07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 11, 2015

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் இரு வாரத்திற்கு (11.01.2015 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைச் சகோதரி ஆதி வெங்கட் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் வித்தியாசமான முறையில் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் காண வேண்டிய இடங்கள் என்ற தலைப்பில் ஏறத்தாழ நாற்பது இடங்களை அறிமுகப் படுத்தி - சக பதிவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் ஏறத்தாழ பதினைந்து பண்டிகைகளயும் அவை தொடர்பான தகவல்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 061
அறிமுக படுத்திய பதிவுகள் : 087
பெற்ற மறுமொழிகள் : 492
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 075

இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய சகோதரி ஆதி வெங்கட்டினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரி ஆதி வெங்கட்டினைப் பாராட்டி - சென்று வருக - நலம் பெறுக என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் சக பதிவர் கவிப்ரியன் இணக்கம் தெரிவித்துள்ளார். இவர் "மறக்க முடியாத நினைவுகள்" என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார்.

இவர் வேலூருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.பத்தாண்டுகளாக சென்னை வாசம் - அதன் பிறகு பணி நிமித்தமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கிறார் தற்போது ஒரிசாவில் வசித்து வருகிறார்.தமிழ் மொழி வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர், அதிகம் வாசிப்பவர்.

இணையத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் வலைப்பூக்களைப் படிக்கும் வாய்ப்பு பெற்றவர். அதன் தாக்கமாய் " மறக்க முடியாத நினைவுகள் " என்னும் தலைப்பில் இவரது கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் நினைவூட்டும் நிகழ்வுகளைப் பதிவு செய்து" வருக.. வருக.. என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கவிப்ரியன் 
நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட் 

நட்புடன் சீனா வருகிறார்.

நண்பர் கவிப்ரியன் நாளை ( 12.01.2015 ) காலை ஆறு மணி முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று, விதிமுறைகளின் படி பதிவிடத் துவங்குவார். அவரை வாழ்த்தி 

17 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வணக்கம்!
    வலைச்சரத்தின் "தமிழர்த் திருநாள்"
    வாரத்தில் புதியதாக ஆசிரியர் பணியினை
    ஏற்க இருக்கும் அய்யா! 'கவிப்ரியன்' அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
    வேலூர் வேங்கையாய் புற்ப்பட்டு வருக!

    நன்றியுடன்,

    புதுவை வேலு
    www. kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    சிறப்பாக பணியை செய்து முடித்த அதிவெங்கட் அவர்களை வாழ்த்தி வழிஅனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி புதிதாக வருகிற வலைச்சர ஆசிரியர் அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்.. இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு பிரியா விடைகூற் நண்பர் கவிப்பிரியன் அவர்களை வரவேற்க்கிறேன்

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  5. கவிப்பிரியன் அவர்களுக்கு அன்பின் நல்வரவு!..

    ReplyDelete
  6. சிறப்பாக பணி முடித்த ஆதி வெங்கட் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் திருமதி ஆதி வெங்கட்! வருக வருக திரு கவிப்ரியன் அவர்களே!

    ReplyDelete

  8. வலைச்சர ஆசிரியராக பணியேற்க இருக்கும் திரு கவிப்ரியன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete
  9. கடந்த இரு வாரங்கள் புதுதில்லி மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச்சென்றதோடு நொறுக்குத்தீனியும் தந்து விடைபெறும் ஆதிவெங்கட் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வார ஆசிரியர் கவிப்ரியன் அவர்களுக்கு நல்வரவு.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்! சகோதரிக்கு! வலைச்சர ஆசிரியராகப் பணியேற்க இருக்கும் திரு கவிப்பிரியன் அவர்களுக்கு நல்வரவு!

    ReplyDelete
  11. சிறப்பாக தன் பணியினை முடித்த ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. வரும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த சீனா ஐயா அவர்களுக்கும் என்னை அன்புடன் வரவேற்கும் புதுவை வேலு, ரூபன், தேவகோட்டை கில்லர்ஜி, துரை செல்வராஜ், வே.நடனசபாபதி, தளிர் சுரேஷ், சோழநாட்டில் பௌத்தம், துளசிதரன் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. தில்லியைக் காண்பித்து தின்பண்டங்களையும் சொல்லி புதியவர்களையும் அறிமுகம். பாராட்டுக்கள்.
    கவிப்பிரியன் का स्वागत.

    ReplyDelete
  13. கடந்த இருவாரமாக, வலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்று, பொறுப்பாக செய்திட்ட சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    அடுத்து, நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்க வரும், சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
    த.ம.4

    ReplyDelete
  14. என்னை வரவேற்கும் சேதுராமன் அனந்த கிருஷ்ணன் ஐயா மற்றும் தமிழ் இளங்கோ ஐயா இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  15. கவிப்ரியன் அவர்களே... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. டி.என். முரளிதரன், திண்டுக்கல் தனபாலன் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது