07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 28, 2011

வலைச்சரத்தில் நான் - ஒரு இன்ப அதிர்ச்சி


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.


முதலில் என்னை வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக இருக்க அழைத்து இன்ப அதிர்ச்சி தந்த சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுக பதிவிட்ட கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவு.

      நான் மூன்று மாத காலத்திற்கு முன்பு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன். எழுத்தின் மீது இருந்த ஆசையால் எழுத வந்தவன். ஆரம்பத்தில் எனக்கு பிடித்த மூன்று இசைத்திரட்டுகள், என்னை அழவைத்த கருவாச்சி காவியம் என சில பதிவுகளை எழுதிவிட்டு யாராவது வந்து பார்ப்பார்களா? கருத்து சொல்வார்களா? என்று காத்திருப்பேன். philosophy prabhakaran அவர்களும் ரஹீம் கஸாலி(என்னை வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்தவர்) அவர்களும் தான் முதன் முதலில் கருத்திட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.

 

குறிப்பாக பிரபாகரனுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் 10 நபர்களாக இருந்த பின்தொடர்பவர்களை ஒரே நாளில் 38 நபர்களாக மாற்றியது அவர் என்னைப்பற்றி அவரது வலைப்பூவில் தனியாக இட்ட பதிவினால் தான். பலரிடம் என்னை கொண்டு சென்றது அவர் தான். நான் முன்னேற பலமுறை ஆலோசனை கூறியுள்ளார். இந்த வாரம் நான் எழுதப்போவது கூட அவரின் ஆலோசனையோடுதான்.

 

விருதகிரி விமர்சனம் தான் நான் எழுதிய ஒரே திரைப்பட விமர்சனம். ஏர்டெலின் மறுஅடையாளச்சூடு என்னும் என் பதிவு தான் அதிகம் பேர் படித்த என் பதிவாகும். பிறகு MNP ஐ பற்றியும் நான் ஒரு பதிவிட்டேன். முதியோர் இல்லம் மற்றும் சிறுவனும் நாய்குட்டியும் என இரண்டு சிறுகதைகளும், காதல் என்றால் என்ன என ஒரே ஒரு கவிதையும் எழுதியுள்ளேன். தற்போது Operation ஆரியபட்டா என்னும் சிறு தொடர்கதை ஒன்றை எழுதிவருகிறேன். மேலும் சில மென்பொருள்களைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

ரொம்ப நல்லவங்க என்னும் பெயரில் மூன்று பதிவுகள் இட்டுள்ளேன். அதில் ஒன்றைத்தான் திரு எல் கே அவர்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தார்(அவருக்கு என் நன்றிகள்). மேலும் நேரு குடும்பம் மற்றும் மு.க.குடும்பம் என இரு பதிவுகளும் இட்டுள்ளேன். என்னைப்பற்றி அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

இந்த ஒருவார காலத்தில் எனக்கு முன்பே வலைப்பூவை ஆரம்பித்தவர்களும் பல நாட்களாக எழுதிக்கொண்டிருப்பவர்களும் குறிப்பிடப்படுவார்கள். அதனால் அவர்கள் ஒரு சிறுவன் நம்மைப்பற்றி எழுதுகிறான் என்று எண்ணி வருந்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி

      குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com
மேலும் வாசிக்க...

Sunday, February 27, 2011

Philosophy க்கு நன்றி! பச்சைதமிழன் வருக!

வலைச்சரத்தின் இவ்வாரத்தில் பதிவர் Philosophy Prabhakaran அவர்கள் வலைப்பூக்களின் சுனாமியாக பல பதிவுகளின் இணைப்புக்களை வழங்கியுள்ளார். குறிப்பாக மருத்துவ சம்பந்தமான குறிப்புக்களின் தொகுப்பு மிக சிறப்பானது. அவருடைய உழைப்புக்கும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளுக்கும் வலைச்சரக்குழுவின் சார்பில் நன்றி .
------------------------------------------------------------


தொடரும் வாரத்தில் நாளை முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார் பாரி தாண்டவமூர்த்தி. பொறியியல் கல்வி பெற்று மேலும் நிர்வாகம் பற்றிய படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாணவர். நல்வரவு பாரி , தொடர்ந்து உங்களைக் கவர்ந்த நல்ல பதிவுகளின் இணைப்புக்களை அனைவருக்கும் அறியத்தாருங்கள் . நன்றி.
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவு


வணக்கம் மக்களே...

ஒருவழியாக என்னுடைய ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. வலைச்சரத்திலிருந்து (தற்காலிகமாக) விடைபெறுகிறேன். முதலில் நன்றி அறிவிப்புகள். எனக்கு இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்து எனது இந்த பதிவுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை அமைத்துக் கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஒருவாரகாலத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த, பாராட்டிய, உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

முதல்முறையாக நேற்று சீனா அய்யாவுடன் பேசினேன். மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டுமொரு வாரம் தொடரச்சொல்லி அழைத்தார். மிகவும் வருத்தத்துடன் மறுப்பு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை. அதற்காக சீனா அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ந்தால் வாசகர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு அது வலைச்சரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதே உண்மை. எனினும், வலைச்சர விதிகள் அனுமதித்தால் மீண்டும் சில மாதங்கள் கழித்து எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர விரும்புகிறேன்.

இது காலையிலேயே வெளியட வேண்டிய இடுகை. ஆனாலும், தமிழ்மண ரேங்க் பட்டியலுக்காக காத்திருந்தேன். தமிழ்மண பட்டியலில் இரண்டாவது இடம் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். முக்கியமாக பன்னிக்குட்டி ராம்சாமியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பெரும்பாலான இடுகைகளுக்கு தமிழ்மணத்தில் ஏழாவது வாக்கை பதிவு செய்தவர் அவராகத்தான் இருக்கும். அந்த ஏழாவது வாக்கின் அருமை பற்றி தெரியும்தானே...?

ஏராளமான வலைப்பூக்களையும் இடுகைகளையும் அறிமுகப்படுத்தியும் இன்னும் நிறைய வலைப்பூக்களை தவறவிட்ட ஒரு கவலை இருக்கிறது. நம் நண்பர்கள் தானே கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ரீதியில் நிறைய பேரை தெரிந்தே தவிர்த்துவிட்டேன். அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அடுத்து வர இருக்கும் வலைச்சர ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்த தவறியதாக நண்பர்கள் மெயிலிலும் பின்னூட்டங்களிலும் தெரிவித்திருந்தார்கள். அந்த லிஸ்டை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நான் தவறவிட்ட தளங்களை நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுபடி ஒருமுறை சீனா அய்யாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றியையும் எதிர்கால வலைச்சர ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

Saturday, February 26, 2011

2500 வலைபூக்கள் கொண்ட லிஸ்ட் – உலவுக்கு நன்றி


வணக்கம் மக்களே...

இந்த வாரம் முழுக்க நிறைய புதிய வலைப்பூக்களையும் பயனுள்ள, ரசனையான இடுகைகளை பலவற்றையும் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று முற்றிலும் புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறேன்.

விஷயத்திற்கு போவதற்கு முன், என்னுடைய வலைப்பூ ஒன்றை விளம்பரப்படுத்திக்கொள்கிறேன். நான் கிட்டத்தட்ட நானூறு வலைப்பூக்களை பின்தொடர்ந்துவருகிறேன். இந்நிலையில் சமீபகாலமாக என்னுடைய DASHBOARDல் சில வலைப்பூக்களின் அப்டேட்ஸ் ஒழுங்காக வராமல் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எனவே, எனது சொந்த பயன்பாட்டிற்காக My Virtual Dashboard என்னும் இந்த வலைப்பூவினை தயாரித்தேன். இந்த வலைப்பூவில் நான் பின்தொடர்ந்து வரும் தளங்களின் இடுகைகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இதையே நான் இப்போது எனது DASHBOARD ஆக பயன்படுத்தி வருகிறேன். விருப்பப்பட்டால் நீங்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.


சரி, தலைப்பு கொண்ட கருவுக்கு போவோம். இதுவரைக்கும் ஒவ்வொரு வலைப்பூக்களாக அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது தங்க முட்டையிடும் வாத்து ஒன்றினை உங்களுக்கு பரிசளிக்க இருக்கிறேன்.

அதுதான் உலவு தளத்தின் இந்த ப்ரோபைல் பக்கம். இங்கே உலவு தளம் பின்தொடரும் அனைத்து வலைப்பூக்களும் இணைப்புகளோடு அகர வரிசைப்படி உள்ளன. இதுதான் ரகசியம், இங்கிருந்து தான் நிறைய புதிய வலைப்பூக்களை தேடி எடுக்கிறேன். நேற்றிரவு வரை இந்த ப்ரோபைல் பக்கத்தில் எல்லாம் சரியாக இருந்தது. திடீரென இன்று காலை வலைப்பூக்களின் லிஸ்ட் காணாமல் போயிருந்தது. பதறியடித்து உலவு நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி, எங்களுக்காக மீண்டும் ப்ரோபைல் பக்கத்தின் செட்டிங்க்ஸை மாற்றும்படி வேண்டுகோள் வைத்தேன். எனது அந்த வேண்டுகோளை ஏற்று மீண்டும் வலைப்பூக்களின் லிஸ்டை கொண்டுவந்த உலவு தளத்திற்கு 2500 நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். என்ன புரியலையா...? இந்த லிஸ்டில் மொத்தம் 2500 வலைப்பூக்கள் உள்ளன. மேலும், இந்தப்பக்கம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பயனுள்ளதாக இருக்கும். மேலும், இனி வலைச்சர ஆசிரியராக வருபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவி செய்யும்.


இந்த 2500 வலைப்பூக்களின் பெயர்களையும் இணைப்புகளையும் காப்பி பேஸ்ட் கூட செய்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு பெட்டகத்தை நமக்கு தந்த உலவு தளத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த இணைப்பும், தலைப்பும். யாராவது இந்த இடுகைக்காக நன்றி சொல்ல விரும்பினால் உலவு நிர்வாகத்திற்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

உள்ளூர் சினிமாவிலிருந்து உலகசினிமா வரை


வணக்கம் மக்களே...

செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் நடுநிலை விமர்சனங்களை மறந்துபோய் நாட்கள் நகர்ந்த நிலையில் இப்பொழுதெல்லாம் தரமான, நடுநிலையான விமர்சனங்கள் தருவது பதிவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு திரைப்படம் வெளிவந்தால் பிரபல பதிவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் பலதரப்பட்ட பதிவர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சில படங்கள் வெளிவரும்போது சூடான விவாதங்கள், கருத்து மோதல்கள் கூட வருகின்றன. அவ்வாறாக அதிகம் பரிட்சயமில்லாத, ஆனால் நயமான விமர்சனங்கள் எழுதும் பதிவர்களைப் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.

மூன்றாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர் என்றாலும் இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கும் ஒரு பதிவர். இவர் எழுதியுள்ள விமர்சனங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனத்தை சிறப்பானது என்று கூறுவேன். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தையும் தனது அழகான எழுத்துநடையில் விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் எழுதிய யுத்தம் செய் விமர்சனமும் உங்கள் பார்வைக்காக...

2. ஊர் காவலன் http://oorkavalan.blogspot.com/
எல்லோரும் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் புது ஸ்டைலில் மனம் கவர்ந்த பழைய படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுகிறார். இவ்வாறாக தில்லுமுல்லு படத்திற்கும் ரஜினியின் பில்லா படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார் பாருங்கள். கமல் படங்களில் மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கும் நாயகன் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

3. சிவ சம்போ... http://muthusiva.blogspot.com/
வியக்கவைக்கும் வித்தியாசமான பர்சப்ஷன் கொண்ட பதிவர். யுத்தம் செய் புதிய யுத்தமல்ல என்ற தலைப்பில் தொட்ட கதை சுட்ட கதையை விவரித்திருக்கிறார். மேலும், அயன் படம் பார்த்துவிட்டு அய்யோ அம்மா என்று புலம்பியதைக் கேளுங்கள். இத்தகைய விமர்சனங்கள் எழுதியிருப்பவர் சுந்தர்.சியின் நகரம் படத்தை அசத்தலான மறுபக்கம் என்று வியப்பது வியப்பாகவே இருக்கிறது.

அரிதாக சில படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதுபவர் எனினும் தரமான வகையில். ஆடுகளம் படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் முதல்முறையாக இவரது விமர்சன நடையை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே கொஞ்சம் பழைய பக்கங்களை புரட்டிப் பார்த்ததில் வ குவாட்டர் கட்டிங் படத்திற்கும் எந்திரன் படத்திற்கும் தனது எளிமையான எழுத்துக்களில் விமர்சனம் எழுதியிருந்தார்.

5. ஐத்ரூஸ்'ன் பேரன்பும் பெருங்கோபமும் http://idroos.blogspot.com/
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். மிஷ்கினின் யுத்தம் செய் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இன்னும் தேடிப் பார்த்ததில் பாலிவுட் படமான குஜாரிஷ் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார். அதிமுக்கியமாக பார்த்தே தீரவேண்டிய படவரிசையில் நாம் தவறவிட்ட The Shawshank Redemption படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

6. மெட்ராஸ் பவன் http://madrasbhavan.blogspot.com/
மீண்டுமொரு திறமையான ஆல்-ரவுண்டர். சமீபத்தில் எழுதியது பயணம் விமர்சனம். நிறைய பாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அவற்றுள் No One Killed Jessica விமர்சனத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம். ஹாலிவுட் படமான Tangled 3D விமர்சனத்தையும் கொஞ்சம் பாருங்கள். கூடிய விரைவில் உலகப்படங்களையும் ஒரு கை பார்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7. குழந்தை ஓவியம் http://aadav.blogspot.com/
கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர், எனினும் சமீபத்தில் எந்திரனின் முன்னோடியான Bicentennial Man படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் இவரது தளத்தைப் பற்றி அறிந்துக்கொண்டேன். சமீபத்தில் வெளிவந்த நடுநிசி நாய்கள் படத்தைப் பற்றிய இவரது கருத்தைக் கேளுங்கள். இவரும் நாம் தேடிக்கொண்டிருந்த The Shawshank Redemption படம் பற்றி எழுதியிருக்கிறார்.

8. கருப்பு பெட்டி http://denimmohan.blogspot.com/
இவரும் ஒரு உலகசினிமா ஆர்வலர். உள்ளூர் சினிமா என்று பார்த்தால் எந்திரன் படத்தின் CGக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். பல உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய இடுகை என்றால் After Shock என்ற சீனப்படத்தை குறிப்பிடலாம். சினிமா தவிர்த்து இவர் எழுதிய இடுகைகளில் விசித்திரங்கள் அதிகம் பாதித்தது.

9. தூரத்தே பெய்யும் மழை http://sumohan.blogspot.com/
வித்தியாசமான சில உலகப்படங்களுக்கு விமர்சனம் எழுதி நம் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் எழுதிய Kundun என்னும் ஆங்கிலப்பட விமர்சனத்தின் வாயிலாக தள அறிமுகம் கிடைத்தது. மேலும் Samsara, Himalaya என்று திபெத்திய படங்கள் இரண்டிற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இங்கே இணைப்பு கொடுத்துள்ள மூன்று படங்களுக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது தெரியுமோ...?

10. உளவாளி http://ulavali.blogspot.com/
பதிவுலகிற்கு புதியவர். இதுவரை எழுதியுள்ள ஆறு இடுகைகளில் ஐந்து உலக சினிமா பற்றியவை. டெத் நோட் என்ற ஜப்பானிய பட விமர்சனத்தையும், ரெக் என்ற ஸ்பானிஷ் பட விமர்சனத்தையும் தவறவிடாதீர்கள். சினிமா தவிர்த்து நிலவில் கால்வைத்தது உண்மையா..? என்னும் இடுகை பிரமாதப்படுத்துகிறது. எழுத்துப்பிழைகளை மட்டும் தவிர்த்தால் நலம்.

போனஸ்:
ஆறாவது எண்ணில் அறிமுகப்படுத்திய அதே மெட்ராஸ் பவன் சிவக்குமார் தான். அவரது மற்றொரு தளமான நண்பேன்டா வலைப்பூவில் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். மேலும், 2010ம் ஆண்டின் திரை விருந்து என்று ஏழு பாகங்கள் கொண்ட தொகுப்பை எழுதியிருக்கிறார். இவை இரண்டுமே தவறவிடக்கூடாத அதிமுக்கியமான சினிமா இடுகைகள்.

டிஸ்கி: இன்றைய இரண்டாவது இடுகையாக வலைச்சரத்திற்காக நான் மிகவும் ரசித்து எழுதி ஒரு இடுகையை தயார் செய்து வைத்திருக்கிறேன்... மற்றபடி கன்டென்ட் சர்ப்ரைஸ்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

Friday, February 25, 2011

வேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை


வணக்கம் மக்களே...

இன்றைக்கு ஏன் இந்த மூன்றாவது இடுகை என்று கேட்டீர்களானால் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அப்பாற்பட்டு நண்பர் இக்பால் செல்வன் வேர்ட்பிரஸ் பதிவர்கள் பற்றியும் எழுதவேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார். எனவே கூடுதலாக இந்த இடுகை அவசியமாகிவிட்டது.

சரி, அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்ப்போம் என்றால் இவர்கள் ப்ளாக்கர் வட்டத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் வேர்ட்பிரஸ் வட்டத்தை பொறுத்தவரையில் அறிந்தமுகங்களும் பிரபலங்களுமே. (அதென்ன ப்ளாக்கர் வட்டம் வேர்ட்பிரஸ் வட்டம் பாகுபாடு என்றெல்லாம் கேட்கப்பிடாது). தொழில்நுட்பரீதியாக வேர்ட்பிரஸ் பதிவர்களைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கலே இந்நிலைக்கு காரணம். ஓகே கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்...

1. களர்நிலம் http://adhithakarikalan.wordpress.com/
உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமாவரை மணக்கிறது இந்த வலைப்பூ. சத்யஜித்ரேயின் Fairy Tale படம் என்னும் இடுகை நம்மை ஈர்க்கிறது. இந்தியாவின் முதல் கவர்ச்சிக்கன்னி என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள். உலகில் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம் எது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

2. பறையோசை http://paraiyoasai.wordpress.com/
சமூகக்கோபம் கலந்த கட்டுரைகளை வழங்கிவரும் சூடான வலைப்பூ. பரிசோதனை எலிகளாக மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஏன் கூறுகிறார்கள் என கேளுங்கள். பேராண்மை பாடம் குறித்த அவரது பார்வையை மயில் வாகனன் பகிர்கிறார். நான் கடவுள் இடுகையில் சீரியஸாக ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.

3. சிலிகான் ஷெல்ஃப் http://siliconshelf.wordpress.com/
பல்சுவைகளையும் அள்ளித்தரும் வலைப்பூ இது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்னென்ன என்பதை மெனக்கெட்டு தொகுத்திருக்கிறார்கள். சுப்ரமணியின் காதல் என்னும் சிறுகதை ரசிக்க வைக்கிறது. மேலும் மொத்த தமிழ் பதிப்பகங்களின் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் பயன்படும் வகையில் உள்ளது.

4. வில்லவன்... http://villavan.wordpress.com/
அரசியல், சமூகம் சார்ந்த இடுகைகள் இதன் ஸ்பெஷாலிட்டி. நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே... என்று தத்துவம் சொல்கிறார்கள். 2020ல் மீரா ராடியா - ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதை என்று அரசியல் கோபத்தையும் நகைச்சுவையாக சொல்கிறார்கள். காதலைப் பற்றி வீண் ஆய்வு ஒன்றை செய்திருக்கிறார்கள்.

இது இந்த இடுகையை எழுத காரணமாக இருந்த இக்பால் செல்வனின் வலைப்பூ. இவர் நடுநிசி நாய்கள் தேவையான ஒரு படமே என்று கூறுகிறார். மேலும், காதலர் தினத்தால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பட்டியலிட்டிருக்கிறார். வழுக்கைத்தலைக்கும் வைத்தியம் வந்தாச்சு என்று பெருசுகளுக்கு நற்செய்தி கூறுகிறார்.

6. இதயம் பேத்துகிறது http://kgjawarlal.wordpress.com/
கதை, கட்டுரை, நகைச்சுவை என்று வெரைட்டி காட்டுகிறார்கள். இவர் எழுதியுள்ள இடுகைகளில் காப்பிரைட்ஸ் என்னும் இடுகை என்மனம் கவர்ந்தது. சிறுத்தை படத்தை தமன்னாவின் சிறுத்தை என்று குறிப்பிடுகிறார் பாருங்கள். காதலிக்கிறவர்கள் கவனத்திற்கு... என்று என்ன அறிவுரை சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

7. வேளாண் அரங்கம் http://velanarangam.wordpress.com/
விவசாயத்திற்காக அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. விவசாயிகளுக்கு பல பயனுள்ள தகவல்களை அள்ளித்தெளிக்கிறது. மாசற்ற மண்புழு உரம் பற்றிய கட்டுரை இனிக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்பூசணி, பாரம்பரிய விவசாய முறைப்படி பாசிப்பயிறு சாகுபடி என்று ஏராளமான வேளாண் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

8. படைப்பாளி http://padaipali.wordpress.com/
கவிதை, கட்டுரை, சிறுகதை, தொழில்நுட்பம் என்று கலந்துகட்டி அடிக்கும் ஆல்-ரவுண்டர். படைப்பாளி என்று பெயர் வைத்துக்கொண்டு சைக்கோ என்று கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். குவாட்டர் கோவிந்தன் பற்றிய சிறுகதை யதார்த்தம். நீங்கதான் ஹீரோ என்று நவீன தொழில்நுட்பம் பற்றி சொல்லித்தருகின்றனர்.

9. Cybersimman's Blog http://cybersimman.wordpress.com/
இன்டர்நெட்டே வேதம் என்று கூறும் இந்த வலைப்பூ. பல தொழில்நுட்ப தகவல்களையும், பயனுள்ள தளங்கள் பற்றிய தகவல்களையும் தருகிறது. கூகுள் சேவைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள, காதலர்களுக்காக என்று சில பிரத்யேக வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகின்றனர். வலைப்பதிவர்களின் லட்சியம் என்னவென்றும் விளக்கமளிக்கின்றனர்.

10. விண்மணி http://winmani.wordpress.com/
மறுபடியும் தகவல் தொழில்நுட்ப செய்திகள் தரும் வலைப்பூ. முன்னர் குறிப்பிட்ட சைபர் சிம்மன் வலைப்பூவை போலவே பல பயனுள்ள இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறது. எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறிய, உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்றறிய, அரிய தளங்கள் பற்றி சொல்கிறது.

பெரும்பாலும் அனைவருக்கும் தோழர்.மதிமாறன் அவர்களின் இந்த வலைப்பூவைப் பற்றி தெரிந்திருக்கும். இங்கே சூடான இடுகைகள் கிடைக்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் பற்றி இவரது பார்வை. அப்படியே பேராண்மை படம் குறித்தும் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். காதலர் தின சிறப்பு இடுகை இங்கே.

இது ஒரு ட்ரைலர் மட்டுமே. இன்னும் ஏராளமான வேர்ட்பிரஸ் பதிவர்கள் மீது நம் பார்வை படாமல் இருக்கிறது. இனி வரும் வலைச்சர ஆசிரியர்கள் வேர்ட்பிரஸ் பதிவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

பதிவுலக கவிஞர்கள் – பாகம் 2


(கவிஞர்கள் அறிமுகம் 02)

வணக்கம் மக்களே...

நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் சில கவி பாடும் பதிவர்களை காண்போம்.

1. தேஜூ உஜ்ஜைன் http://tejuujjain.blogspot.com/
ட்விட்டரில் நண்பர் ஒருவர் மூலமாக இவரது தளத்திற்கு அறிமுகம் கிடைத்தது. காதல் கவிதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். காதல் தேவதை என்னும் இடுகையில் தனது காதலியைப் பற்றி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். ஃபீனிக்ஸ் ஜாதி என்னும் கவிதையில் காதல் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று கூறுகிறார். ஆனால் மற்றொரு கவிதையில் காதல் ஒரு குறைப் பிரசவக்குழந்தை என்று குறிப்பிடுகிறார்.

2. கவிதை பூக்கள் http://nankirukkiyavai.blogspot.com/
ஆறு வலைப்பூ வைத்திருப்பவர் என்றெண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அவற்றில் கவிதைக்காக அர்ப்பணிக்கப்பட்டது இந்த வலைப்பூ. இவரும் முன்னவரைப் போல தன் கனவு நாயகி குறித்து ஒரு கவிதை வடித்திருக்கிறார். சிகரெட், விலைமாதர் போன்றவற்றைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும் ஒரு வரிக்கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் புதுக்கவிதைகள் கலக்கல்.

3. படத்துடன் கவிதைகள் http://vithu9.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. றோஜாக்கள், தகவல் தொழில்நுட்ப செய்திகள் ஆகிய வலைப்பூக்களின் உரிமையாளர் தோழி பிரஷாவின் மற்றொரு வலைப்பூ இது. படங்களுடன் கூடிய கவிதைகள் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. நட்பின் பெருமையையும், ஒருதலைக்காதலின் மகத்துவத்தையும் கவிதையாய் சொல்லியிருக்கிறார் பாருங்கள். மேலும், மறுமணம் பற்றிய தனது எண்ணத்தை மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.

4. பறத்தல் - பறத்தல் நிமித்தம் http://nilaamagal.blogspot.com/
இவரும் ஒரு பெண் கவிஞர். கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதைகள் கூட எழுதுகிறார். பருவம் தப்பிய மழை என்ற விவசாயிகள் குறித்த கவிதை நெகிழ்ச்சி. குறுங்கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் ஹைக்கூ கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. கடவுளும் காருன்யமும் என்ற கவிதையில் மிகவும் சீரியஸாக ஒரு மேட்டர் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று பாருங்களேன்.

5. பென்சில் http://asuda5.blogspot.com/
பெரும்பாலும் காதல் கவிதைகள். அவ்வப்போது சிறுகதைகளும் எழுதுகிறார். இவர் எழுதிய காதல் கவிதைகளில் மழையனப் பெய்தாய் நீ! என்னும் கவிதையை நான் அதிகம் ரசித்த கவிதை என்று சொல்லுவேன். விசித்திரி என்னும் இடுகையில் தலைப்பிற்கேற்றார்போல வித்தியாசமாக ஒரு மரபுக்கவிதை எழுதியிருக்கிறார். மீன் தொட்டி மூன்று கவிதைகள் என்ற இடுகையும் ரசிக்க வைக்கின்றன.

6. மௌனத்தின் மறுபக்கம்... http://other-side-of-silence.blogspot.com/
இவர் பதிவுலகிற்கு புதியவர் இல்லை. கிட்டத்தட்ட நான்காண்டுகளாக கவிபாடி வருகிறார். ஆனால் நிறைய பேருக்கு பரிட்சயமில்லாதவர். இவர் தோழிக்காக எழுதிய கவிதை பிரமாதப்படுத்துகிறது. மேலும் தனக்கு கடவுளை பிடிக்க என்ன காரணம் என்னவென்று இங்கே கொஞ்சம் சீரியஸாக விவரித்திருக்கிறார். ஐம்புலம் சிலிர்க்கும் ஐந்தடி உயர அழகிய கவிதை... எனும் இடுகையில் உலகிலேயே சிறிய கவிதையை எழுதி சிலிர்க்க வைக்கிறார்.

இயற்கை, காதல், சமூகம் என்று வகை வகையாக கவிதைகள் வடிக்கிறார். இவரது கவிதைகளுக்கு இணையாக அதற்கேற்ப இணைக்கும் படங்களும் ரசிக்க வைக்கின்றன. புத்தக வழி உறக்கம் என்னும் கவிதை தலைப்பைப் போலவே இதமாக இருக்கிறது. தேவதை என்னும் கவிதையில் தோழியைப் பற்றியும் கறிகடையின் விளிம்பில் என்னும் கவிதையில் கோழியைப் பற்றியும் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

8. கவிக்களம் http://kavikklam.blogspot.com/
பதிவுலகிற்கு மிகவும் புதியவர் என்று சொல்லலாம். இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. இவர் எழுதியுள்ள கவிதைகளில் காதல் வியாபாரம் என்னுடைய பேவரிட். நட்பு என்னும் சொல்லுக்கு நான்கே வரிகளில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். யாரை இவர் சர்வாதிகாரி என்று சொல்கிறார் தெரிந்துக்கொள்ள இந்தக் கவிதையை படியுங்கள்.

9. தாடகை பெருநிலத்தான் http://jegadeeswara.blogspot.com/
அனல் பறக்கும் சமூக அக்கறை கொண்ட கவிதைகளுக்கு சொந்தக்காரர். மீனவர்களுக்காக பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்...!! என்ற இந்தக்கவிதையை தொடுத்திருக்கிறார் பாருங்கள். அதுமட்டுமில்லாமல் வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக...!! ஒரு கவிதை எழுதியிருக்கிறார், அமீரக பதிவர்கள் ஒவ்வொருவரும் படித்தே தீரவேண்டிய இடுகை இது. கவிதைகள் மட்டுமல்லாமல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது நவீன சேகுவேரா விக்கி லீக்ஸ்...!

10. முத்து http://muthtu.blogspot.com/
இவரும் இந்த மாதமே பதிவுலகிற்கு வந்திருக்கிறார். ஆனாலும் வந்த வேகத்தில் 37 கவிதைகள் எழுதி அசர வைக்கிறார். தமிழா! கடந்து வந்த பாதையை திரும்பிப் பாரடா என்னும் கவிதையில் நமக்கு என்ன அட்வைஸ் சொல்கிறார் என்று கேளுங்களேன். மேலும் அன்னையர் தினம் பற்றி நெகிழ வைக்கும் கவிதையொன்றை வடித்திருக்கிறார். சுற்றுப்புறச்சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு கவிதையும் வியக்க வைக்கிறது.

நேற்றைய போனஸ் பகுதியில் பார்த்த அதே பதிவரின் மற்றுமொரு வலைப்பூ. தமிழில் கானா பாடல்களுக்காக அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது...! என்று தான் வாழவந்த ஊரான சென்னையைப் பற்றி கானா பாடுகிறார். காதலர் தின சிறப்பு கானாவாக வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்...! என்னும் இடுகையை எழுதியிருக்கிறார். இவரும் அமீரக பதிவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வகையில் துபாய் போன மச்சான் பேரு கபாலி...! என்றொரு கானா பாடல் எழுதியிருக்கிறார்.

கவிஞர்கள் அறிமுகம் இந்த இடுகையோடு நிறைவடைகிறது. சீனியர் பதிவர்கள் என்பதாலும் நமது நண்பர்கள்தானே என்பதாலும் சிலரை தெரிந்தே தவறவிட்டேன். அவர்கள் மன்னித்தருள வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

லேடீஸ் ஸ்பெஷல்


வணக்கம் மக்களே...

பெண் பதிவர்களுக்காக இந்த இடுகையை டெடிகேட் செய்கிறேன். சீனியர் பதிவர்கள் என்ற காரணத்தினால் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா, அன்புடன் ஆனந்தி, காகித ஓடம் பத்மா, இந்திராவின் கிறுக்கல்கள், கவுசல்யா, தேனம்மை லக்ஷ்மணன், தோழி பிரஷா, அன்புடன் அருணா, என் வானம் அமுதா, வானதி ஆகியோரை இந்த இடுகையில் தவிர்த்துவிட்டேன்.

1. Geetha's Womens Special http://udtgeeth.blogspot.com/
பலதரப்பட்ட இடுகைகள் எழுதியிருந்தாலும் அட்வைஸ் ரக இடுகைகள் ரசிக்க வைக்கின்றன. அதுவும் பெண்களுக்கே அதிகமாக அட்வைஸ் செய்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்காக என்ன அட்வைஸ் சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும், இளம்பெண்களிடம் ஈகோ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறார்.

முன்னவரைப் போலவே இவரும் பெண்களுக்காக ஒரு அட்வைஸ் சொல்கிறார். பெண்கள் என்றாலே அட்வைஸ் தான் போல. குறிப்பாக கல்யாண பெண்களுக்காக ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். அவரது வீட்டு பணியாள் குறித்து எழுதப்பட்ட எங்க வீட்டு மலைஸ் இடுகையும் ரசிக்க வைக்கிறது.

3. புதிய வசந்தம் http://puthiyavasantham.blogspot.com/
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். ரிலாக்ஸ் கவிதை என்ற பெயரில் கவிதையும் எழுதியிருக்கிறார். கலங்க வைக்கும் விலைவாசி பற்றி கவலையும் படுகிறார். அதேசமயம் வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று சொல்லித்தரவும் செய்கிறார்.

4. அவ(ரை)னை நினைத்த நொடிகள்... http://avanidamnaan.blogspot.com/
தன்னுடைய காதலைப் பற்றியும் காதலரைப் பற்றியும் எழுதுவதற்காகவே வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரது காதலரும் ஒரு பதிவர்தான். பிள்ளையார் சுழி போட்டு காதலை ஆரம்பித்த கதையை சொல்லியிருக்கிறார் கேளுங்கள். இவர்கள் வித்தியாசமாக கொண்டாடிய காதலர் தினக்கொண்டாட்டம் கலியுக காதலர்களுக்கு ஒரு முன்னாதரணம்.

5. பூமகளின் பூக்களம் http://poomagal.blogspot.com/
திரைவிமர்சனங்கள் எழுதும் பெண்பதிவர் என்ற முறையில் இவர்மீது அதிகப்படியான மரியாதை உள்ளது. தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல் உள்ளூரிலிருந்து உலகம் வரை பொளந்து கட்டுகிறார். தமிழ் சினிமா விமர்சனங்களில் பூவும், பாலிவுட் விமர்சனங்களில் தாரே ஜமீன் பர் படமும், ஹாலிவுட் விமர்சனங்களில் அவதாரும் அதிகம் ரசிக்க வைத்தன.

6. மலைச்சாரல் http://harininathan.blogspot.com/
பெரும்பாலும் கவிதைகளால் நிறைக்கப்பட்ட ஒரு வலைப்பூ. அவ்வப்போது கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ணக்கூடாது என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார். நவீன சுயம்வரம் பற்றி கவிதை ஒன்றை வடித்திருக்கிறார் பாருங்கள்.

7. மிடில் கிளாஸ் மாதவி http://middleclassmadhavi.blogspot.com/
இவரும் ஒரு ஆல்-ரவுண்ட் பர்பாமன்ஸ் காட்டும் பென்பதிவரே. சவால் சிறுகதை போட்டிக்காக இவர் எழுதியிருக்கும் சவாலே சமாளி சிறுகதை பிரமிக்க வைக்கிறது. இங்கே ஒரே இடுகையில் புத்தக விமர்சனம், எழுத்தாளர் பாலகுமாரனின் வலையுலக அபிப்ராயம் கடி ஜோக் என்று கதம்பம் தொகுத்திருக்கிறார் பாருங்கள்.

8. மைத்துளிகள்... http://maiththuli.blogspot.com/
இவர் ஒரு பதிவர் அல்ல, எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அது ஏன் என்பது இவருடைய வலைப்பூவில் நுழைந்ததும் உங்களுக்கே புரியும். இவரது இடுகைகளில் துரு துரு துப்பாண்டி எனும் இடுகை என்னுடைய பேவரிட். மேலும், 2010ம் ஆண்டில் இவரது ஹீரோ யாரென்று சொல்கிறார் கேளுங்கள்.

9. வள்ளுவம் http://valluvam-rohini.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவைப்படாது என்றேண்ணுகிறேன். பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை சந்தித்த அனுபவத்தை நான் சந்தித்த வி.ஐ.பி. என்ற பெயரில் சிலாகித்து எழுதியிருக்கிறார். நம் தேசத்தலைவர்களுக்கு இது தேவையா...? என்று சமூகக்கோபம் காட்டவும் செய்கிறார். இவரது மாதொரு வலைப்பூவில் ஹியூமர் கிளப் அனுபவங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அதையும் படியுங்கள்.

10. ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com/
அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு பெண் பதிவர். பதிவுகளை காட்டிலும் பின்னூட்டங்களுக்காக அதிகம் ரசிக்கப்படுபவர். ஆண்களே! இது உங்களுக்கான பதிவு...:))) என்று சொல்லி என்ன எழுதியிருக்கிறார் என்று படியுங்கள். கள்ளக்காதல் சில...!! நொறுங்கும் இதயம் பல...!! என்று சீரியஸாக சொல்கிறார். கூடிய விரைவில் கவுண்டமணி செந்தில் ரசிகர் மன்றத்திற்க்காக அதிரடி நகைச்சுவை தருவதற்கு தயாராக இருக்கிறார் என்பது எக்ஸ்க்ளுசிவ் நியூஸ்.

டிஸ்கி 1: பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக சகோதரிகள், தாய்மார்கள் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.

டிஸ்கி 2: எங்கேயாவது மேடம், அக்கா வகையறா சொலவடைகளை தவற விட்டிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

Thursday, February 24, 2011

பதிவுலக கவிஞர்கள் - பாகம் 1

(கவிஞர்கள் அறிமுகம் 01)
வணக்கம் மக்களே...

இன்றைய அறிமுகங்கள் அனைவரும் கவிதை சொல்லும் பதிவர்கள். மேலும் இவர்களில் சிலர் இப்போது வாடிக்கையாக பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் அவர்களது கவிதைகள் என்னை கவர்ந்ததால் சம்பந்தப்பட்ட இடுகைகளை முன்னிலைப்படுத்துகிறேன். அவர்கள் மீண்டும் பதிவுலகம் திரும்ப வேண்டுமென்பதே எனது விருப்பம்.

1. கவிதை என்பது...! http://kavithai80.blogspot.com/
யோகா, பலே பிரபு என்ற இருவர் இந்த வலைப்பூவின் உரிமையாளர்கள். பலே பிரபு ஏற்கனவே நமக்கு பரிட்சயமானவர். யோகா கிபி கவிதைகள் என்ற லேபிளின் கீழ் எழுதியிருக்கும் காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம் என்ற கவிதை தலைப்பிர்கேற்றபடி இருந்தது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையும் அவரது ஐம்பது வயது தந்தை பற்றிய கவிதையும் நெகிழ வைக்கின்றன.

2. !!! மழைக்காதலன் !!! http://aruniniyan.blogspot.com/
காதல், காதல், காதல் மட்டுமே இவரது கவிதைகளில் தென்படுகிறது. மேலே குறிப்பிட்ட பதிவுலகத்தில் இருந்து விலகியிருப்பவர்களில் இவரும் ஒருவர். என் இனிய இனியா என்று அவரது காதலியை நினைத்து உருகுகிறார். ஊமைத்தொலைபேசி...! என்ற பெயரில் வித்தியாசமாக ஒரு காதல் கவிதை வடித்திருக்கிறார் பாருங்கள். இதய நோய் என்றிவர் எழுதியிருப்பது மருத்துவம் சார்ந்த இடுகை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.

3. NIROSH.N தரிப்பிடம் http://nirosh28.blogspot.com/
காமெடி கலந்த கவிதை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். இவரும் இப்போது பதிவுலக பக்கம் தலைக்காட்டுவதில்லை. இவருடைய நண்பர்கள் குழுவைப் பற்றி களவானிப் பசங்க நாங்க..! என்று சொல்கிறார். மேலும் சரக்கடித்துவிட்டு நான் மகான் அல்ல...! மப்புக்காரன்...! என்று கவிதை சொல்கிறார். அதிமுக்கியமாக நமீதா எழுதிய தமிழ் கவிதை...! என்றொரு இடுகை போட்டிருக்கிறார் அதுதான் ஹைலைட்.

4. சிவகுமாரன் கவிதைகள் http://sivakumarankavithaikal.blogspot.com
இவரைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. மரபுக்கவிதை, ஹைக்கூ கவிதை என்று ஆல்-ரவுண்ட் பெர்பாமான்ஸ் காட்டுபவர். கனவுகள் என்ற பெயரில் நம் பழைய நினைவுகளை கிளறிவிடும் விதமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். அதுதான் என்னுடைய பேவரிட். மேலும் இவர் ஹைக்கூ கவிதைகள், காதல் வெண்பாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் எழுதியிருக்கும் கவிதைகள் அட போட வைக்கின்றன.

5. அமானுஷ்யன் http://amanusiyan.blogspot.com/
பெயரைக் கேட்டாலே விஜய் டிவி காத்துகருப்பு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது. இவர் ஒரு ஆசிரியர். இவருடைய கவிதைகள் கொஞ்சம் மற்ற கவிதைகளை நையாண்டி செய்யும் விதமாக நகைச்சுவையாக எழுதியிருப்பார். கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!! என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் அத்தனை கவிதைகளும் அந்த ரகத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கக்கூடியவை. தன் மகனால் ஏற்பட்ட வலி என்னவென்று நம்மோடு பகிர்ந்திருக்கிறார் பாருங்கள்.

6. இளம்தூயவன் http://ilamthooyavan.blogspot.com/
இவர் கவிதைகள் மட்டுமல்லாமால் கட்டுரைகள், மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதிப்பவர். இவர் சுயநலம் என்ற பெயரில் எழுதியுள்ள கவிதை என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. மேலும் தற்கொலை பற்றி பிரமாதமாக ஒரு கவிதை சொல்கிறார் கேளுங்கள். இதயம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள கவிதையும் நம் இதயத்திற்கு இதமாகவே இருக்கிறது.

7. கவிதைகள் http://kavithaiprem.blogspot.com/
இவர் தனது கோபம், கவலை, மகிழ்ச்சி என்று எல்லாவற்றையும் கவிதையாக வெளிப்படுத்துபவர். மல்லிகைப்பூவுக்கும் ரோஜாப்பூவுக்கும் ஏற்பட்ட போட்டியை பெருமை என்ற கவிதையில் அழகாக சொல்லியிருக்கிறார். நடப்பு செய்திகளை மையமாக வைத்து எழுதிய ஊழல் என்ற கவிதை சிந்திக்க வைக்கிறது. அவளின் வருகை என்று குட்டியாக இவர் எழுதிய காதல் கவிதையும் கடுகாக காரம் தருகிறது.

இவரது வலைப்பூவில் பெரும்பாலும் கவிதைகளாகவே தென்படுகின்றன, நந்தலாலா படம் குறித்த சில இடுகைகளை மட்டும் தவிர்த்து. இவர் எழுதிய ஒரு கறுப்பு பூனையும் ஆறு கோப்பை மதுவும் என்ற கவிதை தலைப்பைப் போலவே ரொம்பவும் புதுமையாக இருக்கிறது. ருத்ரதாண்டவம், கடவுள் பைத்தியம் என்று திண்ணை இணைய இதழில் வெளிவந்த இவரது இரண்டு கவிதைகளும் பிரமாதமாக இருக்கின்றன.

9. தமிழ்த்தென்றல் http://thamizhththenral.blogspot.com/
சமூகம் சார்ந்த இடுகைகளை தரும் சீரியஸான வலைப்பூ. கவிதைகள் மட்டுமில்லாமல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அடிமை இந்தியா 2010, ஒதுக்கப்படும் இந்தியன்...? என்ற பெயரில் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகள் காரசாரமானவை. திருக்குறள் ஸ்டைலில் இரண்டடி வெண்பாவாக சிலவற்றை எழுதி இது எப்படி இருக்கு...? என்று கேட்டு வியக்க வைக்கிறார்.

10. துரோணா http://droana.blogspot.com/
ஓவியங்களில் மாடர்ன் ஆர்ட் எப்படியோ அதுபோல இருக்கின்றன இவருடைய கவிதைகள். எனது கவிதையின் கடைசி வரி என்று இவர் எழுதியிருக்கும் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதவிர்த்து இன்னும் நிறைய கவிதைகள் பிடித்திருந்தன. அவற்றுள் அதிமுக்கியமாக சாத்தான் குகை மற்றும் இனியுமொரு பாதை என்ற தலைப்புகளின் கீழுள்ள கவிதைகளை கூறலாம்.

வசன கவிதை என்ற இந்த வலைப்பூற்கு மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகள் தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறுகிறார். தந்தை பெரியார் பற்றி இவர் பகுத்தறிவு பகலவன் என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் எயிட்ஸ் எனும் எமன் என்று விழிப்புணர்வூட்டுகிறார். தன் காதலி மழையில் நனைந்த அழகை ரசித்தபடி என் தேகத்தில் சந்தேகம்...! என்ற கவிதையை எழுதியிருக்கிறார் பாருங்களேன்.

கவிஞர்கள் லிஸ்ட் இன்னும் நிறைவடையவில்லை. மீண்டும் நாளை மாலை கவிஞர்கள் குழுவோடு வருகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு


வணக்கம் மக்களே...

தலைவலியில் ஆரம்பித்து அன்றாடம் நமக்கு அவதியை கொடுக்கும் சிற்சில நோய்களுக்கு தீர்வைக் கொடுக்கும் சுலபமான மருத்துவமுறைகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சில நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

01. தலைவலி காரணங்கள் - சில தீர்வுகள்

02. முடி உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும்

03. மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்

04. கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள் -ஒரு மன நோய்

05. வியர்வை நாற்றம் ஒரு தீர்வு

06. தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்...!

07. இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

08. மன அழுத்தம் வராமல் தடுக்க...

09. பாம்பு, தேள், பூரான், மனிதன், நாய் கடி விடம் நீங்க...

10. பன்றிக் காய்ச்சல் காத்துக்கொள்ள...

11. புற்று நோய்கள் - ஒரு முழு விளக்கம்

12. கண்களை பாதுகாப்போம்

13. பத்து ஆயுர்வேத மருத்துவ தகவல்கள்

14. அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

15. மாதுளையின் மருத்துவ குணங்கள்

16. கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்

17. வாழையின் மருத்துவ குணங்கள்

18. வெங்காயத்தின் மகத்துவங்கள்

19. முதுமையை வெல்ல நெல்லிக்கனி

20. கீரைகள் மருத்துவம்

21. பாகற்காயின் மருத்துவ குணங்கள்

22. இயற்கையாகவே நன்மை பயக்கும் உணவுப்பொருட்கள்

23. இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப்பொருட்கள்

24. ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப்பொருட்கள்...!

25. ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு

26. தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து

27. மது அருந்தும் நண்பர்களுக்காக...!

28. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

29. மெட்ராஸ் ஐ பற்றி நீங்கள் கட்டாயம் அறியவேண்டியவை

30. நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை

போனஸ்:
உங்களுக்கு மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்கள் கேள்வியை மருத்துவரின் இந்த மெயில் ஐடிக்கு (drakaardu@yahoo.co.uk) அனுப்பவும். நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்.


பாலியல் சார்ந்த தீர்வுகளுக்கு: yourdoubt@yahoo.com
குழந்தை நலம் பற்றிய தீர்வுகளுக்கு: rajmohandr@gmail.com
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது