07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 24, 2007

என்னதான் நடக்குது?

செய்திகளின் நிகழ்வுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள சிலரிடம் போக வேண்டியிருக்கும். 1990களில் இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு செய்தியை எடுத்தால் நாலா கோணங்களிலிருந்தும் அதை அலசி விபரமாக கட்டுரைகள் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த அணுகுமுறையை அந்தப் பத்திரிகையிலும் பார்க்க முடிவதில்லை.

நிகழ்வுகளை நடுநிலையோடு, தனது புரிதல்களையும் படித்துத் தெரிந்து கொண்ட விபரங்களையும் சேர்த்து தரும் இடுகைகள் பத்ரியின் எண்ணங்கள். ஞானி கலைஞர் குறித்து எழுதிய விவாதத்துக்குரிய கட்டுரை பற்றிய இடுகை இங்கே. இந்தப் பதிவில் எந்த இடுகையையும் சுட்ட,ி உள்ளே போனால் திரும்பும் போது அதைப் பற்றிய அதிகரித்த தெளிவோடு வெளியே வரலாம்.

தமிழ் சசி எடுத்துக் கொண்ட பொருளில் இறுதி ஆளுமையோடு எழுதுவார். ஈழத்து நிகழ்வுகள் ஆகட்டும், தமிழக அரசியல் ஆகட்டும் இவரது கருத்துக்களில் இருக்கும் உறுதியும் தெளிவும் மறுபக்கத்துக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும். மாதிரிக்கு ஒன்று

அசுரன். வெளுத்து உடை உடுத்து, வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முன்னிருக்கும் கணினியில் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் நமக்கெல்லாம் உண்மை நிலை உரை கல் ஒன்று வேண்டும். கல்லில் உரைப்பது போல தேய்த்துத் தேய்த்து சொன்னாலும், எல்லோரும் நின்று போக வேண்டிய அவசியமான இடுகைகள் அசுரனின் கட்டுரைகள். முடிந்தால் ஒரு விவாதத்தில் இறங்கி அவருக்கு தீனி போடுங்கள்.

சமீபத்திய இடுகையின் சுட்டியைத் தவிர்த்து (;-)) அதற்கு முந்தையதை இங்கே பாருங்கள்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது