07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 11, 2013

ப்ளாக்கர் அறியாத ப்ளாக்கர்கள்...

என் அறிமுகப்பதிவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த வரவேற்பு ஒரே நேரத்தில் 4 கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருப்பவனை போல் பெருமையாகவும், பயமாகவும், பதட்டமாகவும் ஒரு கலவையான ஃபீலிங்கை கொடுத்திருக்கிறது.. நன்றிகள் பல..

இன்று நான் சில பதிவர்களையும், அவர்களின் நல்ல பதிவுகளையும் சொல்லப் போகிறேன்.. இது வழக்கமான ஒன்று தானே, என்ன சிறப்பு இருந்து விடப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறது.. இவர்கள் தங்கள் ப்ளாக்கில் எழுதியிருப்பது மொத்தமே பத்து பதிவுகளுக்குள் தான் இருக்கும்.. ஆனாலும் மிக அருமையாக எழுதக்கூடியவர்கள்.. இவர்கள் தொடர்ந்து எழுதாதற்கு காரணம், ரெண்டு.. முதல் காரணம், இவர்களுக்கு தங்கள் எழுத்தை, தங்கள் ப்ளாக்கை எப்படி பலரும் படிக்குமாறு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தெரியவில்லை.. இரண்டு, சரியான ஊக்குவிப்பு இல்லை.. ஆனால் இனி அவர்களுக்கு அந்த இரண்டுமே கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நான் அவர்களை பற்றி சொல்கிறேன்.. பி.கு.: ஒருத்தர் தன் வலைப்பக்கத்தை போன வாரத்தோடு மூடிவிட்டார் :-( 

சரி, இருப்பவர்களை பற்றி பார்க்கலாம்...

முதலில் ராஜேஷ்.. இவர் திரலிவாசன் என்கிற பெயரில் எழுதி வருகிறார்.. இவரை நான் முதல் முறை பார்த்ததை கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன்.. அது ஒரு வெயில் கொழுத்தும் மதிய வேளை.. கல்லூரியின் லன்ச் பிரேக்கில் நான் ஹாஸ்டல் மெஸ்ஸில் நுழைகிறேன்.. உள்ளே என் தட்டை எடுக்கும் போது தான் கவனிக்கிறேன், ஒரு டேபிளில் ஒருவரை சுற்றி 7,8 பேர் அமர்ந்து கொண்டு அவர் சொல்வதை, ஒரு சமத்தான மாணவன் கேட்பதை போல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. அவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, இடக்கையை தன் மடியிலும், வலக்கை முட்டியை டைனிங் டேபிளில் ஊன்றி விரல்களை காற்றில் வீசி வீசி, எஸ்.குருமூர்த்தியின் ஒரு கட்டுரை பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்.. எஸ்.குருமூர்த்தி, ஒரு தேர்ந்த economist, charted accountant, பத்திரிகையாளர், பி.ஜே.பி ஆதரவாளர்.. ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் வியாபார “யுக்திகளை” கிழித்து தொங்க விட்டவர். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், மணிரத்னம் எடுத்த குரு படத்தில், மாதவன் வருவாரே, அதன் ரியல் லைஃப் வெர்சன் தான் எஸ்.குருமூர்த்தி.. நான் கூட ராஜேஷை யாரோ கொஞ்ச வயசு வாத்தியார் என்று தான் நினைத்தேன்.. பின்பு தான் தெரிந்தது, பொறியியல் முடித்து சில ஆண்டுகள் வேலை செய்து பின் MBA வந்தவர் என்று.. கால் மேல் கால் போட்டு கம்பீரமாக தெளிவாக அவர் பேசிய தோரணை இப்போதும் என் கண் முன் நிற்கிறது..

அவர் ஆரம்பித்த ப்ளாக் தான் திரலிவாசன்.. நானும் அவரும் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாத இடைவெளியில் தான் ப்ளாக் ஆரம்பித்தோம்.. இவரின் கவிதைகளும், அதில் இருக்கும் அரசியல் பொருளாதார நையாண்டிகளும் மிக நன்றாக இருக்கும்.. 

சில்லரை வர்த்தகம் பற்றி இவர் சமீபத்தில் (6மாதம் முன்) எழுதிய இவரின் கடைசி பதிவில், ஒரு தெருமுக்கு பலசரக்கு கடைக்காரருக்கும் நமக்கும் இருக்கும் உறவை, நட்பை மிக சாதாரணமாக அழகாக சொல்லியிருப்பார்.. அந்த கடைசி வரி, ”வால்மார்ட்டில் எல்லாம் கிடைக்குமாம் , அடிமைகளும் கிடைப்பார்களாம் ” படிக்கும் போது கவனியுங்கள் அதில் இருக்கும் ஆதங்கத்தையும் கோவத்தையும் நக்கலையும்..

அடுத்து அவர் ஸ்பெக்ட்ரம் பற்றி நாலே வரியில் ஒரு சிறு கவிதை எழுதியிருப்பார்.. 
\
என் பக்கத்து

வீட்டுக் குழந்தை
எழுத்துக் கூட்டிப் படிக்கும்
போதுதான் தெரிந்தது
SPECTRUM எவ்வளவு
கஷ்டமான விஷயம் என்று...”

 அவ்வளவு தான்.. நச்..

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை “வாங்கி” ஒரு பாட்டு எல்லா பக்கமும் ஒலித்ததே, செம்மொழியான தமிழ் மொழியாம் என்று, அதில் தனக்கு இருந்த ஆதங்கத்தை  கொட்டியிருப்பது தான் இந்த பதிவு.. கேள்விகள் அனைத்தும் எனக்கு மிக மிக ஞாயமானதாகத்தான் படுகிறது.. உங்களுக்கு?

நம்ம திடங்கொண்டு போராடு சீனு வைத்திருக்கும் காதல் கடிதம் போட்டிக்கு இவரையும் தயாராக்கலாமா? என நான் இந்த கவிதையை இப்போது மறுபடி வாசித்த போது நினைத்தேன்.. ஒரு பெண்ணை என்னமாய் வர்ணித்து விட்டு, கடைசியில், அவள் அபப்டி ஒன்றும் அழகில்லை என்று குசும்பாக சொல்லியிருப்பார்.. 

ராஜேஷ் பற்றி சொல்லியாகிவிட்டது.. அடுத்து அவரின் தம்பி பற்றி.. ஆமா, குடும்பத்துல ஆளாளுக்கு செல்ஃபோன், ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருந்த காலம் எல்லாம் போயி, இவுக ஆளாளுக்கு ப்ளாக் வச்சிருக்காக...

இவர் பெயர் கிரி பிரசாத்.. கண்டிப்பாக என் வயதில் ஒன்றோ இரண்டோ தான் கூட குறைய இருப்பார்.. ஆனால் ஆள் எழுதுவது எல்லாமே ஆன்மிகம் சம்பந்தமாக.. நம்ம குரூப்ல இவரு ஒரு வித்தியாசமான டைப்பா இருக்காரேனு இவரு ப்ளாக்ல ஒரு ரவுண்ட் அடிச்சேன்..

கடவுள் எப்படி இருப்பார்? இருக்கிறாரா இல்லையா? என்கிற பகுத்தறிவு கேள்விக்கு முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் கொடுத்த பதிலை  பாருங்கள்.. தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று இவர் சும்மா சொலல்வில்லை என்பது புரியும்..

குறள் வெண்பா/ஈரடி வெண்பாவில் நம்ம கிரி பிரசாத் எழுதி பரிசு வாங்கிய ஒரு செய்யுள்.. இன்றைய இளைஞர்கள் இலக்கியம் சார்ந்தும், சமயம் சார்ந்தும் நிறைய படிக்கிறார்களா இல்லையா என்பது ஒரு கேள்வியாக பலரால் வைக்கப் படுகிறது.. இவர் ஒருவரை மட்டும் அங்கு சோலோவாக அனுப்பி பதில் கூறிவிடலாம் போலிருக்கிறது..

ராம்னு பேர் இருந்தாலே கலர் கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கும் போல.. ராமபிரானை பற்றியும், அவரின் கலர் பற்றியும், மதுரை விளக்குத்தூண் அருகே கிடைக்கும் கைத்தறி நெசவுச்சேலைகள் பற்றியும் இவர் இலக்கிய சான்றோடு எழுதியிருக்கும் பதிவு.. 


சரி, ஆன்மிகம் எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாகி விட்டது... மூன்று பதிவுக்கே இப்படியா என்று கேட்காதீர்கள்.. அவர் ப்ளாக்கை போய் பாருங்கள்.. ரவுண்டு கட்டி ஆன்மிகம் அடிக்கும் உங்களை.. மாலை 6,7 மணிக்கு  மேல், வீட்டில் இருக்கும் பேரன் பேத்திகளை கூட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் முன் அமர வைத்து தாத்தா பாட்டிகள் இந்த கதைகளை எல்லாம் தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.. உண்மையிலேயே மிக வித்தியாசமான இளைஞர் கிரி பிரசாத்...

அடுத்து நான் சொல்லப்போகும் ஆள், என் வாழ்வில் மிக மிக முக்கியமான ஆள்.. ஒருவரின் தோளில் இன்னொருவர் கை போட்டு, மிக சத்தமாக கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டும், கமெண்ட் அடித்துக்கொண்டும், எந்த கவலையும் இல்லாமல் சிவகாசி தெருக்களில் சுற்றிக்கொண்டு, ஒரு ஆசிரியரின் மகளுக்கே லவ் லெட்டர் கொடுக்க என்னைப்போன்ற வீரனை துணைக்கு அழைத்துக்கொண்டு போன என் நண்பன் பால் பவுன் ராஜ் பற்றியது..

உங்கள் வீட்டில் நீங்கள் பதினைந்து வருடம் தவமிருந்து பெற்றெடுக்கப்பட்ட ஒரே பிள்ளை.. கேட்டதெல்லாம் கிடைக்கும்.. செல்லம் அதிகம்.. அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்பவர்கள்.. கையில் இல்லை என்று சொல்லாத அளவுக்கு பணம் உண்டு.. என்ன செய்வீர்கள்? நானெல்லாம் கெட்டு சீரழிந்து நாசமாய் போயிருப்பேன்.. ஆனால் இவன் நன்றாக படித்தான்.. ஊரே இன்ஜினியரிங், மெடிக்கல் என்று போகும் போது தனக்கு பிடித்த தாவரவியலை எடுத்து படித்தான்.. இன்று அதே துறையில் கிருமி கண்ட பாண்டியனாய் மைக்ராஸ்கோப்பில் கிருமிகளை பார்த்துக்கொண்டிருக்கிறான் கனடாவில் தன் காதல் மனைவியோடு.. அவன் மனைவியும் அவனைப்போலவே ஒரு ஆராய்ச்சியாளர் என்பது கூடுதல் தகவல்.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு 30 வயசுக்காரன் போல் பேசுவான்.. பிஞ்சிலேயே பழுத்தது என்பதன் பாசிடிவ் சைட் இவன்.. 

பள்ளி படிக்கும் போது நன்றாக மிமிக்ரி செய்வான்.. கனடா போய் அங்கிருக்கும் தமிழர்களையும், தலைவர் மிமிக்ரி என்னும் பெயரில் கலவரப்படுத்தியதை பாருங்கள்..

ப்ளஸ் 2 படிக்கும் போது வாத்தியார், போர்டில் சைன் தீட்டா, காஸ் தீட்டா கிறுக்கி கொண்டிருக்கும் போது, நாங்கள் இங்கு மாற்றி மாற்றி G.K. கேள்வி கேட்டு விளையாடிக்கொண்டிருப்போம்.. இருவரும் சரி சமமாக வெற்றி பெற்று போய்க்கொண்டிருப்போம்.. நாட்டின் தலைநகரம், அரசியல் தலைவர் பெயர், நடிகரின் முதல் படம் என்று சீரியஸாக போய்க்கொண்டிருக்கும்.. டை பிரேக்கரில் என்னிடம் விளையாட்டு சம்பந்தமாக ஏதாவது கேள்வி கேட்பான்.. நான் அவுட் ஆகி தோற்று விடுவேன்.. அதற்கு பின் எங்கள் GK போட்டியில் விளையாட்டு சம்பந்தமாக கேள்வி கேட்கக்கூடாது என்னும் புது ரூல் போட்டோம்.. எனக்கு விளையாட்டு விளையாட மட்டும் இல்லை, அதை பார்க்கவோ, பேசவோ, கேள்வி கேட்கவோ, பதில் சொல்லவோ கூட பிடிக்காது.. ஆனால் விளையாட்டு இவன் உடம்பில் ஊறியது..  டென்னிஸ், ஆக்கி, சாக்கரும் பார்ப்பான்.. கிரிக்கெட்டை போதை ஊசி மூலம் நரம்பில் ஏற்றியவன்..

கிரிக்கெட்டின் ஆட்டக்காரர் யாருக்காவது பெண் பார்த்தால் இவனிடம் தாராளமாக அவரை பற்றி கேட்கலாம். ஜாதகம் முதற்கொண்டு தெரிந்து வைத்திருப்பான்.. “ஒழுங்காவே ஃப்ரெண்ட் ஃபூட் வெளாட தெரில, அவனுக்கெல்லாம் ஒங்க பொண்ண குடுக்காதீங்க. கண் கலங்க விட்ருவான்”னு கூட சொல்லுவான்... ஒவ்வொரு விளையாட்டும் அதன் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் முதற்கொண்டு பார்ப்பவன்.. அப்படிப்பட்டவன் 2011ம் உலக கோப்பைக்கு முன் எழுதிய கணிப்பு துல்லியமாக பழித்தது.. எப்படி ஒருவனால் இப்படி பிரித்து மேய்ந்து எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை.. இந்த பதிவை படித்துவிட்டு அதுவும் பழித்துவிட்ட பிறகு, நான் டிவியில் கூட கிரிக்கெட் பார்ப்பதில்லை.. அவ்வளவு குற்ற உணர்வு.. நாம் பார்க்க மட்டும் தான் செய்கிறோம்.. அதை விட அழகாக விமர்சனம் என்னும் பெயர்களில் வீர்ர்களை ஏசுகிறோம்.. ஆனால் ஒருவன் அதை அறிவார்த்தமாக அணுகுவது எனக்கு ரொம்ப ரொம்ப புதுசானது.

2012ல் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் சீரிஸ் நடைபெற்ற போது, அதை பற்றி எழுதிய பதிவை பாருங்கள்.. இப்படி ஒரு பதிவு எழுத அதில் எப்படி ஊறிப்போயிருக்க வேண்டும்? இந்த பதிவை எழுத அவன் படித்த ஒவ்வொரு சுட்டியையும் கொடுத்திருப்பான்.. அதாவது தன் சொந்த சரக்கு என்று ஃபிளிம் காட்ட விரும்பாமல் (உண்மையிலேயே சொந்த சரக்கு தான்), அதற்கான சுட்டியை அளித்ததற்காகவே பாராட்டுக்கள் உண்டு..

”என்ன ஒங்க ஃப்ர்ண்ட் வெறும் கிரிக்கெட் பத்தி மட்டும் தான் எழுதுவாப்லயா?”னு கேக்க நினைக்குறவங்க அப்படியே ஸ்டாப்.. நான் சும்மா இருங்கப்பா என்று பிள்ளைகள் வேலைக்கு சென்ற பின் அப்பாக்களுக்கு நேரும் கஷ்டங்களை பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன்.. அம்மாக்களை பற்றி நமக்கெல்லாம் அதிகமாக தெரியும்.. எதையும் அழுது கொண்டோ, நம் தலையை கோதிக்கொண்டோ எப்படியோ நம்மிடம் சொல்லிவிடுபவர் அம்மா.. ஆனால் அப்பா நம்மிடம் தன் கஷ்டங்களை என்றாவது சொல்லியிருக்கிறாரா? அப்பா கஷ்டப்படாமல் இருந்தால் நாம் எல்லாம் இப்போது இருக்கும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது..  அப்பாக்களை பெரும்பாலான பிள்ளைகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்வது இல்லை.. புரிந்து கொண்ட பின், நாம் அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு நம்மை கொன்றுவிடும்.. ஒரு அப்பாவை பற்றியும் அவரின் பாசம் பற்றியும் ஒரு மகன் எழுதிய பதிவு இது..  கிரிக்கெட் பற்றி மட்டும் அல்ல, மனதை வருடும், உறவை போற்றும் சீரியஸ் பதிவுகள் கூட எழுத முடியும் என என் நண்பன் நிரூபித்த பதிவு இது..

நண்பன் ஒரு தீவிர தி.மு.க விசுவாசி ஆரம்ப காலத்தில்.. அரசியல் விசயங்களை, ஒவ்வொரு ஊரிலும் எந்த கட்சி எம்.எல்.ஏ இருக்கிறார், எந்த துறைக்கு எந்த அமைச்சர், அவர் மீது என்னென்ன கேஸ் இருக்கிறது என்கிற வரை அரசியல் விசயம் அறிந்தவன். அது அவன் அப்பாவிடம் இருந்து ஜீன் வழியாக வந்த வரம்.. கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தான்.. 

அதே போல் 2011 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு வேளை அ.தி.மு.க வந்து விடுமோ என்கிற பயத்தில் அவன் எழுதிய பீதி பதிவு.. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்தா விடுகிறது? அந்தோ அ.தி.மு.க ஆட்சி வந்தே விட்டது..

அவ்வளவு தான் இன்றைய புதிய பதிவர்கள் பற்றிய பதிவு.. இவர்களை பதிவுலகில் யாருக்குமே தெரியாது என சத்தியம் செய்து சொல்லலாம்.. தன் ப்ளாக்கையே மூடிவிட்ட அந்த நண்பர் மீண்டும் ஆரம்பிக்க விரும்பாததால் அவரை பற்றி சொல்ல்வில்லை. ஆனால் ஒவ்வொருவரும் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள்.. சரியான தூண்டுதல் இவர்களிடம் இருந்திருந்தால் இன்னும் பல நல்ல பதிவுகளை, கருத்துப் பரிமாற்றங்களை உண்டு பண்ணும் அளவுக்கு எழுதுவார்கள் என்கிற நம்பிக்கையில் இங்கு சொல்லியிருக்கிறேன்.. அவர்களை மீண்டும் எழுத வைக்கலாமா நண்பர்களே? உங்கள் கைகளில் தான் இருக்கிறது..

18 comments:

  1. இரு நண்பர்களின் தளங்களும் புதிது... அறிமுகத்திற்கு நன்றி.... இனி தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கிரி பிரசாத்தின் தளம் கவர்ந்தது... நன்றி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நல்ல பதிவு... நன்றி நண்பரே...!

    ReplyDelete
  6. திறமையாளர்களை அடையாளம் காட்டிய வலைச்சரத்திர்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. நீங்களே சொல்லியிருப்பது போல தெரியாத தளங்கள். நிச்சயம் படிக்க வேண்டிய தளங்களை சுட்டிக் காட்டியதற்கு நன்றி, ராம்குமார். தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தெரியாத தளங்கள் தான்..... படிக்கிறேன்.

    ReplyDelete
  9. nanri ramkumar. En eluthukal thodarvatharku muyarchikiren

    ReplyDelete
  10. ஈரடி வெண்பா மனதை கவர்ந்தது

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நன்றி இராம். கம்பனைப் படிக்க ஆரம்பித்த போது, தொடங்கிய blog. இப்போது தான் எனக்கே தெரிந்தது - இது ஒரு 'ஆன்மீக blog'ஆக இருப்பதாக.. நன்றி - சுட்டிக்காட்டியதற்கு :)

    ReplyDelete
  13. நீங்கள் அறிமுகப் படுத்திய நண்பர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொன்றாய் படிக்கிறேன் ராம் குமார்.. அருமை தொடருங்கள்

    ReplyDelete
  14. அறியாத தளங்கள். பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete
  15. அறிமுகத்துக்கு நன்றி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அறிமுகத்திர்க்கிற்கு நன்றி...

    ReplyDelete
  17. அருமை ராம்குமார்.
    நிறைய அறிமுகங்கள். தேடிப் படிக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது