07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 29, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

நான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு

முனைவர்
கல்பனா சேக்கிழார்

வலையுலகில் தமிழ் இலக்கியம் வளர்க்கிறார் இவர். கிட்டத்தட்ட இவரின் அனைத்து பதிவுகளுமே படிக்க வேண்டியவைதான்.

உதாரணத்துக்கு சில

நெடுநல் வாடை

மலையின் வகை

இயற்கையே தெய்வம்

மிளகின் கதை



டவுசர் பாண்டி

தமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய சேவை பற்றி மிக அருமையாக இவர் தனது
பதிவுகளில் விளக்கி இருக்கிறார் ...! அநேகம் பேர் அறியாத அபூர்வ தகவல்கள் இவை...!



இஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -ஒன்று

இஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -இரண்டு





பா .ராஜாராம்

இவரது கவிதைகள் ரொம்பவே தாக்கத்தை உண்டாக்குகிறது . இவரது இந்த கவிதை .... படித்து பாருங்கள் ....!




தகப்பனாக இருப்பது







அன்புடன் அருணா

இவரின் இந்த பதிவை அனைவரும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் அந்த அளவிற்கு முக்கியமானது, அவசியமானது . இந்த பதிவிற்க்காக இவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமை பட்டு இருக்கின்றோம்.



கடவுள் ....108






உமா சக்தி

ஆங்கில பட விமர்சனங்களையும்,கவிதைகளையும் அதிகம் எழுதும் இவர் எழுதிய ஒரு உண்மை நிகழ்ச்சி இந்த பதிவு ..! இதை அருமையான சுவாரஸ்யமிக்க ஒரு சிறுகதையாக வடித்து இருக்கிறார்..!


கிட்டங்கி எண் 13








அபு அப்சர்


குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர்களில் இவரும் ஒருவர் தமிழர்களின் நிலையை மிக துல்லியமாய் அலசி பதிந்து இருக்கிறார் இவர் இந்த பதிவில்




தமிழர்களாகிய நம் நிலை




பின்னோக்கி

சமீப காலமாக வித்தியாசமான பதிவுகளை தருகிறார் இவர்.தன் தாயாரின் நினைவில் இவர் அளித்து இருக்கும் நெகிழ்வில் சங்கமிப்போம் ..!




போய்விடு அம்மா என் நினைவிலிருந்து ..!





அகல் விளக்கு

பிச்சை எடுக்கும் இவர்களைப்பற்றி இவர் படைத்து இருக்கும் இந்த பதிவுகளை
படித்து பாருங்கள்.


பிச்சை பாத்திரம் -ஒன்று

பிச்சை பாத்திரம் -இரண்டு





வெண்ணிற இரவுகள்
நட்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அருமையாய் செதுக்க பட்டு இருக்கிறது இந்த பதிவு ..!

யார் சொன்னது கடவுள் இல்லைஎன்று ..?






சி .கருணாகரசு

திருக்குறளைப்பற்றி இவர்தம் குரலில் எப்படி கவிதை வடித்து இருக்கிறார் பாருங்கள் ..!

கல்வெட்டாக்கிய காப்பியம்




ராஜா சபை

எகிப்து நாட்டை சுற்றி காட்டுகிறார் இவர் தனது இந்த பதிவுகளில் அருமையான படங்கள் இதுவரை ஐந்து பாகங்கள் எழுதி உள்ளார் இன்னும் தொடர்கிறார் . ஐந்து பாகங்களுக்கான லிங்கும் இதில் உள்ளது .

எகிப்தில் ஒரு வரலாற்று பயணம்





மண், மரம், மழை, மனிதன்

சுற்றுப்புற சுழல்,இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு,மருத்துவ செடிகள்,அழகு செடிகள் வளர்த்தல் ஆகியவற்றை பற்றி விளக்குகிறது இவரது பதிவுகள் மிக அவசியமான ஒரு வலைத்தளம் இது..!




மண், மரம், மழை, மனிதன்

23 comments:

  1. மிக்க நன்றிங்க ஜீவன்...என்னையும் உள்ளே அழைத்துக்கொண்டமைக்கு.

    ReplyDelete
  2. ஆகா எல்லாமே கலக்கலான அறிமுகங்கள்!

    ReplyDelete
  3. அப்பா ! எவ்வளவு பதிவர்கள்! எவ்வளவு திறமை! எவ்வளவு ரசிகர்கள்! 'வலைச்சரம்' தொடங்கியவர்க்கும், ஜீவன் போன்று எழுதி, ரசித்து, ரசனையை பகிர்பவர்க்கும் மிக, மிக நன்றி.

    எல்லா பதிவின் சுட்டிகளையும் எங்கேயாவது சேமித்து வைத்து, நாளாக நாளாக படிக்கலாம்.

    உங்களுக்கும், உங்களுக்கு முந்திய வார வலைஞர்களுக்கும் பாராட்டுகள் பல.

    வாழ்த்தை ஒரு குறளாக வழங்குகிறேன்:

    பார்வலையைப் பாராதார் பெற்றிடுவார் பேரிழப்பு
    பார்சீவன் போன்றோர் திறன்.

    ReplyDelete
  4. ஐந்தாம் நாள் அறிமுகத்துக்கு நன்றியும் பாராட்டும் ஜீவன்.

    ReplyDelete
  5. நன்றி ஜீவன் என்னை அறிமுகப்படுத்தியதற்கு. இவ்வளவு புகழ் பெற்ற பதிவர்களின் மத்தியில் என் பெயர் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  6. அடடா....நானுமா???நன்றி...நன்றி!

    ReplyDelete
  7. நல்ல அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. வெற்றிகரமான ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே!

    அனைத்து அறிமுகங்களும் கலக்கல்.
    வண்ணமயமான அறிமுகங்கள்!!

    ReplyDelete
  9. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தமிழ்

    ReplyDelete
  10. ஜீவன்,நிறைவான பதிவாளர்கள்.
    உங்களுக்கும் நிறைவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஐந்தாம் நாளில் இன்னும் முக்கிய பதிவர்களை தெரிந்துகொண்டேன். அறிமுக பகிர்வுக்கு நன்றி அன்பரே....

    ReplyDelete
  12. அருமை.. அருமை...

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நிறைந்த பதிவுகள். பலர் எனக்குப் புதியவர்கள். அறிமுகம் செய்ததற்கு நன்றி ஜீவன்.

    ReplyDelete
  14. அச‌த்த‌லான‌ அறிமுக‌ங்க‌ள்.

    இதில் பாதி பேர் ஏற்கென‌வே அறிமுக‌மான‌வ‌ர்க‌ள்.ட‌வுச‌ர் பாண்டி புதுசு எம‌க்கு.ஃபாலோவ‌ராகி விட்டேன்.

    ReplyDelete
  15. அபுஅஃப்ஸர்,பா.ராவெல்லாம் நம்மாளுங்க..இவங்கள பத்தி சொல்லவேண்டியதேயில்ல.

    பா.ராவின் தகப்பனார் கவிதை தி பெஸ்ட்..!

    ReplyDelete
  16. தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என மிக அற்புதமான வலைத் தளங்களை எல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் நமது "வாழ்க்கைக் கவிஞர்" அவர்களுக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  17. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
  18. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தல. அனைவருமே அருமையான பதிவர்கள். மிகச்சிறப்பாய் அறிமுகம் செய்துள்ளீர்கள்

    ReplyDelete
  19. என்னையும் உள்ளே இழுத்துவிட்டதுக்கு வாழ்த்துக்கள்

    இதன்மூலம் சில இடுக்கைகள் நிறையபேரிடம் போய் சேருகிறது, இதற்காக நிறைய மெனக்கெட வேண்டிருக்கிறது, நன்றி நன்றி

    ReplyDelete
  20. என்னையும் உள்ளே அழைத்துக்கொண்டமைக்கு நன்றிங்க ஜீவன்.

    எல்லா பதிவையும் எங்கேயாவது சேமித்து வைத்து, நாளாக நாளாக படிக்கலாம். உண்மை...

    ReplyDelete
  21. அறிமுகத்திற்கு நன்றி ஜீவன் .வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. படிக்க வேண்டிய நல்ல அறிமுகங்கள்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது