இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..

வணக்கம் வலையுலக நண்பர்களே..
நலமா? நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்த அறிமுக பதிவைத் தொடங்குகிறேன். அதற்கு முன், எனக்கு வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.
மலேசிய திருநாட்டில் மலாக்கா எனும் மாநிலத்தில் குடிகொண்டிருக்கும் எனது பெயர் சுபாஷினி. என்னதான் மலேசியா எனது பிறந்த ஊராக இருந்தாலும் எனது முன்னோர் தோன்றிய இந்திய மண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்வதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். அதனாலேயே எனது மணவாளனும் இந்திய மண்ணின் மைந்தராக அமைந்தாரோ என்னவோ :)
சீனா ஐயா சொன்னதைப் போலவே நான்கு ஆண்டுகள் வங்கியில் பணிப்புரிந்த பின்னர் உள்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறேன். ஆசிரியப்பணியில் மேல் இருந்த அளவிலா காதலே இந்த பணி மாற்றத்திக்குக் காரணம்.
இப்போது என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆசிரியர்களைப் பற்றி நான் எழுதிய பதிவு ஒன்றை இங்கே சென்று காணவும்.
நான் தமிழ் வலையுலக வாசம் கொண்டது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்தான். சில நேரங்களில் பணியின் காரணமாக அதிகமாக எழுதமுடியாவிட்டாலும் வலையுலக வாசத்தை நான் முகர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். அப்படி சில நேரங்களில் நான் எழுதிய, கடல் கன்னிகள், அன்னையர் தினம் - ஒரு நாள் போதுமா? , நட்பின் எல்லை என்பது எதுவரை? , ஏன் சண்டை போடறோம்? ஆகிய பதிவுகளை நிறைய நண்பர்கள் படித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன்.
சரி நண்பர்களே...என்னைப் பற்றிய அறிமுகம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். நாளை முதல் சில முத்தான பதிவுகளோடு உங்களைச் சந்திக்கிறேன். என்னை வரவேற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று விடைப்பெறுகிறேன்.




