடான். அதிகமான பதிவு இடுகைகள் அறிமுகப் படுத்தப் படவில்லை என்றொரு குறையினை தவிர்த்து சிந்தனைக்கு விருந்தாகும் அவரது பதிவுகளில் ஈழத்து எண்ணங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் குரல், ஒலிப்பதிவுகள் போன்ற மாறுபட்ட தளங்களை அறிமுகம் செய்வித்தார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றிகள்.

விடுமுறைக்காலம் என்பதால் திங்கள் முதல் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு இன்று முதல் வலைச்சரம் தொடுக்கப் போகிறவர் யார் தெரியுமா?

இதோ வருகிறார் பின்னூட்டத் திலகமாகத் திகழும் வலைப்பதிவுக் காதலன் சென்ஷி. வலைப்பதிவுகளைப் படித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் சென்ஷி தன்னைக் கவர்ந்த பதிவுகளை வலைச்சரம் தொடுத்து நமக்குத் தரவிருக்கிறார்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 4, 2007

உன்னால் முடியும் தம்பி தம்பி!



சிந்தாநதி இந்தப்பொறுப்பைத் தரும் போதே ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது ஒலிப்பதிவுகள் குறித்தும் ஒரு இடுகை கண்டிப்பாக இடவேண்டுமென்று. ஏனெனில் அது நீங்கள் சார்ந்ததுறை என ஒரு சொட்டும் வைத்தார். எனக்கு என்னமோ அது குட்டு மாதிரியே தெரிஞ்தது. இது குறித்து என் எண்ணங்களை எழுத முன் பலதடவைகள் யோசித்தேன். எழுதலாமா கூடாதென்றுதான். பின் சரி எல்லோரும் நம் நண்பர்கள்தானே..எதுவும் தவறாக எண்ணமாட்டார்கள் என்பதால் எழுதுகின்றேன். ஆனால் இதை ஒரு பொதுப்பார்வையாகவே வைக்கின்றேன்.

இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன். ஏதோ ஒரு பதிவு எழுதிவிடுவோம் என்பதோடு முடிந்து போகிறது எங்களில் பலரது எண்ணச்செயற்பாடு. இதையும் தாண்டி இப்போது சில ஒலிப்பதிவு முயற்சிகள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவற்றின் போக்கு என்னவோ எனக்கு அது திருப்தி தருவதாக இல்லை.
என் சிறுவயதுமுதல் வானொலி மீதான ஈடுபாடும், அதிலே பலகாலம் பங்காற்றிய அனுபவங்களும், இணையப்பரப்பில், அத்தகைய ஒரு வாய்ப்பினைக் கண்டபோது அதைப்பின்பற்றத் தூண்டியது. அந்த ஆர்வத்தில் தொடங்கியதுதான் “இணையத்தில் இன்பத் தமிழ் “. இதன் தயாரிப்புக்காக நான் எடுத்துக்கொள்ளும் நேரமும் தேடலும் சற்று அதிகம்தான். ஆனாலும், அதை அவ்விதமே செய்ய வேண்டுமென்பதில் குறியாகவே இருக்கின்றேன். அப்படியிருந்தும், எனது எல்லா நிகழ்ச்சிப்பதிவுகளும், எனக்குத் திருப்தியாக அமைந்துவிடுவதில்லை.

நான் சென்று வாசிக்கும், பார்க்கும், கேட்கும், எந்தவொரு ஊடகத்திலிருந்தும் ஏதாவது ஒன்று என்னை ஒழுங்கமைக்க உதவுவதாக இருக்க வேண்டும் என்பதும், அதேபோல் என்பதிவுக்கு வரும் ஒருவருக்கு நானும் அப்படியே ஏதாவது வழங்குவதாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றேன். அதனாலேதான் அனுபவங்களால் கற்றுக்கொண்ட, மற்றவர்கள் பலர் அதிகம் அறிந்திராத, என்தேசத்து வாழ்வியலையே அதிகம் பிரசவிக்கின்றன என் படைப்புக்கள். பலரும் உலாவரும் ஒரு ஊடகத்தில், நம்மால் படைக்கப்படும் ஒரு படைப்பு, அந்தப்படைப்பிற்குரிய பயன்பாட்டினைச் சரியாகத் தராதவிடத்து அதன் பெறுமதி கேள்விக்குரியதாகிவிடுகிறது. சிலவேளைகளில் கேலிக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

நகைச்சுவை ஒரு இதமான ரசனை. அதனூடு பல செய்திகளை யாரும் வலிக்காத வண்ணம் சொல்லிவிட முடியும். நிதர்சனத்தின் தயாரிப்பில் வந்த ஒரு குறும்படத்தில் (பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு காட்சி. ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தான் மாற்ற வேண்டிய ஆடைகளை அதனுள்ளிருந்து ஒருவர் எடுப்பார். பார்வையாளர்கள் ஒரு கணம் சிரிப்பார்கள் ஆனால் மறுகணத்தில் அந்தச்சிரிப்பு மாறி, அதனுள்ளிருக்கும் துயரின் வலியை உணர்வார்கள். இப்படிப் பல சொல்லலாம்.

நாம் சார்ந்த சமுகத்திற்கு மேம்பாடான கருத்துக்களைத் தரக் கூடிய ஒரு ஊடகத்தில், நகைச்சுவை என்பதாக நமக்குள் பேசிக்கொள்வதையெல்லாம் அரங்கேற்றிக் கொள்வது ஆரோக்கியமானதாக எண்ணமுடியவில்லை. அதிலும் அவ்வாறான படைப்புக்களை ஆற்றுபவர்கள் மிகநல்ல திறமைசாலிகளாக இருந்தும், இப்படி இயங்குவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. “ எந்நேரமும் சிரீயஸாக இல்லாமல் இடைக்கிடை இப்படியும் இருக்கத்தானே வேண்டும்.. “ என்பவர்களுக்கு, இருங்கள் தப்பில்லை. அதற்குள்ளும் ஒரு தார்மீகத்தை தருவதற்கு முயற்சியுங்கள் என்பதே என் வாதம். சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களின் கொள்கை வாசகம் “ சிரிப்பே சீவியம் “ .அவரது வாழ்வும் அத்தகையதே. அதற்காக அவரது படைப்புக்கள் அத்தனையும், ஏதோ ஒரு செய்தி சொல்லி நிற்கவில்லையா. அதனூடாகவே அவர் ஒரு சமூகப் போராளியாக அறியப்படவில்லையா?. இப்படியெல்லாம் எழுதுவதால் ஏதோ நான் சிரிக்கத் தெரியாத ஆளென்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்.


இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வலைப்பதிவுலகில் ஒலிப்பதிவுகள் என்பது ஆரம்ப நிலையில் இருக்கும் இவ்வேளையில், அச்சுப்புத்தகங்கள் ஒலிப்புத்தங்களாகவும் உருவாக்கம் பெற்று வரும் இவ்வேளையில், உங்கள் குறுகிய முயற்சிகள் பிழையான முன்னுதாரணங்களாகப் போய்விடக் கூடாதெனும் ஆதங்கத்திலும் தான் இதைச்சொல்லவிழைந்தேன்.

காலங்கடத்தும் வாழுங்கலைஞராக, கலைஞனின் படைப்பாக, நீங்களும், உங்கள் படைப்புக்களும் வாழவேண்டுமெனும் ஆசையால் எழுதுகின்றேன். பின்னூட்டங்களின் வருகைக்குச் சிரிப்புத் தோரணங்கட்டுபவர்களாக இருக்காதீர்கள். உங்கள் சிறப்புக்கும் சிரிப்புக்கும் மற்றவர்கள் தோரணங்கட்டும்படியா ஆகிடுங்கள் என்றே சொல்கின்றேன். அது சுகமானதாகத் தோற்றம் தரலாம், ஆனால் ஒரு கட்டத்தின் பின் அவை உங்களுக்கே அலுத்துப்போகலாம். அல்லது அதற்குமேல் போகமுடியாதவாறும் போய்விடலாம். கூட்டத்தினர் கைதட்டலுக்கு ஆடும் வேடம்கட்டிய கோமாளியா? அல்லது ஒரு கூட்டத்தின் மேம்பாட்டிற்கான போராளியா? எதுவாக இருக்கப்போகின்றீர்கள் என்பது இறுதியில் உங்களுக்கானதே.


அன்மையில் நான் ரசித்த ஒரு ஒலிப்பதிவை இங்கே கேளுங்கள். இதுபோலல்ல, இதற்கு மேலாகவும் உங்களால் படைக்க முடியும். அந்தத்திறன் உங்களிடமெல்லாம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொண்டதால் சொல்கின்றேன் உன்னால் முடியும் தம்பி!தம்பி!.
மேலும் வாசிக்க...

Tuesday, April 3, 2007

எங்கிருந்து எங்கு....?

சென்ற வாரத்தில், இணைய நண்பர் ஒருவருடன் சிறுபராய நினைவுகள் குறித்து உரையாடும்போது சொன்னார், சின்னவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் தன்னையும் சேர்த்துவிடுவார்களாம், தானும் போட்டியன்று அதற்கான உடையெல்லாம் அணிந்து, ஊட்டசக்திபெறவெனத் தரப்படும், குளுக்கோஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, சத்தம் போடாமல் வேலிக்கால் புகுந்து, அருகேயுள்ள தன்வீட்டிற்குச் சென்று விடுவாராம். போட்டிநேரத்துக்கு போட்டியாளர்களை அழைத்தால், தன்னைக் காணக்கிடையாதென்று. கிட்டதட்ட அதுபோல்தான் வலைச்சரம் தொகுப்பாசிரியராக என் பதவிப்பொறுப்பும் இவ்வாரத்தில் ஆகிவிட்டது. பெரிய தடாலடியாக எழுத்தைப்பற்றியெல்லாம் எடுத்துவிட்டு, அதற்கு நாலுபேர் வந்து(உண்மையிலேயே நாலு பேர்தானுங்க:)) ஊட்டமெல்லாம் தந்து, உசுப்பேத்திவிட, இரண்டு பதிவு போட்டுவிட்டு, இருந்த இடமே தெரியாமல் ஒடிவிட்டேன்.
மன்னிக்க வேண்டும் நண்பர்களே! சிந்தாநதி நீங்களும்தான். இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. ஞாயிறு பகல் தமிழ்மணத்தின் வழங்குநிலைக் குழப்பமும், திங்கள் என் உடல்நிலைக்குழப்பமும், ஒன்றாகத் தாக்கியதால், ஆட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டி வந்திற்று. ஆனாலும் திரும்பவும் வந்தாயிற்று. நாளை பதவியிலிருந்து கலைப்பதற்குள் முடிந்தவரை, இடைவெளியை நிரவி, ஆட்டக்கணக்கிற்கு வந்துவிடுவேன் என்று நம்புகின்றேன். பார்க்கலாம்...:)) சரி மீள ஆரம்பிப்பதை ஒரு பம்பலா(அதுதாங்க கலக்கலா) ஆரம்பிப்போமே...

நேற்று ஒரு பதிவில், ஒரு அசைபடப்பாடல் கேட்டேன், அதைக் கேட்டபோது அதே போன்ற ஒரு தமிழ் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது. என் ஞாபகத்துக்கு வந்த இந்தப்பாடல் காதலிக்கநேரமில்லை படத்தில், மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்தது. வெளிவந்த வருடம் 1964. இங்கிருந்த அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா?. எங்கிருந்து எங்கு சென்றதென எனக்குப்புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா எனப்பார்ப்போம். அதற்கு நீங்கள் இங்கிருந்து
அங்கு செல்ல
வேண்டும். சென்று பாரத்தபின் எங்கிருந்து எங்கு சென்றதெனவோ, அல்லது அங்கிருந்து, இங்கிருந்து, எங்கிருந்தும் எதுவும் செல்லவில்லை. அதது அங்கங்கேயிருக்கிறது என்கிறீர்களா?... எதுவாயினும் சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது