07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 28, 2009

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

வலைப்பூவின் இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும். ஆறாக ஊறினால் மட்டும் போதுமா? அது ஒரு வழி அமைத்துக் கொண்டு ஓட வேண்டும், வற்றாத நதிகளாக. அந்த காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலத்தில், மக்கள் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று தான் போக வேண்டிய இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால் ஆறு என்பதை வழி என்றும் சொல்வதுண்டு. மக்கள் ஆறுகளுக்கு அருகில் வாழ்ந்து வந்ததால் நாகரிகமும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கியதாக அறிகிறோம்.ஆறாவது...
மேலும் வாசிக்க...

Thursday, February 26, 2009

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியப்பணியில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலைச்சரத்தில் மல்லிப்பூக்களைத் தொடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த வலைப்பூச்சரம் மணமோடு கூடிய வாடா மல்லிப் பூச்சரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு,...
மேலும் வாசிக்க...

Wednesday, February 25, 2009

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

ஒன்று, இரண்டு, மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்று முருகப்பெருமான் ஒளவையாரைக் கேட்டாராம். அது மாதிரி நானும் புராணம் (பழைய கதை) பாடிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் இந்த ஏழு நாளைக்குத்தான் ஆட்டம். அதுக்கும் கிடைக்கின்ற நேரத்தைத் தான் பயன் படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் எப்போவாவது ஒரு பதிவு போட்டு தப்பித்துக் கொள்ளலாம். அப்படி போட வில்லை என்றாலும் கூட யாரும் கேட்கப் போவதில்லை.மூன்றாவது நாளுடன் விருந்தையும் மருந்தையும்...
மேலும் வாசிக்க...

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்று சொல்வார்கள். அதனால் விருந்து மருந்து போன்றவற்றைப் பற்றி பேசுவதை மூன்றாவது நாளுடன் முடித்துக் கொள்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.விருந்துக்கும், மருந்துக்கும் உள்ள உறவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.விருந்தாளி வீட்டுக்கு வந்திருக்கும் போது கணவன்,மனைவி சண்டையிட்டுக் கொண்டால், அது விருந்தல்ல, மருந்து.கிடா(கடா) வெட்டி சோறாக்கிப் போட்டா தான் விருந்து என்று நம்மில்...
மேலும் வாசிக்க...

Tuesday, February 24, 2009

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்வார்கள். அதனால் தான்நான் இரண்டாம் நாளே வந்துவிட்டேன்.விருந்தோம்பல் தமிழர் பண்பாடு, இன்றளவும் விருந்தோம்பலை நாம் கட்டிக் காத்து வந்திருக்கிறோம். வீட்டுக்கு வந்த விருந்தாளியை அமரவைத்து தண்ணீர் எடுத்துவந்து குடிக்கக் கொடுத்து பின்னர் சாப்பிடுங்கள் என்றவுடன், விருந்தாளி இருக்கட்டும் இப்பதான் சாப்பிட்டு...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது