07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2015

எழுத்துக்கு மரியாதை !





" தை எழுதுவதற்கு மூன்று முக்கிய விதிகள் இருக்கின்றன் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த மூன்று விதிகளை அறிந்தவர்கள் யாரும் கிடையாது ! " என்றார் சாமர்செட் மாம் !

கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு.

விஞ்ஞானப் புதினங்கள்கூட இதற்கு விதிவிலக்காக முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் நடக்கப் போவதை சிந்திக்கும்போது கூட இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் விஞ்ஞான வசதியின் தொடர்பாகவோ அல்லது அதன் அடுத்த நிகழ்வாகவோதான் சிந்திக்க முடியும் ! நாம் அறிந்த ஒன்றுடன் எதையும் ஒப்பிட்டு யோசிப்பது மூளையின் அடிப்படைகளில் ஒன்று.

ஒரு எழுத்தின் வெற்றி எழுத்தாளன் தன் அனுபவங்களையும் கற்பனையையும் கலக்கும் விகிதத்தில்தான் உள்ளது !

மற்றப்படி வர்ணனைகள், சொல்லாடல் எல்லாம் " சித்திரமும் கைப்பழக்கம்... " தான் !

ஆக, சாமர்செட் மாம் சொன்னது சரிதான் !

பொதுவாக வலைதளம் நடத்துபவர்களை வலைபதிவர்கள் என்றே குறிப்பிடுகிறோம். இது சரிதானா எனத் தெரியவில்லை !... பதிவது என்றால் ஏற்கனவே எழுத்தில் உள்ள ஒன்றை அச்சேற்றுவது. தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றுவதால் பதிவர் என்று சொல்லலாம் என்றாலும் வலை படைப்பாளி என்பதே சரி எனப் படுகிறது...

இணையத்தின் மாபெரும் புரட்சி என்றால் அது அறிவு சார்ந்த தகவல்கள் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியதோடு, சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி என்ற ஏட்டு மதிப்பீடுகளையெல்லாம் புறந்தள்ளி, அதே கடைக்கோடி மனிதனும் தன் அறிதலை உலகின் யாருடனும் பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதுதான் !

ஒரு பத்து வருடங்களுக்கு முன்புகூட ஒருவரது எழுத்துப் படைப்புப் பத்திரிக்கையில் வந்தால்தான் உண்டு என்ற நிலை இருந்தது.

" பிரசுரத்துக்கான தகுதியிருப்பின் நிச்சயம் தேர்வாகும் " என்பது பொதுவிதி என்றாலும் பத்திரிக்கை குழுமங்களிலும் அரசியலும் பாராபட்சமும் உண்டு என்பது அதில் உழன்றவர்களுக்குத் தெரியும் ! ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரை சுற்றி ஒரு குழுவும், ஆஸ்த்தான எழுத்தாளர்களும் உண்டு. புதிதாய் நுழைபவர் இந்தப் பத்திரிக்கை பத்மவியூகத்தை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல ! ஒரு எழுத்தாளரின் முதல் கதையை நிராகரித்த பத்திரிக்கை அவர் பிரபலமான பிறகு அதே கதையை அனுப்பியபோது பிரசுரித்த சம்பவங்களெல்லாம் உண்டு !

இன்று இணையத்தின் வசதியால் நமது எந்தப் படைப்பையும் நாமே பிரசுரிக்கலாம் என்ற நிலையில் வலையில் எழுதுபவரின் பொறுப்பும் அதிகமாகிறது. யாரும் எதையும் உள்ளிடலாம் எனும்போது எழுதுவது எதையும் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்ற சுயதணிக்கையும் அவசியமாகிறது !

" கனவில் கண்டதாகப் பொய் சொல்லக்கூடாது " என்பார்கள்...

காரணம், கனவு என்பது இரண்டாவது நபரால் அறிய முடியாத அந்தரங்கம். அதில் பொய்யை கலப்பது தன்னையே ஏமாற்றிக்கொளவதாகும் !

அதே நிலைதான் வலை எழுதுபவர்களுக்கு ! ஏதோ ஒரு காரணத்துக்காக " தெரிந்தே " பொய்யான, ஆதரமற்ற தகவல்களைத் தருவதும், மற்றவர் படைப்புகளைத் தன் பெயருக்கு கீழே பிரதி எடுப்பதும் தன்னையே ஏமாற்றிகொள்ளும் செயல்.

மேலும் பதிந்த செய்தி அந்த நொடியே நம்மால் கட்டுப்படுத்த முடியாத, மீன்டும் பெற முடியாத நிலையை எட்டிவிடும் இணைய மாயத்தில், ஒருவர் பற்றிய அவதூறு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்த அவதூறு நம்மைப் பற்றியது என்றால் எப்படி நடத்துக்கொள்வோம் என்பதை உணர்ந்தாலே இணையம் பற்றிய பயமும் தெளிவும் ஒருசேர பிறந்துவிடும் !



சிந்திக்க...

பாரீசை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பத்து வயது மகனுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தேன்...

அந்தச் சாலையில் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகமான, மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டரில் நான் கார் ஓட்டிகொண்டிருக்க, மகன் பக்கத்து இருக்கையில் விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஒரு திருப்பத்தில் கார் ஒன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி அதிவேகமாய், எங்கள் காரை உரசுவதுபோல முந்தி செல்ல, கோபத்தில் கத்தினேன் நான் !

" அப்பா ! அந்த ஆள் ஒரு நொடிக்குள் நம்மைத் தாண்டி போய்விட்டார் இல்லையா ?... "

என் வசவு மழை நின்ற பிறகு ( ரொம்பக் கெட்ட வார்த்தையெல்லாம் இல்லீங்க ! ) விளையாடுவதை நிறுத்தாமலேயே கேட்டான் என் மகன்.

" ஏன் கோபமாகக் கத்தினாய் ? "

" அவன் எப்படி ஓட்டிகொண்டு போனான் என்று பார்த்தாய் தானே ?!... "

மீன்டும் சிடுசிடுத்தேன் !

" அந்த ஆள் ஒரு நொடியில் நம்மைதாண்டி மறைந்துவிட்டார்... இரண்டு காரின் கண்ணாடிகளும் மூடப்பட்ட நிலையில் யார் காதில் விழும் என இப்படிக் கத்தினாய் ? "

இத்தனைக்கும் வீடியோ கேமிலிருந்து முகம் திருப்பவில்லை அவன் !

ரெளத்திரம் பழகு பதிவுக்கு வித்தாய் அமைந்த சம்பவம் இது !



ங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என முழங்கி இணையத்தில் தமிழ்டயரி எழுதும், வயதாலும் தமிழ் அனுபவத்தாலும் மூத்த இராய. செல்லப்பா அவர்களின் எழுத்துச் சிறப்பு !

திவுகள்மன்றம், வேர்களைத்தேடி, தமிழ்க்காற்று ஆகிய முனைவர் இரா.குணசீலன் அவர்களின் மூன்று வலைப்பூக்களும் செந்தமிழின் நறுமணம் பரப்பும் செம்மொழிப்பூக்கள்

ழிப்போக்கனது உலகத்தில் பயணிக்க விரும்புபவர்கள் அங்கு நீண்ட நேரம் தங்குவதற்குத் தகுந்த நேரத்தில் செல்லுங்கள்... ஆழமான கருத்துடன் கூடிய அழகு எழுத்தினை அவசரமாயக் கடந்துவிட முடியாது... கூடாது !

" ங்குச் சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா? " என்ற சிலாகிப்புடன், மெட்ராஸ்தமிழனாய் எழுதும் நண்பர் குரு... சக மனிதர்களைப் படிப்பது ஒரு கலையென்றால் அப்படிப் படித்த அனுபவங்களை எழுத்தில் வடிப்பது கற்க இன்னும் சிரமமான கலை ! இரண்டினையும் மிக நேர்த்தியாய்ச் செய்பவர் ! வலைப்பூ வயதில் மூத்தவர் ! இவரது படைப்புகள் கடந்த காலத்தின் எந்தத் தருணத்தையும் நமக்காக மீட்டெடுக்கும் காலயந்திரங்கள் !

பாலமகியின்பக்கங்களின் சிறப்பை அந்தப் பக்கங்களில் காணக்கிடைக்கும் "முச்சு நின்றால் மட்டும் மரணமில்லை, சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம் தான். " என்றவரிகளே சொல்லிவிடும் !

தை, கவிதை, படித்தது, பிடித்தது என எழுத்து ஊஞ்சல் கட்டும் கலையரசி, திருநள்ளாறு, நாகூர், வேளாங்கன்னி என மும்மத நகரங்களுக்கும் பாலமாய் விளங்கும் எங்கள் காரைமாநகரின் எழுத்தரசி !

ல்சுவைபக்கம் பதியும் நிஜாமின் வலைப்பக்கங்களில் பல சுவையும் இருப்பது உண்மை ! இவர் " அரசு பதில்களையே " குழப்பியவர் என்பதால் கேள்விகள் கேட்காதிருத்தல் நலம் !!!

" சிரிங்க, சிரிங்க, சிரிச்சிக்கிட்டே இருங்க " என்னும் தமிழ் வலைப்பூவின் ஸ்மைலி சிம்பள் நம்பள் ஜோக்காளி பகவான் ஜீ !

புதியகாற்று எனப் பெயரிட்டிருந்தாலும் இளையராஜாவின் இசை தன் மூச்சுக்காற்று எனும் அளவுக்கு இளையராஜாவின் முரட்டு பக்தர் சார்லஸ் !

ன் ரசணை எனத் தன் ரசணைகள் பற்றிய வரைவாக வலைப்பூவில் ரசிக்கும் கவிதைகள் படைக்கும் தர்மலிங்கம் ராஜகோபலன்...

" வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற தலைப்புடன், நினைத்துபார்க்கிறேன் எனத் தன் நினைவோட்டங்களை எழுத்தாய் பதியும்  வெ.நடனசபாபதி அவர்கள்...

ர்த்தமுள்ள பார்வையில் ஆழமான கருத்துடன் அழகு பதிவுகளிடும் அமுதவன் அவர்கள்...

ல்வரவு என அகமும் முகமும் மலர வரவேற்று தன் எழுத்துப்படைப்புகளைப் பரிமாறும் ரூபன் !

லகங்கள் செய்பவன் என்ற பயமுறுத்தலோடு எழுதும் நாரதன்... இவரது கலகங்களும் நன்மையில் முடிபவையே !

ளம் நிலவின் இதமான குளிராய் கவிதை படைக்கும் இளையநிலா இளமதி !

ட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அனைத்தையும் சிறப்பாகப் பதியும், தமிழ் பத்திரிக்கைகளில் எழுதும் வளரும் இளம் எழுத்தாளர் சகோதரி பவித்ரா நந்தகுமார்...

தையும் கவிதையுமாய்க் கதம்ப வலை நடத்தும் கவிமனம் கொண்ட அருணா செல்வம்.

ன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! என அறிவித்து அழகுதமிழில் இயற்கை ரகசியங்கள் விளக்கும் கீதமஞ்சரி !

சிறந்த மனிதர்கள் தொடங்கிச் சினிமா வரை எதையும் சமூகச் சிந்தனையுடன் சுவைபடக் கூறும் தென்றல்... கீதா எம்மின் தளம்.

லைப்பில் கூறியதை போலவே இந்தத் தனிமரம் நமக்குப் பரிமாறக் காத்திருக்கும் கனிகளில் அறுசுவையும் உண்டு !

ஹுஸைனம்மாவின் டிரெங்க் பெட்டியில், மிட்டலின் "இரும்புகை" பிரான்ஸ் அரசாங்காத்தின் கோப நெருப்பில் உருகியது முதல் மல்லைய்யாவின் முதலீடுகள் அவர் மேனி தங்க நகையாய் மாறியது வரை அனைத்துச் செய்திகளும் சுவாரஸ்யம் !

லக்கியம் தொடங்கிக் கதை, கவிதை, கட்டுரை, சமூகச் சீர்த்திருத்தம், நகைச்சுவை என எதைத் தேடினாலும் யாழ்பாவாணனின் எழுத்துகளில் கிடைக்கும் !


தொடருவோம்...



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Wednesday, July 29, 2015

இணையத்தில் தமிழ் !

" மிழ் இனி மெல்ல சாகும் " என்ற பயமொழி சற்றே மிகைபப்டுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் உலகின் மற்ற எந்த மொழிகளை விடவும் தமிழ் மொழியின் அழிவுக்கான ஆபத்து அதிகம்.

அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிடப்பட்ட மொழி தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஹிந்தியை தவிர்த்த இந்திய மொழிகள் அனைத்துமே எதிர்கொள்ளும் ஒன்றுதான் என்றாலும் " இந்திய தமிழர்களின் " தாய்மொழி மீதான அலட்சியம் அந்த அபாயத்தை இன்னும் அதிகமாக்குகிறது !
 இந்திய சுதிந்திரத்துக்குப் பிறகான மொழி இக்கட்டுகளிலிருந்து தமிழைக் காத்தது பெரியாரில் தொடங்கிய திராவிட எழுச்சி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் அந்தத் திராவிட இயக்கத்தின் கொள்கைகளும் காலப் போக்கில் நீர்த்து போய்விட்ட நிலை !

இத்தனை இக்கட்டுகளிலும் தமிழ் மொழி பற்றிய அறிவு மேலை நாடுகளில் பரவியதற்கும், தமிழ் மொழி இணையத்தில் இடம் பிடித்ததற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள்...

ரோப்பிய மற்றும் ஆஸ்த்திரேலிய பிரதேசங்களில் தமிழ் மொழியை அறியப்படுத்திய பெருமை புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களையே சாரும். அனைத்தையும் இழந்த கையறு நிலையிலும், தாய் மண்ணில் சிக்கிய ஆன்மாவை மீட்க முடியாமல் வெறும் உயிரை பிடித்துப் புலம் பெயர்ந்த போதிலும் எம்மொழி என்ற பெருமையுடன் செம்மொழி செழிக்கப் பாடுபடுபவர்கள் ஈழத்தமிழர்கள்.

ணையத்தில் துடிப்பாகத் திகழும், அதிகமான பயன்பாட்டாளர்களைக் கொண்ட மொழிகளில் தமிழ் முன்வரிசையில் திகழ்கிறது...

முகநூல், வலைதளம் தொடங்கிக் கைப்பேசிகளுக்கான மென்பொருள், கனிப்பொறி, மற்றும் இணையத் தொழில்நுட்பத்தில் புதிதாய் தோன்றும் எதிலும் தன்னை இலகுவாக இணைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற மொழியாகத் திகழ்கிறது மூத்த மொழியான தமிழ் !

புதிய தொழில்நுட்பத்தில் தமிழுக்கான இந்தப் பாதை சிலிக்கான் புரட்சி தொடங்கிய காலகட்டத்திலேயே போடப்பட்டுவிட்டது ! கணிப்பொறிகளுக்கான மென்பொருள் பணிக்காக அமெரிக்கா சென்ற தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்த பணி அது ! மொழி மீதான பற்றினால், தனிப்பட்ட முயற்சிகளினால் அவர்கள் உருவாக்க தொடங்கிய எழுத்துருக்கள், செயலிகள் போன்றவற்றின் பலனால் இணையத்தில் முன்னால் நிற்கிறது தமிழ் !

தமிழைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபடுவது பெரும்பாலும் சாதாரண மனிதர்கள்தான். திருவள்ளுவர் தொடங்கி ஒளவை வரை அறம் சார்ந்த விசயங்களையும், தன்னலமற்ற தொண்டினையும் போதித்த மொழி என்பதாலோ என்னவோ ஆளும் வர்க்கம் கண்டுக்கொள்ளாத மொழியாகவே தமிழ் வாழ்கிறது !


 கொஞ்சம் சிரித்துவிட்டு இன்றைய அறிமுகங்களைச் சந்திப்போம் !

தன்னைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதற்குத் தேவையான முதல் தகுதி சுயபகடி !

மூன்று நாட்களாக வலைச்சரத்துக்காகத் தொடர்ந்து தட்டச்சுச் செய்து பழகியதால் மேஜையின் மீது அமரும் போதெல்லாம் தட்டச்சு செய்வதுபோலவே விரல்கள் இயங்குகின்றன... காலையில் காபியில் விரல்களால் அடித்துக் கைகளைச் சுட்டுக்கொண்டேன் !...


இந்த வாரம் முழுவதும் கார்தான்... மெட்ரோ ரயிலோ, பஸ்ஸோ கூடாது என்றிருக்கிறேன்... என் விரல்கள் பிரெஞ்சு கனவாட்டிகளின் முதுகுகளில் தட்டச்சு செய்துவிட்டா
ல் ?!....

சர்தார்ஜி ஜோக்குகளை நான் பிறப்பதற்கு முன்பே பிரபலபடுத்திவிட்டார் குஷ்வந்த் சிங் !!!

ஒரு சர்தார்ஜி ஜோக்...

" இரு சர்தார்ஜிகள் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் ! "
" ..... "

என்ன ? ஜோக் அவ்வளவுதான் ! புரிந்ததா ?!....




சுறுசுறுப்புக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்பதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு அடையாளமாய் gmbwrites, பூவையின் எண்ணங்கள் என இரண்டு வலைப்பூக்களில் பதியும் ஜி எம் பி அய்யா அவர்கள்... உங்களின் ஆசி எங்கள் அனைவருக்கும் தேவை !

சோழ நாட்டின் பெளத்தம் ஆராய்ந்த, வயது, அனுபவம் தொடங்கி அறிவிலும் மூத்த முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் தளங்களின் சிறப்பை நான் சொல்லி அறியத்தேவையில்லை !

தே போலத் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் ! வரலாறே மறந்துவிட்ட வரலாறு படைத்தவர்களுக்கு இணையத்தில் நீங்கா இடம் பிடித்துத் தருபவர் !

முத்துச்சிதறல் என்ற பெயரானாலும் திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் தளம் கலைகளும் சிந்தனைகளுமாய்ச் சிதறிய முத்துக்களை ஒன்றாகச் சேர்த்து கோர்த்த நேர்த்தியான முத்தாரம் !

பிரான்சிலிருந்து தமிழ் பணியாற்றும் கி. பாரதிதாசன் அவர்கள்... தமிழ் இலக்கண இலக்கிய மின்வலை நடத்தும் வெண்பா கவி !

த்தனையோ நினைக்கிறது நெஞ்சம்... சொல்ல முடிந்ததோ கொஞ்சம் எனத் தான் பேச நினைப்பதையெல்லாம் தன் பதிவுகளில் பேசும் மூத்த பதிவர் சென்னை பித்தன் !

ங்கள்பிளாக் என்று ஸ்ரீராம் கூறினாலும் படிப்பவர்கள் நம்ம ஏரியா எனக் கொண்டாடும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரர் ! பாஸிட்டிவ் செய்தி தொடங்கிப் பஜ்ஜி சொஜ்ஜி வரை எதுவும் கிடைக்கும் தளம் !

டி. என். முரளிதரனின் மூங்கில் காற்று... மூங்கிலிலிருந்து வெளியேறும் காற்றின் இசையைப் போலவே இவரது எழுத்துக்களும் நம் மனம் நிறைப்பவை !

நான் ரசித்துப் படித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இந்த இணையத்தளம். வேறு எதையும் எதிர்பார்த்து அல்ல என்ற அறிவிப்பு மின்னும் மதுரை தமிழனின் அவர்கள் உண்மைகள் பதிவுகளைப் படித்தவர்களுக்கு அடுத்தப் பதிவு எப்போது என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் எழும் !

லைநகரிலிருந்து தமிழ் பரப்பும் நண்பர் வெங்கட் நாகராஜ்... சமூக நிகழ்வுகளைச் சுவைபடச் சொல்லும் இவரது வலைப்பூவின் படங்களும் அருமையானவை !
வெளிச்சக்கீற்றுகளில் மின்னுகிறது சுட்டிப்பெண் ரோஷினி வெங்கட்டின் வருங்கால திறமை !

மூகத்தின் வலிகள் அனைத்தையும் தன் எழுத்துச் சாட்டைக் கொண்டு சாடுபவர் வலிப்போக்கன். கடுமையான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது சமூகச் சீர்க்கேடு பற்றிய இவரது மனதின் வலி !

நிகழ்காலம் மறக்க தொடங்கிவிட்ட பெரியாரின் சிந்தனைத்துளிகளை இணையத்தில் சேமிக்கும் சகோதரி எழில் !

தேன்மதுரத்தமிழின் சங்க இலக்கியம் போற்றும் அதே வேளையில் நம் மூளையின் கதையையும் என்னைப் போன்ற சாமானிய மூளையில் ஏறும் அளவுக்கு எளிமையாய் விளக்கும் கிரேஸ் !

ன்னைப் போன்றே பூந்தளிர் படித்து வளர்ந்த என் தலைமுறை நண்பர்... தளிர்சுரேஷின் முதல் கதை கோகுலத்தில் வெளியான செய்தியை படித்த போது எனக்கு உண்டான " செல்ல பொறாமையை " சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை ! எண்ணங்களையெல்லாம் சிறந்த எழுத்தோவியமாக்குபவர் !

திணென் பருவத்தின் மறையாத என் நினைவுகளில் தங்கிவிட்ட மணவை முஸ்தபா, மணவை பொன்.மாணிக்கம் வரிசையில் இணையத்தில் மணவைக்குப் பெருமை சேர்க்கும் மணவை ஜேம்ஸ் ! தீதும் நன்றும் பிறர் தர வாரா என உரைக்கும் தமிழ் காதலர் !

" ந்தோஷமும் சோகமும் அல்லார்க்கும் எலவசம்பா! இத்த வேணுங்கறவ(ன்) இத்தயும் அத்த வேணுங்கறவ(ன்) அத்தயும் எட்த்துக்கோ நைனா. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்! " அப்டீன்னு ஷோக்கா டைட்டில் காட்டி... சமூக அவலங்கள சாடும் சைதை அஜீஸ் !

ல்லோரிடமும் உண்மையாக இருப்பவன் என்று கூறி, உண்மையானவன் தளம் நடத்தும் சொக்கன் சுப்ரமனியன் அவர்களின் தளம் உண்மையிலேயே அருமை !

டிப்பவரின் மனதில் நின்று இதமாய் வீசுபவை காவியக்கவி நடத்தும் இனியாவின் கவிச்சாரல்கள் !

மிழ் சமூகத்தின் கேடுகளைக் கண்கள் சிவக்க அகச்சிவப்புத்தமிழில் சாடும் தோழர் இ.பு.ஞானபிரகாசன்... பதிவுகளை மட்டுமல்லாது இவரது பின்னூட்டங்களையும் படித்து வியப்பவன் நான்

எஸ்.பி.செந்தில்குமாரின் பயணங்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மீகம், விவசாயம் என எல்லாம் கலந்த கூட்டாஞ்சோற்றைச் சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்க மாட்டார்கள் ! எழுத்தின் ருசிக்கு தொடுகையாய் புகைப்படங்களின் சுவை !!




சிந்திக்க..



" தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ! " என்பார்கள்... பழகிய ஒன்றிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல...

ஆங்கில வார்த்தையான HABIT...

H எழுத்தை விலக்கிவிட்டு பார்த்தால் A BIT மிச்சமிருக்கும்...

A எடுத்தாலும் ஒரு BIT இருக்கிறது !

I விலக்கிபார்த்தால் IT IS THERE !

ஆக, நல்லவற்றைப் பழகுவோம் !



தொடருவோம்...


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Tuesday, July 28, 2015

என் பூவுக்கு மணம் சேர்த்தவர்கள் !



அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு வலைபதிவர்களின் சார்பில் வலைச்சரம் அஞ்சலி செலுத்துகிறது.
தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, இந்திய இளஞர்களின் லட்சியக் கனவு சிறகுகளை விரிக்கச் செய்ய வாழ்வின் இறுதி வரை உழைத்த மாமனிதர் கலாம் அவர்கள்.




 நாட்டின் மிகச் சிறந்த புத்திசாலிகள் வகுப்பறையின் ஆகக் கடைசி வரிசையில் கூட வீற்றிருக்கலாம் !
-அப்துல் கலாம்.




" சொந்தக்காலில் நின்று சாதித்தேன் " என்பது ஒரு முயற்சியில் வெற்றிப்பெற்ற பெரும்பாலானவர்களின் மார்தட்டுக் கோஷம் !

உற்று கவனித்தால் " யாரும் உதவவில்லை " என்ற ஒருவரின் வார்த்தைகளுக்குப் பின்னால் அவரின் ஏமாற்றம் ஒன்று நிழலாடுவது தெரியும். ஒரு முயற்சியின் போது, சொந்தம், நட்பு, சுற்றம் சார்ந்த யாராவது நமக்கு உதவுவார்கள் என நினைத்திருப்போம். அவர்களை நாடியும் இருக்கலாம். அவர்களிடம் நாம் எதிர்பார்த்த உதவி ஏதோ ஒரு காரணத்துக்காகக் கிடைக்காமல் போயிருக்கலாம்...

அதுவே அந்த நிழலாடும் ஏமாற்றம் !

மற்றப்படி ஜடப்பொருட்கள் கூட ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இந்த உலகில் சுயம்பு என்பது சரிதானா ? உண்மையில் தன்னந்தனி மனிதனின் சாதனை என்று ஒன்று உண்டா ?...

சாதாரணமான ஒரு வேலைக்கான நம் முயற்சியில் நம்மை ஏற்றுக்கொள்ளும் முதலாளி தொடங்கி அங்கு நமக்கான வேலை கற்றுத்தருபவர் வரை நமக்கு உதவுபவர்கள் எத்தனை பேர் ?...

நம் வாழ்க்கையில் நம்முடன் நெருங்கி நடந்த... நமக்கு வழி காட்டிய... வழுக்கியபோது கை கொடுத்த... நின்றபோது தோள் தொட்ட... வென்றபோது கட்டியணைத்த... கற்றுக்கொடுத்த, இடமளித்த, வளர வாழ்த்திய நெஞ்சங்கள்தான் எத்தனை ? எத்தனை ?

நாம் தனியாக மார்த்தட்டும் சாதனைக்கு இவர்கள் அனைவருமே காரணம் அல்லவா ?

 ரு ஜனவரி முதல் தேதியின் சோம்பலான மாலை பொழுதில் ஏதோ ஒரு உந்துதலில் வலைப்பூவினை ஆரம்பித்துப் புத்தாண்டு வாழ்த்தும் பதிப்பித்தேன்... உடனடியாகப் பார்வையாளர்கள் நிறைவார்கள் பின்னூட்டங்கள் குவியும் என நினைத்த எனக்கு ஏமாற்றம் ! வலைப்பூவின் நுனுக்கங்கள் தெரியாத அன்று சோர்ந்து போனேன் !

அதற்குப் பிறகு என்ன எழுதுவது என்ற குழப்பத்திலேயே ஒன்றும் எழுதாமல் ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியது ! அந்தச் சமயத்தில் இந்தியா டுடே இதழில் வெளியான தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றும், நான் படித்த, என்னைப் பாதித்த ராஜுமுருகனின் " வட்டியும் முதலும் " நூலும் என்ன எழுதுவது என்ற என் கேள்விக்குப் பதிலாய் அமைந்தன !


ன் வலைப்பூவுக்கு வந்த முதல் கருத்தான ஈரோடு விஜய் பதிந்த கருத்தை கண்டபோது என் பதிவு பிரபல பத்திரிக்கையில் பிரசுரமான பரவசம் ! ஈரோடு விஜயின் மூலம் என் பால்யத்தின் காமிக்ஸ் கதவுகளை மீன்டும் திறந்த வலைப்பூக்கள் அறிமுகமாயின !

என் பால்யத்துடன் ஒன்றிய லயன் காம்க்ஸின் எடிட்டர் திரு விஜயன் அவர்களின் தளமான  Lion-Muthu Comics

கிருஷ்ணா.வா.வெயின் இரவுக்கழுகு

 கனவுகளின் காதலன் பிரான்ஸ் சங்கர் விஸ்வலிங்கம் !

ஹாய் தமிழா  ராஜ் முத்து குமார்...

இந்த வலைப்பூக்கள் அத்தனையும் காமிக்ஸ் கருவூலங்கள் !


கார்த்திக் சோமலிங்கா... என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டமிடும் இவரும் ஒரு காமிக்ஸ் காதலர் ! ப்ளேடோடு தேடு என்ற நகைச்சுவையுடன் ப்ளேடப்ப்பீடியா நடத்தும் இவரின் பதிவுகள் சுவாரஸ்யமானவை.


" Hi, My Bad. Do write more.... " என்ற சிக்கனமான பின்னூட்டத்துடன் என் வலைப்பூவினுள் பிரவேசித்த கிங் விஸ்வா என் பதிவுகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பவர். தமிழ்காமிக்ஸ்உலகம் தளம் நடத்தும் இவருக்குத் தமிழ் காமிக்ஸின் வரலாற்றிலிருந்து உலகக் காமிக்ஸ்கள் வரை அனைத்தும் அத்துப்படி ! நள்ளிரவில் எழுதும் கருத்தில்கூடத் தமிழ் காமிக்ஸ் தகவல்களைத் துல்லியமாகக் கொடுப்பார் !


ன் தளம் கண்ட நாள் முதலாய் என் எழுத்தின் தரம் கூட்ட உதவிய, உதவும் இருவரில் ஒருவர் நண்பர் காரிகன் ! எழுதும் பாணி தொடங்கிப் பதிவை எப்படி அதிகம் பேரிடம் சேர்ப்பது என்பது வரை ஆலோசனைகளும் ஊக்கமும் கொடுப்பவர்.
தமிழ் சினிமா இசையின் வரலாறு இவரது விரல் நுனியில் ! எம் எஸ் வியின் மெல்லிசை காதலர் என்றாலும் அன்று முதல் இன்றுவரை சினிமா கண்ட இசையமைப்பாளர்கள் ஒருவரையும் விடாமல் தன் எழுத்தில் பொறிப்பவர் ! தமிழ் திரையிசைக்கு ஈடாக மேற்கத்திய இசை வரலாற்றையும் நுனுக்கங்களையும் அறிந்தவர் ! இசைக்கு ஈடான மனதை கவரும் மாய எழுத்துக்குச் சொந்தக்காரர் ! இசை ரசிகர்கள் மட்டுமின்றி இசை ஆராய்ச்சியாளர்களும் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத தளம் இவரது வார்த்தைவிருப்பம் !


ன் படைப்புகளின்பால் அக்கறை கொண்ட மற்றொருவர் , அண்ணா எனப் பாசத்தோடு அழைக்கும் ஜோசப்விஜு... என் எழுத்தை மட்டுமின்றி என் வாசிப்பையும் செம்மை படுத்தும் சகோதரர் !
இவருக்கு வாசிப்பு நேசிப்பு எல்லாமே பழந்தமிழ் ஆராய்ச்சிதான் ! தோசையில் கூடத் தமிழைத் தேடுபவர் ! இணையத் தமிழ் சங்கம் ! இவரது பழந்தமிழ் வரலாற்றுபெட்டகமான ஊமைக்கனவுகளின் பதிவுகள், கவிதைகள், வாழ்வனுபவங்கள் என எதை வாசித்தாலும் எனக்கு வியப்பே மிஞ்சும் !


தில்லைஅகத்து ஆசானான துளசிதரன் அவர்களைப்பற்றி நான் தான் எழுத வேண்டும் என்பதில்லை ! மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, ஆச்சரியப்பட வைத்தவை, அதிசயப் பட வைத்தவை, அமைதி தந்தவை, என அற்புதமாய் எழுதும் இவர் தன் ஆழமான பின்னூட்டங்களின் மூலம் என்னை ஆதரிப்பவர் !


திண்டுக்கல் தனபாலன்... " இன்னும் ஏன் அழைக்கவில்லை " என என்னைத் தமிழ்மணத்தில் இணைய அன்பாய் அதட்டிக்கொண்டிருப்பவர். திருக்குறளுக்கு பெருமை சேர்த்து, தமிழ் திரையிசை பாடல்களுக்குப் புத்தம் புதிய பரிமாணம் கொடுக்கும் இவரை அறியாத வலைப்பதிவாளர்கள் யாரும் கிடையாது என அடித்துச் சொல்வேன் ! வலைப்பூ நுட்பத்தைக் கற்றுத்தருவதுடன் இரவு பகல் பாராமல் உதவவும் செய்யும் இந்த வலை சித்தரின் சேவை நவீன தமிழுக்குத் தேவை !


ண்பா எனப் பாசமாய் அழைத்துப் பின்னூட்டமிடும் மீசைக்கார அண்ணாச்சி... கில்லர்ஜீயின் பெயரும் மீசையும் மட்டுமே பயமுறுத்தும் ! தனக்கென ஒரு வித்யாசமான எழுத்தை அமைத்துக்கொண்டு சமூக அவலங்களைச் சாடும் கில்லர்ஜீ வலைப்பதிவர் அனைவருக்கும் இனிய நண்பர்ஜீ !


மைதிலி கஸ்துரி ரெங்கன்... மகிழ்நிறையின் குதூகலமான எழுத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விப்பதுடன் சமூக அக்கறையில் முன்னணியில் நிற்கும் வலைப்பூ சகோதரி !
அண்ணா என விளித்துத் தொடங்கும் இவரின் பின்னூட்டங்களை வாசிக்கும் போதெல்லாம் மூத்த அண்ணன்களின் அன்பிலும், அரவணைப்பிலும் குதூகலமாய்த் துள்ளி திரியும் கடைக்குட்டி தங்கையின் பிம்பம் என் மனதில் நிழலாடும் !


து... நான் பதிவில் குறிப்பிட்ட ரோஜா பதியன்கள் பூத்தனவா என்பதில் தொடங்கி என் உடல்நலம் வரை பின்னூட்டத்தில் வாழ்த்தும் அக்கறை மனிதர் ! மலர்த்தரு மூலம் கல்வி, இலக்கியம், சமூகம், சினிமா, சினிமா, தொழில்நுட்பம் என எதையும் மிகத் தரமான கண்ணோட்டத்தில் பதிபவர் !


ருண்... ரிலாக்ஸ்ப்ளீஸ் என்று கூறி விட்டு எந்தப் பதிவாக இருந்தாலும் " மாற்றி யோசி " எனப் பிடறியை உலுக்கி கருத்து பதிந்து என்னை வேறு கோணத்தில் திருப்பிவிடுபவர்... சூடான எழுத்தினாலும் காட்டமான பின்னூட்டங்களாலும் கோபக்கார " இளம் துருக்கியராக " வலையுலகில் அறியப்படும் இவரின் மனிதநேய மறுபக்கத்தை, காணாமல் போன ஒரு வலைப்பதிவரை பற்றி இவர் பதிந்த பதிவின் மூலம் அறிந்தேன் !


யாதவன் நம்பி எனும் புதுவை வேலு... என் வலைப்பூ பணி அறிந்த நாள் முதலாய் என் பதிவுகளை நேசிப்பவர்... என் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூத்தவராய் ஆலோசனை வழங்குபவர்.
பத்திரிக்கை துறை அனுபவம் வாய்ந்த இவரது குழலின்னிசை கவிதை, கதை தொடங்கிச் சமூகச் செய்திகள் வரை அனைத்தையும் அழகுபடச் சொல்லும் பல்சுவை களஞ்சியம் !


... இப்படி இன்னும் பலர் ஊற்றிய கருத்து நீரினால்தான் என் வலைப்பூ ஏதோ கொஞ்சம் மணம் வீசுகிறது !


 சிந்திக்க ஒரு தகவல்...

சென்ற ஆண்டு ஊர் சென்றிருந்த போது பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு வீட்டுமனை விற்பனையைப் பற்றித் திரும்பியபோது அவர் சொன்னது...

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்புவரை வசதியான குடும்பங்களின் முக்கியச் சொத்தாக இருந்தது விளைநிலங்கள். சாலையோர நிலங்களின் விளைச்சல் உள்ளடங்கிய நிலங்களைவிட மிகவும் கம்மி.

பாகப்பிரிவினையின் போது வயதில் இளையவனுக்கோ அல்லது சகோதர சகோதரிகளில் " கொடுத்ததை வங்கிக்கொள்ளும் " ஏமாளிகளுக்கோ சாலையோரநிலங்களை எழுதிவைத்துவிடுவார்களாம் !

ஆனால் விளைநிலங்களெல்லாம் " விலை " நிலங்களாக மாறிவிட்ட இன்றைய வீட்டுமனை யுகத்தில் சாலையோர நிலங்களுக்குத்தான் மதிப்பு பலமடங்கு அதிகம் ! அன்று ஏமாந்த சகோதர சகோதரிகளின் காட்டில் இன்று மழை !

" தெய்வம் நின்று கொல்லும் " என்பது இதுதானோ ?!



தொடருவோம்...


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Monday, July 27, 2015

ஒரு சாமானியனின் வணக்கங்கள் !


லைப்பூ நட்புகள் மற்றும் வலைச்சர நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். வலைச்சர பொறுப்பினை என்னிடம் முன்மொழிந்த அருமை நண்பர் " குழலின்னிசை " புதுவை வேலு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.



புதுவை மாநிலத்தின் காரைக்காலை பூர்வீகமாக கொண்ட நான் வசிப்பது பிரான்சில்  என்பதை தவிர தனிப்பட்ட முறையில் என்னைபற்றி சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது !

பல்வேறு கனவுகளும் திட்டங்களுமாய் வாலிப வாழ்க்கையை தொடங்கி, பிடித்தது என்பதைவிட கிடைத்ததில் மகிழ்ச்சியுற்று, நான், குடும்பம், நட்பு சுற்றம் என்ற சிறு சுயநல வட்டத்துக்குள் வாழ்க்கையை அமைத்துகொண்டு சமுதாய கோட்பாடுகள் மற்றும் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழும் கோடானுகோடி சராசரி சாமானியர்களில் நானும் ஒருவன் !

தேதியும் ஆண்டும் நினைவில் பதியாத பால்யத்தில், ஆடிக்காற்றுடன் கருமேகம் சூழ்ந்து மழையும் பெய்த ஒரு முன்னிரவில் எனக்கு அறிமுகமான காமிக்ஸில் தொடங்கிய என் வாசிப்பு வாழ்வின் எத்தனையோ மாற்றங்களுக்கு பிறகும் தொடர்கிறது !

இதுதான் என்றில்லாமல் கண்டது அனைத்தையும் படிப்பவன் நான்...  வாலிபத்தின் தொடக்கத்தில் காதலின் பொருட்டு டீ கடைகளில் காத்து நின்ற பொழுதுகளில் கூட காதலை மறந்து வடை சுமந்த பத்திரிக்கை துண்டு சொல்லும் செய்தியில் லயித்தவன் !

மிக இளம் வயதிலேயே முத்தாரம், கல்கண்டு, சூப்பர் நியூஸ் போன்ற தமிழ் இதழ்களுக்கு துணுக்குகள்  மற்றும் சிறு கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததுதான் என் முதல் எழுத்து அனுபவம். பிரான்ஸ் வந்ததிலிருந்து தடைபட்டுவிட்ட துணுக்கு தோரணங்களுக்கு மாற்றாய் நான் நண்பர்களுக்கு எழுதிய  கடிதங்கள்  என் எழுத்து பசியை (?!) சில ஆண்டுகள் தீர்த்தன !  என் கிறுக்கல்களின் தகுதி எனக்கே தெரியும் என்பதால் கதைகள் எதையும் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப முயற்சித்ததில்லை... யாரும் எழுதலாம் என்ற இணையத்தின் சுதந்திரத்தால் பாவம் உங்களுக்கெல்லாம் என் கிறுக்கல்களையும் சகித்து படிக்க வேண்டிய கொடுமை !  பாவம் தமிழ் !

னிப்பட்ட விருப்புவெறுப்புகள் கோபதாபங்கள் தவிர்த்துவாழ்க்கை நமக்காக மறைத்து வைத்திருக்கும் திருப்பங்களையும், அதிசயங்களையும், அது நமக்கு அறிமுகப்படுத்தும் பல்வேறுவிதமான மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலை சார்ந்து அமையும் குணாதிசயங்களையும் படிக்க பழகினோமானால் உலகின் ஆக சிறந்த இலக்கியம் அதுதான்  என புரியும் ! ஆனால் இயற்கையின் இந்த இலக்கியம் பயில நிறைய பொறுமை அவசியம் !

வாழ்க்கை எனக்கு கற்பிக்க விரும்புவதை, எனது ஆக சிறு புத்தி அறிந்துகொண்ட கடுகளவிலிருந்தும் குறைந்த என் வாழ்வனுபவங்களை,  பகிர்ந்துகொள்ளகொள்ளவும், நமது சமூகத்தின் சிறப்பு மற்றும் சீரழிவுகளை பதிவு செய்யவுமே என் வலைப்பூ !

து என்ன சாமானியன் ?.... ஏனிந்த முகமூடி ?!...

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணனினால் படைக்கப்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியா கார்ட்டூன்களின் ஆன்மாவாய் வாழ்ந்த கேலிச்சித்திர பாத்திரம் மிஸ்டர். காமன்மேன்... திருவாளர் பொதுஜனம் அல்லது சாமானியர் !... அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்கள், ஆளும்வர்க்க அதிகார அலும்புகள், சமூக அவலங்கள் என தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் மெளன சாட்சியாய் பார்த்து நிற்கும் சாதாரணன்... ஆனால் தனிமனிதனின் சக்தியையும் அறிந்த, புத்தியால் முதிர்ந்த மனிதன் !

பல்வேறு மதங்களில் தொடங்கி பலநூறு ஜாதிகளுடன் , பல மொழி கலாச்சார வேறுபாடுகளும் நிறைந்த இந்திய சமூகத்தில் சொந்த அடையாளத்துடன் எழுதுவது சில சமயங்களில் எழுத்தின் உண்மையை நீர்த்துப்போகச்செய்துவிடும் ! நியாயமானவைகள்கூட எழுதுபவனின் சமூக அடையாளத்துடன் சம்மந்தப்படுத்தப்பட்டு பிரச்சனையாக்கப்படுவது இந்த சமூக அவலங்களில் ஒன்று !


வலையுலகில் பலர் எனது இயற்பெயர் சாம் என நினைத்திருக்கிறார்கள்... எனது வலைப்பூவினை பதிந்த போது முதல் பெயராய் சாமானியனை நிரப்பினேன். இரண்டாம் பெயரும் கட்டாயம் என்றதால் சாமானியனின் சுருக்கமாய் சாம் ஆனேன் !

அன்று எதார்த்தமாய் எழுதிய சாமில் ஒரு வசதி இருப்பதை இன்று ஆச்சரியமாய் உணருகிறேன்... சாமிநாதன், சம்சுதீன், சாமுவேல் ஆகிய மும்மத பெயர்களின்  பொதுவான சுருக்கமாகவும் சாமினை கொள்ளலாம் !
என் முகமூடியின் கதை இதுதான் !

காலம் என்னும் பள்ளியின் மாணவனாகவே தொடர விரும்பும் நான் வலைப்பூ அனுபவத்திலும் சரி, எழுத்தின் முதிர்ச்சியிலும் சரி, மிகவும் சிறியவன். சாதித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் ஒன்றுமற்றவன்...

என் படைப்புகளில் ஏதேனும் சிறப்பு இருக்குமானால் அந்த சிறப்புக்கான பெருமையெல்லாம் என் பெற்றோர்களையே சாரும். என் வாசிப்புக்கு எந்த வகையிலும் தடை சொல்லாமல், பொருளாதாரம் இடம் கொடுக்க மறுத்த இக்கட்டான சூழ்நிலைகளில் கூட நான் கேட்ட புத்தகங்களையெல்லாம் தயங்காமல் வாங்கி கொடுத்து, என்னை ஒரு நண்பனாய் பாவித்த, பாவிக்கும் பெற்றோர்களே என் எழுத்துக்கு காரணம்.

இந்த வலைச்சர வாய்ப்பையும் உங்கள் அனைவரிடமிருந்தும் எதையேனும் கற்றுக்கொள்ளும் ஆவலிலேயே ஏற்றேன் ! எழுத்துப்பிழையோ கருத்துப்பிழையோ எதுவாகினும் தயங்காமல் சுட்டி குட்டுங்கள்...

நான் கற்க நிறைய இருக்கிறது !



திகம் வாசிக்கப்பட்ட என் பதிவுகள்...

தமிழன் என்று சொல்லடா தமிழில் பேசடா !
விடாது துரத்திய விஷ்ணுபுரம்
பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் ! 





தொடருவோம்...

பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2015

சாமானியனிடம் ஆசிரியர் பொறுப்பை தந்து மகிழ்வோடு விடை பெறுகிறார் மெக்னேஷ் திருமுருகன்.


வலைச்சரம் நண்பர்களே! நல்வணக்கம்!

இன்றுடன் இரண்டு வாரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும்  "விமர்சன உலகம்" வலைப் பூ பதிவர் மெக்னேஷ் திருமுருகன் அவர்கள் மிகவும் திறம்பட, பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட  சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும்  சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.
அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!
மெக்னேஷ் திருமுருகன் உங்களிடமிருந்து,

145- க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,
 64 - தமிழ் மணம் வாக்குகளையும்,
1870- க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தமது, வலைச்சர வாரத்தை  மிகவும் சிறப்பாக வழங்கிய  நண்பர் மெக்னேஷ் திருமுருகன் அவர்களை நன்றி பாராட்டி,  வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' பெரு மகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....   "சாமானியனின் கிறுக்கல்கள்! " வலைப்பூவில் சாமானியன் சாம் என்ற புனைப் பெயரில் எழுதிவரும்  நமது நண்பர் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.


இவர்,  பூம்பொழில் நகராம் 'புதுவை' பிரதேசத்தைச் சார்ந்த, காரைக்கால் நகரில் பிறந்து வளர்ந்து,  தற்பொழுது பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து வருகிறார்
கண்ணின் கண்மணிகளாக இரு பிள்ளைகள் இவருக்குண்டு!

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார்.

வசிகர எழுத்தினால், வலைப்பூவில் இவரால் வரையப் பெறும் கோலங்கள் யாவும், வாசகர் மனதை விட்டு அகலாத 'அழியாதக் கோலம்' என்றே சொல்லலாம்.

கிறுக்கல்கள் என்று இவரால் சொல்லப்படும் எழுத்துக்கள் எல்லாம் வாசகர்களின் அன்பின் பெருக்கல்களாக அழகு சேர்க்கின்றன!

மிக இளவயதில், முத்தாரம், கல்கண்டு, சூப்பர் நியூஸ் போன்ற இதழ்களுக்கு துணுக்குகள், சிறு கட்டுரைகள்  எல்லாம் எழுதிய எழுத்தாளராகவும் திகழ்ந்துளார்.

வாழ்க்கையின் எந்த சூழலிலும் மனிதநேயத்தை மறக்காமல் வாழ முயற்சித்துக்கொண்டிருக்கும்  நன்னெறி மிக்கவர்.

பிரான்ஸ் தேசத்தில் "ACLI" (Association culturelle pour le continuum de langues Indiennes) சங்கத்தின் இளநிலை செயலாளராக இருந்து மக்கள் நலப் பணியை செய்து வருகிறார்

மேலும், கண்ணில் கண்ட எந்த  நல்ல நூலையும் வாசித்துவிடும் புத்தகப் பிரியர். மதம், இனம், மொழி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக நல்ல மனிதர்.

இவரது ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும், நமது நினைவுகளை மீட்டெடுக்கும் மீள் சக்தி அல்லது மின்காந்த சக்தி இவரது எழுத்தில் உண்டு என்பதை பதிவை  படித்தவர்கள் நன்கறிவர்.

எனது குழலின்னிசை  வலைப் பூ இவரது மூச்சுக் காற்று பட்டுத்தான் முதன்முதலில் இதழ் விரித்து மலர்ந்து  இன்னமும் மணம் வீசி வருகிறது.

தமிழ்ப் பணி செய்வதில் தனி ஆர்வமிக்கவர்.

இப்படி எண்ணற்ற தகுதிகளை உடைய  இந்த பதிவரை
 "சாமானியன்" அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக  "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் மெக்னேஷ் திருமுருகன்...

நல்வாழ்த்துக்கள் சாமானியன்...


நட்புடன்,
புதுவை வேலு
மேலும் வாசிக்க...

Saturday, July 25, 2015

நான் ரசிக்கும் பதிவர்கள்

வணக்கம் நண்பர்களே !


நேற்று பற்பல வேலைப்பளுவினூடே சிக்கித் தவித்ததால் ஒரு விசயத்தைப் பற்றி சொல்லமுடியாமல் போய்விட்டது . தமிழ் இலக்கியத்தில் தனியிடம் பெற்றவரும் , சொற்களைப் பயன்படுத்தி , இலக்கணம் பிறழாமல் பல அற்புத பாடல்களைத் தமிழ்த்தாயிற்கு சூட்டி மகிழ்ந்தவருமான கவி காளமேகத்தைப் பற்றி நேற்றே சொல்லலாம் என்றிருந்தேன் .
வசைபாடக் காளமேகம் என்று வழங்கப்பெறும் இவர் , சொற்களால் அம்பினைத் தயார் செய்து , அவ்வம்புகளின்வழியே தன்னை வசைபாடும் எதிரிகளின் முகத்திரையை கிழித்தெறியமளவிற்கு புலமை மிக்கவர் இவர் . யமகண்டம் (உயிரை யானையின் காலில் வைத்துப் பாடும் மிக ஆபத்தான கவிதைப் போட்டி) எனும் படுபயங்கர கவி யுத்தத்தில் பங்கேற்று வெற்றிக்கொடி நாட்டியவர் ; இவர் சிலேடை பாடுவதில் மட்டும் வல்லவர் அன்றி , நகைச்சுவைத் ததும்ப பிறரை ஓட்டுவதிலும் வல்லவர். இவரின் பாடல்களில் ஒரு பாடல் எப்போதானாலும் எனக்கு மறக்காது . காரணம் வெறும் ஒன்பது எழுத்துகளை வைத்து நான்கே ஓசைகளையுடைய நான்கடிப் பாடலில் , அகப்பொருள் குறித்த ஒரு அற்புதமான பாடல் அது .


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தாதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி .

என்ன ? ஒன்றும் புரியவில்லையா ? இப்பாடலின் பொருளைக் கூறிவிடுகிறேன் . பின்பு எப்படி படித்துக்காட்டினால் புரியும் என்பதையும் குறிப்பிடுகிறேன் . இப்பாடல் , தலைவனை நினைத்து தவிக்கும் தலைவியானவள் , தனக்குத் தானே கூறிக் கொள்வதாகும் . தன் காதலை அவனிடம் தெரியப்படுத்த தூது விடலாமா என்றெண்ணும் தலைவி இவ்வாறு யோசிக்கிறாள் .
கிளியைத் தூதுவிடலாம் என்றால் அதனால் பேசவியலாது ; தோழியைத் தூது அனுப்பலாம் என்றால் , அவளோ நாளை  , நாளையென்றே நாட்களைப் போக்கிக் கொண்டிருக்கிறாள் . இந்நிலையில் மனமே ! நீயே என் தலைவனின் பெயரைக் கூறி , கூறி என்னைக் காத்தருள வேண்டும் .  மேலே கூறிய பாடலை ்கீழ்க்கண்டவாறு பிரத்துப் படித்தால் இதன்பொருள் விளங்கலாம் .


தாதி தூதோ தீது , தத்தை தூது ஓதாது
தாதிதூது ஒத்தித்த தூதது – தாதுஒத்த
துத்தி தத்தாதே துதித்ததே தொத்தீது
தித்தது ஓதித் திதி .


நம் புலவர்களின் திறன் கண்டு ஆச்சரியமாயுள்ளாதா ? இவர்போன்று எண்ணற்ற கவிகள் , உலகில் மற்ற கவிஞர்கள் எண்ணியும் பார்க்கவியலா வண்ணம் பற்பல அரிய கவிதைகளைத் தமிழில் படைத்துள்ளார்கள் . வழக்கம்போல கூட இருப்பதன் பெருஉமைத் தெரியாமல் அதனை நாம் வீணாக்கி வருகிறோம் . சரி , இன்றைய பதிவர்களைக் காணலாம் .
இன்றைய பதிவர்கள் அனைவரையும் கண்டிப்பாக நீங்கள் அறிந்திருப்பீர் ; காரணம் எல்லோரும் மிகப்பிரபலாமான பதிவர்கள் . நான் ப்ளாக் ரோலில் வைத்திருந்து , தொடர்ந்து படித்து வரும் பதிவர்கள் .




இவர்  நஸ்ரியா மார்க்கத்திலிருந்து , வைணவ மார்க்கத்திற்கு திரும்பி , தன் பா புனையும் திறமையால் வைணவக்கடவுளான ஶ்ரீரங்கப்பெருமாள் மீது மட்டும் இவர் பாடலெழுதினால் இன்னும் பத்துவருடங்களில் ஆவியாழ்வார் என்றழைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை . பெர்முடா திரைப்படத்தில் வரும் மொட்டை கெட்டப்பைப் பார்த்து அடுத்த சத்யராஜ் என்று சொல்லுமளவிற்கு நடிப்பில் அந்தந்த கேரக்டர்களுடன் ஒன்றிப்போனவர் . நடிப்புத்திறமைக்கு எடுத்துக்காட்டு எனில் சின்னஞ்சிறு இடைவெளிகளில் வந்த POET THE GREAT – லும் ,  பெர்முடாவிலும் இவரின் வெரைட்டி நடிப்பினைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் . கவிதையிலும் தலைப்பைக் கொண்டே கவிதை புனையும் திறன்மிக்கவர் . எதுகை , மோனை புதுக்கவிதைக்கும் தேவையென்பதை தன் கவிதைகளுடனிடையே நிருபித்து வருபவர் . குறும்பட இயக்கத்திலும் காலூன்றி , ஷங்கர் , ராஜமௌலி கூப்பிட்டாலும் நடிப்புத்துறையில் இறங் மாட்டேன் என்றிருந்த சீனிவாசனை காதல் போயின் காதல் மூலம் ஷைனிங் ஸ்டார் ஆக்கி ஒரு ஈடுஇணையற்ற மாபெரும் நடிகரை அடையாளம் கண்டுபிடித்து , இவ்வலையுலகிற்கு வழங்கியவர் . கவிஞர் மட்டுமின்றி தானே தன் பாடல்களுக்கு மெட்டமைத்து பாடக்கூடிய திறமையும் மிக்கவர் . கவிதைகளுக்கு மட்டுமின்றி தான் எழுதும் கதைகளையும் , சொல்லாடலில் சிற(ரி)க்கச் செய்பவர் . வாத்தியாரின் ISI தரச்சான்றிதழ் பெற்ற மாணவன் நான் தான் என்பதுபோல , வாத்தியாருக்கு அடுத்தபடியாக எளிய , குறு பதிவுகளின்மூலம் நம்மை வசியப்படுத்துபவர் . இப்படி கவிஞர் , இயக்குநர் , நடிகர் , பாடகர் , பதிவர் என பன்முக திறமை வாய்ந்த ஆவி அண்ணன் இப்போது எழுத்துலகை ஒதுக்கிவிட்டதற்கு என்ன காரணம் என்றுதான் புரியவில்லை ! ஏங்க அண்ணே ? இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவு தான் எழுதவேண்டும் என்று கொள்கை விரதம் கடைபிடிக்க வேண்டுமா ? நீங்கள் பலகளங்களில் சாதித்திருந்தாலும் , எழுத்தின்மூலம் தான் எங்களை முதன்முதலில் கவர்ந்திழுத்தவர் என்பதனை மறக்க வேண்டாம் . எங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் மூன்று பதிவுகளாவது எழுதியாக வேண்டும் என்று மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன் . தவறும்பட்சத்தில் ஷைனிங்ஸ்டாரின் கால்ஷிட் உங்களுக்கு கிடைக்காது என்பதையும் பெருந்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . அண்ணனின் சில பதிவுகள் ,






ஒருவர் வலைப்பதிவு ஆரம்பித்து அதிகபட்சம் ஒருவருடங்கள் தொடர்ச்சியாக எழுதுவதே பெரும் சாதனைதான் . நானே ஆரம்ப காலகட்டங்களில் மாதத்திற்கு 10 லிருந்து 20 பதிவுகள் வரை சாதாரணமாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன் . ஆனால் கடைசி மூன்று மாதங்களில் மொத்தமாக சேர்த்தே 15 பதிவுகள் தான் எழுதியுள்ளேன் . என்ன காரணம் என்று யோசித்தால் மண்டை , தன் சுரப்பை நிறுத்திக் கொள்வது  அல்லது சோம்பேறித்தனம் . நேரமின்மை என்பது எப்போதும் யாருக்கும் காரணமாகாது . எழுதுவதற்கான கச்சாப் பொருள் இருந்தால் எப்பேர்பட்ட பிஸியான சூழலிலும் எழுதிவிடலாம் என்பதே உண்மை . சாதாரணமாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள் , அனுபவக்கட்டுரைகள் எழுதுபவர்கள் என்றால் கச்சாப் பொருள் அதீதளவில் தேவையில்லை . வாரத்திற்கு 5 சினிமாக்கள் ரிலிசாகின்றது ; இன்னும் தெலுங்கு , மலையாளம் , இந்தி என்று களத்தில் இறங்கினால் சினிமா விமர்சகர்கள் தினமும் 3 பதிவுகள் தாராளமாய் எழுதலாம் . அனுபவக் கட்டுரைகளை எழுதபவர்களுக்கு , சும்மா உட்கார்ந்திருப்பது கூட அனுபவம் தான் . ஆனால் பிறரை சிரிக்கும் வண்ணம் நகைச்சுவை எழுதுவதற்கு ?????  வலைத்தளம் ஆரம்பித்து இரு வருடங்களாக தினம் ஒரு பதிவு என்ற தன்நிலையில் துளிகூட மாறாமல் தினமும் தன் எழுத்தாண்மையால் நம்மையெல்லாம் சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் பகவான்ஜிக்கு தமிழ்வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை . திடீரென கண்டங்களினிடையே இடப்பெயர்வு நடந்து நாமெல்லாம் துருவப் பகுதிகளுக்குச் சென்று , அந்நிலையில் சூரியன் உதிக்காமல் போனாலும் ஜோக்காளியின் , ஜோக்துளிகள் பதிவில் உதிக்கத் தவறாது . 
இவரது சில பதிவுகள்









பதிவுலகைத் தாண்டி , எனக்கிருக்கும் மிகச்சிறந்த வெல்விஷ்ஷர் , நண்பர் , சகோதரர் என்றால் அது மலர்த்தரு கஸ்தூரி ரங்கன் அண்ணா தான் . அவர் எனக்கு போன் செய்து ‘மெக்’ என்று உரிமையுடன் அழைக்கும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும் . இருவரும் கலந்துரையாட ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது . இவரிடம் இருக்கும் கச்சாப் பொருள் எனகிருந்தால் இன்னும் 50 வருடங்களுக்குத் தேவையான பதிவுகளை இப்போது ட்ராப்ட் மோடில் வைத்திருப்பேன் . அவ்வளவு விஷயங்களுக்கு சொந்தக்காரர் . அவ்வபோது ஆங்கில இலக்கியம் குறித்த என் சந்தேகங்களுக்கு எனக்குப் புரியும் வகையில் , நேரம் ஆனாலும் நொந்துகொள்ளாது தெளிவுபடுத்துபவர் . ஒருமுறை ஷேக்ஸ்பியர் குறித்த என் சந்தேகத்திற்கு விடையளிக்கும்வண்ணம் ஒரு பதிவே எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . இப்படி நான் எழுதவதே அவருக்கு கண்டிப்பாக பிடிக்காது . தற்புகழ்ச்சி , வெட்டி பந்தா , ஒத்தோதுவது போன்ற விஷயங்களெல்லாம் வெறுப்பவர் . ஹாலிவுட் சினிமாக்கள் , சமூகம் சார்ந்த அவலங்கள் , தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் , கல்வி குறித்த பார்வைகள் என லவித்தியாச வித்தியாசமான பதிவுகளுக்குச் சொந்தக்காரர் . ஒருமுறை , தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு வாட்ஸப் குழுமம் துவக்கலாமா மெக் ? என்று கேட்டார் . அக்கோரிக்கையை நான் இங்கு முன்வைக்கிறேன் . வலைப்பதிவர்கள் அனைத்து சோசியல் நெட்வொர்க் களிலும் இணைந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாக அவர்கருதுவது போன்றே நானும் கருதுகிறேன் . உங்களின் கருத்துரைகள் கொண்டு , திரு தமிழ்வாசி அவர்களிடம் இவ்விண்ணப்பத்தை எழுப்புகிறேன் . பார்க்கலாம் , நிறைவேற்றுவாரா என்று . அண்ணனின் சில பதிவுகள் ,








வெல் , வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கடுத்து வலையுலகில்  அதிகம் அறியப்படும் நபராக இருப்பவர் என்றால் அது கில்லர்ஜி அண்ணன் தான் . இந்தியா வந்திருக்கிறேன் என்று அவர்கூறியதும் மிகுந்த சந்தோஷமாயிருப்பினும் , இந்நிலையில் அவரைச் சந்திக்க இயலாமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் மனதினுள் ஒரு ஓரத்தில் இருக்கிறது . மேலே சொன்ன கவி காளமேகம் போல் , கில்லர்ஜியும் பதிவுலகின் காளமேகம் என்று அழைக்கலாம் . சொற்களைப் பயன்படுத்தி அட்டகாசமான பல விஷயங்களை பதிவுகளின் வழியே நமக்கு தருகிறார் . ‘என்பது ‘ என்பதை 80 என்று எழுதி தமிழ் வலையுலகில் சுருக்கெழுத்து முறையை அறிமுகிப்படுத்தியுள்ளார் . இவரின் சில பதிவுகள் ,





மைதிலி அண்ணியினைப் ( எனக்கு அண்ணி தான் ) பற்றி  தெரியாதவர்கள் இருந்தால் கருத்துரையில் கொஞ்சம் கைத்தூக்குங்கள் என்றால் ஒருவரும் தூக்கமாட்டார்கள் . பின்ன! அரசியிலிலிருந்து சினிமா , சமூகம் , கல்வி , இல்லம் , பெண்மை , சமையல் , தொழில்நுட்பம் , சிறுகதை என அனைத்தையும்  கலந்து கட்டி எழுதி , அனைவரையும் கவர்ந்திழுத்தால் எல்லோரும் அறியாமல் எப்படி இருப்பார்கள் ? என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு மிச்சமாக ஏதாவது ஒரு ஜானரை விட்டு வைப்பார் என்று பார்த்தால் , பதில் ம்ஹூம் ! ஒருகட்டத்தில் நான் எழுதநினைக்கும் சில விஷயங்களை பிறபதிவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்து இரண்டு மாதகாலம் பதிவுலகை விட்டே ஒதுங்கியிருந்தேன் ; அவற்றுள் குறிப்பிடித்தக்கவர்களில் இவரும் ஒருவர் . எளிமையாக , அதிமேதாவித்தனமற்ற , ரசிக்கும்படியான குறும்பெழுத்துகளுக்குச் சொந்தக்காரர் . இப்போதெல்லாம் வலையுலகை விட்டு , வெளியுலக வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருப்பது கவலையளிக்கும் விஷயம் . இருப்பினும் இதையே என் கோரிக்கையாக ஏற்று , விடுமுறை நாட்களில் கொஞ்சம் நேரமொதுக்கி , பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டினால் என் மகிழ்ச்சி நிறையாகி விடும் . இவரின் சில பதிவுகள் ,

மேலும் வாசிக்க...

Friday, July 24, 2015

பஞ்ச காவியங்கள் !!!!!

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைக்கு பற்பல பணிப்பழுவுகளுக்கு இடையே எழுதியிதால், முன்னுரையாக சில விஷயங்களைக் குறிப்பிட முடியாமல் போய்விட்டது. இன்று ஒருநாள் மட்டும் நேரடியாக பதிவர்களைப் பற்றி காண்போம். இன்று எழுத நினைத்த கவி காளமேகத்தின் பாடலையும் ஆற்றலையும் நாளைய பதிவில் காணலாம் . 


பத்திரிக்கையாளர், வழக்குரைஞர் என பன்முகத்திறமை கொண்ட சுந்தர் அவகளின் வலைப்பூவே இது. தன் பதிவுகளின் வழியே சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசியல் சார்ந்த பதிவுகளை சமூகத்தில் பதிவு செய்யும் இவரின் பதிவுகள் நம் அனைவருக்கும் உபயோகமானது. தன்னைப்பற்றிய சுய அறிமுகத்தை நான் எனும் தலைப்பில் கொடுத்திருக்கும் இவர், சுற்றுச்சூழல் மாசுபாடுகள் குறித்து வழக்குத் தொடுப்பது எப்படி? எங்கே? என்பதைப்பற்றியும் விலாவரியாக எழுதியுள்ளார் .


பெண்ணியத்திற்காக உண்மையாக எழுத்தின்வழியே போராடும் அரிதான எழுத்தாளர்களில் ஒருவர் அவ்வை நிர்மலா. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ப்ரெஞ்ச் என அனைத்து மொழிகளையும்  கற்றுத் தேர்ந்ததுடன் , தளரா வேகத்துடன் சளாரா நடையில் இவர் எழுதும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை . இவரின் சில பதிவுகள் ,


வெல், இந்த தளத்தைத் தெரியாமல் இருப்பவர்கள் வலையுலகில் அரிது என்றே சொல்லலாம். KG, ஸ்ரீராம், ஷோபனா, ராமன், கௌதம் என பல்வேறு திறம்வாய்ந்த பஞ்சபாண்டவர்களை பதிவுலகில் எழுதி அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கும்  ஒரு தளம் . இத்தளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. அனுபவக்கட்டுரைகள் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள் , எங்கள் ப்ளாக்கில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து மனப்பாடம் செய்தால் அட்டகாசமாக எழுத ஆரம்பித்துவிடலாம். தளத்தின் அனைத்துப்பதிவுகளுக்கும் மணிமுடியாக விளங்கும் பாஸிட்டிவ் செய்திகள் தொடரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கே.ஜி சார், இப்போதெல்லாம் எழுதாமல் இருப்பது ஏனோ என்றுதான் தெரியவில்லை. எங்கள் ப்ளாக்கிலிருந்து சில பதிவுகள் ,


இத்தளத்தின் வழியே பல அற்புதமான கட்டுரைகள் எழுதிவருகிறார் திரு.  விஜயன்துரை. இவர்மட்டும் முழுநேர எழுத்தாளன் ஆனால் , எழுத்துலகில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் எனப்புகழாரம் சூட்டி இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது நம்ம சீனு அண்ணன் தான் . ஆம் ! அவர் கூறியது உண்மைதான். இவரின் பதிவுகளின் தரம் அவர் கூற்றிற்கேற்ப இருப்பது உண்மைதான். கதைகள் மற்றும் கவிதைகளில் வார்த்தை ஜாலம் புரியும்  இவரின் சில பதிவுகள் ,


மணிமாறன் அண்ணனின் எழுத்தாக்கத்தில் உருவான இந்த தளத்தில் சினிமாக்கட்டுரைகளும், சிந்திக்கவைக்கும் அனுபவக்கட்டுரைகளும் இடம்பெறும்.  இப்போதெல்லாம் முழுக்க சினிமாக்கட்டுரைகளிலேயே இவர் கவனம் செலுத்தியிருப்பது கொஞ்சம் வேதனைக்குள்ளாக்கியிருந்தாலும், முன்போ மீண்டு வந்து எழுத்தால் நம்மை மீண்டும்  கவர்ந்திழுப்பார் என நம்பலாம் . இவரின் சில பதிவுகள்,

நன்றி  மற்றும் அன்புடன் ,
மெக்னேஷ் திருமுருகன்
மேலும் வாசிக்க...

Thursday, July 23, 2015

புதையலா ? அல்லது படுகுழியா ??

அனைவருக்கும் வணக்கம் ,

வாழ்க்கை என்றால் என்ன? இதற்கான விடையை ஆளுக்கொரு தத்துவமாக உலகின்பல பெரும் சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில், தோலாமொழித்தேவர் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் .

திக்கற்ற காட்டில், யானையால் துரத்தப்பட்ட ஒருவன்  அருகிலிருக்கும் பாழுங்கிணற்றுக்குள் குதிக்கும்போது, கிணற்றுக்குள் இருக்கும் நஞ்சுப்பாம்புகளைக் கண்டு பயந்து. கிணற்றின் ஓரத்தில் இருக்கும் புல்லைப் பற்றிக்கொண்டு இருக்கிறான். மேலே யானை; கீழே பாம்பு. அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்  ஒரு கறுப்பு எலியும் (இரவு), வெள்ளை எலியும் (பகல்) ஒன்றிணைந்து அவன் பற்றியிருக்கும் புல்லைக் கடிக்க ஆரம்பிக்கின்றதாம். சற்று நேரத்தில் புல் அறுந்து பாம்பிடம் கடிபட்டுச் சாகலாம் அல்லது மேலேறி யானையிடம் மிதிபட்டுச் சாகலாம். இந்நிலையில் இருக்கும் அவனுக்கு மேலே மரத்தின்கிளையிலிருக்கும் தேன்கூட்டிலிருந்து தேன் சிந்துகிறது. இவ்வளவு துன்பங்களுக்கிடையில் நாக்கை நீட்டி, அத்தேனைச் சுவைக்க அவன் முற்படுவது போன்றதுதான் உலக வாழ்க்கை என்கிறார் தோலாமொழித்தேவர் . சரி, இன்றைய பதிவர்களைக் காண்போம் .

 வெல், தலைப்பிலேயே தெரிந்திருக்கும் இவரின் தளத்தைப் பற்றி . இவரின் தளத்தில் ஸ்பெசல் என்னவென்றால் புத்தக விமர்சனம். தெளிவாக, வழவழவென்று என்போல் இழுக்காமல் சுருக்கமாக புத்தகத்தை விமர்சித்துவிடுவார் . மேலும் ஏதேனும் ஒரு குட்டியூண்டு விஷயத்தை எங்காவது பார்த்து கவன ஈர்ப்பு பெற்றுவிட்டால், அதை அலசி ஆராய்ந்து , அதன் முடிவை கண்டுபிடித்து கடாசி விட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பார். எடுத்துக்காட்டாக, அனேகன் திரைப்படத்தில் பர்மாவிலிருந்து  ஹீரோவும், ஹீரோயினும் தப்பித்துச் செல்ல ஒரு கப்பலில் ஏறுவார்கள் . அந்த கப்பல் பற்றி ஆராய்ச்சி செய்து பிரபா அண்ணன் எழுதியிருக்கும் எஸ்.எஸ். ரஜுலா பதிவினைப் படித்துப் பாருங்கள் .
அவ்வப்போது சிறுகதைகளை எழுதிவரும் இவரின் கைவண்ணத்தில் உருவான ப்ராய்ட் தந்த முத்தம், ஒரு அட்டகாசமான நான் லீனியர் சிறுகதையாகும். ஒரு நான் – லீனியர் சிறுகதை எவ்விதத்தில் தொடங்கி எவ்விடத்தில் முடியவேண்டும் என்பதை மிகச்சரளமாக, சாதாரணமாக தன் சிறுகதையில் பயன்படுத்தியுள்ளார். ஏனோ, இப்போதெல்லாம் முன்போல் இவர் எழுதவில்லை. இவ்வலைச்சரத்தின் வழியே அவரை மீண்டும் எழுதும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .

இத்தளத்தில் எழுதிவரும் கார்த்திக் அண்ணா, ஒரு காமிக்ஸ் பிரியர்; ஏன், வெறியர் என்றே சொல்லலாம். தமிழ் மட்டுமின்றி, பிறமொழிக் காமிக்ஸ்களைப் பற்றியும் தெளிவாக எழுதிவருகிறார். அவ்வப்போது தன் சொந்த அனுபவங்களையும் எழுதிவரும் இவர் தன் சூப்பர்சிங்கர் அனுபவத்தை கார் சிங்கர் எனும் பதிவின்வழியே நமக்குக்கூறுகிறார். மேலும் துரோக தேசங்கள் எனும் பதிவில் THE GRAND DUKE காமிக்ஸ் மற்றும் அதன் பிண்ணனியில் உள்ள வரலாற்றையும், இரண்டாம் உலகப்போரையும் இவர் எடுத்துரைக்கும்விதம் மிக அழகு. இவரும் இப்போது தன் தளத்தில் எழுதுவதைக் குறைத்துவிட்டார். இவ்வலைச்சரத்தின் வழியே அவரை மீண்டும் எழுதும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .

உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்; இந்த தளத்தினைப் பற்றி . இருந்தாலும் நானும் ஏதாவது சொல்லியாகவேண்டுமல்லவா ?

‘உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடல் வளர்த்தேன்  உயிர்வளர்த் தேனே’

என்று தமிழ்ச்சித்தர் திருமூலர் கூற்றுக்கேற்ப நம் உடலை எவ்வாறு எளிய பயிற்சிகளால் பேணிக்காப்பது என்பதை விளக்குகிறது இந்தத்தளம். இப்போதுள்ள துரிதகாலச் சூழலில் அனைவராலும் ஜிம்முக்குப் போய்விடவமுடியாது. அதனால் அவ்வப்போது சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து நம் உடலை வலுப்படுத்த வேண்டும்; உடலை வலுப்படுத்தினாலே உள்ளம் வலுவாகும் . இந்த தளத்தின் சில பதிவுகள் ,



பழம்பெரும்பதிவர் எனினும், தன் கவிதைகளை காலத்துக்கேற்ப மாற்றி எழுதி, இன்றுள்ள இளம்தலைமுறையினரையும் ஈர்க்கும் சக்திபடைத்தவர் இவர் என்றால் மிகையாகா! எனக்கு புதுக்கவிதையின்பேரில் பெருநாட்டமில்லை; உரைநடை தான் என் முழுவிருப்பம்.  பழஞ்செய்யுளும், பாக்களுக்கும் அடிமை . ஒருவேளை இலக்கணச்சுத்தமாக இருப்பதை நான் விரும்புவதாலோ என்னவோ! என்னை ஈர்த்த கவிதைகள் என்றால் ஒருசில தான். நான் ஒரு கவிஞரைப் படிக்கிறேன் என்றால், அவரிடம் நான் படித்த முதல்பதிவே என்னை கவர்ந்திழுக்கவேண்டும். அப்படியில்லாவிடில் அத்துடன் அக்கவிஞரின் தளத்திற்குச் செல்லமாட்டேன். இவ்வகையில் வலையுலகில் முதன்முதலில் என்னைக் கவர்ந்தவர் அரசன் அண்ணா; அதன்பின் இவர் தான். ஒரே கவிதையில் ஈர்த்துவிட்டிருந்த இவரது எழுத்தாற்றல் எங்களையும் மயக்குமென்பதில் சந்தேகமே இல்லை . இவரின் சில கவிதைகள் ,



பங்குச்சந்தை RAMACHANDRAN WRITES  எனும் தளத்தில் தன் பெயரையே கொண்டு   எழுதிவரும்  ராமச்சந்திர அவர்கள், தொடர்ந்தாற்போல் மிகச்சிறப்பாக பங்குச்சந்தை குறித்த பதிவுகளை எழுதிவருகிறார். நானே சிலமுறை பங்குச்சந்தையில் குழப்பத்தில் உட்கார்ந்திருக்கும்போது எனக்கு இவரின் பதிவுகள் கைக்கொடுக்கும் . இவரின் சில பதிவுகள் ,




மேலும் வாசிக்க...

Wednesday, July 22, 2015

இன்றைய பதிவர்களும் பதிவுகளும் !!!

அனைவருக்கும் வணக்கம் ,

கண்மணி அன்போடு, A Butterfly and Bio – Technology  எனும் தளங்களில் எழுதிவரும் கண்மனி அக்காவினைப் பற்றித் தனியாய் சொல்லவேண்டியதில்லை. செம நக்கலான, ஜாலியான, ஹாஸ்யமான, விறுவிறுப்பான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். எளிமையான பதிவுகளை , இவர் எழுத்தின் மூலம் சிறப்பாக மாற்றித் தருவது தான் இவரது சிறப்பு. நேற்று தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் ஷைனிங்ஸ்டார் சீனு ஆகிய இரண்டுபேரிடமும், எதுனா புது ப்ளாக் இருந்தா லிங்க் கொடுங்கணா என்று தனித்தனியே வினவிய போது இருவரும் சேர்ந்தார்போல் இவரின் வலைத்தள முகவரியைக் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். குறிப்பாக சைனிங்ஸ்டார் எப்பேர்பட்ட ரசிகசிகாமணிகளைத் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதை நாடறியும்; ஆனால் அவரே கண்மணி அன்போடு வலைத்தளத்தின் ரசிகர் என்பதை நேற்று தான் நான்றிந்தேன் . இவ்வளவு நாள் ஒரு நல்ல பதிவரை மிஸ் செய்துவிட்டோமே என்ற வருத்தம் இவரின் பதிவுகளைப் படிக்கும் போது உண்டானது. இனிமேல் என்ன வேலை? மொத்த பதிவுகளையும் படித்துமுடித்துவிட வேண்டியதுதான் . இவரின் சில பதிவுகள் ,


மனித மனம் என்றும் அருகில் இருப்பதை கண்டு ஏற்றுக்கொள்ளாது என்பார்கள். எடுத்துக்காட்டாக நாம் ஒரு கோவிலுக்குச் சென்றே ஆகவேண்டும் எனப் பல வருடங்கள் யோசித்துக்கொண்டும் ப்ளான் போட்டுக்கொண்டும் இருப்போம்; அந்த கோயிலுக்கும் செல்வோம். அப்போது அந்த கோவிலைச்சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்வோர் மீது நமக்கு சிறு பொறாமை உருவாகும். இப்படிப் பக்கத்திலேயே நாமும் இருந்தால் தினந்தினம் சென்றுவரலாமே என்று நமக்குள் தோன்றும். ஆனால் உண்மையில் அக்கோயிலுக்கு அருகிலிப்பவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் நம்மைப் போன்ற ஆர்வத்துடன் அக்கோவிலுக்கு வரமாட்டார்கள். இதேபோல் தான் சுற்றுலாத்தலங்கள், ஏன் காதலிகள் கூட. ஆரம்பத்தில் அவள் மடியிலேயே கிடக்க விரும்பும் மனது, போகப்போக நாம்ம விட்டுக்குச் செல்லக்கூட போகமுடியாதளவிற்கு அலுப்பு தட்டிவிடும்.  இப்போது மேட்டர் என்னவென்றால்  சுருதி  எனும் தளத்தில் எழுதிவரும் சுதாகர் அண்ணன் , ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார் . ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் சார்ந்த இலக்கிய கட்டுரைகள், இலங்கையின் அரசியல் நிலை , ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் நிலை என்று அசாத்தியமான பதிவுகளை தம் எழுத்தில் வடித்து நம்முன் காட்சிக்குத் தருகிறார் . இவரின் சில பதிவுகள் ,


அடுத்து, பொக்கிசம் எனும் தளத்தில் எழுதிவரும் லோகு என்பவர், சினிமா மட்டுமின்றி, சமையல், சீரியல் என அனைத்தையும் கலந்துகட்டி எழுதிவருகிறார். இவரின் கொரிய சீரியல்கள் – ஒரு மதிப்பீடு  பதிவு, தமிழ் சீரியல்களுக்கும் கொரிய சீரியல்களுக்கும் இருக்கும் வேற்றுமை, ஒற்றுமைகளை அட்டகாசமாக அலசி ஆரா(கலா)ய்கிறது. இவரின் அசைவப்பிரியர்களுக்கான சில டிப்ஸ், அசைவ உணவினைப் பற்றியும் , அதனால் உண்டாகும் நன்மை-தீமைகளைப் பற்றியும் எளிமையாக எடுத்தியம்புகிறது . தளத்தின் பெயராலேயே பிச்சைக்காரன் என்று அழைக்கப்படும் பிச்சைக்காரன் ,

 தன் தளத்தில் அரசியல் , சமூகம் , சினிமா , இசை , சிறுகதை என அனைத்தையும் கோர்த்து அழகாக எழுதிவருகிறார் . இவரின் சில பதிவுகள்


வத்திக்குச்சி  எனும் தளத்தில், வித்தியாச, வித்தாயசமான  சிந்தனைகளின் வெளிப்பாடுகளை நன்கு காணலாம். பெரும்பாலும் ஹாஸ்யமான பதிவுகள் தான் இவரது ஸ்பெசல். இவரின் தளத்தில் சீரியஸான எழுத்துகளையும் அவ்வப்போது பார்க்கலாம். ஓ.கே கண்மனி திரைப்படத்தை  மற்ற இயக்குநர்கள் எஎடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஓ.கே கண்மணி – இயக்குநர்கள் மாறினால்  எனும் பதிவில் எழுதி நம் வயிற்றை புண்ணாக்கியுள்ளார் .இவரின் சில பதிவுகள் .


மீண்டும் நாளைச் சந்திப்போம் ,
நன்றி ,
அன்புடன்
மெக்னேஷ் திருமுருகன் 



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது