07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 30, 2007

திராவிட எக்ஸ்பிரஸ்

தமிழ்மணத்தில் திராவிடப் பதிவுகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அதற்க்கான தேவை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பேன். காரணம் திராவிடத்தை முழுதாக தெரியாதவர்கள் அவரை தவறாக புரிந்துகொள்ளக் கூடும் அதேபோல் திராவிடத்துக்கு எதிரான கருத்து சொல்பவர்கள் பெரியாரையும் தவராகவே விமர்சிக்கின்றனர் .. மொத்தத்தில் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.அந்த வகையில் தமிழ் வலைப் பூவில் திராவிட பெரியாரிய சிந்தனைகளை பரப்புவோர் என்ற வகையில்...
மேலும் வாசிக்க...

Monday, October 29, 2007

வெள்ளோட்ட எக்ஸ்பிரஸ்

எல்லா எக்ஸ்பிரஸ்களையும் போல இந்த ரயிலும் தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும் !!இந்த பதிவுலகத்திற்கு நான் வந்ததே ஒரு விபத்து, அதிலும் இங்கே இருக்கும் அரசியலும் அதன் கோமாளித்தனமும் எனக்கும் பிடித்த விசயமாய் இருந்ததில் எப்போதும் கலகம் விரும்பும் எனக்கு மிகவும் பிடித்த விசயமாகவும், தாயகத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் இயல்பாகவே தமிழில் எனது கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் கிடைத்தது தமிழ்மணம் பதிவுகள்.வழக்கமாய்...
மேலும் வாசிக்க...

எக்ஸ்பிரஸ் வலைச்சரம்

நம் வலைப்பதியும் நண்பர்களின் பலவிதமான பதிவுகளை மிக சிரத்தையுடனும்தொடர்ச்சியாகவும் அதிக பதிவுகளைக்கொண்ட சரமாகவும் தொகுத்தளித்திருக்கிறார், மாசிவக்குமார். ஓவ்வோரு இடுகையையும் அறிமுகப்படுத்தும் போது அந்த பதிவரின் சிறப்பை மிக அழகாகச் சொல்லிபதிவரைப்பற்றியும் சின்ன அறிமுகத்தை தந்திருக்கிறார். பதிவர்களுக்குஇந்த வாரம் நல்ல ஒரு வலைஅனுபவத்தை பகிர்ந்த அவருக்கு நன்றிகள்.----------------------***********--------------------இந்த வார வலைச்சரம்...
மேலும் வாசிக்க...

Saturday, October 27, 2007

தெரிஞ்சுக்கத்தானே....

நானும் கலந்து கொண்ட சில சூடான விவாதங்களின் சுட்டிகள்.விவாதிக்கும் போது இருக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு சில மாதங்கள் கழித்து ஒரு பார்வையாளனாக படிக்கும் போது கருத்துக்கள் தெளிவாகின்றன.காந்தி என்ற புனித பிம்பத்தை உடைக்க அசுரன்காந்தி நல்லவரா கெட்டவராஇந்துத்துவா அரசியலுக்காக சிலம்பாட்டம்்கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க"பொம்பளைங்க என்ன உடுத்தணும்னு இவங்க விவாதிக்கிறாங்களாம்"சவுதி அரேபியாவில் ஆரம்பித்து எங்கெங்கோ போய் விடப்...
மேலும் வாசிக்க...

Friday, October 26, 2007

அனுபவ முத்துக்கள்

உருப்படாதது நாராயணனின் வடசென்னை தாதாக்கள் குறித்த பதிவு மறக்க முடியாதது.பாலபாரதியின் சாந்தியக்கா இங்கே'ரொம்ப பாதுகாப்பா வளர்ந்துட்டீங்க', 'இப்படியெல்லாம் நடக்குமா' என்று ஆதங்கப்பட்ட ஒரு பதிவருக்கு லிவிங்ஸ்மைலின் பதி...
மேலும் வாசிக்க...

பல துறை மன்னர்கள்

ஒரு கட்டத்துக்குள் அடங்கி விடாத பலதுறை மன்னர்களின் பதிவுக்குப் போனால், படிக்கத் தீனி உறுதியாகக் கிடைக்கும். எதிர்கால உலகைப் படைக்கும் கதையாகட்டும், நிகழ்கால அரசியலை சாத்தும் துணிச்சலாகட்டும், கட்டுப்பெட்டித்தனம் என்று அவர் நினைக்கும் மனப்போக்குகளை உடைக்கும் அடாவடியாகட்டும் செல்லாவுக்கு நிகர் அவரேதான்.சர்ச்சைக்குள்ளானாலும், பரபரப்பு ஏற்படுத்துவதில் சளைக்காத பதிவர்(கள்) இட்லிவடையினர். சமீப காலமாக அடக்கி வாசித்தாலும் தமிழ் வலைப்பதிவு...
மேலும் வாசிக்க...

Thursday, October 25, 2007

அள்ள அள்ளக் குறைவதில்லை

தனக்குத் தெரிந்த நடைமுறைகளை, தனது துறையின் சிறப்பியல்புகளைப் பற்றி எழுத சில பண்புகள் வேண்டும்.ஒன்று, ஆழ்ந்த அறிவும் அனுபவமும். தான் எழுதுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும், அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்ற புலமை வேண்டும்.இரண்டு. தன்னம்பிக்கை. தொழில் ரகசியங்களை எல்லாம் எழுதி விட்டால் மற்றவர்கள் அதை நகல் செய்து நமக்கு போட்டியாக வந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.மூன்று. சொல்வதை சுவையாக படிப்பதற்கு...
மேலும் வாசிக்க...

Wednesday, October 24, 2007

என்னதான் நடக்குது?

செய்திகளின் நிகழ்வுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள சிலரிடம் போக வேண்டியிருக்கும். 1990களில் இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு செய்தியை எடுத்தால் நாலா கோணங்களிலிருந்தும் அதை அலசி விபரமாக கட்டுரைகள் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த அணுகுமுறையை அந்தப் பத்திரிகையிலும் பார்க்க முடிவதில்லை.நிகழ்வுகளை நடுநிலையோடு, தனது புரிதல்களையும் படித்துத் தெரிந்து கொண்ட விபரங்களையும் சேர்த்து தரும் இடுகைகள் பத்ரியின் எண்ணங்கள். ஞானி கலைஞர் குறித்து...
மேலும் வாசிக்க...

சிரிக்கத் தெரியணும்

மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு வரம். அப்படி நகைச்சுவை மன்னர்களாக இருப்பவர்களை நேரில் பார்த்து பேசினால்் அப்படிச் சிரிக்க வைக்க எவ்வளவு ஆழம் தேவை என்பது புரியும்.தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் கைப்புள்ள மோகன்ராஜ். அவரது எழுத்துக்களில் இருக்கும் கவர்ச்சியும் எளிமையும் என்னைப் போலவே பலரைக் கட்டிப் போடுகின்றன.அவரது தடிப்பசங்க என்ற தொடரை படிக்காதவர்கள் உடனே ஒரு நடை போய் முழுசும் படிச்சுடுங்க....
மேலும் வாசிக்க...

Tuesday, October 23, 2007

தொழில் நுட்ப வல்லுனர்கள்

தகவல் தொழில் நுட்பம் குறித்த பதிவுகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு ஆங்கிலப் பதிவைக் குறிப்பிடாமல் முடியாது.வலைப்பதிவுகள் blog என்ற வடிவில் உருவாகும் முன்பே, 1997ல் ஒரு கணினியியல் மாணவன் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்த தளம் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், லட்சக் கணக்கான பதிவு செய்த வாசகர்கள், கோடிக் கணக்கைத் தாண்டி விட்ட பின்னூட்டங்கள் என்று வணிக முறையில் பணம் ஈட்டும் தளமாக விளங்குகிறது.தளம்உருவான கதைதலைகீழாக வகுத்தாலும்...
மேலும் வாசிக்க...

கதை ஆசிரியர்களின் முத்திரைக் கதைகள்

அருள் குமார்அண்ணன் பொறுப்பானவனாக... - சிறுகதை வடிவில் ஒரு கவிதைபொன்ஸ்பெரிய மனுஷி - உடன்பிறப்பு வளர்ந்து விடும் போதுஏன்? - வளர்ந்தவர்களுக்குமான சிறுவர் கதைபாலபாரதிஇந்தியா ஒளிர்கிறதாம்்ராமச்சந்திரன் உஷாபழைய இடுகைகளைத் தேடிப் பிடிக்க முடியவில்லை, நீங்களும் முயன்று பாருங்கள்வினையூக்கிதினை விதைத்துக் கொண்டே போனால் விளையாமலா போயிடும்டிபிஆர் ஜோசப்வாடகைத்தாய் - நெடுங்கதை மன்னருக்கு சிறுகதையும் படைக்கத் தெரியும...
மேலும் வாசிக்க...

Monday, October 22, 2007

எனக்குப் பிடித்த எனது இடுகைகள்

சிலவற்றை எழுதும் போதே 'இதை யார் படிக்கப் போகிறார்கள், படித்தாலும் உதைக்காமல் விட்டால் சரிதான் என்று பயந்து கொண்டே வெளியிடுவோம்.' எதிர்பாராமல் பல பின்னூட்டங்களும் ஊக்கப்படுத்தல்களும் வந்து சேரும்.சிலவற்றை எழுதி முடித்ததும் 'ஆகா ஏதோ சாதித்து விட்டோம்' என்று பெருமையாக இருக்கும். ஆனால் வெளியிட்ட பிறகு யாருமே சீண்டியிருக்க மாட்டார்கள். 'ஓரு வேளை நாம் வெளியிட்ட வேளை வார இறுதியாக இருந்திருக்கலாம், யாரும் படித்திருக்க மாட்டார்கள்.'...
மேலும் வாசிக்க...

பூமிப்பந்தை புரட்டிபோடனுமாம்

நான் பொறுப்பு(?) எடுத்துக்குமுன்னேயே முடிவு செய்திருந்த போனவாரத்து வலைச்சர ஆசிரியர் ஜாலி ஜம்பருக்கு அறிமுகப்பதிவு இடுவதற்காக அவருடைய பதிவுக்குள்ளே போனால் ஒரு மாதத்துக்கு ஒன்று இரண்டு பதிவு போட்டிருந்தார் அதிலிருந்து என்ன தலைப்பு குடுத்து அறிமுகப்பதிவு போடுவது என்று தெரியவில்லை. அதனால் ஜாலியா சீரியஸா என்று தலைப்பு குடுத்திருந்தேன். ஆனால் உண்மையிலேயே அவர் சீரியஸாவே நல்ல தா 6 பதிவு போட்டுட்டார். அதுல வேற நான் குழம்பினதுக்காக ஒரு...
மேலும் வாசிக்க...

Saturday, October 20, 2007

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.

ஜாலியா,சீரியஸா என்று வலைச்சர பொறுப்பாளர் முத்துலெட்சுமி அவர்கள் குழம்பாமல் இருந்திருந்தால் சீரியஸ் பதிவுகளைமட்டுமே சுட்டிவிட்டு இருந்திருப்பேன்.பெயரில் ஜாலியை வைத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸான ஆளாக இருக்கிறானே என்றுஉலகம் பழித்து விடக் கூடாது என்பதற்காக இந்த காமெடிப்பதிவு.முதலில் ஆழியூரானின் இந்தப்பதிவு.http://nadaivandi.blogspot.com/2007/08/blog-post_18.htmlகவுண்டமணி,வடிவேலு காமெடி தான் காமெடியா?இது அதைவிட டக்கரான காமெடி.லக்கி,வரவனை,சுகுணா,செந்தழல்,அய்யனார்,பாலபாரதி...
மேலும் வாசிக்க...

Friday, October 19, 2007

அப்பாவாகப் போகும் ஆண் சிங்கங்காள்

இந்த உலகில் பிறக்கும் உயிர்களுக்கு எல்லாம் பொதுவான ஓர் இலட்சியம் இருக்கிறது.தன் சந்ததிகளை உருவாக்குவதேஅந்த இலட்சியம்.எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமலிருந்து அதன் பிறகே பிறந்தது.அந்த இரண்டாண்டுகளில் நானும் என் மனைவியும் பட்ட மனவேதனை சொல்லிமாளாது.குழந்தை பிறந்தவுடன் அளவில்லாமகிழ்ச்சியை அது அள்ளித்தந்தது.முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே அது நீடித்தது.அடுத்த ஒரு வருட காலம் மாபெரும் சோதனைக்காலமாக அமைந்து விட்டது.குழந்தை...
மேலும் வாசிக்க...

Thursday, October 18, 2007

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.அல்லவை விடுத்து நல்லதை மட்டும் எடுத்து போய்க்கொண்டு இருந்தால்பிரச்சினையே இல்லை.ஒருவர் நமக்கு மாற்றுக்கருத்து உள்ளவராய் இருப்பதாலேயே அவர் சொல்லும் நல்ல விஷயங்களையும்ஏற்க மறுப்பது மடமை.இராமாயணம்,மகாபாரதம்,பகவத்கீதை போன்ற இதிகாசங்களில் இலக்கியச் சுவையும் , உயர்ந்த தத்துவங்களும் நிரம்பியுள்ளன.அதைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுயநலத்திற்காக அதில் இடைச்செருகப்பட்ட மனுதர்மம் போன்றவற்றை மட்டும்...
மேலும் வாசிக்க...

Wednesday, October 17, 2007

சிந்தனை செய் மனமே

முற்போக்கு என்றால் என்ன?பிற்போக்கு என்றால் என்ன என்று கேட்டால், வாந்தி என்பது முற்போக்கு,வயிற்றுப்போக்கு தான்பிற்போக்கு என்று யாராவது சொன்னால் பின்நவீனப்போக்கின் படி அது சரி தான்.ஆனால் உண்மையான முற்போக்கு என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு,வளர்ச்சிக்கு உதவும் சிந்தனைகள்.பிற்போக்குஎன்பது வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவும்,பின்னோக்கிய பாதையிலும் சிந்திப்பது.எனக்குத் தெரிந்த அருமையான பிற்போக்காளர் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர்...
மேலும் வாசிக்க...

Tuesday, October 16, 2007

எனக்குப் பிடித்த எழுத்துச் சண்டைகள்

வலைப்பதிவுகளின் சிறப்பம்சம் பின்னூட்டங்கள்.எழுத்தாளர் தமது படைப்பை வெளியிட்டவுடன் வரும் வாசகரின் கருத்துக்கள்மிகவும் சுவையாரமானவை.ஒரு பொருளுக்கு பலவிதமான கோணங்களில் கருத்துக்கள் வெளிப்படுவதை படிப்பதே ஒரு பேரின்பம்.அதுவும் அந்த மாற்பட்ட கருத்துக்கள் தீவிரமடைந்து விவாதமாகி,சண்டையில் போய் முடிவதுண்டு.அது சமயங்களில் மிகவும்இரசிக்கத்தக்க ஒன்றாகி விடுவதும் உண்டு.வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர் ,நண்பர்களிடத்தில் பேசும் போது...
மேலும் வாசிக்க...

Monday, October 15, 2007

அறிமுகம்

இவ்வார வலைச்சரத்தை தொகுத்தளிக்கும் பொறுப்பு மலைக்க வைக்கிறது.இருந்தாலும் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன?என்ற கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்வது போல் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர் யார் என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.தமிழ்வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும்,ஆச்சரியத்துக்கும் அளவேயில்லை.உலகெங்கும்பரவியுள்ள தமிழர்கள் தங்கள் தணியாத...
மேலும் வாசிக்க...

இந்த வாரம் ஜாலியா? சீரியஸா?

கவிஞரே வாங்கன்னு சொன்னதும் கவிஞர் கென் வரிசையா கவிஞர்களையும் கதை எழுதுபவர்களையும் பற்றீயே பதிவுகளாகப் போட்டுவிட்டார்.எனக்கும் அதிகம் படிக்காத சில பதிவுகள் கிடைத்திருக்கிறது.நீங்களும் புதிய புதிய பதிவுகளை அடையாளம் கண்டிருப்பீர்கள் இந்த வாரத்தில்.ஆனால் கென் தன்னுடைய இரண்டாவது பதிவான கவிதைகளும் நாவலும் நானும் பதிவில் எதுவுமே லிங்க் தரவில்லை. ஒன்று க்கு மேற்பட்ட சுட்டிகளை தரவேண்டும் ஒரு பதிவு என்ற விதியினை கவனிக்க தவறிவிட்டார் போலும்...
மேலும் வாசிக்க...

Saturday, October 13, 2007

ப்ரியங்களுடன் - கென்

காதலும் அதன் வலியுமான வாழ்வில் வெறும் புலம்பல்களும் , கூச்சல்களுமான அதன் நகர்வில்,கட்டற்ற அன்பை , இனி எவராலும் எப்போதும் தந்திடா இயலா பாசத்தை,அக்கறையை , கவனத்தை, தோழமையை , நேசத்தைஎப்படி சொன்னாலும் சரியாய் பொருந்திடா உணர்வைத்தரும் தோழமைக்கு என் வணக்கங்கள்.(எனக்கே நன்றி சொல்ற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டியாடா எனத்திட்டுவாய் இருந்தும் சொல்றேன்)நன்றிகள் திரு.பொன்ஸ்,திரு.ப்ரியன்,திரு.முத்துலெட்சுமி,வாசித்த உங்கள் அனைவருக்கும்?இத்துடன்...
மேலும் வாசிக்க...

Wednesday, October 10, 2007

குழந்தைகளின் உலகம் - கென்

குழந்தைகளின் உலகம் எத்தனை புதிரானது, ஆழமானது, வண்ணங்களாலானது, அழகானது என்று அவர்களை அருகிலிருந்து ரசிக்கும்போதுதான் புரிகிறது. குழந்தையாகவே இருந்துவிட்டிருக்கலாமோ என்று சின்ன பொறாமை கூட தொற்றிக் கொள்கிறது.நேற்று கடைத்தெருவில் பார்த்த ஒரு குழந்தையின் விரல் ஸ்பரிசம் இன்னும் அகலாத நிலையில், குழந்தைகளை பற்றி பதித்திருக்கும் வலைப்பூக்களைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.குழந்தைகளை பற்றி மட்டுமே எழுதும் நோக்கத்தோடு வீணாப்போனவன் என்ற பெயரில்...
மேலும் வாசிக்க...

Tuesday, October 9, 2007

க‌விதைக‌ளும்,நாவலும் நானும் - கென்

க‌விஞ‌ர்ன்னு என்னை ம‌தித்து அழைப்பு ( என்னையும்) கொடுத்த‌மைக்காய் இது வ‌ரை வ‌லைப்பூ, குழும‌ம் என்று எங்கேயும் ப‌தியாத‌ என் சில‌ க‌விதைக‌ள் உங்க‌ளின் பார்வைக்காய்1.சுவடுகள் படிந்தழிந்தபடி ஈரம் கசியும் நீள்வெளியில்வலைப்புகும் நண்டினை ரசித்து அமர்ந்திருக்கிறேன்எங்கிருந்தோ வந்துப்போகும் வலசைப்பறவையின் இயல்பாய்துறைமுகம் நுழைய நங்கூரமிட்டு மிதக்கும் கப்பல்கள்மினுக்கத்துவங்குகின்றன இரவின் வெளிச்சப்பூச்சிகளாய்வெட்கப்பூச்சு மல்லிகை மணத்தோடு...
மேலும் வாசிக்க...

Monday, October 8, 2007

இந்த வாரம் ‍ - கென் -

வணக்கம்,இந்த வாரம் வலைப்பதிவுக்காய் கடந்த மாதமே பொன்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். பணிச்சுமை என்னை இட்லிக்குக்கராய் அவிப்பதால் ( சூரியப்பனி எல்லாம் வேற ஆளுங்க உபயோகிப்பதால்) இப்போது வலைப்பதிய நேரம் கிடைத்திருப்பதால் இனி என் பார்வையில் படித்தது பிடித்தது என்று ஒரு வாரம் நானும் பதிய வருகிறேன்.என் இடுகைக்கான சில சுட்டிகளை த‌ருவ‌தை விட‌ நீங்க‌ளே ப‌டித்து பார்த்து உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைத்தாருங்க‌ள்.இனி நான் ரசித்த சில வலைப்பதிவுகள்...
மேலும் வாசிக்க...

சரம் தொடுக்கும் கவிஞர்

இந்த வாரம் நாந்தனுங்கன்னு ஆரவாரமா கொண்டாட்டம் ஸ்டைலில் வந்து லக்ஷ்மி ஸ்பெஷ்ல்களாப்போட்டுத்தாக்கிட்டாங்க....இனிப்பா நகைச்சுவையில் ஆரம்பிச்சு ஆண்களுக்கு 50% குடுத்ததாகட்டும்.. இளைஞர்களுன்னு ஸ்பெஷல் விட்டதாகட்டும்.. நல்லா செய்துட்டாங்க.அதுவும் கடைசியில் தன்னுடைய ஆசைன்னு இன்னும் நிறைய பேரை எழுத அழைச்சு, விட்டுட்டு போனவங்களையும் அழைச்சு முடிச்சிருக்காங்க நன்றி பதிவு . என்ன பாடச்சொல்லாதே கண்டபடி பாடிடுவேன்னு மிரட்டிட்டு நல்லா ஆலாபனையே...
மேலும் வாசிக்க...

Sunday, October 7, 2007

நன்றி அறிவிப்பு

ஒரு வாரமா என் தொல்லைகளைப் பொறுத்தருளிய வலையுலக மக்களுக்கு என் நன்றி. வலைச்சரத்தில் இதுவே என் கடைசி இடுகை. கடைசி இடுகைன்றதால கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, கொஞ்ச நாளா பதிவுகள் பொடுவதை அறிவித்துவிட்டோ அறிவிக்காமலோ நிறுத்தி வைத்திருக்கும் பதிவர்களைத் தொகுக்க எண்ணம். இவங்க எல்லாம் மறுபடியும் எழுத ஆரம்பிக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை.முதலில் ஒரு கூட்டு வலைப்பதிவான சக்தி/ - இதை மதி, பத்மா, செல்வநாயகி ஆகிய மூவரும் இணைந்து ஆரம்பித்து...
மேலும் வாசிக்க...

இளைஞர் ஸ்பெஷல்

அடுத்தது இளைஞர் ஸ்பெஷல். அப்போ இது வரை குறிப்பிட்டவங்க எல்லாம் இளைஞர்கள் இல்லையான்னெல்லாம் யாரும் சிண்டு முடிய பாக்கக் கூடாது. நான் இளைஞர்கள் என்று சொல்ல வருவது - வயதினால் இளையவர்களைப் பற்றி அல்ல. நம் வலையுலகைப் பொறுத்தவரை முதியோர் என்று தன் மேல் முத்திரை குத்திக் கொண்டு பழமை வாதம் பேசுபவர் மிகக் குறைவு. எனவே வயதை வைத்து ஒருவரை எடை போடுவது இங்கு செல்லாது. அதனால், பதிவெழுத ஆரம்பித்து குறைந்த நாட்களே ஆனவர்களை பற்றியதே இந்தச் சரம்.நான்...
மேலும் வாசிக்க...

ஜென்டில்மென் ஸ்பெஷல்

இன்னிக்கு ஜென்டில்மென் ஸ்பெஷல். அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு. இன்னா செய்தாரை ஒறுத்தல் எப்படின்னுதான் நம்ம பாட்டன் பாடம் சொல்லி கொடுத்திருக்காரில்லையா?மண்டபத்தில் தனியே நின்று புலம்பிக் கொண்டிருக்கும் ஒய்வு பெற்ற பேராசிரியர் - தருமி அவர்கள். கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே என்று பெருந்தன்மையோடு உண்மையை ஒப்புக்கொள்ளும் :) இவரது...
மேலும் வாசிக்க...

Thursday, October 4, 2007

லேடீஸ் ஸ்பெஷல்

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும். துளசியின் எழுத்தில் ஒரு அந்நியோன்னியம் இருக்கும். முதல் முறை படிக்கும் போதே நம் வீட்டிலிருக்கும் உறவுப் பெண்மணி ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வு வரும். இவங்களோட ஸ்பெஷல் பயணக்கட்டுரைகள்தான். சாப்பாட்டு ஐட்டங்கள், வளர்ப்புப் பிராணிகள், தோட்டத்துல பூ பூத்தது, குளிரில் உறைந்து போன நீர்னு இவங்க...
மேலும் வாசிக்க...

நகைச்சுவைச் சரம்

எப்பவுமே விருந்துன்னா இனிப்புதான் முதல்ல பரிமாறணும்னுவாங்க. அதன்படி அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் சரம் நகைச்சுவைச் சரமா இருக்கட்டுமேன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லைங்க, தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முதலில் எனக்கு அறிமுகமான பதிவும் ஒரு நகைச்சுவைப் பதிவரோடதுதான். அது நெல்லை மாவட்டத்துக்காரரான டுபுக்கு அவர்களின் பதிவுதான்.நான் ஆன்சைட்டில் இருந்தபோது என் நண்பர் திரு. நட்ராஜ் அவர்கள் இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். நிஜமாவே...
மேலும் வாசிக்க...

Wednesday, October 3, 2007

இந்த வாஆஆ.......ரம் , என் வாஆ.......ரம்.

வணக்கம். இந்த வாரம் என்னை வலைச்சரம் தொடுக்கச் சொல்லியிருக்காங்க பொன்ஸ். சொந்தமா பதிவெழுதணும்னாத்தான் நமக்கு கொஞ்சம் சுணக்கம். ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எழுத உட்காரும் ஆள் நான். ஆனா இது வெறுமே கைகாட்டும் வேலைதானே, நம்ம கற்பனைக் குதிரைக்கு ஒரு வேலையும் தர வேண்டியிருக்காதுன்ற துணிச்சலில் நல்லா மண்டைய ஆட்டிட்டேன். இப்ப உட்கார்ந்து யோசிக்கையிலதான் தோணுது இதுவும் கஷ்டமான வேலைதான்னு தோணுது(சாப்புடறது, தூங்குறது, புஸ்தகம் படிக்கிறது...
மேலும் வாசிக்க...

இந்த வாரம் யாரு? வலைச்சரம் தொடுப்பவர் பேரு?

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் என்று குசும்புத் தனத்தோடு தொடங்கி சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள் என்று நகைச்சுவைப்பதிவுகளைப் பட்டியலிட்ட குசும்பன், கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கதைகளையும் பட்டியலிட்டுத் தந்த இடுகையில் கடைசிவரியில் இருக்குது இவரது குசும்பு. கவிதைகள் பற்றி ஒரு தொகுப்பு, உபயோகமான சுட்டிகள் என்று தொடர்பதிவுகளின் சுட்டிகள் தந்துள்ளார். ஒவ்வொரு இடுகையிலும் எங்காவது அவரது குறும்பு எட்டிப் பார்க்கத்...
மேலும் வாசிக்க...