07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 31, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -6



அன்பு வணக்கம் அன்பர்கள் யாவருக்கும்.
இன்றைக்கு நாம் திரட்டப்போகும் தேனுக்குப் பெயர் திண்மைத் தேன். அதற்கெனவே சில வலைப்பூக்கள் அவ்வப்போது சிற்சில மிக அரிய விஷயங்களைத் திரட்டி வைத்துள்ளன. அவற்றைப் பிரித்தெடுத்து படிப்பதால் நமது மனத்திண்மை கூடும். வாழ்க்கையின் சாரம் புரியும்.
 -----------------------------------------------------------------
Inspire Minds to change Lives     என்கிற வலைத்தளத்தின் தமிழ் வடிவில் பல இளம் சாதனையாளர்களின் உழைப்பும் வெற்றியையும் விரிவாக எடுத்து சொல்கிறது.
பக்கத்து ஊரான திசையன்விளை வரை சைக்கிளில் போய் டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர், ஊர்க் காரர்களுக்கு உதவ, விறகு வாங்கித் தருவதையே ஒரு தொழிலாக ஆரம்பித்தார். “அடிக்கடி சைக்கிள் பஞ்சரானதால் பஞ்சர் ஒட்ட கற்றுக்கொள்ள, சாத்தான் குளத்தில் முதல் முதலாக ஒரு பஞ்சர் ஒட்டும் கடை போர்டுடன் உருவானது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டும் அட்மிஷன் கிடைககவில்லை. மனம் வெறுத்துப் போன சங்கரலிங்கத்திடம், கடையைக் கவனத்துடன் கவனித்துப் பெரிதுபடுத்தும் யோசனையைச் சொல்லி ஆறுதல்படுத்தினார் தந்தை. ஆனாலும் அந்த இளைஞனின் மனத்தில் சாதிக்க வேண்டும் என்று கனன்று கொண்டிருந்த கனல் மெல்ல அனலாகி, உயரங்களைத் தொட நமக்கு வேண்டியது இந்தக் கிராமத்தில் இல்லை என்ற முடிவோடு கையில் முந்நூறு ரூபாயுடன் கோவைக்குப் பயணமானார்.........
என்று போகிறது  சங்கரலிங்கத்தின் பாதையில் பூக்களில்லை முட்கள் மட்டுமே   என்கிற  கட்டுரை. இவருடைய போராட்டத்தைப் போலவே  இன்னும் சிலருடைய வெற்றிகளும் இந்த வலைத்தளத்தில் காணலாம்  1)  டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி  2) எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதும் 60 வயதுப் பெண்

இப்படி பல தமிழ் நாட்டு சாதனையாளர்களை அவர்கள் வலைத்தளத்தில் காண முடிகிறது. மிக அருமையான தளம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------
இன்னொரு அதிசயமான மனிதரைப் பற்றி  ரைட் மந்த்ரா என்கிற வலைதளத்தில் ஒரு நேர்காணல் வெளி வந்திருக்கிறது.
அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
 அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும். என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள் 
 இவர் 35 ஆண்டு காலம் நூலகராகப் பணியாற்றியவர். இந்தியாவின் தலைசிறந்த நூலகராகவும் உலகத்தின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர். ஐக்கிய நாட்டு சபை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று போற்றி பாராட்டியது. பில் கிளிண்டனின் இந்திய விஜயத்தின் போது சந்திக்க விழைந்த இருவரில் இவரும் ஒருவர். அவர் பெயர் பாலம் கலியாண சுந்தரம்.    அவருடைய அபூர்வமான சாதனைத்தான் என்ன ? இந்த இணைப்பை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடாமல் உடனே படித்து முடியுங்கள்

right mantra வலைத்தளம் மேலும் பல அபூர்வ சாதனையாளர்ளை நேர் காணல் செய்து அவர்களின் சாதனைகளை உலகுக்கு அறிவிக்கிறது.வாழ்க அவர்கள் நற்பணி.  இந்த வலைத்தளத்தை நடத்திவரும் சுந்தர் அவர்கள் தன்னைப் பற்றியும் தன் குறிக்கோள் பற்றியும் சொல்லியிருப்பதே பல இளைஞர்களுக்கு உற்சாகம் தர வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
 -----------------------------------------------------------------------------------
 ஒன்பதாம் வகுப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்த திரு அ. முருகானந்ததின் வாழ்க்கைப் பாதை எவ்வளவு கடினமாயிருந்தது என்பதையும் மகளிருக்கான மலிவு விலை சானிடரி நாப்கின்ஸ் தயாரிப்பு முயற்சியில் அவர் பட்ட கஷ்டங்களையும் சொல்லி முடியாது. அவரது பயணத்தை தொடுவானம் சற்றே தொட்டுப்பார்க்கிறது. நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் அவருடைய சாதனையைப் பற்றிய கட்டுரை, காணொளி யாவற்றையும் காணலாம்.

அவர் நகைச்சுவையாய் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது பார்த்து ரசிக்க வேண்டியதொன்று. இதோ உங்களுக்கான காணொளி. TED TALKS
[ TED Talks என்பது மிக உயர்ந்த சாதனையாளர்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அவர்களை அழைத்து பேசச் சொல்லும் உலகளாவிய ஒரு முயற்சி. அதில் பேச அழைக்கப்பட்டு திரு முருகானந்தம் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதே மிகப் பெரிய விஷயம். இந்த கருத்தரங்கில் பார்வையாளராக அமர்வதற்கே பல நூறு டாலர்கள் வசூலிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்]

இவருடைய சிறப்பான குணம் தன் உழைப்பின் வெற்றியை சுய வேலை வாய்ப்பு மகளிருக்கான முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்திருக்கிறார்.
தொடுவானத்தின் ஆசிரியர் காளிதாஸ் முருகய்யா. இவர் முருகானந்தத்தை பற்றி மட்டுமல்லாது வாழ்க்கை கோலங்கள் என்கிற தொடரில் சாதனைப் படைத்தலைப் பற்றி நிறைய எழுதி வருகிறார்.  அழகான கோலங்கள் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை
------------------------------------------------------------------------
 ஏற்கனவே நாம் இருவரின் உதாரணத்தில் இதைக் கண்டிருக்கிறோம். 
முதல் நாள் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதி அவர்களைப் பற்றிய சந்திப்பு உரையாடல். எப்படி பள்ளிக்கூடப் படிப்பைக்கூட முடிக்க முடியாத ஒருவர் தம் விடாமுயற்சியாலும் திறமையாலும் தனக்கென சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டிக் கொள்ள இயலும் என்பதை அவருடைய வெற்றி சொல்லித் தருகிறது.

அடுத்து நாம் கண்டவர் ஜனா. எவ்வளவு பேர் அந்த ஆலிலைக் கிருஷ்ணனின் இணைப்பைச் சுட்டி ஜனாவின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. கைகளை இழந்த பாலகன் தன் வாயினாலேயே எழுதுவதும் ஓவியம் வரைவதும் செய்து காட்டி தன்னம்பிக்கை உள்ளவர்களால் முடியாதது கிடையாது என்பதை உறுதி செய்திருக்கிறார்.
 ----------------------------------------------------------------------------------------
 இச்சாதனையாளர்களின் முன் நான் ஒரு துரும்பு போல் உணர்கிறேன். என்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா என்பது போன்ற எண்ணங்கள் அவ்வப்போது வருகிறது. இறைவன் அவர்களைப் பற்றி உங்களிடமெல்லாம் பேச வைத்திருப்பதே இந்த கணத்தில் என்னால் முடியக் கூடிய தொண்டு.  அதற்காக வலைச்சரத்திற்கு நன்றி

இன்றோடு ஆறாவது நாள் பணி நிறைவடைகிறது. என்னோடு இவ்வளவு தூரம் பொறுமையுடன் வந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
மேலும் வாசிக்க...

Friday, August 30, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-5

 தினசரி தியானம்; ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம் யாவருக்கும்.   இன்றைக்கு சுற்றுக்கு ரெடியா ?
இன்றைக்கு ஒரு மாதிரிதான் ! ’ஒருமாதிரி’-ன்னா கவலைப்படணும்-கைவிடப்பட்ட கேஸ்.   ஆனால் பிரிச்சு ’ஒரு மாதிரி’ ன்னு எழுதினால் அதை ‘ஒரு உதாரணம்’ என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?

வலைப்பதிவர் ஹிலால் முஸ்தாபா, அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் புலவர் (தங்கபதக்கம்) பட்டம் பெற்றவர். அவருடைய பேச்சுப் பிரதேசம்-’எது மாதிரியும் அல்ல இது ஒரு மாதிரி’ என்று இரட்டைப் பொருள் வரும்படி எழுதியிருந்ததே என்னை அவருடைய வலைப்பூவில் கணிசமான நேரம் பிடித்து வைத்தது. நேரடியாக வெளிவரும் அவருடைய எழுத்து படிப்பவர் மனதை உடனே சென்று அடைகிறது. அது கதையாகட்டும் கவிதையாகட்டும் ஈர்ப்பு ஒரே மாதிரி தான்.
எதுவும் வரட்டும் துணிகின்றேன்!
நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ
நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!
புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்
புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!
செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்
சிந்தனை அங்கே படர்வதில்லை!

 ‘எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்  என்ற கவிதையில்.

  இது எப்படி நடந்தது என்று தம் சுயசரிதத்தை சொல்லும் கட்டுரைத் தொடரும் வாழ்வின் திருப்புமுனைகளை சுவையாக சுட்டிக்காட்டுகின்றன. படிப்பில் தன் பின்தங்கிய அனுபவத்தை சொல்கிறார் 
 எக்ஸாம் நெருங்கி விட்டது. நான், என் கூடப் படித்த மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டேன். கல்கத்தா போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு ரயிலில் ஏறி சென்று விட்டோம். அரக்கோணத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொண்டார். பள்ளிக் கூட புத்தகப் பையோடு நாங்கள் இருந்ததால் எங்களை மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.
மற்றொரு இடுகையில் அவருக்கு சிதம்பரத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு நாள் நல்ல வெயில் நேரம். மதியம். நகரத்தார் சத்திரத்தில் உள்ளே உள்ள கருங்கல் முற்றத்தில் நானும் ஐயாவும் உட்கார்ந்து வழக்கம் போல் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஐயா நல்ல தமிழறிஞர், அதே அளவு ஆங்கிலப் புலமை உள்ளவர். நகரத்தார் சத்திர வாசலில் ஒரு யாசகரின் பிச்சை ஒலி கேட்கிறது. ஐயா வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். நான் அவருக்கு எதிரே இருக்கிறேன். என் பிடரிக்கு பின்னால் வாசல் இருக்கிறது. ஐயா யாசகரை பார்த்து விட்டு திடுக்கிற்று "ஹிலால் திரும்பிப் பார், திரும்பிப் பார்" என்று சத்தமிட்டார். நான் உடனே திரும்பிப் பார்த்தேன். வாசலில் ஒரு சினிமாக் காட்சிப் போல் இருந்தது. யாசகர் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் நாங்கள் இருவரும் பார்க்கும் போது தோன்றி, நின்று மறைந்தது. யாசகம் கேட்டவர் எதையும் பெறாமல் வீதியில் இறங்கி நடக்கலானார். ஐயா பதறிப் போய் எழுந்து வாசலை நோக்கி ஓடினார்.அவர் ஓடியதால் நானும் ஓடினேன். வீதியில் இறங்கி யாசகரைப் பார்த்தோம். அவர் அங்கே தென்படவே இல்லை.  
மேலும் அறிய  குங்குலியம் செட்டியார் பற்றி படிக்கவும்.

ஹிலால் முஸ்தாபா பக்கீர் என்ற கதையில் எளியவனின் மனப்போராட்டத்தை சித்தரிக்கிறார் 

ஒரு நல்ல தமிழ் வளமுள்ள வலைத்தளம் ‘பேச்சுப் பிரதேசம்.

---------------------------------------------------------------------------------------------
அடுத்து நம் கவனத்திற்கு வருவது ’கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்’ அவருடைய பெயரை வைத்தே சொல்லிவிடலாம் இவர் ராணுவ வீரர் என்று. திருவாரூர் அருகில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் அண்டார்டிகா-தென் துருவத்தை - வெற்றி கொண்டவர்.
“அண்டார்டிகா ( தென்துருவம் ) -வில் உள்ள, “தக்‌ஷின் கங்கோத்ரி “ என்ற இந்திய ஆய்வு மையத்தின் தலைவராகத் திகழும் வாய்ப்பைப் பெற்றது எமது வாழ்விலோர் அதிசயம்! உலகிலேயே கொடுமையான குளிரும் ( -89.6C ), பனிக்காற்றும் ( 300 KM/Hr ) நிறைந்த அண்டார்டிகா ஒரு உலக அதிசயம். 480 நாட்கள் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இன்றி எமது தலைமையில் இயங்கிய இந்திய ஆய்வுக் குழு மகத்தான சாதனைகள் புரிந்து அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளின் தென் துருவ ஆய்வுக் குழுவினரின் பாராட்டுதலைப் பெற்று நாடு திரும்பினோம்” 
இவருடைய பதிவுகள் நிர்வாக இயலில் விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் விருப்பத்தைத் தரும். எண்ணங்களே வாழ்க்கை,  மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல தலைப்புகளை இவரது எழுத்து ஆட்கொள்கிறது. இவற்றில் விசேஷம் என்னவெனில் இவைகள் சொல்லவருவதை ரத்தினச் சுருக்கமாக சொல்லுகின்றன.
அகத்தூண்டுதல்கள் வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை வழங்க முயலும் வித்தியாசமான வலைப்பூ
 -------------------------------------------------------------------------------
 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு எழுத்தாளரது வலைப்பூ சில நேரங்களில் சில கருத்துகள் அவர் பெயர் பத்ரிநாத்
1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.....
 படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத மிகச் சிறிய பதிவுகள். தன் கருத்துகளை முன் வைக்கும் போது கருத்து என்ற அளவிலேயே நிறுத்தி கொள்ளும் எளிமை எனக்குப் பிடித்திருக்கிறது.
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும் விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்..
இப்படி யாரைப் பாராட்டுகிறார் இவர் ? அங்கேயே போய் பார்த்துவிட்டால் போச்சு.
[ இந்த வலைப்பூவின் முகப்பு டெம்ப்ளேட் சற்று குழப்பம் தருவதாக உள்ளது  ஏதோ ஒரு வணிக சம்பந்தமான முகப்பு. சற்று கூர்ந்து கவனித்ததில் அப்படி ஏதும் இல்லை என்பது புரிந்தது ]

மக்களிடம் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று கருதுகிறார்.  அவர் எழுதியிருக்கும் சில சிறு கதைகளுக்காக த்னியாக ஒரு வலைப்பூ BADRI STORY  என்ற பெயரில் வைத்து இருக்கிறார்.
 சிறுகதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது கண்டிப்பாக பயன்படும்.அவருடைய எழுத்துப்பணி மேலும் தொடர்வதாக.
---------------------------------------------------------------------------------------------
  வளர்ந்து கெட்டவன் என்கிற வலைப்பூவில்  ஜனரஞ்சக மொழியில் அப்பட்டமான உண்மைகளை போட்டு உடைக்கிறவர் வளர்ந்து கெட்டவன். இரண்டுமே ஒன்றுதான். நம் சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் போது அவருடைய இடுகையில் சாடுகிறார்
................ஆனால் ...!!!. டேய் முட்டா பயலுகளா , எதிரிகள்  இந்த நாட்டுக்கு எதிராக ஒட்டி  வரும் டாங்கிகளும், பீரங்கிகளும் , , போர் படை விமானங்களும் உங்கள் கண்ணுக்கு சிக்க போவதே இல்லை ...ஏன் தெரியுமா ???/
அவைகளின் பெயரே  வேற ...
1.மொன்சாண்டோ,போஸ்கோ,ஹுவாய் ,வால்மார்ட், போர்ட் ,ஹயுண்டாய் , சி .என் ..என். ஸ்கை , ஒனிக்ஸ் ,இன்னும்,...இன்னும்..பன்னாட்டு கம்பெனிகள் என்ற போர்வையில் வரும்   அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டு ஒற்றகளாக .......... !
... ஒரு கவிஞன் சொன்னதைப்போல 'நீ இந்த பட்டு கோவணத்தை பற்றி கனவுகண்டு கொண்டிரு , உன் இடுப்பில் இருக்கும் ஒற்றை கோவணமும் களவு போகும்.!!!!!
 இவர் பொள்ளாச்சி மண்ணைச் சேர்ந்தவர் என்பதை ,,,, மாநகர வரவேற்பு அறிமுக இடுகையில் தெரிய வருகிறது 
. .......15 வருடங்களுக்கு முன் ... ஒருஅதிகாலை போழுது,.. 'பொள்ளாச்சி'ல  பிழைக்கத் தெரியாத பையன் எந்த ஊர் போனாலும் பொழைக்க மாட்டான்'  என்ற எங்க ஊர் பழமொழியை பொய்யாக்க புறப்பட்டு சென்னை வந்து இறங்கிய அந்த நாள்  நினைவுகள் ....
... முதல் முதலாக 'மெட்ராஸ்' (கவனிக்கவும் சென்னை..அல்ல ) என்ற மாநகரில் காலடி எடுத்து வைக்கபோகிறோம் என்ற நினைப்பே பயம் கலந்த ஒரு சந்தோஷம்,அதுவும் யாருடைய துணையும் இன்றி ஒரு குருட்டு தைரியத்துடன் தனியாகவே புறப்பட்டு வந்தது.......
 சென்னையில் செம்புதாஸ் தெருவில் தன் அலுவலகத்தின் புதுக்கிளைக்கு மாற்றலாகி வந்த கதையை சென்னை மக்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கும் போது இவருக்குள் இருக்கும் எழுத்தாளனின் திறமை தெரிகிறது.
மேலும் நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதி  ஒரு நல்ல வலைப்பூவாக இவரது உழைப்பு மலரட்டும் என்று வாழ்த்துவோம். .
-----------------------------------------------------------------------------
இன்னும் இரண்டு நாள் தான். பின்னூட்டமிட்டு வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. மீண்டும் நாளை சந்திப்போம். வாழ்க வளர்க

மேலும் வாசிக்க...

Thursday, August 29, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-4

தினசரி தியானம்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம்  அன்பர்களே !  கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் முடிந்ததா? 
இன்றைக்கு நம்முடைய சுற்றுலா ‘தமிழ்த் தேன்’ - இதை எழுதும் பொழுதே ஒரு சந்தேகம்.
தமிழ்த் தேன் அல்லது தமிழ் தேன்  எது சரி ? 

இது எல்லோருக்கும், அதாவது என்னை மாதிரி முறையாகத் தமிழ் இலக்கணம் படிக்காமல் தடவித் தடவி எழுதுகிறவர்களுக்கெல்லாம் வரக்கூடியது தான். இந்தப் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கப் போகிறது. அதற்கு இணையத்துலேயே ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். முதலில் கிடைத்த வலைப்பூ கவிக்கோ திரு ஞானசெல்வன் அவர்களின் நல்ல தமிழ் என்ற வலைப்பக்கம் . தினமணிப் பத்திரிக்கையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகளை வலைத்தளத்தில் திருவேங்கடம் என்னும் அன்பர் நல்லபடியாக நிர்வகித்து வருகிறார்.

நல்ல வேளையாக அவர்களே ” நல்ல தமிழ்” என்று எழுதிவிட்டபடியால் ”எது சரி ’நல்லத் தமிழ்’ அல்லது நல்ல தமிழ்” என்கிற குழப்பம் வரவில்லை. கூடவே ஒரு தெளிவும் வந்த மாதிரி இருந்தது ‘ல’ மெல்லின வர்க்கத்தை சேர்ந்ததால் வல்லின வர்க்கத்தின் ”த” ஒற்று பெறாமல் வரும் போலிருக்கிறது என்று நினைத்தேன். அப்படியானால் அதே மெல்லினத்தை சேர்ந்த “ழ” வைத் தொடரும் ‘த’ வும் ஒற்று பெறாமல் உச்சரிகபடவேண்டும். ஆகவே தமிழ் தேன் சரி என்று நினைத்தேன். 
அப்படியே அவர்கள் உதாரணங்களுடன் பிழை -சரி ஒப்பிட்டு காட்டியிருக்கும் பட்டியலைப் பார்வையிட்டேன். அங்கே தமிழ்த் தாய் சரி என்றும் தமிழ் தாய் பிழை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  


 
 போச்சுடா ! அப்படியானால், ஒற்று மிகுத்து வரும் தமிழ்த் தேன் என்பதுதான் சரியானது எனத் தோன்றி அப்படியே எழுதி வைத்தேன்.  மிகுத்து /மிகுந்து எது சரி? -அன்பனே நீ இப்படி யோசித்துக் கொண்டிருந்தால் கட்டுரையை எழுதி முடிக்கப் போவதில்லை என மனம் பயமுறுத்தியது.  தெரிந்தபடி எழுதி முடி, வாசக அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொல்லியது . சரி, கண்டிப்பாக வந்து நிதானமாகப் படிக்க வேண்டிய பாடங்கள் இவை என்ற முடிவுடன் தேடலைத் தொடர்ந்தேன்  [என்ன! ரிடயரான பிறகா, மனசாட்சி கேலி செய்கிறது ].   

இதோ நீச்சல்கார(ர்)ன்  ஒரு ஜாவா மென்பொருளை மெனக்கெட்டு தயாரித்திருக்கிறாரே ! நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி  என்னும் இந்த மென்பொருள்  நன்றாகவே வேலை செய்கிறது என்பதை கீழ் கண்ட உதாரணத்தில் பார்க்கலாம்.


இதிலும் தமிழ் தேன் என்பதை சந்தேகத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்த் தேன் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை. இரண்டு தவறுகளை வேண்டுமென்றே செய்து பரிசோதித்தேன். அவைகளை பரிந்துரையில் சரியான முறையில் சுட்டிக் காட்டியுள்ளது. மிக அற்புதமான ஒரு மென்பொருள். வாழ்த்துகள் நீச்சல்காரன். தங்கள் தமிழ்சேவை இன்னும் நல்ல முறையில் தொடரட்டும்.   அவருடைய இன்னொரு வலைப்பக்க மென்பொருள் தமிழ் புள்ளி. இது பலவகையான கோலங்களின் வடிவங்களை நம் தேவைக்கு ஏற்ப கணிணியில் போட்டுக் காட்டுகிறது. பெண்களுக்கு மிகவும் பயன்படும். அதையும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்ய முடிந்தால் இன்னும் அமர்களமாயிருக்கும்!  

 என்னை விட சற்று மேல் தட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு  ஒரு அருமையான வலைப்பூ பசுபதிவுகள் மலர்ந்திருக்கிறது . பேராசிரியர் பசுபதி மரபுக் கவிதைகளுக்கான இலக்கணத்தை படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கிறார். இப்போது கவிதை இயற்றிக் கலக்கு என்ற பெயரில் அது புத்தகமாகவும் வெளி வந்துள்ளது  இது பல வருடங்களாக அவர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். அதைத் தவிர பழங்கால சஞ்சிகைகளிலிருந்து பல கிடைத்தற்கரிய தகவல்களை, துணுக்குகளை சித்திரங்களை யாவருடனும் பகிர்ந்து வருகிறார். கிடைத்தற்கரியத் தேன் இது. பிடித்துக் கொள்ளுங்கள்.    

   ஒவ்வொருவருக்கும் தமது தாய் நாட்டின் பெருமையை புகட்டினால் நாட்டுப்பற்று ஓங்கும் அது போல அவரவர் தாய் மொழி பிறரால் எப்படி மதிக்கப்படுகிறது என்பதை அறியும் போது மொழிப்பற்று ஓங்கும். அப்படி பிற தேசத்தவர் அறிய வேண்டுமானால் நல்ல தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவர்களால் போற்றப்பட வேண்டும். அப்படி மொழியாக்கம் செய்பவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பிற மொழிகளில் அபார தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே  இந்த மண்வாசனையை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். பிற மொழியினவர் வந்து தமிழ் கற்று மொழியாக்கம் செய்வதில் அவர்கள் மண்வாசனையை இழந்து விடுவார்கள்.  முனைவர் மு இளங்கோவன், புதுச்சேரியில் வசிக்கும்  மதனகல்யாணி அவர்கள் சிலப்பதிகாரத்தை பிரஞ்சு மொழிக்கு மொழியாக்கம் செய்திருப்பதைத் தெரிவிக்கிறார். மேலும் அவருடைய வலைப்பூவில் பல தமிழறிஞர்களைப் பற்றியும் அவர்களது தமிழ்த் தொண்டு பற்றியும் தொடர்ந்து வாசகர்களுக்கு எழுதி வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------
கதியால்கள் என்ற  வலைப்பூவின் ஆசிரியர் குணேஸ்வரன் புலம் பெயர்ந்தவர்களிடையே  தமிழ் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக வேற்றுநாட்டு அடையாளம் முழுதாக தமிழைக் காவு கொள்ளும்முன்னர் உணர்வாலும் செயற்பாட்டாலும் தமிழராய் உணர்தல். இது புலம்பெயர்ந்த முதற்தலைமுறைக்கு பிரச்சினையல்ல. அவர்களின் இரண்டாந் தலைமுறையினருக்குரிய பிரச்சினை. எனவே மொழிவழியாகப் பண்பாட்டைக் கடத்துவதற்கு ஒரு முயற்சியாகத்தான் தமிழைக் கற்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர். நான் யார்? என் தாய்நாடு எது? எது என் தாய்மொழி? ஆகிய கேள்விகள் எழும்போதுதான் தாய்நாடு பற்றியும் தமது மொழி பற்றியும் தமது பண்பாடு பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய நிலையும் தமது வேர்களைத் தேடவேண்டிய நிலையும் வருகிறது
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி  என்னும் கட்டுரையில் ஈழத் தமிழரின் புது சூழ்நிலைகளிலும் தமது கலாசாரத்தையும் மொழியையும் போற்ற வேண்டிய கடமையை விரிவாக விவரிக்கிறார். 
முதலில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆளுமைகள் சிந்திக்கவேண்டும். அவர்களிடம் இருந்துதான் எதனைப் பிள்ளைக்குப் போதிக்கலாம். அதற்கு எவ்வாறான ஒழுங்குமுறைகளை (அகராதிகள் உருவாக்குதல். சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், பொருத்தமான கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள்) செய்யலாம் ஆகிய திட்டங்கள் வரவேண்டும். இம்முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதும் அறியப்படுகிறது. எனவே தமிழ் அடையாளத்தை தமிழ் மொழிவழியூடாக புதிய தலைமுறைகளுக்குக் கடத்துவதே இன்று எமக்குள்ள ஒரு வழியாகும். அதனூடாகத்தான் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இனத்தையும் எதிர்காலத்தில் வாழவைக்கமுடியும்.
குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மேல் கொண்டுள்ள காதல் தமிழ் நாட்டில் வாழும் குடிமக்களுக்கே இல்லாமல் போவது தான் விந்தை. இங்கே  புத்தக வெளீயீட்டில் தமிழ் சந்தைப் படுத்தப்படுவதைத் தான் பார்க்க முடிகிறது.
 -----------------------------------------------
இந்த சந்தைப்படுத்தும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் தமிழ் ஆர்வத்தை ஏன் தூண்டக்கூடாது என்பதை   முள்ளை முள்ளால் எடு  என்னும் என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் எழுதியிருப்பதும்  நினைவுக்கு வருகிறது.
 தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது ?  வலைப்பதிவர்கள் கூடும்போது இம்மாதிரி விஷயங்களைப் பற்றி சிந்தித்து செயல்பட்டால் தமிழ் வளர வாய்ப்புகள் கூடும்.


மற்றுமொரு சிறப்பான தமிழ்பணி செய்து வருபவர் திரு மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்கள். அவர்  தருமபுர ஆதினத்தொடு இணைந்து பன்னிரு திருமுறையை பல மொழிகளில் மொழி பெயர்க்கும் பெருந்தொண்டினை செய்து வருகிறார்.பன்னிரு திருமுறையின் 18,246 பாடல்கள் அனைத்துக்கும் உரையுடனும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இசையுடனும், சமகாலத்தில் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, தாய்லாந்து, பர்மியம், யப்பான், ஆபிரிக்கான்சு, கிறியோல், பிசின், மலாய், இந்தோனீசியன், சுவாகிலி, உருசியன், ஒலிக்குறி உரோமன், ஆங்கிலம் ஆய வரிவடிவங்களுக்கு ஒலிபெயர்த்துத் தருவதுமான மின்னம்பல தளத்தின் www.thevaaram.org (2006) அமைப்பாளர். அவரைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்

அந்த கால முழுநேர ரேடியோ நாடகங்கள்- தேசீய ஒலிபரப்பில் அடிக்கடி தமிழாக்கம் இரா.வீழிநாதன் என்ற பெயரைக் கேட்டிருந்தேன். சமீபத்தில் அவரைப் பற்றி  செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் வம்பளந்தான் முக்கு என்ற வலைப்பதிவில் விவரமாக எழுதியுள்ளார்.
அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது.
 செங்கோட்டை ஸ்ரீராம் பல முன்னணிப் பத்திரிக்கைகளிலும் வானொலி தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் அனுபவம் உள்ளவர்.
அவருடைய  வலைப்பூ கவனத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
-----------------------------------------------
மொழிப்பற்று என்பது பிற மொழிகளின் பால் கொண்ட வெறுப்பால் வெளிப்படுத்தப்படுவது அன்று.  என்னுடைய அன்னையை நான் நேசிப்பதற்கு  அடுத்தவருடைய  அன்னையை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன? 

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  நல்லது. தொடர்ந்து வாசியுங்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும். வாழ்க வளர்க
மேலும் வாசிக்க...

Wednesday, August 28, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-3

 
தினசரி தியானம்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம் அன்பர்கள் யாவருக்கும் :)
இன்னிக்கு ப்ரோக்ராம் சித்திரகூடமலை.

சஹானா ராகத்துல ஒரு பழைய சினிமா பாட்டு. பார்த்தேன் சிரித்தேன்னு ஆரம்பிச்சு வரிக்கு வரி தேன் தேன்-ன்னு வந்து ”அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்!” அப்படீன்னு முடியும். அப்ப்டியொரு மலை தேன் இன்றைக்கு!

சித்திரகூடத்தில் மலைக்க வைக்கிற மாதிரி சில பதிவர்கள் வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. இன்றைக்கு கிருஷ்ண ஜன்மாஷ்டமி. அதனால் அவரையும் நினைச்சுகிட்ட புண்ணியம் கிடைக்கும் வலைப்பதிவையும் பார்த்தமாதிரி இருக்கட்டுமே அவருடைய சிந்தனைகளை தூண்டுகிற சில வலைப் பக்கங்களைப் பார்க்கலாம்.

நீங்க இங்க பார்க்கிற படம் வெறும் சாம்பிள் மட்டும் தான். பலருக்கு அந்தந்த வலைப்பக்கங்களுக்கு போய் இடுகையை பார்க்க நேரமில்லாமல் போய் விடுதே என்கிற காரணத்துக்காக ஒரு கொல்லஜ் உருவாக்கி கொடுத்திருகிறேன். கண்டிப்பா நேரம் ஒதுக்கி தனித் தனியாகப் பார்த்து ரசிக்க வேண்டிய வர்ண ஓவியங்கள் இவை.


 அடடா ! அந்த மரத்தடியில கால் மேல கால் போட்டு என்ன ரிலாக்ஸ்டா தன்னை மறந்து குழல் ஊதறாரு. பேசாமல் நாமும் அங்கேயே போய் உங்காந்துக்கலாம்னு தோணுது

அந்த சித்திரக்காரர் திரு கேசவ். ஹிந்து பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரைபவர் மட்டுமல்ல மிகத் திறமையான அளவில் வர்ண ஓவியங்களையும் வரைபவர். புதுமைகள் புரிந்து பார்க்க விழைபவர். அவர் கிருஷ்ணரை நவீனமாகவும் மரபு முறையிலும் பல விதமான வடிவில் வரைந்து அழகு பார்த்திருப்பதும் அதையெல்லாம் வலையுலகில் பகிர்ந்து கொண்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

சங்கீதத்துக்கும் ஓவியங்களுக்கும் மொழி தேவையில்லை என்பதாலோ என்னமோ அவரது வலைப்பக்கத்தில் படித்து அறிவதற்கென்று எதுவும் சொல்லப்படுவதில்லை.  அவருடைய கிருஷ்ணர் ஸ்பெஷலான வலைப்பூ காமதேனு வுக்கு சென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண கிருஷ்ணர்களை காணலாம். இடையிடையே ராமாயணக் காட்சிகளும் பாகவத நிகழ்சிகளும் இடம் பெற்று ஆர்வத்தைகூட்டுகிறது. இவருடைய கேரிகேசர்  மற்றும்  கார்ட்டூன் துணுக்கு பக்கஙகளும் மிகவும் ரசிக்கத்தக்கவையாகும் ---------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து ருசிக்க இருப்பது  ராமரஸம்  என்ற பெயரில் உள்ள திரு பட்டாபிராமன் அவர்களின் வலைத்தளம்.  
கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே 
 கண் முன்னே வந்து நின்றிடுவான்  
கவலைகளைஎல்லாம் போக்கிடுவான்  
காலமெல்லாம் உடனிருந்து 
கண்ணிமைபோல் காத்திடுவான்  
அன்புடன்  தினமும் அவன் நாமம்  
நாவிலும் நினைவிலும் ஒலிக்க  விட்டால்  
ஒயாது சலிக்கும் மனமும் ஒடுங்கிவிடும்...  
என்று கவிதை பாடி மகிழும் இவர் அவரை ஓவியமாய் வரைந்தும் மகிழ்கிறார். இரண்டாம் வருட நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் இவரது வலைப்பூவில்  சித்திரங்கள் கவிதைகள் மட்டுமல்லாது  ஆந்திராவின் வேமன்னாவின் சொல்லமுதம்   ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (19 ஆம் நூற்றாண்டு) கருத்துகள் என அசுர வேகத்தில் எழுதி   வருகிறார்   இதோ அவருடைய ஓவியங்களின் கொல்லாஜ்



----------------------------------------------------------------------------------------------------------

 இப்போ ஒரு ஆலிலை கிருஷ்ணர் . இந்த கிருஷ்ணருடைய படத்தை வரைந்தவர்  பின்னணி தெரிஞ்சா மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்

அவரைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
இன்று இந்த சித்திரக்காரர் ஒரு MFPA  உறுப்பினர் . அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - இங்கே சுட்டவும்
 -----------------------------------------------------------------------------------

கீழே இருக்கிற கிருஷ்ணர் என்னுடைய முதல் ஆயில் பெயிண்டிங்.

சொல்லிக் குடுக்க யாருமில்லாம நான் பட்ட கஷ்டத்தை  கண்ணாரக் கண்டேன் என் கண்ணனை -ங்கற இடுகையில் பார்த்து படித்துக் கொள்ளலாம், நேரம் இருந்தால் :)
இதை விட சுவாரஸ்யமானது சிலேட்-ல செதுக்கிய கிருஷ்ணன். அதைப் பற்றிப் பார்க்க படிக்க :கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும் என்கிற இடுகை.
---------------------------------------------------------------------------------
நான் வசிக்கும் ஜாம்நகர் கிருஷ்ணரின் துவாரகைகு மிகவும் அருகிலுள்ளது. நான்கு முறை தரிசனமும் செய்தாயிற்று. ஆனால் உங்களுக்கெல்லாம் தரிசனம் செய்விக்க ஒரு இடுகையும் எழுதவில்லை. ஆனால் என்ன அந்த குறையை போக்கி விடுகிறார் தேவராஜன் ஐயா . நீங்களும் அவரோடு ஒரு ரவுண்டு தரிசனம் பண்ணிக் கொள்ளுங்கள் 
--------------------------------------------------------------------------------
இன்றைக்கு நிறைய பேர் வலைப்பக்கங்களில் கண்ணன் பிறந்த கொண்டாட்டங்கள் கவிதைகள், கதைகள் எல்லாம் வரும். அவர்களுக்கு கண்ணன் அருள் நிறைந்து இருக்கட்டும்.
கோவிக்காத கண்ணன் பிறந்தான்
கோவிக்காமல் என்றும் இருப்பான்
கீதையோடு சேர்ந்து மகிழ்வான்
கீதம் நமக்கு இசைத்து வைப்பான்
கோடி கோடி வந்தனம் செய்வோம்
ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்
கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!
கண்ணன்  என்றும்  நம்மைக் காப்பான்
என்று பாடி மகிழ்கிறார் VSK  என்ற பெயரில் ஆத்திகம் வலைப்பூ வைத்திருக்கும் சங்கர்குமார் ஐயா.  கவிதையை முழுவதும் படிக்க இங்கே.

அவருடைய மயிலை மன்னாருடைய குறள் விளக்கம் என்றும் திகட்டாது
அதையும் விட்டு விடாதீர்கள்.
----------------------------------------------------------------------------
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். மீண்டும் நாளை சந்திப்போம்.
( நேரமின்மை காரணமாக பின்னூட்டங்களுக்கு பதிலுரைப்பது தாமதம் ஆகிறது அல்லது முடியாமல் போகிறது. பொறுத்து கொள்ளவும்)
மேலும் வாசிக்க...

Tuesday, August 27, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -2

 தினசரி தியானம்,  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை

சுற்றி வருவோமா வலைப்பூக்களில் தேன் அருந்த ....கிளம்புங்கள்
முதலில் நெடுஞ்சாலை, விருதுநகர் பக்கம் போவோம்

எளிமையான வார்த்தைகளில் தெளிவாகக் கருத்துகளை சொல்ல முடிந்தால் அதுவே சிறப்பான எழுத்து. 
அது எவ்வளவு உண்மை என்பதை நெடுஞ்சாலை வலைப்பூவில் வேல்முருகன் அவர்கள் எழுத்தாளர் மலர்வதியின் வரிகளில் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
”நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழா நடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது   இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
  கிளைகளின் சலனம்
  ஊருக்கு தெரியும்?
  வேர்களின் அழுகை
  யாருக்கு தெரியும்?
  இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு   அழகுசேர்க்கின்றன
மேற்கண்ட வரிகள் சமீபத்தில் சாகித்ய அகடெமி விருது பெற்ற தூப்புக்காரி நாவலில் இடம் பெற்றுள்ளது. அதன் ஆசிரியை மலர்வதி அவர்களின் சந்திப்பைப் பற்றி தமது ஏப்ரல் மாத இடுகையில் வேல்முருகன் விவரிக்கிறார்.
..........திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,  விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது....
மலர்வதி என்கிற நாவலாசிரியரின் எளிமையையும் மற்றும் அவருடனான நேர்காணலையும் அறிய இடுகைக்கான இணைப்பு  தூப்புக்காரி நாவல் 
வேல்முருகனே ஒரு நல்ல படைப்பாளி. தவிப்பு என்கிற பெயரில் அவருடைய கதையின் ஒரு துணுக்கைப் படியுங்கள்
“.........அப்படியே பூனை கழுத்தை பிடித்து தூக்கி ஜவுளி வாங்கும் போது தந்த கட்டை பையில் வைத்து பையை இருக்க மூடிபிடித்து கொண்டேன், மகளை பெப் ஸ்கூட்டரை ஓட்டசொல்ல பின்னால் உட்கார்ந்து கொண்டு, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையை திறந்து பூனையை வெளியில் விட்டேன். வெளியில் வந்த பூனை எங்களை பார்த்துவிட்டு புதர்குள் ஓடிவிட்டது.
               அப்பாடா என நிம்மதி மூச்சை விட்டுவிட்டு வீடு வந்தேன். பாதியில் விட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உடைமாற்றி அலுவலகம் கிளம்ப பைக்கை வாசலில் இருந்து கீழே இறக்கிகொண்டு இருந்தேன், மியாவ் என குரல் கொடுத்துகொண்டே என்னை கடந்து என் வீட்டு தோட்டத்தில் நூழைந்த பூனையை நானும், என்னை வழி அனுப்பவந்த மனைவியும்,ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தோம்.........................
அப்புறம் என்ன ஆச்சு? விடை  - இடுகை தவிப்பு   என்ற பெயரில் 
எழுத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்பது அவருடைய இலக்கிய நண்பர்களின் தொடர்பு பற்றி விவரிக்கும் போது நன்கு புரிகிறது.  இவரை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
சாத்தான்குளம் வாசகசாலை: என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வரும் சொர்ணமித்திரனும் புத்தகவாசிப்பில் பெரும்பிடிப்பு உள்ளவர்,  தேரிக்காட்டில் ஒரு எழுத்துக்காடு என்னும் இடுகையில் ஒரு சிறுகதை எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிறார். அதை அவர் சொற்களிலே காண்போம் 
”....அது சுற்றிலும் தொழிலாளர் மிகுந்த பகுதி. அங்கு அதில் பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கோழி இறைச்சிக்கடை. அதன் பின்னால் சிறு விறகு கடை.காலை நேரம் அந்தக் கைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கோழிகளை துண்டு துண்டுகளாக்குகிறது.  மின் நிறுவையில் போடுகிறது.  பணத்தை பெற்று கல்லாவில் போடுகிறது. அந்த கைகள் உழைத்து உழைத்து இறுகிப்போனதாய் தெரிகிறது.  அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகப்பெருமாள். வாடிக்கையாளர்களிடம் இன்முகமாய் பேசுகிறார்.  நாட்டு நடப்புகளை அலசுகிறார்.
முற்பகல் வியாபாரம் முடிகிறது.  இரத்தம் தோய்ந்த கைகள்  அலசப்படுகின்றன.
பிற்பகல் அதே கைகளில் இப்பொழுது பேப்பரும் பேனாவும் சிந்தனைகள் எழுத்துக்களாய் மாறி சிறுகதைகளாய் பிறக்கின்றன.  மாலை நேரம் அவரைத்தேடி இலக்கிய விரும்பிகள் வருகிறார்கள். இப்பொழுது அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் கண்ணகுமார விஸ்வரூபன். தமிழ் சிறுகதை எழுத்தாளர். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் படித்திருப்பதோ எட்டாம் வகுப்பு வரை மட்டுமே........
 மிகவும் அபூர்வமான நேர்காணல் வாசிப்பு. கண்டிப்பாக வாசியுங்கள்
சொர்ணமித்திரனின் குறுங்கவிதைகளும்  சுவையானவை
துருப்பிடித்து தவமிருக்கிறது  
செல்போன் அழியட்டும் என்று  
தபால்பெட்டி!  
ஆழிமழையும் அம்மாவின் மிக்ஸியும் என்னும் சிறுகதை இவரிடம் எழுத்து இயல்பாக இருக்கிறது என்பதை காட்டுகிறது .
இவருக்கும் வாசகர் வட்டம் பெருக வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------
சமூகத்தை பீடித்திருக்கும் அவலங்களையெல்லாம் சாடத் துடிப்பவர்  இவர். அது பொது நம்பிக்கையாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும் அல்லது வாழ்க்கை முறைகளாகட்டும் எல்லாவற்றையும் அலசுகிறார். சொல்ல வரும் கருத்தில் தெளிவு, எளிமை  இரண்டையும் காணமுடிகிறது
பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை ஏனெனில் அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்க தகுதியற்றவர்கள்” என்று சொல்லி ஆரம்பிக்கும் காமராஜ் என்னும் காமகிழத்தன் அவர்களை வைத்து தான் நடத்திய பரிசோதனையை சொல்லுகிறார்
“நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஒரு அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனுக்கும் அவன் குலதெய்வம்  நினைவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.
இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அவருக்கு என்னென்ன பதில்கள் கிடைத்தன என்பதை அறிய ’நான் நீங்கள் அவர்கள் ’ என்னும் வலைப்பூவில் சொல்கிறார் பத்து ரூபாய்களும் பத்து பிச்சைக்காரர்களும் கடவுளும்.  இவர் விதியோடும் கொஞ்சம் விளையாட யாவரையும் அழைக்கிறார் :
”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?
அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.
நான் கட்சியெல்லாம் மாறலீங்க....................
’’ அவருடைய முடிவு என்ன ?  -  படியுங்கள் “ வாருங்கள் விதியோடு  கொஞ்ச(சி)ம் விளையாடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------------
எவனோ யாரோ - அப்படீன்னு அடையாளம் காட்டிக்கத் தயங்குறாரே அவர்தான் உதயா பகத் : 
GDP ன்னா என்னங்க ? அப்படீன்னு கேக்கிறவங்களுக்கு இங்கே சிம்பிளா பொருளாதார விளக்கம் தருகிறார்
நம்ம மதுரை ன்னு பழைய காலத்து மதுரை புகைப்படங்களை போட்டிருக்கிறார். மதுரை எவ்வளவு அழகா இருந்திருக்கு என்கிற ஏக்கம்தான் மிஞ்சுது  அவசியம் பாருங்க  நம்ம மதுரை
-------------------------------------------------------------------------------------------------------------
தென்பொதிகைத் தேன் எல்லாம் ருசியாய் இருந்ததா? 
மலர்வதி யும் விஸ்வரூபனும் பள்ளிக்கூடம் கூட படிச்சு முடிக்காதவங்க. அவர்களைப் போன்ற நிறைய பேர் - மலர்வதி அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்- தமிழ் என்னும் மரத்தின் வேர். அவர்கள் தான் இதயத்தின் ஒலியை சத்தாக மாற்றி தமிழ் மரத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவு என்னும் காற்றில் சலசலக்கும் இலைகளாக நம் வலைத்தளங்கள் ஆகாமல் தரமான எழுத்திற்கு வேர்களாக மாற்றுவோம். ஏனென்றால் இலைகளுக்கு உதிர்காலம் உண்டு. விரைவிலேயே காணாமல் போய்விடும்.  வேர்களுக்கு அது இல்லை.

லேட்டாயிடுச்சு.  நாளைக்கு எங்க போறோம் என்கிறதையும் இனிமேதான் பார்க்கணும்.   நிர்வாகம் பற்றிய ஒரு கதை சொல்லியிருக்கேன் [ கார்பொரேட் ஸ்டோரி ] அதையும் படிச்சுகிட்டு இருங்க.
 நாளை மீண்டும் சந்திப்போம். அது வரை இனிய வாசிப்பு தொடரட்டும்.
மேலும் வாசிக்க...

Monday, August 26, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -1

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
நன்றி : தினசரி தியானம் - ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் -திருப்பராய்த்துறை
வலைச்சரம் பொறுப்பாசிரியர்  சீனாவுக்கும், வலைப்பூக்களின் ஆசிரிய பெருமக்களுக்கும், எழுதாமல் படித்து ரசிக்கும் வாசகர்களுக்கும் இனிய வந்தனங்கள். சற்றே ஒதுங்கியிருந்த என்னையும்  வலைச்சரம் கட்டி இழுத்து வந்துவிட்டது!

முதல்நாள் சுய அறிமுக நாள். அது  இணையத்தில் என் அனுபவமாக மலர்ந்ததைச் சொல்லுகிறேன்.
என் வலையுலகப் பயணம் மதுரையில் 2001-ல் ஆரம்பித்தது. தொழில்நுட்ப சம்பந்தமான எனது புத்தகம் ஒன்று பலருக்கும் இணயத்தில் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் அதை வலையேற்றுவதற்காக HTML, java script code, போன்றவற்றை சுயமாக தேடித் தேடிக் கற்றுக் கொண்டேன். அந்த பலத்தில் Tripod என்கிற இலவச தளத்தில் மஞ்சரி என்ற பெயரில் ஒரு மின் சஞ்சிகை ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதி  வந்தேன். பின்னர் அந்த வலைத்தளத்தின் எரிச்சலூட்டும் POP UP விளம்பரங்களால் அதை கைவிட்டேன். 

அச்சமயம் வலைப்பக்கங்களில் தமிழில் எழுத யூனிகோடு முறை இல்லாமல் எழுத்துருப் பிரச்சனைகள் பரவலாக இருந்து வந்தது. அதனால் பரஹ மென்பொருள் கொண்டு நான் எழுதியதை Bitmap முறையில் மாற்றி மஞ்சரியில் சில கட்டுரைகளை வலையேற்றி தமிழில் எழுதும் ஆர்வத்தை ஓரளவு தணித்துக் கொண்டேன். தில்லியிலிருந்து கோவைக்கு 2006-ல் வந்த பின் தமிழ்பயணி சிவா Windows XP மூலம் இனிமேல் யாவரும் யூனிகோட்தான் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதால் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய வேண்டிய அவஸ்தைகள் வராது என்ற பெரிய மென்பொருள் ரகசியத்தைப் பகிர்ந்தது கபீரின் கனிமொழிகள் வலைப்பூவுக்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து பல்சுவை விஷயங்களை பகிர்வதற்காக கற்கை நன்றே வை ஆரம்பித்து பின்னர் என் பொழுது போக்கான ஓவியங்களுக்காக சித்திரமும் கைப்பழக்கம் என்கிற வலைப்பூவும் வடிவம் பெற்றன. இதைத் தவிர விளம்பரங்களில் காணப்படும் அபத்தங்களை சுட்டிக்காட்ட ஒரு வலைப்பூவையும் ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன். 

இப்படியே நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. இணையத்தின் வாயிலாக பல பெரிய பதிவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது எனது பாக்கியம். அவர்களில் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு இன்னமும் எனக்கு வரவில்லை. ஆனால் இடையில் இரண்டு வருடங்களாக எழுத இயலாத சூழ்நிலையில் இருக்கும் போது தனி மடல்களில் அவர்களின் தனிப்பட்ட விசாரிப்பு நெஞ்சைத் தொடுவதாகும். இணையம் என்பதும் எழுத்து என்பதும் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அப்போது புரிந்தது.

அன்பின் சீனா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது தயக்கமாகவே இருந்தது. படிக்காம ஊர் சுத்திகிட்டு இருக்கிறவன் கிட்ட நாளைக்கு பரீட்சைன்னு சொன்னா எப்படி இருக்கும் !  ஏதோ என்னால் முடிந்ததை எழுதுறேன். வலைப்பூ ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து பாஸ் பண்ணி விட்டுடங்க _/\_.  :)

எனக்கு எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதன் காரணமாய் உருவானது தான் தேன்சிட்டு  என்னும் வலைப்பூ வளையம். இதில் ஒவ்வொரு ஆசிரியரும் தம் வலைப்பூவை இணைத்துக் கொண்டால் அது புது வாசகர்கள் நம் வலைப்பூவுக்கு வர ஒரு வழி வகுக்கும் என நினைத்து உருவாக்கப்பட்டது. இது alt-webring dot com வழங்கும் இலவச சேவை. கூகிள் ரீடர் போல இவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம் என்பது வேறு விஷயம். சில பதிவர்கள் அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி மீண்டும் நிரலை பொருத்தாமல் விடுவதால் சின்ன சின்ன சிக்கல் அவ்வப்போது வருவதுண்டு. உங்களுக்கும் பயன்படுமா என்று பாருங்கள்.

இதைப் போலவே தமிழ் கருவூலம் என்ற பெயரில் கூகிள் விட்ஜெட் செய்து வைத்திருக்கிறேன். இதன் மூலம் பல அரிய தமிழ் பெரியவர்களின் நற்சிந்தனைகளை  வலைப்பூவிற்கு வரும் வாசகர்களோடு எல்லா வலைப்பதிவர்களும் அவற்றை பொருத்தி பகிர்ந்து கொள்ள முடியும். த்ற்போது உலகநாதரின் உலகநீதி,  மதுரை கூடலூர் கிழாரின் முதுமொழி காஞ்சி  மற்றும் தாயுமானவரின் பராபரக்கண்ணி  ஆகியவற்றை அருஞ்சொற்பொருட்கான இணைப்புடனும் வலையேற்றியுள்ளேன். தமிழுக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டால் மிக்க மகிழ்ச்சி தரும். 

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவற்றை அறிமுகப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று வலைச்சரம் அனுமதி அளித்திருக்கிறது. இதை அவ்வப்போது பிறர் பதிவுகளை தொகுக்கும்போது நினைவுக்கு வருபவற்றோடு பகிர்கிறேன்.  கற்கை நன்றே வலைப்பூவில் குறிப்பாக Ching Chow என்று  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்து கொண்டிருந்த கார்ட்டூன் படங்கள்  தமிழில் சினா சோனா வாக வலம் வருவதையும், கர்நாடகத்தில் சாமானியனின் கீதை என்று போற்றப் பெறும் மக்குத்திம்மன் கருத்துகளையும் படித்துப் பார்க்கலாம். 
[மேலே உள்ள இரண்டு இணைப்புகளும் லேபிள் அடிப்படையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து இடுகைகளும் ஒரே சன்னலில் திறக்கும்]  

கபீர்தாஸர் எப்படி என்னிடம் ஒட்டிக் கொண்டார் என்பது இன்றும் நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம். அந்த வலைப்பூவை ஆரம்பித்த போது அதில் நூறு பதிவுகள் எழுதுவேன் என்ற கற்பனை கூட கிடையாது. ஒவ்வொரு கட்டுரையும் எனக்குப் பிடித்தமானதுதான். ஒரு சில கட்டுரைகளை மட்டும் எப்படி பரிந்துரைப்பது? அதற்கு ஒரு வழி தோன்றியது.

கபீர் வலைப்பதிவில் இடுகைகள் சதம் கடந்ததை ஒட்டி சில முன்ணணி வலைப்பதிவாளர்கள் முன் வந்து சிறப்புக் கட்டுரைகளை வழங்கி அதை கௌரவித்தனர். அவைகள் மட்டும் தொகுக்கப்பட்டு அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூலாக பின்னர் வெளியிடப்பட்டது. கட்டுரை ஆசிரியர்களின் வலைப்பூக்களின் பெயர்களும், அவற்றிற்கான இணைப்பும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் ஜீவா வெங்கடராமன், S. கிருஷ்ணமூர்த்தி, ஜீவி, கீதா சாம்பசிவம், கே.ஆர்.எஸ், கவிநயா, YRSK பாலு, சூரி.சுப்புரத்தினம். இவர்கள் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பதிவர்கள். YRSK மட்டும் ஃபேஸ் புக்கில் சுறுசுறுப்பாயிருக்கும் யோகி ராம் சூரத்குமார் பக்தர். இவர்கள் யாவரும் போற்றும் கபீர்தாஸரின் பெருமையை  அன்பின் சங்கமம் என்னும் மின்னூலை தரவிறக்கம் செய்துகொண்டு படித்து மகிழவும்



அறிமுகப் பதிவிலேயே எட்டு பதிவர்கள் !! ( அன்பின் சீனா ஐயா, கணக்கில சேர்த்துக்குங்க :))
இணையத்தில் என் அனுபவம் எப்பொழுதும் மிக பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு வடிகாலாக, நல்ல நட்பு வட்டம் தருவதாக இருந்து வந்திருக்கிறது. இதில் வலைச்சரம் ஒரு முக்கியமான மைல் கல். உங்களில் பலருக்கு என் அறிமுகம் கிடைக்க வழி செய்திருக்கிறது. என் மனமார்ந்த நன்றி.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். இந்த நாள் இனிய நாளாகட்டும்

பின் குறிப்பு:
என் நிறுவனத்தின் கணிணிகள் தனி மின்னஞ்சல்கள் வலைப்பூக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஆகையால் பின்னூட்டங்களுக்கு என் பதிலுரை மிகத் தாமதமாகவே வரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் வாசிக்க...

Sunday, August 25, 2013

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அகிலா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                         : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள்               : 033
இவர் அறிமுகப்படுத்திய பதிவுகள்                  : 067
இவர் பெற்ற மறுமொழிகள்                                  : 216
இவரது பதிவுகளைப் படித்தவர்கள்                  : 1060

அகிலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு கபீரன்பன் அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார். 

இவர் பதிவுலகப் பெயர் கபீரன்பன்-
இயற்பெயர்  உமேஷ்- 
கல்வி  - வேதிப் பொறியியல் முதுகலை ;
உத்தியோகம் - மரபுசாரா எரி எண்ணெய் உற்பத்திக்கான ஆராய்ச்சி, பொறுப்பாளர்,
வாசம் - ஜாம்நகர், குஜராத்
இணையப் பக்கங்களில் பிரசுரம் -ஆங்கிலத்தில் 2001 லிருந்து ஆரம்பம்
தமிழ் வலைப்பூ பிரவேசம் - 2006 - கபீரின் கனிமொழிகள் 
என்கிற தளங்களில் எழுதி வருகிறார்.  

கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் சிறப்பான தமிழாக்கம் கபீரின் கனிமொழிகள் என்கிற தளம். 

நண்பர் கபீரன்பனை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் அகிலா

நல்வாழ்த்துகள் கபீரன்பன்

நட்புடன் சீனா 



மேலும் வாசிக்க...

கோவையிலிருந்து அகிலா – 7

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

விடியலை காணாத ஓர் இரவு
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
....

எழுத்தும் அதன் அழகும் : நவீனம்   
சிந்திக்கும் தன்மையை நுண்ணிய மன உணர்வுகளை தர்க்க ரீதியாக பகுத்தறிவை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதாமல் நளினமாகவும் சுருக்கமாகவும் படைப்பின் புரிதலை அவரவரின் கோணத்தில் கொண்டு வரும் இலக்கியமே நவீனமாகிறது. பின்நவீனத்துவம் தத்துவத்தை சாராமல் மன ஓட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி நவீனத்துவத்தின் வழி சார்ந்திருக்கும்.  

படித்ததில் பிடித்த பதிவுகள் சில...  


கே ரவிசங்கர்

நகைசுவையாய் ஒரு கவிதை ஆறாவது பூதம் இவரது பதிவில்.

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


என்று ஆரம்பித்து அதை அவரின் டெஸ்க்டாப்பில் ஆறாவது பூதமாக்கியதை அழகாய் சொல்கிறார்.

ரவி ஆதித்யா என்னும் இந்த வலைப்பூவில் இவர் எழுதியிருக்கும் அம்மாவின் இழப்பு  என்னும் பதிவு நம் வீடுகளில் சாவின் விளிம்பில் இருக்கும் முதியோரின் நிலையைச் சொல்லிச் செல்கிறது. 



தேவாதிராஜன்

நற்குணங்களை பார்த்து வருவதே காதல் என்கிறார் இதுதான் காதல் என்னும் கவிதையில் மணவை தேவாதிராஜன் வலைப்பூவின் ஆசிரியர்.

அகிம்சையே வெற்றி என்னும் பதிவில் எளிய நடையில் கவிதையாய் நாம் அகிம்சாவாதியாக வாழ வழிச் சொல்லியிருக்கிறார்.


தவறு 

பார்க்க ரசிக்க என்று 
மான் சண்டை
சிங்கங்களின் குங்பூ
புகைபடங்களாய்த் தொகுத்து பதிவாக்கி இருக்கிறார் அறியது வலைப்பூவில்...
எழுத்துக்களின் அணிவகுப்பை மறந்து
கொஞ்சம் இதையும் சுகமாய் வேடிக்கைப் பார்த்தேன் என்பதே நிஜம்...
அருமை... 


மண்டையன்

கலகலப்பாய் இருக்கிறது படிக்க இவரின் கன்னி கணணி அனுபவம் 

மரியான் விமர்சனம், சினிமா துணுக்குகள் என்று இவர் தன் அஞ்சா சிங்கம் வலைப்பூவில் எழுதியிருக்கிறார்.


அவை நாயகன் 

இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில் 

நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும்  எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு...


நன்றிகள் அனேகம் :

இந்த வாரம் முழுவதுமாய் ஆசிரியர் பொறுப்பேற்று எத்தனையோ வலைப்பூக்களைப் படித்து தமிழோடு வாழ்ந்திருக்கிறேன். 

பதிவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிகழ்வை, அனுபவத்தை, அறிவுரையை இந்த சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். 

இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பர்களே...
படிப்பதுவும் எழுதுவதும் நம் மொழியை அழகாக்கும்...





நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கு 
என்னை தமிழ் சுவாசிக்க வைத்ததற்கு... 




மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது