07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 19, 2007

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

படித்த பதிவுகளில் பிடித்த இடுகைகளைத் தொகுப்பது எளிதான செயல் என்று நினைத்திருந்தேன். ஆனால் செயலாக்க முயன்றபோதுதான் ஒவ்வொரு பதிவரும் எழுதிய இடுகைகளில் சிறப்பான இடுகைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு தனி இடுகையாகும்போல் உள்ளது. முதல் தவணையாக பின்வருவனவற்றை இங்கே இடுகிறேன்.

தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாளர் இராம.கி. அய்யா அவர்களின் வளவு பதிவினைப் பலர் அறிந்திருக்கக்கூடும். அதில் வந்த இடுகைகளில் சில :

வலைச் சொற்களுக்கு (webterms) இணையான தமிழ்ச்சொற்களையும் விளக்கங்களையும் இங்கே காணலாம்.

"இனி" பின்னொட்டாக வரும் கணினி, கவிதாயினி, தொகுப்பாளினி சொற்கள் சரியா தவறா என்ற ஐயத்திற்கு விளக்கத்தை தருகிறார் இங்கே.

சந்த வசந்தம் மடற்குழுவின் "கையிற் கிடைத்த கனி" என்னும் பாட்டரங்கத்தில் பங்கேற்று மரபு வெண்பா வடித்து மகிழ்விக்கிறார்.

திரு நாகூர் ரூமி எழுதி திண்ணையில் வெளிவந்த "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக சற்றே அறச்சீற்றத்துடன் இட்ட இடுகை இதோ.

தேன்கூடு திரட்டி நடத்திய சுடர்வழிச்செய்தி தொடர் ஓட்டத்தில் அய்யா அவர்களின் இடுகை மூலம் காளையார்கோவில் பற்றிய பல புது செய்திகளையும் தமிழர்களின் தாழ்வு மனப்பாங்கினையும் அறிவியல் தமிழ் வளரவேண்டிய நிலைமையையும் அறிந்துகொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
அடுத்ததாக விரிவெளித்தடங்கள் செல்வராஜ் அவர்களின் பதிவில் பிடித்த இடுகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் அவற்றைத் தேர்ந்தெடுக்கச் சற்றே கடினமாக இருந்தது.

இந்தப் பதிவில் வருமுன் காப்போம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

கணினியில் பயன்படுத்தப்படும் ஐப்பீ முகவரி குறித்து எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இங்கே அளித்திருக்கிறார்.

தேன்கூடு சாகரன் அவர்களுக்கு இதன்மூலம் நினைவஞ்சலி செலுத்துகிறார்.

இந்த இடுகையை வாசித்ததும் காரணமறியாச் சில மகிழ்தருணங்கள் உங்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது.

குடும்பத்தினர் அடிக்கடி கலந்து பேசி மகிழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இடுகையை ஏற்றுக் கொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
வலை உலகிற்கு வந்த தாய்க்குலத்தில் ஒருவரான அப்டிப்போடு அவர்களின் அரசியல் அறிவு அபாரமானது எனலாம். சென்ற மாநிலத் தேர்தலில் அவரின் கணிப்புகள் ஏறக்குறைய சரியாகவே இருந்தன என்பதை அவரின் இடுகைகளை வாசித்தவர்கள் அறிவர். நல்ல வாய்ப்புகள் இருந்தும் தான் தமிழக அரசியலில் புக விரும்பவில்லை என்றுகூட அவர் ஒரு இடுகையில் எழுதியிருந்தார்.

அவர் தன் அன்பிற்குரிய பாட்டியை நினைத்து எழுதிய இடுகை இங்கே.

இந்த இடுகையில் அவரின் மஞ்சள் பை மகிமையைக் காணலாம்.

பினாத்தலாரின் வைஃபாலஜி தொடங்குவதற்குப் பல மாதங்கள் முன்பே கணவர்களை எரிச்சல்பட வைத்தார் :-)

இங்கே அவருடைய வாசிப்பு அனுபவத்தை அறிந்துகொள்ளலாம்.

அவர் எழுதிய தொடர் இடுகைகள் அரசு ஊழியர்கள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4 வாசித்த அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலை உலகத்தின் முன்னோடிகளுள் ஒருவர் கவினுலகம் நா.கண்ணன்.

அவர் தமிழ்த்திரைப்படங்களைப்பற்றி எழுதிய தொடர் இடுகைகளை இங்கே காணலாம்.

சரஸ்வதி பூஜை குறித்துத் தான் வாசித்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

இந்த இடுகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புத்தம் புது பத்து கட்டளைகளை வாசிக்கலாம்.

பெரியார் திரைப்படம் குறித்து இப்படி எழுதியுள்ளார்.

தமிழ் உரைநடைப் பேச்சில் பிறமொழிக் கலக்கலை இங்கே சாடியுள்ளார்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலைஉலக ஜிரா அவர்களின் இனிய(து கேட்கின்) இடுகைகளைச் சுட்டிக் காட்டுவது மிக எளிது. அது பதிவின் சுட்டிதான் - எல்லா இடுகைகளும் இனியவைதாம். சிரமம் பார்க்காமல் எல்லா இடுகைகளையும் வாசித்து இன்புற வேண்டுகின்றேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
சுட்டிகளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். பின்னூட்டத்தில் தெரிவித்தால் சரி செய்துவிடுகிறேன்.
அடுத்த இடுகையில் மீண்டும் சந்திப்போம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது