Showing posts with label
குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி).
Show all posts
Showing posts with label
குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி).
Show all posts
கூடுதல் முகம் - 2
வலைப்பூ உறுப்பினர்களுக்கு வணக்கம். இது எனக்கு ஒன்பதாவது இடுகை என நினைக்கிறேன். இதுவரை என்னை ஊக்கம் அளித்துத் தோள் தட்டியமைக்கு மிக்க நன்றி. இப்பொழுதும் இவ்விடுகையில் ஆறு வலைப்பூக்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்துள்ளேன்.
பயணங்கள் தவிர்க்க முடியாதவை. சில பயணங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும். சில பயணங்கள் அற்புதமானவையாக இருக்கும். அவ்வகையில் தன் பயணச் சுவடுகளை சுவைகாகப் பதிவு செய்துள்ள சந்தனமுல்லைக்குப் பாராட்டுகள். நீங்களும் சென்றால் கல்கத்தாவைக் கண்டு களிக்கலாம்.
2015 ஆம் ஆண்டின் நிறம் என்னவாக இருக்கும் என்ற வியப்பான பதிவொன்றைக் காண நேர்ந்த்து. ஆட்டின் வருடமாக கொள்ளப்படுகிற இவ்வாண்டில் நீங்கள் இருக்க வேண்டியது சமையற்கூடமாம். வித்தியாசமான பதிவு. போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.
பொதுவாகப் புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்ட்து. நானும் ஐயா முத்துநிலவனின் புத்தகம் ஒன்றை இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் மதிப்பிடுகையை எதிர்பார்த்து அவரும் சோர்ந்து போனார். ஆனால் ஷாஜஹானிரகுமானின் புத்தக மதிப்புரை என்னை வெகுவாய்க் கவர்ந்த்து. கருணாகரனின் காகிதப்படகில் சாகசப் பயணம் என்ற புத்தகத்தை நான் வாங்குவதெனத் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் ?
"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும் “
கவிதை எழுதும் இயல்பினை நற்கவிதையில் கூறிய இரமணியின் இன்கவி பெறலாம் யாரும் என்னை மிகவும் கட்டிப்போட்டது. மரபின் பக்கமும் கொஞ்சம் இளைப்பாறுதல் நம் கடமையென்றே கருதுகிறேன்.
இப்படியும் இருக்கலாம்
ஒரு ஆங்கில படத்தில் வருமே.
ஒரு மனித குரங்கு ஒரு பெண்ணை விரும்பி அவளுக்காக நகருக்கு வந்து உயிரை விடுமே.
அது போல் இதுவும் எதாவது காதல் விவகாரமோ என்னவோ?
எதற்கும் இதற்கு ஒரு விசாரணை கமிசன் அமைக்கலாம்.
சமீபத்தில் ஒரு பள்ளியில் சிறுத்தை ஒன்று புகுந்ததை இப்படி வேடிக்கையாகச் சொல்லும் பொன்னியின் செல்வன் கார்த்திகேயனின் பதிவு வேடிக்கையாக மட்டுமல்ல. நகையாகவும் இருந்த்து. இளைப்பாற இங்கே செல்லலாம்.
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்க விஜீவால் தான் முடியும். இலக்கிய முரண்களை எடுத்தாண்டு தீர்வை நோக்கிய பயணத்திற்கு தமிழை இட்டுச்செல்லும் பாங்கிற்குப் பாராட்டுகள். திருக்குறள் உரையாசிரியர்களின் காலவரலாற்றை நானும் புரட்டிப்பார்த்து அவரின் வினாவிற்குத் தீர்வு சொல்லக் கிளம்பிவிட்டேண். நீங்களும் தானே?
அன்புடன்,
சி.குருநாதசுந்தரம்.( பெருநாழி )
மேலும் வாசிக்க...