07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 27, 2007

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க..

வலைச் சர ஆசிரியராக இருக்க முடியுமா எனக் கேட்டபோது அதற்கென்ன செய்தால்ப் போச்சு எனத் தலையை ஆட்டி விட்டு ஏற்கனவே பதிவுகளை எழுதி வைத்துப் பதிவு செய்ய முடியுமா என கேள்வி வேறு கேட்டிருந்தேன். ஆனால் வழமைபோலவே சோம்பேறித் தனமாக இருந்தாயிற்று. தவிர போன வாரம் நட்சத்திரப் பதிவுகளோடும் நேரம் போனதால் கொஞ்சம் கால இடைவெளியில் இந்தப் பொறுப்பைக் கேட்டிருக்கலாம் தான். திங்கள் வரை அழைப்பிதழும் வராத படியால் ஆகா தப்பியாச்சு என இருந்த வேளை...
மேலும் வாசிக்க...

Tuesday, June 26, 2007

தொடரும் கொண்டாட்டம்

'எனக்கு சரம் தொடுக்கவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக் கொண்டு சரவெடியாக தொடுத்து விட்டார் சிநேகிதி. இயல், இசை, நாடகம் தாண்டி நடனம், ஓவியம், கவிதை, தாயக கீதங்கள் என்று கலைநயமிக்க வாரமாக வடித்துக் கொடுத்த சிநேகிதிக்கு எங்களின் நன்றிகள். பல புதிய பதிவுகள், பதிவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு முன்மாதிரி வலைச்சர வாரமாக ஆக்கிவிட்டார்.அடுத்தபடியாக வலைச்சரம் தொடுக்க வருபவரைப் பற்றிச் சொல்லுமுன், முதலில் பெரிய கும்பிடோடு மன்னிப்பு கேட்டுக்...
மேலும் வாசிக்க...

Monday, June 25, 2007

டான்ஸ் பேபி டான்ஸ் :-)

வலைச்சரமம் தொடுத்துச் சாமிக்குச் சாத்தி இப்ப எடுத்து எறியப்போயினம் அதுக்குள்ள மாலை கட்ட உதவி செய்தாக்கள் எல்லாருக்கும் நன்றியைச் சொல்லிக்கொண்டு மீண்டும் தத்தக்க பித்தக்கவில் சந்திப்போம்!கொஞ்சம் றிலாக்ஸா இந்தக் குழந்தைகளின் நடனங்களையும் பாட்டுக்களையும் பார்த்து ரசியுங்கள்.யாருக்காவது விளங்குதா?? பாசை விளங்கேல்ல ஆனால் முகபாவம் சூப்பரோ சூப்பர்:-)டோடு டோலுதான் அடிக்கிறா யெப்பா இதுவும் அந்தப்பொண்ணுதான் :-)ஹா ஹா இந்தப்பொண்ணு...
மேலும் வாசிக்க...

Friday, June 22, 2007

ஈழத்தின் இளைய தலை முறை

"ஈழத்தின் குட்டிச்சுவர் கூட்டம்" என்றுதான் தலைப்புப்போடுவம் என்று நினைச்சனான் பிறகு குட்டு வாங்கி மண்டைல போக்கிரி வடிவேலின்ர கட்டு மாதிரி வந்திடுமென்டு மனச மாத்திட்டன்.அகிலனண்ணாவின் கனவுகளின் தொலைவு இந்த வலைப்பதிவு எனக்குச் சமீபகாலமாகத்தான் அறிமுகமானது.ஏற்கனவே முன்பொருதடவை கனவுகளின் தொலைவுக்குச் சென்றிருக்கிறேன் ஆனால் அன்று நான் வாசித்த ஆக்கம் பெருசா என்னைக்கவரேல்ல ஆனால் போன வாரம் ஒருபேப்பரில் அகிலனண்ணா எழுதின"வண்ணத்துப்பூச்சி...
மேலும் வாசிக்க...

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா!

94 ம் ஆண்டுக்குப்பிறகு ஒவ்வொருநாளும் தாயகப்பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது.முந்தியென்றால் பள்ளிக்கூடத்திலயும் சரி வீட்டயும் சரி எந்தநேரமும் ஏதாவதொரு தாயகப்பாடல் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கும்.அப்பவும் இந்த ipod மாதிரி ஏதாவதிருந்திருந்தால் எல்லாத் தாயகப்பாடல்களையும் பாடமாக்கியிருக்கலாம்.அப்பிடியிருந்தும் 90 களில் வந்த கரும்புலிப்பாடல்கள் முதல் எல்லாப்படாட்டுகளையும் பாடமாக்கி மாவீரர் தினத்துக்கு ஊரில போட்டிருக்கிற...
மேலும் வாசிக்க...

Thursday, June 21, 2007

சித்திரம் பேசுகிறது

நேற்று ஒரு இடுகைகளும் போடமுடியவில்லை.அப்பிடியே போட்டிருந்தாலும் சிவாஜி பார்க்காம வலைச்சரத்தையா ஓடி வந்து பார்க்கப்போறீங்கிள் :-)இன்று ஓவியத்தோடு தொடர்கபுடையவர்களைப்பற்றியும் அவர்களின் இணையத்தளங்களைப்பற்றிச் சொல்றன் கேளுங்கோ.ஆரதி ரவீந்திரன்ஆரதி சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு இளம் ஓவியர்.இவருடைய "இளம் தூரிகையின் படர்வு!" என்ற வலைப்பதிவு...
மேலும் வாசிக்க...

Tuesday, June 19, 2007

இன்னிசை மட்டும் இல்லையென்றால்...

"எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்" என்ற அலைபாயுதே படப்பாடலில் ஒரு வரி வரும் "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்று.உண்மையா இசையென்று ஒன்று இல்லையென்றால் எப்பிடியிருக்கும்? யோசிச்சுக்கொண்டிருங்கோ நான் வலைச்சரத்தில எனக்குத்தெரிந்து பாடல்வரிகளையும் பாடல்பற்றியும் எழுதும் சில பதிவர்களையும் மற்றும் நான் பார்த்த சில youtube பாடல்களையும் தொடுத்திட்டு வாறன்.விஸ்ணு அண்ணாவின்...
மேலும் வாசிக்க...

Monday, June 18, 2007

எல்லாருக்கும் என்னோட ஒரு சேட்டை

பொன்ஸ்க்கு என்னோட நக்கல் கூடிப்போச்சு அதான் இந்த தன்னிலை விளக்கம் போடவேண்டியதாயிற்று."இசையரசி" என்று போட்டு என் குரலினிமையை இப்பிடி பப்பிளிஸிற்றி பண்றா..இந்தக்கொடுமையக் கேப்பாரில்லையா :-( எனக்குப்பிடித்த என் பதிவுகளுக்கு முதல் என்னைப்பற்றியும் நான் வலைப்பதிய வந்த கதையையும் சொல்றன்.எனக்கு அம்மா அப்பா வச்ச பெயர் ஜலஜா.தமிழ்ப்பெயர் இல்லையென்று தமிழார்வலர்கள் நக்கலடிக்கிறமாதிரி சலசா என்று கூப்பிடுவீங்கள் என்ற பயத்தில சினேகிதி...
மேலும் வாசிக்க...

சினேகிதி வந்திருக்கிறேன்

எல்லாருக்கும் வணக்கம்.இந்தவாரம் என்னை வலைச்சரம் கட்டச்சொல்லியிருக்கினம்.எனக்குண்மையா சரம் கட்டத்தெரியவே தெரியாது.ஊரில கோயில் திருவிழா நேரம் அக்காவும் அக்கான்ர நண்பர்களும் பொன்னொச்சிப்பூ நந்தியவட்ட தேமாப்பூ இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பூவெல்லாம் வச்சு இரண்டு வாழைநாரையும் வச்சு என்ன வடிவான பூமாலை கட்டுவினம்.ஆனால் நான் இரண்டு வாழை நாரை வச்சுக்கொண்டு பூவை வச்சு சுத்தினன் என்டால் பூ பிஞ்சு விழுந்திடும்.நானெல்லாம் ஊசியையும்...
மேலும் வாசிக்க...

Sunday, June 17, 2007

சிநேகிதச் சரம்....

ரவிசங்கர் தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் இட்டு ஒரே வாரத்தில் ஆறேழு இடுகைகள் பதிந்து கலகலப்பாகி விட்டார். தற்போது அதிகம் எழுதாத பதிவர்கள், திரட்டிகளில் இல்லாத காரணத்தால் நாம் தவற விடும் பதிவர்கள், ஒரே விதமான பேசுபொருளுடன் எழுதும் பதிவர்கள் என 'பதிவர் எத்தனை பதிவரடி[டா;)]!' என்று வியக்க வைத்துவிட்டார். எனினும், பிற தளங்களில் நுட்ப மேம்பாடு, பதிவுலகம் குறித்த ஆலோசனைகள் அதிகம் பேசும் அவரது இடுகைகள் கணினி நுட்பங்கள் குறித்த இன்னும்...
மேலும் வாசிக்க...

நுட்பம் பேசும் பதிவர்கள்

1. சங்கர் கணேஷ் - ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும்பாலும் கணினி, நுட்பம் குறித்து எழுதி சக்கை போடு போடுகிறார். இவர் பள்ளி மாணவர் தான் என்பது ஆச்சர்யப்படுத்தும் செய்தி. பதிவுகள் தவிர தமிழ்க் கணிமை களங்கள் சிலவற்றிலும் இயங்கி வருகிறார். 2. Techintamil.org -கணினி, மென்பொருள்கள் குறித்து மேலாளர் என்ற பெயரில் எழுதுகிறார். கூடிய சீக்கிரம் அவரே தம் உண்மைப் பெயரை வெளிப்படுத்துவதாய் சொல்லி இருக்கிறார் :)3. ஆமாச்சு - தமிழ் உபுண்டு குழுமத்தில்...
மேலும் வாசிக்க...

புது கூட்டு வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள்

முன்பு வலைச்சரத்திலேயே பல புது வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள் தந்து சிறில் எழுதி இருந்தார். எனக்குத் தோன்றும் சில ஆலோசனைகள்:1. வீடு / நிலம் / வண்டி வாங்குவது / விற்பது எப்படி - என்று அனுபவம் உள்ளவர்கள் எழுதினால் நல்ல வரவேற்பைப் பெறும்.2. +2, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராவது, மேற்படிப்பைத் தேர்ந்தெடுத்தல் குறித்த உதவிப் பதிவு. 3. மகப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள், தீர்வுகள்,...
மேலும் வாசிக்க...

Friday, June 15, 2007

திரட்டிகளில் காணக்கிடைக்காத பதிவுகள்

பலரும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் காணக்கிடைத்த சில வலைப்பதிவுகளை இங்கே தருகிறேன். 1. உள்வெளி - கனடாவில் வாழும் பேராசிரியர். செல்வகுமாரின் வலைப்பதிவு. தமிழ் விக்கிபீடியா, கலைச்சொல்லாக்கக் குழுமங்களில் நன்கு அறியப்பட்டவர். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ் சார் களங்களில் ஈடுபாடு உடையவராக அறியப்படுகிறார். இவரது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. 2. விழிகளின் மொழிகளில்...
மேலும் வாசிக்க...

Thursday, June 14, 2007

என் பார்வையில், Top 2 தமிழ் வலைப்பதிவர்கள்

என் பார்வையில், Top 2 தமிழ் வலைப்பதிவர்கள் குறித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.Paulo coelho எழுதிய The Alchemist நூலை முதலில் படித்தவுடனும் Majidi Majidiயின் Baran திரைப்படம் பார்த்த பிறகும் அவர்களின் பிற படைப்புகளையும் அலைந்து திரிந்து தேடிப் பிடித்தேன். ஒரு படைப்பாளியின் ஒரு படைப்பைப் பார்த்த உடனேயே, அவருடன் நம்மைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்போது, அவரின் பிற படைப்புகளைத் தேடிப் பார்க்க வைக்கும் போது நாம் அவரின் ரசிகராகவே...
மேலும் வாசிக்க...

Wednesday, June 13, 2007

தனித்தளத்தில் எழுதும் பதிவர்கள்

தனித்தளத்தில் இருந்து பதியும் தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் கூடி வருகிறது. எத்தனை பேர் தனித்தளத்தில் பதிகிறார்கள் என்று ஒரு குறிப்புக்காகவும் சுவாரசியத்துக்காவும் எண்ணிப் பார்த்ததில்..1. மதி2. கானா பிரபா3. பொன்ஸ்~~Poorna4. தமிழ்சசி5. மயூரேசன்6. விக்கி7. ஹல்வாசிட்டி விஜய்8. லோகேஷ்9. சதீஷ்10. வெங்கட்11. முகுந்த்12. அருட்பெருங்கோ13. shankar Ganesh14. ரவிசங்கர் ;)15. கிச்சு16. சுந்தரவடிவேல்17. பாலச்சந்தர் முருகானந்தம்.18....
மேலும் வாசிக்க...

Tuesday, June 12, 2007

ஒக்கே ஒக்க வலைப்பதிவு..

எனக்குத் தெரிந்து,1. மதியழகன் சுப்பையா கவிதைகள் - நிறைய தமிழாக்கப் படைப்புகள் இடம்பெற்றுள்ள ஒரே பதிவு.2. சாத்தான் எழுதும் பிறழ்வு - ஓவியம் குறித்து பேசும் ஒரே பதிவு.3. இயற்கை விவசாயம் - வேளாண்மை சார் பதிவு.4. கூமுட்டை என்னா சொல்றாருன்னா - பின்னூட்டங்களுக்காக குழாயடிச்சண்டைகளும் உலகப்போர்களும் நடக்கும் உலகில், பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்து விட்டு எல்லா இடுகைகளையும் இடும் ஒரே தமிழ்ப் பதிவு இதுவாகத் தான் இருக்கும்!!5. தமிழீழம்...
மேலும் வாசிக்க...

Monday, June 11, 2007

காணாமல் போன பதிவர்கள்

1. சந்தோஷ்குரு - கசாகூளம் வலைப்பதிவில் அருமையான நூல் விமர்சனங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் தந்து வந்தார்.ஓராண்டாய் காணாமல் போயிருந்தவர் weird குணம் சொல்ல மட்டும் இரண்டு மாதம் முன்னர் தலையைக் காட்டி விட்டு மறைந்து விட்டார்.2. காசி - இவரின் தமிழ்மண நிர்வாக அனுபவத் தொடர் நான் விரும்பிப் படித்தது. கடைசியாக ஜூலை 2006ல் பதிந்து இருக்கிறார். அதற்கப்புறம் ஆளைக் காணோம் !3. ராம்கி - பத்திரிகையாளர் என்ற வகையில் இவரது பதிவு பெரும்பாலான பதிவுகளைக்...
மேலும் வாசிக்க...

பதிவர் வாரம்

வணக்கம். வலைச்சரத்தில் ஒரு வாரத்துக்கு எனக்குப் பிடித்த பதிவுகள், பதிவர்கள் குறித்து எழுத இருக்கிறேன். இடுகைகள், பதிவுகள், திரட்டிகள் என்பதைத் தாண்டி அதற்குப் பின்னால் இயங்கும் பதிவர்கள் என் பார்வையில் முக்கியமானவர்களாகப் படுகிறார்கள். எனவே, வலைச்சர வழக்கத்துக்கு மாறாக, இடுகைகளுக்கு அல்லாமல் பதிவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து என் இடுகைகளை எழுதலாம் என்றிருக்கிறேன். எங்கும், என்றும் மனிதர்கள் தானே முக்கியம் :) ? முதலில்...
மேலும் வாசிக்க...

Sunday, June 10, 2007

ஆசிரியர் அறிமுகம்

வலைச்சரம் தொடுக்க இராமைத் தொடர்பு கொண்ட போதே, அவர் அந்த வாரம் தான் விடுமுறை முடிந்து திரும்புகிறார் என்பதால் நேரம் கிடைக்காமல் போகலாம் என்று எதிர்பார்த்தோம். எனினும், தன் அலுவலக, சொந்த நேரக் குறைபாடுகளுக்கிடையிலேயும் சொன்னபடி மூன்று இடுகைகள் இட்டு வலைச்சரத்தை மிகவும் அழகாக வழிநடத்தியுள்ளார். வட்டார வழக்கு பதிவுகள் ஒரு சுவை என்றால், வணக்குமுங்க இடுகைகளும் சுகமானவை.. சிவாஜி படம் பற்றிய இடுகைகளை இராம் தொகுத்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு...
மேலும் வாசிக்க...

Saturday, June 9, 2007

பாதித்த சிறுகதைகளில் சில...

உண்மைச் சம்பவத்தை கட்டுரையாக எழுதுவதில் வாசிப்பவர்களை உணர்வுபூர்வமாக பாதிப்புக்குள்ளாக்குவது என்பது சற்றே கடினந்தான். அதே போல் கதைகளிலே உண்மைச் சம்பவத்தை எழுதும் பொழுது உணர்வுப்பூர்வமான பாதிப்பு ஏற்படுத்துவதும் சற்றும் கடினந்தான். அந்த கடினமான எழுத்துப்பணியை கதைகளில் எளிதாக வடிக்கும் சில எழுத்தாளர்களின் கதைகளை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியவற்றை பார்க்கலாம்.தம்பியின் இந்த கதை, லாரி ஓட்டும் டிரைவர் குடும்பங்கள் சிலவற்றில்...
மேலும் வாசிக்க...

Friday, June 8, 2007

சிவாஜி - The Boss

சிவாஜி தற்போது தமிழ் சினிமாவுலகிலும் தமிழ் ஊடகங்களிலும் அதிகமாய் இல்லை ரொம்பவே அதிகமாய் உபயோகப்படுத்தபடும் பெயர். ரஜினி சந்திரமுகி முடிந்ததும் அடுத்தப்படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெகுசன ஊடகங்களுக்கு இணையான பதிவுலகிலும் சிவாஜி படத்தை பற்றிய பதிவுகள் வரதொடங்க ஆரம்பித்தன. அந்த வகையில் சிவாஜி படத்தை...
மேலும் வாசிக்க...

Thursday, June 7, 2007

வட்டார வழக்கு பதிவுகள்.....

சென்ற இரண்டு நாளாக அலுவலகப் பணி அழுத்தம் காரணமாய் இங்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியான தமிழ் இடத்துக்கு இடம் பலவகையான மொழிவழக்கு பிரயேகப்படுத்தபடுகிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நடையை வைத்து அவர்களின் சொந்த ஊரை அறியப்படும் பொழுது பிறக்கும் சந்தோஷம் அளப்பறியது அல்லவா?? பேசுவதில் இயல்பாக வரும் வட்டார வழக்கு மொழி எழுதும் பொழுது அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. நானும்...
மேலும் வாசிக்க...

Monday, June 4, 2007

எல்லாருக்கும் வணக்கமுங்க....

என் இனிய தமிழ் பதிவர்களுக்கு நாந்தான் உங்கள் பாசக்கார பய இராம் எழுதுகிறேன்னு பாரதிராஜா எப்க்ட்'லே பில்ட்-அப் எல்லாம் கொடுத்து எழுதமுடியாதுங்க. நம்ம மண்டையிலே இருக்கிற கொஞ்சகாணு பச்சை மண்ணிலே என்ன செய்யமுடியுமோ அதே மட்டுந்தானே செய்யமுடியும், சட்டி செய்யுற அளவுக்கு மண்ணை வைச்சிக்கிட்டு பானையா செய்யமுடியும். எதுக்கு இப்பிடி நீட்டி மொழங்குறன்னா வலைசரமின்னு ஒரு பதிவு. அதுக்கு ஒரு வாரத்துக்கு ஆசிரியர்'ன்னா கெத்தா இண்டரோ கொடுக்கவேணாமா?...
மேலும் வாசிக்க...

வெட்டிப்பயல், அய்யனார், இராம்

நேரமின்மையால் முந்தைய வாரத்தில் அறிமுகப்பதிவு எழுத விட்டுப்போய்விட்டது. அய்யனார் மன்னிக்க :)வெட்டிப்பயல் மே 21ஆம் தேதி தொடங்கும் வாரம் நிறைந்த வேலைச் சுமைகளுக்கிடையிலும் நிறைவான வாரமாக சரம் தொடுத்திருந்தார். பொருளடக்கம்வாரியான பரிந்துரைகள் என்றில்லாமல், பதிவர் வாரியான இடுகைகளாக பரிந்துரைத்ததில் பதிவர்களாக இருந்த எழுத்தாளர்கள் வரைக்கும் எழுதி பல்வகைப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.படிமக் கவிதைகள், ஆங்கிலப்படங்கள் என்று...
மேலும் வாசிக்க...

Sunday, June 3, 2007

விடைபெறல்

வலைச்சரத்தின் மூலமாய் என் பார்வைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆரம்ப பதிவில் சொன்னது போல சமீபமாய் படிக்க துவங்கியிருப்பதால் பெரும்பாலான பதிவர்களை இன்னும் கண்டறியவில்லை.என் ஒற்றைப் பார்வையில் இவ்வுலகில் தட்டுப்பட்ட இடுகை மற்றும் பதிவர்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.பதிவுகளை படித்த நபர்களின் எண்ணிக்கை எனக்கு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும்...
மேலும் வாசிக்க...

ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்

தூரன் குணா - கொரங்காடுவலைக் கவிகள் பதிவில் விடுபட்ட செறிவான கவிஞர்.அபூர்வமாய் வலைபதியும் குணா தற்போது தன் கவிதைகளை தொடர்ந்து பதிவிக்க தொடங்கி இருக்கிறார் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இவரின் சில கவிதைகள் ப்ரியத்தின் பொங்குகள், பாழை அடைகாப்பவன் நீ , கூடற்ற பறவைகாயத்ரிபாலைத்தினை என இலக்கியமாய் உள்ளே வந்திருப்பவர் ஒரே மாதத்தில் 40 இடுகைகளுக்கு மேல் எழுதி தள்ளிவிட்டார் .இவரின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் விமர்சனம் படித்து இன்னொரு நகைச்சுவை...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது