07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ரஞ்ஜனி நாராயணன். Show all posts
Showing posts with label ரஞ்ஜனி நாராயணன். Show all posts

Sunday, October 14, 2012

விடைபெறுகிறேன்: வணக்கம்!




இன்றுடன் 7 நாட்கள் முடிவடைந்து விட்டன. இப்போது நினைத்துப்

பார்த்தால் வேகமாகப் போய்விட்டது போலத் தோன்றுகிறது.


அறிமுகம் என்று சொல்வதைவிட இந்த 7 நாட்களும் நான்

வலைச்சரத்திற்காக தேடித்தேடி (பி)படித்ததை உங்களுடன் பகிர்ந்து

கொண்டேன் என்பதே சரியாக இருக்கும். தெரிந்த முகங்களுடன், தெரிந்து

கொண்டதை  பகிர்ந்து கொண்டேன்.

********************************************************************************************


வலைபதிவுலகத்தில் மற்ற இணையதளங்களை அறிமுகம் செய்ய

என்றே  ஒருவர்  இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்தவர்தான் திரு 

சைபர்சிம்மன்.  'இணைய உலகிற்கான உங்கள் சாளரம் எனது

வலைத்தளம்' என்கிறார் திரு சிம்மன்.

‘எமக்கு தொழில் கவிதை' என்னும் பாரதியின் வாக்கை போல நான்

எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன். இணைய உலகில்

கண்டு வியக்கும், ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு

பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும்

பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன்.’ என்று சொல்லும்

இவரது தளத்தை வேறு ஒரு இணையதளம் அறிமுகப் படுத்திப்

இருக்கிறது!


திருநெல்வேலிக்கே அல்வா! திருப்பதிக்கே லட்டு!


********************************************************************************************



கல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு என்று

தன்னைப் பற்றி சாக்பீஸ் வலைத்தளம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறது.

போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கும், மாணவர்களுக்கும்

பயன்படக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.


********************************************************************************************

 
நம் எல்லோருக்குமே நம் மாணவப் பருவம் என்பது பசுமையான 

நினைவுகளைத் தரும். அப்போதிருந்த பசுமை இப்போது இருக்கிறதா?


நினைத்து பாருங்கள்...நாம் சிறுவயதில் பஸ்சில் செல்லும்போது கூடவே

ஓடி வரும் மரங்களை. பஸ் பயணத்தில் நமக்கு வெயில்

தெரியா வண்ணம் காற்று வருவதற்கு அந்த மரங்கள் காரணம்என்கிறார்

திரு சுரேஷ்குமார்.



நெடுஞ்சாலையோர புளிய மரம்...! பற்றி இவர் சொல்வதைப் படியுங்கள்:


‘மரங்களில் புளியங்காய் அடித்து தின்னும் சிறுவர்கள் எல்லாம் இன்று

ஹோட்டல்களில் டேபிள் துடைக்க சென்று விட்டனர். ஆயா

மரத்தினடியில் சுட்ட வடைகள் எல்லாம் இன்று மரமே இல்லாததால்

காகம் கொத்த வழியில்லாமல் போய் விட்டது, சிட்டு குருவிகள் எல்லாம்

இன்று லேகிய டப்பாக்களில் மட்டுமே பறக்கின்றன...’

.முக்கியமாய் என் மகனோடு காரில் செல்கையில் எந்த மரமும் கூட ஓடி

வருவதில்லை. அவனும் ஏன் மரங்கள் பின்னோக்கி ஓடுகின்றன என்று

கேட்பதுமில்லை ?!!?


ஒரு கூடுதல் செய்தி: இவரும் எங்களூரில் கிடைக்கும் தோசை பற்றி

எழுதியிருக்கிறார் படியுங்கள்! இந்த தோசை எங்கே கிடைக்கும் என்று

வீதி வரைபடத்துடன் விலை என்ன என்றும் எழுதி இருக்கிறார்.




(வலைச்சர வாரத்தை தோசையில் ஆரம்பித்து, தோசையில் முடித்த

பெருமை என்னையே சேரும்!)


********************************************************************************************


விடியாத இரவுகள், தொலைந்து போன கனவுகள் என்று எல்லாக்

கவிதைகளும் கிடைக்காததைப் பற்றிப் பேசுகின்றனவே, எத்தனையோ

இரவுகள் விடிந்திருக்கின்றனவே, நாம் காணாத பல கனவுகள்

பலித்திருக்கின்றனவே அவை பற்றி ஏன் யாரும் கவிதை

எழுதுவதில்லை என்று இந்த ஒரு வாரமாக என்னுள் ஒரு கேள்வி

எழுந்து கொண்டே இருக்கிறது. கவிதைக்கு அழகு சோகமோ?


கவிதை சோகமாக இருந்தால் ரசித்துவிட்டு மறந்தும் போகலாம்.

ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டிய வயதில் சோகமே

வாழ்க்கையானால்?


‘எனது 9-ஆம் வயதில் இந்நோயின் பாதிப்பு என்னை கொஞ்சம்,கொஞ்சமாக

ஆக்கிரமித்து கடந்த 10 வருடங்களுக்கு மேல் என்னை வீட்டிலேயே

முடக்கி போட்டு வைத்திருக்கிறது.' என்கிறார்  மாற்றுத் திறனாளி.


இவ்வலைப்பூவில் நான் என் வாழ்வில் கண்ட நிகழ்வுகளையும், உணர்ந்த

வலிகளையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.ரொம்ப சோகமா இருக்கும்னு 

பயப்படாதீங்க. அவ்வப்போது நகைச்சுவை பதிவுகளும், தொழில்நுட்ப

பதிவுகளும் இடம் பெறும் (பேசிக்கலி ஐ எம் எ காமெடி பெர்சன்) :)

என்கிறார் இவர்.



நாட்டின் 5 முட்டாள்கள்  முகநூலில் படித்த இந்த விஷயத்தை பகிர்ந்து

கொள்வதன் மூலம் தான் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று

நிரூபித்து இருக்கிறார் இவர்.

********************************************************************************************


இவரைப் பற்றிப் படித்த பின் மனிதனின் உண்மையான ஊனம் எது? என்று 

நமது பின்னூட்டப் புயல் எழுதியதன் உண்மையான பொருள் புரிகிறது.


இவரைப் பற்றி தெரியாதவர்கள் வலைபதிவுலகில் இல்லவே இல்லை

என்று அடித்துச் சொல்லலாம். அத்தனை வலைபதிவர்களும்

சரியாச் சொன்னீங்க! என்பார்கள்.


வலைப்பதிவுலகில் இவரது எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மட்டுமல்ல

இவரது மீசையும் கூட பிரபலம்!


திருமதி மஞ்சு பாஷிணியின் இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு திரு

அப்பாதுரை எழுதிய பின்னூட்டம் காண்க!


தனபாலனுடைய இன்னொரு முக்கியமான feature ஐச் சொல்லாம

விட்டீங்களே? என்னமா மீசை வளர்த்திருக்கிறார்! . இதைவிட

நேர்த்தியான மீசையை நான் பார்த்ததே இல்லை. அவரை நேரில்

சந்திக்கும் பொழுது அசல் தானா என்று மென்மையாக இழுத்துப்

பார்த்துவிட வேண்டும் என்று தோன்றவில்லை? பதிவுலகில் இப்படி

யாராவது மீசை வைத்திருக்கிறார்களா?’


மிகவும் அருமையான மனிதர். இவரை  குறிப்பிடாவிட்டால் இந்த  வார

வலைச்சரம் முழுமை பெறாது.


********************************************************************************************

அருமையான மனிதரைப் பற்றிப் பேசியவுடன் அருமையான தன்

பாட்டியைப் பற்றி பேச  வருகிறார்  திருமதி  கீதமஞ்சரி


என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச்

சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும்

சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும் 

அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே,

கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை

இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில்

தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.


உங்கள் கட்டுரை எனக்கு என் பாட்டியை நினைவு படுத்தியது.


********************************************************************************************


தன் அம்மாச்சியை நினைத்து கீதமஞ்சரி நெகிழும்போது ஒரு கடிதம் -

-என்னவனுக்கு என்கிறார் திருமதி பத்மா.



‘இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின்

இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு

உண்போம்.


‘பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே

நீரில் திளைப்போம்.’



‘பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே

சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும்  வாசித்து பார்ப்போம்.’


என்று கவிதையில் கடிதம் வடிக்கிறார் திருமதி பத்மா.


********************************************************************************************


அன்பான கணவருக்கு துணைவி எழுதும் கற்பனை வளம் நிறைந்த கடிதம்

மேலே இருப்பது. ஆனால் கீழே இருக்கும் கடிதம் நிஜத்தைச்

சொல்லுகிறது.


ஆசையில் ஓர் கடிதம்..., 

 'ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ, நீ என் பென்சிலை

பிடிச்சுக்கிட்டு “ங்கா”ன்னு சொன்னே. அது எனக்கு ”அக்கா”ன்னு கேட்டுச்சு.


 அப்போதாண்டா செல்லம் உன்மேல் எனக்கு பாசம் வர ஆரம்பிச்சது.

‘என்னதான் நாம சண்டை போட்டு வீட்டை அதகளம் பண்ணி.., அடி

வாங்குனாலும் அடுத்த பிறவியிலயும் நீயே எனக்கு தங்கச்சியா

பொறக்கனும். உன் இம்சைகளை நான் தாங்கனும்ன்னு சாமிக்கிட்ட

வேண்டிக்குறேன்.’


‘ஆனா, உன் இம்சைலாம் நான் எப்படி அக்காவா தாங்குறேன்னு ஒரே ஒரு

பிறவியில் நீ எனக்கு அக்காவா பிறந்து என் இம்சைகளை நீ தாங்கனும்.’


இப்படிக்கு தூயா 

எழுத்துத் திறமை கூட இரத்தத்தில் ஓடுமோ? திருமதி ராஜியின்  செல்ல 

மகள்  தான் செல்வி தூயா!

******************************************************************************************** 


ஒருவாரமாக பலரின் பதிவுகளை படித்துக் கொண்டு வருகிறேன். ஒரு

பதிவரின் மன நிலை எப்படி இருக்கும் என்று காட்டுகிறார் திருமதி

ஸ்ரவாணி


‘கருத்தை ஆவலாய் எதிர்நோக்கையில்


முதலில் முந்திக் கொண்டு வந்த


உங்கள் சொந்த அனுபவமா


என்ற கத்திரிக் கேள்வி


நம் நொந்த அனுபவமானது’


எல்லாப் பெண்களுக்கும் இந்த ‘நொந்த’ அனுபவம் உண்டு!


********************************************************************************************


திரு வை.கோ. அவர்கள் ‘கொஞ்சம் தண்ணீர் விடுங்கோ’ என்று கேட்டுக்

கொண்டார்.


இந்த முறை பெங்களூரில் மழை ரொம்பவும் கம்மி என்பது வருத்தப்பட

வேண்டிய நிஜம். என்ன செய்வது?


‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்

என்று மழைக் கடவுளை வேண்டிக்கொண்டு

மறுபடியும் வா என்று மழையையே கேட்டுக் 

கொள்ள வேண்டியதுதான்'

என்கிறார் பாலச்சந்தர். இவரது


மழை கவிதை இதோ:


சொட்ட சொட்ட பெய்தாலும்

சரம் சரமாய் பெய்தாலும்


சின்ன சின்ன உயிருக்கும்


உலகாளும் உயிருக்கும்


உயிர் துளி நீ தானே


.......................................

......................................


மழையே மனம் குளிர

மறுபடி ஒரு முறை வருவாயா!


இவரது இன்னொரு கவிதை:


இந்நாளில் பாரதி

........................................

.........................................


சுதந்திர இந்தியாவை

வளம் பெற்ற இந்தியாவை

காணவந்த கருவிழியில்

ஊழல் பிசாசையும்

ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்

ஒற்றுமை இல்லா மக்களையும்


காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!


 இன்றைய இந்தியாவின் அவலத்தை பாரதியின் பார்வையில் தனது

கவிதையில் வடிக்கிறார் இவர்.


********************************************************************************************



விடை பெறும் நேரம் என்பது எப்போதுமே கொஞ்சம் வேதனையான

விஷயம் தான்.


ஒரு வாரமாக பல்வேறு எழுத்துக்களை படித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப்  பொறுப்பின் மூலம் நான் நிறைய அறிந்து கொண்டேன் என்பதே

உண்மை.


நான் யாரையெல்லாம் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தேனோ 

அவர்களைப் பற்றியெல்லாம் திருமதி மஞ்சு பாஷிணி பேசி விட்டார்.

என்ன செய்வது? புது முகங்களாக தேடித்தேடி வலைபதிவுலகமாகிய 

‘திக்குத் தெரியாத காட்டில்’ தேடி அலைந்தேன்.



இதற்கு எனக்கு உதவிய திரு பாஸ்டன் பாலா, திரு ஓஜஸ், திரு தமிழ் 

திரு விஜயன், திரு செழியன், திருமதி சித்ரா, திருமதி பட்டு, திருமதி

காமாட்சி திரு ரூபன், டாக்டர் ராஜண்ணா, திரு பாலச்சந்தர் இவர்கள்

எல்லோருக்கும் என்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.



இந்த, வாழ்வில் ஒருமுறை கிடைக்கக் கூடிய அறிய வாய்ப்பினைக் 

கொடுத்த திரு ‘அன்பின்’ சீனா அவர்களுக்கும், திரு வைகோ

அவர்களுக்கும் மறுபடி மறுபடி என் நெஞ்சார்ந்த நன்றிகள்!



இந்த மாதம் கடைசி வாரத்தில் திருமணம் புரிய இருக்கும் திரு

மயிலனுக்கு வாழ்த்துக்கள்!


வரும் வாரம் பொறுப்பு ஏற்கவிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!        

மேலும் வாசிக்க...

Saturday, October 13, 2012

ஆறாம்நாள்: அருமை வணக்கம்!




இன்றைக்கு ஒரு நாள், நாளை – இரண்டு தினங்களில் எத்தனை பதிவர்களை 

அறிமுகப்படுத்தி வைக்க முடியும்? யாரை சொல்வது, யாரை விடுவது? என்னடா இது 

எனக்கு வந்த சோதனை? என்று திருவிளையாடல் பாலையா மாதிரி சொல்லிக் கொண்டே 

ஆறாம் நாள் என் வலைபதிவு பயணத்தை தொடங்குகிறேன்.



*******************************************************************************



என்னைப் போலவே தஞ்சைக் கவிதை எழுதும் திருமதி கிருஷ்ணப்ரியா வும் முதலில் 

சற்றுக் குழம்பித்தான் போனாராம்.



‘எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று 

தெரியவில்லை.....!

அடுத்து வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாகக்

கூற ஆரம்பித்தேன்,

இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல’

முதலில் குழம்பி இப்போது தெளிவாயிட்டேன் என்கிறார்.



குழப்பம் தீர்ந்தபின் ஆனந்தம் தானே? எது ஆனந்தம் என்பது 

அவரவர் மனநிலையைப் 

பொறுத்தது, இல்லையா?


இவரது ஆனந்தத்தை பரிந்துகொண்ட நாம் இவரது ஆதங்கத்தையும் புரிந்து 

கொள்ளுவோம்


‘பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே 

தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம்  சிந்திக்கிறோம்.’

இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது என்று நாம் யோசிக்கிறோமா? அரசு மருத்துவமனைகளில்

நடப்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது, அரசை விமர்சிப்பதற்காக.... என்றால் தனியார் 

மருத்துவமனைகளில் தவறுகள் நடப்பதில்லையா? ஏன் அது பற்றி எதுவும் வெளியில் 

வருவதில்லை?


இந்தாப் பாருப்பா, உனக்கு சக்கரை வேற இருக்கு, சரியா புண்ண கவனிக்கலன்னா கால் 

போயிடும் ஜாக்கிரதை என்று எடுத்துச் சொன்னபடி காயத்தை சிரத்தையாக சுத்தம் 

செய்து கட்டி விடும் ஊழியர் என்று அரசு மருத்துவமனைகளிலும் நல்ல இதயங்கள் 

இருக்கத் தான் செய்கிறது. என்ன செய்வது?




*******************************************************************************




இவருக்கு என்ன தடுமாற்றம்?









‘சில நேரங்களில், வாழ்க்கை எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர

உடல் வாகுடன், பெரிய வியாதிகளோ உபாதைகளோ  இல்லாமல், மும்முரமாக வாழ்ந்து

கொண்டிருந்தேன். அதில் அலட்டல்  என் வயதில் ஒரு  மருந்து மாத்திரை இல்லாமல்

இருப்பது என்ற வீண் பெருமை வேறு..’


திடீரென்று.....



‘இரவு நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி 

கால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன.’



என்ன செய்தார் என்பதை மிகவும் சரளமான நடையில் தனது அனுபவம், அதிலிருந்து

தெரிந்து கொண்டவை என  எழுதும் திருமதி பட்டு தமிழில் அதிகம் எழுதாமலிருப்பது

தமிழ் வலைபதிவு உலகத்திற்கு  பெறும் இழப்பு.



இவரிடமும் “தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.


இவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் ஓர் நல்ல பதிவைப் படித்தவுடன் தனது 


தளத்தில் இணைப்பு கொடுத்துவிடுவார். ஆங்கில பதிவுகளில் செலுத்தும் கவனத்தை தமிழ் 


பதிவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.





*******************************************************************************




இந்தக் குழப்பம், தெளிவு, ஆனந்தம் இதுக்கெல்லாம் காரணம் உங்கள் பக்கத்தில் நிற்பவர் 


என்கிறார் திரு சிவஹரி






கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக 

இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது 

உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.




*******************************************************************************


சிவஹரி யின் கட்டுரை படித்து விட்டு வெளியே வந்தால்







ஆஹா .. அப்படிச் சொன்னால் கண்டிப்பாகப் படிப்போம். சொல்ற பேச்ச கேட்கறப் 


பழக்கமே கிடையாதே...(அப்புறம் உங்க குழந்தை மட்டும் எப்படி உங்க பேச்சை கேட்கும்?)


இவர் தொகுத்துக் கொடுக்கும் ‘கதம்பம்’ 


நன்றாக இருக்கிறது.





திரு வெங்கட் நாகராஜ் வெள்ளிக்கிழமைதோறும் அளிக்கும் ப்ரூட்சாலட் போல! 





*******************************************************************************


ராஜபாட்டையில் நடந்து, கதம்பத்தை முகர்ந்து, ப்ரூட்சாலட் ருசித்துவிட்டு வந்தால் 



‘என்னவளே, அடி என்னவளே...’ பாட்டு கேட்கிறது. யார் என்று பார்த்தால் தமிழுக்குத் 


தொட்டில் கட்டும் தமிழ் ராஜா 









அன்பு நிறைந்த முகம்

ஆசை குறைந்த மனம்

பொன்னின் திறந்த குணம்

தேனின் இனிய மணம்....




இவருக்கும் ஒரு கவலை: கேட்கலாமா என்னவென்று?




எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின் 

எதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது

என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.


*******************************************************************************



இதே போலவே சமுதாயத்தைப் பற்றிக் கவலைப் படும் வெங்கட் ஸ்ரீனிவாசன் சொல்வது 


என்ன?


‘சாதாரணமாக ஒரு நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால் 

இறக்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு 

மாற்ற வேண்டியத் தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.



தற்பொழுது, சுமார் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக் 

காத்திருக்கிறார்கள். ஆனால் வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் 

தான் செய்யப்படுகின்றன.’


கையளவு மண் என்று எழுதும் அவரது  உடல் உறுப்பு தானம் பற்றிய  கட்டுரை படிக்க 

வேண்டிய கட்டுரை.





படித்து விட்டு நின்று விடாமல் செயல்படுத்தவும் முன் வர வேண்டும்.



இவரது பறவைகள் பலவிதம் படித்து விட்டு நீங்கள் என்ன பறவை என்று தெரிந்து 

கொள்ளுங்கள்!



*******************************************************************************


இதெல்லாம் வேண்டாம் எனக்கு வானொலி கேட்டலும் ஊருக்குச் 


செல்லுதலும் ரொம்பப் பிடிக்கும் என்கிறார் திரு அறிவு.






 சங்கீதம் தந்து வந்த ரேடியோ, முத்துவேலுக்கு சந்தேகம் ஒன்றையும் தந்தது."அது எப்புடி 


பாடுது?அந்த பேட்டரில எழுதியிருக்கத வச்சு பாடுதா?" என்பதே அது!



மணிக்கு   ஏற்பட்ட சந்தேகம்    வேறுமாதிரியானது. ரேடியோவை  வேலு விற்க 

முற்படுகையில்,"அது எனக்கு வேண்டாம், நல்ல நல்ல பாட்டெல்லாம் உன்வீட்டுலயே 

பாடிட்டே,என்கிட்டயும் அதுமாறி பாடுமா? எத்தினி நாளுக்கு பாடும்?" என்றார். 

பாடுபொருள்  ஒன்றை விற்க படாதபாடு பட்டவர் அவராகத்தான் இருப்பார்.








ஏன் ஊருக்கு செல்லுகிறோம் என்பதற்கு இவர் கொடுக்கும் 

விளக்கம்:


‘பிறந்த ஊருக்கும் பிழைக்கும் ஊருக்குமான ஒப்பீடுகள் 

ஒருவரை தன்  ஊருக்கு 

வருவதற்கான ஆர்வத்தை ஒருவருக்குள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தி உடையது. 

அப்படித்தான் அது என்னை   ஊருக்கு அனுப்பி வைத்திருந்தது. தீபாவளிக்குப் பிறகு 

இம்முறை வருவது பொங்கலுக்கு.’





*******************************************************************************


நிஜம் தான். ஊருக்குப் போவதும், கதைகள் பேசுவதும் தரும் இன்பத்திற்கு ஈடு இணை 

உண்டா என்று கேட்பவர் திருமதி ராஜி





தான் ஒரு கதை சொல்லி! என்கிறார்.



"பதினாறு வயசுப்பொண்ணுக்கு கதை சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே" என்று 

கேட்ட தன் தோழிக்கு இவர் சொன்ன பதில் நம் எல்லோரையுமே சிந்திக்க வைக்கிறது:


"கதை சொல்றதுக்கும் கேக்கறதுக்கும் கூட வயசெல்லாம் உண்டா என்ன?"


"எல்லாருக்கும் புத்தகங்கள் படிக்கற வழக்கம் இருக்கறதில்லை. அப்படியே இருந்தாலும் 

கூட இப்ப இருக்கற இந்த தலைமுறைகள்ல முக்கால் சதவிகிதம் பேர் ஆங்கில 

புத்தகங்கள் மட்டுமே படிக்கறாங்க. ஹாரி பாட்டரையும் எனிட் ப்ளைட்டன் ஸ்டோரிசும் 

படிக்கற அளவு இளந்தலைமுறைகள் எத்தனை பேர் பொன்னியின் செல்வனையோ 

வியாசர் விருந்தையோ படிப்பாங்கனு நினைக்கற?”


கலக்கிடீங்க ராஜி! நானும் கூட உங்களை மாதிரி ஒரு கதை சொல்லி தான்! திருமணம் 

ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற என் பெண்ணுக்கும், என் பிள்ளைக்கும் – புதிதாக 

வந்திருக்கும் மாட்டுப் பெண்ணிற்கும் கதை சொல்பவள் நான்!



*******************************************************************************



ஊருக்குப் போவது, கதை சொல்லுவது, நம் அனுபவத்தை பதிவு செய்வதும்  நம் மனதை

மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது சரியே! ஆனாலும் சில சமயம் ‘ஹாய் 

நலமா?’ என்று கேட்க ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?



‘நான் மருத்துவம் என்ற கூட்டிற்குள் நிறைவாக வாழும் ஒரு குட்டிக் குருவி. 63 


வயதிலும் 26 வயதினனான உணர்வுதான்.’ என்ற அறிமுகத்துடன் நானிருக்கிறேன் 

என்கிறார் டொக்டர் திரு முருகானந்தன்.


இவர் வெறும் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நமது மனநலத்திற்கும் வைத்தியம் 

சொல்பவர்.


'ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக விமரிசனங்களை எதிர் கொள்ளுவது எப்படி?




விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான். 

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. 

விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் 

அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.





விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் 

உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் 

தவிர்க்க வேண்டும்.



*******************************************************************************

பழம் விழுங்கிய பறவை

பறக்கிறது

ஒரு மரத்தை சுமந்து கொண்டு.


-குகை மா. புகழேந்தி 

மீண்டும் நாளை......!
 









மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது