
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்இனிதாவது எங்கும் காணோம்;
1. காதழியம்
கண்களை மூடிக்கொள்ளுங்கள்,
இவர் கவிதை படிக்கும்போதல்ல....!படித்தபின்...
அப்பொழுதுதான்
அவிழ்த்து விட்ட கூந்தலின்
அவிழ்ந்து விழுந்த கனவுகளின்
சுகந்தமான மனம் தெரியும்
2. நீ அறிவாயா..?
மோகனனின் கவிதைகள்
காதலியைப் பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்கிறார்....அழகான மழலைகள்
3....
மேலும் வாசிக்க...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
வணக்கம் வலையுலக நண்பர்களே! பூமி உருண்டை என்பதனால் நாம் எங்கு தொடங்குகிறோமோ அங்கே வருவோம், இது அறிவியல், அது போல்தான் அமைந்து விட்டது. என்னுடைய முதல் பதிவு வீடு, வலையின் பெயரும் அதுதான், அதை வலைசரத்தில் அறிமுகப்படுத்திய திருமதிP.S.ஸ்ரீதர் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் வணங்குகிறேன்.
வயதில்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !அனைவருக்கும் வணக்கம் இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர்கோகுல் - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்புடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்ம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு பதிவுகள் இட்டு, ஐம்பத்து மூன்று பதிவர்களை அறிமுக படுத்தி, அவர்களது அறுபத்தைந்து பதிவுகளையும் - தன்னுடைய் இருபத்தைந்து பதிவுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார். பெற்ற மறுமொழிகளோ நூறினைத் தாண்டி விட்டது. நண்பர் கோகுலை...
மேலும் வாசிக்க...
இந்த வாரம் நிறைய தேடல்.நிறைய புதிய தளங்களின் அறிமுகம் எனக்கும் கிடைத்தது.இன்னும் நிறைய பேரை அறிமுகம் செய்ய நினைத்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் எழுதலாமா எனவும் நினைத்தேன்.ஆனால் எனது சூழல் ஒத்துழைக்கவில்லை.சொல்லப்போனால் முதலிரண்டு பதிவுகள் வெளியே உலவு மையம் (browsing center)போய்தான் பதிவிட்டேன்.நான் அறிமுகப்படுத்த விரும்பும் சிலபதிவுகளுடன் மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.
செய்தாலி இந்த தளம் முழுக்க கவிதைகள் கசிகின்றன.வீதிக்கு...
மேலும் வாசிக்க...
கொஞ்சம் சினிமாத்தனமான டயலாக்கா தெரியும்.எனக்கு வேற மாதிரி சொல்லத்தெரியல.ஓகே.விசயத்துக்கு வரேன்.இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு தீப்பெட்டிக்குள் தூங்கிக்கிட்டு இருக்குற தீக்குச்சி மாதிரி இதனால் நல்ல விசயங்களை ஆக்கவும் முடியும் நல்ல விசயங்களையே அழிக்கவும் முடியும்.இதை கையிலெடுத்துக்கொண்டு சமூகத்தின் ஆக்கப்பாதைக்கு வெளிச்சம் தரும் சில பதிவுகளின் அறிமுகத்தை இன்று பார்க்கலாம்.
கிராமத்து காக்கை இந்தகாக்கை நகரத்திற்கு உணவு தேடி வந்திருக்கிறதாம்.சுற்றுச்சூழலை...
மேலும் வாசிக்க...
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாயம் சார்ந்த நாடு.இன்றைய நகரமயமாகும் சூழலில் விவசாயத்தின் நிலை கேள்விக்குறியாக மாறி வருகிறது.நம்மில் பலர் விவசாய சூழலை விட்டு வேறு துறைகளுக்கு மாறிவிட்டிருக்கிறோம்.இந்நிலையில் விவசாயத்திற்கான தேடல் வலையில் கிடைக்கிறதா என தேடிய போது கிடைத்த முத்துகள் சில பற்றி இன்றைய அறிமுகத்தில் பார்ப்போம்.
முதலில் கிடைத்த முத்து இதன் பெயரே பசுமைமுத்து. விவசாயத்தை மறந்துவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் விதையாகக்கிடக்கும்...
மேலும் வாசிக்க...
இன்னைக்கு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குறதுன்னு ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்.சிரிக்காம யாரும் தப்பிச்சுட முடியாது.
பொண்ணு பாக்கப்போறப்போ பஜ்ஜி சொஜ்ஜிஎல்லாம் சாப்பிட்டுட்டு ....ம்,சரிங்க ஊர்ருக்குப்போய் லெட்டர்(ஓ!இது அந்தக்காலத்துலதான) மிஸ்டு கால்(!) குடுக்குறோம்ங்க.இப்படித்தான் நடக்குது.ஆனா இந்த கதை வேற.காதலிக்குற பொண்ணோட அப்பாகிட்ட பொண்ணு கேக்க போறப்போ அவரு போன வாரம் வந்து பொண்ணு கேட்டது நீயில்லையா?அப்படின்னு கேட்டா பையனோட...
மேலும் வாசிக்க...
உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை இயற்கை பல ரகசியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.இந்த ரகசியம் உலகில் வீற்றிருக்கும் ஒவ்வொரு பொருளிலும்,ஒவ்வொரு உயிரிலும் அடங்கியுள்ளது.அதைக்கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த சாவிதான் அறிவியல்.தேடத்தேட முடிவுறாப்புள்ளியை நோக்கி பயணிக்கும் இந்த ரகசியம்.அறிவியலைப்படிப்பது நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கசக்கச்செயதாலும் கற்க கற்க இனிக்கும் விஷயம்.அதுவும் நமது இனிய தமிழில் சொல்லவா வேணும்.இன்றைய...
மேலும் வாசிக்க...
பதிவுக்கு தலைப்புவைக்க ரொம்ப யோசிப்போம்.சில பேரோட வலைப்பூவின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கும் அப்படிப்பட்ட சில தளங்களின் அறிமுகத்தை இன்று பார்ப்போம்.
யோசிங்க ,அட உங்களைசொல்லலைங்க இங்க ஒருத்தர் அப்படித்தான் தன் தளத்துக்கு பேர் வைச்சிருக்காரு.அப்படி என்ன யோசிக்க சொல்றார்னு உள்ள போய்த்தான் பாப்போமேன்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாதுங்க மண்டைய பிச்சுக்க வைச்சிட்டார்(யோசிச்சு தாங்க)அறிவுக்கு வேலை கொடுக்கும் பல விளையாட்டுகளை நீங்களும்...
மேலும் வாசிக்க...
வாழ்க்கை இனிப்பது சில நெகிழ்வான தருணங்களில் புரியும் ,அப்படிப்பட்ட சில தருணங்களின் அறிமுகம் இன்று.....
வாழ்க்கை வாழ்வதற்கே இரண்டு வார்த்தைகளில் இருந்தாலும் இது மாபெரும் தத்துவமாக எனக்கு தோன்றுகிறது.என்னடா இது வாழ்க்கை என சலித்துக்கொள்ளும் சில வேளைகளில் இந்த வார்த்தை புது தெம்பூட்டும்.இதையே தனது வலையின் தலைப்பாக வைத்து எழுதி வருகிறார் திரு பிரபாகர் இவர் தாத்தாவுக்கு எழுதிய கடிதத்தை நாமும் பார்க்கலாமா?
வாழ்வே பேரானந்தம்...
மேலும் வாசிக்க...