07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 30, 2007

குறிவைக்கப்படும் இந்திய இளந்தகமை.

நேற்று என் முதலாவது இடுகையை இட்டதும் பலர் நினைத்திருக்கக் கூடும், ஈழவிடுதலைப்போராட்டம் குறித்த விடயங்களைப்பற்றியே பேசப்போகின்றேன் என்று. பலர் வந்து பார்த்தும், மெளனமாய் போனதற்கும் இதுவே காரணம் என்பதையும் நன்கறிவேன். ஆனால் என் நோக்கம் அதுவல்ல. கட்டுப்பெட்டிகளாக இருந்த எங்கள் கண்களைத்திறந்து ஈழவிடுதலைப்போராட்டம்தான். தேசிய விடுதலைப்போர் என்ற எண்ணப்பாட்டினூடே எங்கள் தேசத்திலுள்ள ஏனைய ஒடுக்குமுறைகளையும் நாங்கள் அறியத் தொடங்கினோம்...

கிராமத்துத் தெருக்களிலும், வயல் நிலங்களிலும், கடற்கரைகளிலும், திரிந்தவர்களால், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் துயர்களையும், துன்பங்களையும், நேரிடையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைவிடவும், அதுபோன்ற துயர் நிகழுமிடங்களை அடையாளங்காணவும் முடியும். அண்மையில், விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பேசிய ஒரு தமிழக இளைஞனின் உரையில், வளர்ந்துவரும் இந்தியாவின் வளங்கள் மீது வைக்கப்படும் குறிகள் பற்றி விளக்கமாகச் சொன்னான். யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாத ஆணித்தரமான வாதம். அந்தளவில் அதைவிட்டுவிட்டேன்.

சென்றவாரத்தில் சுவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், இந்தியா மீதான ஒரு பார்வை ஆராயப்பட்டது. நிகழ்ச்சியின் காட்சிப்படிமத்தில் கமலும் சிநேகாவும் சுவிஸ் மலைகளில் நடனமாடுக் காட்சியைப்படமாக்கப்படுவதும் கூடக்காட்டப்பட்டது. ஆகா நம்ம தமிழ் நட்சத்திரங்கள் சுவிஸ் தொலைக்காட்சியில் என ஒரு கணம் புல்லரித்துப்போனாலும், நிகழ்ச்சி சொன்ன செய்தி, சூடாகவே இருந்தது. சுருக்கமாகச் சொல்வதாயின், தொழில்நுட்பத் தகமைகளில், திறன் பெற்றுவரும், இந்திய இளைஞர்களின் உழைப்பை, உழைப்பாகவும், உல்லாசமாகவும், பெற்றுக்கொள்வதற்கான திட்டமாகவே எனக்குப் பட்டது. இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இனிவரும் காலங்களில் உலகெங்கிருந்தும் வரலாம். அவற்றில் கணேசாவும்(விநாயகர்), கமலஹாசனும், கைகோர்த்தும் வரலாம். அவற்றினூடு இந்தி இளைஞர்களின், திறமை, உழைப்பு, ஊதியம் என்பன, அவர்களறியாமலே உறிஞ்சப்படலாம். இதைப்பபற்றி, இளைய இந்தியா எண்ணிப்பார்க்கவில்லையா என்ற சிந்தனையோடு வலைப்பதிவுலகில் பார்த்த போது சில பதிவுகள், இடுகைகள், கண்ணில் பட்டன..

அசுரனின் இந்த இடுகையும், வேறுபல இடுகைகளும் இதுகுறித்துப் பேசியுள்ளது. இதுபோன்று ஆழியூரானின் நடைவண்டி., வரவனையான், ராஜாவனஜ், சபாபதி சரவணனின் துள்ளிவருகுது வேல் , என அவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன். இதனால், இவர்கள்தான் என்றல்ல, இந்தப்பதிவர்களின் எல்லா இடுகைகளையும் படித்தவனும் என்றல்ல. ஆனால் இவர்களது ஏதோ ஒரு இடுகையைப் படித்தபோது இவர்களுள் உறைந்துபோயுள்ள உணர்வினைக் கண்டுகொண்டதால், குறிப்பிட்டுள்ளேன். இந்திய தேசத்தின் பரப்பு விசாலத்திற்கு இந்த உதாரணங்கள் ஒரு துளி மட்டுமே....

1 comment:

  1. ஒடுக்கப் பட்டவர்களின் குரலாய் ஒலிக்கும் வலைப்பதிவுகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்...

    ReplyDelete