07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 26, 2010

விமர்சனங்களைத் தேடும் என் எழுத்து - வலைச்சரம் முதல் நாள்

சின்ன வயதில் வாசிக்கும் ஆசை இருந்த போதிலும் ஆசைக்கேற்ற தீனியாக புத்தகங்கள் கிடைக்கவில்லை.மளிகைப்பொருட்கள் கட்டிவரும் காகிதங்கள், எங்கள் கடையில் வாங்கப்படும் தினத்தந்தி, அம்மாவிற்காக வாங்கப்படும் ராணி, ராணிமுத்து ஆகியன தான் வாசிக்கக்கிடைத்தவை.அதைத்தாண்டி வாசித்தது விகடன்,குமுதம், மங்கையர் மலர்

இன்று வலையுலகப் படைப்பாளிகள் பலரும் சொல்வது போல் ஆங்கில நாவல்கள்,பிற மொழி, நாடு சார்ந்த எழுத்துக்களைப்படித்ததில்லை.அதனால் பரந்து பட்ட அறிவு, எந்த ஒரு கருத்தையும் தீர்க்கமாக அலசி ஆராயும் ஞானம் கிடையாது. ஏதோ ஆர்வக்கோளாறால் என் மனதில் பட்டதை எழுதி வருகிறேன்.

கவிதைகள் எனக்குப்பிடிக்கும். என் வரை, கவிதைகள் நமது உணர்வுகளின் நுண்ணிய வெளிப்பாடு, நம் எண்ணங்களை அழகுற வடிக்கும் ஒரு படிமம், இப்படித்தான் எழுத வேண்டுமென்ற வரையறையை, கவிதைக்கு யாரும் கொடுத்து விட முடியாது.

எனது கவிதைகள் எனக்கு முதலில் பிடிக்கவேண்டுமே! அப்படி எனக்குப்பிடித்தவை.
கட்டுரைகள் பல எழுதியிருந்தாலும் கூட எனக்கே 'அட பரவாயில்லையே 'என்று எண்ண வைத்த எனது கட்டுரைகள்.

பிடித்தவர்கள் பாராட்டினால் நன்றி. பிடிக்காதவர்கள் விமர்சித்தால் இரட்டை நன்றி. காரணம் ஒரு படைப்பாளியை விமர்சனங்கள் பக்குவப்படுத்துகிறது. வலைச்சரத்தின் மூலம் நான் பக்குவப்படவே விரும்புகிறேன் தோழர்களே! தங்கள் அனைவரின் வழிகாட்டலில் மிளிர விரும்பும்,

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
நன்றி!

23 comments:

  1. வாழ்த்துகள் !

    சிறப்பான இடுகைகளின் அணிவகுப்பு துவங்கட்டும்

    ReplyDelete
  2. உண்மைதான்.

    நமக்கு பிடிக்க வேண்டும். மற்றவர்கள் விரும்புவது இயல்பாகவே வரும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தேர்ந்தெடுத்து தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தொடருங்கள், வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சகோதரி!
    :)

    ReplyDelete
  6. வாருங்கள் சகோதரி!

    உங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!

    வாழ்த்துக்கள்.

    பிரபாகர்...

    ReplyDelete
  7. அன்பின் சாந்தி

    நல்லதொரு சுய அறிமுகம்

    அனைத்து இடுகைகளையும் சென்று படிக்கிறேன் - முன்னரே படித்திருக்கவும் வாய்ப்புண்டு - கவிதை கட்டுரைகள் - கலக்க நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    விஜய்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வலைச்சர வாழ்த்துக்கள் சாந்தி லெட்சுமணன்..:-)

    ReplyDelete
  12. வாழ்த்துகள். அனைத்து கவிதை கட்டுரைகளை படித்து விடலாம்.

    ReplyDelete
  13. சாந்தி, இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. உங்களின் இந்த வார ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் .

    இதோ இப்பொழுதே உங்களின் பதிவுகளை படிக்க தொடங்கி விட்டேன் .
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்! பணிசிறக்கட்டும்!!

    ReplyDelete
  18. வாங்க சாந்தி .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வாருங்கள் சகோதரி!

    வாழ்த்துகள் !

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. தேர்ந்தெடுத்து தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வாழ்த்தி வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது