07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜி. Show all posts
Showing posts with label ஜி. Show all posts

Friday, September 14, 2007

வகைப்படுத்தாதவை...

அரசியல், சினிமா, கதை, கவிதை, ஆன்மீகம், பெண்ணியம், போட்டி, பாடல்கள், அனுபவம், அறிவியல், தத்துவம், செய்முறை விளக்கம் என்று பல துறைகளில் பல பதிவர்கள் எழுதுகிறார்கள். சண்டை, வாக்குவாதம், நட்பு என்று பல கோணல்களில் பதிவர் வட்டம் விரிந்து கிடக்கிறது.

நான் எழுத‌ ஆர‌ம்பித்த‌ கால‌த்தில் எழுதிக் கொண்டிருந்த‌ சில‌ ப‌திவ‌ர்க‌ளை இப்போது காண‌வில்லை. அவ‌ர்க‌ளுள் ஒருவ‌ர் ம‌ன‌சுக்குள் ம‌த்தாப்பு திவ்யா. சிறுக‌தைக‌ளும், தொட‌ர்க‌தைக‌ளும் எழுதிக் கொண்டிருந்த‌வ‌ர் பெண்க‌ளை க‌வ‌ர்வ‌து எப்படி? போன்ற‌ சில‌ ப‌திவுக‌ளையும் எழுதி திருமணமான, ஆகாத ஆண்களுக்குப் பல குறிப்புகளை வழங்கிவந்த அவர் சென்ற வருட இறுதியில் பதிவுலகை விட்டுச் சென்றவர்தான் இன்னமும் திரும்பவே இல்லை.

வானிலை மாற்றம்போல், தமிழ் பதிவுலகில் அவ்வபோது சலனத்தை ஏற்படுத்திச் செல்லும் சிலப் பதிவுகள், அதனைத் தொடர்ந்துப் பல பதிவுகள் வர காரணமாக இருக்கும். கவிதாவின் "ஆண்கள் என்ற மிருகங்கள்", பாலபாரதியின் ஒளிந்து ஒலிக்கும் சாதியக் குரல் போன்ற பதிவுகள் அப்போதைய பலப் பதிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.

"அந்த" மாதிரி விசயங்களை தொடுவதற்கும் அதனை கையாள்வதற்கும் தமிழ் பதிவர்களுக்கு தனியாக தைரியம் வேண்டும். மூத்தப் பதிவரான ஜி.ராகவன் தன்னுடைய கள்ளியிலும் பால் தொடர் கதையில் இதனை அருமையாகக் கையாண்டிருப்பார். அதே போல் சிறுகதைகளுக்கென்ற ஆர்வத்தைத் தூண்டும் தனித்திறமையைத் தன்னகத்தேக் கொண்டிருக்கும் குப்புசாமி செல்லமுத்துவின் "அண்ணியின் அரவணைப்பில்" கதை பிரமிப்பைத் தரும் ஒன்று.

வானுக்குள் விரியும் அதிசயங்கள், படம் எடுக்கலாம் வாங்க போன்ற பலக் கருத்துள்ள பதிவுகளை எழுதி வருகிறாட் சி.வி.ஆர்.

பாலபாரதியை கலாய்க்கும் பா.க.ச, கைப்புள்ளையை கலாய்க்கும் சங்கம் தவிர்த்து, கவுண்டரின் டெவில் ஷோவையும் பதிவர்களைக் கலாய்க்கும் ஒரு உத்தியாகக் கண்டது தமிழ் பதிவுலகம். ராமின் வெட்டுகாரு செப்பண்டி, வெட்டியின் ர.ரா போன்ற பதிவுகளில் தனிமனித கலாய்த்தலின் நகைச்சுவையைப் பார்க்கலாம்.

இலங்கைத் தமிழர்கள் அவர்களது பேச்சு நடையில் எழுதுவது போல் வட்டார வழக்கில் எழுதுபவர் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் ஆசிப் அண்ணாச்சி. அவரது எழுத்துக்களின் நையாண்டி அனைவரையும் சிரிக்க வைக்கும்.

சில நேரங்களில் பதிவுகளையும் மிஞ்சும் அளவிற்கு அதற்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்க வைப்பதாக இருக்கும். தம்பியின் எதிர்பால் ஈர்ப்பு பதிவுக்கு வந்தப் பின்னூட்டங்கள் பார்த்தாலே புரியும். மின்னுது மின்னலின் தலைமையில் கும்மிப் பின்னூட்டங்களும் சில நேரங்களில் சிரிக்க வைப்பதாக இருக்கும். கும்மிக்கென்று தனிப் பதிவே ஆரம்பித்தார்கள் என்றால் கும்மியின் மகிமை புரியும்.

தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணையாமல் தனியாக பதிவெழுதி வரும் சிலப் பதிவர்களும் நல்லப் பல பதிவுகளை தமிழ் பதிவுலகிற்குத் தந்திருக்கிறார்கள். ட்ரீம்ஸ் என்ற பதிவர் கவிதைகளில் மட்டுமல்லாமல் கவிதை எழுத குறிப்புகள், தத்துவம் என்று பலப் பதிவுகளை எழுதியுள்ளார். அதே பதிவர் வட்டத்தில் இருக்கும் பொற்கொடி, அம்பி போன்ற‌ பதிவரின் பதிவுகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். தனியாக இயங்கும் பதிவர்கள் அவர்களுக்கென்று ஒரு தனி வட்டம் அமைத்ததுமட்டுமல்லாமல் ப்ளாக் யூனியன் என்ற ஒரு கூட்டுப் பதிவும் ஏற்படுத்தி எழுதி வருகிறார்கள். நானும் அந்த யூனியன்ல இருக்கேன் :)

இதுக்கு மேல உங்கள கஷ்டபடுத்த விரும்பல. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, September 12, 2007

வகைப்படுத்தியவை...

நகைச்சுவைப் பதிவுகள்:

பதிவெழுத ஆரம்பித்த புதிதில் வெட்டிப்பயலின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு, அவரது அனைத்துப் பதிவுகளையும் புரட்டி புரட்டிப் பார்த்தேன். அதில் எத்தனையோ நகைச்சுவைப் பதிவுகளி இருந்தாலும் சில மிகவும் ரசிக்க வைத்தது.

கவுண்டமணியின் பரம ரசிகரான வெட்டி, கவுண்டரையும், செந்திலையும் கணினி துறை ஊழியர்களாக அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கும் "கம்ப்யூட்டர்க் காரன்" தொடர் மிகவும் ரசிக்க வைத்த ஒன்று.

அதைப் போல தன் நண்பர் ஒருவரின் நகைச்சுவை அனுபவங்களை "கோழியின் அட்டகாசங்கள்" என்று தொடராக வெளியிட்டப் பதிவுகளும் அருமை.

தான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபொழுது, கவுண்டரைக் கொண்டு சினிமா நடிகர்களைக் கலாய்த்து ஒரு புதிய கலாய்த்தல் அத்தியாத்தையைத் தொடங்கி வைத்தார் "கவுண்டரின் டெவில் ஷோ" என்ற தொடரின் மூலம்.

பதிவர் தம்பியின் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, அவரது சின்ன வயசு அனுபவங்களை "வாலிப வயசு" என்ற தொடரில் குறிப்பிட்டுருந்தார். அந்த தொடரும் நகைச்சுவைப் பதிவுகளின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.

நகைச்சுவை என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பதிவர் அபிஅப்பா. ஆரம்பத்தில் அவரது பின்னூட்டங்களை சில இடங்களில் பார்த்திருக்கிறேன். திடீரென நகைச்சுவைச் சரவெடிக் கொளுத்தி பதிவுலகில் தனக்கென ஒரு பெயரை மிகவும் வேகமாக எட்டிப் பிடித்தார்.

அவரதுப் பதிவுகளில் சில‌

அஞ்சு ஜார்ஜும் அபி பாப்பாவும்
பத்மா சும்பரமணியம் போட்டிக்குத் தயாரா?
நாந்தான் பத்த வச்சேன்.
இன்னும் பல...

தேவின் எழுத்துக்களில் மிகவும் பிரமித்துப் போனவன் நான். அவரது நகைச்சுவைப் பதிவுகளின் நடை மிகவும் அருமையாக இருக்கும். அவரது ஆபிஸர் தொடரோ, சங்கத்தின் கைப்பிள்ளை கலாய்த்தல் பதிவுகளோ, சிரிக்க, சிரிக்க வைக்க மட்டுமே செய்யும்.

நகைச்சுவைக்கென்றே தனியாக பதிவுகள் வெளியிட்டு வரும் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் பதிவுகளை ஒன்றிரண்டுப் பதிவுகளைக் குறிப்பிட்டு கூற முடியாது. கூட்டுப் பதிவு என்பதால் அதில் வரும் பெரும்பான்மையானப் பதிவுகள் நகைச்சுவை மிக்கவை. அதிலும் கைப்பிள்ளையை மையமாக வைத்து வரும் பதிவுகளெல்லாம் நகைச்சுவைப் பட்டியலின் தலையங்கமாய் இருக்கும்.

நகைச்சுவை உணர்வில் பெண்களும் சலைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வரும் பயமறியா பாவையர்கள் சங்கத்தின் நகைச்சுவைப் பதிவுகளும் படிக்கும் சில நேரத்தில் நமது மனசை லேசாக்கி விடும்.

இன்னும் ஏராளமாக நகைச்சுவைப் பதிவுகள் இருக்கின்றன். இப்போதைக்கு ஞாபகத்தில் இருந்தது மட்டுமே இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

பெண் பதிவர்கள்:

தமிழ் பதிவுலகில் பரதரப்பட்ட பெண் பதிவர்கள் இருகின்றனர். அதில் சிலப் பெண் பதிவர்களின் பதிவுகளை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவற்றுள் சில.

நகைச்சுவைப் பதிவெழுதவே அவதாரம் எடுத்ததுபோல் கிட்டத்தட்ட தன்னுடைய அனைத்துப் பதிவுகளிலும் நகைச்சுவை உணர்வுகளைக் கொட்டிக் கொடுத்தவர் பதிவர் கண்மணி. சுப்ரமணி, பிச்சுமணி, கிச்சுமணி, அம்புஜம் மாமி என்ற புதிதாக பல வேடங்கள் உருவாக்கி அவர்களை மையமாக வைத்து எழுதிய அனைத்துப் பதிவுகளும் சிரிக்க வைக்கும்.

இம்சை அரசி என்ற பெயர் வித்தியாசமாக இருக்கவே அவருடையப் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன். அதில் "என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே" பதிவின் கடைசி வரியில் வாய்விட்டு சிரித்தே விட்டேன். கவிதை, கதை என்ற பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஒரு நாவலாசிரியர் என்பதும் பதிவுலகம் அறிந்த ஒன்று.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் பல பேர் தமிழை மறந்து திரியும் வேளையில், மலேசியாவில் பிறந்து வளர்ந்து, தமிழில் பதிவெழுதுகிறார் மை ஃபிரண்ட். வ.வா. சங்கத்தின் போட்டிக்காக எழுதிய தொடர் மிகவும் நன்றாக இருந்தது.

பலக் கவிதைப் போட்டிகளில் வெற்றுப்பெற்றுள்ள வேதா கவிதைக்கென்று தனியாக ஒரு பதிவையையே உருவாக்கி எழுதி வருகிறார்.

மின்னல் வேகத்தில் பதிவெழுதும் காயத்ரி கவிதையில் மட்டுமல்ல, நகைச்சுவைப் பதிவிலும் கலக்குவார். அவருடைய பரட்டைப் படத்தின் விமர்சனத்தைப் பார்த்தாலே தெரியும்.

யாருக்காவது பிறந்தநாள்னா, வாழ்த்து சங்கத்துல மட்டுமில்ல, ஜி3யுடைய பதிவுலையும் நீங்க வாழ்த்துப் பதிவு பாக்கலாம்.

இதயம் தொட்ட சிறுகதைகள்:

பத்திரிக்கைகளில் வரும் சிறுகதைகளையும் முஞ்சும் பல சிறுகதைகளை தமிழ் பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றுள் இப்போது என் நினைவில் வந்த சில.

கப்பிப் பயலின் எழுத்தில் ஒரு பழுத்த எழுத்தாளனின் நடைத் தெரியும். அவரின் பல சிறுகதைகளை ரசித்துப் படித்துள்ளேன். அவற்றும் இறப்பும் இறப்பு சார்ந்ததும் கதை கண்களங்க வைத்த ஒன்று.

இதயம் தொடும் பல சிறுகதைகளை பதிவர் தம்பி எழுதியுள்ளார். அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்ததே, சின்ன சின்ன விசயங்களையும் விவரிக்கும் அவரது திறன். அவரது மாணிக்கம் பொண்டாட்டி, அன்பின் நிராகரிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்.

அப்பாவின் காதலை மையமாக வைத்து எழுதிய இம்சையரசியின் காலம் கரைந்தாலும் கதையும் இதயம் தொடும் ஓர் அருமையான கதை.

இறந்து போன ஓர் சொந்தத்தின் நினைவுகளை எடுத்தியம்பும் வகையில் ராம் எழுதிய மாணிக்க மலர் சிறுகதை.

இவ்வளவுதாங்க இப்போதைக்கு ஞாபகத்துல இருக்குது. பதிவுலகோடு தற்போது அதிக தொடர்பில்லாத காரணத்தால் நிறைய பதிவுகள் நினைவில் இல்லை. அதனால சின்னப் பையன்னு மன்னிச்சு விட்டுடுங்க. :)
மேலும் வாசிக்க...

Monday, September 10, 2007

வலைச்சரம் வழியாக திரும்பவும் பதிவுலகில்...

வலைச்சரவெடி கொளுத்த என்னைய இந்த வாரத்துக்குக் கூப்டுருக்காங்க. கிராமத்து முக்குல பம்பரம் விட்டுக்கிட்டு இருந்த பயல, சர்வதேச மைதானத்துல கிரிக்கெட் விளையாட விட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் நானும் இப்ப இருக்கேன்.

பதிவு ஆரம்பிச்ச புதுசுல முழு நேரமும் பதிவெழுதி, படிச்சிட்டு இருந்த நான், அப்புறம் வேலைச் சுமையும், இணைய வசதியின்மையும் காரணமாக ஒரு சின்ன வட்டம் போட்டு அத மட்டும் படிச்சிட்டு, அப்பப்ப பதிவும் எழுதிட்டு வந்தேன். இப்ப ஒரு இரண்டு மாத காலமா அதுவும இல்ல. சுத்தமா பதிவு பக்கமே இப்ப வர்றதில்லை. மூன்று மாசத்துக்கு முன்னமே வலைச்சரம் தொடுக்க அழைப்பு வந்ததால, இதையாவது எழுதிடலாம்னு முடிவுப் பண்ணி எழுதிட்டு இருக்கேன்.

ஆரம்ப பதிவ ஒரு அறிமுகப் பதிவா எழுதச் சொன்னதால, இந்தப் பதிவு ஒரு தற்பெருமை பதிவு :)

நான் எப்படி பதிவெழுத ஆரம்பிச்சேன்னு என்னுடைய இருபத்தைந்தாவது பதிவுல சொல்லிருக்கேன்.

நான் எழுதுன பதிவுகளிலேயே எனக்கும் பிடித்த, பதிவு நண்பர்களும் பாராட்டிய சிலப் பதிவுகளின் சுட்டியை இங்க தர்றேன்

ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த ஒரு சீனப் பாடல் இணையத்தில் கிடைத்த போது, அதற்கு தமிழில் பாடல் எழுதலாம் என்று நினைத்து எழுதிய வரிகள்

அப்போதைய தேன்கூடுப் போட்டிக்காக எழுதிய ஒரு சிறுகதை. நானே மிகவும் ரசித்து எழுதிய கதை.

வ‌.வா. சங்கத்தின் பதிவுகளைப் படித்து சிரித்து மகிழ்ந்து நானும் கைப்புள்ளையை மையமாக வைத்து ஒரு பதிவு எழுதினேன்.

லொல்லு சபா நடையில் ஏதாவது ஒரு படத்தைக் கலாய்க்க வேண்டுமென்று தேடியபோது அப்போதைய சமீபத்தில் பார்த்த வல்லவன் படம் மூளையைக் குடைய அதனை வைத்து எழுதிய பதிவு.

வெயில் படம் பார்த்தத் தாக்கத்தில் சின்ன வயசு விளையாட்டு ஞாபகங்கள் நினைவில ஆட அதையே ஓர் பதிவாகப் போட்டேன்.

கிராம நடையில் ஒரு சோகக் கதையைச் சொல்லலாம் என்று ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தமிழ் பதிவுச் சூழலுக்கு ஏற்றவாறு தலைப்பிட்டு வெளியிட்டக் கதை.

அப்போதைய சிக்காகோப் பயணப் பதிவு.

பதிவுலகில் என்னுடைய முதல் காதல் கவிதை.

கல்லூரி நாட்களில் காப்பக குழந்தைகளோடு கொண்டாடிய புது வருட கொண்டாட்டத்தின் நினைவலைகள்.

ஒரு காதல் கதை.

நகைச்சுவை நடையில் எழுதிய லாஜிக்கில்லாத ஓர் கதை.

அமெரிக்காவில் நடைப்பெற்ற பொங்கல் திருநாள் விழாவிற்கு சென்றபோது விளைந்தப் பதிவு.

எயிட்ஸால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட வலியில் எழுதியக் கவிதை.

கூகுல் ரீடரைப் பற்றிய ஓர் அறிமுகப் பதிவு.

முன்னச் சொன்னச் சீனப் பாடலின் ஒலிவடிவம். மருதத்தின் குரலில்

இந்தியா திரும்பியபோது அமேரிக்க மாப்பிள்ளைகளின் அமர்க்களங்களைப் பற்றிய ஓரு நகைச்சுவைப் பதிவு.

திருநெல்வேலி பக்கம் நடைபெறும் அறுவாச் சண்டையை மையமாக வைத்து எழுதிய கதை.

இன்றைய இளைஞர்கள் (நேற்றைய இளைஞர்களும் இப்படித்தான்) மனதில் எப்போதும் குடியிருக்கும் கவிதை.

சுற்றுலாச் சென்றபோது எடுத்தப் புகைப்படங்கள்.

இதோட என்னுடைய தற்பெருமை பதிவ முடிச்சிக்கிறேன். அடுத்தப் பதிவுல சந்திக்கலாம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது