20.05.2013 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, May 20, 2013

சில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்


பல்லாயிரம் அடி உயரமுள்ள மலை மீது ஏறவேண்டுமானாலும் , சில நூறு அடிகள் தூரமுள்ள பயணம் என்றாலும் , நாம் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரே ஒரு சின்ன அடிதான் - ஜப்பானிய பழமொழி



  எழுத்தில் கில்லாடிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், பதிவுலக சக்கரவர்த்திகள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று திறம்பட தம் பணியை செய்து இருக்கிறார்கள்.  அவ்வப்போது என்னைப்பற்றியும் சிலர் எழுதி இருக்கிறார்கள்.

அவர்கள் வரிசையில் ஒரு சாதாரண பிச்சைக்காரனாகிய எனக்கு இந்த பொறுப்பு அளிக்க சீனா அய்யாவும் , தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் முன்வந்தபோது , நான் பிகு எல்லாம் செய்யவில்லை. உடனே இந்த பொறுப்பை மனமுவந்து ஏற்று கொண்டேன்.

அதற்கு காரணம் இருக்கிறது.

செய்தி தாள்களை பார்க்கிறோம். கொலை , கொள்ளை என வருகிறது..இந்த சம்பவங்கள் நடப்பது உண்மைதான், அது செய்தியாவதும் நியாயம்தான்.

ஆனால் உலகில் கெட்ட சம்பவங்கள் மட்டுமே நடப்பதில்லை. எத்தனையோ நல்ல செயல்கள் , பணிகள் , தொண்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அதைப்பற்றியெல்லாம் செய்திகள் வருவது அபூர்வம்.


அதாவது நமக்கு யாராவது ஒரு தீமை செய்து விட்டால் , பார்ப்பவர்களிடம் எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறும்.  ஆனால் நன்மை செய்வர்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வது இருக்கட்டும். நன்மை செய்தவருக்கு நன்றி சொல்வதே குறைவுதான்.

இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

யார் இந்த பாதகத்தை செய்தது.. அவர்கள் தேட அவசியம் இல்லாமல் அந்த பாவி தானே முன் வந்து மக்கள் முன் சரணடைந்து விட்டு சொன்னான்.

“  எனக்கு மரண தண்டனை கொடுப்பீர்கள் என நன்கு அறிவேன். எனக்கு கவலை இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை , கிரேக்க வரலாற்றை சொல்லும்போதெல்லாம் என பெயரும் இடம் பெறும் அல்லவா..  அந்த சிலையை பற்றி சொல்லும்போதெல்லாம் என் பெயர் சொல்லப்படும் அல்லவா ..அது போதும். “ என்று சொன்னான் ( அவன் எண்ணம் ஈடேறக்கூடாது என்பதற்காக அவன் பெயரை வெளியிடாமல் ரகசியம் காக்க முயன்றார்கள்.எப்படியோ அவன் பெயர் வெளிவந்து விட்டது, ஆனால் இறையன்பு தார்மீக அடிப்படையில் அவன் பெயரை வெளியிடவில்லை.  நானும் கூகிள் செய்து பெயரை வெளியிடாமல் தவிர்த்து இருக்கிறேன் )

இந்த சம்பவத்தை சொல்லி இறையன்பு சொல்கிறார்/ “ தீமை செய்வதுதான் ஹீரோயிசம் என்ற போக்கு அன்றே இருந்து இருக்கிறது. எவ்வளவோ க்‌ஷ்டப்பட்டும் அந்த தீயவன் பெயரை மறைக்க முடியவில்லை. ஆனால் அந்த சிலையை வடிமைத்த சிற்பி, முதல் கல்லை கொண்டு வந்த தொழிலாளி பெயரெல்லாம் வரலாற்று வெள்ளத்தில் காணாமலேயே போய் விட்டது. ”


நான் இதை எல்லாம் சொல்ல காரணம் , இணையத்தில் ஆக்கபூர்வமாக பலர் எழுதுகிறார்கள். பதிவர்கள் சிலர், இதற்கென நேரம் ஒதுக்கி , நேர்த்தியாக , பத்திரிகைகளின் தரத்துக்கு நிகராக எழுதுகிறார்கள். அவர்களை ஒரு ரசிகனாக ரசிப்பதுண்டு.

இவர்களில் சிலருடன் எனக்கு நேரடி பழக்கம் உண்டு. சிலர் குடும்பத்துடன்கூட அறிமுகம் உண்டு. அவர்க்ளை நண்பனாக நேசிப்பதுண்டு.

இன்னும் சிலர் நேரடி பழக்கம் இல்லாவிட்டாலும் , மெயில் மூலமோ போன் மூலமோ பேசி தேவையான தகவல்கள் அளிப்பார்கள். சந்தேகங்கள் தீர்ப்பார்கள்.. இவர்களை நிபுணர்களாக மதிப்பதுண்டு,

இப்படி எத்தனையோ பேர்..எத்தனையோ சிந்தனைகள். எத்தனையோ அனுபவங்கள்.

அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களைப்பற்றி அவர்கள் பதிவுகள் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நெடு நாளாக எனக்கு ஓர் ஆசை.

எனவேதான் வலைச்சரம் வாய்ப்பு வந்தபோது உடனடியாக ஏற்றேன். இந்த ஒரு வாய்ப்பில் என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். கொஞ்ச கால இடை வெளிக்கு பின் இரண்டாவது இன்னிங்ஸ் சான்ஸ் தருமாறு வலைச்சர நிர்வாகிகளுக்கு இப்போதே வேண்டுகோள் வைக்கிறேன்.

       இதில் நான் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ய போகிறேன் என சொல்வதை விட , பதிவுகளை பகிர்ந்து கொள்ள போகிறேன் என்றே சொல்ல விரும்புகிறேன்.

   உதாரணமாக என்னை எடுத்து கொண்டால் , பதிவுலகில் மூன்றாண்டுகள் இயங்கி வருகிறேன்,. என் மேல் பேரன்பு கொண்டவர்களும் உண்டு, கடும் வெறுப்பு கொண்டவர்களும் உண்டு.   ஆனால் இதை தாண்டி , என்னை யாரென்றே தெரியாதவர்களும் , என் எழுத்தை படித்தே இராதவர்களும் கணிசமாக உண்டு,

ஆக ஒரு விதத்தில் என்னை சிலருடன் அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை. அதே சமயம் சிலருடன் அறிமுகம் தேவையில்லாத நிலை.

     இது பலருக்கும் பொருந்தும் , குறிப்பிட்ட தளத்தில் இயங்குபவர்களுக்கு , இன்னொரு தளத்தில் இயங்குபவர்களை பற்றி தெரியாத நிலை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் , ஒரு பதிவரை நன்கு தெரியும். ஆனால் அவரது எல்லா எழுத்துகளையும் படித்திருக்க மாட்டோம், ஓரிரண்டு விட்டு போய் இருக்ககூடும். அந்த பதிவுகளை யாராவது சொல்லும்போது அட..படிக்காமல் விட்டு விட்டோமே . நன்றாக இருக்கிறதே என தோன்றும்.

எனவே , நான் எனக்கு பிடித்தவற்றை , படித்தவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்., சிலருக்கு அறிமுகமாக தோன்றலாம். சிலருக்கு பகிர்தலாக தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அனைவருக்கும் வாசிப்பனுபவம் இனிதாக அமையும்.

புதிய பதிவர், பழைய பதிவர் , பெண் பதிவர் , ஆண் பதிவர், திரு நங்கை பதிவர் இந்து பதிவர்,. இஸ்லாமிய பதிவர் , நண்பர்கள் , எதிரிகள் என்றெல்லாம் பிரிக்க போவதில்லை. .   பதிவுகளை மட்டுமே பார்க்க போகிறோம்.

புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதுதான் வலைச்சரத்தின் நோக்கம் .  ஆனால் புதிய பதிவர் என்பதை மட்டுமே தகுதியாக நான் வைக்கப்போவதில்லை. நேற்று எழுத ஆரம்பித்தவர்கூட ஒரு நல்ல விஷ்யம் சொல்லி இருந்தால் , அந்த பேசுபொருளின் அடிப்படையில் அவர் எழுத்துகளை பகிர்ந்து கொள்வேன் என்பதால் , இயல்பாகவே புதிய பதிவர்களையும் நாம் பார்த்து விடலாம்.

பதிவுலகம் எனும் கடலில் மூழ்கி , இலக்கியம் , ஆன்மீகம் , நாத்திகம் , சமூகவியல் , பொருளாதாரம் , இசை என முத்தெடுக்க போகிறோம். இந்த பயணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

*******************************************************************


         என்னை பற்றி சிறிய அறிமுகம். என் வலைப்பூ www.pichaikaaran.com

சிலருக்கு சொல்வதற்கு ஏராளமான விஷ்யங்கள் இருக்கும். அதனால் எழுதுவார்கள். ஆனால் நான் எழுத தொடங்கிய காரணம் கற்பிப்பதற்காக அல்ல. கற்பதற்காக.
ஒவ்வொரு நாளும் கற்கிறேன். ஒவ்வொரு  நபரிடம் இருந்தும் கற்கிறேன். குறிப்பாக சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்களை ஆழ்ந்து படித்து விஷ்யங்களை கிரகிக்க முயல்கிறேன்.

இப்படி கற்றவற்றை பற்றி எழுதும்ப்போது , மேலும் சில அறிமுகங்கள் கிடைக்கின்றன.,குறைகள் சுட்டி காட்டப்படுகின்றன. மேலும் எழுதுகிறேன். மேலும் கற்கிறேன். இது ஓர் இனிய சுழற்சி.

இப்படி அறிவு பிச்சை எடுப்பதால் என்னை சிலர் பிச்சைக்காரன் என அழைக்க தொடங்கி இன்று அதுவே என் பெயராகி விட்டது. எனவே என்னை பிச்சை என்றோ பிச்சைக்காரன் என்றோ அழைக்கலாம். என் எழுத்துலக நண்பர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.


இலக்கியம் , உலக சினிமா என பல விஷ்யங்களை அறிமுகம் செய்து வைத்தது இந்த  நண்பர்க்ள்தான்.

 நான் பார்த்த சில படங்களில் இரு உன்னத படங்களை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

*************************************************************8

காதல் என்பது விட்டு கொடுத்தல் , எந்த நிபந்தனையும் இன்றி என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

காதலின் வெற்றி என்பது திருமணமோ , ஊர் சுற்றலோ , கிளர்ச்சியோ அன்று. காதல் என்பதே காதலின் வெற்றி. காதலிக்க தெரிந்தாலேயே , அன்பு செலுத்த தெரிந்து விட்டாலேயே போதும் , வாழ்க்கை வெற்றி பெற்று விட்டது. அந்த காதல் மூலம்வேறு எதுவும் அடைய வேண்டியதில்லை. காதல் தன் அளவில் பூரணமானது என்பதை சொல்லும் அ ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் .


காதலா- காமமா? அலசி ஆராயும் வேற்று மொழி படம் ***********************************************************
தான் மணம் வீசினால் , எல்லோரும் பாராட்டுவர்கள் என நினைத்து ஒரு ரோஜா மணம் வீசுவதில்லை. அதன் இயல்பு  மணம் வீசுவது . இயல்புப்படி அது இருக்கிறது, அதேபோல மகான்கள் , சான்றோர்கள் இயல்பு அன்பு செய்வது. பாராட்டோ , தூற்றலோ அவர்களை மாற்றாது என சொல்லும் வித்தியாசமான படம் இது..




புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்  ஒரு மகான் அற்புதங்கள் செய்ய வேண்டியதில்லை,. மகான் என்பவனே ஓர் அற்புதம்தான்.


நான் தீயாக இருந்திருந்தால் எரித்து இருப்பேன், மரம் வெட்டியாக இருந்திருந்தால் வெட்டி இருப்பேன். ஆனால் நானோ அன்பாக இருக்கிறேன். அன்பைத்தவிர வேறு ஏதும் என்னால் செய்ய இயலாது

*********************************************************************
வெறுப்பு , அன்பு என நம் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறும் தன்மை கொண்டது தண்ணீர் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம் உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. ஆகவே , நம் உணர்வுகள் மேல் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லும் சூப்பர் புத்தகம் இது..
உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தண்ணீர்- ஆச்சர்யமளிக்கும் புத்தகம்...


மேலும் வாசிக்க...

Sunday, May 19, 2013

சாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருகிறார்!

வணக்கம் வலை நண்பர்களே....
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சாய்ராம் அவர்கள் தமது பணியை மிகுந்த ஆர்வமுடனும், ஈடுபாடுடனும், சிறப்பாக முடித்து, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

சாய்ராம் இந்த வாரத்தில், அறிமுகம் - சாய் ராம், கொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள், பிரபஞ்சம் தோன்றியது எப்படி?, சங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ..., வீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி..., குழந்தைகளும் பெற்றோர்களும், கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஸ்ரீசாந்தும், ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?, வலைப்பதிவு உலகம், நிறைவு - சாய் ராம்.  என மொத்தம் பத்து இடுகைகளில் பல பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் எழுபது மறுமொழிகள் வரை பெற்றுள்ளார்.

சிறப்பாக ஆசிரியர் பொறுப்பை முடித்த சாய்ராமை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "பிச்சைக்காரன்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் பிச்சைக்காரன் (இப்பெயரில் தான் அவர் அழைக்கப்படுகிறார்) அவர்களை அழைக்கின்றேன். தற்பொழுது சென்னையில் வசித்து வரும் இவர் கடந்த மூன்றாண்டுகளாக பதிவுலகில் இருக்கிறார். இயந்திரவியல் துறையில் பணியாற்றி வரும் இவர் பதிவுலகில் பல்வேறு விஷயங்களை கற்பதற்காகவும், பல நல்லுள்ளங்களை நட்பாக பெறவுமே வலைப்பூவில் எழுதி வருவதாக சொல்கிறார். 

பல நல்லோரைப் பற்றி குறிப்பிடத்தக்க தளமாக வலைச்சரம் உள்ளது என்பதால், ஆசிரியர் பொறுப்பை மிக ஆர்வமுடன் ஏற்றுக் கொண்டதாக சொல்லும் இவரை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் சாய்ராம்...
நல்வாழ்த்துக்கள் பிச்சைக்காரன்....

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.......
மேலும் வாசிக்க...

நிறைவு - சாய் ராம்

ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்ற வேண்டுமென சீனா மின்னஞ்சலில் என்னிடம் கேட்ட போது உடனே சரியென சொன்னேன். என்னுடைய வலைப்பதிவுலகம் குறுகியது. அங்கு நண்பர்களின் எண்ணிக்கையும் குறைவு. வேறொரு விரிந்த உலகத்திற்கு எழுதுவது மீடியாகாரனான எனக்கு சந்தோஷமளிக்கும் விஷயமாக தோன்றியது.

இங்கே மற்றவர்களுக்கு நான் வலைப்பதிவுகளை பரிந்துரை எழுதியது போக இந்த ஒரு வாரக்காலத்தில் எனக்கும் பல புது அனுபவங்கள் கிட்டின. முதலாவது தினமும் பதிவு எழுத வேண்டும் என்கிற கமிட்மெண்ட். நேரத்தை மடித்து ஒடித்து ஆங்காங்கே எழுதி பதிவிட்டது இப்போது எனது சொந்த வலைப்பதிவிற்கு எழுதுவதற்கு பயிற்சியாக அமையுமென நம்புகிறேன். ஒவ்வொரு பதிவிற்கு வந்த மறுமொழிகள், அது பதிவான வேகம் இவை ஆச்சரியமேற்படுத்துகின்றன. வலைச்சரத்தினை தினமும் வாசிப்பவர்கள் என ஒரு பெரும் கூட்டம் இருப்பதை உணர முடிகிறது. மற்றொரு முக்கியமான அனுபவம் தமிழ் வலைப்பதிவுலகத்தை அதிகமாய் இந்த ஒரு வார காலம் அலைந்து மேய்ந்தேன். எண்ணிக்கையில் மலைக்க வைக்கிறது தமிழ் வலைப்பதிவுலகம். தொடர்ச்சியாக எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆங்காங்கே இதன்காரணமாக நட்பு வட்டமும் சில இடங்களில் அது எதோ ஒரு நோக்கத்திற்காக முன்னெழுவதும் காண கிடைக்கிறது. ஆங்கில வலைப்பதிவுலகம் காட்டும் வெரைட்டி விரைவில் தமிழ் வலைப்பதிவுலகத்திலும் தோன்றும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

வாய்ப்பளித்த சீனாவிற்கும் வலைச்சர நண்பர்களுக்கும் இந்த ஒரு வார காலம் எனது பதிவுகளை பார்வையிட்ட தோழர்களுக்கும் எனது நன்றி.
மேலும் வாசிக்க...

வலைப்பதிவு உலகம்

முன்பொரு காலத்தில் மனிதர்களுடன் உரையாடல் என்பது நேருக்கு நேர் என்பதாய் இருந்தது. மேடைகளில் பேசுவது என்பது உணர்ச்சிபூர்வமாய் இருந்தது. பிறகு கடிதங்கள் வந்த போது அதனுள் உணர்ச்சிகளை எழுத்தாய் வடிக்க கற்று கொண்டோம். சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட போஸ்ட் கார்டு நிரம்பும் அளவு எழுதி தள்ளினோம். இன்று எதுவும் மாறி விடவில்லை. ஆனால் சுருங்க சொல்ல கற்று கொண்டு இருக்கிறோம். 140 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கிற டிவிட்டர் போதும் நம்முடைய பரிமாற்றத்திற்கு. அது தான் மணிக்கணக்கில் செல்பேசியில் பேச முடிகிறதே, அப்புறமென்ன!

வலைப்பதிவுகள் தமிழில் பிரபலமாக இருந்த காலத்திற்கும் இப்போது பெரும்பாலான ஜனங்கள் ஃபேஸ்புக் போய் விட்ட காலத்திற்கும் நடுவே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சின்ன சின்ன கதைத்தல்களுக்கு ஃபேஸ்புக் இப்போது தளமாகி விட்டது. எனினும் இப்போதும் வலைப்பதிவுகள் தங்களுக்கான இடஎம் என்ன என்பதை உணர்ந்து இதை நிறைவு செய்யும் பக்குவமடைந்து இருக்கின்றன. பெரிய கம்பெனிகள் தங்களுடைய மார்க்கெட்டிங் அம்சமாகவும் தங்கள் வாடிக்கையாளர்களுடனான பொது தொடர்பு சாதனமாகவும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்துகின்றன. எல்லாரும் எல்லாவற்றையும் பேசலாம் என்பது குறைந்து இந்தந்த விஷயங்களுக்கான வலைப்பதிவுகள் (niche blogs) அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. இன்னொருபுறம் தனிமனிதர்களுக்கான விசிட்டிங் கார்டுகளாகவும் வலைப்பதிவுகள் (ஆரோக்கியமாய்) மாறி கொண்டு இருக்கின்றன.

பத்ரி சேஷாத்ரி
வலைப்பதிவுலகில் பெரும்பாலனோருக்கு தெரிந்தவராக இருப்பார் என்றே நம்புகிறேன். வெளிநாட்டிற்குச் சென்று வந்த அனுபவம், இந்த வலைப்பதிவு காலம் தொடங்கிய போது இணையத்தில் புதுபுது முயற்சிகளை எடுக்க இணையம் பற்றிய தகவல்களிலே திளைத்திருந்த காரணத்தினால் தொடக்கம் முதலே வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று தெரிந்தே இருந்திருக்கிறார். அதோடு அளவில் சிறிதாகவும் அதிக தகவல்களோடும் எழுதும் அவருடைய ஸ்டைல் கச்சிதமாக இருக்கிறது. கிழக்கு பதிப்பகம், தமிழ் அறிவுச்சூழலில் உள்ள பலரோடு தொடர்பு என்கிற பின்புலம் காரணமாக அவருடைய இடம் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. அடுத்து இவருடைய வலைப்பதிவில் தடங்கலின்றி பதிவுகள் அரங்கேறி கொண்டே இருக்கும் ஒழுக்கம். நான் இதை எழுதி கொண்டிருக்கும் போது அவருடைய தளத்தில் 2003-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 2562 பதிவுகளை எழுதி தள்ளியிருக்கிறார். அடிக்கடி காணாமல் போகும் வலைப்பதிவர்களிடையே இந்த மாதிரியான தொடர்ந்து பதிவு எழுதும் ஒழுக்கம் முக்கியமானதாக இருக்கிறது.

அபிலாஷ் சந்திரன்
இவரைப் பற்றி கிரிக்கெட் பதிவிலும் சொல்லியிருந்தேன். 2009-ம் ஆண்டு தொடங்கி எக்கசக்கமாய் எழுதுகிறார். இலக்கியம், இணையம், உளவியல், மொழிபெயர்ப்பு, கவிதை, கிரிக்கெட், சமூகம் , சினிமா, சிறுகதை, தத்துவம் என பல தளங்களில் விரிகின்றன இவரது வலைப்பதிவுலகம். கொஞ்சம் சீரியஸான வாசிப்பினை விரும்புபவர்கள் கட்டாயம் இவரது வலைப்பதிவினைத் தொடர்ந்து வாசிக்கலாம்.

பாலபாரதி
இவர் வலைப்பதிவுலகில் பிரபலம் என்பது மட்டும் அல்ல, நிறைய பேருக்கு வலைப்பதிவுலகை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு. எனக்கு அறிமுகத்தியது உட்பட. நிறைய எழுதி வந்திருக்கிறார். பெரியாரின் வரலாற்றையும் எண்ணங்களையும் தொகுப்பதற்கு முயற்சிகள் எடுத்து இருக்கிறார். ஆட்டிசம் சில புரிதல்கள் என்பது பற்றி தொடராக எழுதி பிறகு அதை புத்தகமாக்கி இப்போது அது விழிப்புணர்வு பிரச்சாரமாக இணையத்தில் பலருக்கு பலவழிகளில் பரிந்துரைக்கப்பட்டு பரவி கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுலகத்தின் வலிமையை அதன் சாத்தியத்தை உணர்த்தும் முயற்சி இது.

வலைப்பதிவுலகில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா மற்றும் ஏனைய துறை பிரபலங்கள் இவர்களுக்கு இவர்களுடைய ரசிகர்கள்/வாசகர்கள் வலைப்பதிவு நடத்துவதும் அது பிரபலமாக இருப்பதும் நாம் அறிந்ததே. இதுவொரு வலைப்பதிவுலக சாத்தியம். இந்த வகையில் கவிஞர் தேவதேவனுக்கு அவரது வாசக நண்பர்கள் நடத்தும் வலைப்பதிவு கவனத்திற்குரியது.

வலைப்பதிவுலகில் ஆக்டிவ்வாக இருந்து விட்டு பிறகு பதிவிடாமல் இருந்த சிலர் இப்போது மீண்டும் வலைப்பதிவுலகிற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். ரவிசங்கர் தனது வலைப்பதிவில் மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறார்.
மேலும் வாசிக்க...

Saturday, May 18, 2013

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

கிட்டதட்ட எழுபது வருடங்களாக தமிழக வெகுஜன ஊடக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பெரும்படைப்பாக திகழ்கிறது பொன்னியின் செல்வன். யாகூ குரூப்கள் இணையத்தில் பாப்புலராக இருந்த போது சில இளைஞர்கள் அதில் ஒரு குரூப்பாக கூடி பொன்னியின் செல்வன் பற்றி விவாதித்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், கமலகண்ணன், ராமசந்திரன், லாவண்யா, கோகுல் மற்றும் க்ருபாசங்கர் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள ஊர்களுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்வதென முடிவு செய்தார்கள். அப்படி தொடங்கிய பயணம் பிறகு சரித்திர ஆய்வாளர்களோடு தொடர்பு என நீண்டு வரலாறு என்றொரு இணையத்தளத்தினை உருவாக்கி அதில் சரித்திர ஆய்வு குறித்த தகவல்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட தூண்டியது. பலவிதமான வரலாற்று தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.

வரலாறு ஆய்வு தளத்தினைப் போலவே சென்னையில் உள்ள வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஆர்வமுள்ளோர் தொடர்ந்து எழுதி நடத்தி வரும் வலைப்பதிவு 'தமிழ் பாரம்பரியம்'. ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் தமிழிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுலகில் எந்த சார்பும் அல்லாத ஆய்வு கண்ணோட்டத்தில் வரலாற்றுக்காக நடத்தபடும் வலைப்பதிவு சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் இந்த வலைப்பதிவு கவனிக்கதக்க வலைப்பதிவாக இருக்கிறது. பிரபல வலைப்பதிவர் பத்ரி சேஷாத்ரி இதை நடத்தி கொண்டிருக்கிறார்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் சோழ நாட்டில் பௌத்தம் என்றொரு வலைப்பதிவு எழுதி கொண்டிருக்கிறார். பல ஆய்வு கட்டுரைகள் இதில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

There was an error in this gadget

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது