07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 31, 2007

எனது TOP TWO

என்னென்னமோ சொல்லுவாங்களே ..திருநெல்வேலிக்கே அல்வாவா .. தருமிக்கே கேள்வியா .. அப்டின்றது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவங்களைப் பத்தியே மறுபடியும் உங்க கிட்ட சொல்ல வர்ரது ரொம்ப சரியான காரியம் இல்லைதான். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்றை உங்க கிட்ட மறுபடி மறுபடி சொல்றதுக்கு ஒரு ஆசைதான். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்கள் பற்றி சொல்லணும்னு ஒரு ஆசை. அவர்களது எண்ணங்கள், எழுத்துக்கள் நிறையவே பிடிச்சிப் போச்சு. அதனாலே அதை...
மேலும் வாசிக்க...

Monday, August 27, 2007

துக்கடா …

ஒரு நல்ல விடயம் (விதயம்? / விஷயம்?) சொல்லணும். சென்னைப் பட்டறையில் இருந்த போதே மனசுல நினச்ச ஒண்ணு. மொத்தமா ஒரே மாதிரியா வெள்ளை டி.ஷர்ட் .. அதிலே முதுகுப் பக்கம் ‘சங்கம்’ அப்டின்னு பெரிய எழுத்துக்கள் .. முன்னால அவங்க பதிவின் உரல் .. எல்லாம் இந்த வ.வா.சங்கக் காரங்கதான் .. செம அழும்பு. கொஞ்ச நேரம் என்னையும் “ஆட்டைக்கு” சேர்த்துக்கிட்டாங்க. மாடியில் ஒரு ஓரத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிக்கிட்டு அதுக போட்ட கும்மாளம் … அம்மாடியோவ்! ஒண்ணு...
மேலும் வாசிக்க...

ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் .........

இந்த வார வலைச்சரத்திற்கு ஆசிரியராக என்னை ஆக்கிய வலைச்சரப் பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.மதுரை மல்லிகைச்சரத்திற்கு மக்களிடையே ஒரு தனிச்சிறப்பு உண்டு. மதுரை மல்லிகைப் பூவிற்கென்று தனிச்சிறப்பு உண்டோ என்னவோ, ஆனால் மதுரைப் பூக்காரர்கள் பூ கட்டும் வித்தைக்குத் தனி மரியாதை உண்டு என்றே நினைக்கிறேன். ஒன்றோடு ஒன்றாக, அடர்த்தியாக, நெருக்கமாகக் கட்டும் விதத்தில் அந்த மல்லிகைச் சரத்திற்கே ஒரு தனி அழகு வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மலர்ச்சரம்...
மேலும் வாசிக்க...

யார் இந்த வாரம்?

உறவுகள், கவிதைகள், சமையல் என்று பலவிதமாக அசத்திவிட்டார் தூயா. சின்ன சின்ன இடுகைகளாகவே நிறைய செய்திகளைச் சொல்லிவிட்டார். இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கலாம்தூயாவின் அமெரிக்கையான வாரத்தைத் தொடர்ந்து வலைச்சரம் எழுத வருபவர் அதிரடியான மதுரைக்காரர். அரசியல், சமூகம், சினிமா, சின்னத்திரை, ஜோதிடம் என்று எதையும் விட்டு வைக்காமல் பேசக்கூடியவர். வயதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பழகும் விதத்தால், இளைஞர் என்று தைரியமாக சொல்லலாம்....
மேலும் வாசிக்க...

Saturday, August 25, 2007

வலைச்சரத்தில் கொஞ்சம் சமையல்

இணையத்தில் எங்கு போனாலும் தூயா என்றால் சமையல் குறிப்பு எழுதவில்லையா என கேட்கும் நிலை. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பதிவில் சில உறவுகள் கேட்டிருந்தார்கள். ஆக சமையல் இல்லாமல் போகுமா!?சமையல் மட்டுமல்லாது, சின்ன தோட்டமும் வைத்திருக்கும் ரேவதி:En Ulagam - My Culinary Worldகவிதை மட்டுமல்ல எனக்கு சமையலும் வரும் என சொல்பவர் எங்க வரவனையான்:மிளகு...
மேலும் வாசிக்க...

Thursday, August 23, 2007

சில கவிதைகளும் நானும்

இந்த பதிவில் எனக்கு பிடித்த சில கவிதைகளுக்கான இணைப்புக்களை தரலாம் என நினைத்து தொடர்கிறேன்:வரவனையான் கவிதைகள்: எனக்கு மிகவும் பிடித்தவை வரவனையானின் கவிதைகள். காரணம் தினமும் நடப்பவற்றை சின்னதாக, அதே சமயம் படிப்பவர் புரியும் வகையில் எழுதுபவர். இப்பொழுது எழுதுவதில்லை போல. இருப்பினும் இவரின் கவிதைகள் சில இங்கே எனது வலைப்பூவில் உள்ளது.வரவனை கவிதைகள்அடுத்து...
மேலும் வாசிக்க...

Wednesday, August 22, 2007

உறவுகளின் உணர்வுகள்

வலையுலகத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை நெகிழ வைத்ததும், ஆச்சரியப்பட வைத்ததும் "நீங்கள்" தான்.ஒரு தசாப்த காலமாக சிங்கள அரசின் இனவாதத்தால் அழிந்துவரும் ஈழத்தமிழர்கள் உணர்வாக பதியும் போது, அதற்கு பல காரணங்கள் இருக்கும். அவர்கள் வீட்டில் அரசினால் குறைந்தது ஒரு உயிர், ஒரு கற்பு, ஒரு வீடு அழிந்திருக்கும். ஆனால் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் நீங்கள் , வெறுமே எங்கள் கஸ்டங்களை பார்த்து மனமுடைவதை என்னவென்று சொல்வது. அப்படி நீங்கள்...
மேலும் வாசிக்க...

Monday, August 20, 2007

வலைச்சரத்தில் பூவாக நான்

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,வலைச்சரத்தை தொடுக்கும் பெருமை எனக்கு இந்த வாரத்தில் கிடைத்திருக்கின்றது. முதலில் சிந்தாஸ் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த போது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நானா?எனக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி இருக்கா சிந்தாஸ் என கேட்டேன். என்னால் முடியும் என கூறி அழைத்துவந்த சிந்தாஸுக்கு தான் முதலில் நன்றியை...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் - இந்த வார வளைக்கரம்

வலைச்சரத்தின் நாராக செயல்படப்போவதாக சொல்லிக் கொண்டே அழகழகான மலர்களாக சுட்டித்தள்ளி இருக்கிறார் மஞ்சூர் ராசா. ஆரம்பத்தில் பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்து முழு பதிவுகளையும் படிக்க வேண்டியதாகிவிடுமோ என்று காபராப்படுத்தினாலும் , குறிப்பிட்ட இடுகைகளையிம் அடையாளம் காட்ட மஞ்சூரார் தவறவில்லை.கவிதைகள், அமீரகப்படிதவர்கள், என்று பல்வேறு தலைப்புகளிலும் இடுகைகளைச் சுட்டிக் காட்டியுள்ள மஞ்சூர் ராசாவின் வலைச்சர வாரம் உங்களுக்கு எல்லாம் மிகவும்...
மேலும் வாசிக்க...

Sunday, August 19, 2007

மாலையை அலங்கரிப்பவை

வலைச்சரத்தின் நாராக இருந்து இந்த ஒரு வாரத்தில் ஒரு மலர்மாலை தொடுக்க முயற்சி செய்தேன் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது உங்களுக்கு தான் தெரியும். இறுதி நாளான இன்று முத்தமிழ் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள சில நண்பர்களின் வலைமலர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நிலாரசிகனின் கவிதைகள் பொதுவாகவே இளம் நெஞ்சங்கள் பலராலும் விரும்பப்படும் கவிதைகள். காதல் கவிதைகளை தனக்கே உரித்தான விசேஷ நடையில் எழுதிவருபவர்....
மேலும் வாசிக்க...

Friday, August 17, 2007

ஒரு சில தனி மலர்கள்

மாலையில் தொடுக்காமல் இருந்தாலும் தங்கள் அழகான வர்ணத்தால் கவர்ந்து இழுக்கும் தனி மலர்களையும் நாம் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம் அவற்றில் சில இன்று:"மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..."- எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள்,...
மேலும் வாசிக்க...

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.கரிசனம்அனல் தகித்துஎடை கூடிய உடலின்முறுக்கி பிழியும் வலி பொறுத்துஇல்லாத வெளியில்என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்உலுக்கி எழுப்பிஉறங்குகிறாயா என்கிறாய்.ஆமாம்.திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில்...
மேலும் வாசிக்க...

Wednesday, August 15, 2007

நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்

மலரில் தேன் இருப்பது இயற்கையே அதனால் தான் தேன்துளி என தன் வலைமலரை பத்மா அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவரது பதிவிலிருந்து:இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். ஐந்து நிமிட பேச்சு இருபது நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும்...
மேலும் வாசிக்க...

Tuesday, August 14, 2007

நாரில் தொடுத்த சில மலர்கள்

'மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போதுஅதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?' என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:" யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. "இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க...
மேலும் வாசிக்க...

Monday, August 13, 2007

வலைச்சரத்தின் நார்!

என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை...
மேலும் வாசிக்க...

தொடுத்தவரும் தொடுப்பவரும்...

சவுண்ட் பார்ட்டி உதயகுமார் இந்த வாரம் வலைச்சரத்தை தொடுத்து தந்தார். அவர் படிக்கலாம் வாங்க அப்படின்னு ஒரே மலரில் மூணு சரம் தொடுத்து விட்டாரேன்னு நெனச்ச போது தான் பொருளாதாரத்தில் ஆரம்பிச்சு, வாழ்வியலுக்கு வந்து நகைச்சுவையில் கொண்டு போய் கதம்பமாகத்தான் தொடுத்திருக்கிறாரென்று தெரிந்தது. தலைப்பு மட்டும் தான் பொதுவாக கொடுத்து தொடர்ர்ர்ர்ராக தந்திருக்கிறார்.இனி இந்த வார ஆசிரியர் யார்னு பார்த்தால் மஞ்சூர் ராஜா! வலைப்பதிவில் ரொம்ப இடைவெளி...
மேலும் வாசிக்க...

Thursday, August 9, 2007

படிக்கலாம் வாங்க - 3

காமெடியா எழுதறதுங்கறது ஒரு பெரிய கலை. அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள் இருக்கற மாதிரி மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம். இவர் எழுத்தை பார்த்துதான் நானெல்லாம் பிளாக் ஆரம்பிச்சேன்னா நம்புவீங்களா? சும்மா இவரு சுத்தி சுத்தி ஜொள்ளு விட்ட கதையை தங்கமணி, ரங்கமணி எல்லோரையும் வைத்துக் கொண்டே சொன்னதைப் பார்த்துதான் நம்ம நாதாரித்தனத்தையும் எழுதுவோமேன்னு ஆரம்பிச்சதுதான் சவுண்ட் பார்ட்டி.இன்னைக்கு...
மேலும் வாசிக்க...

Tuesday, August 7, 2007

படிக்கலாம் வாங்க - 2

கல்யாணம்ன்னு வந்தாலே சுதந்திர வானில் சிறக்கடித்து பறக்கும் வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் மட்ட சரக்கு அடித்து அடி வயிறை தடவிக் கொண்டே இருக்கும் குவார்ட்டர் கோவிந்த சாமி ஆகி, பார்ப்பது எல்லாம் பிசாசு, பூதம் என அரற்றிக் கொண்டு, தூங்கும் நேரத்தில் முழித்து, முழிக்கும் நேரத்தில் தூங்கி என பண்ணாத அட்டூழியம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்."கல்யாணம் for Dummies" ன்னு ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட்...
மேலும் வாசிக்க...

Monday, August 6, 2007

படிக்கலாம் வாங்க...

பிளாக் ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 100 பதிவுகளுக்கு மேல் ஆகி விட்டது. பதிவுகள் எதுவும் போடாமல் சவுண்டில்லாத பார்ட்டி என பேரும் வாங்கியாகி விட்டது. ஒரு வித சலிப்பு என்பதை விட திரும்பத் திரும்ப பார்த்த சண்டைகள், விதண்டா வாதத்தில் ஆரம்பித்து தனி மனித தாக்குதல் என வெற்றி நடை போட்ட பிளாக் உலகத்தை கூகுல் ரீடரின் வழியே என் வலை மேயும் வட்டத்தையும் சுருக்கி வெகு நாட்களாகி விட்டது. வளர்ந்த மரத்தில் விளைந்த பழத்தின் சுவையை மட்டும் அறிந்து...
மேலும் வாசிக்க...

Sunday, August 5, 2007

சவுண்டான வ்வாரம்...

சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான நிறைய வேலைகளில் மூழ்கிக் களைத்த போதும் மறக்காமல் வந்து மூன்று பதிவிட்டு வலைச்சரத்தை நல்லபடியாக தொகுத்த பாலாபாய்க்கு முதற்கண் எங்க நன்றி. அதிலும் பா.க.ச வாரமாக இருக்க வேண்டியதை மொத்தமாக தாய்க்குல வாரமாக்கி பெருமைப்படுத்தியதற்கு இன்னுமொரு சிறப்பு நன்றி ;-). [இப்படி எல்லாம் செஞ்சா பா.க.சவை மூடிடுவோம்னு கனவு காணாதீங்க.. அக்காங் ;) ]இந்த வாரம் தொகுக்க ஒப்புக் கொண்டிருந்த நண்பருக்கு திடீரென வேறு வேலைகள்...
மேலும் வாசிக்க...

Saturday, August 4, 2007

விடுபட்டவை! இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்!!

எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின் குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பார். "ஒம் பேர் ன்னா?" "ச்சூல் போறியா?""எத்தனாப்பூ?""அப்பா இக்காரா?""உன்க்கு அப்பா பிக்குமா? அம்மா பிக்குமா?" என்று குழந்தைகளில் பேசுவது போலவே அதனோடு பேசிக்கொண்டிருப்பார். அந்த குழந்தையோ.."ரம்யா" "ஸ்கூல் போகிறேன்""தேர்ட் ஸ்டாண்டேர்டு...
மேலும் வாசிக்க...

Friday, August 3, 2007

சுட்டிகள் உங்களுக்காக!

மனிதனை இரண்டுகால் மிருகமென்றும் சொல்லி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (சில,பல சமயங்களில் எனக்கும் அப்படித்தோன்றும்.. அது பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்) இந்த இரண்டுகால் மிருகம் நான்கு கால் மிருகத்திடமிருந்து வேறுபடும் இடங்களில் நகைச்சுவையும் ஒன்று.நக்கல், நையாண்டி இரண்டுக்கும் வேறுபாடு இருந்தாலும் இவ்விரண்டும் நகைச்சுவையின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்தாகவேண்டும்.ஒரு பேச்சாளர் குட்டி ஒரு நகைச்சுவை கதையை சொல்லுகிறார் என்று...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது