07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 31, 2014

மெஞ்ஞானம் எனும் தத்துவன்

"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா ?"

"பூமியைப் படைத்தது சாமியா? இல்லை சாமியைப் படைத்தது பூமியா?" என‌ பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய கேள்விக் கணைகளால் தொடுத்த‌ கவியரசு கண்ணதாசனின் வரிகள் இவை.

ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன, ஏழைகள் இருக்கிறார்களா ?

மெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம், வழிபாடு தான் முதலில் வருகின்றன.  அதனையும் தாண்டி நம் பிறப்பின் தேடலின் பின் சென்றால் பல அதிசயங்களைக் காணமுடியும்.  இது பல ஞானிகள், யோகிகள், மோனிகள், தத்துவ வித்தகர்களின் (போலிச் சாமிகள், மற்றும் கார்ப்பரேட் சாமிகள் தவிர்த்து :)) வாழ்க்கை வரலாறு மூலம் அறியப் பெறலாம்.  ஒரு அறைக்குள் சென்று பின் திறந்து பார்க்கையில், உள் சென்ற ஞானியின் சுவடு அறவே இல்லை.  காற்றில் கற்பூரமாய் கரைந்து போனார்கள் என்று படிக்கிறோம்.  சில நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்று வரலாற்றுப் பதிவுகள் இருப்பதாக அறிகிறோம்.  சரி, இதற்குள் பயணித்தால் போய்க் கொண்டே இருக்கலாம்.  நமது பதிவர்களின் சில மெய்ஞானம், தத்துவம், ஆன்மிகப் பதிவுகள் இன்று.

Arinthathum Ariyathathum - JVC-OSA Community தளத்தில் இருந்து.  பல அறிய செய்திகள் மெஞ்ஞான விளக்கங்கள் கொண்ட தளம்.

ஆறுபடை வீடும், ஆறாதாரமும் - ரிச்மண்ட் கவிநயா அவர்களின் தளத்தில் இருந்து, முருகன், அம்மன், ஆன்மிகம், பக்தி என கவிதை கதைகளில் கலக்கும் பதிவுகள் கொண்ட தளம்

முருகனருள் தளத்தில் இருந்து கவிநயவின் பல பாடல் பகிர்வுகள் (சுப்புத் தாத்தா பாடியது) மற்றும் முருகன் பெருமைகள் பல கொண்ட தளம்.

திருமந்திரம் - Rie அவர்கள் தளத்தில் இருந்து திருமந்திரம், அட்டாங்க யோகம், என பல பாடல்கள், அதன் விளக்கங்கள் என நுண் கருத்துக்கள் கொண்ட தளம்.

முருகனருள் முன்னிற்பதாக..!! ‍ - Kamala Hariharan அவர்கள் தளத்தில் இருந்து ,முருகனின் பெருமை கூறும் பதிவுகள்.

விஞ்ஞானம் வெற்றிதான்! ஆனால் மெஞ்ஞானம்... - Sasi Rama அவர்கள் தளத்தில் இருந்து, விஞ்ஞானத்தின் வெற்றி சொல்லி, மெஞ்ஞானம் பற்றிய சிறுகுறிப்பு அருமை!

நெருப்பில்லாமல் புகையாது ! - Chittarkottai Sunnath Jamath அவர்கள் தளத்தில் இருந்து,  மெஞ்ஞானம் பற்றி இஸ்லாத்தின் பார்வை.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் - ஹைஷ் அவர்கள் தளத்தில் இருந்து அருமையான சிறிய விளக்கம் அனைவருக்கும் புரியும் வண்ணம்.

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி - ‍சிவத்தமிழோன் அவர்கள் தளத்தில் இருந்து, பல சிந்த்திக்க வைக்கும் கருத்துக்கள் அடங்கிய தளம்.

விஞ்ஞானம் - மெஞ்ஞானம் ! -  SIVAPRAKASAM SRINIVASAN அவர்கள் தளத்தில் இருந்து.  சிறிய விளக்கம் என்றாலும், கடைசி வரி படக்கென்று நம்மைப் பற்றிக் கொள்கிறது.

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்! - விவேகாநந்தன் அவர்கள் தளத்தில் இருந்து.  ஓம் என்னும் ப்ரணவம் குறித்த நுண் விளக்கங்கள் கொண்ட பதிவு.

மெஞ்ஞானத் தெளிவு பெற்று விஞ்ஞானம் போற்றி நல்வாழ்வு வாழ்வோமாக!  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!

7 comments:

  1. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. மிக அருமையான வலைத்தளங்கள் அறிமுகம்! புதியவை அனைத்துமே அறிய உதவியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. //மெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம், வழிபாடு தான் முதலில் வருகின்றன. அதனையும் தாண்டி நம் பிறப்பின் தேடலின் பின் சென்றால் பல அதிசயங்களைக் காணமுடியும். //

    உண்மை.. இதுவே மெய்ஞானம்!..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. ஆலயங்கள் பெருகிவரும் நாளில் அருமையான இடுகைகள் அறிமுகம் .சிறந்த தொகுப்பு.

    ReplyDelete
  5. மெஞ்ஞானத் தெளிவு பெற்று விஞ்ஞானம் போற்றி நல்வாழ்வு வாழ்வோமாக

    மெய்ஞானப்பகிர்வுகள் சிறப்பானவை.பாராட்டுகள்.!

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே.!

    அனைத்து ஆன்மிகப்பதிவுகளுடன், என் வலைத்தளப்பதிவினையும் வலைச்சரத்தில் ஒன்றாக்கி, என்னையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.!

    இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் வலைச்சரப்பதிவர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நன்றி Yarlpavanan Kasirajalingam, Thulasidharan V Thillaiakathu, துரை செல்வராஜூ, Sethuraman Anandakrishnan, இராஜராஜேஸ்வரி, Kamala Hariharan !!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது