07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 7, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்

2


வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

ஏழாம் திருநாள்

07.06.2015


31. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்-16


காணத்தவறாதீர்கள்! 






 வியத்தகு விமான நிலையங்கள்-17





 பந்தாட்ட யானைகள்-18






32. திரு. எல்.கே என்னும் கார்த்திக் அவர்கள்
வலைத்தளம்: கவிச்சோலை


இவர்தான் என் வலைத்தளத்தினை 
முதன்முதலாக வலைச்சரத்தில்
அறிமுகம் செய்து சிறப்பித்தவர்

அதுபற்றிய மேலும் சுவையான தகவல்களுக்கு
என் வீட்டுத்தோட்டத்தில்.... 

அந்த என் முதல் வலைச்சர அறிமுகத்திற்கான இணைப்பு:

இவரின் சில படைப்புகள்:

விறைப்பு
அறிகுறிகள்
முழுவதும் நீயே





33. திரு. பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி அவர்கள் 
வலைத்தளம்: பச்சைத்தமிழன் உங்களில் ஒருவன்


 

மலிவு விலையில் ஆபத்து



34. திரு.  தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
வலைத்தளம்:  தமிழ்வாசி


மதுரை சித்திரைத் திருவிழா 2014




35. வேடந்தாங்கல் திரு. கருண் அவர்கள்
வலைத்தளம்: வேடந்தாங்கல்



காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பெண்மையைப் போற்றுவோம்







மீண்டும் நாளை சந்திப்போம் !



என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

75 comments:

  1. இன்று பூத்த இனியஅறிமுக மலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்...

    7 ஆம் திருநாள்...வந்த ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்...உற்சாகமாய் தொடருங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. @R.Umayal Gayathri

      :) மிக்க நன்றி, மேடம் :)

      Delete

  2. வலைச்சரத்தின் கலை இன்றையை பொக்கிஷங்களாக அறிமுகமாகி உள்ள அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள் / பாராட்டுக்கள்.
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @yathavan nambi

      :) மிக்க நன்றி நண்பரே :)

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வலைச்சர தோட்டத்தில் இன்று மலர்ந்த மலர்கள் அனைத்து பதிவற்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @Angelin

      :) மிக்க நன்றி, அன்புக்குரிய சகோதரியே :)

      Delete
  5. நன்று நன்று அத்தனை அறிமுகங்களிற்கம் இனபமான வாழ்த்துகள்.
    ஆரம்ப வி V கரங்களும் அழகு
    இனிய வாழ்த்து.

    ReplyDelete
  6. ஏழாம் திரு நாளில் இரண்டு இதுவரை
    தொடராத புதிய பதிவர்கள்.
    அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நண்பர்களுக்கு வாழ்த்துகள். எல்கே தெரியும். பச்சைத் தமிழன் பற்றி அறிந்ததில்லை. வேடந்தாங்கல் கருன் கேள்விப்பட்ட பெயர். ஆனால் அவர் வலைப்பக்கம் சென்றதில்லை!

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      :) மிக்க நன்றி, ஸ்ரீராம் :)

      Delete
  8. "பூக்களைவிட அந்தப் பூக்காரி அழகு"

    அருமையான வார்த்தைத் தொடர்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி Sun Jun 07, 04:57:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //"பூக்களைவிட அந்தப் பூக்காரி அழகு"
      அருமையான வார்த்தைத் தொடர்.//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹாஹ்ஹா :)

      அடியேனின் கண்டுபிடிப்பல்லவா இந்த சொல்லாடலான கதையின் ஆரம்ப வரிகள். அதனால் தான் பூக்களைவிட, அந்தப்பூக்காரியையும் விட அழகாக அது அமைந்து அனைவரையும் சுண்டியிழுத்துள்ளது.

      மிக்க மகிழ்ச்சி ஐயா. :)

      Delete
  9. இன்றைய அறிமுகங்களில் பச்சைத் தமிழன் எனக்கு புதிதானவர். அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  10. இன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @Tamizhmuhil Prakasam

      :) மிக்க நன்றி, மேடம் :)

      Delete
  11. பச்சைத் தமிழர் தவிர மற்ற அனைவரையும் வாசித்ததுண்டு. நல்லறிமுகங்கள் பெற்ற அனைவருக்கும மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @பால கணேஷ்

      :) மிக்க நன்றி, சார் :)

      Delete
  12. இன்று அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள். எல்லார் பக்கமும் போயிட்டு மீண்டும் வருவேன்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Sun Jun 07, 06:37:00 AM

      வாங்கோ, வணக்கம்மா.

      //இன்று அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள். எல்லார் பக்கமும் போயிட்டு மீண்டும் வருவேன்.//

      ஆஹா, பேஷா ....... எல்லார் பக்கமும் ஒரு ரெளண்ட் போய்ட்டு ஜாக்கிரதையா வந்து சேருங்கோ, பூந்தளிரே. :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  13. இராஜராஜேஸ்வரி, தமிழ்வாசி இருவரும் முன்னர் அறிமுகமானவர்களே. மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள். அவர்களுடைய வலைத்தலங்களுக்குச் சென்றேன். தங்களின் வலைப்பக்கங்களையும் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      :) மிக்க நன்றி, முனைவர் ஐயா அவர்களே :)

      Delete
  14. இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! வலைச்சர குழுவில் உள்ள திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பதிவு எனக்கு பரிச்சயமானது.

    தங்களது மூன்று சிறுகதைகளில் ‘ஜாதிப்பூ’ வை முன்பே படித்து இரசித்திருக்கிறேன். மற்ற கதைகளான ‘சூழ்நிலை’ ‘ஏமாற்றாதே ... ஏமாறாதே’ கதைகளை இன்று தான் படித்தேன். இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி Sun Jun 07, 07:23:00 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! வலைச்சர குழுவில் உள்ள திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பதிவு எனக்கு பரிச்சயமானது.//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //தங்களது மூன்று சிறுகதைகளில் ‘ஜாதிப்பூ’ வை முன்பே படித்து இரசித்திருக்கிறேன். மற்ற கதைகளான ‘சூழ்நிலை’ ‘ஏமாற்றாதே ... ஏமாறாதே’ கதைகளை இன்று தான் படித்தேன். இரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மனமார்ந்த நன்றிகள் .... சார்.

      Delete
  15. இன்றைய அறிமுகங்களில் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். மற்ற பதிவர்களின் வலைதளங்களுக்கும் சென்று வந்தேன். சிறப்பாக இருந்தது.
    தாங்கள் எழுதிய ஜாதிப்பூ சிறுகதையும் படித்தேன். அருமை. பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழுகு எனை கவர்ந்த சொற்றொடர்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. S.P. Senthil Kumar Sun Jun 07, 07:41:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகங்களில் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். மற்ற பதிவர்களின் வலைதளங்களுக்கும் சென்று வந்தேன். சிறப்பாக இருந்தது. //

      மிக்க மகிழ்ச்சி.

      //தாங்கள் எழுதிய ஜாதிப்பூ சிறுகதையும் படித்தேன். அருமை. பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழுகு எனை கவர்ந்த சொற்றொடர். //

      கதையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள இந்தச்சொற்றொடர் பெரும்பாலும், வாசக நண்பர்கள் அனைவராலுமே மிகவும் பாராட்டப்பட்டது.

      //த ம 5//

      வலைச்சரத்திற்காக தாங்கள் கொடுத்துள்ள வாக்களிப்புக்கு மிக்க நன்றி, சார்.

      Delete
  16. அனைத்து அன்பான நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) மிக்க நன்றி DD Sir :)

      Delete
  17. திருமதி.ராஜராஜேஸ்வரி, திரு.கருண், திரு.பாரி தாண்டவமூர்த்தி, திரு.தமிழ்வாசி பிரகாஷ் அனைவருக்கும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @மனோ சாமிநாதன்

      :) மிக்க நன்றி, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி மனோ மேடம் :)

      Delete
  18. சில அறிந்தவை
    சில அறியாதவை
    அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. @Muruganandan M.K.

      :) மிக்க நன்றி, டாக்டர் சார் :)

      Delete
  19. எனக்கு இரண்டு பேர் புதியவர்கள்.
    அறிமுகமான அனைவர்க்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @rajalakshmi paramasivam

      :) மிக்க நன்றி, மேடம் :)

      தினமும் வாங்கோ, ப்ளீஸ்.

      அன்புடன் கோபு

      Delete
  20. Replies
    1. @எல் கே

      வாங்கோ எல் கே வணக்கம்.

      தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  21. வந்தேன், கண்டேன், படித்தேன் ரசித்தேன். எல் கே தான் நான் முதன் முதலில் சந்தித்த பதிவர். டிஸ்கவரி புக் பாலஸ் .

    ReplyDelete
    Replies
    1. kg gouthaman Sun Jun 07, 12:46:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வந்தேன், கண்டேன், படித்தேன் ரசித்தேன்.//

      அனைத்துக்கும் மிக்க நன்றி. தங்களால் இன்று வலைச்சரம் வழக்கமான தன் ஏழினை எட்ட முடிந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி. :)))))))

      //எல் கே தான் நான் முதன் முதலில் சந்தித்த பதிவர். டிஸ்கவரி புக் பாலஸ் .//

      ஆஹா அப்படியா ! மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் மற்ற அனைத்துக்குமே மிக்க நன்றி, சார். :)

      அன்புடன் கோபு

      Delete
  22. சுவையான பதிவுகளைத் தந்த சிலரது இணைப்புகளைக் கண்டேன்.
    சில தளங்கள் சென்று வந்தேன்.
    இறை நாட்டப்படி தொடர்வோம்!!!

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) மிக்க நன்றி, நண்பரே :)

      Delete
  23. ராஜி மேடம், திரு. தமிழ்வாசி பிரகாஷ் தவிர மற்றவர்கள் புதியவர்கள். அவர்கள் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன். த.ம.வாக்கு போட்டு விட்டேன். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G Sun Jun 07, 02:05:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ராஜி மேடம், திரு. தமிழ்வாசி பிரகாஷ் தவிர மற்றவர்கள் புதியவர்கள். அவர்கள் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன். த.ம.வாக்கு போட்டு விட்டேன். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!//

      தங்கள் அன்பான வருகைக்கும் மற்ற அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நன்றியுடன் கோபு

      Delete
  24. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! உங்கள் புண்ணியத்தில் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் “ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்” – வலைப்பதிவினையும் மற்றும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் படித்தேன். இந்த ஒரு பதிவினுக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டங்களையே (24 கருத்துரைகள்) தொகுத்தால் ஒரு அனுபவக் கட்டுரையை இரண்டு பகுதியாக வெளியிடலாம்.

    நீங்கள் அறிமுகப்படுத்திய கவிச்சோலை எல்.கே என்னும் கார்த்திக், பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி ஆகியோர் 2012 – இற்குப் பிறகு பதிவுகள் எதுவும் எழுதுவது இல்லை போலிருக்கிறது.

    மதுரையில் சென்ற ஆண்டு நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில் சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், ஓய்வு ஒழிச்சல் இன்றி, செவ்வனே ஆற்றிய பணியை மறக்க இயலாது.

    ஒரு காலத்தில் வேடந்தாங்கல் திரு. கருண் அவர்களது கட்டுரைகள் தமிழ்மணத்தில் தொடர்ந்து வந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    இங்கு குறிப்பிடப்பட்ட, நான் ஏற்கனவே படித்த நீங்கள் எழுதிய கதைகளை மீண்டும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்..

    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ Sun Jun 07, 02:25:00 PM

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!//

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //உங்கள் புண்ணியத்தில் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் “ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்” – வலைப்பதிவினையும் மற்றும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் படித்தேன். இந்த ஒரு பதிவினுக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டங்களையே (24 கருத்துரைகள்) தொகுத்தால் ஒரு அனுபவக் கட்டுரையை இரண்டு பகுதியாக வெளியிடலாம். //

      ஆம். அது ஒரு பொற்காலம். இதுபோல அவர்களின் முதல் 1000 பதிவுகளில் ஆங்காங்கே என்னுடைய பின்னூட்டங்களை ஏராளமான எண்ணிக்கைகளில் தாங்கள் காணலாம்.

      ஒருசில பதிவுகளில் அவர்களுக்குக் கிடைத்துள்ள மொத்தப்பின்னூட்டங்களில் 25% to 50% என்னுடையதாகவேகூட இருக்கக்கூடும்.

      இன்று நான் நினைத்தாலும் திரும்ப அதுபோலெல்லாம் விரிவாக மனம் திறந்து எழுத முடியாத நிலையில் உள்ளேன். (என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை).

      வலையுலகில் அவர்கள் மேல் நான் வைத்துள்ள பக்தி, பிரியம், மரியாதை, அன்பு, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளான எங்களுக்குள் உள்ள தூய்மையான ஆத்மார்த்தமான நட்பு போன்றவற்றால் எனக்கென்னவோ அவர்கள் பதிவு பக்கம்போய் ஓரிரு வரிகளில் ஏனோ தானோவென கருத்திட முடியாமல் உள்ளதால் தற்சமயம் அவர்கள் பதிவுகளை நான் விரும்பிப் படிப்பதோடு சரி. கருத்துக்கள் ஏதும் பின்னூட்டமாக இடுவது இல்லை. நானே மிகவும் கஷ்டப்பட்டு அதை நிறுத்திக்கொண்டு விட்டேன். அந்த நாட்களுடன் இந்த நாட்களை ஒப்பிட்டுப்பார்த்தால் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. என்ன செய்வது?

      அன்று அவர்கள் ஒருவரின் தினசரி பதிவுக்கு மட்டுமே கொடுத்துவந்த எண்ணிலடங்காப் பின்னூட்டங்களை இன்று பரவலாக பல பதிவர்களுக்கும் பிரித்து அளித்து வருகிறேன் என்று நினைத்துக்கொண்டு, மனதை ஓரளவு சமாதானப்படுத்திக் கொள்கிறேன். இதுவும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்குமோ தெரியவில்லை. நாளுக்கு நாள் உடலும் உள்ளமும் சோர்வாகித்தான் வருகின்றன. முடிந்தவரை பார்ப்போம். ஏற்றுக்கொண்டுள்ள வலைச்சர ஆசிரியர் பதவியை முதலில் நல்லபடியாக முடிப்போம் என நினைத்துள்ளேன்.

      >>>>> தொடரும் >>>>>

      Delete
    2. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [2]

      //நீங்கள் அறிமுகப்படுத்திய கவிச்சோலை எல்.கே என்னும் கார்த்திக், பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி ஆகியோர் 2012 – இற்குப் பிறகு பதிவுகள் எதுவும் எழுதுவது இல்லை போலிருக்கிறது.

      மதுரையில் சென்ற ஆண்டு நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில் சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், ஓய்வு ஒழிச்சல் இன்றி, செவ்வனே ஆற்றிய பணியை மறக்க இயலாது.

      ஒரு காலத்தில் வேடந்தாங்கல் திரு. கருண் அவர்களது கட்டுரைகள் தமிழ்மணத்தில் தொடர்ந்து வந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. //

      நான் தற்சமயம் வலைச்சரத்தில் அடையாளம் காட்டிவரும் பதிவர்கள் பட்டியலில் சில குறிப்பிட்ட அடிப்படைக் காரணங்கள் உள்ளன. அவர்களில் சிலர் இப்போதும் பதிவுகள் எழுதி வெளியிடுபவர்களாக இருக்கலாம். ஒருவேளை அவ்வாறு இல்லாமலும்கூட இருக்கலாம்.

      ஆனால் இவர்கள் அனைவருமே ஒருகாலத்தில் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி, என் வலைத்தளத்தினை அறிமுகப்படுத்தியவர்கள் என்பதைத் தங்களுக்கும் மற்ற அனைவருக்குமே இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

      இவ்வாறு ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருந்து என்னையும் என் வலைத்தளத்தையும் அடையாளம் காட்டி சிறப்பித்தவர்கள் மொத்தம் சுமார் 68 நபர்கள் உள்ளனர். அவர்களை நானும் சிறப்பித்து அடையாளம் காட்டிட வேண்டியதை என் முதற்கடமையாக எடுத்துக்கொண்டுள்ளேன். ’நன்றி மறப்பது நன்றன்று’ அல்லவா! அதனால் தினமும் நால்வர் என்ற கணக்கில் முதல் 15-17 நாட்களில் அவர்களின் (அந்த 68 முன்னாள் வலைச்சர ஆசிரியர்களின்) அறிமுகங்களே அதிகமாக இடம்பெறக்கூடும்.

      மொத்தம் எனக்குள்ள 35 நாட்களில் சரிபாதி நாட்கள் இவ்வாறு கழிந்தாலும் அதன் பின் மேலும் சரிபாதி நாட்கள் உள்ளன அல்லவா! அவற்றில் நான் அடையாளம் காட்டி சிறப்பிக்க இருக்கும் பதிவர்களுக்கும் சில குறிப்பிட்ட அடிப்படைக் காரணங்கள் என்னிடம் உள்ளன. அவைபற்றி விரிவாக என் நிறைவுப்பகுதியில் (05.07.2015) நான் வெளியிட உள்ளேன்.

      இருப்பினும் இறுதியில் மேலும் பல நல்ல பதிவர்களை நான் அடையாளம் காட்டாமல் விட்டுவிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

      நிறைவுப்பகுதியினைப் படித்தபிறகே, இங்கு என்னால் அடையாளம் காட்டப்படுபவர்களே, நாம் எந்த அடிப்படையில் சிறப்பித்து இவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம் என்ற இரகசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

      அதுவரையில் இந்த சஸ்பென்ஸ் நீடிக்கட்டும். :)

      >>>>>

      Delete
    3. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [3]

      //இங்கு குறிப்பிடப்பட்ட, நான் ஏற்கனவே படித்த நீங்கள் எழுதிய கதைகளை மீண்டும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்..//

      மிகவும் சந்தோஷம், சார்.

      //த.ம.9//

      நம் வலைச்சரத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் நினைத்து தாங்கள், தாராள மனசுடன், தினமும் தொடர்ந்து, வலைச்சரத்திற்காக அளித்துவரும் தமிழ்மண வாக்குக்கு என் நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் தங்கள்,

      VGK

      Delete
  25. சிறப்பான அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. @சென்னை பித்தன்

      :) மிக்க நன்றி, ஐயா :)

      Delete
  26. இன்றைய வலைச்சரத்தில் தொடுக்கப்பட்ட பூக்களும் அருமை..

    அதிலும் - தங்களின் முதல் அறிமுகத்தினைக் குறித்து நன்றியுடன் நவின்றது நெகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ Sun Jun 07, 04:46:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய வலைச்சரத்தில் தொடுக்கப்பட்ட பூக்களும் அருமை..//

      சந்தோஷம்.

      //அதிலும் - தங்களின் முதல் அறிமுகத்தினைக் குறித்து நன்றியுடன் நவின்றது நெகிழ்ச்சி.. வாழ்க நலம்!..//

      ஆம். அது ஒரு அற்புதமான நெகிழ்ச்சியளிக்கும் பகிர்வுதான். அந்த ஒரு பதிவுக்கு மட்டுமே நான் அந்த நாட்களில் 24 பின்னூட்டங்கள் கொடுத்துள்ளேன். இன்று அவற்றை மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்.

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  27. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  28. எல்லாருடைய பதிவுகளும் படித்து ரசித்து பின்னூட்டமும் போட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Sun Jun 07, 06:25:00 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //எல்லாருடைய பதிவுகளும் படித்து ரசித்து பின்னூட்டமும் போட்டாச்சு.//

      ஹைய்யோ, கவலை விட்டுச்சு. :)

      ஆங்காங்கே தாங்கள் சில பதிவுகளுக்குச் சென்று கருத்தளித்துள்ளதை நானும் இங்கிருந்து மெயில் தகவல் மூலம் பார்த்து அறிந்துகொண்டேன். மிக்க நன்றிம்மா.

      Delete
  29. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழத்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் சீரிய பணி
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      ;) மிக்க நன்றி, சார் :)

      Delete
  30. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தினம், தினம் அறிமுகமாகும் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @Jayanthi Jaya

      வாங்கோ ஜெயா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் சிறப்பு வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  31. வாத்யாரே வணக்கம்!
    //"பூக்களைவிட அந்தப் பூக்காரி அழகு"
    அருமையான வார்த்தைத் தொடர்.//

    :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹாஹ்ஹா :)

    அடியேனின் கண்டுபிடிப்பல்லவா இந்த சொல்லாடலான கதையின் ஆரம்ப வரிகள். அதனால் தான் பூக்களைவிட, அந்தப்பூக்காரியையும் விட அழகாக அது அமைந்து அனைவரையும் சுண்டியிழுத்துள்ளது.

    மிக்க மகிழ்ச்சி ஐயா. :)///
    அந்த 'சுண்ட'லில் சிக்கி சிலாகித்ததாலல்லவா எனக்கு(ம்) விமர்சனப் பரிசும் கை கூடியது! தளங்கள் சென்று வாசித்து மீண்டும் வருகிறேன்!!! என்றும் அன்புடன் - உங்கள் எம்ஜிஆர்!!!

    ReplyDelete
    Replies
    1. @RAVIJI RAVI

      //அந்த 'சுண்ட'லில் சிக்கி சிலாகித்ததாலல்லவா எனக்கு(ம்) விமர்சனப் பரிசும் கை கூடியது! தளங்கள் சென்று வாசித்து மீண்டும் வருகிறேன்!!! என்றும் அன்புடன் - உங்கள் எம்ஜிஆர்!!!//

      பாண்டிச்சேரி பீச் கரையில் சூடான சுவையான காரசாரமான சுண்டல் சாப்பிட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தங்களின் வருகையும் கருத்துக்களும். கூடவே கொஞ்சம் ’கிக்’ அதிகமாகி தள்ளாடவும் வைத்துவிட்டது, வாத்யாரே ! மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  32. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தனிமரம் Mon Jun 08, 03:26:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அனைத்துவிதமான நல்லாதரவுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)

      Delete
  33. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  34. இன்று நீங்கள் அறிமுக படுத்திய பதிவுகளுக்கு
    சென்று வந்தேன்.
    உங்கள் அறிமுகத்தால் நிறைய படிக்க முடிகறது.
    நல்ல செயல்.
    வளர்க.
    விஜி

    ReplyDelete
    Replies
    1. @viji

      வாங்கோ விஜி, வணக்கம்.

      :) மிக்க நன்றி :)

      Delete
  35. இன்றைய அறிமுகத்தில் சிறப்பித்துள்ளவர்கள் தற்போது தொடர்ந்து எழுதாவிடினும் அவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்திருப்பது புதிய பதிவர்கள் படிக்க வாய்ப்பாக அமையும். தங்களின் நன்றியுணர்ச்சியும் பாராட்டத்தக்கது. திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் தாங்கள் சொல்லியிருப்பது போல விரிவான பின்னூட்டங்கள் இட முடியாதது எனக்கும் வருத்தமே! உங்களின் விரிவான பின்னூட்டங்களை பல பதிவுகளில் படிக்கையில் இதுபோன்று பின்னூட்டங்கள் இட நமக்கு முடியவில்லையே என்று தோன்றும். என்னுடைய பதிவுகளை நீங்கள் வாசித்தீர்களா என்று தெரியாது! உங்கள் பின்னூட்டங்கள் கிடைக்காதா என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன். உங்களின் வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்காததை கூறி என் போன்றவர்களை ஆறுதல் படுத்தி விட்டீர்கள். அதே சமயம் ஏற்ற பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் தங்களின் வலைச்சர பணி தொடர்வது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். உங்களின் இத்தனை பதிவுகளை இன்றே படிக்க முடியாது என்று நினைத்துதான் ஒருவார அவகாசம் கேட்டிருந்தேன். பின்னர் பதிவுகளும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் என்னுள் ஓர் ஆர்வத்தை தூண்டி எட்டு பதிவுகளையும் படித்து கருத்திட வைத்துவிட்டது. அனைத்துக்கும் ஓட்டளித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் நாளை இட்டுவிடுகின்றேன். உங்களின் பதிவுகளில் தந்துள்ள இணைப்புக்களுக்கு நேரம் கிடைக்கையில் சென்று வாசித்து மகிழ்கின்றேன். குறிப்பாக உங்கள் சிறுகதைகளை வாசிப்பது ஓர் சுகானுபவத்தை தருகின்றது. தாங்கள் முன்பு அறிவித்த சிறுகதைப் போட்டிக் கதைகளில் சிலவற்றை படித்து இருக்கின்றேன்! சிலவற்றை படிக்க முடியவில்லை! படிக்கும் எண்ணம் இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்கையில் படித்து கருத்திடுகின்றேன். உங்களை நேரில் சந்திக்கும் எண்ணமும் இருந்தது. இந்த முறை திருச்சிக்கு வந்தபோது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த முயற்சி தடைபட்டுவிட்டது. அடுத்த பயணத்தில் சந்தித்து மகிழ்வோம் என்று நினைக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 08:08:00 PM

      வாங்கோ .. வணக்கம்.

      //இன்றைய அறிமுகத்தில் சிறப்பித்துள்ளவர்கள் தற்போது தொடர்ந்து எழுதாவிடினும் அவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்திருப்பது புதிய பதிவர்கள் படிக்க வாய்ப்பாக அமையும். தங்களின் நன்றியுணர்ச்சியும் பாராட்டத்தக்கது. திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் தாங்கள் சொல்லியிருப்பது போல விரிவான பின்னூட்டங்கள் இட முடியாதது எனக்கும் வருத்தமே! உங்களின் விரிவான பின்னூட்டங்களை பல பதிவுகளில் படிக்கையில் இதுபோன்று பின்னூட்டங்கள் இட நமக்கு முடியவில்லையே என்று தோன்றும்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //என்னுடைய பதிவுகளை நீங்கள் வாசித்தீர்களா என்று தெரியாது! உங்கள் பின்னூட்டங்கள் கிடைக்காதா என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன். உங்களின் வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்காததை கூறி என் போன்றவர்களை ஆறுதல் படுத்தி விட்டீர்கள்.//

      தங்களின் பெரும்பாலான பதிவுகளை நான் வாசித்துள்ளேன். நேரமின்மையாலும் உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதாலும் கருத்தளிப்பது இல்லை. மேலும் நான் தொடர்ச்சியாகப் படித்து கருத்தளிக்கும் பதிவர்களின் எண்ணிக்கையை நானே குறைத்துக்கொண்டுள்ளேன். [ONLY VERY LIMITED CIRCLE] அதற்கும் பல காரணங்கள் உள்ளன. இங்கு நான் அவற்றைத் தெரிவிக்க விரும்பவில்லை.

      >>>>>

      Delete
    2. VGK >>>>> திரு. ’தளிர்’ சுரேஷ் [2]

      //அதே சமயம் ஏற்ற பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் தங்களின் வலைச்சர பணி தொடர்வது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.//

      அதே அதே .... புரிதலுக்கு நன்றிகள்.

      //உங்களின் இத்தனை பதிவுகளை இன்றே படிக்க முடியாது என்று நினைத்துதான் ஒருவார அவகாசம் கேட்டிருந்தேன். பின்னர் பதிவுகளும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் என்னுள் ஓர் ஆர்வத்தை தூண்டி எட்டு பதிவுகளையும் படித்து கருத்திட வைத்துவிட்டது. அனைத்துக்கும் ஓட்டளித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் நாளை இட்டுவிடுகின்றேன்.//

      இரண்டாம் நாள் பதிவுக்கு மட்டும் தாங்கள் இன்னும் வருகை தரவில்லை. மற்றபடி தாங்கள் வருகை தந்துள்ளவற்றில் 5ம் நாள் பதிவுக்கு மட்டும் தமிழ்மண வாக்கு அளிக்கவில்லை என நான் நினைக்கிறேன். தாங்கள் இங்கு இதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளதால் மட்டுமே நானும் இதனை இங்கு தங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

      பொதுவாக நான் என் வலைத்தளப்பதிவுகள் எதையும் எந்தத்திரட்டிகளிலும் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இணைப்பது இல்லை. யாரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நான் விரும்புவது இல்லை.

      இருப்பினும் நடுவே கொஞ்சம் வாட்டம் அடைந்துள்ள வலைச்சரத்தின் புகழினைப்பரப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும் என நினைக்கிறேன்.

      அதனால் எனக்காக இல்லாவிட்டாலும் நம் வலைச்சரத்தின் வளர்ச்சிக்காக தாங்கள் தங்களின் பொன்னான தமிழ்மண வாக்கினை அளித்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      //உங்களின் பதிவுகளில் தந்துள்ள இணைப்புக்களுக்கு நேரம் கிடைக்கையில் சென்று வாசித்து மகிழ்கின்றேன். குறிப்பாக உங்கள் சிறுகதைகளை வாசிப்பது ஓர் சுகானுபவத்தை தருகின்றது. தாங்கள் முன்பு அறிவித்த சிறுகதைப் போட்டிக் கதைகளில் சிலவற்றை படித்து இருக்கின்றேன்! சிலவற்றை படிக்க முடியவில்லை! படிக்கும் எண்ணம் இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்கையில் படித்து கருத்திடுகின்றேன்.//

      அதனால் பரவாயில்லை. நாம் எது செய்வதானாலும் நமக்கு மனதில் விருப்பமிருந்தால் மட்டும் போதாது. நேரமும் காலமும், மற்ற சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதை நானும் நன்கு உணர்கிறேன்.

      //உங்களை நேரில் சந்திக்கும் எண்ணமும் இருந்தது. இந்த முறை திருச்சிக்கு வந்தபோது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த முயற்சி தடைபட்டுவிட்டது. அடுத்த பயணத்தில் சந்தித்து மகிழ்வோம் என்று நினைக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள்! நன்றி!//

      என்னை சந்திப்பது மிக மிக சுலபமானதே. அதில் யாருக்கும் எந்தக்கஷ்டமுமே இருக்காது. பிராப்தம் இருந்தால் சந்திப்போம். அன்பான வருகைக்கும் நீண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  36. ராஜி, எல் கே, கருண், ப்ரகாஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    பாரி அவர்களின் தளம் புதிது. அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது