20.05.2013 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday, May 22, 2013

சொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :(


    சில முக்கியமான அறிவியல் பதிவுகளைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு இருந்தேன். பலர் பாராட்டினாலும், சிலர் கிண்டல் செய்து இருந்தனர். சம்பந்தப்பட்ட பதிவர்களை அல்ல...என்னை..

அவர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என மெயில் அனுப்பி இருந்தார் ஒரு நண்பர்.

இந்த பிரச்சினைக்காகத்தான் நான் அறிமுகம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் , அனுபவ பகிர்வு என சொல்லி வருகிறேன். எனக்கு பிடித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு அது புதிதாக இருக்கலாம் , அறிமுகமாக இருக்கலாம். சிலருக்கோ ஏற்கனவே படித்தவற்றை ரெஃப்ரெஷ் செய்வது போல இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது நல்லதுதானே.


***************************************************

இன்று சில இலக்கியம் / புத்தகம் சார்ந்த பதிவுகளை பார்க்க இருக்கிறோம். ஆனால் இலக்கியத்தில், புத்தக வாசிப்புல் ஈடுபாடு இல்லாத சிலர் இருக்க கூடும். சரி...இன்றைய பதிவில் நமக்கு பயன் இல்லை என இந்த வரியுடன் விலக வேண்டாம். பொதுவான சில பதிவுகள் குறித்தும் என் அனுபவங்களை சொல்ல இருக்கிறேன்.

இந்த டாபிக்க்கும் பிடிக்கவில்லையா... சரி..  அடுத்த பகுதியில் உங்களுக்கு பிடித்த டாபிக்குடன் சந்திப்போம்..வந்ததற்கு இந்த புத்தகத்தை டவுன் லோடு செய்து படித்து மகிழுங்கள்...   நீலகண்ட பறவையை தேடி- படிக்க வேண்டிய நாவல்

இந்த நாவல் குறித்து ஜெய் மோகன்
சமத்துவமும் நீதியும் அமைந்த அமைந்த உலகை கனவுகண்டார் தஸ்தயேவ்ஸ்கி. அழகே உருவான இயற்கையை வேர்ட்ஸ் வர்த். முழுமை சமநிலை கொண்ட வாழ்க்கையை கதே. அவை மானுடனின் கனவுகளே. அக்கனவுகளை நோக்கி ஓடும் பாதையில்தான் அவன் தன் அனைத்துக் கலாச்சார சாதனைகளையும் அடைந்தான். அது எப்போதும் அவனுடைய கண்முன்னால் கைகளுக்கு அப்பால் ஒரு பேரழகுகொண்ட மாயப்பறவையாகப் பறந்துகொண்டிருக்கிறது.
அப்பறவையின் அழகிய படிமச் சித்திரத்தைக் காட்டும் மகத்தான வங்க நாவல் ‘நீலகண்ட பறவையைத் தேடி’

மற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள்...
********************************************************

எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. பெரும்பாலும் தத்துவ நூல்கள் படிப்பேன். ஜெ கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யூஜி கிருஷ்ணமூர்த்தி என்று என் ஆர்வம் இருக்கும். தமிழில் பாலகுமாரன் மட்டும் படித்து வந்தேன். எனக்கு எப்படி இலக்கியம் சார்ந்த பதிவர்கள் மேல் ஈடுபாடு வந்தது என்பதை கொஞ்சம் சொல்லி விட்டு , அவர்கள் பதிவுகளைப்பற்றி சொல்கிறேன்.

சென்னை புத்தககண்காட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் பாஸ்கருடன் சென்று இருந்தேன்.   அந்த நேரத்தில் சாரு நிவேதிதாவும் அங்கு வந்து இருந்தார்.

பாஸ்கருக்கு சாருவுடன் நல்ல பழக்கம். நான் அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

 “ கொஞ்சம் இருங்க..பேசிட்டு வருகிறேன் “ என்றார் பாஸ்கர்.. நானும் வருகிறேன் என சொல்லி விட்டு சாருவிடம் சென்றோம்.

போனோமோ , கை குலுக்கினோமோ... ஆட்டோகிராப் வாங்கினோமா என இருந்திருக்க வேண்டும். ஆனால் விதி வலிது.

அப்போது பிளாக் எழுத தொடங்கி இருந்தேன் ..ஆங்காங்கு சில இலக்கிய வார்த்தைகள் கேள்விப்பட்டு இருந்தேன். அதை வைத்து சாருவிடம் பேசி , ஒரு போஸ்ட் தேத்திவிடலாம் என கணக்கு போட்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“ சாரு...அமைப்பியல் குறித்து உங்க பார்வை என்ன ? “ என கேட்டு விட்டு பாஸ்கரை பெருமையாக பார்த்தேன், பாஸ்கர் முகம் ஏன் கலவரமடைகிறது என புரியவில்லை.

சாரு எதுவும் சொல்லவில்லை. சரி.அந்த தமிழ் வார்த்தை சரியில்லை போல என நினைத்து ஆங்கில வார்த்தைக்கு தாவினேன்.

“ அதுதான் சாரு,  Structuralism ...  அதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் “ என்றேன்.

அப்போதும் பதில் இல்லை..

சரி,,இது வேண்டாம் ..வேறு கேட்போம் என நினைத்து அடுத்த கேள்வி கேட்டேன் “ பின் நவீனத்துவம் என்றால் என்ன “

பதில் கிடைத்தவுடன் மேஜிக்கல் ரியலிசம் , சர் ரியலிசம் பற்றி கேட்க நினைத்து இருந்தேன்.

”பாஸ்கர்...  அந்த ஸ்டாலில் மனுஷ்யபுத்திரன் வந்துட்டாரானு பார்த்துட்டு வாங்க “ என சொல்லி பாஸ்கரை அனுப்பி விட்டு , என்னை இரு ஸ்டால்களுக்கு இடையே இருந்த ஓர் இடைவெளிக்கு அழைத்து சென்றார்.

ஓஹோ..விரிவாக ஏதோ சொல்லப்போறாரு போல... டேப் ரிக்கார்ட் எடுத்து வந்து இருக்கலாமே...சரி..பரவாயில்லை..  பேப்பரில் எழுதிக்கொள்வோம் என நினைத்து கொண்டிருந்த போது அவர் பேச ஆரம்பித்தார்.

“ என்ன படிச்சு இருக்கிறீங்க....  எங்கே வேலை செய்றீங்க..”

சொன்னேன்.

“ உங்களுக்கெல்லாம் யாரு வேலை கொடுத்தது... யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கேள்வி கேட்குறீங்க...டெண்டுல்கரிடம் போய் , கிரிக்கெட் என்றால் என்ன.. ஸ்ட்ரைட் டிரைவ் என்றால் என்ன என்றா கேட்பது? இதையெல்லாம் ஏற்கனவே தெரிந்து வைத்துக்கொண்டுதான் அவரை கேள்வி கேட்கவே போக வேண்டும்..கேட்க வேண்டும் என எதையாவது கேட்க கூடாது”

இபப்டி ஆரம்பித்து கொஞ்ச நேரம் “இனிமையாக” பேசினார்..


மனுஷ்யபுத்திரன் இருக்கிறாரா என பார்த்து விட்டு வருவதற்கு அரை மணி நேரம் எடுத்து கொண்டு கடைசியில் அவர் இல்லை என்றபடி வந்தார் பாஸ்கர்.

“ ஒண்ணுமில்லை பாஸ்..அடுத்து எழுதப்போகும் நாவல் பற்றி கொஞ்சம் பெர்சனலா என்னிடம் பேசினார்..வேறொண்ணும் இல்லை ” என சொல்லி விட்டு கிளம்பினேன்.. நான் சொன்னதை பாஸ்கர் நம்பியதாக தெரியவில்லை.

**************************************************

   பாஸ்கரை அதன்பின் வேறொரு சந்தர்ப்பத்தில் பெசண்ட் நகர் பீச்சில் சந்த்தித்தேன். பேசி விட்டு என்னை டிராப் செய்வதாக சொன்னார். வழியில் அவர் சாருவை சந்திக்க வேண்டி இருந்தது. என்னை சும்மா ஒரு பேச்சுதுணைக்கு அழைத்து போனார்,

வேறு சிலரும் வந்து இருந்தார்கள். இலக்கியம் , புத்தகங்கள் என பேசிக்கொண்டு இருந்தார்கள்.  ஏற்கனவே அனுபவம் இருந்ததால் , வாயை திறக்காமல் கேட்டுகொண்டு இருந்தேன். அப்போது எழுத்தில் பாலுணர்வு குறித்து ஒரு பேச்சு வந்தது.

அதற்கு முதல் நாள் , வெட்டியாக வீட்டில் அமர்ந்து இருந்தபோது பொழுது போகவில்லை. கூகிளில் சிலவற்றை சர்ச் செய்து கொண்டு இருந்தேன். என்ன சர்ச் செய்தேன் என சொல்ல வலைச்சர விதிகள் அனுமதிக்காது.

அப்போது தற்செயலாக ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. யார் எழுதியது , என்ன தலைப்பு என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு வாக்கியம் மட்டும் பளிச் என இருந்தது

செக்ஸ் என்பது ஒரு வகை மரணம் என்பது போன்ற வரி மனதில் பதிந்து விட்டது.

இப்போது பாலுணர்வு டாபிக் எழும் நிலையில் , அந்த வரியை எடுத்து விட்டேன்.  செக்ஸ் என்பது மரணம் போன்ற ஒரு நிலை என்கிறார்களே.. அப்படி என்றால் அது தியானம் போன்ற நிலை என்கிறார்களா  அல்லது அழிவுடன் ஒப்பிடுகிறார்களா என்றேன்.

சாரு என்னை வியப்புடன் பார்த்தார். “ ழார் பத்தாய் சொல்வதை பற்றி கேட்கிறீர்கள்.. ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.இதைத்தான் என் நானோ சிறுகதையில் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு அதில் பதில் இருக்கும்.இல்லை என்றால் கேளுங்கள் “ என்றார்.

நான் ழார் பத்தாயை கண்டேனா.  யாழ் ஒலியை கண்டேனா...  நெட்டில் வேறு எதையோ தேடினேன். இது கண்ணில் பட்டது. அவ்வளவுதான்.ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் வந்து விட்டேன்.

 நானோ கதை, ழார் பத்தாய் ,  ரோலண்ட் பார்த் பற்றியெல்லாம் அடுத்த முறை அவரிடம் விரிவாக பேசினால்தான் , முன்பு பட்ட சொற்காயம் ஆறும் என தோன்றியது.

அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்திக்கும் சூழ் நிலை இருந்ததால் , அதற்குள் கொஞ்சம் ரெடியாகி அவரை இம்ப்ரஸ் செய்ய விரும்பினேன்.

 இதற்காக  நெட்டில் அமர்ந்து  zhaar paththai, laar paththaay. zaar baththaay. என அடித்து பார்த்து ஒன்றும் பயனில்லை.

இது வேலைக்காகாது என நினைத்தபோதுதான் லக்கிலுக் யுவா நினைவுக்கு வந்தார்.

முன்பே சொன்னது போல , நான் பதிவுலகை கவனிக்க ஆரம்பித்தபோது எழுதிக்கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர் அவர். அவரே மறந்து போய் இருக்க கூடிய ஒரு கட்டுரை லக்கிலுக் யுவாவின் ஒரு பழைய போஸ்ட்

அவருக்கு அனானியாக பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். மெயில் அனுப்பி இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் நன்றாக ரெஸ்பாண்ட் செய்வார் என்பதால் அவருக்கு போன் போட்டேன்.

”  யுவா,,, சாருவின் நானோ கதை குறித்து உங்களோட விரிவான பார்வையை எனக்கு எழுதி அனுப்புங்க.. என் பிளாகில் பப்ளிஷ் பண்ண ஆசைப்படுறேன். உங்க கட்டுரை என் பிளாக்கில் வந்தா , எனக்கு சந்தோஷமா இருக்கும். ”

அவர் உற்சாகமாக பேசினார். கண்டிப்பாக செய்வதாக சொன்னார்.

அவர் எழுதினால் அதை படித்து விட்டு  , என் கண்டுபிடிப்பு போல காட்டிக்கொள்ளலாம் என்பதே என் திட்டம்.

அதன் பின் பல முறை பேசி இருப்பேன். ஒவ்வொரு முறையும் செய்வதாக சொல்வார். ஆனால் எழுதியபாடில்லை.

பிறகுதான் தெரிந்தது. அவர் முன்பு போல இல்லை. பத்திரிக்கையாளராக ஆகி விட்டதால் மிகவும் பிசி ஆகி விட்டார். அதிலும் நான் பேசிய நேரத்தில் கவர் ஸ்டோரி பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.. நான் நேர காலம் புரியாமல் அவரை டார்ச்சர் செய்து இருக்கிறேன்.

அதுவும் நல்லதாக போய் விட்டது.   நானாக ( பதிவுலகத்தின் துணையோடு ) பல புத்தகங்கள் தேடி படிக்க ஆரம்பித்தேன்.  குறிப்பாக சாருவின் அனைத்து புத்தகங்களையும் தேடி தேடி படித்தேன். ஜெயமோகன் , எஸ் ரா,  இ பா, அசோக மித்திரன் ,காப்ரிலா மார்க்கேஸ் , ழார் பத்தாய் ,சார்த்தர், காஃப்கா , தோப்பில் முகமது மீரான், சிங்காரம், சி சு செல்லப்பா என ஓர் உலகம் கண் முன் விரிந்தது.

சமீபத்திய சில ஆண்டுகளில் நான் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை , அதற்கு முன் என் வாழ்வில் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையை விட அதிகம்.


அதற்கு முக்கிய காரணம் பதிவுலக நண்பர்கள்தான், அவர்கள் மூலம்தான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது... விவாதங்கள் நடத்த முடிந்தது.

படிக்க படிக்கத்தான் , சாரு என் மீது கோபப்பட்டது நியாயம்தான் என்பது புரிந்தது.  அதன் பின் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். கோபப்படும் வகையில் நடந்தது இல்லை.

********************************************

அவர்களில் முக்கியமானவர் நிர்மல் .  அவர் பதிவுகளில் பல விஷயங்கள் கற்று இருக்கிறேன். சில சமயம் இரவு வெகு நேரம் எங்கள் விவாதம் நீளும்.

பின் நவீனத்துவம் , பிரதியை கட்டுடைத்தல், இருத்தலியம் என எல்லாவற்றை பற்றியும் பேசுவார்.

இவரிடம் நான் ரசிப்பது இவர் தமிழை. பேசுவது போலவே எழுதுவார், அதுவும் வட்டார மொழியில்.  வட்டார மொழியில் உலக இலக்கியத்தை பேசுவது ஓர் இனிய அனுபவம்.

அவரது சில கட்டுரைகள் ..உங்கள் பார்வைக்கு..

நிர்மல் கட்டுரை-1

நிர்மல் கட்டுரை 2

life-of-pi நச் பார்வை

********************************************

புதிய பதிவர் , பழைய பதிவர் என்ற பிரிவினை கோட்டை கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலர் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

இப்போதுதான் எழுத ஆரம்பித்தது போல இருந்தது. பார்த்தால் நாவலாசிரியர் ஆகி விட்டார்.

எந்த பாணியிலும் இல்லாத புதிய பாணியில் எழுதி இருக்கிறார். விரிவாக பிறகு எழுதுவேன்.

அவர் எழுத்தைப்ப்பற்றியும் , அவர் சிந்தனைப்போக்கை குறித்தும் ஒரு ஐடியா இந்த பதிவில் கிடைக்கும்..
நன்றிக்கான தருணம்

அவர் நாவல் குறித்த ஒரு விமர்சனம்


****************************************************************

பால கணேசன்.. இவரும் நான் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்.

வித்தியாசமான சிந்தனைகள் , படைப்பாற்றல் கொண்டவர்.

மேலே நான் சொன்ன நாவலை திட்டி இவர் எழுதி இருக்கிறார். அப்படி திட்டுவதை எவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார் என பாருங்கள்.சிம்ப்ளீ சுப்பர்ப்.

அவர் கருத்துகள் சிலவற்றை நான் ஏற்கவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் ரசிக்கிறேன்

இந்த அளவு என்னை எந்த புத்தகமும் நோகடித்ததில்லை !!!!


சரி,,எப்படி எழுத வேண்டுமாம்...அவரே சொல்கிறார்

எழுத்தாளன் ஆவது எப்படி


***********************************************************
மரப்பசு என்ற தளத்தை நடத்தும் விஜய் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். கணக்கெடுத்து பார்த்தால் , பதிவுலகில் மெக்கானிக்கல்தான் அதிகம் இருக்கும் என தோன்றுகிறது.

இவர் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் . சிறிய வாக்கியங்களில் பெரிய விஷ்யங்களை சொல்லி விடுவார்.

இந்த பட்டாம்பூச்சி கதை அவரது மாஸ்டர் பீஸ் என்பேன். படித்து பாருங்கள்

ஒரு வித்தியாசமான கதை


***************************************************

படித்து முடித்தவுடன் , வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நம்பி ஒரு ஊருக்கு செல்ல முடியும் என்றால் அது கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர். நான் கொஞ்ச நாள் கோயமுத்தூரில் பணி ஆற்றி இருக்கிறேன். மறக்க முடியாத இனிய ஊர்,

அரசு நிறுவனங்களோ , அரசு ஆதரவோ இல்லாமல் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளார்களின் கூட்டு முயற்சியால் முன்னேறிய ஊர்கள் இவை.


ஆங்கிலத்தில் பிசினஸ் சார்ந்த புத்தகங்கள் ஏராளம் வருகின்றனவே.,.இந்த ஊர்களை வைத்து எவ்வளவோ எழுதலாமே ,,ஏன் வரவில்லை என்று பல காலம் யோசித்து இருக்கிறேன்.
எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டாலர் நகரம் என்ற அற்புதமாக வந்து இருக்கிறது.

அந்த புத்தகம் குறித்த ஒரு விமர்சனம்...


வீடு சுரேஷ்குமார் விமர்சனம்

இவரைப் பற்றி விரிவாக பிறகு என் கருத்தை சொல்கிறேன்.. இப்போதைக்கு இந்த புத்தகம் மீது மட்டும் கவனம் செலுத்துவோம்

புத்தக வெளியீட்டு விழா


இன்னொரு விமர்சனம்


*****************************************************

 வலைப்பதிவை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தும் சாத்திய கூறுகளை முயன்று பார்க்கும் ஒரு பதிவு எனக்கு மிக மிக பிடித்து இருந்தது.

ஒரு கட்டுரை , அதற்கேற்ற பாடல்கள் என ஒரு தேர்ந்த பிரண்டேஷன் போல இருந்தது.

பட்டனை பிரஸ் செய்யுங்கள்..கட்டுரை முடிவதற்குள் லோடு ஆகி விடும் என்ற அறிவிப்பு பிடித்து இருந்தது. end user இடத்தில் இருந்து சிந்தித்து உருவாக்கப்படும் சேவைகள் , பொருட்க்ள்தான் வெல்ல முடியும்.

இதோ அந்த பதிவு..

படித்தே ஆக வேண்டிய கட்டுரை


இதை படைத்த திண்டுக்கல் தனபால் சிறப்பாக எழுதுகிறார். ஆனால் ஏன் வெகு குறைவாக எழுதுகிறார் என தெரியவில்லை. இவரைபோன்ற நேர்மறை சிந்தனையாளர்கள் குறைவாக எழுதுவதும் , வெறும் பரபரப்புக்காக எழுதுபவர்கள் 24 மணி நேரமும் எழுதுவதும் ஒரு முரண்

*********************************************************

எவ்வளவு முயன்றாலும் என்னால் இப்படி ஒரு போஸ்ட் போடவே முடியாது என மலைக்க வைத்த போஸ்ட் இது..அடேங்கப்பா... மிக மிக விரிவான போஸ்ட்,,

மிக நீளமாக இருந்தாலும் , ஒரு வரியைக்கூட ஸ்கிப் செய்ய இயலாது. சிந்தனை , நகைச்சுவை , ஆன்மீகம் என ஃப்லோ செமையாக இருந்தது.  கடைசி வரி வரை தொய்வில்லாமல் ஒரு ஜோக்குடன் முடிந்தது சிறப்பு..


மலைக்க வைத்த போஸ்ட்

இதை படைத்தவர் சமுத்ரா,,,பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் இருக்கிறார்,  சாஃப்ட்வேர் துறையில் இருந்து கொண்டு இவ்வளவு ஆழமாக எழுத முடியும் என்பது வியப்பாக இருக்கிறது..

*****************************************

   நிகழ் காலம் என்ற இந்த வலைப்பூ அறிவு சார்ந்த தளத்தில் இயங்குகிறது.

இதில் இந்த பதிவை அனைவரும் படித்தே ஆக வேண்டும்


ஆண்களுக்கான பெண்களின் படம்

பெரும்பாலும் மூளை சார்ந்த விஷ்யங்களாக இருந்தாலும், உணர்வு சார்ந்த இந்த பதிவு மனதை கவர்ந்தது

இனிய அணிலே !!

***********************************************

இவர் பல ஆண்டுகளாக எழுதி வரும் சீனியர் பதிவர்.  இவரிடம் நான் ரசிப்பது சமையல் குறிப்புகளை. வெறும் சமையல் குறிப்பை சொல்லி செல்லாமல் , பின்னணி தகவல் கொடுக்கும் பாணி அட்டகாசம்

உதாரணமாக இதை பாருங்கள்

சூப்பர் சமையல் ..சூப்பர் எழுத்து

இது போன்ற சமையல் குறிப்புகள் ஆண்களுக்குதான் அதிகம் பயன்படுகிறது என்பது பலருக்கு தெரியாது...  காரணம் , பெண்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே. ஆண்கள் திடீர் என சமைக்க வேண்டிய நிலை வரும்போது , நெட்டில் சர்ச் செய்து , இது போன்ற பதிவுகளால்தான் சமாளிக்கிறார்கள்..

************************************************************


அடுத்து சில முக்கிய கான்செப்டுகளைப் பற்றிய ஒரு பார்வை..




************************************************************


பின் நவீனத்துவம் குறித்த முக்கிய கட்டுரை


****************************************************

இருத்தலியல்
இருத்தலியல் - மேலும்



****************************************************

சர் ரியலிசம்

*************************************************

கட்டுடைத்தல் எனும் அற்புதம்

ஒரு முக்கியமான நாவல் குறித்து முக்கியமான கட்டுரை

****************************************************************


கவிஞர் றியாஸ் குரானாவின் எழுத்துகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு சாம்பிள் கொடுக்கிறேன். படித்து பாருங்கள்.

கவிதையின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்ப்பவர் இவர்.


நான் லீனியர்


*******************************************************


இலக்கிய ஆர்வம் கொண்டு எழுதும் பதிவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்... இன்னொரு கட்டுரையில் மேலும் சொல்கிறேன். இதற்கு மேல் எழுதினால் உங்களால் படிக்க முடியாது.


 நாளை கொஞ்சம் ஈசியான டாபிக்கை பார்த்து விட்டு , அதன் பின் இன்னொரு சவாலான டாபிக்கிற்கு செல்லலாம் என நினைக்கிறேன்.

ஓகே யா?

( அலைகள் ஓய்வதில்லை )
மேலும் வாசிக்க...

Tuesday, May 21, 2013

என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவரும் , சில அறிவியல் பதிவுகளும்


    நெட் , மொபைல் போன்றவற்றின் மீது போன தலைமுறையினர் சிலருக்கு பெரிய மரியாதை இல்லை. நேர விரயத்துக்குத்தான் இவை உதவுகின்றன என அவர்கள் நினைக்கிறார்கள்.

    இன்னும் சிலர் இணையம் வருகையால் தமிழ் மெல்ல அழிவதாகவும் நினைக்கிறார்கள்.

   ஆனால் என்னை பொருத்தவரை இணைய வருகை , தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்வேன். கணினி , இணையம், வலைப்பூ , இடுகை , பின்னூட்டம் என சென்ற தலைமுறை கேள்விப்பட்டிராத தமிழ் சொற்கள் வெகு இயல்பாக பயன்பாட்டில் உள்ளன.

 ஆன்மீகம் , நாத்திகம் , அரசியல் , திரைப்படம்  என பல துறைகளிலும் இன்ஃபார்மேட்டிவாக பல விஷயங்கள் கிடைக்கின்றன. நான் வலைப்பூக்கள் உதவியுடன் தான் , கம்ப்யூட்டர் செலக்ட் செய்து வாங்கினேன். அதே போல பல டெக்னிக்கல் விஷ்யங்கள் வலைப்பூக்களிலேயே கிடைக்கின்றன. இதில் சினிமா விமர்சனங்கள் பார்த்து விட்டுதான் , சினிமா பார்க்கலாமா என முடிவு செய்கிறேன்.

அதே போல ஒவ்வொரு துறையிலுமே சிலர் முக்கிய பங்களிப்பாற்றி வருகிறார்கள். ஓய்வு பெற்ற பேராசியர்கள் , அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் சிலரும் பங்களித்து வருகிறார்கள்.   அருமையாக அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி வருகிறார்கள்.

அப்படி சிறந்த பதிவுகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம். கொஞ்சம் இலக்கியம் பற்றி பார்த்து விட்டு அதன் பின் அறிவியல் , தொழில் நுட்ப பதிவுகளை பார்க்க இருக்கிறோம்.

இவர்களில் சிலர் பல ஆண்டுகளாக எழுதி வருபவர்கள். அவர்களையும் இங்கே குறிப்பிட காரணம் , அவர்களது பழைய பதிவுகளை மீண்டும் அனைவரும் மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்பதுதான்.  பழைய இடுகைகளாக இருந்தாலும் , அந்த காலத்தில் நான் ரசித்தவை,,,பயன்பெற்றவை... இப்போதும் பயன்படும் , அதுபோல எழுத ஊக்கம் கிடைக்கும் என்பதால் பழையவை சிலவற்றை தருகிறேன்.


**************************************************************

  சில ஆண்டுகளுக்கு முன், நான் முதல் முதலில் தற்செயலாக சிலரது பதிவுகளை பார்க்கையில் ஆச்சர்யமடைந்தேன். தமிழில் இணையத்தில் எழுதுவது என்பதே ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

அப்போது உண்மை தமிழன் , கேபிள் சங்கர் , லக்கிலுக் , அதிஷா , டோண்டு ராகவன் , செந்தழல் ரவி , ஓசை செல்லா , நர்சிம் , ஆதி , பரிசல்காரன், குசும்பன் போன்ற பலர் பரபரப்பாக எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது எனக்கு கூகுள் ஐ டீ ஏதும் இல்லை என்பதால் அனானியாக கமெண்ட் இடுவேன். அவர்களில் சிலர் அதை வெளியிட மாட்டார்கள். அப்போது ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டு இருந்ததால் , அனானி பின்னூட்டங்களை வெளியிட தயங்கினார்கள் என தெரிய வந்தது.

எனவேதான் ஒரு ஐ டி உருவாக்க முடிவு செய்தேன்..ஏற்கனவே என்னை பலரும் பிச்சைக்காரனாக ட்ரீட் செய்ததாலும் , உண்மையிலேயே பிச்சைக்காரன் தான் என்பதாலும் இந்த பெயரிலேயே களத்தில் இறங்கினேன்.

அப்போது என்னை கவர்ந்த எழுத்துகளில் ஒன்று நர்சிம் அவர்களின் எழுத்து. குறிப்பாக அவர் கவிதைகளும் , குறுந்தொகை விளக்கங்களும் அருமையாக இருக்கும்.

இதை படித்து பாருங்கள்.

குறுந்தொகை : காதலனின் தோளா அறுக்கும் வாளா?


இன்னொரு அற்புத பாடல்


இந்த நிலையில் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கினார். பலரும் அவரை விமர்சித்தனர். சிலர் ஆதரவளித்தனர்.

நானும் அவர் தவறு செய்ததாக கருதினேன். அவரை விமர்சித்து எழுதலானேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி விமர்சித்தேன்.

அதன் பின் யோசித்தபோது , என்னுள் ஏன் இவ்வளவு கோபம் , வன்மம் என திகைத்தேன். இது நல்லதல்லவே என மன சாட்சி சுட்டி காட்டவே அந்த பிரச்சினையில் இருந்து மெல்ல விலகினேன். மறந்தும்போனேன்.


பதிவர்கள் ஆதிமூல கிருஷ்ணனும் , பரிசல்காரனும் ஒரு சிறுகதை போட்டி நடத்தினார்கள். அதில் எனக்கு பரிசு கிடைத்தது, சுய தம்ப்பட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, அந்த சுட்டிகளை இங்கு தர இயலவில்லை.

தொடர்ந்து பல நண்பர்கள் மெயிலிலும் , போனிலும் வாழ்த்து சொன்னார்கள். புதிய எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. யாரோ ஒருவர் பேசினார்.. நான் கேட்டிராத குரல்.

வாழ்த்துகள்.. நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

சார்... நீங்க யாரு... குரல் கொஞ்சம் அடையாளம் தெரியல..என தயங்கிவாறு கேட்டேன். யாரவது நெருங்கிய நண்பர் அழைத்து , குரல் தெரியாமல் போய் விட்டதா என்ற குழப்பம்.

எதிர் முனை சிரித்தது.. என்னை உங்களுக்கு பிடிக்காது...ஆனால் உங்களை எனக்கு பிடிக்கும்..அதனால்தான் அழைத்தேன் என்றார் அவர்.

உங்க பேர் ? என்றேன்,

நர்சிம் என்றார் அவர்.

அப்படியே ஆடிப்போய் விட்டேன்.

அவர் எனக்கு எந்த கெடுதியும் செய்ததில்லை. நானாக போய் அவரை புண்படுத்தினேன். நியாயப்படி நான் வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் என்னால் அவருக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை என்ற போதிலும் அவராக இறங்கி வந்து பேசியது மறக்க முடியாத ஒன்று.

அவர் பெருந்தன்மை முன் நான் சிறியவனாகிப் போனேன்.

அதன் பின் பல பேச்சுகள்..சம்பவங்கள்..

அந்த கால கட்டத்தில் வெளிவந்த நந்தலாலா படம் குறித்த ஒரு விவாதம்..

ஒரு சூடான விவாதம்

   அவர் இப்போது எழுதுவதில்லை என்ற போதும் , அவர் எழுத்துகள் பயனுள்ளவை என்பதால் இங்கு பகிர்கிறேன். அந்த காலத்தில் அவர் பயங்கர பாப்புலர். ஆனால் புதிதாக வருபவர்கள் சிலருக்கு ஓர் அறிமுகமாக இருக்க கூடும் என நினைக்கிறேன்..

    *******************************************************

சோவியத் யூனியன் யுகத்தில் அழகு தமிழில் பல நல்ல அறிவியல் புத்தகங்கள் வெளிவந்தன. இன்று சோவியத் யூனியம் இருந்து இருந்தால் இன்றைய அறிவியல் யுகத்தில் கலக்கலாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் அவ்வப்போது உண்டாகும்.

இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பதிவுகள் அவ்வப்போது வருகின்றன.

இதில் கணினி , சாஃப்ட்ஃபேர் , இணையம் , தகவல் தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வருகின்றன. பலர் சிறப்பாக செயல்படுகிறார்கள். சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்கள்.

ஆனால் இயந்திரவியலில் பதிவுகள் குறைவுதான். ஆயினும் சிலர் எழுதி வருவது ஆறுதல்.

பதிவர் செங்கோவி இயந்திரவியலை அழகாக விளக்க கூடியவர். நான் கேட்டுக்கொண்டதற்கினங்க ஒரு முறை ஒரு கட்டுரை எழுதினார்.

அதை தவிர நிறைய எழுதி இருக்கிறார். அதில் மிக சிறந்தது என நான் கருதுவது பைப்பிங் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள்தான், மிக சிறப்பாக இருந்தது. பயன்  தரத்தக்க வகையில் இருந்தது,.

படித்து பாருங்கள்

குழாயியல் - கட்டுரை தொடர்


பொறியியல் துறையின் தாய் என இயந்திரவியலை சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அதை கரடுமுரடான பிரிவாக நினைக்கிறார்கள். அந்த பிரிவில் பெண்கள் யாரும் சேருவதும் இல்லை. அந்த துறையில் வேலை செய்யவும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்.. எந்த துறையில் வேலை செய்பவர்களைக்கூட அவ்வளவாக விரும்புவதில்லை.

வறட்சியான துறையாக மற்றவர்களால் கேலியாக பார்க்கப்படும் பிரிவு இது.ஆனால் இதை முறையாக விளக்கினால் , எடுத்து கூறினால் இதை விட சுவையான சப்ஜெக்ட் உலகிலேயே கிடையாது.

தமிழ் வாசி பிரகாஷின் இந்த இடுகையை பாருங்கள்..இவர் இயந்திரவியலில் பல தொடர்கள் எழுதி இருக்கிறார்..எழுத இருக்கிறார்..ஆயினினும் கீழ்கண்ட இந்த இடுகை something great..

இனிது.இனிது,,,இயந்திரவியல்

தினமணியில் செய்தி ஆசிரியராக இருந்த ராமதுரை அறிவியலுக்காகவென்றே ஒரு தளம் நடத்தி வருகிறார். அருமையான கட்டுரைகள் தருகிறார்.  தொடர்ந்து வாசிப்பது நல்லது.

எவரெஸ்ட் உச்சியை தொடுவதை சாதனை என்கிறோம். நம்மால்  நெருங்க முடியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறது..என்ன அது,...? படித்து பாருங்கள்.

மனிதனால் நெருங்க முடியாத இடம்

அருண் நரசிம்மனால் பல ஆண்டுகளாக ஒருவலைத்தளம் நடத்தி வருகிறார். சுவையாக , எளிமையாக , அழகு உதாரணங்களுடன் அறிவியலை சொல்வது இவர் பாணி..

பாம்புக்கு காது உண்டா என்ற ஆராய்ச்சியை படித்து பாருங்கள்

பாம்புக்கு காது கேட்குமா?

முழுக்க முழுக்க அறிவியலுக்காகவென்றே இயங்கும் இன்னொரு தளம்.
அணு சக்தியைப்பற்றிய தொடரை படித்து பாருங்க

அணு சக்தி வரலாறு


இன்னும் நிறைய இருக்கின்றன,... அடுத்தடுத்து பார்க்கலாம்.


அடுத்த பகுதியில் இலக்கியம் கொஞ்சம் பேச இருக்கிறோம்.

இதில் நர்சிம் பற்றி பார்த்தோம். அடுத்த பகுதியில் லக்கி லுக் யுவாவுடனான ஓர் அனுபவம். பதிவராக இருந்தபோது பாசமாக பழகிய அவர், பத்திரிக்கையாளர் ஆனதும் எப்படி மாறினார்... அதனால் என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனையை பார்க்கபோகிறோம்.

மேலும் இலக்கியம் சார்ந்த பதிவர்கள் , பதிவுகள் பார்த்து விட்டு , ஆங்காங்கு சில பல்சுவை பதிவர்களையும் பார்க்க இருக்கிறோம்..

( பயணங்கள் முடிவதில்லை ) 
மேலும் வாசிக்க...

Monday, May 20, 2013

சில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்


பல்லாயிரம் அடி உயரமுள்ள மலை மீது ஏறவேண்டுமானாலும் , சில நூறு அடிகள் தூரமுள்ள பயணம் என்றாலும் , நாம் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரே ஒரு சின்ன அடிதான் - ஜப்பானிய பழமொழி



  எழுத்தில் கில்லாடிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், பதிவுலக சக்கரவர்த்திகள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று திறம்பட தம் பணியை செய்து இருக்கிறார்கள்.  அவ்வப்போது என்னைப்பற்றியும் சிலர் எழுதி இருக்கிறார்கள்.

அவர்கள் வரிசையில் ஒரு சாதாரண பிச்சைக்காரனாகிய எனக்கு இந்த பொறுப்பு அளிக்க சீனா அய்யாவும் , தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் முன்வந்தபோது , நான் பிகு எல்லாம் செய்யவில்லை. உடனே இந்த பொறுப்பை மனமுவந்து ஏற்று கொண்டேன்.

அதற்கு காரணம் இருக்கிறது.

செய்தி தாள்களை பார்க்கிறோம். கொலை , கொள்ளை என வருகிறது..இந்த சம்பவங்கள் நடப்பது உண்மைதான், அது செய்தியாவதும் நியாயம்தான்.

ஆனால் உலகில் கெட்ட சம்பவங்கள் மட்டுமே நடப்பதில்லை. எத்தனையோ நல்ல செயல்கள் , பணிகள் , தொண்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அதைப்பற்றியெல்லாம் செய்திகள் வருவது அபூர்வம்.


அதாவது நமக்கு யாராவது ஒரு தீமை செய்து விட்டால் , பார்ப்பவர்களிடம் எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறும்.  ஆனால் நன்மை செய்வர்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வது இருக்கட்டும். நன்மை செய்தவருக்கு நன்றி சொல்வதே குறைவுதான்.

இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

யார் இந்த பாதகத்தை செய்தது.. அவர்கள் தேட அவசியம் இல்லாமல் அந்த பாவி தானே முன் வந்து மக்கள் முன் சரணடைந்து விட்டு சொன்னான்.

“  எனக்கு மரண தண்டனை கொடுப்பீர்கள் என நன்கு அறிவேன். எனக்கு கவலை இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை , கிரேக்க வரலாற்றை சொல்லும்போதெல்லாம் என பெயரும் இடம் பெறும் அல்லவா..  அந்த சிலையை பற்றி சொல்லும்போதெல்லாம் என் பெயர் சொல்லப்படும் அல்லவா ..அது போதும். “ என்று சொன்னான் ( அவன் எண்ணம் ஈடேறக்கூடாது என்பதற்காக அவன் பெயரை வெளியிடாமல் ரகசியம் காக்க முயன்றார்கள்.எப்படியோ அவன் பெயர் வெளிவந்து விட்டது, ஆனால் இறையன்பு தார்மீக அடிப்படையில் அவன் பெயரை வெளியிடவில்லை.  நானும் கூகிள் செய்து பெயரை வெளியிடாமல் தவிர்த்து இருக்கிறேன் )

இந்த சம்பவத்தை சொல்லி இறையன்பு சொல்கிறார்/ “ தீமை செய்வதுதான் ஹீரோயிசம் என்ற போக்கு அன்றே இருந்து இருக்கிறது. எவ்வளவோ க்‌ஷ்டப்பட்டும் அந்த தீயவன் பெயரை மறைக்க முடியவில்லை. ஆனால் அந்த சிலையை வடிமைத்த சிற்பி, முதல் கல்லை கொண்டு வந்த தொழிலாளி பெயரெல்லாம் வரலாற்று வெள்ளத்தில் காணாமலேயே போய் விட்டது. ”


நான் இதை எல்லாம் சொல்ல காரணம் , இணையத்தில் ஆக்கபூர்வமாக பலர் எழுதுகிறார்கள். பதிவர்கள் சிலர், இதற்கென நேரம் ஒதுக்கி , நேர்த்தியாக , பத்திரிகைகளின் தரத்துக்கு நிகராக எழுதுகிறார்கள். அவர்களை ஒரு ரசிகனாக ரசிப்பதுண்டு.

இவர்களில் சிலருடன் எனக்கு நேரடி பழக்கம் உண்டு. சிலர் குடும்பத்துடன்கூட அறிமுகம் உண்டு. அவர்க்ளை நண்பனாக நேசிப்பதுண்டு.

இன்னும் சிலர் நேரடி பழக்கம் இல்லாவிட்டாலும் , மெயில் மூலமோ போன் மூலமோ பேசி தேவையான தகவல்கள் அளிப்பார்கள். சந்தேகங்கள் தீர்ப்பார்கள்.. இவர்களை நிபுணர்களாக மதிப்பதுண்டு,

இப்படி எத்தனையோ பேர்..எத்தனையோ சிந்தனைகள். எத்தனையோ அனுபவங்கள்.

அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களைப்பற்றி அவர்கள் பதிவுகள் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நெடு நாளாக எனக்கு ஓர் ஆசை.

எனவேதான் வலைச்சரம் வாய்ப்பு வந்தபோது உடனடியாக ஏற்றேன். இந்த ஒரு வாய்ப்பில் என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். கொஞ்ச கால இடை வெளிக்கு பின் இரண்டாவது இன்னிங்ஸ் சான்ஸ் தருமாறு வலைச்சர நிர்வாகிகளுக்கு இப்போதே வேண்டுகோள் வைக்கிறேன்.

       இதில் நான் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ய போகிறேன் என சொல்வதை விட , பதிவுகளை பகிர்ந்து கொள்ள போகிறேன் என்றே சொல்ல விரும்புகிறேன்.

   உதாரணமாக என்னை எடுத்து கொண்டால் , பதிவுலகில் மூன்றாண்டுகள் இயங்கி வருகிறேன்,. என் மேல் பேரன்பு கொண்டவர்களும் உண்டு, கடும் வெறுப்பு கொண்டவர்களும் உண்டு.   ஆனால் இதை தாண்டி , என்னை யாரென்றே தெரியாதவர்களும் , என் எழுத்தை படித்தே இராதவர்களும் கணிசமாக உண்டு,

ஆக ஒரு விதத்தில் என்னை சிலருடன் அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை. அதே சமயம் சிலருடன் அறிமுகம் தேவையில்லாத நிலை.

     இது பலருக்கும் பொருந்தும் , குறிப்பிட்ட தளத்தில் இயங்குபவர்களுக்கு , இன்னொரு தளத்தில் இயங்குபவர்களை பற்றி தெரியாத நிலை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் , ஒரு பதிவரை நன்கு தெரியும். ஆனால் அவரது எல்லா எழுத்துகளையும் படித்திருக்க மாட்டோம், ஓரிரண்டு விட்டு போய் இருக்ககூடும். அந்த பதிவுகளை யாராவது சொல்லும்போது அட..படிக்காமல் விட்டு விட்டோமே . நன்றாக இருக்கிறதே என தோன்றும்.

எனவே , நான் எனக்கு பிடித்தவற்றை , படித்தவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்., சிலருக்கு அறிமுகமாக தோன்றலாம். சிலருக்கு பகிர்தலாக தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அனைவருக்கும் வாசிப்பனுபவம் இனிதாக அமையும்.

புதிய பதிவர், பழைய பதிவர் , பெண் பதிவர் , ஆண் பதிவர், திரு நங்கை பதிவர் இந்து பதிவர்,. இஸ்லாமிய பதிவர் , நண்பர்கள் , எதிரிகள் என்றெல்லாம் பிரிக்க போவதில்லை. .   பதிவுகளை மட்டுமே பார்க்க போகிறோம்.

புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதுதான் வலைச்சரத்தின் நோக்கம் .  ஆனால் புதிய பதிவர் என்பதை மட்டுமே தகுதியாக நான் வைக்கப்போவதில்லை. நேற்று எழுத ஆரம்பித்தவர்கூட ஒரு நல்ல விஷ்யம் சொல்லி இருந்தால் , அந்த பேசுபொருளின் அடிப்படையில் அவர் எழுத்துகளை பகிர்ந்து கொள்வேன் என்பதால் , இயல்பாகவே புதிய பதிவர்களையும் நாம் பார்த்து விடலாம்.

பதிவுலகம் எனும் கடலில் மூழ்கி , இலக்கியம் , ஆன்மீகம் , நாத்திகம் , சமூகவியல் , பொருளாதாரம் , இசை என முத்தெடுக்க போகிறோம். இந்த பயணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

*******************************************************************


         என்னை பற்றி சிறிய அறிமுகம். என் வலைப்பூ www.pichaikaaran.com

சிலருக்கு சொல்வதற்கு ஏராளமான விஷ்யங்கள் இருக்கும். அதனால் எழுதுவார்கள். ஆனால் நான் எழுத தொடங்கிய காரணம் கற்பிப்பதற்காக அல்ல. கற்பதற்காக.
ஒவ்வொரு நாளும் கற்கிறேன். ஒவ்வொரு  நபரிடம் இருந்தும் கற்கிறேன். குறிப்பாக சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்களை ஆழ்ந்து படித்து விஷ்யங்களை கிரகிக்க முயல்கிறேன்.

இப்படி கற்றவற்றை பற்றி எழுதும்ப்போது , மேலும் சில அறிமுகங்கள் கிடைக்கின்றன.,குறைகள் சுட்டி காட்டப்படுகின்றன. மேலும் எழுதுகிறேன். மேலும் கற்கிறேன். இது ஓர் இனிய சுழற்சி.

இப்படி அறிவு பிச்சை எடுப்பதால் என்னை சிலர் பிச்சைக்காரன் என அழைக்க தொடங்கி இன்று அதுவே என் பெயராகி விட்டது. எனவே என்னை பிச்சை என்றோ பிச்சைக்காரன் என்றோ அழைக்கலாம். என் எழுத்துலக நண்பர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.


இலக்கியம் , உலக சினிமா என பல விஷ்யங்களை அறிமுகம் செய்து வைத்தது இந்த  நண்பர்க்ள்தான்.

 நான் பார்த்த சில படங்களில் இரு உன்னத படங்களை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

*************************************************************8

காதல் என்பது விட்டு கொடுத்தல் , எந்த நிபந்தனையும் இன்றி என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

காதலின் வெற்றி என்பது திருமணமோ , ஊர் சுற்றலோ , கிளர்ச்சியோ அன்று. காதல் என்பதே காதலின் வெற்றி. காதலிக்க தெரிந்தாலேயே , அன்பு செலுத்த தெரிந்து விட்டாலேயே போதும் , வாழ்க்கை வெற்றி பெற்று விட்டது. அந்த காதல் மூலம்வேறு எதுவும் அடைய வேண்டியதில்லை. காதல் தன் அளவில் பூரணமானது என்பதை சொல்லும் அ ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் .


காதலா- காமமா? அலசி ஆராயும் வேற்று மொழி படம் ***********************************************************
தான் மணம் வீசினால் , எல்லோரும் பாராட்டுவர்கள் என நினைத்து ஒரு ரோஜா மணம் வீசுவதில்லை. அதன் இயல்பு  மணம் வீசுவது . இயல்புப்படி அது இருக்கிறது, அதேபோல மகான்கள் , சான்றோர்கள் இயல்பு அன்பு செய்வது. பாராட்டோ , தூற்றலோ அவர்களை மாற்றாது என சொல்லும் வித்தியாசமான படம் இது..




புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்  ஒரு மகான் அற்புதங்கள் செய்ய வேண்டியதில்லை,. மகான் என்பவனே ஓர் அற்புதம்தான்.


நான் தீயாக இருந்திருந்தால் எரித்து இருப்பேன், மரம் வெட்டியாக இருந்திருந்தால் வெட்டி இருப்பேன். ஆனால் நானோ அன்பாக இருக்கிறேன். அன்பைத்தவிர வேறு ஏதும் என்னால் செய்ய இயலாது

*********************************************************************
வெறுப்பு , அன்பு என நம் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறும் தன்மை கொண்டது தண்ணீர் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம் உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. ஆகவே , நம் உணர்வுகள் மேல் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லும் சூப்பர் புத்தகம் இது..
உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தண்ணீர்- ஆச்சர்யமளிக்கும் புத்தகம்...


மேலும் வாசிக்க...

Sunday, May 19, 2013

சாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருகிறார்!

வணக்கம் வலை நண்பர்களே....
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சாய்ராம் அவர்கள் தமது பணியை மிகுந்த ஆர்வமுடனும், ஈடுபாடுடனும், சிறப்பாக முடித்து, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

சாய்ராம் இந்த வாரத்தில், அறிமுகம் - சாய் ராம், கொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள், பிரபஞ்சம் தோன்றியது எப்படி?, சங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ..., வீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி..., குழந்தைகளும் பெற்றோர்களும், கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஸ்ரீசாந்தும், ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?, வலைப்பதிவு உலகம், நிறைவு - சாய் ராம்.  என மொத்தம் பத்து இடுகைகளில் பல பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் எழுபது மறுமொழிகள் வரை பெற்றுள்ளார்.

சிறப்பாக ஆசிரியர் பொறுப்பை முடித்த சாய்ராமை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "பிச்சைக்காரன்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் பிச்சைக்காரன் (இப்பெயரில் தான் அவர் அழைக்கப்படுகிறார்) அவர்களை அழைக்கின்றேன். தற்பொழுது சென்னையில் வசித்து வரும் இவர் கடந்த மூன்றாண்டுகளாக பதிவுலகில் இருக்கிறார். இயந்திரவியல் துறையில் பணியாற்றி வரும் இவர் பதிவுலகில் பல்வேறு விஷயங்களை கற்பதற்காகவும், பல நல்லுள்ளங்களை நட்பாக பெறவுமே வலைப்பூவில் எழுதி வருவதாக சொல்கிறார். 

பல நல்லோரைப் பற்றி குறிப்பிடத்தக்க தளமாக வலைச்சரம் உள்ளது என்பதால், ஆசிரியர் பொறுப்பை மிக ஆர்வமுடன் ஏற்றுக் கொண்டதாக சொல்லும் இவரை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் சாய்ராம்...
நல்வாழ்த்துக்கள் பிச்சைக்காரன்....

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.......
மேலும் வாசிக்க...

நிறைவு - சாய் ராம்

ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்ற வேண்டுமென சீனா மின்னஞ்சலில் என்னிடம் கேட்ட போது உடனே சரியென சொன்னேன். என்னுடைய வலைப்பதிவுலகம் குறுகியது. அங்கு நண்பர்களின் எண்ணிக்கையும் குறைவு. வேறொரு விரிந்த உலகத்திற்கு எழுதுவது மீடியாகாரனான எனக்கு சந்தோஷமளிக்கும் விஷயமாக தோன்றியது.

இங்கே மற்றவர்களுக்கு நான் வலைப்பதிவுகளை பரிந்துரை எழுதியது போக இந்த ஒரு வாரக்காலத்தில் எனக்கும் பல புது அனுபவங்கள் கிட்டின. முதலாவது தினமும் பதிவு எழுத வேண்டும் என்கிற கமிட்மெண்ட். நேரத்தை மடித்து ஒடித்து ஆங்காங்கே எழுதி பதிவிட்டது இப்போது எனது சொந்த வலைப்பதிவிற்கு எழுதுவதற்கு பயிற்சியாக அமையுமென நம்புகிறேன். ஒவ்வொரு பதிவிற்கு வந்த மறுமொழிகள், அது பதிவான வேகம் இவை ஆச்சரியமேற்படுத்துகின்றன. வலைச்சரத்தினை தினமும் வாசிப்பவர்கள் என ஒரு பெரும் கூட்டம் இருப்பதை உணர முடிகிறது. மற்றொரு முக்கியமான அனுபவம் தமிழ் வலைப்பதிவுலகத்தை அதிகமாய் இந்த ஒரு வார காலம் அலைந்து மேய்ந்தேன். எண்ணிக்கையில் மலைக்க வைக்கிறது தமிழ் வலைப்பதிவுலகம். தொடர்ச்சியாக எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆங்காங்கே இதன்காரணமாக நட்பு வட்டமும் சில இடங்களில் அது எதோ ஒரு நோக்கத்திற்காக முன்னெழுவதும் காண கிடைக்கிறது. ஆங்கில வலைப்பதிவுலகம் காட்டும் வெரைட்டி விரைவில் தமிழ் வலைப்பதிவுலகத்திலும் தோன்றும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

வாய்ப்பளித்த சீனாவிற்கும் வலைச்சர நண்பர்களுக்கும் இந்த ஒரு வார காலம் எனது பதிவுகளை பார்வையிட்ட தோழர்களுக்கும் எனது நன்றி.
மேலும் வாசிக்க...

There was an error in this gadget

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது