07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 11, 2007

புதுமைப் பெண்கள் - வலைச்சரத்தில்

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளை தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்த சமூகமே வைத்திருந்தது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பெருமைமிகுந்ததாக பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவுகளில் பல்வேறு துறைகளில், தளங்களில் தங்கள் ஆளுமையையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டிருக்கும் பெண் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்வளிக்க கூடிய ஒன்றாகும். அத்தைகைய சில பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் இந்த சரத்தில் தொடுக்கிறேன். என் பார்வையில் வராமல் சிறப்பாக இயங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு தெளிவு படுத்திவிடுகிறேன். என் வாசிப்பின் எல்கைக்குள் இப்பதிவுகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன் சரம் தொடுக்க,


சமூகத்தின் போலித்தனங்களை தனது சாட்டையடி அணுகுமுறையால் அம்பலப்படுத்தியதில் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. சமூகத்தால் ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு என பல்முனை தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட வரும் திருநங்கைகளின் பிரதிநிதியாக, அவர்களின் உணர்வுநிலையை பொதுச்சமூகத்தின் அறிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். மரணம் என்றால் என்ன அதன் வலியையும் ஆழமாக பதிவு செய்திருந்தார். திருநங்கைகளை கேலிப்பொருட்களாகவே பாவிக்கப்பழகிவிட்ட மனங்களுக்கு அதன் பிண்ணனியில் இருக்கும் உறைய வைக்கும் பால்மாற்று அறுவை சிகிச்சையினைப்பற்றி தெரிவிக்கும் பதிவு பால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு, பரவலாக ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று தந்த இந்த பதிவு,
எயிட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் நடக்கும் அவலத்தினை அற்புதமாக அலசும் பதிவு உலக எயிட்ஸ் தினம்.


அழகியலும், சமுகப் பொறுப்பும் ஒருங்கே காணப்படுவது மிக அரிதான ஒன்றாகும். ஆனால் இவரின் எழுத்துகளில் இவை இரண்டும் காண கிடைக்கும். மிக நுட்பமான எழுத்துக்கு சொந்தகாரர். தன் எழுத்தின் உலகத்திற்குள் வாசகனை பங்கேற்க்க செய்யும் அசாத்திய திறமை உடையவர். மனித நேயமும், ஆழமான அரசியல் பார்வையை உடைய இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது, அறிவுஜீவிகளின் முகத்திரையை அம்பலப்படுத்தும் அழுத்தமான பதிவு
அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் , சமீபத்தில் பரவலாக சர்ச்சையை கிளப்பிய ஞாநி விவாகாரம் தொடர்பாக இவர் இட்ட பதிவு, எந்த வளையத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தான் நினைப்பதை தெளிவாக எடுத்துரைக்கும் திறமையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் , நான் குறிப்பிட நினைத்த இவரின் மற்றொரு பதிவான ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை பதிவினை தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். நான் குறிப்பிட நினைத்த பலபதிவுகளை தன் கடைசிப்பதிவில் தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். :-)

சமூகப்பொறுப்புடன் எழுதும் மற்றொரு பதிவர் மங்கை. பெண்கள் நலன், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், எயிட்ஸ் விழிப்புணர்வு, மனநலன் மருத்துவம் சார்ந்த பதிவுகள் என சமூக அக்கறையுடன் எழுதப்படும் இவரது எழுத்து. சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்த Sr. லயோலா அவர்களை நமக்கு அறிமுகம் செய்த பதிவு, நாட்டையை உறைய வைத்தை நிதாரி படுகொலைகள் தொடர்பான பதிவு நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள், இவரது எழுத்தினால் அடையாளம் காணப்பட்ட இன்னொரு சாதனைப்பெண்மணியான மீனாட்சி பற்றி பதிவு செய்ததும் அதற்கு நான் தாங்க மீனாட்சி பேசறேன்... என்று நம்மிடையே பகிர்ந்து கொண்ட மனிதநேய பதிவர்.

மலர்வனம் லஷ்மி, பொதுவாக பெண்கள் விவாதிக்க தயங்கும் தலைப்புகளில் எந்தவித தயக்கமும் இன்றி மனதில் பட்டதை தெளிவாக எடுத்துவைக்கும் பதிவர். பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குட்படுத்துபவர், பெண்ணியம் சார்ந்த சர்ச்சைகளில் இவரது பதிவுகள் இடம் பிடித்திருக்கின்றன. எதையும் கேள்விக்குட்படுத்தபடும் இவரது சிந்தனை தளம் சிறப்பானது. தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண், அடங்கமறு! ஐ.ஐ.டியில் பணிபுரிந்துகொண்டே அங்கு நிலவும் சமூக நீதிக்கெதிராக போராடிவரும் பேராசிரியர் அவர்களின் மகள் கவிஞர், பத்திரிக்கையாளர் மீனா கந்தசாமி அவர்களின் அவள் விகடன் நேர்காணல் அடங்கமறு அவசியம் வாசிக்க வேண்டிய நேர்காணல்

பொன்ஸ், சிறந்த வலைப்பதிவு தொழில்நுட்பவியலார். உற்சாகத்தோடு எழுத வரும் பதிவர் பலருக்கு தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை செய்துவருபவர். எனக்கும் பலமுறை உதவி செய்தவர். அதற்கு சிறப்பு நன்றி. நல்ல சிந்தனையாளர். கவிதை, சிறுகதை என்று பரவலாக தனது முத்திரையை பதிந்திருப்பவர். இவரது சந்திரா அத்தை சிறுகதை பலரது பாராட்டைப் பெற்றது. தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர் என்றாலும் பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். பெரியாரை பற்றி தவறாக திரிக்கும் பலருக்கு மத்தியில் இவரது நட்சத்திர வாரத்தில் வந்த பெண் ஏன் அடிமையானாள் ஆழமான அற்புதமான பதிவு.புரிதலுடன் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை விமர்சிக்கும்.

அப்படிப்போடு! மதுரை வீரம் ஈரமும் எழுத்தில் தெறிக்கும் எழுத்துக்கு சொந்தகாரர். பதிவுலகில் நான் அக்கா என்று அழைக்கும் ஒரே பதிவர். இவரது அரசியல் அறிவு ஆச்சிரியமளிக்ககூடிய ஒன்று. சென்ற சட்டமன்ற தேர்தல் பற்றிய அவரது கருத்துகணிப்புகளை வாசிப்பவர்களுக்கு இது எளிதாக புரியும். அதிகமான பதிவுகள் இருப்பதால் இணைப்பு கொடுக்கவில்லை. மண்வாசனை மணக்கும் இந்த பதிவு அவரது நட்சத்திர வாரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
உள்ளடங்கும் ஆமைகள்.




இன்னும் சிலர் விட்டுபோயிருப்பதை உணர்கிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்


















.

4 comments:

  1. நன்றி முத்துக்குமரன்...நான் எதிர்பார்க்கவே இல்லை..என்னோட பதிவுகள் கூட பேசப்படும்னு..நன்றி

    ReplyDelete
  2. கலக்கல் தொகுப்பு!

    ReplyDelete
  3. //நன்றி முத்துக்குமரன்...நான் எதிர்பார்க்கவே இல்லை..என்னோட பதிவுகள் கூட பேசப்படும்னு..நன்றி//
    வருகைக்கு, ஆச்சர்யத்திற்கும் நன்றி மங்கை. உண்மைக்கு எப்போதுமே சிறப்பு உண்டு.

    ReplyDelete
  4. //கலக்கல் தொகுப்பு!//

    பாபா நன்றி :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது