07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 28, 2013

5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்....

வணக்கம்...

இவது பெயர் அஷ்ரப். திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத பல தகவல்களை   திருவள்ளுவர் பற்றி அறியாத தகவல் என்று புது கோணத்தில் குறிப்பிடுகிறார். பறக்கும் விமானத்தை முதன் முதலில் யார் கண்டுபிடித்தார், அவர்கள் ரிக் வேதம் கொண்டு இயற்றிய விமானத்தை படங்கள் மூலம் ஆதாரத்துடன் மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில் என்ற பதிவில் விளக்குறார் இந்த நண்பர்.  தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள் என்ற பதிவில் குறிப்பிடுகிறார். மேலும் இவர் தனது பதிவில் பெண்கள் ஏன் காதலை ஏற்க்க மறுக்கின்றனர் என்பது பற்றியும் அழகாக குறிப்பிட்டுள்ளார். 

இவர் விமரிசனம்- காவிரி மைந்தன் என்ற அழகான பெயரில் எழுதுகிறார். தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் என்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், பார்த்தது ஷாக் ஆகிட்டேன். நீங்களும் பாருங்கள். சிவனையே சாய வைத்த சிவனின் மனைவி என்று உத்ராகன்ட் பேரழிவு பற்றி சில படங்களுடன் குறிப்பிட்டுள்ளார். 

உங்களுக்காக வலைப்பூவில் எழுதும் இவர் ஏராளமான மருத்துவ பதிவுகளை வெளியிட்டுள்ளார். குழந்தைகள் தேடும் தேடு பொறி இயந்திரம் பற்றி மிக அழகாக கூறுகிறார். இவர் குடு குடு மத்திய அமைச்சரவை முதல் சேக்கிழார் குருபூஜை வரை பேசுகிறார். மேலும் இவர் எழுதியுள்ள வைரமனியின் வெட்டியாள் வேலை பற்றி படிக்கும் பொது மனம் வெதும்புகிறது.

அடுத்து இவர் பெயர் ராஜ முகுந்தன், இவர் தளம் வல்வையூரான். அழகான ஹைக்கூக்கள் எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய தித்திக்கும் வெளிநாடு என்ற கவிதையை படியுங்கள். அவர் மகன் ஏழு வயது குட்டி வல்வையூரான் எழுதிய அழகு கவிதையையும் படியுங்கள்... சொக்கிப்போவீர்கள்....

அடுத்த பதிவு சிறிய பறவை. சம்சாரம் அது மின்சாரம் பதிவை படிங்க. மின்சாரம் பற்றி நல்லா சொல்லிருப்பாரு. அடுத்து 2030ல் மணமகளுக்கு என்ன செய்யப் போறோம் பதிவப் பாருங்க. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஆனால் இவரை கடந்த இரண்டு வருடங்களாக காணவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு அம்மாக்களின் பகிர்வுகள். அனைத்து குழந்தை வளர்ப்பவர்களும் படிக்க வேண்டியது. இவர் குழந்தைகள் பற்றி நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளின் மொழி கற்கும் திறன். அவசியம் அனைத்து பெற்றோர்களும் பின் தொடர வேண்டிய வலைப்பூ.

அடுத்த பதிவர் ஆகாய நதி. இவர் தன மகன் பொழிலன் பற்றி அழகா தன்னோட தளம் முழுக்க சொல்றாங்க. படிச்சி பாருங்க... அம்மா உன் வயிற்ருக்குள்ள... பதிவ படிங்க, குழந்தை எவ்ளோ புத்திசாலித்தனமா கேட்ட கேள்விய அசால்டா சமாளிசிருப்பாங்க!

வலைதளத்தின் பெயர் சித்திரன். குழந்தைகள் எதற்க்காக என்ற பதிவின் மூலம் குழந்தைகள் விருப்பம் பற்றி அவர் எழுதிய பதிவு சிறப்பாக இருக்கிறது.

அடுத்த பதிவு, மழைச்சாரல்.இவரின் அமிலம் தொட்ட மலர்கள், அம்மாவிற்காய் கவிதைகள் சிறப்பாக இருக்கும்...

என்னுயிரே. இவரின் தளம் முழுக்க காதல் கவிதையாய் சிதறிக்கிடக்கிறது, படித்துப் பகிருங்கள்...

அடுத்த வலைப்பூ எனக்குள் ஒருவன். இவரின் ஆடிப்பெருக்கு அரை குடத்தில் ஒரு உதாரணம். 


கடந்த வலைச்சர ஆசிரியர் ஆசியா உமர் அவர்களுக்கு காப்பி, டீ போட்டுக கொடுத்தது போல எனக்கு யாரும் காப்பி போட்டுகொடுக்காததால் இன்றைய பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...

நன்றி, வணக்கம்....

வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி...



22 comments:


  1. வணக்கம்!

    வெற்றிவேல் இங்கு விளைத்த வலைபூக்கள்
    பற்றிப் படைக்கும் பசுந்தமிழை! - கற்றுக்
    களித்தேன்! கனிந்த கவிதையில் நன்றி
    அளித்தேன்! உறவாய் அணைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  2. வணக்கம்!

    தமிழ்மண வாக்கினைத் தந்துள்ளேன்!வாழ்க
    அமிழ்தத் பதிவை அளித்து!

    தமிழ்மணம் 1

    ReplyDelete
  3. பலர் பகிர்வுகளை தொடரா விட்டாலும், தேடித் தேடிப் பல சிறந்த பயன் தரும் பகிர்வுகளை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பா... இன்றைய அறிமுகங்களில் நான்கு தளங்கள் புதியவை... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஆசிரியர் ஆசியா உமர் அவர்களுக்கு காப்பி, டீ போட்டுக கொடுத்தது போல எனக்கு யாரும் காப்பி போட்டுகொடுக்காததால் இன்றைய பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...//

    காபி, டீ போட்டுக் கொடுத்து உற்சாகபடுத்த ஆள் இல்லாமல் இவ்வளவு பதிவுகள் கொடுத்து இருக்கிறீர்கள் போட்டு கொடுத்து இருந்தால் இன்னும் எத்தனை வலைத்தளங்களோ!
    இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களூக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான் பதிவுகளை குறிபிட்டதற்கு.

    ReplyDelete
  5. அனைத்து தளங்களுமே புதியவை.... தொடர்கிறேன்... அறிமுகப்படுத்திய வெற்றிவேலுக்கு நன்றி... அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. எனது வலைதளத்தை இங்கே அறிமுக படுத்திய ஆசிரியர்க்கு மிக்க நன்றி.. :) .. பல புதிய தளங்களை பற்றியும் அறிந்து கொள்ள செய்துள்ளீர்கள்... இந்த அறிமுகத்தை பற்றி எனக்கு செய்தி அளித்த தனபாலன் சார் கும் என்னுடைய நன்றிகள்... உங்களை போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவே நிறைய எழுத ஊக்கம் கொடுக்கிறது... :)

    ReplyDelete

  7. எனது தளம் மழைச்சாரல்
    http://wordsofpriya.blogspot.in/

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள்.. அனைவருக்கும்
    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  9. என்னையும் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். நன்றிகள் தம்பிகள்.

    ReplyDelete
  10. கவலப்படாதீங்க பாஸ் ஐஸ் கிரீம் வாங்கி தாறேன் :p

    ReplyDelete
  11. வெற்றிவாகை சூடி விரைந்து முன்னேறும் வெற்றிவேல் உங்கள் இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு!

    அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நிறைய தளங்கள்! நிறைவான தளங்கள்! அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. வணக்கம்,வெற்றிவேல் சார்! யாருமே காப்பி,டீ குடுக்கலேன்னு கவலைப்படாதீங்க,வாங்க ஒரு பூஸ்ட் சாப்புடலாம்!

    ReplyDelete



  14. நண்பரே,

    உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.
    வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும்
    என் உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.


    -காவிரிமைந்தன்
    www.vimarisanam.wordpress.com

    ReplyDelete
  15. // கடந்த வலைச்சர ஆசிரியர் ஆசியா உமர் அவர்களுக்கு காப்பி, டீ போட்டுக கொடுத்தது போல எனக்கு யாரும் காப்பி போட்டுகொடுக்காததால் இன்றைய பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...//

    வெற்றிவேல், காப்பி டீ போட்டுத்தராமலே இத்தனை தளங்கள் அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள் சகோ.வீட்டு வேலைகள் எல்லாம் சரியாக செய்து முடித்து விட்டு டயர்டாக வலைச்சரத்தில் அமர்ந்ததால் தான் அந்த டீ,காபியே கிடைத்தது.சகோ,இல்லாட்டி திட்டு தான் கிடைத்திருக்கும்.ஹி..ஹி..!

    ReplyDelete
  16. //காபி, டீ, போட்டுத் தர யாரும் இல்லாததால்....//

    இன்னிக்கு எழுத உட்காரும் முன்னரே, டீ [அ] காபி போட்டு ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக் கொண்டு கணினி முன்னால் அமருங்களேன்! :)

    நல்ல அறிமுகங்கள் வெற்றிவேல்!

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. காப்பி இல்லை என்று கவலை வேண்டாம் நான் பால்க்கோப்பி ஊத்தித்தாரேன்:)))
    அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. எனது வலைதளத்தை இங்கே அறிமுக படுத்திய ஆசிரியர்க்கு மிக்க நன்றி.. :) இந்த அறிமுகத்தை பற்றி எனக்கு செய்தி அளித்த தனபாலன் என்னுடைய நன்றிகள்...

    ReplyDelete
  20. என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கும் தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .வாழ்கவளமுடன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது