ஆதலால் நண்பர்களே...
➦➠ by:
ஆடுமாடு
ஆதலால் நண்பர்களே...
தமிழாசிரியராக வேண்டும் என்கிற கனவில் (ஒரு காலத்தில்) இருந்தவனை, வலைச்சரத்துக்கு ஆசிரியராக்கியிருக்கிறது இந்த ஆசிரியக் குழு. அவர்களுக்கு நன்றி. நிறைய எழுத நினைத்து, ஆழியூரானின்
கரகாட்டம்: வயசுப் போனால் பவுசு போச்சு என்கிற மனதை தொடும் கட்டுரை உட்பட பல நல்ல கட்டுரைகளை மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்து வைத்தும், இன்னும் சில பதிவுகளை சுட்ட விடாமல் சுரண்டிப் போனது என் வியாபார நெருக்கடி. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ என்கிற கேள்வி எப்போதும் போலவே இப்போதும் மனதுள்.
நொடிப்பொழுதும் எழுத்தும் வாசிப்புமாக இருந்த என் இயல்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக ஓய்ந்து போயிருந்தது. பெரிதாக காரணம் எதுவுமில்லை. எரிச்சல்தான். வலைப்பதிவுகள் அந்த ஓய்வுக்கு ஓய்வளித்து, அதிகமாக படிக்க வைத்திருக்கிறது.
வலைப்பதிவை தொடங்கிய தருணங்களில் தத்தக்கா பித்தகாவென தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு, பல தகவல்களை தந்த துளசி டீச்சர், வெயிலான் , நண்பர் பைத்தியக்காரன் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் நன்றி. அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க...
தமிழாசிரியராக வேண்டும் என்கிற கனவில் (ஒரு காலத்தில்) இருந்தவனை, வலைச்சரத்துக்கு ஆசிரியராக்கியிருக்கிறது இந்த ஆசிரியக் குழு. அவர்களுக்கு நன்றி. நிறைய எழுத நினைத்து, ஆழியூரானின்
கரகாட்டம்: வயசுப் போனால் பவுசு போச்சு என்கிற மனதை தொடும் கட்டுரை உட்பட பல நல்ல கட்டுரைகளை மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்து வைத்தும், இன்னும் சில பதிவுகளை சுட்ட விடாமல் சுரண்டிப் போனது என் வியாபார நெருக்கடி. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ என்கிற கேள்வி எப்போதும் போலவே இப்போதும் மனதுள்.
நொடிப்பொழுதும் எழுத்தும் வாசிப்புமாக இருந்த என் இயல்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக ஓய்ந்து போயிருந்தது. பெரிதாக காரணம் எதுவுமில்லை. எரிச்சல்தான். வலைப்பதிவுகள் அந்த ஓய்வுக்கு ஓய்வளித்து, அதிகமாக படிக்க வைத்திருக்கிறது.
வலைப்பதிவை தொடங்கிய தருணங்களில் தத்தக்கா பித்தகாவென தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு, பல தகவல்களை தந்த துளசி டீச்சர், வெயிலான் , நண்பர் பைத்தியக்காரன் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் நன்றி. அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.