07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 29, 2007

வெள்ளோட்ட எக்ஸ்பிரஸ்

எல்லா எக்ஸ்பிரஸ்களையும் போல இந்த ரயிலும் தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும் !!

இந்த பதிவுலகத்திற்கு நான் வந்ததே ஒரு விபத்து, அதிலும் இங்கே இருக்கும் அரசியலும் அதன் கோமாளித்தனமும் எனக்கும் பிடித்த விசயமாய் இருந்ததில் எப்போதும் கலகம் விரும்பும் எனக்கு மிகவும் பிடித்த விசயமாகவும், தாயகத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் இயல்பாகவே தமிழில் எனது கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் கிடைத்தது தமிழ்மணம் பதிவுகள்.

வழக்கமாய் கும்மிகளை, மொக்கைகளை எழுதிவந்த நான் எப்படி ஒரு சீரியல் கலகப் பதிவனாய் ஆனேன் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சட்டமன்ற சண்டியர்கள் என நான் எழுதிய ஒரு பதிவு எனது முதல் பிரபல இடுகையாக இருந்தது அப்போதைய ஆளுங்கட்சியான் தி.மு.க வுக்கும் அ.தி.மு.கவுக்கும் சட்டமன்றத்தில் நடைபெற்ற அடிதடி கூத்துக்கள் கொஞ்சம் ஆவேசப் பட வைத்தன ஆனால் அந்த பதிவின் தாக்கம் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை படிப்பவர்கள் மத்தியில் கொஞ்சம் என்னை பிரபலப் படுத்தியது.

அதற்கடுத்து எழுதிய கலைஞர் ஜெயலலிதா நேரடி வாக்குவாதம் செய்தியும் கற்பனையும் கலந்த நகைச்சுவைப் பதிவு , ஆனால் இதற்கெல்லாம் மகுடம் வைத்ததாக ரஜினி பற்றிய அந்த பதிவு என்னை ஒரு முழு முதல் கலகக் காரனாக இணையத்தில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடாக இருந்தது அதன் பின் நிறைய கட்டு பேஸ்ட்டுப் பகுதிகள்: பதிவுகள் ஆனால் அதன் தலைப்புக்களை தேர்ந்தெடுக்க நான் காட்டிய காட்டும் சிரத்தை பதிவுகளை எழுதுவதில் காட்டுவதில்லை. ஆனால் அந்த தலைப்புக்களை நான் சொல்லவந்த கருத்தாக எடுத்துக் கொண்டு பப்ளிஷ் செய்துவிட்டு போய்விடுவேன்.

திராவிடமும் ஆரியமும் அடித்துக்கொள்ளும் இந்த பதிவுலகம் என்னை முற்றாய் சிலகாலம் ஆக்கிரமித்திருந்தது அப்போதுதான் பின்னூட்ட கும்மிகள் எங்களால் ஆரம்பிக்கப் பட்டு அனானிகளின் அருமை முகத்தை வெளிக்கொண்டு வந்த அற்புத நகைச்சுவை பின்னூட்டங்கள் அனானி ஆட்டம் என அடித்து நொறுக்கப் பட்டன, கலகம் மட்டுமே எனது பதிவாகவும் தலைப்பாகவும் இருந்த எனக்கு மற்றவர்கள் அல்லது மற்ற இதழ்கள் வெளியிடும் பதிவுகளை மறு பதிவாக்க வென்றே உண்டாக்கப் பட்ட கதம்பம் கிழுமத்தூரின் இன்னொரு அங்கமானது அங்கே கட் பேஸ்டு தவிற வேறெதற்கும் இடமில்லை :)

அங்கேயும் எனது குணம் மாற வில்லை எப்போதும் போல கட்டு பேஸ்டிலும் கலக தலைப்புக்களை வைத்து வழக்கம் போல ஆட்டம் போட்டதில் ஒருமுறை தமிழ்மண நிர்வாகத்தால் என் பதிவு தூக்கப் பட்டது. அதன்பின் பின்னூட்டங்கள் கொஞ்சம் கவனமாக பரிசீலிக்கப் பட்டு வெளியிடப் பட்டாலும் எனைப் பொருத்த வரை எந்த பதிவிலும் எந்த பின்னூட்டத்தையும் வெளியிடாமல் இருந்ததில்லை அந்த வகையில் நான் வழக்கம் போல ஒரு கருத்துக் களவானி :)

எது கருத்து என எல்லா வேளையும் புலம்பாமல் இருக்கும் எல்லாருக்கும் பிடித்த கவிதைகள் கொஞ்ச காலம் என் எழுத்திலும் வந்தன பின் பெண்கவிகளுக்காக மட்டுமே அது இடஒதுக்கீடு செய்யப் பட்டது அங்கேயும் சுகிர்தராணி, குட்டிரேவதியின் கவிதைகள் அதிகம் ஆக்கிரமிக்க நான் முற்றாய் கவிதை எழுதுவதை நிறுத்தி படிப்பவர் வயிற்றில் பால் பாயாசம் வார்த்தேன் .

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் வேகம்பெற்ற எனது பதிவுகளும் நானும் முற்றாய் திராவிடத்தில் மூழ்கிப் போனோம். அமுக, குமுக, என வளர்ந்த எனது வழிகள் இன்று கொலைவெறிக் கவுஜைகள் வரை வந்து நிற்கிரது ஆனால் இந்த 400 சொச்சம் பதிவுகளில் உறுப்படியாக நான் எதும் எழுதினேனா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.

நாளை வரை எக்ஸ்பிரஸ் இந்த ப்ளாட்பாரத்தில் நிற்கும்.

2 comments:

  1. வாங்க அல்லக்ஸ் பாண்டியன் அவர்களே! இன்னொரு அல்லக்ஸ் உங்களை அன்போடு வரவேற்கிறேன். :-)))))

    ReplyDelete
  2. என்னாது அல்லக்கை பாண்டீயனா...? :))))

    வரட்டும் வரட்டும்..விரைவு வண்டி...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது