வலைப்பூ எழுத வந்த போதில் மற்ற யாருக்கும் கிடைக்காத சிபாரிசுகள், வரவேற்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நல் உள்ளமும் என்னைத் தூண்டி துலங்க வைத்தது. திரும்பத்திரும்ப அவர்களின் பெயர்களைச்சொல்வது அவர்களைச்சங்கோஜப்படுத்தும். ஆகவே, அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் மட்டும் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!வலையில் வந்த புதிதில் வலைப்பூக்களைப் படிப்பது, கருத்துரைகள் எழுதுவது, ஓட்டுப்போடுவது இதெல்லாம் குறித்து எந்த அனுமானமும்...
மேலும் வாசிக்க...
கவிதைகள் - காலத்தின் உயிர்ப்பதிவு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு இதைவிட அழகாக வரைவிலக்கணம் தர முடியுமா? தெரியவில்லை! கவிதை காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல. கவிஞனின் எண்ணங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.அவனின் துயரங்களை, துக்கங்களை, வியப்பை, சந்தோசத்தை, இன்பத்தை வடிக்கும் வார்த்தை வடிகால்.கவிதை எழுதுபவர்களாலும், கவிதை படிப்பவர்களாலும் வன்முறை செய்ய இயலாது. கவிதையால் ஈர்க்கப்பட்டவர்களின் மனதை மென்மையாக மாற்றிவிடும்...
மேலும் வாசிக்க...
பெண் சுதந்திரம் என்பது சமூகமேம்பாட்டிற்கு வித்திடும் ஒரு தளம். எந்த ஒரு நாட்டில் பெண் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த நாடும், எங்கே பெண் கண்ணீர் வடிக்கிறாளோ அந்தக்குடும்பமும் மிளிர்வதில்லை. அதே சமயத்தில் குடும்பங்கள் மிளிர்வதும் பெண் என்பவளின் தியாகத்தாலும், உழைப்பாலும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.குடும்ப வன்முறையிலும், வரைமுறையற்ற அடிமைத்தனத்திலும், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகி, சிக்கிச்சீரழிந்து கண்ணீரில் மூழ்கி, தம்மை...
மேலும் வாசிக்க...
தமிழே! என் தாய் தந்த சீதனமே! சங்கரனார் இறங்கி வந்து சங்கம் அமைத்து, தரணியில் வளர்ந்த மொழியே! உன்னை வணங்குகிறேன்.நமது தமிழ் மொழி உயர்ந்த வளமான இலக்கியப்பின்னணியையும், தொன்மையும் கொண்டது. காலப்போக்கில் சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கானது என்று ஒதுக்கப்பட, அந்த பொக்கிஷங்கள் கால ஓட்டத்தில் நம்மால் அறியப்படாமல் போனது. பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வியாபார நோக்கில், ஜனரஞ்சகமாக, வாசகர்களின்...
மேலும் வாசிக்க...
சின்ன வயதில் வாசிக்கும் ஆசை இருந்த போதிலும் ஆசைக்கேற்ற தீனியாக புத்தகங்கள் கிடைக்கவில்லை.மளிகைப்பொருட்கள் கட்டிவரும் காகிதங்கள், எங்கள் கடையில் வாங்கப்படும் தினத்தந்தி, அம்மாவிற்காக வாங்கப்படும் ராணி, ராணிமுத்து ஆகியன தான் வாசிக்கக்கிடைத்தவை.அதைத்தாண்டி வாசித்தது விகடன்,குமுதம், மங்கையர் மலர்இன்று வலையுலகப் படைப்பாளிகள் பலரும் சொல்வது போல் ஆங்கில நாவல்கள்,பிற மொழி, நாடு சார்ந்த எழுத்துக்களைப்படித்ததில்லை.அதனால் பரந்து பட்ட அறிவு,...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக என்னை அழைத்தற்கு மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களை பணிவன்புடன் வணங்குகிறேன். ஐயா தாங்கள் வழங்கிய இந்த வாய்ப்பை என் வலையுலகப் பயணத்தில், எனக்குக்கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும் முதற்கண் பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரது படைப்புகள், ஆன்ம திருப்தியைத் தரவேண்டும்....
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் செல்வம் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் - 20010ல் இணைந்த புதிய பதிவர்களைத் தேடிப் படித்து - பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல தலைப்புகளில் அறிமுகப் படுத்தி கலக்கி இருக்கிறார். அவரை வாழ்த்துக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.26 ம் நாள் - நாளை துவங்கும் வாரத்திற்கு திருமதி சாந்தி...
மேலும் வாசிக்க...
யாருமே இல்லாத கடையில் (என் பதிவுகள்) டீ ஆத்திக்கொண்டிருந்த என்னைக் கூட்டி வந்து கஃபே காஃபிடேயில் (வலைச்சரம்) வந்து காஃபி ஆத்த வைத்த சீனா ஐயாவிற்கு முதல் நன்றி.நான் ஆத்திக்கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு மட்டும் போகாமல் அதை நல்லாயிருக்குன்னும் சொல்லிவிட்டுப் போன தோழர்களுக்கும் நன்றி.என்ன தான் சுய எள்ளல் தொனியில் எழுதினாலும், பாராட்டிற்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது. அது கிடைக்கும் போது மனம் குதூகலிக்கிறது. ஆனால் பாராட்டுவதற்கு...
மேலும் வாசிக்க...
தமிழர்களின் சினிமா மீதான காதல் உணர்வுப்பூர்வமானது. அதனால் தான் இன்றும் படங்களில் நடித்து விட்டால் போதும்,முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்ற ஆசையில் நிறையபேர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை சற்று நேரம் செலவிட்டுப் படித்துப்பார்த்தால் புரியும். கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ வெறும் சினிமாவில் இருந்ததால் மட்டும் முதல்வர்கள் ஆகிவிடவில்லை. அது ஒரு காஸ்ட்லி விசிட்டிங்கார்ட் அவ்வளவுதான். அதையும்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது தான். சனவரி 2010 லிருந்து இந்த வலைப் பெருங்கடலில் தம்மை இணைத்துக் கொண்ட பதிவர் நண்பர்களின் வலைப்பூக்களை இவ்விடுகையில் காண்போம்.கோப்புகள் ராஜ் என்பவரால் துவங்கப்பட்டிருக்கும் வலைப்பூ இது. நமக்குத் தேவையான பைல்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். ராஜ் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.:-)விஜய் ஆம்ஸ்ட்ராங் – மாத்தியோசி திரைப்பட ஒளிப்பதிவாளர் நமக்கு...
மேலும் வாசிக்க...
குழந்தைகள் மீதான நம் விருப்பம் தான் மனித இனத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான முதல் காரணி. அதிலும் இயல்பாகவே பெண்களுக்கு குழந்தைகள் மீதான ஆசை அதிகமாகத்தான் இருக்கும். ஆண்களும் தங்களைத் தாயுமானவனாக உணர்வது குழந்தை பெறும் போது தான். எனவே இன்று பதிவர்களின் பார்வையில் குழந்தைகள்...தீபாவின் இந்த நேஹா பற்றிய பதிவு, அவ்வளவு அழகு.அமித்து பற்றிய அவர் அம்மாவின் பதிவு. அமித்துவின் மொழிநடை தான் உலகிலேயே சிறந்த மொழிநடை.சித்ராவின் பதிவு...
மேலும் வாசிக்க...
எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.அப்பாக்களின் பொதுக் குணங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிடலாம்.1. தான் நினைக்கும் எதையும் அம்மா மூலம் பேசுவது.2. தான் மிகவும் கண்டிப்பு போல நடிப்பது.3. பாசத்தை...
மேலும் வாசிக்க...
கையில் வடை மடித்த காகிதம் கிடைத்தால், அதைக் கூடப் படிக்கும் பழக்கம் யார் வழியாக எனக்கு வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆராய்ச்சி செய்ய யாருமில்லாததால் அடுத்த மேட்டருக்குச் செல்வோம்.வலையுலகம் அறிமுகமானது 2007 ல். படிப்பதற்கு இவ்வளவு விடயங்கள் அதுவும் ஓசியில் என்ற போது, தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்கள் போல், அதன் மீது இயல்பாகவே காதல் உருவானது. ஆறு மாதம் தொடர்ந்து படித்து வந்த போது தான் அந்த விபரீத ஆசை உருவானது. நாமே ஏன் ஒரு...
மேலும் வாசிக்க...
புரியுது..புரியுது மனசுல பெரிய ஆதவன்னு நினைப்பான்னு நீங்க கேக்கிறது புரியுது. இருந்தாலும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல......நான் முதல்பதிவு போட்டவுடனே யாருமே படிக்காமே, தெரியாம படிச்சவங்களும் நாலு திட்டு திட்டி அனுப்ச்சிருந்தாங்கன்னா உங்களுக்கு இந்த கொடுமையே வந்திருக்காது. இப்ப வருத்தப்பட்டு என்னா பண்றது? டூ லேட் பாஸ்.நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிட்டு 2 ½ வருஷமா வலையுலகைச் சுத்தி சுத்தி வந்ததுல கற்றதும் அதிகம். பெற்றதும்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !கடந்த ஒரு வார காலமாக - இரண்டாம் முறையாகப் பொறுபேற்ற அருமை நண்பர் ஸ்டார்ஜன் - ஏற்ற பொறுபினை - கடமையை - அழகாக நிறைவேற்றி - அன்புடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில் மணி-செண்பகம் எனக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலமாக பதிவர்களை அறிமுகம் செய்துள்ளார். மன நிறைவுடன் விடை பெறுகிறார்.அவரை வலைச்சரக் குழுவினர் சார்பில் வாழ்த்தி...
மேலும் வாசிக்க...
செண்பகம் : மச்சான் மச்சான் எங்கயிருக்கீக.. எல்லோரும் நம்மள தேடுதாக..மணி : அப்படியாபுள்ள.. ஏபுள்ள நம்ம கதை முடியிற நேரம் வந்திருச்சிபுள்ள..செண்பகம் : அட ஆமா மச்சான்.. ரொம்ப வருத்தமா இருக்குபுள்ள..மணி : வருத்தப்படாதபுள்ள.. நம்ம கதைக்கு அவுக மத்தியில ரொம்ப வரவேற்பு கிடைச்சிருக்கு.. அவுக மனசுல நமக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு.. நம்ம கதைய படிச்ச எல்லோரும் குழந்தைகள், பெரியவங்க, தாய்மார்கள் என்று எல்லோரும் தம்வீட்டுல ஒருத்தற நம்மள நினைச்சிருக்காங்கபுள்ள.....
மேலும் வாசிக்க...
கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்கசெண்பகமே செண்பகமே..செண்பகமே செண்பகமே.. 2செண்பகமே செண்பகமே.. 3செண்பகமே செண்பகமே.. 4செண்பகமே செண்பகமே.. 5மச்சான் மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காக..இன்னிக்கி நிறைய வித்யாசமான வலைப்பூவ வச்சிருக்கிறவங்களோட நாம பேசப்போறோம்.. மிக வேண்டியவங்களெல்லாம் இன்னிக்கி நம்ம கதையில வருவாங்க..அட அப்படியா மச்சான்.. ரொம்ப ஆர்வமா இருக்கு..இவுக பேரு திரவியம் நடராசன். இவரு சட்டத்தை கையில எடுத்துட்டாருன்னு சொல்லலாம்....
மேலும் வாசிக்க...
கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க.. செண்பகமே செண்பகமே..செண்பகமே செண்பகமே.. 2செண்பகமே செண்பகமே.. 3 செண்பகமே செண்பகமே.. 4மச்சான் மச்சான் எந்திரு மச்சான்.. பொழுது விடிஞ்சி நாழியாச்சி..ம்.. ம்.. ம்.. செத்த நேரம்.. கர்.. கர்.. மச்சான் எந்திரி மச்சான்...நீ உம்மா கொடுத்தாதான் எந்திரிப்பேன்.. காலையிலேவா.. விளங்கும்.. நம்ம கதய படிக்கிறவக தப்பா நினைப்பாங்க..அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாக..சரி இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்.. எந்திரிச்சி...
மேலும் வாசிக்க...
கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..செண்பகமே செண்பகமே..செண்பகமே செண்பகமே.. 2செண்பகமே செண்பகமே.. 3செண்பகம் செண்பகம் வீடெல்லாம் ஒரே மணம் ரொம்ப நல்லாருக்கே.. வந்தது யாரு நம்ம பக்கத்தூட்டு மாலதி மாதிரியே இருக்கு..ஆமா மச்சான் மாலதிக்காவேதான்.. நான் இன்னைக்கி இறால்பிரியாணி செஞ்சேன்.. கொண்டா கொண்டா சாப்பிட்டிருவோம். ஓ மணமே நல்லாருக்கே..சாப்பிடு என்ஆச மச்சான்.. ம்ம்ம்.. என்னருமையா இருக்குபுள்ள.. பரவாயில்லையே நல்ல விதவிதமா சமைக்க கத்துக்கிட்ட.....
மேலும் வாசிக்க...
கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..செண்பகமே செண்பகமே..செண்பகமே செண்பகமே.. 2மாலதி : என்ன செண்பகம்.. இவ்வளோ நேரமாச்சி..செண்பகம் : ஆமாக்கா எங்கூட்டுக்காரர்ட்ட பேசிக்கிட்டிருந்தேனா.. அதனால செத்த நாழியாயிருச்சி..அப்படி என்னப்புள்ள பேசுவீக.. அதான் நாள்பூரா பேசுறீங்களே..எக்காவ் இந்த எகத்தாளம் வேண்டாங்க்கா..சரி சரி கோவிச்சிக்காதபுள்ள.. சும்மா கேட்டேன்..சரிக்கா.. எங்கூட்டுக்காரர் பக்கத்தூர்ல வலையுலகம்ன்னு ஒரு உலகம் இருக்காம். அங்க நிறையபேர்...
மேலும் வாசிக்க...
கதை புரியாதவங்க முதல்ல இருந்து வாங்க..செண்பகம் : மச்சான் காலையில பாதியிலே விட்டுட்டுபோன பதிவர்களை பற்றி சொல்லுங்க மச்சான்..மணி : என்ன இது இவ்வளோ ஆர்வமா இருக்கியே.. பரவாயில்லை..ரொம்ப பீத்திக்காத மச்சான்.. கேட்டா சொல்லுவியா..சரிசரி சொல்லுறேன்.. காலையில பயணத்துல உள்ள அனுபவத்த பார்த்தோமா..இவருபேரு மதார். இவரு சென்னையிலஇருந்து திருநெல்வேலி போறதுக்கு டிக்கெட் எடுத்திருக்காக.. ஆனா பாரு..அட நம்மூரா அந்தம்மா... என்னாச்சி மச்சான் என்னாச்சி...பாவம்...
மேலும் வாசிக்க...
அன்புமிக்க நண்பர்களே!!வலைச்சரத்தில் மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரத்தில் இன்று முதல்நாள். வழக்கமாக இன்றைய தினம் முதல்நாள் அன்று அறிமுகப்பதிவு தான் வெளியிடுவாங்க. நான் ஏற்கனவே கடந்தமுறை என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளதால் அறிமுகப்பதிவு தேவையில்லை என நினைக்கிறேன்.அதனால் நேரடியாகவே கதைக்குள்ள போவோமா. அட ஆமா கதைன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. இப்போ கதை சொல்ற சீசன் நடந்துக்கிட்டிருக்குன்னு...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோடு க.பாலாசி, ஏற்ற பொறுப்பினை, மிகுந்த பணிச்சுமைக்கு இடையேயும். பொறுப்போடு நிறைவேற்றி - மிகுந்த மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 155 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பலப்பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அதுவும் வித்தியாசமான முறையில் - சுட்டிய சுட்டிகள் அனைத்தும் அருமை - தவற விடக்கூடாத இடுகைகள். தேடித்...
மேலும் வாசிக்க...

என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும்...
மேலும் வாசிக்க...