07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 31, 2009

பசி தூண்டும் ருசி...

வணக்கம்ணா. இந்த திருவாதிரை களி புளிக்கூட்டு, அடை அவியல், ஐஸ்க்ரீம் பழ சாலட்னு சில கூட்டணியிருக்கே, அடிச்சிக்க முடியாது இந்தக் கூட்டணியை. இனிப்புக் களிக்கு புளிப்பும் காரமுமா கூட்டு, கார அடைக்கு காரமே இல்லாம அவியல், ஐஸ் குளுத்திக்கு சமனமா பழங்கள்னு ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் ருசியும் பசியும் தூண்டும், மற்றொரு பக்கம் மிஞ்சினத விரயம் பண்ணாம சிக்கனம்னு பல நன்மைகள் இருக்கு.

அறிவுப் பசிக்கும் இப்படி தீனி போடுற பதிவர்கள் இருக்காங்க. நாட்டு நடப்பு, சினிமா கதை, பதிவர் உலகம், கலியாணம் காதுகுத்துக்கு வாழ்த்துன்னு ஒரு இடுகையப் படிக்கிறப்ப மனசு நிறைஞ்சி போகும்.தோ! நீங்கள்ளாம் எதுன்னு சொல்றதில்ல. நாந்தான் சொல்லுவேன். சரியா?

முதல்ல தமிழா தமிழா ராதாகிருஷ்ணன் கவனம் வந்திருக்குமே. காலையில ஆஃபீஸ் போற அவசரத்திலகூட  தமிழா தமிழால அருணாசலக் கவிராயர், கம்பராமாயணம்ல ஒரு காட்சின்னு கண்ணுல பட்டிச்சோ அன்னைக்கு பொழுது தமிழாப் போகும். தமிழ்னா அழகுதானே. ஒரு காட்சி இங்க பாருங்க. அய்யாவோட தேங்கா, மாங்கா, பட்டாணிசுண்டல் படிச்சிருப்பீங்களே. படிக்கலைன்னா லீவ் போட்டுட்டு ஒன்னு விடாம படிங்க. வாய்விட்டு சிரிங்க, கவிதைன்னு எது எழுதினாலும் அலப்பறையில்லாத அழகு தமிழ் எழுத்து.

ஒரு விஷயம் சொல்றது பத்திரிகையோ, மனுசனோ யார்னாலும் பளிச்சுன்னு யாரு பக்கமும் சாயாம, நடுனிலையா இருந்திச்சின்னா அது பெரிய விஷயம். கண்ணுமூடிக்கிட்டு இதான் நிஜம்னு சொல்ல முடியும். இருப்பா இருப்பா அதுக்குள்ள நிஜாம்னு திருத்த வேண்டாம். நிஜம்னா இப்படிக்கு நிஜாம் சொல்றதுன்னு சொல்லுவேன். யாராவது  இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம். இவரோட ஸ்வீட் காரம் காபி ரொம்ப ஸ்பெஷல். இக்கு புடிச்ச விஷயம் எழுதினாலும் நிஜாம் வார்த்தைக்கு எதிர் வார்த்த ஒன்னு வரமுடியாது.

அண்ணாந்து பார்த்தங்க ஈரோட்டுல ஒருத்தர. அழகான குழந்தை முகம். வெள்ளந்தியா நட்போட ஒரு சிரிப்பு. ப்ரொஃபசராம். என்னைய மாதிரியே பசங்களுக்கும் பளிச்சுன்னு நட்பூ பூத்திருக்கும். அழகான கவிதை, ச‌முதாய  நிகழ்வுகள்ள பொறுப்பான விமரிசனம், சினிமா பத்தி விவரமான தகவல்கள் (விசிலெல்லாம் அடிக்கப்படாது மதுரக்கார தம்பிகளா! ஹெ சொல்லுவோம்ல) அதவிட பத்திக்கிட்டு எரியிற பின்னூட்டங்கள்ள நட்பா கண்டிப்புன்னு ஒரு முதிர்ச்சி. அட உக்காந்து யோசிக்கிற கார்த்திகைப் பாண்டியந்தான்.ப‌டிங்க‌.

ஐந்தரைப்பெட்டி சுபாங்கன். ஈழத்து அழகு தமிழில் இளவட்டங்களை ஈர்க்கும் பதிவர்(இப்பயாச்சும் நானும் யூத்துன்னு ஒத்துக்குங்கப்பா). இவரின் சரக்கு வித் சைடிஸ்  படிச்சாஓ இதத்தான் கிக்கும்பாய்ங்களோன்னு தோணும்.

புதிய‌வ‌ர் அறிமுக‌ம்னு சொல்ல‌ இன்னைக்கு த‌ய‌க்க‌மாதான் இருக்கு. எழுத்து மிர‌ட்டுது.

ப‌லா ப‌ட்ட‌றை: வித்தியாச‌மான‌ பேர். வித்தியாச‌மான‌ சிந்த‌னை. அழ‌கான‌ எழுத்து. சின்னச் சின்னக் க‌விதைக‌ள் ப‌டிச்சிப்பாருங்க‌ சின்ன‌தா அழ‌கா. க‌ட்டுரையெல்லாம் ரொம்ப‌ அழ‌கான‌ ந‌டையில‌ இருக்கும். பெரிய‌ வாச‌க‌க் கூட்ட‌ம் சேர்க்கும் எழுத்து.கூட‌வே ப‌ட்ட‌றைக் க‌வின்னு இவ‌ரோட‌ வ‌லைப் பூவையும் ப‌டிங்க‌.

ஆரூரன்:என்றென்றும் அன்புடன் இவருடைய வலைப்பூ. கொங்கு நாட்டு குசும்பு பேச்சிலும் எழுத்திலும் மிளிரும். சிறுமை கண்டு பொங்குவது கூட சிரிப்பாய் பொங்குவார். ஈரோட்டில் பாரதி என்ற பெயரில் வைத்த ஒரு பொம்மைக்கு ஆசாமி பண்ண அழிம்பைப் பாருங்க. சரளமாக கம்பராமாயணம், திருவாசகம் என்று மேற்கோள் காட்டிப் பேசும் தமிழறிவுக்கு சொந்தக்காரர். இதையெல்லாம் மீறி  நேயமிக்க மனிதன். தன் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பால் பரிந்தூட்டும் தாய்.


ஜிகர்தண்டா கார்த்திக்: அமெரிக்கால படிச்சிட்டிருக்கிற சில்வண்டு. கலியாணத்துக்கு இருக்கிற பய புள்ளைங்கள கிரிக்கெட் வீரரா ஒப்பிட்டு இது பண்ணுற அலப்பறைய பாருங்க. சரியான காமெடி பீசு. நல்ல எழுத்து வளம். விளையாட்டுப் பிள்ளை. ச்ச்ச்செரியாயிடும்.

பின்னோக்கி:பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்.” இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்கும் இவர் வலைப்பூ. மனுசன் எதைத்தான் எழுதலை? எல்லாம் எழுதுறாரு. நல்லா எழுதுறாரு. பதிவர்களின் பரிணாம வளர்ச்சின்னு சீரியல் கவிதை ஒண்ணு சாம்பிளுக்கு.


சரிங்ணா. இவங்கள பார்த்து வைங்க. நாளை சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Wednesday, December 30, 2009

கவித்துவ அகமுகங்கள்...

பச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம்,  வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில் பொங்கல் இதெல்லாம் யாருக்குன்னாலும் படிக்கிறப்பவே ஒரு சில்லிப்பு உண்டாக்குதில்லையா?

எழுத்துல இதுக்கிணையா ஒன்ன சொல்லணும்னா கவிதையத்தான் சொல்ல முடியும். முக்கி, முனகி, யோசிச்சி, சொறிஞ்செல்லாம் இல்லாம மூச்சு மாதிரி அதுவா வரத எழுத்தாக்குற வித்தகர்கள் சிலர பார்ப்பமா?


ஒரு நா இந்த மனுசன் கவிதை கூப்டுச்சு. வலை மனை பேரே அன்புடன் புகாரி.  மனுசன் சுவாசிக்கிறதே கவிதையில போல. அதும் காதல் கவிதை. இவரு வலைப்பூக்கு போய்ட்டு வந்துற முடியாது. பளிச் பளிச்சுன்னு பூத்துட்டே இருக்கும். பாருங்க ஒன்னு ரெண்டு. அப்புறம் இங்கனக்குள்ளயேதான் கெடப்பீங்க.

பசு மாடு இருக்கே கடவுள் படைப்புல ஆகச் சிறந்தது அது. வைக்கோல தேச்சி குளுப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வெச்சி, மினு மினுன்னு இளம் வெயில்ல நிக்கிறப்ப பக்கத்துல இருந்து பார்த்திருக்கீங்களா? களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா? உயிர்ல உறைக்கும் அந்த வாசனை. சித்தப்பு, மகாப்பா, பா.ரா. இப்புடி எந்த பேர்ல கூப்டாலும் மக்காங்கர சொல்லுல அந்த நேசத்தையும் எழுத்துல தெரியிற அந்த வாசத்தையும் என்ன சொல்ல. பசு மாதிரி மனசு, தானே இவர் கவிதை தேடி அடையுதா இல்லையா?

வானவில் சூரியன் மாதிரி, நட்சத்திரம் மாதிரி எப்பவுமே இருக்கறதில்ல. ஆனா இருக்கிறப்ப என்ன வேலைன்னாலும் விட்டுட்டு அதுல சொக்காத மனுசப்பய உண்டுமா? வலையுலக வானவில் நவாஸூதீன். அவர் எழுத்தின் பதத்துக்கு இந்த ஒரு சோறு  போதாதா?


சுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லுன்னு எழுதினார். ஒரு கவிதை சொல்லுன்னா அது சொல்லும் சூர்யாகண்ணன்னு. கணினில ஒரு பிரச்சனைன்னா சூர்யாகண்ணன்ல தேடினா வழியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இவருக்குள்ள இருக்கிற கவிஞரை துறுத்தல் ஒண்ணில பாருங்களேன்.

கரிசல்காரன்: அதேதான்! கி.ரா.வ தந்த கோவில்பட்டிக்காரரு. புதுசா எழுத வந்திருக்கார்னா நம்ப முடியல. வலைப்பூக்கு புதுசு. கவிதையா, கட்டுரையா எதுன்னாலும் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு கிளம்பறப்ப புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி மனச அங்க விட்டுத்தான் வரவேண்டியிருக்கு.

அகல்விளக்கு ராஜா: வேலைப் பளு காரணமா அதிகம் எழுத முடியறதில்ல போல. எழுதின வரைக்கும் அட போட வைக்கும் எழுத்து. முயற்சி இருக்கு. திறமை இருக்கு. நல்லா வரும் இந்த புள்ள.


செ.சரவணக்குமார்: செ.சரவணக்குமார் பக்கங்கள் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பல எழுத்தாளர்களின் அறிமுகத்தை பார்க்கலாம் இவர் பக்கத்தில். என் ராசா கி.ராவை அறிமுகம் செய்த அழகுக் கட்டுரை இதோ.


மேலும் வாசிக்க...

Tuesday, December 29, 2009

அட..மற்றும் அடடே..

வணக்கம்ணே. என்னாடா நேத்து இடுகையில தமிழ் கட்டுரை மாதிரி எழுதிட்டானே வானம்பாடின்னு பாக்கறீங்களா. கோவிலுக்கு போனா மேல் வேட்டிய போர்த்தி ஒரு பயபக்தி வேணுமா இல்லையா? சாமி கும்பிட்டாச்சி. நம்ம பேருக்கு அர்ச்சனைய பண்ணியாச்சி. இனிமே வேல வெட்டிய பார்க்கலாம் வாங்க.

மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது.

தோ! இந்த சிங்கம் களமிறங்கிருச்சேய்னு உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். வலைச்சரங்கரது ஒரு லைப்ரரி மாதிரி. வலையுலகத்துக்கு புதுசா வந்தவங்கள அறிமுகப் படுத்தறது மட்டுமே நம்ம வேலையில்ல. நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?

நமக்கு பாருங்கண்ணே கட்டம் சரியா இருந்திருக்கு. பின்ன என்னண்ணே தமிழே தேடி வந்து தட்டி குடுத்துச்சு. பழமை பேசலாம் வாடான்னு வழிகாட்டிச்சி. மண்ண மறக்காம நல்ல தமிழ் எழுத, தமிழ்ச் சுரங்கத்துல தங்கம் தேடி எடுக்கன்னு தம்பி 500 பேழைக்கு மேல சேர்த்து வச்சிருக்கு. ஏண்ணே! மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே! அந்த நனவச் சொன்ன அழகு இருக்கே. நினைச்சாலே தேனுண்ணே. படிக்காதவங்க படிங்க. பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க.

நம்ம வீட்ல இருக்குற விசுக்கான கூப்டு, ஏ தம்பி இங்கவாடா, திருக்குறள் படிப்போம்னு சொல்லி பாருங்க. வகுத்த வலிக்குதுன்னு சீனு போடும். செல்ல கூப்டு கைல குடுத்து, ஏப்பு, இதில ஒரு திருக்குறள் அனுப்பணும்டான்னு சொல்லி பாருங்க, வெடுக்குன்னு பறிச்சிகிட்டு பர பரன்னு பட்டன தட்டுவான்ல. இந்த டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க?

"எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை."  இப்புடியுமா டரியலா ஒரு முதல் இடுகை போடுவாங்க?  சின்ன வயசு விக்கிரமாதித்தன் கதையில காதல் சொல்ல முடியும்னு இங்கதான் படிச்சேன். எழுத்துல ஒரு ஆசிரியரோட கண்ணியம் தெரியணுமா, மாற்றுக் கருத்தை பக்குவமா சொல்லத் தெரியணுமா இவரைப் படிக்கணும். அது சரின்னு பேர்ல எழுதுனாலும் எது சரியோ அதுதான் சரின்னு சொல்லுற பக்குவம் படிக்க இவரைப் படிச்சே ஆகணும்ணே.

எந்த பந்த போட்டாலும் விளாசுவேன்னு விளாசிட்டு வீசுனேன், மட்டையில பட்டு சிக்சராயிடிச்சின்னு சொன்னா எப்படி இருக்கும். பிதற்றல்கள்னு சொன்னா மட்டும் அப்படி இருக்குமா என்ன. முகிலனின் பிதற்றல்கள் அப்படித்தான். இவரோட க்ரைம் தொடர்கதையை படிச்சிப் பாருங்க. சுஜாதாவோ, பெரிமேசனோ மனசுக்கு புடிச்ச எழுத்தாளர் கவனம் வருவாரு. எந்த இடுகை சொடக்கினாலும் அங்க முகிலன் அப்பா இருப்பாரு.

க‌.பாலாசி: என் சமகால பதிவர். கொங்குநாட்டு குசும்பு மொத்தத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துட்டாருண்ணே. 25வயசுல  75 வயது பெருசு மாதிரி உலகத்த பார்க்குற பார்வை எங்க படிச்ச பாலாசி. சொல்லிக் கொடேன்! பதிவுலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி பரிசுன்னு ஒரு மெடல் படம் குடுக்குறோமே. அந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நேர்த்தியா எங்கனயாச்சும் படிச்சிங்களா சொல்லுங்க!

புதுசா எழுத வந்து 'அட' போட வச்ச ரெண்டு மூணு பேர சொல்லியாகணும்.

பிரபாகர்: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூ தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் நூற்றுக்கும் அதிகமான இடுகைகள், கவிதைகள்னு அசத்தினவரு . அண்ணன் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டதாக சரித்திரமில்லை. ஒரு கிராமத்து வாலிபனின் அலப்பறைகளை படிப்பவர் சிரிக்காமல் இருக்க முடியாது.

பாலவாசகன்:மருத்துவக் கல்லூரி மாணவன். யாழ்ப்பாணத் தமிழில் உணர்வு சொல்லக் கற்றவர். சிறகுகள் என்ற வலைப்பூவில எழுதுறாருண்ணே. படிக்கையிலயே அந்த மண் வாசனை, கடல் காற்று, அழகு தமிழ் மனச அள்ளிக்கிட்டு போயிருதுண்ணே. சிரிப்போடு வலியும் சொல்லத் தெரிஞ்சவருண்ணே.  இதப் படிச்சி பாருங்கண்ணே. மனசு எங்கிட்டோ ஒரு பக்கம் பிச்சி கொண்டு போயிட்டா மாதிரி வலிக்கும்.

சித்ரா: கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு ஒரு வலைப்பூ வச்சிருக்காய்ங்க.  எண்ட்ரீயே அசத்தலா ஆரம்பிச்சி அசத்துறவங்க. ஒருக்கா பாருங்க உங்களுக்கே புரியும்.

சரிண்ணே! பொழப்பப் பார்க்கலாம் வாங்க. நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Sunday, December 27, 2009

தத்தித் தவழ்ந்து முத்தாய்...

அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!... பெருஞ்சித்திரனார்
.


தமிழ்த்தாயே உன் பாதம் தொழுது இப் பணியேற்கிறேன்.

தத்தித் தவழ்ந்து
தள்ளாடி நடந்து
முத்தாய் முதல் வார்த்தை
சொல்லுங்கால் துள்ளுமனம்

என்பதாக பதிவுலகில் நுழைந்து முதல் இடுகையை பதிப்பித்து முதல் வாசகனாய் படிக்கையில் ஏற்படும் பரவசம் சொல்லத் திறமன்று. மெதுவே மெதுமெதுவே வாசகர்கள் பாராட்டி, திருத்தி, ஆரோக்கியமான ஆலோசனை கூறி நம்மைச் செம்மைப் படுத்துகையில் தேன்கூடாய் ஒரு நண்பர் குழாம் உண்டாகிறது. தேடித் தேடி தேன் சேகரிக்கும் கூடு இப்பதிவுலகம்.

தானும் ஒரு தேனீயாய் அன்பர் சீனா அய்யா அவர்கள் ஒவ்வொரு வலைப்பூவாய் அமர்ந்து தேனுண்டு பாராட்டித் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தில் பூக்கோர்க்க அழைக்கையில் ஒவ்வொரு பதிவரும் தன் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுவதில் வியப்பில்லையல்லவா?

பதிவுலகில் தடம் பதித்து பத்து மாதங்களில் பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்ச் சிறகடிக்கும் எனக்கு இப்பெரிய அங்கீகாரமளித்த சீனாவின் அன்பு பாலாவும், என் எழுத்தைச் சிலாகித்து, என்பால் அன்போடு பாலாண்ணனாய், தந்தையாய், நண்பனாய், சிலர் ஆசானுமாய் என்னை அழைக்கையில் கண் பனிக்கிறது.

தயங்கித் தயங்கி நான்கு வரி கிறுக்கித் தாயிடம் நீட்டும் குழந்தையிடம் மனம் நோகாமல் உச்சி முகர்பவள் தாய். தலை கோதி, தவறு சுட்டி, ஊக்கமளித்து சில நேரம் குட்டி ஒரு சிறுபுன்னகையுடன், ம்ம் என்னும் நேரம் ஆசானுமாய் ஆகிறாள். அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்.

பதிவுலகம் நுழைந்த போது, என் மன அழுத்தத்தின் வடிகாலாய் பாமரன் பக்கங்கள்... என்ற வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்கிய போது ஈழத்துச் சொந்தங்களின் துயரமே தினசரி வலியாகிப் போனது. செய்திகள் தேடித் தேடி அழுது, சிரித்து, துடித்த போது என்னையறியாமல் சிறுவயதில், பத்திரிகை படிப்பவர்கள் தலைப்பு படித்தவுடன் பளிச்சென்று கூறும் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் நறுக்குன்னு நாலு வார்த்தையாய் தொடரானது.

வெகு விரைவிலேயே எனக்கொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து இந்த ஒரு தலைப்பிலேயே நூறு இடுகைகளைப் படைத்திட ஊக்கமானது மட்டுமின்றி, இப்போதும் ஏன் இதைத் தொடர்வதில்லை எனச் சிலர் சிலாகிக்கும் அளவுக்கு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இடையிடையே கவிதை என முயல்கையில் காசி ஆனந்தனின் கவிதையோடு ஒப்பிட்டு தம்பி பழமைபேசி நறுக்கவி பாலாண்ணே என்றழைத்தபோதும், வலைச்சரத்தில் பலமுறை சுட்டப்பட்ட போதும் இதையும் தாண்டி எழுத முயற்சிக்க ஊக்கமானது.

என் படைப்புக்கள் எல்லாமே என் குழந்தைகள்தாம் எனினும், சான்றோனெனக் கேட்ட தாயாய்ச் சிலிர்க்க வைத்த சிலவற்றைச் சுட்ட விழைகிறேன்.

1.ஈழப் போரின் உச்சத்தில் கேட்பாரற்று தனியே கையில் கட்டுடன் கண்ணால் துளைத்த இந்த குழந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்ட என் கவிதை.
2.பதிவர் கூடலில் வடிவேலு என்ற என் தொடர் இடுகை
3.யூத்ஃபுல் விகடனிலும் வெளியான என் கதை பசி
4.விதிகள் என்ற பெயரில் நீதி மறுக்கப்படும் அலுவலக நடைமுறை அவலம் குறித்த என் வருத்தத்தின் வெளிப்பாடு.
5.ஒரு காதல் முயக்கம்

சுய அறிமுகம் போதுமே! நாளை சந்திப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க...

நன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்

அன்பின் பதிவர்களே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கடந்த ஒரு வார காலமாக நண்பர் ஊர்சுற்றி ஆசிரியப் பொறுப்பேற்று மூன்று இடுகைகள் இட்டு ஏறத்தாழ பதினைந்து மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புகிறோம்.

28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் "வானம்பாடிகள் " - பாமரன் பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதுபவர் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் இந்த ஆண்டில் பிப்ரவரி 16ம் நாள் முதல் தான் இடுகை இட ஆரம்பித்துள்ளார். இன்று வரை ஏறத்தாழ முன்னூற்று நாலு இடுகைகள் - கிட்டத்தட்ட தினம் ஒன்று வீதம் இட்டுள்ளார். 185 பதிவர்கள் பின் தொடருகிறார்கள். 52 வயதான இவர் நக்கல், நகைச்சுவை , அனுபவம் என்ற பிரிவுகளில் அளவில் இடுகை இடுகிறார்.

புத்தாண்டில் திறமையை வெளிப்படுத்த வரும் அருமை நண்பர் பாமரனை - வானம்பாடிகளை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வானம்பாடி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு (கூகிள் கோப்பு)

அன்பு வலைச்சர வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,

     தகுந்த முன்னறிவிப்புடனேயே நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தாலும், அதிகமான பதிவுகளை அறிமுகப்படுத்த இயலவில்லை. இதற்குக் கடைசி இரண்டு வாரங்களில் 'வலை'ப்பக்கம் சரியான நேரம் ஒதுக்கமுடியாமை ஒரு காரணம். இன்னொன்று, நான் புதிய பதிவர்களை சரியாக அடையாளம் காணாததும் ஆகும்.

     உளவியல் ரீதியாகப் பார்த்தால், எதையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது எனது தீராத அவா. அதாவது இதுவரை அறிமுகப்படுத்தப்படாத பதிவுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதிலுள்ள குழப்பமும் தடங்கலுக்குக் காரணம்.
    
     இந்த சமயத்தில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகளின் தொகுப்பு ஒன்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணினேன். அதுவும் இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய கோப்பின் வடிவில் இருந்தால்?! நேற்றுதான் முழுமையடைந்த...

'வலைச்சரம் 2009 தொகுப்பு' - இதோ உங்களுக்காக.
http://tinyurl.com/yj4gf9a

ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளை முடிந்தவரைக்கும் தவிர்த்தால் 'வலைச்சரத்தின்' நோக்கம் இன்னும் முழுமையடையும் என நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை

நான் படிப்பதே மிகவும் குறைவு. அதிலும் பாதிக்குமேல் படிப்பவை ரீடரினூடாகத்தான்.  அவற்றிலிருந்து சில இங்கே அறிமுகங்களாக.

1. என் இணைய நண்பர்களுக்காக - ஸ்ரீ
     இவர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஊர் சுற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் பதிவிடுவதில் கில்லாடி. தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி இவர் எடுத்திருக்கும், பார்க்கவேண்டிய பல இடங்களின் புகைப்படங்கள் இவரது பதிவில் விரவிக்கிடக்கின்றன. உதாரணம் மலைக்கோயில் - திண்டுக்கல். கிரிக்கெட் பிரியர்.

2.மெய் சொல்லப் போறேன் - Kiruthikan Kumarasamy
     எழுத்தோடு உணர்வை வடித்தெடுக்கும் இவரது வார்த்தைகள்.  பல விசயங்களில் தன் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கிறார். வேட்டைக்காரனோடு தொடர்புடைய இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். வேட்டைக்காரனும் சில வலிகளும்.
மேலும் வாசிக்க...

Wednesday, December 23, 2009

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் பதிவர்கள்

இன்று நான் அறிமுகப்படுத்துபவர்களை 'என் குலம்' என்று அழைக்கப்போகிறேன். ஏனென்றால், இவர்கள் வலையுலகிற்கு அறிமுகமானது அல்லது வலையுலகம் இவர்களுக்கு அறிமுகமானது எல்லாம் கிட்டத்தட்ட எனக்கு நிகழ்ந்த அதே காலகட்டத்தில் (அப்படித்தான் நான் நம்பிகிட்டு இருக்கேன்). எனது கூகிள் ரீடர் பக்கத்தில் இவர்களது வலைப்பூக்களை 'என் குலம்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளேன்.



     முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இவர் எழுதியுள்ள இடுகை 'முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை'. இப்போகூட அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும் இன்னொரு விசயத்தைப் பற்றி ஒரு இடுகை இட்டிருக்கிறார்.


ஹாலிவுட் பாலா - அக்கரைச்சீமை:
     நான் செல்லமாக இவரை ஹாலிபாலா என்றே அழைக்கிறேன். ஹாலிவுட் படங்களையும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார். 'பிக்சார்' நிறுவனம் தொடர்பாக இவர் 18-க்கு அதிகமான இடுகைகளை இட்டுள்ளார். அதில் முதலாவது 'The Pixar Story (2007)'. இப்போது சினிமாவின் அடுத்த அவதாரமான 'அவதார்' பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.


சுபானு - ஊஞ்சல்:
     இதயத் திருடி அவள் என்ற ஓர் இடுகையின் மூலம் எனக்கு அறிமுகமானது என நினைக்கிறேன். TFT இப்படியான புதிர் மூலம் பிறந்ததேதி கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறியவர். இப்போது 'மின்மினி தேசம்' என்று ஒரு தொடர் எழுதுகிறார்.  


கணேஷ் - கணேஷின் பக்கங்கள்:
     கணேஷ் ஏற்கெனவே வலைச்சரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரது 'அடாவடி பொண்ணும் அப்பாவி பையனும்' என்கிற தொடர்கதைக்காக மீண்டும் ஒருமுறை இங்கே. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது கணிணிமுன் அமர்ந்ததும் அனிச்சையாய் விரல்கள் தட்டும் முகவரி, இவரது வலைப்பூவினது. கதையோடு எனக்கு அந்த அளவிற்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது.


அன்புடன், 
மேலும் வாசிக்க...

Tuesday, December 22, 2009

வலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்

ஊர்சுற்றி - பெயர்க்காரணம்:
     சென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.

எனது வலைப்பூக்கள்:
     ஊர்சுற்றி மற்றும் அறிவியல்பூ.

     ஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது எனக்குத் தோன்றும் விசயங்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை இங்கு எழுதுகிறேன்.

     அறிவியல்பூ - இது ஏற்கெனவே வலைச்சரத்தில் இயற்கை மகள் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எழுதும் இடுகைகளுக்கு அவற்றின் நம்பகத்தன்மை கருதி, அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறேன். வரும் நாட்களில் அறிவியல் பற்றி அதிகமாக எழுத ஆசைப்படுகிறேன். அறிவியல் பற்றி எழுதுவது எனக்கு அலாதி இன்பம் அளிக்கிறது.

வலையுலகிற்கு நுழைந்தது:
     கூகிளாண்டவர்தான் காரணம். அதன் முழு விபரம் இங்கே - ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை.

நான் அதிகம் ரசித்த எனது இடுகைகள்:
தலைமை ஆசிரியர் 'சீனா' அவர்களின் பன்னிரெண்டிற்கு மேற்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்த 'வலைச்சர ஆசிரியர்' பணியைச் செவ்வனே செய்வேன் என்று 'எட்டுப்பட்டி' ஜனங்களுக்கும் சொல்லி.... [மணியடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :) ]

அன்புடன்,
மேலும் வாசிக்க...

Monday, December 21, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக நண்பர் தண்டோரா பல இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகப் படுத்தி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

21ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர் ஊர்சுற்றி வருகிறார். இவர் ஊர்சுற்றி என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சென்னையில் பொறியியல் துறையில் இருக்கிறார். கிரிக்கெட்டிற்கு மயங்காமல், மழலைச் சிரிப்பிற்கு மயங்க மறுக்காமல், எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற தேடலில் பயணங்களைத் தேடி அலைகிறார்.

நண்பரை வருக வருக - ஏற்ற பணியினை நிறைவாக நிறைவேற்றுக என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஊர் சுற்றி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, December 20, 2009

நன்றி வணக்கம்

நண்பர்களே,
வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வருவது உங்களுக்குத் தெரியும். உண்மையிலேயே இது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் இனிதாக அமையக் காரணமாக அமைந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். இங்கு எழுத வாய்ப்பளித்த வலைச்சரம் நிர்வாகி திரு.சீனா அவர்களுக்கும், ஊக்கமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்த ஆறாம் பதிவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Friday, December 18, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்


இந்தத் தளமானது முடிந்தளவு மருத்துவத் தகவல்களைத் தமிழில் ஆவணப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது. தமிழ் வலைத்தளங்களில் மிகவும் சீரிய முயற்சி.
நீங்களும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.. நன்றி

வீடு திரும்பல் என்று ஒரு ரசனையான தலைப்பில் எழுதும் மோகன்குமார். சென்னையில் வசிக்கும் இவரது எழுத்துகளும் சுவையாக இருகிறது. வாரம் ஒரு பதிவர் என்ற தலைப்பில் சுவாரசியமான தகவல்களுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். வாழ்த்துக்கள் நண்பரே.


குறுங்கவிதைகள் என்று சொல்லலாம். நான்கு அல்லது ஐந்து வரிகள்தான். ஆழமாய் வலியை உணர்த்துகிறது ராஜாசந்திரசேகரின் கவிதைகள். தொடருங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்.


காமம்.கிரைம் கலந்து விறுவிறுப்பாக எழுதும் இந்த பதிவர். சுஜாதாக்கம் இருந்தாலும் சுவையாக இருக்கிறது படிப்பதற்கு. விசாபக்கங்கள்

போபால் சோகத்தை நாம் எளிதில் மறக்கமுடியாது. தன் பதிவில் அழுததமாக இப்படி எழுதி இருக்கிறார் இந்த பதிவர். தஞ்சையை சேர்ந்த இவர் தற்போது கடல் கடந்து தன் பேனாவை திறந்து வைத்திருக்கிறார். வலைமனையின் பெயரிலேயே சுவாரசியமும், வித்தியாசமும் பளிச்சிடுகிறது.
பேநாமூடி வாழ்த்துக்கள் நண்பரே..
மேலும் வாசிக்க...

Thursday, December 17, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்


உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்..

மேற்கண்ட வரிகளை தீட்டியவர் மனதில் இளமை ஊஞ்சலாடும் ஒருவர். கவிதைகளில் , குட்டிக் கதைகளில் அசரடிக்கிறார். இளையராஜாவை அவர் சிலாகித்திருக்கிறார் பாருங்கள். அற்புதமான ரசனை. நான் பேசவந்தேன் என்று சொல்வதில்தான் எத்தனை அர்த்தங்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ரவிஷங்கர் சார்.

நக்கல், எதிர்கவுஜை/பதிவுகள்/ சாருவுக்கு தொண்டரடிபொடியாழ்வார் என்று பலரூபங்கள் உள்ள தம்பி. சிவாஜி நடித்த திரைப்படத்தின் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார். அனுபவங்களை புனைவுகளாக மாற்றி அசரடிக்கிறார். வாழ்த்துக்கள் அரவிந்த்.

ஒரு புள்ளி மறைந்திருப்பதால் மருத்துவரான கவிஞர் இவர்.மேஜிக்கல் ரியலிசம் பாணியிலான கவிதைகள் எழுதுகிறார். இவரும் சாருவுக்கு அடியார்தான். எல்லோருக்கும் பின்னூட்டாமிட்டு ஆதரிப்பவர். அறிதலில் காதல் அஷோக்(டி.ஆர்.)

எவனோ ஒருவனாய் எழுத ஆரம்பித்து, அதிவீரம் வந்து பிராதபிக்கும் தம்பி பெஸ்கி. கதை, கவிதை, பயணங்கள் என்று பலவற்றையும் எழுதுகிறார்.ஒரு கரு.. நான்கு கதைகள். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு உத்தியில் எழுதப்பட்டது. வாழ்த்துக்கள் பெஸ்கி.

உலகசினிமாவில் காதலன். பார்க்காத சினிமாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(அது மைனாரிட்டியாத்தான் இருக்கும்) ஆழ்ந்த விமர்சன திறன். படித்து பாருங்களேன். நன்றியும் , வாழ்த்துக்களும் வண்ணத்துப்பூச்சியாருக்கு.
மேலும் வாசிக்க...

Wednesday, December 16, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்




பிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.

உணவே மருந்து. நன்றி சங்கவி. தொடர்ந்து பயன் அளியுங்கள்..


என் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.

நினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.



இயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..

பெயரை சொல்லவில்லையா? கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை

மேலும் வாசிக்க...

Tuesday, December 15, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்


அசோகமித்திரன்(1)அறிமுகம்(14)ஆத்மநாம்(4)எஸ்.ராமகிருஷ்ணன்

(2)

புகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி பாரதியார்(1)மனுஷ்யபுத்திரன்(1)மௌனி(12) லா.ச. ராமாமிருதம்(3)லா.ச.ரா(3)வ.வே.சு ஐயர்(2)

நாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றை எழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின் எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.

பொக்கிஷம்

சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம். நிச்சயம் முற்போக்கானவிஷயங்கள். மகளிர் மட்டும் என்றில்லை. அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் இந்த புதுமைப்பெண். ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”


மற்றொரு தோழியின் வலைத்தளம்.

“கவிதை உலகம் கொஞ்சும்” என்று கவி பாட தூண்டுகிறது இவரது தளம். சிக்கலில்லாத மொழி நடை. அமைதியான நதியில் நீந்தும் அன்னமாய் பயணிக்கிறது வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழி.


பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள அருமையான மனிதர். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். அரசியல் எள்ளலும் உண்டு. சமூக அக்கறையும் நிறையவே. செர்ரீ போல் சுவை மிக்க நண்பர்.

கையில் பிரம்பு உண்டு. அதுவும் கவிதை எழுதுமா என்று 20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம். வாழ்த்துக்கள் ஈசானந்தா.


மேலும் வாசிக்க...

Monday, December 14, 2009

வலைச்சரத்தில் முதல்நாள்



வலைச்சரம் வாசகர்களுக்கு தண்டோராவின் வணக்கங்கள். கிட்டதட்ட 10 மாதங்கள் ஓடிவிட்டது. பிப்ரவரில் வலைமனையை தொடங்கினேன். எத்தனை நண்பர்கள். வாசகர்கள். முகம் தெரிந்த, அறியாத அன்பு உள்ளங்கள். அதுவும் சீனா ஐயா என்னை அழைத்து, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது!! பருவம் அடைந்த பெண் முதல் முறையாக தாவணி அணியும்போது ஏற்படும் குறுகுறுப்பையும், பரவசத்தையும் ஒருங்கே அனுபவிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி ஐயா. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நாளை என்னை கவர்ந்தவர்களுடன் சந்திப்போம்..

நன்றி. வணக்கம்..

அன்புடன்

தண்டோரா


எனக்கு பிடித்த என் பதிவுகள் சிலவற்றின் சுட்டி இணைத்துள்ளேன். படித்து கருத்துரைக்கவும். நன்றி


எனக்கு பிடித்த என் சிறுகதை




மேலும் வாசிக்க...

Sunday, December 13, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் "பிரியமுடன் வசந்த்" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.

அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் தண்டோரா பொறுப்பேற்க வருகிறார்.


தண்டோரா அவர்களின் பெயர் "மணிகண்டன்". திருமணமாகி ஒரே ஒரு மகள். சென்னையில் வசிக்கிறார். சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அறியப்பட்ட விளம்பரப்பட இயக்குனர். குறும்படங்களும் இயக்கியுள்ளார். அதில் குடியின் விளைவை மூன்றே நிமிடங்களில் முகத்தில் அறையும் "சியர்ஸ்" எனும் குறும்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்போது "வருகை" எனும் குறும்படம் எடுத்து வருகிறார். மேலும் கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர். அரசியலில் தீராத ஆர்வமுடையவர். அரசியல் குறித்த சூடானவிமர்சனங்கள், வயிற்றை வலிக்க செய்யும் நகைச்சுவையென பின்னிப் பெடலெடுப்பார்.

அவரை வலைச்சரத்தின் சார்பினி்ல் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

பொட்டிய கட்டிக்கிறேன்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..

இதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..

நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கு.அடிக்கடி நானே ஓபன் பண்ணி படிச்சுப்பாத்து ரசிச்சுக்கிறேன்.குட் பிளாக்ஸ்ல கூட வந்துருக்கு அந்த அளவுக்கு என்னோட இடுகைகள் ரசனையா வந்ததுக்கு நீங்கள் அனைவரும் காரணம். இந்த ஒருவார காலமும் தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த எம்மண்ணின் சொந்தம் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுகொள்வது உங்கள் ப்ரியத்துடன்..வசந்த்..

Orkut Myspace Good Bye Scraps, Graphics and Comments


Keep in touch Glitter Graphics and Scraps for Orkut, Myspace, Facebook, Hi5, Tagged

மேலும் வாசிக்க...

Thursday, December 10, 2009

மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.


மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!


என்று பாடிய மகாகவியின் பிறந்த நாளில் வலையுலகில் சிறப்பாக எழுதிவரும் பெண் பதிவர்களைப்பற்றி பார்ப்போம்...

இன்றைக்கு இந்த வலைச்சரத்தை பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறேன்

********************************************************************************
ஹேமா (சுவிஸ்)

இவங்க குழந்தைநிலா ,உப்புமடச்சந்தி என்ற வலைப்பூக்களில் எழுதி வர்றாங்க
இவங்களோட கவிதைகள் சோகம்,சந்தோசம்,காதல் என்று அனைத்திலும் சிறந்த கவிதைகளாக படைத்து வருகிறார்..

இவரின் முத்துக்களில் சில

இன்று நான்

சேமித்த கணங்களில்

எனக்குண்டான நிலத்துண்டு

Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
******************************************************************************
அன்புடன் அருணா

இவங்க தலைமையாசிரியர் அன்புடன் அருணா எனும் வலைப்பூவில் எழுதி வர்றாங்க கவிதைகள் நிகழ்வுகள் சிறப்பாக எழுதுறாங்க.மிக சிறப்பாக ஓவியமும் வரைவாங்க...நன்றாக எழுதும் அனைவருக்கும் பூங்கொத்து கொடுக்க மறப்பதில்லை இவங்க இன்னைக்கு இவங்களுக்கான என் பூங்கொத்து....

இவங்களோட இடுகைகள்...




Orkut Scraps - Flowers

**************************************************************************
யாவரும் நலம் சுசி

இவங்க யாவரும் நலம் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.எழுதுறது கொஞ்சம் குறைவுதான் ஆனால் வாசிப்பது நிறைய.இவங்களோட செல்லப்பேர் போலி டாக்டர் ஆமாங்க நிறைய நகைச்சுவையா எழுதுறாங்க.

இவங்களோட இடுகைகள்




Orkut Scraps - Flowers

*************************************************************************************

திருமதி.மேனகாசத்யா

இவங்க சசிகா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்க ஒரு சமையல் மகாராணி இவங்க எழுதாத சமையல் குறிப்பே இல்லைன்ற அளவில் அனைத்து உணவுகளின் சமையல் குறிப்புகளும் புகைப்படத்தோட போட்டு அசத்துறாங்க.நானும் பெரும்பாலான சமையல்களை இவங்களோட குறிப்பை வச்சுத்தான் செய்றேன்...

இவங்களோட இடுகைகள்






Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters

************************************************************************************

ஜெஸ்வந்தி

இவங்க மெளனராகங்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க
நான் இவங்களை ஜெஸ்ஸம்மான்னுதான் கூப்டுவேன். இவங்க ஒரு கவிஞர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வாழ்வியல் கவிதைகள் அத்தனையும்..அனுபவ பகிர்வுகளும் எழுதியிருக்காங்க இல்லையா ஜெஸ்ஸம்மா?

இவங்களோட இடுகைகள்








************************************************************************************
கலகலப்ரியா

இவங்க கலகலப்ரியா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.பெயருக்கேற்ற மாதிரியே கலகலப்பதிவுகளும் பின்னூட்டங்களும் சிரிப்பை மூட்டுகின்றன.சிறந்த எழுத்தாளர் .கவிதைகள் இவரோட சிறப்பு.கண்டிப்பா அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவர்.

இவரோட இடுகைகள்






Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
************************************************************************************

பிரியங்கா

இவங்க என் கிறுக்கல்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க .என் அன்பு தங்கை என்னோட நிறையதடவை சண்டை போட்ருக்கா இருந்தாலும் ஊருக்கு போயிட்டு எப்டிண்ணே இருக்கீங்கன்னு மெயில் பண்ணிடுவா..அனுபங்களை பேச்சு நடையிலே எழுதுவது இவளின் சிறப்பு அத்தனையும் ரசிக்கும் படி எழுதுறா இப்போ மகப்பேறுக்காக சென்னைக்கு போயிருக்கா மருமகனோ மருமகளோ தெரியலை தாயும் சேயும் நலமாய் இருக்க வேண்டிக்கிறேன்...அதானால அவளோட எழுத்துக்கு கொஞ்சம் விடுமுறை விட்ருக்கா...கண்டிப்பா படியுங்க ....
சீக்கிரம் எழுத வந்துடுவாள்...

இவளின் இடுகைகள்



Orkut Scraps - Flowers

*************************************************************************************
WILL TO LIVE ரம்யா


முதலில் என் வாழ்க்கைப்பாதை எனும் தொடுப்பை கிளிக்கி படித்து வாருங்கள் இவங்க WILL TO LIVE எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்கள் நகைச்சுவை எழுதுவதில் கில்லாடி.இப்போ இவங்களைப்பத்தி தேவதை இதழில் கட்டுரை வந்துருக்கு அதுக்குமுன்னே சக்திவிகடனின் மகளிர் சிறப்பு பகுதியிலும் இவங்களோட கட்டுரை வந்துருக்கு ஒவ்வொருத்தரும் இவங்களோட தன்னம்பிக்கை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கங்க...

இவங்களோட இடுகைகள்

ஜில்லென்று ஒரு காதல்

கிரிக்கெட் வீரர்களின் அதிரடி ஆட்டம் பகுதி 1

நியாயங்கள் எங்கு கிடைக்கும்?


Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
************************************************************************************
விக்னேஷ்வரி

இவங்க விக்னேஷ்வரி எனும் வலைப்பூவில் எழுதுறாங்க அனைத்துவிதமான இடுகைகளும் எழுதுறாங்க தேர்ந்த எழுத்து நடை சிறப்பா எழுதுறாங்க.காதல் கவிதைகள் இவரின் தனிச்சிறப்பு...

இவங்களோட இடுகைகள்



என் கண் அவன் -என் கணவன்
Orkut Scraps - Flowers
*****************************************************************************
வீட்டுப்புறா சக்தி

இவங்க வீட்டுப்புறா எனும் வலைப்பூவில் எழுதுறாங்க.மிகச்சிறப்பான கவிஞர் கவிதைகளில் சமுதாய கோபங்கள் சுட்டுத்தெறிக்கும் ஒவ்வொரு கவிதையும் தி பெஸ்ட் இப்போ எழுதுறதை குறைச்சுட்டாங்க..அக்கா சீக்கிரம் எழுத வாங்க உங்களுடைய கவிதைகளை படிக்க ஆவலாய் இருக்கிறோம்...

இவரின் கவிதைகள்






Orkut Scraps - Flowers
**********************************************************



அன்புடன் மலிக்கா

இவங்க நீரோடை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறந்த கவிஞர் எழுதிய அனைத்தும் கவிதைகளே அத்தனையும்,அன்பு,வாழ்க்கை,சமூகம் பற்றி சிறப்பா எழுதுறாங்க..

இவங்களோட இடுகைகள்

பாலைவன பரிதவிப்பு

பார்வையற்றோரின் புலம்பல்

வார்த்தையும் வாழ்க்கையும்




************************************************************************************

யாழினி

இவங்க என் மனவானில் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறப்பா எழுதிட்டு வரும் பதிவர் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பா எழுதுறாங்க...

இவங்களோட இடுகைகள்





Pink Glitter Graphics for Social Networking

************************************************************************************
இது யாருன்னு கேக்குறீங்கதானே நாந்தானுங்க தெரிலையா வலைச்சரம் தொடுத்துட்டு இருக்கேன்பா...ஹ ஹ ஹா...

Orkut Scraps - Flowers

நன்றி நட்பூக்களே மீண்டும் நாளை சந்திப்போம்

ப்ரியமுடன்....வசந்த்


மேலும் வாசிக்க...

Wednesday, December 9, 2009

புதுவரவுகள்...

அனைவருக்கும் வணக்கம்...


ரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடையா மாறிப்போகும் அந்த வகையில் இன்று அறிமுகப்படுத்தும் நண்பர்கள் அனைவரும் வலைச்சரத்துக்கு புத்தம் புது வரவுகள்....இவங்களையும் வாசியுங்கள் உங்களுக்கு பிடிக்கும் அடிக்கடி போய் வாசிப்பீங்க பாருங்க...

சத்ரியன்


மனவிழி எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் இவர் எழுதிய அத்தனையும் கவிதைகளே சிறந்த கவிஞர் . சின்னதாக எழுதினாலும் சிறப்பா எழுதுறார் இவரின் வலைப்பூவிலே தன் மகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் தேர்ந்தெடுத்த அதே இனிய பெயரான சாரலின்பாவை மகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.பார்த்தீர்களா எப்படியெல்லாம் சிறப்பான மனிதர்கள் இருக்கின்றார்கள்,இந்த வலையுலகில்...

இவரின் கவிதைகள்





**************************************************************************************

பின்னோக்கி’



பின்னோக்கி என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.இவர் சிறப்பாக கதைகள் எழுதுகிறார் , கட்டுரைகளும் கவிதைகளும் கூட எழுதுகிறார்.நிஜமாய் நடந்த துப்பறியும் கதைகளும் எழுதி வருகிறார் ஒரே மாதிரியான கதைகள் படித்த நமக்கு இவரின் கதைகள் வித்யாசமாக இருக்கின்றன..கண்டிப்பா படியுங்க பிடிக்கும் உங்களுக்கும்...

இவரின் இடுகைகள்





*************************************************************************************

தமிழுதயம்


தமிழுதயம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இவர் வலையுலகுக்கு மட்டுமே புதிது எழுத்துலகில் நிறைய சிறுகதைகள்,குறுநாவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. அனுபவ,நிகழ்வுகள் பற்றி சிறப்பாக எழுதிவருகிறார் சிறப்பான எழுத்துநடை ஆரம்ப வரிகளில் இருந்து கடைசி வரிவரி வரை நம்மை கட்டியிழுத்துவருகின்றன கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டியவர்..வாசித்து பாருங்க இவருக்கு நான் கியாரண்டி...

இவரோட கைவண்ணங்கள்




*************************************************************************************

நீச்சல் காரன்

இவர் நீச்சல்காரன் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுசா எழுதுனாலும் வித்யாசமான கோணத்திலான எழுத்துக்கள் முதன் முறைப்படிப்பவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும்..சிறப்பாக எழுதிவருகிறார் வாருங்கள் இவரையும் வாழ்த்தி சிறக்கச்செய்வோம்...

இவரின் இடுகைகள்




**************************************************************************************
மச்சான்ஸ்



இவர் ஹைக்கூக்களும்,நகைச்சுவையும் ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களும் சிறப்பாக எழுதி வருகிறார் சிவன் என்ற புனைப்பெயரில்,நன்றாக எழுதுகின்றார் சிறப்பான எதிர்காலமுண்டு...

இவரின் சில இடுகைகள்




**************************************************************************************
நாஞ்சில் பிரதாப்



இவர் நாஞ்சில் எக்ஸ்பிரஸ் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் அனைத்து இடுகைகளும் சிறப்பாக எழுதுகிறார்,நகைச்சுவையாய் எழுதுகின்றார்..நீங்களும் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்...

இவரின் சில இடுகைகள்....




*************************************************************************************

வேல்ஜி

ஜெயப்பேரிகை எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் சிறந்த கவிஞர் ஒரு முறை வாசித்தால் மிகவும் பிடித்துப்போகும் இவரது கவிதைகள்





*************************************************************************************
புதியவர்களின் அறிமுகம் நாளையும் தொடரும்

நன்றி ப்ரியமுடன்...வசந்த்







மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது