07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சே.குமார். Show all posts
Showing posts with label சே.குமார். Show all posts

Sunday, September 8, 2013

மனசு பேசுகிறது - அறிந்த முகங்கள்

வணக்கம் உறவுகளே...

இன்று வலைச்சரப் பங்களிப்பின் நிறைவு நாள்... ஒரு வாரகாலமாக நல்லதொரு பணி... நிறைய வாசிக்கக் கிடைத்தது. சரி வாங்க இன்றும் சிலரைப் பார்த்துட்டு வருவோம்...

பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகங்களே இவர்கள்... புதியவர்களை அறிமுகம் செய்யாமல் அறிந்தவர்களின் அறிமுகமா என்று நினைக்கலாம்... வரும் புதியவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியவர்களைத்தான் இதுவரை அறிமுகமாகக் கொடுத்தேன்.  இன்றும் சில முக்கியப் பதிவர்கள் உங்களுக்காக...

இவரைப் பற்றி முதல்பதிவிலேயே சொல்ல நினைத்தேன். சரி பின்னால் பார்க்கலாம் என்று விட்டு வைத்தேன். மனிதர் நான் சென்ற எல்லாத்தளங்களிலும் பின்னூட்டத்தில் முதலாவது ஆளாய் சிரிக்கிறார். இவருக்கும் நான்கைந்து புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றி ஆளு வந்திருக்காரான்னு பார்த்து புடிக்க வேண்டியதாப் போச்சு. தொலைக்காட்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எப்படி சின்னத்திரையினருக்கு DD’ யோ அப்படி பதிவர்களுக்கு இவர்DD’. இந்த முறை ஊருக்குப் போகும்போது இவரைப் பார்க்க நினைத்திருந்தேன் வீட்டுப் பணிகளால் சந்திக்க முடியவில்லை. அடுத்தமுறை சந்திக்க வேண்டும். பிரபலம்... சந்திக்க நேரம் ஒதுக்குவாரா தெரியவில்லை....

யாரென்றுதானே கேட்கிறீர்கள்... வேறுயாருமில்லைங்க தனபாலன் சார்தான்...

எழுத்தாளர் பெயர்
தனபாலன்
வலைப்பூ


அவரின் படைப்புக்கள் சில உங்கள் பார்வைக்கு...

"எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்... விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்;இடிவோம்...ஓஓஒஓஒ... பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே...கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுவதும் அவனது வீடு ... கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு...."


அது சரி ஐயா... பயப்படாமல் பேசணுமில்லே, அதே சமயம்தான் படிச்சதையெல்லாம், விழாவிலே வந்தவங்க எல்லாருமே ஏற்றுக் கொள்கிற மாதிரி எடுத்து சொன்னாத்தானே, அவரு நன்றாக் படித்தவர் என்று சொல்ல முடியும்...?


அடுத்து நாம் பார்க்க இருக்கும் பிரபலம் ஈரோட்டில் பாய்ந்த கிராமத்து வேரான சமூக அக்கறை கொண்ட அன்பு அண்ணன் திரு. கதிர் அவர்கள். அருமையான கவிஞர், பொதிகைத் தொலைக்காட்சியின் கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை நிகழ்ச்சியில் தனது கவிதையால் நிகழ்ச்சி நடத்தும் திரு.ரமணன் அவர்களைக் கவர்ந்து தொடர்ந்து சில வாரங்கள் பொதிகையை ஆக்கிரமித்தவர். சிறந்த படைப்பாளி, நீங்களும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களைக் கவரும் இவரது கவிதைகள்....

எழுத்தாளர் பெயர்
ஈரோடு கதிர்
வலைப்பூ

“மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்

கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று
அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்...”


“எங்க வீட்டுப் பக்கம்

பிக் சிக்இருக்கு!
எங்க வீட்ல
நாட்டுக்கோழி இருக்கு!
அங்கே மேரிப்ரவுன் கூட
இருக்குதே!
எங்க அப்பத்தா
கல்லக்கா சுட்டுத்தருமே!”



இந்தப் பிரபலம் கோயில்களின் நகரமாம் கும்பகோணத்துக்காரர். வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லி எழுத்தை நேசிக்கும் ஒரு அருமையான எழுத்தாளரும் எனது அன்பு அண்ணனுமான திரு. ஆர்.வி.சரவணன் அவர்கள்... இவரது படைப்புக்கள் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை...


எழுத்தாளர் பெயர்
ஆர்.வி.சரவணன்
வலைப்பூ


பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.”



“இந்த (அவசர கால)  இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக சென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது இது.இவ் வரிகள் வார்த்தை அலங்காரத்திற்காக  சொல்லப்பட்டதல்ல. நான் எப்போதுமே எந்த ஒரு சிறு நிகழ்வானாலும் அதை ஒரு தனி அழகியலுடன் தள்ளி நின்று ரசிப்பதுண்டு. அப்படி ரசித்ததை தான் இப்படி குறிப்பிடுகிறேன்”



அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் பிரபலம் ஒரு பெண் எழுத்தாளர். கோவையிலிருந்து கிளம்பி தில்லி சென்று பதிவுலகில் மையம் கொண்டிருப்பவர். இவரது கணவரும் அருமையான எழுத்தாளர்தான். நிறைய பயணப் பகிர்வுகளை சுவராஸ்யமாகப் பகிர்வதில் அண்ணன் கில்லாடி என்றால் எழுத நினைத்ததை நகைச்சுவை கலந்து எழுதுவதில் அண்ணி கில்லாடி. இவர் செய்யும் புத்தக விமர்சனங்கள் அருமையாக இருக்கும் சென்று பாருங்கள்... எழுத்தால் உங்களைக் கட்டிப் போட்டுவிடுவார்.

எழுத்தாளர் பெயர்
ஆதி வெங்கட்
வலைப்பூ
கோவை2தில்லி


“தோழியிடத்தில் இரவல் வாங்கி (புத்தகங்களைத் தேடி வேட்டை தான்!) சமீபத்தில் நான் வாசித்த இரண்டு புத்தகங்களும் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. நீயா? நானா?” கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமாவும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற புத்தகங்களும் தான் அவை.. இரண்டுமே சுய முன்னேற்ற புத்தகங்கள்
ரங்கனின் தெப்போற்சவம், கொள்ளிடக்கரையில் திருவெள்ளறைப் பெருமாள், உத்தமர் கோவில் பெருமாள், அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோரின் திவ்ய தரிசனம். பங்குனித் திருவிழாவில் கருட வாகனம், கற்பக விருட்சம், பூத்தேர், பங்குனித் தேர், சேர்த்தி சேவை எனரங்கனின் உற்சவங்களுக்கு பஞ்சமா என்ன? வருடம் முழுவதுமே அவனுக்கு விதவிதமான அலங்காரங்களும், ஊர் சுற்றி வருதலும் தானே வேலை….


அடுத்தவரும் ஒரு பிரபல பெண் பதிவர்தான்... பொறுத்தது போதும் பொங்கி எழு சுனாமியாய் எனச் சொல்லும் இவர் மிகச்சிறந்த எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் புத்தகங்களாக உருப்பெற்றுள்ளன. இவரின் கவிதைகள் உயிரோட்டமானவை. எல்லாருக்கும் தெரிந்த பதிவர்தான்... புதியவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பதிவர்...

எழுத்தாளர் பெயர்
கோவை மு.சரளா
வலைப்பூ
பெண் என்னும் புதுமை


“வெயில் சொரியும்
மதிய வேலை
மரங்களின் அச்சுப்பிரதிகளை
ஒட்டி வைத்திருக்கும்
தார்சாலையில்
நடக்கிறேன்
எனக்குள் வழியும்
வியர்வை ஊற்றுகளின்
தொடுகை உணர்ந்து
சிலிர்த்து அசைகிறது
நிழல் இலைகள் ....”



“இழப்பின் துயரம்
தாங்கமுடியாமல்
தரையிறங்க துடிக்கும்
இதயத்தை இன்னும்
வலுவாக தாக்குகிறது
இன்னும் ஒரு இழப்பு”

பிரபலங்களைப் பார்த்தாச்சு இனி சில நட்புக்களுக்காக...

நண்பன் தமிழ்க்காதலனின் சீரிய முயற்சிக்கு காயத்ரி அக்காவும் தங்கை அனிதாவும் துணை நிற்க தமிழ்க்குடில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற குடிலின் முதல் முயற்சியாக சிலம்பூர் கிராமத்தில் குடிலுக்கென அலுவலகமும் பொது நூலகமும் கட்டி முடிக்கப்பட்டு வரும் 9ந்தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கென ஒரு வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகளைப் பகிர்ந்து வருக்கிறார்கள். சென்று பாருங்கள்... அதிலிருந்து சில பகிர்வுக்கான இணைப்புக்கள் இதோ...

“1,159 அங்கத்தினர்களைக் கொண்ட தமிழ்க்குடில் குழுமம் துவங்கிய ஓராண்டில் தமிழ்க்குடில் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்க்குடில் அறக்கட்டளை 2012 மே மாதம் 21ஆம் திகதி பதிவு(பதிவு எண் 18 IV 12) செய்யப்பட்டு, 2012 ஜுன் 10ஆம் திகதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்க்குடிலின் முதல் ஆண்டுவிழாவில் புலவர் திரு.புலமைப்பித்தன், ஐயா.சிலம்பொலி செல்லப்பா, கவிஞர். திரு.அறிவுமதி, கவிஞர் திரு.இராஜ.தியாகராஜன், கவிஞர்.திரு.இரவா.கபிலன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.”



“தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.”


மற்றொரு செய்தி நம்ம DDயும் ரூபனும் இணைந்து தீபாவளி சிறப்புக்கவிதை போட்டி வைத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்புப் பகிர்வை இருவரது தளத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள்.  அதை அப்படியே கீழே தருகிறேன்...



“தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்வாருங்கள்…  வாருங்கள்

போட்டிக்கான தலைப்பு

1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி

போட்டியின் விமுறைகள் :

1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 20/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com

ரூபனின் தளத்தில் வாசிக்கச் சில...

உன் மல்லிகைப் பூ வாசனையில்
ஒரு நாளில் மது போதை ஏறியது
காதில் நீ அணியும் ஜீமிக்கிதான்
உன் தலை அசைவுடன்-உன்
சம்மதத்தை காட்டுமடி
சிங்கார சென்னையில் நீ வசிக்கிறாய்
சிங்கார உடையணிந்து
என் சிந்தனைக்கு அழகு காட்டுதடி
சில காலம் பொறுத்திரு



“ஜீவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான் அவன் படிக்கும் பள்ளிக்கூடம் ஒரு கலவன் பள்ளிக்கூடம் அங்கு ஆண்களும் பெண்களும் கல்வி கற்க்கும் பள்ளிக்கூடம் ஜீவன் 10ம் வகுப்பு படிக்கும் போது மிகவும் அழகானவன் நல்ல மா நிறம் கொண்டவன் அவனுடைய பேச்சும் நடையும் பெண்களை மெதுவாக கவரும் அப்படி அழகு படைத்தவன் ஜீவன்...”


இனிச் சில உங்களுக்காக....

கவர்ந்த கவிதை

"தமிழ் முழக்கம்"

"வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள்
ஒன்றாய்ச் சேருங்கள்
கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள்
வெற்றி பூணுங்கள்
தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்
நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம்
வீரம் காட்டுவோம்"
-கவியோகி சுத்தானந்த பாரதியார்
சிவகங்கை மாவட்டம்


வீடியோ




எனது குறுங்கவிதை


பணத்தால் பூஜை
சிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!


சரிங்க...  நான் விடைபெறும் நாள் இன்று.... எல்லாருக்கும் நன்றிங்க.... தொடர்ந்து வாசகனாய் இத்தளத்தில் இருப்பேன்...மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் நிறைவாய் செய்ய முயற்சிப்பேன்.

நன்றி.

மனசு தொடர்ந்து மனசில் பேசும்
-‘பரிவை’ சே.குமார்.
மேலும் வாசிக்க...

Saturday, September 7, 2013

மனசு பேசுகிறது – கிராமத்து வைத்தியம்

எல்லாருக்கும் வணக்கம்.

எப்படியிருக்கீங்க.. நேற்றைய பகிர்வு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். கழுத்துவலி உங்கள் அன்பால் இப்போது பரவாயில்லை... இருந்தும் இன்னும் வலி இருக்கிறது. நாளை முதல் ஓய்வுதானே... இன்னும் ஒரு பதிவுதானே... சமாளிச்சிடலாம்.. சரி வாங்க இன்றைய பதிவர்கள் சிலரைப் பார்த்து வாழ்த்தி வருவோம்....



ன்னடா கிராமத்து வைத்தியத்தைப் பத்தி சொல்லப் போறானேன்னு நினைக்கிறீங்களா... கழுத்து வலிக்கு படியை வைத்துப் படுத்தால் நல்லது என ராஜராஜேஸ்வரி அக்கா சொல்லியிருந்தாங்க. உண்மைதான்... அப்படியெல்லாம் ஊரில் இருக்கும் போது செய்து சரி பண்ணியிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பிருந்த கிராமத்து வைத்திய முறைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன.

கழுத்து வலி வந்தால் தலையணை வைக்காமல் நிலைப்படிக்கல்லில் தலைவைத்துப் படுக்கச் சொல்வார் அம்மா. அப்படி செய்தால் காலையில் எழுந்திருக்கும் போது வலி பறந்து போயிருக்கும். வறட்டு இருமலாக இருக்கிறதா கொஞ்சம் மிளகை எடுத்து காரம் அதிகமாக தெரியாமல் இருக்க அரிசியுடன் சேர்த்து மென்று வாய்க்குள் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். மூச்சுக்குத்துப் பிடித்துக் கொண்டால் எங்க ஊர் மெய்யரு வீட்டிற்கு வந்து முதுகில் உலக்கையை வைத்து உருட்டி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து கந்தர் சஷ்டி கவசமோ மாரியம்மன் தாலாட்டோ கொஞ்சம் வாய்க்குள் முணுமுணுத்து அந்த சொம்பை ஒரு சாப்பாட்டுத் தட்டில் கவிழ்த்து வைத்துவிடும், தட்டோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சொம்பு தட்டை விட்டுப் பிரியும் போது மூச்சுக்குத்தும் பறந்துவிடும்.

எங்க வீட்டில் எங்க அக்காக்கள், அண்ணன்களின் பிள்ளைகள் எல்லாருக்கும் பிறந்திருக்கும் போது காலையில் உடலெல்லாம் நல்லெண்ணை தேய்த்து கண்ணுக்குள் எண்ணைய் ஊற்றி வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள். காலையில் வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து நன்றாக இடித்துச் சாறெடுத்து ஒரு சங்கு புகட்டி விடுவார்கள். ஆனால் எனது குழந்தைகள் பிறந்த போது இந்தச் சோப்புதான் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குறித்துக் கொடுத்துவிட்டார்கள். பாட்டி வைத்தியம் எல்லாம் கிடைத்தாலும் இன்றைய சூழல் அதை விரும்பவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது... நாங்கள் என்றால் நான், எங்க அக்கா, தம்பி... ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததும் அம்மா மூவருக்கும் அரைடம்ளர் வீட்டில் ஆட்டி எடுத்த வேப்பெண்ணையை குடிக்கச் சொல்லிக் கொடுப்பார். வாயில் ஊற்றிவிட்டு சீனியை அள்ளி கொட்டிக் கொள்வோம். குடிக்கவில்லை என்றால் அடிதான். மாதம் ஒருமுறை தமிழ் மருந்துக்கடையில் பேதி மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து ஊரணிக்கும் வீட்டுக்கும் நடக்க வைத்துவிடுவார்கள். பாவக்காய், பூண்டுக் குழம்பெல்லாம் சாப்பிட்டே ஆகவேண்டும். இப்ப எனது பிள்ளைகள் இரவில் நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள்.

பழைய சாதம், வெங்காயம், எருமைத் தயிர் இருந்தால் போதுமெனக்கு... கல்யாணத்துக்கு முன்பு வரை நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் எனக்காக காலையில் பலகாரம் போடமாட்டார்கள். அவனுக்கு கஞ்சிதான் பிடிக்கும் என்று அவர்களும் எனக்காக கஞ்சி குடிப்பார்கள். ஆனால் இப்போ இங்கு கஞ்சி வைக்க முடிவதில்லை... ஊருக்குப் போனாலும் ஒட்டல் முதலாளி மகள் காலை இரவு டிபன் போட்டு நம்மையும் அதையே சாப்பிட வைத்துவிடுவார். கஞ்சி என்றால் நல்லா வளர்த்திருக்காங்க கஞ்சி கஞ்சியின்னு அப்படின்னு சொன்னதும் இட்லியோ தோசையோ கஷ்டப்பட்டு உள்ள போகும். ஒரே சந்தோஷம் பாப்பாவும், விஷாலும் அப்பா போல கஞ்சிப் பிரியர்கள்தான்... விஷால் சோறு மோரு என்று அடம் பண்ணி சாப்பிட்டு விடுவான்.


“அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடே ரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த.தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்…”

எழுத்தாளரின் பெயர்
சென்னைபித்தன்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்... சொல்ல முடிந்தது அதில் கொஞ்சம் எனச் சொல்லும் ஐயாவின் பகிர்வுகள் ரசனையாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் நகைச்சுவையாகவும் இருப்பது சிறப்பு. அவரது பகிர்வுக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். நீங்களும் ஐயாவை வாசித்துப் பாருங்கள்.



“சில நொடிகள் யோசித்தாள். இந்த இளைஞனை நம்பலாமா? குழந்தையை கடத்தும் கும்பல் இப்படி டீக்காக உடை அணிந்து கடத்த ஆரம்பித்து விட்டார்களோ? முகத்தை பார்த்தால் நம்பலாம் போல தான் இருக்கிறது. ஆனால்?? இந்த காலத்தில் யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லையே. எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, தன் ரெயின் கோட்டை சுதா மீது சுற்றிவிட்டான். “வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு சிரமம்…

எழுத்தாளரின் பெயர்
உமாநாத் (விழியன்)
வலைப்பூ
கவர்ந்த பதிவு
வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள் இது என்று சொல்லும் இவர் பல தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரர். கவிதைகள், கதைகள், சிறுவர்கதைகள் என எல்லாம் எழுதுகிறார். இவர் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர். வாசியுங்கள் விழியனின் பக்கத்தைவிட்டு உங்கள் விழிகள் அகலாது.

****** 
“இருவரும் நிறைய கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே!...”

எழுத்தாளரின் பெயர்
வித்யா சுப்ரமணியம்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான வித்யா அம்மா அவர்கள், இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார். அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, தமிழக அரசு விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது, இலக்கிய சிந்தனை விருது என விருதுகளை வாங்கிக் குவித்திருகிறார். இவரின் படைப்புக்களைப் படித்துப் பாருங்கள்… கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துப் போகும்.




"எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே...."

எழுத்தாளரின் பெயர்
அண்ணாகண்ணன்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
மரணத்தின் கண்களில் மையெழுதுவேன் நான் வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப் பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை மெய்யுண்ணும்; மெய்யினையோ நானுண்ணுவேன் என்று சொல்லும் அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியரும் யாஹூ தமிழ்த் தளத்தின் ஆசிரியருமான இவர் கவிதைகள் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

******

"ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
உடலாகி ஊரும் கிளைகள்
இசைக்கருவு அற்றுப்பாடி
இலைகளில் தாளம் போட்டு
எழுப்பிடும் சலசல சப்தம்
என்றேனும் ஓய்ந்தது இல்லை..."

எழுத்தாளரின் பெயர்
பிரியா
வலைப்பூ
கவர்ந்த பதிவு
எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான் என்று சொல்லும் இவரின் கவிதைகள் ஆழமான அழகான கருத்துச் செறிவு கொண்டவை.




“மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்...”

எழுத்தாளரின் பெயர்
நாஞ்சில் மனோ
வலைப்பூ
கவர்ந்த பதிவு
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம் என்று சொல்லும் மனோ அண்ணன் ஒரு பிரபல பல்சுவைப் பதிவர். எல்லாப் பக்கமும் கலந்து கட்டி எழுதுவார். இவருக்கும் மலையாளக்கரை ரொம்பப் பிடிக்கும் என்பது பதிவிலேயே தெரிகிறது. முகநூலில் இப்ப அண்ணன்தான் சூப்பர் ஹீரோ... முகநூல் அப்டேட்ஸ் அள்ளிக் கொட்டிக் கொண்டே இருப்பதால் வலைத்தளம் கொஞ்ச நாள் வறட்சியாய் இருக்கிறது. விரைவில் துளிர்க்கும்.... படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க இல்லேன்னா அருவாளைத் தூக்கிருவாரு...




“எந்த வகை சாதம், குழம்பாக இருந்தாலும்  ஊறுகாய் என்று ஓன்று இருந்தாலே போதும். சாதாரணமாக எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களை வீட்டில் போடுவார்கள். பூண்டு ஊறுகாயை கடைகளில் வாங்குவார்கள். அதில்  பூண்டு வேகாமல் நறுக்கென்று இருக்கும். நாமே பூண்டு ஊறுகாய் செய்யும் முறையை சொல்கிறேன்…”

எழுத்தாளரின் பெயர்
அகிலா
வலைப்பூ
கவர்ந்த பதிவு
இந்தத் தளத்தின் ஆசிரியர் அகிலா அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் வலைச்சரத்தை அலங்கரித்தவர் என்பதால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இவரின் தளங்கள் மொத்தம் 9 என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் தீனி போட்டு கட்டிக்காக்கும் இவரின் திறமை பாராட்டப்பட வேண்டியது. சமையல் குறிப்புக்களுக்கு தாராளமாக அடுப்படிகுள் நுழையலாம்.




“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..”

எழுத்தாளரின் பெயர்
துரை செல்வராஜூ
வலைப்பூ
கவர்ந்த பதிவு
அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் எனச் சொல்லும் ஆசிரியர் அவர்கள் ஆன்மீகப் பதிவுகளை அழகாகப் பகிர்கிறார். ஆன்மீகம் விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ இது.




“கிரிக்கெட் மிகச் சிறந்த விக்கட் காப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் கில்கிறிஸ்ட் டெஸ்ட் போட்டிகளில் 416 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு அதிக ஆட்டமிழப்புகளை செய்த விக்கெட் காப்பாளர்களில் இரண்டாம் நிலையிலும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 472 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட விக்கட் காப்பாளராக திகழ்கின்றார்.துடுப்பாட்ட வீரராகவும் விக்கட் காப்பாளராகவும் அணித்தலைவராகவும் பல துறைகளில் சாதித்த கில்கிறிஸ்ட் தனது இறுதிப்போட்டியில் பந்துவீசி முதல் பந்திலேயே விக்கட் வீழ்த்தி பந்துவீச்சாளராகவும் பதிய பரிமாணம் எடுத்துள்ளார்.”

எழுத்தாளரின் பெயர்
டினேஷ்சாந்த்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
விருப்பு வெறுப்புக்கு அப்பால் விதி தந்த பாதையிலே நகர்ந்திடும் பல கோடிப் பேரில் நானும் ஒருவன் என்று சொல்லும் இந்த யாழ்ப்பாணத்து மாணவர், விளையாட்டு பற்றிச் சொல்லச் சொன்னதால் அவரையே சொல்லிவிட்டேன்.. மற்றபடி தமிழ் இலக்கியம் அறிவியல் என எல்லாச் சுவையிலும் எழுதுகிறார். படியுங்கள்... நீங்களும் ரசிப்பீர்கள்.

  



“குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல..”

எழுத்தாளரின் பெயர்
சந்திரவதனா
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
தாய்ப்பால் முதல் முதலுதவி வரை எல்லாவற்றையும் இந்தத் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். குழந்தைகள் பற்றிய கட்டுரைகளுக்கு படிக்க வேண்டிய தளம், இது.


கோவில் வீடும் ரேசன் கார்டும்

கண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

அடப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.
கவிஞர். பா.ராஜாராம்
வலைப்பூ : கருவேல நிழல்
சிவகங்கை மாவட்டம்




'எழுத்து என்னும் கருவறை' என்ற தலைப்பில் திரு. வைகோ அவர்களின் பேச்சு. கேட்டுப்பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்...







ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!

இன்றைய அறிமுகங்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்று இங்கு சொன்ன பதிவை மட்டுமன்றி அவர்களது எல்லாப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்து சந்தோஷமாய் மீண்டும் வாருங்கள்... அதற்குள் நானும் சென்று இன்னும் சில பதிவர்களோடு வருகிறேன்...

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்.

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது