07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 20, 2008

விடுபட்டவை

தகவல் தொழில்நுட்பத்துறைக் காரர்கள் என்றாலே ஏதோ வேற்றுக்கிரக வாசிகளை போல பார்க்கும் வழக்கம் இப்போது பலருக்கு இருக்கிறது. ஏன் ? எதற்காக என்ற எந்த கேள்விகளும் இல்லாமல் எல்லோரும் சொல்வதலோ அல்லது ஒரு முன்முடிவுடனேயே இந்த விசயத்தில் இருக்கிறார்கள். ச‌மூக‌ அவ‌ல‌ங்களையும் ஐ.டி.கார‌ர்க‌ளையும் இணைத்து பேசும் ம‌க்க‌ள் க‌ருத்து ப‌ற்றியும் உண்மை நிலை ப‌ற்றியும் விள‌க்கிறார் வெட்டி

***

ஐ.டி. நிறுவனங்களில் பெருகி வரும் பாண்டு நடைமுறை பற்றி அழகாக விளக்குகிறது தமிழ்நெஞ்சத்தின் பதிவு.

வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் என்ற‌ போதும், அவ்வ‌ள‌வாக த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌க்கார‌ர்க‌ளின் வாழ்வை ப‌ற்றிய‌ ப‌திவுக‌ள் வ‌ருவ‌தில்லை. சீக்கிர‌ம் வ‌ர‌ வேண்டும் என்ற‌ வேண்டுகோளை இங்கு வைக்கிறேன்

***

ச‌மூக‌த்திலும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் அதன் தாக்கங்கள் & அவை தரும் படிப்பினைகளையும் அழகாக தொகுத்து தருகிறார் பாலா அண்ணா தன் விடுப‌ட்ட‌வை ப‌திவுக‌ளில்

ப்ரிய‌னின் 'ப்' ப‌க்க‌ங்க‌ளிலும் இந்த வகை பதிவுகளை காணலாம்

***

வெவ்வேறு துறையில் இருக்கும் சில நபர்கள் ஒரு நாள் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்ந்தால் என்னவெல்லாம் லூட்டி அடிப்பார்கள் என்று யோசித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் சின்ன பையன்.யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!
என்ன நடக்கும் என்ற அவர் கற்பனையை பாருங்கள்

***

வேலை கிடைக்கவில்லை என்று இப்போதெல்லாம் யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனேனில் பல்வேறு வேலை வாய்ப்புகள் எங்கேங்கும் இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில் வேலைக்கான தகுதிகள் நம்மிடம் இருப்பதில்லை, அல்லது வேலை வாய்ப்புகள் குறித்து நமக்கு தெரிவதில்லை. தமக்கு தெரிந்த வேலை வாய்ப்புகளை பொதுப்பார்வைக்கு வைக்கிறார் கார்த்திகேயன் தனது 'ஜாப்ஸ் அவென்யூ' பதிவுகளில்

***

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள் என சொல்வதுண்டு. எப்படியாவது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டும் என்று எப்போதும் ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக மீண்டும் செய்திகளில் 'வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று ஏமாற்றியவர் மாயம்' போன்றவைகளை கேட்க முடிகிறது. வேலை தேடுவோருக்கு ஒரு எச்சரிக்கை பதிவாக அமைந்திருக்கிறது 'வேலை தேடுவோர் ஜாக்கிரதை' பதிவு

***

முன்னேற்றம், நாகரீகம் எனும் காரணிகளைக் காட்டி இயற்கையை விட்டு மனிதன் எங்கோ தூரமாக சென்றுக்கொண்டிருக்கிறான். இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே என்று அறிவுறுத்துவதோடு எளிய இயற்கை (பாட்டி) வைத்தியங்களையும் சொல்லி தருகிறது பாட்டி வைத்தியம் பதிவு

***

இன்றோடு வலைச்சரத்தில் என் பயணத்தை நிறைவு செய்து கொள்ள எத்தனித்திருக்கிறேன். ஓரளவுக்கேனும என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தோடு விடை பெறுகிறேன்.

வலைச்சரம் குழுவுக்கும் பின்னூட்டமிட்டும் வாசித்தும் ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

வலைப்பதிவுகளில் எப்போதும் போல் ஒன்றாய் தமிழோடு பயணிப்போம்

நன்றியுடனும் வணக்கங்களுடனும்
உங்கள் சக பயணி
பிரேம்குமார்

3 comments:

  1. பின்னூட்டக் கயமை ;-)

    ReplyDelete
  2. நண்ப, பிரேம், அனைத்துப் பதிவுகளுமே அருமை. ஒரு வார காலம் இனிதே கழிந்தது. நன்றி

    ReplyDelete
  3. நல்லதொரு வாரம்! இவ்வளைவையம் தொகுக்கிறதே பெரிய கஷ்டமான காரியம் பிரேம் அண்ணன்...நன்றாக இருந்தது...

    நன்றி...!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது