07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 24, 2009

இனிய ஐந்தாவது நாள்



நான்கு வெவ்வேறு நாட்டை சேர்ந்த வியபாரிகள் ஒன்றாக பயணம் செய்தார்கள் அப்போது வழியில் அவர்களுக்கு பசி எடுத்தது , கையில் குறைந்த அளவே பணம் இருப்பதால் நால்வரின் பணத்தையும் சேர்த்து ஏதாவது வாங்கி அதை பங்கிட்டு சாப்பிட முடிவுசெய்தார்கள். அதில் அரேபியன் எனக்கு inab வேண்டும் என்றான் , கிரேக்கன் stafil வேண்டும் என்றான் , துருக்கியன் uzum வேண்டும் என்றான் , பெர்ஷியன் angkuur வேண்டும் என்றான் . இப்படி ஒவ்வொன்றாக சொல்ல அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது . அப்போது அந்த வழியாய் வந்த ஒரு பெரியவர் அவர்களிடம் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டார். பணத்தை என்னிடம் கொடுங்கள் உங்கள் நால்வரின் தேவையையும் பூர்த்திசெய்கிறேன் என்றார். பணத்தை பெற்று சென்று ஒரு கூடை நிறைய “திராட்சை” பழங்களோடு வந்தார் . அதை பார்த்த அரேபியன் நான்கேட்ட inab இதுதான் என்றான் , கிரேக்கன் தான் கேட்ட stafil அதுதான் என்றான் ,துருக்கியன் தான் கேட்ட uzum இதுதான் என்றான் , பெர்ஷியன் தான் கேட்ட angkuur இதுதான் என்றான் . ஆக அவர்கள் அனைவரும் தங்களுக்கு “திராட்சை”-தான் வேண்டும் என்று அவரவர் மொழியில் கேட்டுள்ளார்கள் , அதை புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்.

உலகில் உள்ள எல்லோருக்கும் அன்பான , அமைதியான வாழ்வு வேண்டும் என்பதே ஆசை , கடவுளும் மதமும் இதைத்தான் செல்கின்றன ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் , ஒருவர் உணர்சிகளுக்கு ஒருவர் மதிப்புகொடுக்காமலும் சண்டை போட்டுகொண்டுள்ளார்கள் . இதை புரிந்துகொண்டால் எல்லா நாளும் இனிய நாளே….

…………………………..

http://kinatruthavalai.blogspot.com/
கிணற்றுத் தவளை.... என்று எழுதி வருகிறார்
. 3 பதிவுகள் மட்டுமே இட்டுள்ளார் .


வாழ்ந்த நேரம் மட்டும்

வயதுக் கணக்கானால்
நான் இன்னும் கைக்குழந்தைதான்
- அருமையான வரிகள் . மேலும் நிறைய எதிர்பார்க்கலாம்.

6 comments:

  1. பிரபு, நல்ல கதை, நல்ல விளக்கம்.

    இந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்.

    வாழ்த்துகள்.....

    ReplyDelete
  2. நல்ல கதை பிரபு!

    ReplyDelete
  3. ஊக்கத்துக்கு நன்றி பிரபு!

    ReplyDelete
  4. அருமை அன்பரே

    ReplyDelete
  5. வாழ்த்துகள் பிரியமுடன் பிரபு!
    சிறப்பான சரம் தொடுப்பு!
    சங்கதிகள்!

    ReplyDelete
  6. vazhdha neram mattum,..
    nandragak irukkirathu

    ReplyDelete