07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 25, 2007

அள்ள அள்ளக் குறைவதில்லை

தனக்குத் தெரிந்த நடைமுறைகளை, தனது துறையின் சிறப்பியல்புகளைப் பற்றி எழுத சில பண்புகள் வேண்டும்.

  • ஒன்று, ஆழ்ந்த அறிவும் அனுபவமும். தான் எழுதுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும், அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்ற புலமை வேண்டும்.
  • இரண்டு. தன்னம்பிக்கை. தொழில் ரகசியங்களை எல்லாம் எழுதி விட்டால் மற்றவர்கள் அதை நகல் செய்து நமக்கு போட்டியாக வந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.
  • மூன்று. சொல்வதை சுவையாக படிப்பதற்கு புரியும் படி எழுதும் திறமை வேண்டும்.
இந்த மூன்றும் ஒரே சேர இருப்பவர்களில், நான் படித்ததில் முதல் இடம் டிபிஆர் ஜோசப் சார். வங்கித் துறையின் நடைமுறைகளைப் பற்றி எழுதும் திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் சரி, வங்கிகளின் உயர்மட்ட அரசியலைப் பற்றி எழுதிய சூரியன் புனைகதையிலும் சரி வெளியார் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாத விபரங்களை தனது எழுத்து என்னும் தேனில் குழைத்து கொடுக்கிறார்.

இரண்டாவதாக என்னைக் கவர்ந்தவர் ஜோயல் ஸ்பால்ஸ்கி என்ற மென்பொருள் வல்லுனர். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதை விட்டதிலிருந்து ஆரம்பித்து, சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வரும் கடந்த 8 ஆண்டுகளாக மென்பொருள் துறை குறித்து, மென் பொருள் உருவாக்கம் குறித்து, வேலைக்கு ஆள் தேடுவது குறித்து உள்ளது உள்ளபடி எழுதியுள்ள இடுகைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டு வருகின்றன.

மொழிபெயர்ப்பை பகுதி நேர தொழிலாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் தனது அனுபவங்களை் தனது பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார் டோண்டு ராகவன். கால் இடறாமல் கவனமாகப் போய்ப் படித்து விட்டு வரலாம்.

No comments:

Post a Comment