07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 31, 2007

எனது TOP TWO

என்னென்னமோ சொல்லுவாங்களே ..

திருநெல்வேலிக்கே அல்வாவா ..
தருமிக்கே கேள்வியா ..

அப்டின்றது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவங்களைப் பத்தியே மறுபடியும் உங்க கிட்ட சொல்ல வர்ரது ரொம்ப சரியான காரியம் இல்லைதான். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்றை உங்க கிட்ட மறுபடி மறுபடி சொல்றதுக்கு ஒரு ஆசைதான். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்கள் பற்றி சொல்லணும்னு ஒரு ஆசை. அவர்களது எண்ணங்கள், எழுத்துக்கள் நிறையவே பிடிச்சிப் போச்சு. அதனாலே அதை மறுபடி மறுபடி சொல்லி வருகிறேன். Repetition is bore அப்டின்றது தெரிந்தாலும் சொல்லிடணும்னு ஆசை.


நம்ம பதிவர்கள் எல்லார் எழுத்தையும் நான் வாசித்ததில்லை; வாசிச்ச சிலரின் பதிவுகளும், எழுத்து நடையும் புரிந்ததில்லை. ஆக, நான் வாசித்து அதில் புரிந்துகொண்ட பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்காரர்களைப் பற்றிய ஒரு குறிப்பு.


இது ஒன்றும் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இல்லை. எனக்குப் பிடித்த இவர்களின் எழுத்தைப் பற்றிச் சொல்ல இந்த ஆசிரிய வாரத்தைப் பயன்படுத்தப் போகிறேன். அவ்வளவே..இவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஊரறிந்த பதிவர்கள். அவர்களுக்கு வெளிச்சம் போட அல்ல இப்பதிவு. மாறாக அவர்களின் மேலுள்ள என் பிரமிப்புக்கு ஒரு வெளியீடு.


முதலாவது பதிவர் இளவஞ்சி. முதலில் வாசித்து நான் “விழுந்த” பதிவு அவரது நண்பர் ஒருவரைப் பற்றிய பதிவு. அவர் சொன்ன அந்த ராஜேஷ் …! என்னன்னு சொல்றது. அதை என் எழுத்தில் ஏதாவது எழுதிக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை.


அதன் பின் தொடர்ந்து மற்ற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தபோது ஒன்று புரிந்தது; எந்தப் பதிவுகளை மிகவும் விளையாட்டுத்தனமா நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறாரோ, நிச்சயம் மனுஷன் கடைசியில அழ வச்சிருவார்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுமாதிரி பதிவுகள் நிறைய. சமீபத்தில் எழுதிய அவரது புல்லட் பற்றிய பதிவு வாசித்தவர்கள் அனைவரையும் உலுக்கியது பின்னூட்டங்களில் தெரிந்தது.

கூரானைப் பற்றிய அந்தப் பதிவும் இதுபோல் மனசைக் கலங்க வைக்கும் பதிவு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.


கொஞ்ச நாட்கள் மட்டும் பாலகுமாரனின் கதைகளில் சிறிது மோகம் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சாதாரண சினிமாப் பாட்டொன்றைப் பற்றிக்கூட எழுதிக் கண்களைக் கலங்க வைத்து விடுகிறாரே என்று நினைத்ததுண்டு. ஆனால் இளவஞ்சியின் பதிவுகளை வாசித்த பிறகு பாலகுமாரனின் எழுத்து மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. மனசக் கலங்கடிக்கிற இளவஞ்சியின் எழுத்தை மிஞ்சும் எழுத்துக்காகக் காத்திருக்கிறேன். இளவஞ்சி தன் மகள் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற அன்று நாடுதாண்டி இருந்து கொண்டு வாழ்த்து சொன்ன பதிவை என் மகள்களுக்கு அனுப்பிய போது நான் பிள்ளைகளை வளர்த்ததில் இப்படி ஒரு அழகான காரியம் செய்ததேயில்லையே என்ற கவலையும், இளவஞ்சியின் எழுத்தின் மேல் பொறாமையும் ஒன்றாய் வந்தன.


இவ்வளவு மனதைத்தொடும் பதிவுகள் தரமுடிந்த கையோடு தனி நகைச்சுவைப் பதிவுகளையும் அழகாக எழுதுகிறார். அதையும் விட மனுஷனுக்குக் கோபம் வந்தாலும் நல்லாவே எழுதுகிறார். நன்கு நினைவிருக்கிறது - அவரது ஒரு கோபப் பதிவுக்கு ‘உங்கள் ரெளத்திரமும் அழ்காக இருக்கிறது’ என்று நான் பின்னூட்டியது.


அவர் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய எழுதணும்.




உணர்ச்சிகளால் முன்னவர் என்னைக் கவர்ந்தாரென்றால் தன் தமிழ்நடையால் என்னைக் கவர்ந்தவர் செல்வநாயகி.

சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் - தலைப்பின் இந்தக் கவித்துவமே எனக்குப் பிடித்துப் போனது. கவிதையென்றால் காததூரம் ஓடும் கற்புர வாசனை தெரியாத ஜென்மமான எனக்கும் பிடிக்கின்றன இவரது கவிதைகள். அதற்குக் காரணம் எழுத்தின் எளிமையும், நேர்மையும். உள்குத்து என்றெல்லாம் இல்லாமல் முகத்தில் அறையும் உண்மைகளை அவைகள் தாங்கி நிற்பதால் இருக்குமென நினைக்கிறேன்.


இவரது எழுத்தும் மனதில் இருந்து வரும் உண்மையான உணர்வுகளைத் தாங்கி வருவதால்தானோ என்னவோ, அந்தச் சிறுவன் ரமேஷ் என்றும் உள்ளத்தில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டு இருக்கிறான். அந்தப் பதிவில் சமூகக் கேவலங்களை உள்ளூட்டாக வைத்திருந்ததும் ஒரு தனி அழகு.


இளவஞ்சிக்குச் சொன்னது போல் இவரது ரெளத்திரமும் அழகு. விஜயா பற்றிய அந்தப் பதிவில் வெளிப்படும் ,ரெளத்திரமும் ‘எங்கள் சாமிகள்’ பதிவில் வெளிப்படும் கோபமும் அழகான, ஆழமான கோபங்கள்.


இவரது கோபத் தணல் அணையாது கனன்றுகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.

இன்னும் வருவேன் ...
மேலும் வாசிக்க...

Monday, August 27, 2007

துக்கடா …

ஒரு நல்ல விடயம் (விதயம்? / விஷயம்?) சொல்லணும். சென்னைப் பட்டறையில் இருந்த போதே மனசுல நினச்ச ஒண்ணு. மொத்தமா ஒரே மாதிரியா வெள்ளை டி.ஷர்ட் .. அதிலே முதுகுப் பக்கம் ‘சங்கம்’ அப்டின்னு பெரிய எழுத்துக்கள் .. முன்னால அவங்க பதிவின் உரல் .. எல்லாம் இந்த வ.வா.சங்கக் காரங்கதான் .. செம அழும்பு. கொஞ்ச நேரம் என்னையும் “ஆட்டைக்கு” சேர்த்துக்கிட்டாங்க. மாடியில் ஒரு ஓரத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிக்கிட்டு அதுக போட்ட கும்மாளம் … அம்மாடியோவ்! ஒண்ணு சொன்னா ஓவர் பில்டப்புன்னு நினச்சிக்கிடுவீங்க .. ஆனா, நிஜமாகவே முழுசா பொய்க்கலப்பில்லாத உண்மைங்க; என்னன்னா, அவங்க கூட தேமேன்னு நின்னுகிட்டு இருந்தேனா… மக்கள் மாத்தி மாத்தி ஒருத்தர் ஒருத்தரை காலை வாரிக்கிட்டு, சரவெடி மாதிரி ஆளாளுக்கி மாத்தி மாத்தி ஜோக்கு மழையா பொழிஞ்சிக்கிட்டு இருந்தாங்களா. அவங்க கூட நின்ன கொஞ்ச நேரத்திலேயே எனக்குத் தாடை வலிக்க ஆரம்பிச்சிருச்சி. எவ்வளவு நேரம்தான் மனுசன் “ஈன்னு” சிரிச்சிக்கிட்டே இருக்க முடியும், சொல்லுங்க. சிரிச்சிக்கிட்டே இருந்தா தாடை வலி வரும்னு எனக்கே அப்பத்தான் தெரிஞ்சிது.


ஏற்கெனவே ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமலேயே சங்கம் அமைச்சி, அதுக்கு ‘சீருடை’ எல்லாம் வச்சி ஒண்ணா சேர்ந்ததும் பயங்கர கலகலப்பா மாறி ‘ஒண்ணு மண்ணா’ இருக்கணும்னா அது ரொம்ப விசேஷம்தாங்க. ரொம்ப நல்லா இருந்திச்சி. அவங்களுக்குள்ள ஒரு நிஜமான உறவு ஏற்பட்டு விட்டதும் நன்றாகவே தெரிந்தது. அதுவும் அவங்க ‘தல’ வந்ததும் ஆளுகளுக்கு கைகால் ஓடலைன்னு நினைக்கிறேன். அம்புட்டு சந்தோஷம் அவங்க மத்தியில.


பதிவுலகம் கண்டெடுத்த ஒரு ஆரோக்கியமான சங்கம் – வருத்தப் படாத வாலிபர் சங்கம். அவர்களது சங்கக் கோட்பாடுகள், அதை அவர்கள் வழி பிறழாது நடத்தி வருவது எல்லாமே மிகவும் பாராட்டுக்குரியது. இதில் மாதாமாதம், 'அட்லஸ் வாலிபர்' என்று ஒரு added attraction வேறு! சங்கமும், சங்க உறுப்பினர்களின் உறவும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.


இவர்களைப் பற்றி சொல்லும்போது பாசக்காரக் குடும்பத்தைப் பற்றி சொல்லாமல் போனால் நன்றாக இருக்காது. இது பதிவுலகத்தில் அண்மையில் ஆரம்பித்த உறவுமுறைக் கூட்டம். ஆனாலும் வளர்ந்து வரும் குடும்பம். (முதலில் என்னை சேர்த்திருந்தார்கள்; இப்போது ஓரங்கட்டி விட்டது மாதிரி தெரிகிறது!) மேலும் வளர வாழ்த்துக்கள்.

இந்தக் குழுக்களைப் பற்றி கூறிவிட்டு பா.க.ச. பற்றி சொல்லாமல் விட்டால் அது எவ்வளவு பெரிய தப்பு. எங்கெல்லாம் தமிழ்ப் பதிவர்கள் உண்டோ அங்கெல்லாம் இந்த சங்கத்தின் கொ.ப.ச. ஆவதற்குத்தான் எத்துணை போட்டி? அந்த போட்டியே இந்த சங்கத்தின் வெற்றிக்கு அடையாளம். (மதுரைக் கிளைக்கு நான் தான் முதல்ல அப்ளிகேஷன் போட்டேன்; அதனால் நாந்தான் அதன் தலைவர்!)


நேற்றைய என் முதல் பதிவில் பதிவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் பற்றிக் கூறியிருந்தேன். எப்படி ஏற்படுகிறது என்றே தெரியாமல் நடக்கும் இந்த நட்புறவுகள் இன்னும் சிறு சிறு குழுக்களாக எண்ணிக்கையில் நிறைய இருப்பது தெரிகிறது. பளிச்சென்று கண்ணில் பட்ட குழுக்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பாகத்தான் இந்த மூன்று குழுக்களைப் பற்றிக் கூறினேன். பதிவருலகம் வளர்ச்சிக்கு இத்தகைய குழுக்கள் தேவையெனவே நினைக்கிறேன்.


சங்கங்கள் பலவாகி, நட்புக்கூட்டங்கள் பெருகி, உறவுகள் கிளைத்து நம் பதிவருலகம் மேலும் செழித்து வளரவேண்டுமென்பதே என் ஆவல்.
மேலும் வாசிக்க...

ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் .........

இந்த வார வலைச்சரத்திற்கு ஆசிரியராக என்னை ஆக்கிய வலைச்சரப் பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.


மதுரை மல்லிகைச்சரத்திற்கு மக்களிடையே ஒரு தனிச்சிறப்பு உண்டு. மதுரை மல்லிகைப் பூவிற்கென்று தனிச்சிறப்பு உண்டோ என்னவோ, ஆனால் மதுரைப் பூக்காரர்கள் பூ கட்டும் வித்தைக்குத் தனி மரியாதை உண்டு என்றே நினைக்கிறேன். ஒன்றோடு ஒன்றாக, அடர்த்தியாக, நெருக்கமாகக் கட்டும் விதத்தில் அந்த மல்லிகைச் சரத்திற்கே ஒரு தனி அழகு வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மலர்ச்சரம் கட்டும் கரங்களும், அந்தக் கரங்களில் நளினமாக இழையூடும் நாருக்கும்தான் அந்தப் பெருமை.


இதுவரை வலைச்சரத்தின் ஆசிரியராக இருந்து சென்ற சிலர் தங்களை வலைச்சரத்தின் பூக்களைக் கட்டும் நார் என உருவகப்படுத்திக் கொண்டார்கள். நானோ மல்லிகைச் சரத்தின் அழகே அந்த நாரினால்தானே வருகிறது என்கிறேன். சிதறிக்கிடக்கும் மலர்களை முறைப்படுத்தி அழகூட்டும் நார் என்றால் அது எவ்வளவு சிறப்பிடம் பெருகிறது! ஆனால் இந்த வார வலைச்சரத்தின் ஆசியரியனாக இருக்க வாய்ப்பளிக்கப்பட்ட நான் அந்த நார் செய்யும் நல்ல வேலையை என் திருப்திக்குச் செய்ய முடியாமல் போய்விடும் என்று தெரிந்தே ஆரம்பிக்கிறேன். என்னைப் பற்றிச் சொல்லும்போது //ஒரே வார்த்தையில் சொல்லணும்னா முழுச்சோம்பேறி. 'நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை// என்று சொன்னது மாதிரி கடைசி வரை வேற ஆணி புடுங்கிட்டு இருந்திட்டு, இப்போ கடைசி நேரத்தில என்ன பண்ணப் போறோமோன்னு பேய் முழி முழிச்சிக்கிட்டு இருக்கேன்.


நானும் பதிவுலகத்துக்கு வந்து ஆகிப் போச்சு ரெண்டே கால் வருஷத்துக்கு மேலேயே. எழுதி ஒண்ணும் சாதிக்கலைன்னாலும் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அதென்னமோ தெரியலை; இந்த பதிவர் சந்திப்பு அப்டின்னாலே மனசு கிடஞ்சு அடிச்சிக்கிது. கலந்துகிட்டா ஏதோ நம்ம வீட்டு கல்யாணக் கூட்டத்தில இருந்த மாதிரி ஒரு நிறைவு மனசெல்லாம் படர்ந்திருது. கடைசியா சென்னைப் பதிவர் பட்டறையில் கலந்து கிட்டப்போ ரொம்ப திருப்தியா இருந்துது. சந்திக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட காசியைப் பார்த்தது நடந்தது. கூட்டத்துக்குள்ள அங்கேயும் இங்கேயுமா நடந்திக்கிட்டு இருந்தது, அங்க இங்கன்னு தெரிஞ்ச முகங்கள், பெயரைமட்டும் தெரிந்து வைத்திருந்து முதல் முறையா பார்க்கும் முகங்கள், பார்த்த புகைப்படங்களில் இருந்து ஒவ்வொரு முகமும் எவ்வளவு வேறுபட்டு இருக்குன்னு ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்த முகங்கள் – ரொம்ப மகிழ்ச்சியான, நிறைவான தருணங்கள். இந்த உறவின் விந்தை புரியவில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. எப்படி? ஏன்? Feathers of the same flock என்ற நினைப்பில் வருகிற உறவா? Fraternity, comradery – இப்படி ஏதோ ஒன்று … !


அறுபதாண்டுகளில் இல்லாமல் இந்த 29 மாதங்களில் என்னுள் பல மாற்றங்கள், தெளிவுகள் நிறையவே ஏற்பட்டுள்ளன. அதற்காகவே தமிழ்ப் பதிவுகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு தனி மனிதனிடம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் வலிவு இந்தத் தமிழ்ப் பதிவுகளுக்கு இருக்கிறதென்பதே வலையுலகத்தின் பெருமை. இந்த ஆளுமை விரிந்தால் எத்தனை மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்? என் அடிப்படைக் கருத்துக்கள் மாறாமல் இருக்கலாம்; ஆனால் பதிவுலகத்தில் இறங்கிய பிறகு நம் கருத்துக்கு ஒத்துவரும் பதிவுகளைப் படிக்கும்போது நம் கருத்துக்களிலேயே நமக்கு மேலும் ஒரு தெளிவு பிறக்கின்றது. ஒரு சிறு எடுத்துக்காட்டு: காஷ்மீர் பிரச்சனை பற்றி எனக்கென ஒரு கருத்து வைத்திருந்தேன். அதை சில சமயங்களில் வெளியிட்ட போது கிடைத்த எதிர்வினையால் நமது கருத்து தவறுதானோ, பெரும்பான்மை சொல்வதுதான் சரியோ என்ற நினைப்போடு இருந்தபோது தமிழ் சசியின் காஷ்மீர் பற்றிய கட்டுரைகள் புதிய விளக்கங்களை, விளங்கல்களைத் தந்தன. நாம் நினைத்ததும் சரியான கோணம்தான் என்று அந்தக் கட்டுரைகள் தெளிவித்தன.


நம் கருத்துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்கள் வரும்போது அவைகளை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ இப்படி ஒரு பார்வை இருக்கிறது என்பது தெரிய வருகிறது. நம் கருத்துக்கு ஒத்துப் போகும் கருத்துக்களைப் படிக்கும்போதோ, இன்னும் கொஞ்சம் தெளிவும், மேலும் மேலும் விவரங்களும் கிடைக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் வாசிப்பில் லாபம்தான். ஒத்தக் கருத்துக்களால் நம் கருத்துக்கள் பலம் பெறுவதும், எதிர்க்கருத்துக்களாலும் நம் கருத்துக்கள் பலம் பெறுவதுமே நடக்கின்றன.

எதிர்க்கருத்து நம்மை மாற்றுவதும் அவ்வப்போது நிகழும் சாத்தியக்கூறும் கொஞ்சம் உண்டுதான். ஆனாலும் நாம் நமது கருத்துக்களில் மேலும் மேலும் வலுவடைவதே என்னப் பொறுத்தவரை நடந்துள்ளது. எதிர்க்கும் ஒரு கருத்துக்கு மேலும் மேலும் வளம் சேர்த்துள்ளேன். அதைப் போலவே என் கருத்துக்கு ஆதரவாகவும் புதிய புதிய பார்வைகள் கிடைத்துள்ளன. எப்படியோ, கருத்தாக்கங்களுக்கு நம் பதிவருலகம் மிகவும் துணைபுரிவதை மறுக்க முடியாது.


நமது கருத்துக்களுக்கு இத்தனை வலிவு இருப்பதால்தான் நாம் எழுதும் எழுத்துக்களை அனாதைகளாக விட்டு விடாமல் அவைகளுக்கு ஒரு ‘இனிஷியல்’ போடவேண்டுமென்னும் கருத்தில் நான் முதலில் இருந்தே உறுதியாக உள்ளேன் – பலரும் எதிர்க்கருத்துக்கள் கொண்டிருந்தாலும்.


பதிவுலகத்தில் நான் பயணித்துள்ள தூரத்தையும், அதைப் பற்றிய என் கருத்துக்களையும் இவ்வார வலைச்சர ஆசிரியராக உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

இனியும் வருவேன் …
மேலும் வாசிக்க...

யார் இந்த வாரம்?

உறவுகள், கவிதைகள், சமையல் என்று பலவிதமாக அசத்திவிட்டார் தூயா. சின்ன சின்ன இடுகைகளாகவே நிறைய செய்திகளைச் சொல்லிவிட்டார். இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கலாம்

தூயாவின் அமெரிக்கையான வாரத்தைத் தொடர்ந்து வலைச்சரம் எழுத வருபவர் அதிரடியான மதுரைக்காரர். அரசியல், சமூகம், சினிமா, சின்னத்திரை, ஜோதிடம் என்று எதையும் விட்டு வைக்காமல் பேசக்கூடியவர். வயதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பழகும் விதத்தால், இளைஞர் என்று தைரியமாக சொல்லலாம்.

அடுத்த பதிவர் பட்டறை எங்க ஊரில் தான் என்று தோளில் ஏற்றிக் கொண்டிருக்கும் துடிப்பான பேராசிரியர் தருமி இந்தவார வலைச்சரத்தில் பட்டையைக் கிளப்பப் போகிறார். வாத்தியாருக்கு வழிவிட்டு இப்போது..
மேலும் வாசிக்க...

Saturday, August 25, 2007

வலைச்சரத்தில் கொஞ்சம் சமையல்


இணையத்தில் எங்கு போனாலும் தூயா என்றால் சமையல் குறிப்பு எழுதவில்லையா என கேட்கும் நிலை. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பதிவில் சில உறவுகள் கேட்டிருந்தார்கள். ஆக சமையல் இல்லாமல் போகுமா!?

சமையல் மட்டுமல்லாது, சின்ன தோட்டமும் வைத்திருக்கும் ரேவதி:
En Ulagam - My Culinary World

கவிதை மட்டுமல்ல எனக்கு சமையலும் வரும் என சொல்பவர் எங்க வரவனையான்:
மிளகு கோழி கறி

நியூரோர்கில் இருந்து சமையலில் கலக்கும் சுதா:
சுதா சமையல்கட்டு (உடனடி மாங்காய் ஊறுகாய் முறையை பார்க்க தவறாதீர்கள்)

எங்க லக்கிண்ணாவின் சமையல் குறிப்பையும் பாருங்க:
போண்டா செய்வது எப்படி?

விஜியின் ஆப்பிள் சலட், மிகவும் இலகுவான முறை:
புதுசு இது

எங்க பொன்ஸுக்கும் சமைக்க தெரியும்:
அப்பளம் சுடுவது எப்படி?

சமைக்க வாங்க என அழைத்து:
இஞ்சி மொரபா சமைக்கிறாங்க

[இந்த பதிவை லக்கிண்ணாக்காக பதிக்கிறேன்.] தூயாவின் வாரத்தில் சமையல் இல்லாமலா என அதிசயம் அடைந்தவர்களுக்கு இப்பொழுது நிம்மதியாக இருக்குமே!
மேலும் வாசிக்க...

Thursday, August 23, 2007

சில கவிதைகளும் நானும்

இந்த பதிவில் எனக்கு பிடித்த சில கவிதைகளுக்கான இணைப்புக்களை தரலாம் என நினைத்து தொடர்கிறேன்:

வரவனையான் கவிதைகள்: எனக்கு மிகவும் பிடித்தவை வரவனையானின் கவிதைகள். காரணம் தினமும் நடப்பவற்றை சின்னதாக, அதே சமயம் படிப்பவர் புரியும் வகையில் எழுதுபவர். இப்பொழுது எழுதுவதில்லை போல. இருப்பினும் இவரின் கவிதைகள் சில இங்கே எனது வலைப்பூவில் உள்ளது.
வரவனை கவிதைகள்







அடுத்து பிரியன் கவிதைகளின் ரசிகை நான். சொல்லா வந்த விடயத்தை எளிமையாக சொல்வதில் இவரை வெல்ல எனக்கு தெரிந்து யாருமில்லை:
பிரியன் கவிதைகள் - விழுதுகள்










சுகுணாதிவாகரின் கவிதைகளில் எனக்கு புரிந்தது ஓரிரண்டு தான். அதில் மிகவும் பிடித்த ஒன்று:
மிதக்கும் வெளி - மண்
மேலும் வாசிக்க...

Wednesday, August 22, 2007

உறவுகளின் உணர்வுகள்

வலையுலகத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை நெகிழ வைத்ததும், ஆச்சரியப்பட வைத்ததும் "நீங்கள்" தான்.

ஒரு தசாப்த காலமாக சிங்கள அரசின் இனவாதத்தால் அழிந்துவரும் ஈழத்தமிழர்கள் உணர்வாக பதியும் போது, அதற்கு பல காரணங்கள் இருக்கும். அவர்கள் வீட்டில் அரசினால் குறைந்தது ஒரு உயிர், ஒரு கற்பு, ஒரு வீடு அழிந்திருக்கும். ஆனால் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் நீங்கள் , வெறுமே எங்கள் கஸ்டங்களை பார்த்து மனமுடைவதை என்னவென்று சொல்வது. அப்படி நீங்கள் உருகும் போது எங்களுக்கு கிடைக்கும் அன்பும், ஆதரவும், மன ஆறுதலும் வேறெங்கும் கிடைக்காது.

செஞ்சோலை கொடுமையை பார்த்து உலகமே கண்ணை மூடிக்கொள்ள, எம்மை அணைத்து ஆறுதல் சொன்ன உறவுகளில் சிலர்:

சிபிஸ்
கோவை கண்ணன்
ஆழியூரான்


-------------------------------------------------------------------------------------------
ஈழத்தில் பிறந்து, வளர்ந்து, தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழனின் சிங்கள சிறை அனுபவம்:

ஈழ நிலம்

------------------------------------------------------------------------------------------
வலைப்பூவில் உடனுக்குடன் ஈழத்து செய்திகளை பார்க்க:
ஈழபாரதி
மேலும் வாசிக்க...

Monday, August 20, 2007

வலைச்சரத்தில் பூவாக நான்


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

வலைச்சரத்தை தொடுக்கும் பெருமை எனக்கு இந்த வாரத்தில் கிடைத்திருக்கின்றது. முதலில் சிந்தாஸ் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த போது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நானா?எனக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி இருக்கா சிந்தாஸ் என கேட்டேன். என்னால் முடியும் என கூறி அழைத்துவந்த சிந்தாஸுக்கு தான் முதலில் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

முதல் பதிவு அறிமுகப்பதிவாக அமைய வேண்டும் என கேட்டிருந்தார்கள். என்னை பற்றிய அறிமுகத்தை என் பதிவுகள் மூலமே செய்யலாம் என்ற எண்ணத்தில்:

என்னை பற்றி அறிந்துகொள்ள:Weird Post By a weirdo

எனக்கு சரியாக எழுத வருகின்றதோ இல்லையோ, மற்றவர்களின் ஆக்கங்களை விமர்சித்து பாராட்டுவதில் எனக்கு அலாதி பிரியம்: சயந்தனின் ஒலி பதிவுகள் பற்றிய ஒரு கருத்து குறிப்பு

சின்ன வயதில் இருந்து ஆங்கிலத்தில் கல்விகற்று, ஆங்கிலத்தில் ஆக்கங்கள் எழுதி வந்த எனக்கு தமிழிலும் எழுதலாம் என ஊக்கம் தந்தது யாழ் இணையம் தான். கவிதை, கட்டுரை போன்றவை எனக்கு தூரத்தில் நின்றுவிட, என்னை தனக்குள் இழுத்துக்கொண்டது சிறுகதைகள் தான். ஒரு கை பார்த்துவிடுவது என களத்தில் இறங்கி முயற்சி செய்தவற்றில் சில:

* மானமும், உயிரும் போன கதை: விதையானால் முளையாகும்
* மாவீரன் கதையொன்று:மதியண்ணாவின் கண்ணம்மா
* புலம்பெயர் [சிட்னி] கதையொன்று: இது யார் தப்பு?
* என் உயிர் நண்பன்: என் நண்பன் என் கடவுள்
* ஒதுக்கப்படும் உணர்வுகள்: சிறகுகள் வேண்டும் எனக்கு


தமிழீழத்தை தாய்நாடாக கொண்ட எனக்கு, மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்திய பயணம் எனில் அது "என் சென்னை பயணம்" தான். எங்கள் ஈழத்தை போல பல ஒற்றுமைகள் கொண்ட ஒரு இடம் என்றால் அது சென்னை தானே! எம் அனுபவத்தை ஒரு பயணத்தொடராக பதிந்துள்ளேன்:
சென்னையில் தூயா - 2005 - பகுதி1
சென்னையில் தூயா - 2005 - பகுதி2


புலத்தில் தமிழ் கற்ற தமிழீழத்து வாரீசான எனக்கும், என் தாய் நாட்டிற்குமான உறவை ஒரு அனுபவத்தொடராக எழுதி வருகின்றேன்:

"நானும் என் ஈழமும் - இதுவரை எழுதிய 5 பகுதிகள்"

------------------------------------------------------------------------------------

சமையல் மீதான என் காதலை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இதுவரை எனது சமையல் கட்டை பார்க்காதவர்களுக்காக:
தூயாவின் சமையல்கட்டு

-----------------------------------------------------------------------------------

தமிழ் அல்லாத, தமிழ் படிக்க தெரியாத சில நண்பர்களுக்கென ஆரம்பித்த எனது ஆங்கில வலைப்பூ. இந்த வலைப்பூவின் மூலம் தான் உலக வலைப்பதிவர் ஒன்றியத்தில் இணைந்து, தமிழீழத்தின் பிரதிநிதியாக எழுதிவருகின்றேன்:
Thooyas World

-----------------------------------------------------------------------------------

இசை மீதான என் காதலில் உருவாக்கிய ஒரு வலைப்பூ:
தூயாவின் இசையுலகம்

-----------------------------------------------------------------------------------

இதுவரை நான் எழுதியவற்றில் சிலவற்றை உங்களுக்காக மீட்டெடுத்து தந்திருக்கேன். வலைச்சரத்தை தொடுப்பதோடு நிற்காமல், சரத்தில் ஒரு பூவாக நானும் மாறும் ஆசையில் எனது அறிமுக பதிவை நிறைவு செய்கின்றேன்.

தூயா
மேலும் வாசிக்க...

வலைச்சரம் - இந்த வார வளைக்கரம்

வலைச்சரத்தின் நாராக செயல்படப்போவதாக சொல்லிக் கொண்டே அழகழகான மலர்களாக சுட்டித்தள்ளி இருக்கிறார் மஞ்சூர் ராசா. ஆரம்பத்தில் பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்து முழு பதிவுகளையும் படிக்க வேண்டியதாகிவிடுமோ என்று காபராப்படுத்தினாலும் , குறிப்பிட்ட இடுகைகளையிம் அடையாளம் காட்ட மஞ்சூரார் தவறவில்லை.

கவிதைகள், அமீரகப்படிதவர்கள், என்று பல்வேறு தலைப்புகளிலும் இடுகைகளைச் சுட்டிக் காட்டியுள்ள மஞ்சூர் ராசாவின் வலைச்சர வாரம் உங்களுக்கு எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இந்தவாரம் வலைச்சரம் தொடுக்க வரும் வளைக்கரங்கள் தூயாவுக்குச் சொந்தமானவை.. சமையல், இசை, கதைகள் என்று விதம்விதமாக அமுது படைக்கும் தூயா வலைச்சரத்தையும் அழகாக தொடுத்து பல புதிய இடுகைகளை அடையாளம் காட்டப் போகிறார்..
மேலும் வாசிக்க...

Sunday, August 19, 2007

மாலையை அலங்கரிப்பவை

வலைச்சரத்தின் நாராக இருந்து இந்த ஒரு வாரத்தில் ஒரு மலர்மாலை தொடுக்க முயற்சி செய்தேன் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது உங்களுக்கு தான் தெரியும். இறுதி நாளான இன்று முத்தமிழ் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள சில நண்பர்களின் வலைமலர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

நிலாரசிகனின் கவிதைகள் பொதுவாகவே இளம் நெஞ்சங்கள் பலராலும் விரும்பப்படும் கவிதைகள். காதல் கவிதைகளை தனக்கே உரித்தான விசேஷ நடையில் எழுதிவருபவர். உதாரணமாக:

*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.

காதலை மட்டும் அல்லாது வேறு பல நல்ல கவிதைகளையும் நிலாரசிகன் எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக:
விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!
மனவலி


“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்தது பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை”. பெரிய புராணம் புகழ்ந்த இந்த பழையாறை எங்க இருக்கு? என்று கேட்டு அதை பற்றி விவரமாக ஒரு தமிழனின் பதிவுகள் என்ற தன் பதிவில் எழுதியிருக்கும் ஹலோ தமிழா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட வல்லுனர். திருத்தலங்களை பற்றிய இவரது கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றவை. அதிகம் எழுதாமல் இருக்கும் இவர் தொடர்ந்து எழுதவேண்டும்.


வேண்டாத வளர்ச்சி

ஆடாமல்
அசையாமல்
ஒட்ட வைத்தாற் போல
ஓரிடத்தில் பச்சென அமர்ந்து
காலால் நடப்பதை மறுத்து
படிக்கட்டுகளை மறந்து
குப்பை உணவால்
ஊரில் வளருது
வித வித அளவில்
சின்னதாகவும் பெரியதாகவும்
வட்ட வட்ட தொப்பைகள்
வல்லுனர் குறிப்புகள் என தனது விழியன் பக்கம் என்ற பதிவில் தொடர்ந்து எழுதிவரும் விழியன் வளர்ந்துவரும் பதிவாளர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. இவரது தோழியே உன்னை தேடுகிறேன் என்னும் முதல் படைப்பு பரவலான வாசகர்களை இவருக்கு பெற்று தந்திருக்கிறது. சிறுவர்களுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ள இவர் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரும் கூட.


"ஆதாம் ஏவாள் கம்யூனிஸ்டா? என்ன சொல்றீங்க தோழர்?" என்றார் பாண்டியன்.
"அட ஆமாம் பாண்டியா...அவங்க ரெண்டுபேருக்கும் உடுத்த ஒட்டுதுணியில்லை. காலில் போட செருப்பில்லை. தலைக்கு மேலே கூரை இல்லை. சாப்பிட இருந்தது ரெண்டு பேருக்கு ஒரே ஆப்பிள். இப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தும் கூட சொர்க்கத்தில் இருப்பதா நம்பினாங்களே? இவங்க கம்யூனிஸ்ட் இல்லைன்னா வேற யாரு கம்யூனிஸ்டு?" என்று ஆவேசத்துடன் கேட்டார் மாவோ. மாவோவும் பேண்டேஜ் பாண்டியனும்

சுவையாகவும், விறுவிறுப்பாகவும், விவரமாகவும் எழுதும் நண்பர் செல்வனின் உலகின் முதல் கடவுள் என்னும் வலைப்பதிவில் அவர் தொடாததே இல்லை என்னும் அளவிற்கு பல விசயங்களை எழுதியிருக்கிறார். அடிக்கடி பரப்பரப்பாக விவாதிக்கப்படும் பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று.

நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்! நான் வில்லனல்ல! நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி! என்று கூறும் ரசிகவ் ஞானியார் எந்த ஒரு விசயத்தையும் நகைச்சுவையுடன் மனதில் தைக்கும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.
"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.
பிணத்தோடு விளையாடி..பிணத்தோடு உறவாடி..

இவரது கவிதைகளும் அப்படியே..

எங்கள்
கரடுமுரடான
சாலைகள் எல்லாம்...
சரியாக வேண்டும்!
மத்திய அரசே! ஒரு
மந்திரியை மட்டும்...
ஊருக்குள் அனுப்பு!

நியூட்டனின் மூன்றாவது விதி என்னும் கவிதையே அதற்கு சாட்சி.


தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.
சிதம்பர ரகசியம் -கோபுர வாசலிலே!
எப்படித்தான் இவ்வளவு விசயங்களையும் புள்ளிவிவரங்களையும் மனதிற்குள் வைத்திருக்கிறாரோ என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கீதா சாம்பசிவம் மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவரும் கூட. என்ன சொன்னாலும் கோவித்துக்கொள்ளாமல் தான் சொல்லவந்ததை சொல்லிவிடும் இவரது ஆன்மீக கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.

பிரியன் கவிதைகள் என தன் வலைமலரை குறிப்பிடும் பிரியன் என்னும் விக்கி வளர்ந்து வரும் கவிஞர்களில் ஒருவர். இவரது ஆரம்பக்கால கவிதைகளுடன் ஒப்பிடும்பொழுது இவரிடம் ஏராளமான மாற்றங்கள் தெரிகிறது.
இவரது காதல் கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டவை.

என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
மேலும் படிக்க

ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.
என்று சொல்லும் ரிஷி ரவீந்திரனின் கிறுக்கல்கள் என்னும் தன் பதிவில் பல நல்ல விசயங்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இதை தவிர மேலும் பல பதிவுகள் நடத்திவரும் இவர் தனது இணைய பக்கத்தில் பல முக்கியமான வணிகசம்பந்தமான விசயங்களையும் எழுதிவருகிறார்.

நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் நன்றி.
மேலும் வாசிக்க...

Friday, August 17, 2007

ஒரு சில தனி மலர்கள்

மாலையில் தொடுக்காமல் இருந்தாலும் தங்கள் அழகான வர்ணத்தால் கவர்ந்து இழுக்கும் தனி மலர்களையும் நாம் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம் அவற்றில் சில இன்று:

"மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..."
- எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.

கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள், நகராப் பகல் பொழுதின் கனத்தை என் மேல் அழுத்துகின்றன.
மூச்சுத் திணறி, முனகி, தத்தளித்து, தான் தவித்து இயல்பிற்குத் திரும்புகையில், வெல்ல முடியாத அரக்கனின் நிழலாய் என்னைச் சூழ்கின்றன, காலியான வயிறும், காற்றில் படபடக்கும் வெற்றுப் பாக்கெட்டும்..! காலையின் நீர்த்துளிகள், நிறைத்த வயிற்றின், காலிப் பகுதிகளை மதியத்தின் அகோரப்பசி கொல்கின்றது.
கொம்பு முளைத்த வறுமை - வெறுமை என்னும் தனது ஒரு இடுகையில் எழுதியிருக்கும் பவானி வசந்தக்குமார் சமீபத்தில் வலைப்பதிய ஆரம்பித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் வருங்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளனாக வரமுடியும் என பறைச்சாற்றுகிறார்.


எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும்
உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.
சுருக்கென்று தைக்கும் வரிகளை கொண்டிருக்கும் அந்திமக் காலம் என்னும் கவிதை கணேஷ் குமார் ஜோதிராஜனின் கவிதைத்திறமைக்கு ஒரு சிறிய உதாரணமாகும். தொடர்ந்து தனது கவிதைப் பக்கங்கள் பதிவில் எழுதிவரும் இவர் வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தரவுத் தளம் என்றால் தகவல்களை சேர்த்து வைக்கும் முறை.
* நம் சட்டைப் பை குறிப்பேட்டில் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருப்பதும் தரவுத்தளம்தான். அதிலிருந்து தகவலைப் பெறுவது, புதிய தகவலைச் சேர்ப்பது ஒவ்வொன்றுக்கும் வழிமுறைகள் வைத்திருப்போம்.
* விரிதாள் (spreadsheet) மென்பொருளில் தரவுத் தளம் இருக்கலாம்.
* அல்லது ஒரு உரைக் கோப்பாகக் (text file) கூட வைத்திருக்கலாம்.
தரவுத் தள வடிவமைப்பு என்னும் தொடர்கட்டுரையில் உள்ள இந்த எளிய தமிழ் வரிகளே நம்மை அக்கட்டுரை தொடர் முழுவதையும் படிக்க தூண்டுகிறது. மிக அழகான எளிய தமிழில் கணினி சம்பந்தமான பல சிறந்தக் கட்டுரைகளை மா.சிவக்குமார் தனது பொருள் செய்ய விரும்பு என்னும் பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு அதி முக்கிய சேவையாகும் இது.

கடலில் மட்டும் தான் அலைகள் வருமா? மலர்ச்செடிகள் காற்றில் ஆடுகையில் அவற்றிலிருந்தும் சுகந்தமான அலைகள் வரும். ஆம் 2003 முதல் தொடர்ந்து எழுதிவரும் அருணா சீனிவாசனின் அலைகள் வலைமலர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
"எங்களது சரியான வெளி நாட்டு இந்தியர் வாழ்க்கை; வார இறுதியில் தவறாமல் நண்பர்களுடன் "இந்தியாவைப் பற்ற்யும் அதன் பிர்ச்சனைகளைப் பற்றியும் பேசிவிட்டு - ' இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் - என்கிற ரீதியில்.' முடியும். ஆனால் இத்தனைக்கு அடியிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அடுத்த நாளைப் பற்றி யோசிக்காமல் தொலை தூரத்தில் மனப் பார்வையை ஓட விட்டால், ஏதோ ஒரு வெறுமை தெரிந்தது. அந்த உண்மை முகத்தில் அறைவதுபோல் இருந்தது." என்று தனது ஒரு பதிவில் எழுதியிருக்கும் அருணா அவர்கள் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். நிர்வாகவியலைப்பற்றிய அவரது தொடர் கட்டுரை மிகவும் பிரசித்தமானது மேலும் படிக்க Management Mantras


தெருவின் மூலைகளில் பூக்கள்
சுமந்து காத்திருக்கிறார்கள்,
நவீன யுகத்து கண்ணகிகள்
காற்சிலம்பிற்கு பதிலாய் உடலை விற்றபடி...
நள்ளிரவு நகரம் என்னும் கவிதையிலுள்ள இவ்வரிகள் நகரின் நள்ளிரவின் நிதர்சனத்தை படம்பிடித்து காடுகின்றன. இக்கவிதையை எழுதிய கென்னின் திருவிளையாட்டம் பதிவில் உள்ள பல கவிதைகளும் நிதர்சனங்களே.

விரைவில் முடியும்
மேலும் வாசிக்க...

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.
கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.

காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.

உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.

மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இன்னும் வரும்.

http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்: http://groups.google.com/group/muththamiz
மேலும் வாசிக்க...

Wednesday, August 15, 2007

நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்

மலரில் தேன் இருப்பது இயற்கையே அதனால் தான் தேன்துளி என தன் வலைமலரை பத்மா அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவரது பதிவிலிருந்து:
இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். ஐந்து நிமிட பேச்சு இருபது நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.

பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒரு வலைமலராகும்.

பதினெட்டு வயதில் வீட்டை விட்டு ஓடி, பின் கட்சியை விட்டு, அதன் பின் தமிழ் அறிவு'சீவி' 'குழாத்தை' விட்டு, சீக்கிரமே தமிழ் கல்லை ... மன்னிக்க ... மண்ணை விட்டு ... என தன்னைப்பற்றி கூறும் வளர்மதியின்
வினையானதொகையில்
அரசியல் கட்டுரைகள், நவீன கவிதைகள் என படிக்கவும் யோசிக்கவும் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.

அமெச்சூர் கலை ரசிகனாகப்பட்ட நான் என்னைக் கவர்ந்த, கவரும் கலைப் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பதிவு என்னும் அறிமுகத்துடன் தொடங்கப்பட்டுள்ள பிறழ்வு என்னும் வலைமலரில் மிகவும் அரிதான பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன . சாத்தான் (புனைப்பெயர் என நினைக்கிறேன்) பின்குறிப்பாக எழுதியுள்ளது:
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு: உங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட இந்தப் படங்களை தயவுசெய்து சுடாதீர்கள். இங்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆம் உண்மை தான் சுடுவதும் அல்லாமல் எங்கிருந்து சுட்டோம் என்றும் கூட பலர் குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வேதனையான ஒரு விசயம்.

இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் பட்டியல் இங்கே.

நெருப்பாக கொதிக்கும் மலர்களும் உண்டோ என சிலருக்கு சந்தேகம் வரும் அசுரனின் வலைமலரை பார்த்தால் அது உண்மையென்று புரியும். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் அக்னி துண்டங்கள் என்றால் மிகையாகாது. சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து எழுதிவரும் அசுரனின் படைப்புகள் நிதர்சனத்தை வெளிச்சப்படுத்துகின்றன.

ஈழத்து வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொடிச்சி. அவர் கூறுவதை கேளுங்கள்:
2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள…. ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாது சிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்கு ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல.

என்று சொல்லும் பொடிச்சியின் வலைமலரில் ஈழத்து செய்திகளுடன் வேறு பல முக்கிய படைப்புகளும் அடங்கியுள்ளன. மேலும் படிக்க: பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவை அல்லது பெட்டை அலசல்


இன்னும் வரும்.
மேலும் வாசிக்க...

Tuesday, August 14, 2007

நாரில் தொடுத்த சில மலர்கள்

'மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?' என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.

என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
" யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. "இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது" எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது."

இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.

நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.

பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.

ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.

அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.

இன்னும் வரும்.
மேலும் வாசிக்க...

Monday, August 13, 2007

வலைச்சரத்தின் நார்!

என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.

நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை வரி ராசா என்றுக்கூட கிண்டல் அடிக்கின்றனர். ஆனாலும் மதித்து அழைத்ததற்கு நன்றி.

எனது வலைப்பூவில் வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது ஆசையாகவே தான் இன்னும்.

முக்கியமாக முத்தமிழ் மடலாடற் குழுவின் நிர்வாகத்தில் இருப்பதால் பதிவுகள் பக்கம் வர அதிக நேரம் இருப்பதில்லை.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் சில மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்துள்ளேன்.
எனது பதிவில் நான் எழுதியுள்ள முன்னிறுத்தல் என்னும் கட்டுரை உங்களுக்கு பயன்படலாம்.

மேலும் சில மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், நகைச்சுவை கட்டுரைகளும் உள்ளன. நேரம் இருந்தால் பாருங்கள்.

அரசியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் இருந்தாலும் எல்லாவற்றிலும் மேலோட்டமாகத்தான் சுற்றி வருவதே வாடிக்கையாக போய்விட்டது.

வலைப்பூக்கள் என்னும் தமிழ் பதிவுகள் மற்றும் குழுமங்கள் மூலம் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளதும் பல புது விசயங்கள் அறிந்துக்கொள்ள முடிவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கட்டற்ற சுதந்திரம் இருப்பதனால் தனி மனித இன மத தாக்குதல்கள் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளித்தாலும் அதையும் தாண்டி பல நல்ல படைப்புகளும் புதிய பல படைப்பாளிகளும் தங்கள் திறமையினால் கவனிக்கத்தக்கவர்களாக வளர்ந்துவருவதை மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்த பதிவர் பட்டறை மூலம் அது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல பல பட்டறைகள் நடத்தப்படவேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக தொடர்ந்து உழைத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள்.

இனி நான் தொடர்ந்து படித்தும் ரசித்தும் வரும் ஒரு சில பதிவுகளை பற்றி நாளை.
மேலும் வாசிக்க...

தொடுத்தவரும் தொடுப்பவரும்...

சவுண்ட் பார்ட்டி உதயகுமார் இந்த வாரம் வலைச்சரத்தை தொடுத்து தந்தார். அவர் படிக்கலாம் வாங்க அப்படின்னு ஒரே மலரில் மூணு சரம் தொடுத்து விட்டாரேன்னு நெனச்ச போது தான் பொருளாதாரத்தில் ஆரம்பிச்சு, வாழ்வியலுக்கு வந்து நகைச்சுவையில் கொண்டு போய் கதம்பமாகத்தான் தொடுத்திருக்கிறாரென்று தெரிந்தது. தலைப்பு மட்டும் தான் பொதுவாக கொடுத்து தொடர்ர்ர்ர்ராக தந்திருக்கிறார்.

இனி இந்த வார ஆசிரியர் யார்னு பார்த்தால் மஞ்சூர் ராஜா! வலைப்பதிவில் ரொம்ப இடைவெளி விட்டு பதிந்தாலும் அன்புடன் உட்பட பல வலைக்குழுமங்களில் இயங்கியவர் இப்போது முத்தமிழ் வலைக்குழுமத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். வலைச்சர வாரத்தையும் சுறுசுறுப்பாக கொண்டு செல்வார் என நம்பலாம்.

மஞ்சூர் ராஜா தொடர்கிறார்...
மேலும் வாசிக்க...

Thursday, August 9, 2007

படிக்கலாம் வாங்க - 3

காமெடியா எழுதறதுங்கறது ஒரு பெரிய கலை. அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள் இருக்கற மாதிரி மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம்.

இவர் எழுத்தை பார்த்துதான் நானெல்லாம் பிளாக் ஆரம்பிச்சேன்னா நம்புவீங்களா? சும்மா இவரு சுத்தி சுத்தி ஜொள்ளு விட்ட கதையை தங்கமணி, ரங்கமணி எல்லோரையும் வைத்துக் கொண்டே சொன்னதைப் பார்த்துதான் நம்ம நாதாரித்தனத்தையும் எழுதுவோமேன்னு ஆரம்பிச்சதுதான் சவுண்ட் பார்ட்டி.

இன்னைக்கு பிளாக்ல டெவில் ஷோ எல்லொரும் நடத்துனாலும், கான்செப்ட் ரெடி பண்ணி கவுண்டரை களத்துல இறக்குனது நம்ம வெட்டிப்பயல்தான். வெட்டி ஆல் ரவுண்டரா இருந்தாலும் அவர் காமெடியா எழுதி பின்னூட்டக் கயமை இல்லாம கமெண்ட் அள்ளினதுதான் அதிகம்.

அப்புறம் இவர் கோழியோட சேர்ந்து பெங்களூருல அடிச்ச லூட்டிக்கு கோழி மானம் இந்நேரம் கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ன்னு கோபால் பல்பொடி மாதிரி வித்துட்டு இருக்கும்.

எங்க அருண் இப்படி எல்லாம் எழுதுவான்னு நான் நினைச்சதே இல்லை. பாரதிராஜா, வைரமுத்து வை எல்லாம் எகிறி குதிச்சி ஓட வைக்கிற மாதிரி நண்பனை ஊருக்கு அனுப்பிருக்கான் பாருங்க...

அரண்டவன் கண்ணுக்கு இருந்ததெல்லாம் பேயின்னு அருண் சொல்லும் சின்சினாட்டி மாமா கதையையும் படிங்க...


நம்ம பிளாக் மாப்பிள்ள அம்பி பார்ட்டிக்கு போன கதை தெரியுமா? இங்க படிங்க... அதே மாப்பிள்ள, நம்ம பிளாக் மக்கள் கிஃப்ட் குடுத்த வாசிங் மெசின்னுக்கு என்ன பில்டப்? என்ன பில்டப்?

போஸ்டர் ஒட்டுவது எப்படி? ன்னு இவர் பதிவை முதல் தடவை படிக்கும் போதே நினைச்சேன் இவர் விவகாரமான ஆள இருப்பாரோன்னு? பாரதிக்கும் பாரத மாதவுக்கும் என்ன பிரச்சனை என தலைப்பைப் பார்த்து தெரித்து ஓடி விட்டேன். அபி அப்பாவும் தேசியம், திராவிடம்ன்னு கிளம்பிட்டாரான்னு மனசெல்லாம் ஒரே கவலை. என்னதான் ஆனாலும் படிக்காம விடரது இல்லைன்னு படிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பேசாம ஒடியே இருக்கலாம்ன்னு, வயித்து வலி வந்துடுச்சுங்க :-)

இன்னமும் நிறைய பேரு நல்லா எழுதறாங்க... நேரம் இருந்தால் இன்னொரு காமெடி தொகுப்புடன் வருகிறேன்...
மேலும் வாசிக்க...

Tuesday, August 7, 2007

படிக்கலாம் வாங்க - 2

கல்யாணம்ன்னு வந்தாலே சுதந்திர வானில் சிறக்கடித்து பறக்கும் வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் மட்ட சரக்கு அடித்து அடி வயிறை தடவிக் கொண்டே இருக்கும் குவார்ட்டர் கோவிந்த சாமி ஆகி, பார்ப்பது எல்லாம் பிசாசு, பூதம் என அரற்றிக் கொண்டு, தூங்கும் நேரத்தில் முழித்து, முழிக்கும் நேரத்தில் தூங்கி என பண்ணாத அட்டூழியம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

"கல்யாணம் for Dummies" ன்னு ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் என் அழைந்து திரிந்தவர்களுக்கெல்லாம், தனித்துவமாய் அத்துவானக் காட்டில் தேன் தேடி அலைந்த சிட்டு ஒன்று, தான் சேகரித்த தேனை எல்லாம் மொத்தமாக 10 நாட்களில், 6 பகுதிகளாக, கல்யாணமாம் கல்யாணம் என கொட்டி வைத்தது.

(மேலே உள்ள 2 பத்திகளுமே ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே உள்ளடக்கியது. 'வாத்தியார்' இளவஞ்சியை பத்தி பேச ஆரம்பிச்சாவே முற்றுப் புள்ளி தெறிச்சு ஓடுது. மெகா வாக்கியங்களுக்கு சொந்தக்காரரான இளவஞ்சி எழுதிய அத்தனை பதிவுகளுமே முத்திரைப் பதிவுகள்தான். தாரளமாக, ஆற அமர படிக்கலாம்.)

"அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என ஒரு பாசக்காரப் பயல் அம்மாவிடம் கேட்க, "உனக்கு வடக்கு பக்கம் இருந்துதான் பொண்ணு வரும், அதுவும் நம்ம தூரத்து சொந்தமா இருக்கும்ன்னு நம்ம ஜோசியர் ராஜாமணி சொன்னாரு, நீ எங்கிட்ட விளையாடாதடா" என பதில் சொன்ன அம்மாவை எனக்குத் தெரியும். சொந்த மகனை விட ஜோசிய காரனை நம்பும் இந்த உலகத்தில் ஜோசியம் பற்றி கொஞ்சமாக, ஒரு 13 பகுதிகளாக அலசினார் தருமி. புது பிளாக்கருக்கு மாறியதாலோ என்னவோ கொஞ்சம் சிதறிக் கிடக்கிறது. அதனாலென்ன, பாலையும், தண்ணியையும் பிரிக்கும் அன்னப் பறவையல்லவா நீங்கள் :-)

ஆங்கிலமும், தமிழும் கலந்த காலம் போய் இப்பொழுது ஆங்கிலத்தில் தமிழைத் தூவி பேசிக் கொண்டிருக்கிறேன். கொங்கு மண்டலத்திலேயே பிறந்து, கொங்கு மண்டலத்திலேயே 21 வருடம் வரிக்கும் இருந்தாலும், பல ஊரிலிருந்து வந்த மக்களின் தொடர்பால் என் கொங்குத் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, அப்புறம் வட்டார வழக்கில் பேச ஆளே இல்லை என்ற நிலைக்கு ஆளான போதுதான் மணிகண்டனின் இந்த கொங்கு வட்டாரச் சொற்கள் என் மனதில் புதைந்து போன உபயோகப்படுத்தாத வார்த்தைகளின் எண்ணிக்கை ஒரு சாக்கு மூட்டைக்கும் கொஞ்சம்தான் குறைவு என ஞாபகப்படுத்தியது. இதே மாதிரி மற்ற வட்டார வழக்குகளுக்கும் ஏதாவது பதிவுகள் இருக்கும். கிடைத்தால் லின்க் கண்டிப்பாக இங்கே இருக்கும்.

கொங்கு வட்டார வழக்கு - 1
கொங்கு வட்டார வழக்கு - 2
கொங்கு வட்டார வழக்கு - 3
கொங்கு வட்டார வழக்கு - 4

இந்த மூன்று தொடர்களுமே எல்லோராலும் விரும்பி படிக்கப்பட்ட தொடர்கள் என்றாலும், இந்த மீள் பார்வையின் மூலம் இன்னுமோர் முறை படிக்கப்படும் என்ற நம்பிக்கையில்...
மேலும் வாசிக்க...

Monday, August 6, 2007

படிக்கலாம் வாங்க...

பிளாக் ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 100 பதிவுகளுக்கு மேல் ஆகி விட்டது. பதிவுகள் எதுவும் போடாமல் சவுண்டில்லாத பார்ட்டி என பேரும் வாங்கியாகி விட்டது. ஒரு வித சலிப்பு என்பதை விட திரும்பத் திரும்ப பார்த்த சண்டைகள், விதண்டா வாதத்தில் ஆரம்பித்து தனி மனித தாக்குதல் என வெற்றி நடை போட்ட பிளாக் உலகத்தை கூகுல் ரீடரின் வழியே என் வலை மேயும் வட்டத்தையும் சுருக்கி வெகு நாட்களாகி விட்டது. வளர்ந்த மரத்தில் விளைந்த பழத்தின் சுவையை மட்டும் அறிந்து புதிய விதைகளின் வீரியத்தை உணர மறுக்கிறேன் என எத்தனை முறை மனதுக்குள் வாதம் செய்தாலும் நல்ல பதிவுகளை இணங்காண்பது என்பது அப்படி ஒன்றும் அரிதாகிக் கொண்டிருக்கும் விசயம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆடம் ஸ்மித்தின் கேப்பிடலிஸம், காரல் மார்க்சின் கம்யூனிசம் என உள் மன விவாதங்கள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்தது இந்த பதிவுலகத்துக்கு வந்த பின் தான்.

"ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும். "

"தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்."

என சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு தனது எதிர்ப்பை தெளிவாக பதிவு செய்திருந்தார் பத்ரி தனது மே தின சிந்தனைகள் பதிவில்.

மைக்ரோ கிரெடிட், விக்ரம் அகுலா (Vikram Akula) என யாரோ சொல்லிச் சென்ற வார்த்தைகள் பின் மண்டையில் இருந்தாலும் முகம்மது யூனிஸ் என்ற இன்னொரு மனிதரின் மூலம் என்னிடம் சேர்த்தவர் செல்லமுத்து குப்புசாமி.

கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!! என அவர் விட்ட அறைகூவலில்தான் மைக்ரோ கிரெடிட் இன்னமும் கொஞ்சம் மண்டையில் தங்கி உள்ளது.

Microfranchising பற்றி ஒரு எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு லிங்க். பாலா ஒரு பாமரனுக்கும் புரியும் வண்ணம் அற்புதமாக எழுதியிருந்தார்.

சில சமயங்களில் முன் முடிகளுடன் பதிவை அணுகி பின் மண்டையில் தட்டிக் கொண்டு வெளி வந்த அனுபவம் நிறைய. ராஜா வனஜ்ஜின் அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்! அப்படித்தான:)

கத்துக் குட்டியாகிய எனக்கு இன்னமும் இந்த பிளாக் உலகம் தான் பொருளாதாரத்தைக் கத்துக் கொடுத்துக் கொண்டுள்ளது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
மேலும் வாசிக்க...

Sunday, August 5, 2007

சவுண்டான வ்வாரம்...

சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான நிறைய வேலைகளில் மூழ்கிக் களைத்த போதும் மறக்காமல் வந்து மூன்று பதிவிட்டு வலைச்சரத்தை நல்லபடியாக தொகுத்த பாலாபாய்க்கு முதற்கண் எங்க நன்றி. அதிலும் பா.க.ச வாரமாக இருக்க வேண்டியதை மொத்தமாக தாய்க்குல வாரமாக்கி பெருமைப்படுத்தியதற்கு இன்னுமொரு சிறப்பு நன்றி ;-). [இப்படி எல்லாம் செஞ்சா பா.க.சவை மூடிடுவோம்னு கனவு காணாதீங்க.. அக்காங் ;) ]

இந்த வாரம் தொகுக்க ஒப்புக் கொண்டிருந்த நண்பருக்கு திடீரென வேறு வேலைகள் வந்துவிட்டதால், இந்த வார திடீர் ஆசிரியர் நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமார்.
மேலும் வாசிக்க...

Saturday, August 4, 2007

விடுபட்டவை! இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்!!

எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின் குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பார்.

"ஒம் பேர் ன்னா?"
"ச்சூல் போறியா?"
"எத்தனாப்பூ?"
"அப்பா இக்காரா?"
"உன்க்கு அப்பா பிக்குமா? அம்மா பிக்குமா?" என்று குழந்தைகளில் பேசுவது போலவே அதனோடு பேசிக்கொண்டிருப்பார். அந்த குழந்தையோ..

"ரம்யா"
"ஸ்கூல் போகிறேன்"
"தேர்ட் ஸ்டாண்டேர்டு படிக்கிறேன்"
"உள்ளே வேலையாக இருக்கிறார்"
"ரெண்டு பேரையும் பிடிக்கும்" என்று தெளிவான மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். இவரோ குழந்தை போல அதனுடன் கதைத்துக்கொண்டு இருப்பார். "அப்பாவை பாக்க லாஜூ வந்திருக்கேன்னு சொல்லு.." என்று குழந்தையை வீட்டுனுள் அனுப்பி வைப்பார் அவர். உள்ளே வந்த குழந்தை அப்பாவிடம், "அப்பா, ராஜூன்னு உன்னோட ப்ரண்ட் வந்திருக்கார் உன்னை பார்க்க. திண்ணையில உட்கார்ந்திருக்கார். ஆமாப்பா.. அவரு ஏன் தம்பி பாப்பா மாதிரியே பேசுறார்? என்று ஒரு கேள்வியைக்கேட்பதுடன் கதை முடிந்து போகும்.

குழந்தைகள் உலகம் அலாதியானது. நம் எல்லோராலும் அவர்கள் உலகினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் அவர்கள் அநாயசமாக நம் உலகினுள் நுழைந்துவிடுவார்கள். இதோ அஞ்சலி பாப்பாவின் குட்டிக்கதை. உலகினுள் நுழைய முயன்று பாருங்கள்!

☃☃☃☃☃☃☃☃☃

தான்யா எழுதிய இந்த பதிவு குறித்து பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். தொடர்ந்து இச்சமூகம் பெண்கள் மீது தொடுக்கும் தாகுதல் குறித்தும் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால்.. வலி! இதை உணர்ந்தவர்களால் மட்டுமே சரியாக சொல்லமுடியும். தீயில் எரிபவனைப் பார்த்து. ச்சுகொட்டிக்கொண்டு.. அவன் வலியை உணர்ந்து விட்டேன் என்பதற்கும், எரிந்துகொண்டிருப்பவன் அந்த வலியை உணர்வதற்கும் பில்லியன் வித்தியாசங்கள் உண்டு!

☃☃☃☃☃☃☃☃☃

சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் மிக்கவரா, புனைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிவருவதான புலம்புகின்றவரா.. அப்படியானால் நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டிய சிறுகதை இது. மொழியும் நடையும் வித்தியாசமானவை. பத்தி பிரிக்காமல் இருப்பது வாசிப்பதற்கான இடையூறு! :(

☃☃☃☃☃☃☃☃☃

எதுபற்றியும் ஆண்கள் மட்டும் பேசலாம். பெண்கள் எதைப்பேசினாலும் உடனே மண்ணை கீறி பூதங்கள் வெளியே வரத்தொடங்கி விடும். அவற்றைக்கண்டு பயப்படாமல் இருப்பவர்கள் குறைவு. பெண் உடலுக்குள் ஆண் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்க. அதன் குரலை அதன் இயல்பில் பதிவாக்கி இருக்கிறார் கறுப்பி.

{தொடரலாம்.. தொடர முடியாமலும் போகலாம். அதலான இப்பவே சொல்லி விடுகிறேன்}

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி!
மேலும் வாசிக்க...

Friday, August 3, 2007

சுட்டிகள் உங்களுக்காக!

மனிதனை இரண்டுகால் மிருகமென்றும் சொல்லி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (சில,பல சமயங்களில் எனக்கும் அப்படித்தோன்றும்.. அது பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்) இந்த இரண்டுகால் மிருகம் நான்கு கால் மிருகத்திடமிருந்து வேறுபடும் இடங்களில் நகைச்சுவையும் ஒன்று.

நக்கல், நையாண்டி இரண்டுக்கும் வேறுபாடு இருந்தாலும் இவ்விரண்டும் நகைச்சுவையின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்தாகவேண்டும்.

ஒரு பேச்சாளர் குட்டி ஒரு நகைச்சுவை கதையை சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த நகைச்சுவைக்கு பார்வையாளர்களின் ரசிப்பு வேறுபடும். அது எப்படி என்ற சந்தேகம் வரலாம்..!

அந்த நகைச்சுவைக்கதையை.. கார்ப்பரேட் மாதிரி அலுவலக மீட்டிங்கில் சொன்னால்.. பற்கள் கூட வெளித்தெரியாமல் சிரிப்பார்கள்.

அதே கதையை.. கொஞ்சம் போக்குவரத்துக்கழகம் மாதிரியான தொழிற்சங்க கூட்டத்தில் சொன்னால்.. கை தட்டல் காதை பிளக்கும்!

அதே கதையை.. உடல் உழைப்பை முன்னிருத்தி வாழும் மக்கள் கூட்டத்தில் சொன்னால்... விசில் சத்தம் விண்ணைத் தொடும்!

ஒரே கதை தான். சொல்லப்பட்ட விதமும் ஒரே மாதிரியாகத்தான். ஆனால்.. ரசிப்பு மட்டும் மாறுபடுகிறது. இது போல.. ஒரூ செய்தியை வெறும் செய்தியாக சொல்லுவதை விட, நகைச்சுவை கலந்து கொடுக்கும் போது.. அது மக்களிடம் எளிமையாகப் போய்ச்சேரும் என்பது கலைவாணர் போன்றவர்களின் நமக்கு உணர்த்திய உண்மை!

நகைச்சுவை மூலம் அழகாக குட்டு வைக்கலாம், உள்குத்தும் வைக்கலாம். அறிவுறை சொல்லலாம். கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இப்படி எத்தனையோ லாம்.

ஆண்களை விட, அதீத நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள் பெண்கள் என்பது என் அனுபவம். அதை வெளிப்படுத்திக்கொள்ள நம் சமூகம் தான் அவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை வழங்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால் என்னோடு பலர் சண்டைக்கு வரக்கூடும்.
அப்படி நான் ரசித்த ஒரு பதிவு இது. ஆதிரை இதன் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதை நீங்களும் உணர்ந்துகொண்டால் எழுதியவருக்கு வெற்றி!

☀ ☀ ☀

இறை நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் வெகுவாக குறைந்து வருகின்றன என்ற உண்மையை பலர் ஏற்க மாட்டார்கள். வெறும் புராண இதிகாச கதை பெருமைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த சன்யாசிகளின் பலர் இன்று, மனித உறவு குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மனித உறவுகளை பேணுவது என்பது மிகுந்த சிரமமான காரியம் அல்ல. ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே பல குடும்பங்கள் பிரச்சனையின்றி இருக்கலாம்.

இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவது, காதுள்ள கல் தான். ஆனால் வினோதம் என்னவென்றால் காதுகளற்று வாய் உள்ள கல்லாக மட்டுமே பலர் இருக்கிறார்கள். தான் பேசுவதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதே சமயம்.. அடுத்தவர் பேச்சை கேட்கத்தயாராக இருப்பதில்லை.

குடும்ப உறவை மேம்படுத்த.. சில ஆலோசனைகளை அள்ளி விடுகிறார் மழைஸ்ரேயா! அம்மணி தைரியமாக கவுண்சிலிங் ஆரம்பித்து விடலாம். :)

☀ ☀ ☀

இன்று பெண்கள் கையில் திணிக்கப்பட்டு விட்ட சமையலில் கெட்டிக்காரர்களாக இருந்தது/இருப்பது ஆண் வர்க்கம் தான். பெண்கள் சரியான நிர்வாகத்திறன் கொண்டவர்கள். ஆனால் ஆண்சூழ்ச்சி அவர்களை அடுப்படிக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டது. அதை உணராகவர்களாகவே இன்றும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

நளன், பீமன் , கிருஷ்ணன் போன்ற புராண இதிகாச பாத்திரங்களில் சமையலில் சிறந்தவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஆண்வர்க்கம் தான். இதுபற்றி யோசிக்கும் போது எனக்கு பொன்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து மிகவும் பிடிக்கும். என்ன வழமை போல.. கரண்டியை கையில் கொடுத்தவர்கள் இந்த பதிவை அதிகம் பேர் பார்வையில் படம்.. ஓரம் கட்டி விட்டார்கள். :(

☀ ☀ ☀

அது போல தமிழ்பதிவுகள் உலகில் தொடர்ந்து சமையல் குறித்து எழுதிவரும் ஜெய்ஸ்ரீயின் பதிவுகள் அடிக்கடி படித்து வருகிறேன் என்றாலும், இந்த பதிவு என் சாய்ஸ்!



தொடர்வேன்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது