07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 4, 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகம் தொடர்கிறது.

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவுகளில் எழுதிவரும் புலம்பெயர் தமிழரான கானா பிரபா "மடத்துவாசல் பிள்ளையாரடி" , "ரேடியோஸ்பதி" மற்றும் "உலாத்தல்" ஆகிய வலைத்தளங்களின் சொந்தக்காரர். "வாண்டுமாமா - எங்கள்  பால்ய காலத்துக் கதை சொல்லி" , "மனதோடு பேசிய ஸ்வர்ணலதா" மற்றும் "திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

"ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவானது ஈழத்து வலைப்பதிவர்களால் நடாத்தப்படும் ஒரு குழும வலைப்பதிவாகும். சுமார் 40 பேரளவில் இவ்வலைப்பதிவுக்கு தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர். "பெண்களும் நகைகளும்" மற்றும் "நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை. பங்களிப்போர் பட்டியல் நீளமாக இருக்கும் அளவுக்கு படைப்புகள் வெளிவராததும் ஏனோ?

நம்முடைய கருவறைப் பயணம் எப்படி இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஹாரியின் "ஹாரி 2G" வலைத்தளத்தின் "எமது கருவறை படி நிலைகள்" என்ற பதிவைத்தான். மேலும் இவரது "IDEAS OF ஹாரி" தளத்தில் எழுதியுள்ள "கோச்சடையான் (2014) பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை" ஒரு கைதேர்ந்த திரை விமர்சகனின் பதிவாக அமைந்துள்ளது.


மேலும் இலங்கை சாராத தளங்களில் வெளிவந்துள்ள ஆனால் மலையகம் மற்றும் ஈழம் சார்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடிய பதிவுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".

ஈழ வரலாற்றுத் தொடர் - ஈழத்தின் உருவாக்கம் தொடங்கி ராஜீவின் மரணம் வரை - "ஈழம் : முகப்புப் பக்கம்"

"ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா ?" என்று வினா எழுப்புகிறது "வியாசன்" தளம்.

இன்னும் இருக்கிறது. நேரம் போதாமை காரணமாக மிகுதி அடுத்த பதிவில்...

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

15 comments:

  1. முடிவில் உள்ள "வியாசன்" தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...


    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எனது வலைப்பதிவையும் ஒரு பொருட்டாக எண்ணி வலைச்சரத்தில் இணைத்தமைக்கு நன்றி. :-)

      அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்..

      Delete
  2. சிறப்பான அறிமுகம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சிறப்பான அறிமுகங்கள்...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நன்றி தல.. நல்லா எழுதுறிங்க.. கலக்குங்க..

    ReplyDelete
  6. இன்றும் சிறப்பான அறிமுகங்கள்...
    அறிமுகமாகியுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. எல்லாமே சிறந்த அறிமுகங்கள்!
    உங்கள் தேடல் பெரியது - அது
    எங்கள் பார்வையில் தெரிகிறது!
    தொடருங்கள்...

    ReplyDelete
  8. சிறப்பான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. எல்லோர் வலையும் எழில்பூக்கும் இவ்வரிய
    நல்லுள்ள பண்பால் நனைந்து !

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  12. தொடர்ந்து இன்றும் ப்ல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அனைத்துப் பதிவுகளையும் படித்தேன். அருமை.

    ReplyDelete
  13. மிக்க நன்றி நண்பரே இன்று தான் தங்கள் அறிமுகத்தைக் கண்டேன்.

    ReplyDelete
  14. என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி தோழரே!!! புதிய வலைத்தளங்களை நான் அறிந்துக் கொள்ளவும் இப்பதிவு உதவியது.. மிக்க நன்றி!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது