07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 6, 2011

வலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..



எனதன்பு நெஞ்சங்களே! இன்றுடன் நான் வீசும்வலை முடிவடைகிறது. இன்று நம்ம வலையில் சிக்கிய சுறாக்களையும், புறாக்களையும். உங்கள்முன் காண்பித்துவிட்டு விடைபெறலாமென்று நினைகிறேன்.
எண்ணத்தில் ஓடுவதை எழுத்தில் வடிக்க வயதுவரம்புகள் முக்கியமில்லை என்பதை உணர்துவதே! இதுபோன்ற இணைய வலைகள்தான்.

வலைகளில் வலம்வரும் நிலாக்களாக, சூரியன்களாக. விண்மீன்களாக,தனக்குள் தோன்றும்.மற்றும் வெளிடங்களிலும் காண்பதையும் மிக தத்ரூபமாய். நற்ச்சிந்தனைகளின் வெளிப்பாடுகளாய் மிக அற்புதமாக, மகிழ்ச்சியாய். துக்கமாய். சுகமாய். சோகமாய்.உணர்வாய். உணர்ச்சியாய்.தனக்குத்தெரிந்த வகையில் பிறரிடம் பகிர்ந்துக்கொள்ளும்போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகவும், சோகம் சுகமிழந்து காணப்படுவதை உணர்த்துவதைபோல் அவர்கள் வடிக்கும் பதிவுகள்,
மிக மிக அருமை.

வலைகளின் வசந்தகாலங்களை பின்னும். இவர்கள் அனைவர்களில் இந்த ஒருவாரத்தில்,கொஞ்சமாவது வலைவீசிப் பிடித்திருக்கிறேன் எனநினைக்கும்போது, மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.
திறமைகள் எங்கு காணப்படுகிறதோ! அதை தேடிப்பிடித்து வெளிக்கொண்டுவருவது மிகுந்த சிறப்பு அப்படியாப்பட்ட நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துகொண்டிருக்கும் அதற்கு காரணகர்தாவாகயிருந்து கொண்டிருப்பதோடு என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய 
வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கணினியில் உலாவருவம் அனைவரும் ஒவ்வருவரும் அவரவரின் தனிதிறங்களை வெளிபடுத்துகிறார்கள். இதிலும் விதிவிலக்காக வில்லங்கங்களையும் விதைப்பவர்களும் உண்டு, தனக்குத் தானேயும்சரி. தன்னால் மற்றவருக்கும் சரி. எவ்வித தீங்கும் தம் எண்ணத்திலிருந்து இழைத்துவிடாமல்  தவிர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.நம் எண்ணும் எண்ணம்தான் நம்மை வாழவைப்பதும் வீழவைப்பதும்.

ஓகே விசயத்துக்கு வருவோம்.
அப்பாடா  என்றிருக்குமே! சரி சரி இன்றோடு நம்ம படம் ஓட்டுவதை நிறுத்திக்கொள்வோம். இந்த ஒருவாரம் நான் செய்த இப்பணியில் குறையிருந்தால் பொருந்திக்கொள்ளுங்கள். நிறையிருந்தால் நிறைவுபெறுங்கள். எதுவென்ற போதும் கருத்துகளின்மூலம் பகிர்ந்திடுங்கள்.

ஒவ்வொரு படைப்பாளியும் பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது கருத்துக்கள்தான்.அக்கருத்துக்கள்தான் அவர்களை மென்மேலும் வலுப்பெற்று ஊக்கமடையச் செய்கிறதென்பதை நினைவில்கொண்டு,தாங்களின் எண்ணகங்களையும் கருத்தாக வெளியிடுங்கள் .இதுவரை பொருமையோடு நான்வீசிய வலைகளில் சிக்கியவைகளின் நிறைகுறைகளை பகிந்துகொண்ட  அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் பலகோடி.இதே பகிர்தலை தொடர்ந்து தரும்படி மிக அன்போடு கேட்டுகொண்டு பிரியமனமின்றி பிரியாவிடைபெறுகிறேன்..

சொல்ல மறந்துட்டேன் நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்
 12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்  பிராத்தனைகளும் வேண்டும்..


இதோ சிக்கிய சுறாக்களும். புறாக்களும்.   







வலைகளின் வழியே
வலம்வரும் வசந்தகளாய்
விழிபார்த்து வழிநடத்தும் நற்பாதைகளாய்

இலவச வலைமூலம்
இதயத்தின் வெளிப்பாட்டை
இன்றியமையா எண்ணங்களாய்

தினம்தோறும் சுகம்தரும்
தினம் தினம் புதுவிதம்தரும்
தித்திக்கின்ற நிகழ்வுகளாய்

புறப்படும் புதுப்புது  ராகங்களாய்
புதுமைகள் படைத்திடும் புதுமைகளாய்
பெருமைசேர்த்திடும் மாண்புகளாலே

எண்ணத்திலுதிப்பதை எழுதிலாக்கி
ஏக உள்ளத்தில் நிலைத்திட
என்றும் முயற்சிப்போம்
ஏகன் இறையோன் அருளாலே!

மீண்டும் வலைச்சரத்திற்கும்.மற்றும்  அனைவருக்கும். என்மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன். நன்றி நன்றி நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கும்
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

99 comments:

  1. அனைவருமே பதிவுலக சுறாக்கள்தான்

    சிறப்பான அறிமுகங்கள்.....

    ReplyDelete
  2. 7 ஆவதாக இருக்கும் ஐயா பாலசுப்ரமணியன் (gmb writes) அவர்களின் தளத்தின் இணைப்பு சரியாக இல்லை என்று நினைக்கிறேன்...

    முடிந்தால் சரிசெய்யுங்கள் நன்றி...

    ReplyDelete
  3. //நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்
    12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்..//

    உங்கள் அன்பு மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  4. ஒருவார காலமாக வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

    ReplyDelete
  5. உங்கள் அன்புச் செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன்

    ReplyDelete
  7. உங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்

    ReplyDelete
  8. வாரம் முழுசும் அழகான முறையில் அறிமுகத்துடன் , வித்தியாசமான முறையில் படங்களுடன் இனைத்து உங்களுக்கே உரிய கவிதை முறையில் தொகுத்தது பாராட்ட வேண்டியதே.. கடின உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்கள் அன்பு செல்வத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    என்னங்க, நான் புறாவா? விஜயின் சுறாவா? சொல்லிட்டு போங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    என்னை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு ரொம்ப நன்றிங்க....

    வலைச்சரப் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  10. எல்லாம் வல்ல அல்லாஹ் செல்வனுக்கு எல்லா நலங்களும் வளங்களும் அளித்து அருள்வானாக, ஆமின் - ஹிமானா சையத்

    ReplyDelete
  11. சுறாக்களின்,புறாக்களின் அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  12. தனக்கு கிடைத்த சந்தர்பத்தை,
    சகலரும் விரும்பிடும் வண்ணம் சலிக்காமல் ரசிக்கச்செய்து.
    சடவடையா உழைப்பை!
    நல்ல,நல்ல தொகுப்பை
    கல,கல வாத்தியார் எடுத்துச்செல்லும் வகுப்புப்போல் அமைத்ததை என்னவென்பேன்?
    எப்படி பாராட்டாமல் இருப்பேன்?
    சகோதரி நீங்க பாஸாகிடிங்க( எழுதுலக பாஸ்)

    ReplyDelete
  13. //மாணவன் said...
    அனைவருமே பதிவுலக சுறாக்கள்தான்

    சிறப்பான அறிமுகங்கள்.//



    வாங்க மாணவன். தாங்களின் முதல்பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி
    அனைவரும் சுறாக்கள்தானா அப்ப புறாக்கள் இல்லையா????

    ReplyDelete
  14. மாணவன் said...
    7 ஆவதாக இருக்கும் ஐயா பாலசுப்ரமணியன் (gmb writes) அவர்களின் தளத்தின் இணைப்பு சரியாக இல்லை என்று நினைக்கிறேன்...

    முடிந்தால் சரிசெய்யுங்கள் நன்றி.//

    ரொம்ப நன்றிமா. அவசர அவசரமாக பதிவைபோட்டுக்கொண்டிருக்கும்போது பார்த்தா மணி காலை 5,30 அச்சோன்னு திரும்புவதற்க்குள்.
    ஏன் மம்மி என்னை எழுப்பிவிடவில்லை பஸ்ஸுக்கு டைமாயிடுச்சேன்னு சத்தவந்ததும் தான் தெரிந்தது அன்புசெல்லதை ஸ்கூலுக்கு ரெடிபண்ணனுமென்னு.
    அங்குமிங்கும் ஓடி ஒருவழியா ரெடியாக்கி வேகமா கீழே போக லிப்டபுடிச்சி ஓடிபோகவும் பஸ்வந்து நிற்கவும் சரியாக இருந்தது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு ஆயிப்போச்சி. அதேன் இப்படி சின்ன சிக்கல்.

    ரொம்ப தேங்ஸ் மாணவன்..

    ReplyDelete
  15. மாணவன் said...
    //நாளை என் அன்பு செல்லம் முகமது மரூஃப் பின்
    12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்..//

    உங்கள் அன்பு மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்....//
    ரொம்ப ரொம்ப சந்தோஷம். முதல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  16. //மாணவன் said...
    ஒருவார காலமாக வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....//

    விட்டதுடாப்பா தொல்லை அப்படினெல்லாம் நினைக்கலையே. [சும்ம சும்மா]. தொடர்ந்த வருகைக்கும்.வாழ்த்துக்களுக்கும்.
    அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் மனநிறைந்த நன்றிகள் மாணவன்..

    ReplyDelete
  17. அசத்தலான அறிமுகமுன்னு பெருமையா சொல்றேன் பெரும்பாலும் இன்றைய அறிமுக வலைப்பூக்களை பார்த்தும் இணைந்துவிட்டேன்..உங்களுக்கு தாங்க நன்றி சொல்லனும் இத்தனை திறமைசாலிகளை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்கு. உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அன்பின் மலிக்கா

    அன்புச் செல்வம் முகமது மஃரூஃப்பிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா

    ReplyDelete
  19. உங்கள் அன்பு மகனுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. அக்கா...
    கடந்த ஒரு வாரமாக உங்கள் நடையில் மிக அருமையான அறிமுகங்கள்.
    மிகச் சிறப்பான வாரமாக கொண்டு சென்றீர்கள். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது அறிமுகங்களுக்கான படவேலையில் தெரிந்தது.

    உங்கள் அன்பு மகன், எங்கள் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  22. மருமகன் மஃரூஃப் க்கு மாமாவின் அன்பு பிறந்த நாள் நல்வாழ்துக்கள்....

    மஃரூஃப் வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெறவேண்டும் எனவும், வற்றாத கல்வியையும், ஞானத்தையும் பெறவேண்டும் எனவும் ஈகை மனதுடன் இனிய வாழ்க்கை வாழ வேண்டும் எனவும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

    ReplyDelete
  23. எறா, சுறா, புறா ன்னு சொல்லிப்புட்டு இந்த ””சுன்டெலியையும்”” பெரிய மனதுடன் அறிமுகப்படுத்திய அன்பு அக்கா மலிக்கா அவர்களுக்கு என் நன்றிகள்..

    இந்த பெயரையும், அவர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதமாக இனிமேல் அயராது உழைத்து கண்டிப்பாக எல்லோர்க்கும் பயன்படும்விதமாக பதிவுகள் இடுவேன் என சொல்லிக்கொண்டு..,,

    மீண்டும் ஒருமுறை அக்காவிற்கு நன்நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வலைச்சரப்பணியை சிறப்பாய் கவியாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. சிறந்த அறிமுகங்களுக்கும், என் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி மலிக்கா.

    //Chitra said...
    என்னங்க, நான் புறாவா? விஜயின் சுறாவா? //

    அப்ப நீங்க ”அந்த” சுறான்னா சொன்னீங்க? ;-))))))

    மஃரூஃபிற்கு என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  25. உங்கள் சேவைக்கு நன்றிகள்......
    நமக்கு சுறான்னா அலர்ஜி.......புறா எது எதுன்னு சொல்லிட்டு போயிருங்க.......
    ஆமா....நீங்க எந்த சுறாவ சொன்னிங்க?

    ReplyDelete
  26. உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. முதலில் தங்கள் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் வலையுலகை மறந்தாலும், வலையுலகம் என்னை மறக்காமல் இருப்பது நான் வாங்கி வந்த வரமா? என்று என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது இந்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  28. அன்புடைய திருமதி“அன்புடன் மலிக்கா” அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

    பிறந்த நாள் காணும் தங்கள் அன்புச்செல்லம்: திரு முகமது மஃரூஃப் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இறை அருளால் அவர் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட வாழ்வும், கல்வி முதலான நிறைந்த செல்வங்களும் பெற்றுத் திகழப் பிரார்த்திக்கின்றேன்.

    இன்று என்னை வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள அனைத்து நபர்களுமே, எழுத்தில் சுறாவாகவும், அமைதியில் புறாவாகவுமே காணப்படுகிறார்கள். மீண்டும் நன்றியுடன் விடைபெறுவது,
    தங்கள் அன்புள்ள
    வை. கோபாலகிருஷ்ணன்.

    ReplyDelete
  29. தங்கள்...
    அன்பின் சிகரம்....!
    ஆசைச் செல்லம்...!
    இச்சையின் உச்சம்...! (இச்சை=ஆசை,அன்பு)
    ஈடுயிணையிலா உறவு..!
    உயிருக்குள் உயிரான உறவு...!
    ஊக்கத்தின் ஊற்று...!
    என்றுமே பாசத்தின் முதற்பகிர்வு...!
    ஏங்கவைத்தே... எதிர்பார்ப்புடன் பிறந்தவன்...!
    ஐயங்களை கலைந்தவன்...!
    ஒன்றிபோனவன்...!
    ஓங்கியப் புகழுடன் உலாவரப்போறவன்...!
    ஔவை வழியில் வீறுநடை போடுபவன்....!

    இங்ஙனம்...!
    "அ" முதல் "ஔ" வரை...
    உயிரெழுத்தின்
    முதலெழுத்தில் வாழ்த்துக்கிறேன்...!
    முதல்வனாய் அனைத்திலும்....
    முதலிடம் பெற்று வாழ்வாங்குவாழ....
    மலிக்கா - பாரூக்
    இணையின்
    இணையிலா மகன் "மரூப்"-ஐ வாழ்த்துகிறேன்....!

    ReplyDelete
  30. //// என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும்/////

    இது கொஞ்சம் அல்ல... அதிகமான "ஓவரா" தெரியில....!
    தன்னடக்கத்திற்கும் ஓர் எல்லை உண்டு....!
    கொஞ்சம் ஓவர்தான் போறீங்க....!

    இந்த வாரம்...!
    மலிக்கா வாரம்...!

    புத்தம்புது "பூக்களை"...!
    வலையுலகில்...
    வலைபோட்டு ஆய்ந்து...
    வலைச்சரத்தில்
    எங்களுக்கு அறிமுகம் செய்த...
    "அன்புடன் மலிக்கா"வுக்கும்...
    அதற்கு ஓர் வாய்ப்பளித்த...
    "வலைச்சரத்தின்" நிர்வாகிகளுக்கும்...!
    வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  31. ரொம்ப நன்றிங்க என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு

    ReplyDelete
  32. நாளை என் அன்பு செல்லம் முகமது பின்
    12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்


    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மரூஃப் ....

    ReplyDelete
  33. ஜெய்லானி //உங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்////
    அட...! இப்பத்தான் பார்க்குறேன்...!

    யோவ்...! ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...!
    ஜிங்குஜ...! ஜிங்குஜ...! பச்சைகலரு...! ஜிங்குஜ...!

    ReplyDelete
  34. உங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  35. என்ன சுறா புறா மூஞ்சூரு,
    எல்லாமே இதுல இருககா?

    ReplyDelete
  36. நல்ல இனிமையான வாரம்.பாராட்டுக்கள்.மஹ்ரூஃபிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வாரம் முழுவதும் அழகான முறையில் அறிமுகத்துடன் வித்தியாசமான முறையில் படங்களுடன் இணைத்து உங்களுக்கே உரிய பாணியில் கவிதை முறையில் தொகுத்தது வெளியிட்டது பாராட்டடுகுறிய விசயம் வாழ்த்துக்கள்.

    அன்பு செல்ல மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  38. ஒருவார காலமாக வலைச்சரத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் மல்லிக்காவுக்கு பாராட்டுக்களும்.செல்லமகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்..

    சீக்கிரம் வந்து நீரோடையில் எங்களை நீந்தவைங்க கவிதைநீரால்..

    ReplyDelete
  39. //கலாநேசன் said...
    உங்கள் அன்புச் செல்லத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

    வாங்க கலாநேசன்.
    தாங்களின் வருகைக்கும்.வாழ்த்துக்களுக்கும்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  40. //ஜெய்லானி said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன்//

    அன்பு மாமனின் வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைகளுகும் மிகுந்த மகிழ்ச்சி..

    ReplyDelete
  41. //ஜெய்லானி said...
    உங்க வலையில் சுறாக்களும், புறாக்களும் சிக்கிக் கொண்டது சரி...இந்த மூஞ்சுறும் இல்ல மாட்டிகிச்சு அவ்வ்வ்வ்//

    மூஞ்சுரின் வேலையே வலைகளுக்கு சிக்காமல் தப்பிப்பதுதான் அதையே செய்துட்டோமுல்ல

    ReplyDelete
  42. ஜெய்லானி said...
    வாரம் முழுசும் அழகான முறையில் அறிமுகத்துடன் , வித்தியாசமான முறையில் படங்களுடன் இனைத்து உங்களுக்கே உரிய கவிதை முறையில் தொகுத்தது பாராட்ட வேண்டியதே.. கடின உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.//


    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணாத்தே!
    கடின உழைப்பிலும் சிலராவது பயன்பெற்றால் அதுவே ஆத்ம திருப்தியை உண்டாக்கும்.

    தொடர் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்.
    மிக்க நன்றி அண்ணாத்தே..

    ReplyDelete
  43. Chitra said...
    உங்கள் அன்பு செல்வத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!/

    பெரியம்மாவின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    //என்னங்க, நான் புறாவா? விஜயின் சுறாவா? சொல்லிட்டு போங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

    இதிலென்ன சந்தேகம் சுறாவேகத்தில் பறக்கும் புறா.அம்மாடியோ என்னவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு.ஹா ஹா

    //என்னை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு ரொம்ப நன்றிங்க....
    வலைச்சரப் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//

    வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் அன்பான . தொடர்ந்து ஊக்க கருதுக்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் சித்ராக்கா.

    ReplyDelete
  44. //himanasyed said...
    எல்லாம் வல்ல அல்லாஹ் செல்வனுக்கு எல்லா நலங்களும் வளங்களும் அளித்து அருள்வானாக, ஆமின் - ஹிமானா சையத்//

    ஆமீன்
    வாங்க சகோதரர் அவர்களே! வலைச்சரம் வரை வந்து அன்புநிறைந்த வாழ்த்துக்கள் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரர் அவர்களே! தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ந்ன்றி..

    ReplyDelete
  45. //raji said...
    சுறாக்களின்,புறாக்களின் அறிமுகங்களுக்கு நன்றி//

    வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும். மிக்க நன்றி

    ReplyDelete
  46. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

    என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு ரெம்ப நன்றிங்க.


    அன்பு மகனுக்கு எனது அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.துஆவும்.


    வலைச்சரப்பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!


    உங்க வலையில் இந்த மீனையும்
    சிக்க வைத்து விட்டீர்கள்.
    என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  47. crown said...
    தனக்கு கிடைத்த சந்தர்பத்தை,
    சகலரும் விரும்பிடும் வண்ணம் சலிக்காமல் ரசிக்கச்செய்து.
    சடவடையா உழைப்பை!
    நல்ல,நல்ல தொகுப்பை
    கல,கல வாத்தியார் எடுத்துச்செல்லும் வகுப்புப்போல் அமைத்ததை என்னவென்பேன்?
    எப்படி பாராட்டாமல் இருப்பேன்?
    சகோதரி நீங்க பாஸாகிடிங்க( எழுதுலக பாஸ்)//

    வாங்க சகோ.வாத்தியாரா! நானா! ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். இந்த சின்னகுழந்தையை மிரழவைக்கிறீங்க..

    அப்புறம் யாரந்த பாஸ் மொட்டைபாஸா????ஹி ஹி

    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் சகோ..

    ReplyDelete
  48. //தமிழரசி said...
    அசத்தலான அறிமுகமுன்னு பெருமையா சொல்றேன் பெரும்பாலும் இன்றைய அறிமுக வலைப்பூக்களை பார்த்தும் இணைந்துவிட்டேன்..உங்களுக்கு தாங்க நன்றி சொல்லனும் இத்தனை திறமைசாலிகளை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்கு. உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    அப்படியா தமிழக்கா. ரொம்ப சந்தோஷம். என் சிரமத்திற்க்கு சிறுபலனாவது கிடைத்தால் அதுவே பெரும்பாக்கியம்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த மிக்க நன்றிக்கா..

    ReplyDelete
  49. //cheena (சீனா) said...
    அன்பின் மலிக்கா

    அன்புச் செல்வம் முகமது மஃரூஃப்பிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா//

    வாங்க சீனா சார். முதலில் என்னைய ஆசிரியராக்கியமைக்கும் மிக்க நன்றி.

    இத்தனைநாள் உங்களை காணோமேன்னு நாம சரியாக ஆசிரியர் பணியை செய்யவிலையோன்னு நினைத்திருந்தேன்.தற்போதைய
    வருகைக்கும் என் மகனை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  50. //ஜீ... said...
    உங்கள் அன்பு மகனுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    .//

    வாங்க ஜீ.
    தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  51. //ஸாதிகா said...
    வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள்!//

    அப்ப பேரனுக்கு அச்சோ மகனுக்கு வாழ்த்துக்கள் இல்லையா!:{{{{{{{{{

    தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிக்கா.

    ReplyDelete
  52. //யோவ்...! ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...!
    ஜிங்குஜ...! ஜிங்குஜ...! பச்சைகலரு...! ஜிங்குஜ...!//

    அப்படி இல்ல ...காலையில பார்க்கும் போது இந்த பதிவு கண்ணில் பட்டது உடனே ஓடி வந்துட்டேன்..மத்த பதிவு பப்லீஷ் நேரம் மாறி வந்ததால் லேட்.. :-))

    ReplyDelete
  53. சே.குமார் said...
    அக்கா...
    கடந்த ஒரு வாரமாக உங்கள் நடையில் மிக அருமையான அறிமுகங்கள்.
    மிகச் சிறப்பான வாரமாக கொண்டு சென்றீர்கள். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது அறிமுகங்களுக்கான படவேலையில் தெரிந்தது.//

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணாத்தே!
    மெனக்கெட்ட உழைப்பிலும் சிலராவது பயன்பெற்றால் அதுவே ஆத்ம திருப்தியை உண்டாக்குமல்லவா அதான் குமார்.

    //உங்கள் அன்பு மகன், எங்கள் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.//

    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என் மகனுக்கான பிராத்தனைகளுக்கும்.
    என்மனமார்ந்த நன்றிகள் குமார்..

    ReplyDelete
  54. isaianban said...
    மருமகன் மஃரூஃப் க்கு மாமாவின் அன்பு பிறந்த நாள் நல்வாழ்துக்கள்....

    மஃரூஃப் வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெறவேண்டும் எனவும், வற்றாத கல்வியையும், ஞானத்தையும் பெறவேண்டும் எனவும் ஈகை மனதுடன் இனிய வாழ்க்கை வாழ வேண்டும் எனவும் நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன்...//

    அன்புநிறைந்த மாமனின் வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைகளுகும் மிகுந்த மகிழ்ச்சி

    வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் அன்பான . தொடர்ந்து ஊக்க கருதுக்களுக்கும். மனமார்ந்த நன்றிகள் காஜா..

    ReplyDelete
  55. isaianban said...
    எறா, சுறா, புறா ன்னு சொல்லிப்புட்டு இந்த ””சுன்டெலியையும்”” பெரிய மனதுடன் அறிமுகப்படுத்திய அன்பு அக்கா மலிக்கா அவர்களுக்கு என் நன்றிகள்..//

    இதானே வேணாங்கிறது சுண்டெலி வலையையே அல்லவா வென்றுவிடும்.

    //இந்த பெயரையும், அவர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதமாக இனிமேல் அயராது உழைத்து கண்டிப்பாக எல்லோர்க்கும் பயன்படும்விதமாக பதிவுகள் இடுவேன் என சொல்லிக்கொண்டு..,,

    //

    நிச்சயமாக பயனுன்னு பதிவுகளின் விதைகலை விதைத்து ஆலமரமாக தழைத்து நிற்க முயற்சிசெய்யுங்கள்..

    //மீண்டும் ஒருமுறை அக்காவிற்கு நன்நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வலைச்சரப்பணியை சிறப்பாய் கவியாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//

    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் காஜா..

    ReplyDelete
  56. சகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ஃபாரூக் இவர்களின்
    அன்பு மகன் முகமது மரூஃப், இறைவன் அருளால்
    வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
    மகிழ்வோடு, நீடூழி வாழ வாழ்த்தி, இறைவனிடம்
    துஆ செய்கிறேன்.

    ReplyDelete
  57. வைகை said...
    உங்கள் சேவைக்கு நன்றிகள்......
    நமக்கு சுறான்னா அலர்ஜி.......புறா எது எதுன்னு சொல்லிட்டு போயிருங்க.......
    ஆமா....நீங்க எந்த சுறாவ சொன்னிங்க?//

    ஹைய்ய்ய்ய். அஸ்க்கு புஸ்க்கு அதை நீங்கதான் முடிவுபண்ணிக்கோணும்.

    சிக்குவோமா உங்ககிட்ட அப்புறம் யாரு புட்டும் வறுவலுமாகுவது
    ஓடிடூஊஊஊஉ மல்லி,,,,,,,,,

    ReplyDelete
  58. //வைகை said...
    உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்...//

    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  59. //ஹுஸைனம்மா said...
    சிறந்த அறிமுகங்களுக்கும், என் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி மலிக்கா.//

    வாங்கம்மா ஹுசைன்னமா ரொம்ப சந்தோஷம்..

    //Chitra said...
    என்னங்க, நான் புறாவா? விஜயின் சுறாவா? //

    //அப்ப நீங்க ”அந்த” சுறான்னா சொன்னீங்க? ;-))))))//

    எந்த சுறா இப்படி மொட்டயா சொன்னா இந்த சிகப்பு புள்ளைக்கு எப்புடி விளங்கும். பச்சபுள்ளையின்னு சொன்னா ஒத்துக்கமாட்டீகிறாங்கமா..

    //மஃரூஃபிற்கு என் பிரார்த்தனைகள்.//

    மிக்க நன்றி ஹுசைன்னமா..

    ReplyDelete
  60. SUMAZLA/சுமஜ்லா said...
    முதலில் தங்கள் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் வலையுலகை மறந்தாலும், வலையுலகம் என்னை மறக்காமல் இருப்பது நான் வாங்கி வந்த வரமா? என்று என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது இந்த பதிவு. நன்றி.//

    வாங்கக்கா. நிஜமாக மகிழ்கிறேன். உங்களை மறக்கமுடியுமா? நீங்கதானே எங்களுக்கு சீனியர்
    உங்களைப்பார்த்துதானே நாங்களே வலைக்குள் பிரவேசித்தோம் அப்படியிருக்கும்போது எப்படி..
    நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுங்களக்கா.

    வருகைக்கும்.கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகளக்கா..

    ReplyDelete
  61. கடந்த வாரம் முழுதும்
    வலைச்சரத்தில் கவிமழைதான்!
    புதிய அறிமுகங்கள்!
    நேர் நின்று உரையாடுவதுபோல்
    அறிமுக உரை!
    சுறுசுறுப்பிற்கு இல்லை தடை!
    படிக்க சலிக்கவைக்காத சுவை!
    அயராத தேடல்!
    சுவையான பதிவர்கள்!
    விருப்பமுடன் கூடிய உழைப்பு!
    -இவை கண்முனே நிற்கின்றன.

    உங்களுக்கு பாராட்டுக்கள்.
    சீனா சாருக்கு நனறிகள்.

    ReplyDelete
  62. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்!
    ..63..

    ReplyDelete
  63. VAI. GOPALAKRISHNAN said...
    அன்புடைய திருமதி“அன்புடன் மலிக்கா” அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

    பிறந்த நாள் காணும் தங்கள் அன்புச்செல்லம்: திரு முகமது மஃரூஃப் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இறை அருளால் அவர் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட வாழ்வும், கல்வி முதலான நிறைந்த செல்வங்களும் பெற்றுத் திகழப் பிரார்த்திக்கின்றேன்.//

    வாங்க சார். தாங்களையும் அறிமுகப்படுதியதில் மகிழ்ச்சியே!
    அன்பான வாழ்த்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைகளுக்கும். என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    //இன்று என்னை வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள அனைத்து நபர்களுமே, எழுத்தில் சுறாவாகவும், அமைதியில் புறாவாகவுமே காணப்படுகிறார்கள். மீண்டும் நன்றியுடன் விடைபெறுவது,
    தங்கள் அன்புள்ள
    வை. கோபாலகிருஷ்ணன்.//

    ஆகா அருமையா கருத்து. நிஜம்தான் சார் அனைவ்ரும் எழுத்தில் சுறாவாகவும்,
    அமைதியில் புறாவாகவும்தான் இருகிறார்கள்..

    வருகைக்கும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  64. //காஞ்சி முரளி said...
    இங்ஙனம்...!
    "அ" முதல் "ஔ" வரை...
    உயிரெழுத்தின்
    முதலெழுத்தில் வாழ்த்துக்கிறேன்...!
    முதல்வனாய் அனைத்திலும்....
    முதலிடம் பெற்று வாழ்வாங்குவாழ....
    மலிக்கா - பாரூக்
    இணையின்
    இணையிலா மகன் "மரூப்"-ஐ வாழ்த்துகிறேன்....!//

    இதைவிட இதைவிட வேண்டுமா என் சகோவிடமிருந்து வேறேதும்.
    அன்பையும் பாசத்தையும் கலந்த இந்த வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் என்னவென்று நன்றி சொல்வது. எங்களின் ஆத்மார்தமான நன்றிகள் சகோ..

    ReplyDelete
  65. காஞ்சி முரளி said...
    //// என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும்/////

    இது கொஞ்சம் அல்ல... அதிகமான "ஓவரா" தெரியில....!
    தன்னடக்கத்திற்கும் ஓர் எல்லை உண்டு....!
    கொஞ்சம் ஓவர்தான் போறீங்க....//

    சரி சரி நான் பச்சபுள்ளையில்லையின்னு ஒத்துக்கொள்கிறேன் சகோ .
    சிகப்பு புள்ளை பச்ச புள்ளையின்னா யாருக்குத்தான் கோவம் வராது!

    நான் சின்ன சிகப்புபுள்ள போதுமா!

    //இந்த வாரம்...!
    மலிக்கா வாரம்...!

    புத்தம்புது "பூக்களை"...!
    வலையுலகில்...
    வலைபோட்டு ஆய்ந்து...
    வலைச்சரத்தில்
    எங்களுக்கு அறிமுகம் செய்த...
    "அன்புடன் மலிக்கா"வுக்கும்...
    அதற்கு ஓர் வாய்ப்பளித்த...
    "வலைச்சரத்தின்" நிர்வாகிகளுக்கும்...!
    வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!//

    அன்புசகோதரனாய் என் பதிவுகளுக்கு
    தொடர்ந்த வருகைபுரிந்தமைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களை அள்ளிதந்தமைக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கியமைக்கும்
    என்மனமார்ந்த நன்றிகள்பல பல..

    ReplyDelete
  66. ஐத்ருஸ் said...
    ரொம்ப நன்றிங்க என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு.//

    வாங்க ஐத்ரூஸ்..

    //ஐத்ருஸ் said...
    நாளை என் அன்பு செல்லம் முகமது பின்
    12, வது பிறந்தநாள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் வேண்டும்
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மரூஃப் ....//

    வருகைக்கும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்.
    என்மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  67. //Jaleela Kamal said...
    anaivarukkum vaazththukkaL
    //

    மிக்க நன்றிக்கா..

    ReplyDelete
  68. //asiya omar said...
    நல்ல இனிமையான வாரம்.பாராட்டுக்கள்.மஹ்ரூஃபிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//

    வாங்கக்கா. தாங்களின்
    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  69. teedummanam said...
    வாரம் முழுவதும் அழகான முறையில் அறிமுகத்துடன் வித்தியாசமான முறையில் படங்களுடன் இணைத்து உங்களுக்கே உரிய பாணியில் கவிதை முறையில் தொகுத்தது வெளியிட்டது பாராட்டடுகுறிய விசயம் வாழ்த்துக்கள்.

    அன்பு செல்ல மகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..//

    வாங்க தேடும் மனம்
    தாங்களின்
    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்
    என்மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  70. M.தியாகராஜன் said...
    ஒருவார காலமாக வலைச்சரத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இன்று பிரியாவிடைபெறும் மல்லிக்காவுக்கு பாராட்டுக்களும்.செல்லமகனுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்..

    சீக்கிரம் வந்து நீரோடையில் எங்களை நீந்தவைங்க கவிதைநீரால்..//

    வாங்க தியாகு.
    தாங்களின்
    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும்.மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும்.
    என்மனமார்ந்த நன்றிகள்..

    நாளையிளிருந்து வந்துடுவோமுல்ல. இருந்தாலும் உடல்நிலை சற்று மக்கர்பண்ணுவதுபோல் தெரிகிறது சார். முடிந்தால் நிச்சயம் நாளை பதிவிடுகிறேன். உங்கள் அன்பான எதிர்பார்ப்பிற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  71. //ஆயிஷா said...
    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

    என்னையும் அறிமுக படுத்தியதற்க்கு ரெம்ப நன்றிங்க.
    அன்பு மகனுக்கு எனது அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.துஆவும்.
    வலைச்சரப்பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    உங்க வலையில் இந்த மீனையும்
    சிக்க வைத்து விட்டீர்கள்.
    என் மனமார்ந்த நன்றிகள்.//

    வ அலைக்குமுஸ்ஸலாம்
    வாங்க ஆயிஷா.
    தாங்களின் வருகைக்கும்
    அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும். பாராட்டுக்களுக்கும்
    என்மனமார்ந்த நன்றிகள்.

    வலை எந்த மீனையும் விட்டுவைப்பதில்லை. என்ன எல்லாமீனையும் என்னால் இங்கு கொண்டுவர காலம்போதவில்லை. அவ்வளவுதான். நிறைய பேர்களை விட்டுவிட்டோமோன்னு தோணுது. இருந்தாலும் முடிந்தளவு செய்துவிட்டோமுன்னு என்னையே தேற்றிக்கொண்டேன். மிக்க நன்றி ஆயிஷா..

    ReplyDelete
  72. //யோவ்...! ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...!
    ஜிங்குஜ...! ஜிங்குஜ...! பச்சைகலரு...! ஜிங்குஜ...!//

    அதானே நல்லா கேளுங்க சகோ. எப்படியும் மூஞ்சிறுன்னு சொல்லி எஸ் ஆகிடும் பாருங்க..

    ReplyDelete
  73. ஜெய்லானி said...
    //யோவ்...! ஜெய்லானி... உங்க பதிவப் போட்டவோடனே... முதல்லேயே வந்துட்டீரா...!
    ஜிங்குஜ...! ஜிங்குஜ...! பச்சைகலரு...! ஜிங்குஜ...!//

    அப்படி இல்ல ...காலையில பார்க்கும் போது இந்த பதிவு கண்ணில் பட்டது உடனே ஓடி வந்துட்டேன்..மத்த பதிவு பப்லீஷ் நேரம் மாறி வந்ததால் லேட்.. :-))//

    செல்லாது செல்லாது இந்த பதிலிங்கே செல்லாது. சாக்குபோக்கெலெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டாம். லேட்டாஆஆஅ வந்தது. சிலதுக்கு அடுத்தநாள் வந்தது இதுகெல்லாம் அந்நியனிடம் சொல்லி என்ன தண்டனையின்னு கேட்டு வாரேன்ன்ன்ன் இருங்கோ

    ReplyDelete
  74. NIZAMUDEEN said...
    சகோதரி கவிஞர் மலிக்கா, மச்சான் ஃபாரூக் இவர்களின்
    அன்பு மகன் முகமது மரூஃப், இறைவன் அருளால்
    வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
    மகிழ்வோடு, நீடூழி வாழ வாழ்த்தி, இறைவனிடம்
    துஆ செய்கிறேன்./

    வாங்கண்ணா.
    தாங்களின்
    அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்.துஆக்களுக்கும்
    என்மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  75. NIZAMUDEEN said...
    கடந்த வாரம் முழுதும்
    வலைச்சரத்தில் கவிமழைதான்!
    புதிய அறிமுகங்கள்!
    நேர் நின்று உரையாடுவதுபோல்
    அறிமுக உரை!
    சுறுசுறுப்பிற்கு இல்லை தடை!
    படிக்க சலிக்கவைக்காத சுவை!
    அயராத தேடல்!
    சுவையான பதிவர்கள்!
    விருப்பமுடன் கூடிய உழைப்பு!
    -இவை கண்முனே நிற்கின்றன.

    உங்களுக்கு பாராட்டுக்கள்.
    சீனா சாருக்கு நனறிகள்.//

    மனம் நிறைந்துவிட்டதுபோல் இருக்குண்ணா. தாங்களின்
    தொடர்ந்த வருகைக்கும்
    ஊக்கம்தரும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும். வாழ்த்துக்களுக்கும்
    என்மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  76. //NIZAMUDEEN said...
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்!
    ..63..//

    வலையில் சிரிப்பலைகளில் சொக்கவைக்கும் தாங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே அண்ணா.

    வருகைக்கும்.கருத்துக்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  77. என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.

    முகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  78. தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...
    என்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).
    தங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  79. டன்..டண்...டண்... டாண்....!
    இப்படம் இன்றே கடைசி...! அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...!

    அதுபோல...
    இதுதான்
    இந்தவாரத்தின்
    இறுதிப் பதிவு...! மலிக்காவின்...!

    எனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...! ஏழும் சிப்பியின் முத்துக்களாய்...!
    இதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை "தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! வாழ்த்துக்கள்...!

    ஆனா...!
    அறிவார்ந்த வலையுலகத்தாரே...
    இப்ப சொல்லுங்க...
    இவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க....
    பச்சைகுழந்தையா? கற்றுகுட்டியா? என...!

    ReplyDelete
  80. மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. மல்லிக்கா. முதலில் வாழ்த்துக்கள்.
    வலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.
    எல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.
    வலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்லாரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.
    நன்றி.
    www.vijisvegkitchen.blogspot.com
    www.vijiscreation.blogspot.com

    ReplyDelete
  82. சிறப்பான அறிமுகங்கள்.

    இன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  83. தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.

    ReplyDelete
  84. மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி

    ReplyDelete
  85. இளம் தூயவன் said...
    என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.

    முகமது மரூஃப் எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.//

    வாங்க இளம் தூயவன்.
    தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுகும். மிக்க நன்றி

    ReplyDelete
  86. apsara-illam said...
    தோழி மலிக்கா...,உங்கள் பணிகளை கண்டு வியக்குபவர்களில் நானும் ஒருவள்.... எல்லாவற்றையும் ஒன்றி செயல்படுகிறீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு செயல்களுக்கு தெரிகின்றது....இத்தலைச்சிறந்த பணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...
    என்னையும் பலருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் என் சந்தோஷத்திற்க்கு அளவேயில்லை போங்க.... இன்று பிறந்த கண்ணுகுட்டியாக உலாவருகின்ற எனக்கு உங்களை போன்றவர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகங்கள் பெருமையல்லவா.... அதற்க்கு நான் கோடாண கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மலிக்கா...(அவ்வளவு நன்றியும் எழுத முடியாதுல்ல அதான் ஓரிரு வார்த்தையில் சொல்லிட்டேன் மன்னிக்கவும்).
    தங்கள் செல்ல மகன் மரூஃப் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வல்ல இறைவன் உங்கள் குடும்பத்திற்க்கு நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் தருவானாக....

    அன்புடன்,
    அப்சரா.//


    வாங்க தோழிஅப்சரா.முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் [கன்னுகுட்டியா:{{{{{{{{{{{என்ன ஒரு கன்னூஊஊஊஊஊஊஊஊஊஊ]

    தாங்களின் வருகைக்கும் மனம்நிறைந்த கருத்துக்களுக்கும்.வாழ்த்துக்களுக்கும்.என் மனமார்ந்த நன்றிகள்
    மிக்க நன்றி..

    ReplyDelete
  87. காஞ்சி முரளி said...
    டன்..டண்...டண்... டாண்....!
    இப்படம் இன்றே கடைசி...! அப்படீன்னு எங்கவூர்ல டென்ட் கொட்டாவுல போடுவாங்க... அப்ப...!//

    அப்படியா இங்கும் போட்டாசில்ல அதேபோல..எப்புடி..

    //அதுபோல...
    இதுதான்
    இந்தவாரத்தின்
    இறுதிப் பதிவு...! மலிக்காவின்...!

    எனக்கு... இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்தளவிற்கு.. மிகமிக சிறப்பான ஏழு பதிவுகள்...! ஏழும் சிப்பியின் முத்துக்களாய்...!
    இதில்... சிறந்த... புதிய... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறைவாரியாய் இனங்கண்டு... அதனை "தான் பெற்ற இன்பம்... பெருக இவ்வலையுலகதார்" என பதிவர்களை... அவரவர் பெயர் மட்டுமே போடாமல்... அவர்களின் படத்துடன்... highlightடாய் அவர்களைப்பற்றி கவிதையில் ஓர் அறிமுகம் செய்துவிட்டு... ///என்னைபோன்ற பச்சைகுழந்தையான கற்றுகுட்டிகளையும் ஆசிரியர்களாக்கிய வலைச்சரத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்./// என்று சொன்ன மலிக்காவுக்கு வஞ்சகமில்லாமல் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! வாழ்த்துக்கள்...!//

    எல்லாம் உங்களப்போல பெரியவாகிட்ட கத்துகிட்டதுதான் சகோ.

    அனைத்திலும் எனக்கு கூடப்பிறவா சகோதரார் நின்று.
    பாசம்நிறைந்த பாராட்டுக்கள். தொடர்ந்த ஊக்கங்கள். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் நேசம் நிறைந்த கருத்துக்கள். என்று அள்ளிதரும் சகோவிற்க்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை[அதாரு வாயால அப்படிங்கிறது அண்ணாத்தேதானே]

    ஆனாபோதும் மனநிறைந்த நன்றிகளை மனமார சொல்லிகொள்கிறேன்..
    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  88. //ஆனா...!
    அறிவார்ந்த வலையுலகத்தாரே...
    இப்ப சொல்லுங்க...
    இவ்வளவு அற்புதமான பணிகளையும் செஞ்ச இவங்க....
    பச்சைகுழந்தையா? கற்றுகுட்டியா? என...!//

    என்னத்த சொன்னாலும் எலிக்குட்டி புலிக்குட்டியாகுமா!? அதேபோலதான் இதுவும் சகோ.. நாம என்றுமே கற்றுக்குட்டிதான். கத்துக்க எவ்வுளோயிருக்கு. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள ஏன் சகோ இப்படி...ஹி ஹி ஹி

    ReplyDelete
  89. ராஜவம்சம் said...
    மருமகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வலைச்சரம் வாரம் இனிதாக நிறைவேற்றியதர்க்கும் வாழ்த்துக்கள்.//

    வாங்க சகோ..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  90. Vijisveg Kitchen said...
    மல்லிக்கா. முதலில் வாழ்த்துக்கள்.
    வலையில் சிக்கிய சுறாக்களும், புறாக்களும் அறிமுகம் நன்றாக இருக்கு.
    எல்லா அறிமுகங்களுக்கும் இந்த வலைச்சரம் வழியாகவும் என் தோழி மல்லிகாவின் எழுத்து நடை வழி எல்லாராயும் இங்கு சந்திதத்தில் மகிழ்ச்சி.
    வலைச்சரம் ஒரு நல்ல பனி செய்து எல்லாரையும் ஊக்கமளித்து நல்ல நட்புறவை ஏற்படுத்துவதில் உங்களுக்கு மிகர் வேறு எவரும் இல்லை.
    நன்றி.
    www.vijisvegkitchen.blogspot.com
    www.vijiscreation.blogspot.com//

    வாங்க தோழி விஜி .
    தோழிகளின் அன்பில் கலந்த நட்பில்
    ஏற்படும் மகிழ்ச்சியே மகிழ்ச்சிதான்.

    தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  91. பெஹ்லன் said...
    சிறப்பான அறிமுகங்கள்.

    இன்று இனிய பிறந்த நாள் காணும் மரூஃப் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ பிராத்தனைகளுடன் வாழ்த்துகிறேன்..//

    வாங்க பெஹ்லன்
    தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  92. //Lakshmi said...
    தங்கள் அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதறுகு நன்றிகள்.

    //
    வாங்கம்மா.
    தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  93. சாருஸ்ரீராஜ் said...
    மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி. சாருஸ்ரீராஜ் said...
    மரூப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி.என்ன சொல்றதுன்னு தெரியவில்லை உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி

    உங்கள் அன்பினை ...வாழ்த்துக்கள் மல்லி//

    வாங்கக்கா. என்னக்கா லேட்டு.
    //என்ன சொல்றதுன்னு தெரியவில்லை// நானும் என்ன சொல்லுறது அக்காதங்கைக்குள் இதெல்லாம் வேணாமப்பா..

    தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  94. கடலுக்குள் மறைந்திருக்கும் முத்துக்களை முத்துக் குழிப்போர் கரை கொண்டு வருவது போல,பதிஉலகத்தில் மறைந்து கிடக்கும் வைரங்களை வெளிக் கொண்டு வந்ததிற்கு நன்றிகள் !

    எல்லாமே சூப்பர் அறிமுகங்களா இருந்த போதிலும் அனைத்தும் வைரம் பதிந்த பொக்கிசங்கள் !

    ReplyDelete
  95. உங்கள் மகனுக்கு இறைவன் எல்லா வளமும் இம்மையிலும் மறுமையிலும் தருவானாக!

    பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  96. எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மலிக்கா அவர்களுக்கு எங்கள் வலைப்பூவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  97. //பெரிய பெரிய சுறாக்களோடு இந்த கத்துக்குட்டியையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...
    //

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது