07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label விசா. Show all posts
Showing posts with label விசா. Show all posts

Saturday, October 23, 2010

எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஞாயம்.

சமீபத்தில் மாஜி எம்.எல்.எ ஒருவர் வருமான வரி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் போதைபொருள் வழக்கும் நிலுவையில் உள்ளதாம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் போலீஸிடமிருந்து தப்பித்து சுதந்திரமாக நடமாடியிருக்கிறார். இதில் உச்சம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டு போலீஸின் பிடியிலிருந்து தப்பித்த ஒரு கைதி தொடர்ந்து எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது தான்.
எம்.எல்.ஏ வின் பென்ஷனை நிறுத்த அரசுக்கு அதிகாரமோ சட்ட வழிமுறையோ இல்லையாம்.

அதே சமயம் ஒரு அரசாங்க ஊழியன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டால் அவரது ஊதியம் பென்ஷன் என்று சகலமும் நிறுத்தப்படுகிறது. உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையின் பெயரில் அவர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதே போல் அரசு துறையில் பணியாற்றும் எவரேனும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்.

என் குடும்ப நண்பர் ஒருவர் அரசு ஊழியர். அதிகாரிக்கு கார் ஓட்டியாக பணியாற்றி வந்தார். ஒரு குடும்ப தகறாரில் இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொலை முயற்சி என்றும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். வழக்கு நிலுவையில் உள்ளது. இன்னும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படவில்லை. அதே சமயம் கைது செய்யப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று வாடகை கார் ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் முன்பே அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தின் சட்ட வழிமுறை வகை செய்கிறது.

ஆனால் ஒரு மாஜி எம்.எல்.ஏ குற்ற வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஒழிய அவரது பென்ஷன் தொகையை நிறுத்தி வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லையாம்.

இது இரட்டை குவளை முறையை விட அப்த்தமானதா இல்லையா?

இனி அறிமுகங்கள்:

கம்ப்யூட்டரில் தண்ணீர் வரவைக்க வேண்டுமா?


சுனாமி பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட். ரோஸ்விக் சென்னை வந்திருந்தபோது சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

ஊர்காசு. பழைய நினைவுகளை கிளறும் கவிதை.

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்


வாத்தியார் சொன்னா கேட்டுக்கணும். இந்த இடுகையின் கடைசி வரி எனக்கு புரியவேயில்லை.


லஞ்சம் வாங்க புது டிப்ஸ் ரெடி. லஞ்சம் வாங்குமுன் குளித்து சுத்தமாக இருப்பது நல்லது. காரணம் மாட்டிக்கொண்டால் ஓரிரு நாள் குளிப்பது கஷ்டம் தான்..


தென்கொச்சி சுவாமிநாதன் இல்லாத குறையை தீர்த்துவைக்கும் இவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. கவிதையே கவசம்.அவரைப்பற்றி இன்று ஒரு தகவல்
மேலும் வாசிக்க...

Friday, October 22, 2010

Popular Among The Popular

நான் ரசித்த சில பிரபலங்களின் இடுகைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். நித்தியானந்தா பற்றிய நித்திய நினைவுகளை சாரு தன் நித்திரையிலும் பிளாகிலும் அழித்துவிட்டதால் அந்த நவரச பதிவுகளை இங்கே அறிமுகப்படுத்த முடியாத கடமை தவறிய பதிவராக நான் வெட்கப்படுகிறேன்.

இவை தற்போது நினைவிலிருந்த பிரபலங்களின் பதிவுகள் மட்டுமே. இன்னும் நான் ரசிக்கும் நிறைய பிரபலங்கள் நிறைய பிரபல பதிவுகள் மிச்சமிருக்கிறதென்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

**********

நான் தொடர்ந்து பலமுறை ஒரு பதிவை வாசித்திருக்கிறேன் என்றால் அது சுஜாதா பற்றி உண்மைதமிழன் எழுதிய இந்த பதிவு தான். உண்மையில் இந்த கட்டுரையை முதல்முறை வாசித்துமுடித்தவுடன் உடனடியாக அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் போல் இருந்தது. அவரது பதிவுகள் நீளமாக இருப்பினும் இதுவரை போர் அடித்ததில்லை.

என் இனிய சுஜாதா

*******

உங்களில் யார் அடுத்த நயன்தாரா என்று வளரும் நடிகைகளான புடவைகட்டிய வெள்ளரி பிஞ்சு தமன்னாவிடமும் , புடவையே கட்டாத புண்ணிய புதல்வி அனுக்ஷாவிடமும் வேறு வழி இல்லாமல் ஸ்ரேயாவிடமும் கேட்டு தொலைத்தபோது எல்லோரும் கோரஸாக அடுத்த நயன்தாரா யாருன்னு தெரியல ஆனா அடுத்த ரமலத் நயன்தாரா தான் என்றார்கள்.



*********

எனக்கு அந்த கதை ஞாபகத்தில் இருக்கிறது. கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறுவன்...ஒரு டெலிபோன்....காண்டம் வாங்கிவிட்டு வருவான்....எப்போது அது எழுதப்பட்டது. தேதி தெரிந்தால் தேடி பார்க்கலாம்.
எஸ்...எஸ்..வந்துவிட்டது. என் நண்பர் ஒருவருக்கு கூட மெயில் அனுப்பியிருந்தேன். சென்ட் ஐட்டம்ஸில் தேடி தேதியை கண்டு பிடித்து பதிவை நெருங்கிவிட்டேன்.
இதோ பதிவு பத்து - பத்து.

*********
சுஜாதா இல்லாத முதல் புத்தாண்டு - 2009. சுஜாதா இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார்?

*********

இந்த பதிவை படித்துவிட்டு நானும் என் நண்பர்களும் மகாபலிபுரத்திலும் திருவான்மியூர் ஜங்க்ஷனிலும் நின்றுகொண்டு ஈ.சி.ஆர்.க்குள் நுழையும் பஸ் ஆட்டோ லாரி கார் இப்படி சகல வாகங்களையும் நிறுத்தி வயது பெண்களை எல்லாம் இறக்கிவிட்டு சமூக சேவையில் ஈடுபட்டோமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது நான் கூட இந்த பதிவை படித்துவிட்டு ஒரு கதை எழுதியிருந்தேன். ஈ.சி.ஆரின் மர்மங்களை ஈஸியாக புரிந்துகொள்ள.

ஐய்யோ நான் லோக்கல் இல்லீங்கோ அதுக்கும் கீழ தர டிக்கெட்!!!

*********

நீ சிரித்தால் சிம்லா என்றேன் தோழியிடம். அவள் கோபித்துக்கொண்டு போய்விட்டாள். பிறகு தான் தெரிந்தது. தோழியின் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அழகிய வடநாட்டு பெண்ணின் பெயர் சிம்லா என்று. இப்போது சிம்லாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் நீ சிரித்தால் காவேரி என்று.


*************

சிலர் எழுத்துக்கூட்டி எழுத ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே மேதாவி எழுத்தாளர் ஆகிவிடவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். வார்த்தை பிரயோகங்கள் பயமுறுத்தும்.
உண்மையான மன உணர்வுகளை பகிரவும் புரிந்துகொள்ளவும் மேதாவித்தனமான மொழி அவசியமில்லையே. காக்கை - நெகிழ்வு.

*************
மேலும் வாசிக்க...

Wednesday, October 20, 2010

முதலாளிகள் ஒழிக!!!

வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய வீட்டில் எச்சில் பாத்திரம் கழுவுவதை விட அலுவலகங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை அவர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கே அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.

வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதென்பது எனக்கு கடுகளவும் பிடிக்காத ஒன்று. முடிந்தவரை என் துணிகளை நானே துவைத்துக்கொள்வேன் அல்லது எந்திரத்திடம் சமர்ப்பித்துவிடுவேன். பெரும்பாலானவர்களுக்கு வீட்டு வேலைக்காரிகள் மேல் அதிர்ப்தியே மிஞ்சுகிறது. காரணம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதில் தொடங்கி சம்பளம் கடன் வாங்குவது வேலைகளில் பொறுப்பின்மை நம்பகத்தன்மை குறைபாடு என்று ஏராளம்.

என் நண்பர் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்தாள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வாள். வேலையும் ஒழுங்காக செய்வதில்லை. மேலும் சம்பளம் குறித்து அடிக்கடி சண்டை போட்டும் வந்தாள். நண்பரும் மனைவியும் வேலைக்கு போவதால் வேலைக்காரியை நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் ஏதோ ஒரு அல்ப சண்டை பெரிதாகி வாய்ச்சவடாலில் முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நண்பருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வேலைக்கார அம்மையாரின் கணவர் ஏதோ இயக்கத்தில் இருக்கிறார் போலும். தன் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாய் என் நண்பன் மீது பொய் புகார் கொடுத்துவிட்டார்கள். புகார் குறித்து நடைப்பெற்ற கட்டப்பஞ்சாயத்தில் இருபதாயிரம் வரை பேரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறைய சம்பவங்கள். ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள் என்று நாம் கருதும் மேன்மைபொருந்தியவர்களின் அதிகாரம் இப்படி ஓங்குகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு ஆள் வைப்பதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.

அதே நேரம் அப்பாவியாய் பிழிய பிழிய வேலை வாங்கப்படும் வேலைக்காரிகள் சில சமயம் முதலாளியின் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகி வதை படும் அவலமும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது.

வீட்டு வேலை செய்பவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினராய் இருப்பவரை வேலைக்கு அமர்த்தும் போது சங்கத்து விதிகளை மதித்தாக வேண்டும். இல்லையென்றால் என் சங்கத்து ஆளை அடித்தது யார் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் நேர்மையாக உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்களை நான் அறிவேன். என் வீட்டுக்கு பால் போடும் அம்மாவின் மகன் என்ஜினியரிங் படிக்கிறான். அவர்கள் யார் மீதும் பொய் புகார் கொடுத்து ஏமாற்றி பணம் கரந்து தன் மகனை படிக்க வைக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பி தன் அடுத்த தலைமுறையை ஒரு படி மேலே உயர்த்திவிடவேண்டும் என்ற ஒரே முனைப்போடு உழைத்திருக்கிறாள்.சாதித்திருக்கிறாள்.

முன்பெல்லாம் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கு சென்றுவிடுவதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. படிப்புக்கேற்ப ஊதியமும் பதவியும் உயர்த்தி தரப்படுகிறது. ஞாயமான சம்பளம் பாதகமற்ற ஓர்க் கல்சர் என்று பெண்கள் பலரும் இவ்வேலைக்கு வருகிறார்கள்.

சிலர் எழுதக்கூடும் "பெண்கள் சுதந்திரமாக முதலாளி அம்மாவின் ஆடைகளை துவைத்து காற்றோட்டமாக அக்கம்பக்கத்து வீட்டு கதைகள் பேசியபடி கொடியில் உலர்த்தி மகிழ்வதும் முதலாளியின் கழிப்பறையை இனிமையான திரையிசை பாடலை இசைத்தபடி கழுவிவிட்டுக்கொண்டும் திரிந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள் இன்று கண்ணாடி கட்டடங்களுக்குள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இரண்டு கையில் டிரேயை தூக்கிக்கொண்டு போகிற போது அமெரிக்க ஏகாதிபத்திய விலங்கு அவர்கள் கைகளை பிணைத்திருக்கிறது. ".

அடுத்து வீட்டுவேலைக்காரிகள் பற்றிய இலக்கியம் வரும். அதிலே அந்த காலத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாகவும் சொர்க்கமாகவும் பூந்தோட்டமாகவும் இருந்ததாக எழுதி இப்போது கண்ணாடி கட்டிடங்களுக்கு அவர்கள் சுருண்டுவிட்டதாக அழகிய தமிழில் பிழிய பிழிய வடிக்கப்பட்டு வெளிவரும். நிறைய கற்பனைகள் கொடுக்கும் கரு இது. யாரேனும் தொடங்கலாம்.

அமெரிக்க தொழிற்சாலைகள் வரக்கூடாது புதிய தொழில்கூடங்கள் தமிழ்நாட்டில் துவங்கக்கூடாது ஐ.டி. கம்பெனிகளால் விலைவாசி ஏறுகிறது அதனால் எல்லா ஐ.டி. கம்பெனியையும் இழுத்து மூடு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவனுக்கு சொந்தமாக கார் இருக்கிறதா உடனடியாக கார் தொழிற்சாலைக்கு சீல் வை என்று ஒவ்வொருவரும் தொழிற்புரட்சிக்கு எதிராக கிளம்புவார்களானால் வேலைக்காரிகள் இன்னும் பணக்காரர்களின் உள்ளாடையை துவைக்கும் கௌரவமான இந்திய முதலீட்டில் இயங்கும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டிவரும்.

ஒருவர் என்னிடம் சொன்னார். வெறும் ஆறாயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு அந்நிய நாட்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்களாம். அதன் முதலாளி நம்மை பார்த்து "ஆறாயிரம் ரூபாய்க்கு கூட வக்கில்லாம தானே என் கிட்ட வேலைக்கு வந்த?" என்று கேட்டால் நாம் எங்கே கொண்டு போய் நம் இந்திய திருமுகத்தை வைத்துக்கொள்வோம். எல்லோருக்கும் இந்திய அரசாங்கம் வேலையோ அல்லது அலவன்சோ கொடுக்க முடியுமா?

தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டிய நாம் சில சமயம் முதலாளிகளே இருக்கக்கூடாதென்றல்லவா போராடுகிறோம். போபால் விஷவாயு விபத்தில் மிக குறைந்த தண்டனை அதுவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது குறித்து எரிச்சலடைகிறோம். முதலாளிகள் லாபத்தை மட்டுமே தங்களுக்கு வரவாய் வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மேல் கருணை காட்டவில்லை என்று கோபப்படுகிறோம். இனி மேல் முதலாளியே இருக்கக்கூடாதென்று போர்க்கொடி தூக்குகிறோம். அடப்பாவமே. உலகிலேயே மட்டமான சேப்டி ஸ்டாண்டர்ட்ஸோடு இயங்கும் ஒரு மாபெரும் திறந்தவெளி தொழிற்சாலை - இந்திய ரயில்வேஸ். எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள். சொல்லுங்கள். எத்தனை மந்திரிகள் பதவி விலகினார்கள். எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். விபத்து, விபத்து தானே என்று இழப்பீடு வழங்கியதும் பிழைப்பை பார்த்துக்கொண்டு போய்விடுகிறோமே ஏன்? அது பொதுத்துறை. உங்களின் ஆசையும் எல்லாம் பொதுத்துறை ஆகிவிடவேண்டும் என்பது தானே. பிறகு ரயில்வே கக்கூஸ் போல் இந்த தேசமே நாற்றமடிக்குமே பறவாயில்லையா?

போபால் விஷவாயு கசிவு ஒரு விபத்து. ஒரு விபத்துக்கு என்ன காரணமாக இருக்க முடியும். அறியாமையினாலோ அஜாக்கிரதையாலோ தான் விபத்து நேரிடும். அதற்கான தண்டனை வழங்கிவிட்டது நீதிமன்றம். ஆனால் அரசாங்கம் அந்நிறுவனத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்கும் முன்பே விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசித்து அதிக இழப்பீடு வழங்கினால் தான் இந்தியாவில் தொழில் செய்ய முடியும் என்று அக்ரிமென்ட் போட்டிருப்பார்களேயானால் ஞாயமான இழப்பீடுத் தொகை பெற்றிருக்க முடியும். மற்றபடி முதலாளியை தூக்கில் போடு ஓபாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரி என்பதெல்லாம் சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாது.

சட்டத்தையே மாற்றவேண்டும் என்பீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு வேளை நாளை காரில் சென்றுகொண்டிருக்கும்போது எவனாவது வேண்டுமென்றே குறுக்கே விழுந்து இறந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூக்கில் போடுவார்கள். ஞாயம் நீதி நேர்மை வென்றுவிடும்? சமத்துவம் நிலைநாட்டப்படும். சர்வாதிகார சட்டத்தில் தான் அதற்கு சாத்தியமிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரிய உண்மை.

இன்று ஐ.டி. துறை பெரிய புரட்சி என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். நாம் இங்கே செய்வது என்ன? அமெரிக்காகாரன் தின்ற தட்டை மலிவு விலையில் கழுவி வைக்கிறோம்.

இதை கேள்விப்பட்டவுடன் அவர்கள் "இது என்ன மேட்டிமை அதிகார வர்க்கத்தின் கொடுங்கனவு. அமெரிக்கர்கள் தின்ற தட்டை நாம் மலிவு விலையில் கழுவுவதா? உடனடியாக எல்லா ஐ.டி. கம்பெனி மீதும் கல்லெறிந்து அமெரிக்க நிறுவனங்களை அடித்து நொறுக்குவோம் வாரீர் " என்று போராடக்கூடும். அப்படி போராட முன்வரும் போராளியே இந்தியாவில் கழுவ தட்டே இல்லையே அதை பற்றி என்றேனும் யோசித்தாயா நண்பா?

நாம் அயல் நாட்டுக்கு நம் தட்டுகளை அனுப்பவேண்டாம். குறைந்தபட்சம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் அளவிற்கு இந்தியாவில் கழுவ தட்டுகள் இருக்கிறதா?

வீடு கட்டுகிறானே அவனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?
நெசவு செய்பவனுக்கு உடுத்த துணி இருக்கிறதா நோய்களை குணமாக்கும் டாக்டருக்கு நோயே இல்லையே போன்ற சித்தாந்தங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் அடிமைத்தனமும் இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் குறைந்துவிட்டது.

இந்தியாவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்தால் சராசரியான லாபம் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முதலாளிகள் கொளுக்கிறார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? முதலாளிகள் மேல் அல்ல. ரயில்வே டாய்லெட் நாற்றமடிக்க யார் காரணமோ அவர்களே தான் முதலாளிகள் கொளுக்கவும் காரணம்.

அம்பானி வீடு கட்டினால் அவருக்கு எதிராக துப்புவதை விட அவர் வீடு கட்டும் அளவுக்கு பணம் எப்படி சம்பாதித்தார்?நேர்மையாக சம்பாதித்தாரா? குறுக்கு வழியில் சம்பாதிக்கவிட்டது யார்? இனி மேல் இப்படி ஒரு குறுக்கு வழி அம்பாசமுத்திர அம்பானி வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?காங்கிரஸ் அரசு கவிழ வேண்டுமா? அடபோயா.

முதலாளிகளை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பதும் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் "முதலாளிகளுக்கு சொம்பு தூக்கும் மன்மோகன் ஆட்சியில் தான் இந்த அவலம்" என்று வெறும் மனிதர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நம் இந்திய ஜனநாயகத்தில் சட்டத்தில் நடைமுறையில் Frameworkல் எங்கே கோட்டை விடுகிறோம் என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய யாரேனும் போராடுவார்களேயானால் நான் முதல் ஆளாக நின்று அகிம்சை வழியில் கொடி பிடிக்க தயார்.

உண்மையில் வறுமையையும் பிணியும் போக தொழில் முன்னேற்றம் அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அது பெருமளவு களைந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். முதலாளிகளின் சுரண்டலை தடுப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் நம் போராட்டம் ஒளியேற்றும் மெழுகு. இல்லையேல் அதுவே சிதை மூட்டும் கொள்ளி.

அறிமுகங்கள்


பூமி வெப்பமாதல் குறித்து காவேரி கணேசின் பக்கங்கள்


வருடங்களுக்கு கூட தமிழில் பெயர் இருக்கிறது தெரியுமா?


தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும்....

களவாணித்தனமாய் கல்வி விற்போம்/வாங்குவோம் வாருங்கள்.

எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும் - கடிக்க முறுமுறுக்க.

கடவுளெனும் தொழிலாளி - சீரியஸ் போலீஸ்.
மேலும் வாசிக்க...

Tuesday, October 19, 2010

கள்ளக்காதல் - வலைச்சரம் #2

கள்ளக்காதல் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். காதலென்று வந்த பிறகு கள்ளக்காதல் என்ன நல்ல காதல் என்ன?

அறுபது வயதுக்குட்பட்ட யார் கொலைசெய்யப்பட்டாலும் காவல் துறை கள்ளக்காதல் என்ற கோணத்தில் விசாரிக்க தவறுவதேயில்லை. பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு கள்ள உறவுகளே காரணமாய் இருப்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.

தினத்தந்தியில் தொடர்ந்து கள்ளக்காதல் செய்திகளை விரும்பி வாசிக்கும் டீ கடை டக்கால்டி ரொம்ப வருத்தப்படுகிறார். சமுதாயம் சின்னாபின்னமாகிவிட்டதாம். அழுகிறார். பெண்கள் எல்லாம் ஒழுக்கம் தவறி தொட்டு தாலிகட்டிய கணவனையே கொன்றுவிடுவதாய் வேதனைப்படுகிறார்.

இப்படி வேதனைப்பட்டு புலம்புகிறவர்களை நாம் இரண்டு கோஷ்டிகளாக பிரிக்கலாம்.

1. கள்ளக்காதலை கண்டு புலம்புகிறவர்கள்.
2. கள்ளக்காதலால் விளையும் கொலைகளை கண்டு புலம்புகிறவர்கள்.

இரண்டும் பிரிவுக்கும் கோட்ஸேவுக்கும் காந்திக்குமான வேறுபாடு உண்டு. ஹிட்லருக்கும் மண்டேலாவுக்குமான வேறுபாடு.

கள்ளக்காதலில் ஈடுபடுவர்களை பாவிகள் என்று நீங்கள் கருதினால் நீங்கள் ஒரு வடிகட்டிய பாஸிஸ்டு.

இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கள்ளக்காதல் பற்றி எப்போதாவது பேச முற்பட்டால் முதலில் இந்த இரண்டில் நீங்கள் எந்த கோஷ்டி என்று முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக ஒருவனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அவன் அலுவலகத்தில் ஒரு பெண் (வனிதா) சுமாராகத்தான் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு அவள் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வந்துவிடுகிறது. வரக்கூடாதென்று சொன்னால் நீங்கள் ஒரு பாஸிஸ்டு. வரும். ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கும்போது ஈர்ப்பு வரும். வரவே இல்லை என்றால் நீங்கள் சித்த வைத்திய சாலையை அணுகுவது உசிதம்.

வந்தும் அதன் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு தொடராமல் இருப்பவன் புத்திசாலி. - ஒதுங்கிக்கொள்ளலாம்.

பின்விளைவுகளை சமாளிக்கத் தெரிந்தவன் பாக்கியசாலி. -
இறங்கி கும்மி அடிக்கலாம்.

சரி ஹீரோவுக்கு வனிதா மேல் ஈர்ப்பு. அவள் போகும்போது வரும்போது கவனிக்கிறான். அவளையே பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவளோடு பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இரவில் தன் மனைவியோடு புணரும்போது அவளையே நினைத்துக்கொள்கிறான். இதுவரை ஹீரோவுக்கும் வனிதாவுக்கும் இடையே இருப்பது கள்ளக்காதலா?

நெவர்.

அடுத்து ஒரு படி மேலே. வனிதாவும் ஹீரோவை கவனிக்கிறாள். வனிதா திருமணம் ஆகாதவள். ஹீரோ மேல் அவளுக்கும் ஒரு ஈர்ப்பு வருகிறது. இருவரும் கேபிட்டேரியாவில் சந்தித்து பேசுகிறார்கள். நம்பர் பரிமாறுகிறார்கள். செல்போனில் பேசிக்கொள்கிறார்கள். அவன் அவள் அழகை வர்ணிக்கிறான். அவள் அதையே விரும்புகிறாள். இருவரும் ஒரு நாள் சினிமாவுக்கு போகிறார்கள். அவன் அவளுக்கு பூ வாங்கிக்கொடுக்கிறான். அவளும் அதை ஒரு மனதாக தலையில் வைத்துக்கொள்கிறாள் - திருமணம் ஆன ஆணோடு ஒரு பெண்ணுக்கு என்ன சகவாசம் என்று கேட்பவரா நீங்கள். நீங்களும் ஒரு பாஸிஸ்டு தான்.
தன் மனம் விரும்பிய எந்த ஒரு ஆடவனோடும் இச்சை வளர்த்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.

இப்படியே அவர்களது தொடர்பு வலுவடைந்து தனியாக சினிமா பீச் என்று சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சினி ஞாயிறுகளில் ஹீரோ வனிதாவுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். ஹீரோ வனிதாவை குஷிப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் . இப்போது இது கள்ளக்காதலா? லேசா. லைட்டா?.ஓ.கே.

இனி ஹீரோ மனைவி வனிதா இவர்கள் மூவரும் கள்ளக்காதல் கொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

முதலில் வனிதா கொலைசெய்யப்படுகிறாள். வனிதாவை ஹீரோ அல்லது அவனது மனைவி கொன்றிருக்கவேண்டும். முதலில் ஹீரோ வனிதாவை கொன்றுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

ஹீரோ எதற்காக கொலை செய்வார்?

பொதுவாக இரண்டு காரணங்களுக்காக கொலைகள் செய்யப்படுகின்றன. ஒன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள இன்னொன்று பழி வாங்க.

#1 - பாதுகாப்பிற்காக கொலை செய்தல்.

மனைவிக்கு விஷயம் தெரியாது. ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை வனிதா ஒரு நாள் கண்டுபிடிக்கிறாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறாள். ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் ஹீரோ திருமணமானவன் என்று தெரிந்தும் வனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாரு வற்புறுத்துகிறாள். அதே சமயம் தன்னுடைய இந்த உறவு வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார் ஹீரோ (த்தா...அஞ்சுறாராமா? ஏன் அவ கூட சுத்தும் போது அஞ்சலையா? என்று கேட்பவரா நீங்கள். நீங்கள் ஒரு அறைகுறை பாஸிஸ்டு.கூடிய விரைவில் முழு பாஸிஸ்டு ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது).

அல்லது வனிதா ஹீரோவோடு சுற்றிய புகைப்படங்களை கைப்பற்றி அதை ஹீரோவின் மனைவிக்கு அனுப்பப்போவதாக பயமுறுத்தலாம். பிளாக் மெயில் செய்யலாம்.

இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் ஆபத்தில் சிக்கிவிட்டதாக ஹீரோ உணர்ந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை செய்யலாம்.

இங்கும் ஒரு முரண். பணக்காரர்கள் இதே ரீதியில் கொலை செய்வதுண்டு. ஆனால் தப்பித்துவிடுவார்கள். சட்டம் நம் கையில். ஆனால் ஏழைகள் அழுதபடியே சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கதற கதற தீர்ப்பிடப்படுவார்கள். நாம் தினத்தந்தியில் படித்து (ஒக்கால படுத்த இல்ல சாவு) என்று சபிப்போம்.

மேற்சொன்ன சினாரியோவில் கள்ளக்காதலுக்காக கொலை நடந்ததா? ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை நடந்ததா? ஆபத்தை ஏற்படுத்தியது கள்ளக்காதல் அல்ல. நமது மனது. மூளையை நம்பி வாழாமல் மனதையும் சென்டிமென்டையும் நம்பி ஏமாந்து போகும் தப்பு தப்பாக முடிவெடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன மனம். அந்த மனம் தான் வனிதாவை திருமணத்திற்கு வற்புறுத்த வைத்தது. அவள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அல்லது இதுவரை செய்தது பாவம் என்று ஒதுங்கி வாழ்ந்திருக்கலாம்.

போட்டோவை காட்டி வனிதா மிரட்டியிருந்தால் ஹீரோ என்ன செய்திருக்க முடியும்?

கிரைம். இங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கள்ளக்காதல் என்பது இயல்பான ஒன்று. அதை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியாதவர்கள் தொடர்கிறபோது புத்திசாலித்தனமாக கையாளவேண்டும். கள்ளக்காதல் பற்றிய போதிய புரிதலும் அதன் எல்லைகளும் தெரியாமல் வெறும் மனதைக்கொண்டு தங்களை இயக்கி மூளையை கழட்டி வைத்துவிட்டு செயல்படும் சிலர் இப்படி தங்களையும் எதிராளியையும் அவர்களின் தலைமுறையையும் துயரத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு.

இங்கும் பணம் பிரதானம். ஏழைகள் அறியாமையில் ஏதோ ஒரு ஆத்திரத்தில் படாரென கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் தண்டனை அனுபவித்து தங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கி தங்களை சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்குகிறார்கள்.

முன்பெல்லாம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லிப்பார்த்தார்கள். இப்போது பாதுகாப்போடு உறவுகொள் என்கிறார்கள். கள்ளக்காதலுக்கும் அதே தான். பாதுகாப்போடு உறவு கொள். இல்லையா அதிலிருந்து வெளியே வர கொலை மட்டுமே தீர்வல்ல. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் இல்லை என்று ஸ்லாகிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். அங்கே கலாசாரம் என்ற கன்ட்ராவி கிடையாது. பாதுகாப்பாக கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். அற்ப வீம்புக்கு கத்தியை தூக்கி கோடாரியை தூக்கி கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் ஜெயிலில் வாட நம்மை போல் அயல் நாட்டினர் என்ன முட்டாள்களா?

மேலும் அங்கே இது போன்ற சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ள தீர்த்து வைக்க வழி இருக்கிறது. இங்கே காவல் நிலையத்திற்கு போய்
"அந்த பொண்ணோட நான் தெரியாம தொடர்பு வச்சுகிட்டேன். இப்போ அவ போட்டோ எடுத்து என்ன மிரட்டுறான்னு சொல்லிப்பாருங்க. உங்க நிலைமை அதோ கதி தான்."

எனவே கள்ளக்காதலை இன்னொரு நூறு ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் தவிர்ப்பது நலம். இல்லையேல் பாதுகாப்போடு புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.

என் மனதில் இந்த டாப்பிக் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இப்போ கண்ண கட்டுது. ஆக குட் பை.

டிஸ்கி: இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.

---------------------

அறிமுகங்கள்

1. எனக்கு சத்யராஜ் மிக பிடித்த நடிகர். மிக பிடித்த பேச்சாளர் இல்லை. அவரது நக்கல் நடிப்புக்கு நான் ரசிகன். குறிப்பாக எல்லா வித கேரக்டரும் பொருந்திப்போகிற ஒரு கதாபாத்திரம் அவர். அவரது பெயரில் ஒரு வலைப்பூவா? அதிக பதிவுகள் இல்லாத போதும் இவரது ஆரம்பமே அசத்துகிரது. தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

திரும்பவும் Dr. விஜய்

2.சில முதல்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வதுண்டு. முதல் முத்தம் முதல் காதல் முதல் கன்ட்ராவி இப்படி. ஆனால் இவர் தொகுத்திருப்பது பாடகர்களின் முதல் பாடல்கள். அருமையான இந்த தொகுப்பு வியக்க வைக்கிறது.

பாட்கர்களின் முதல் பாடல்கள்.

3. இந்த பதிவர் ஒரு மாணவி என்று நினைக்கிறேன். இவர் விடுத்த கொலைமிரட்டல் படித்தால் மிரண்டு போய்விடுவீர்கள்.

4.நமீதா திரைவிமர்சனம். ஹாப்பாயில். என்று அதிரடியாக கடையில் அசத்தி வருபவர் கட்ஸ்.

5.மங்குனி அமைச்சரை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபமாக பெண்களின் வாக்குகளை அள்ளும் விதமாக அவர் எழுதிய ஒரு உஷார் பதிவு விழிப்புணர்வு.

6. கிரைம் பிரியரான எனக்கு இவரது துப்பறியும் பதிவுகள் நல்ல தீனி.

அடுத்த பதிவில் சாரு என்ற புதிய பதிவரையும் லக்கிலுக் என்ற கத்துகுட்டியையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Monday, October 18, 2010

சவால்!!!

எனக்கு சவால் என்றாலே அலர்ஜி. அதுவும் கதை எழுதுவதில் ஒரு சவால் என்றால் ஓடியே விடுவேன். நண்பர் பரிசல் ஒரு சவால் சிறுகதை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் அவரது அந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.
75+ கதைகள் வந்திருப்பதாக சொல்லியிருந்தார். பெரிய விஷயம். 75 பேரை கதை எழுத வைப்பதென்பது சாதாரண விஷயமல்ல.

பரிசல் சிறுகதை போட்டி பற்றி ஒரு கிசு கிசு. நடுவர் குழுவில் கேபிள் சங்கர் இருக்கிறார்.உண்மையா?

எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த ஒரு/ஒரே கலை வடிவம் கதை. என் துர்ரதிர்ஷ்டம் என்னவென்றால் கதையை நான் முதல் முதலில் நுகரத்தொடங்கியது திரைப்படங்களில். அதுமுதல் கதை என்றால் அது திரைப்படத்தில் வருவது மட்டும் தான் என்று அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்தேன் . திரைப்படங்களில் கதைகள் எப்படியெல்லாம் சொல்லப்படுகிறது என்பதை மட்டுமே ஆர்வத்தோடு கவனிக்கத்தொடங்கினேன்.

நான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கத்துவங்கியது பதினொன்றாம் வகுப்பு தொடக்கத்தில் தான். அதுவரை நான் அதிகபட்சம் ஐந்து திரைப்படங்கள் பார்த்திருப்பேன். சிறு வயதில் என் நண்பர்கள் பெரும்பாலானோர் தியேட்டருக்கு போய் திரைப்படம் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு வகுப்பிலோ அல்லது விளையாட்டு நேரத்திலோ அந்த படம் பற்றி பேசுவார்கள். முதலில் அவர்களை ஈர்ப்பது திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளாக இருக்கும். "ரஜினி எப்படி அடிச்சாரு இல்ல?" என்று தான் பேசத் தொடங்குவார்கள். சில நண்பர்கள் பாடல்காட்சிகளையும் நடனத்தையும் துல்லியமாக கிரகித்து அதையே செய்துகாட்டுவார்கள். விதிவிலக்கில்லாமல் எல்லோருக்கும் காமெடி காட்சிகள் பிடிக்கும். அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி சிரித்துக்கொள்வார்கள். அதில் வரும் பிரபலமான வசனத்தை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து மகிழ்வார்கள்.

எனக்கோ ஒரு திரைப்படத்தில் ஆச்சரியத்தையும் வியப்பையும் தருவது அத்திரைப்படத்தின் கதை மட்டுமே. ஏன் எனக்கு பாடல் நடனம் சண்டை காமெடி நடிகை நடிகர் இவர்களை தாண்டி கதையின் மீதே அதிக ஆர்வமிருக்கிறது? அப்படி கதையின் மீது வினோதமாக காதல் கொண்டவன் அநேகமாக என் வகுப்பில் நான் மட்டும் தான். அமரன் என்றொரு திரைப்படம் வந்தது. அந்த திரைப்படம் வந்த புதிதில் எல்லா நண்பர்களும் ரௌடிகள் போலவே உலா வந்தார்கள். அவர்களுக்கு கதாநாயகனின் ஹீரோயிசத்தின் மேல் ஈர்ப்பு. நானோ அப்படி ஒரு ஹீரோசியிசம் கலந்த கதாபாத்திரத்தை வடித்த கதாசிரியன் எப்படி யோசித்திருக்கிறான் என்று வியந்துகொண்டிருப்பேன்.

எனக்கு பாட வராது. நடனம் வாய்ப்பேயில்லை. நன்றாக பேசுவேன். நாடகங்கள் நடித்திருக்கிறேன். பிரதான பாத்திரங்களை எனக்கே அளிப்பார்கள் காரணம் நான் குரல் உயர்த்தி தெளிவாக வசனம் பேசக்கூடியவன் என்பதால். என் பள்ளியில் பெரும்பாலான நாடகங்களில் பெண் கதாபாத்திரம் தான் இறுதியில் ஒரு பக்க வசனம் பேசி மற்றவர்களை எல்லாம் திருத்தி சுபமாக நாடகத்தை முடித்து வைக்கும். நான் படித்ததோ ஆண்கள் பள்ளிக்கூடம். பிறகு என்ன எனக்கே பெண் வேடம் போட்டு பக்கம் பக்கமாக வசனம் கொடுத்து பேசச்சொல்லி விடுவார்கள். அந்த காலகட்டங்களில் நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஜனரஞ்சகமாக எளிதில் அனைவரையும் கவரும் நடனம் பாடல் சண்டை நகைச்சுவை இவைகளை விட கதை நடிப்பு என்பதிலேயே என் நாட்டமிருந்தது.

வார இதழ்களில் குறிப்பாக குடும்பமலர் குமுதம் இவைகளில் வரும் சிறுகதைகளை காட்டிலும் சினிமா கதை தான் உசத்தி என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

சுஜாதாவே கூட எனக்கு முதலில் எழுத்தாளராய் அறிமுகமாகவில்லை. சுஜாதா புத்தகம் எழுதியிருப்பார் என்றெல்லாம் எனக்கு அப்போது அபிப்ராயம் இல்லை. அவர் ஒரு சினிமா வசனகர்த்தா. ஒரு நாள் இணையத்தில் மணிரத்னம் பற்றிய ஒரு கட்டுரையில் சுஜாதா வந்தார். அவருடைய ரோஜா திரைப்படத்தில் சுஜாதாவின் கதை உபயோகப்பட்டதை குறித்து எழுதப்பட்டிருந்தது. அப்போது தான் சுஜாதா சிறுகதை எழுதுபவர் என்ற அரிய தகவலை அறிந்துகொண்டேன். நான் முதல் முதலில் படித்த சுஜாதா சிறுகதை 'அரிசி'. அதுவும் இணையத்தில் தான். esnips.com

அதன் பிறகு தொடர்ச்சியாக அவருடைய கதைகள் அனைத்தையும் இணையத்திலேயே வாசித்தேன். ஈபுக் வாங்கித்தான் படித்தேன். ஒரு புத்தகம் மூன்று டாலர் அல்லது ஐந்து டாலர்.

குடும்பமலர் குமுதம் படித்த காலகட்டங்களில் கூட அதில் வரும் சிறுகதை போல் நாமும் ஒன்று எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்ததே இல்லை. எழுதினா சினிமா கதை தான்டா என்று எனக்கு நானே தொடை தட்டி சவால் விட்ட காலம். எப்போதும் சினிமா கதைகள் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அப்போதைக்கு என் மிகப்பெரிய லட்சியமே சினிமாவுக்கு கதை எழுதுவது. சினிமாவுக்கு நல்ல கதை ரெடியானால் உடனே நான் இயக்குனர் ஆகி கேமராவை பிடித்தபடி போஸ் கொடுக்கலாம் என்ற சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் என் சினிமா + கதை மோகம் வளர்ந்துகொண்டே போனது.

சினிமாவுக்காக என் மனதுக்குள்ளேயே ஒரு கதையை கட்டமைப்பேன். என் நண்பர்கள் சிலரிடம் சொல்லி, கொட்டாவி விடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதம் ஒரு திரைப்படத்திற்கான கதையை மனதில் மறுபடி மறுபடி சொல்லிச்சொல்லி மெருகேற்றுவேன். எந்த இடத்தில் பாடல்கள் வரவேண்டும் எங்கே சண்டை யார் நடிகர் என்றெல்லாம் மனதில் கற்பனை செய்துகொள்வேன்.ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் அனுக்ஷாவை நினைத்து இன்புறுவதை போல்.

இப்போது நினைத்தால் அந்த சம்பவங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு கதை. உதாரணமாக அப்போது டெஸ்ட் டியூப் பேபி பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். உடனே அதையே கருவாக வைத்து ஒரு கதை இரண்டே வாரத்தில் தயாராகிவிட்டது. ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்.

மாமியாரை மாமனாரை மருமகனை மருமகளை திருடனை பிள்ளையை தாயை தகப்பனை என்று ஓயாமல் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கிளைமாக்ஸில் திருத்திக்கொண்டே வரும் குடும்பமலர் குமுதம் சிறுகதைகளை தாண்டி உண்மையில் அறிவார்த்தமான உணர்வுபூர்வமான பிரமாண்டமான விறுவிறுப்பான ஒரு கதை சொல்லவேண்டுமென்றால் அது சினிமா தான் என்ற என் ஆழமான நம்பிக்கையை பளீரென உடைத்தெறிந்தவர் சுஜாதா.

சுஜாதாவை படிக்கும் வரை சிறுகதை என்ற வடிவத்தின் மீது எனக்கு நாட்டம் இருந்ததே இல்லை. ஆனால் சுஜாதாவின் முதல் சிறுகதை படித்தபோது சினிமாவில் சொல்லப்படும் கதைகளை விட மிக நேர்த்தியான வலுவான நுட்பமான பிரமாண்டமான கதைகளை சிறுகதை வடிவத்தில் சுருஷ்டிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதனால் தானோ என்னமோ இன்னும் சுஜாதாவை நிறைய பேர் வாத்தியார் என்கிறார்கள்.

வெறும் கதை என்றால் அது சினிமா கதை தான் என்ற மிக பாமரத்தனமான என் எண்ணத்தை அகற்றி கதை சொல்லும் ஆர்வத்திற்கும் வீச்சுக்கும் சிறுகதை என்ற வடிவம் நல்ல வடிகால் என்று உணர்த்தியவர் சுஜாதா. சுஜாதாவை தேடித்தேடி வாசித்தேன். வாசித்துவிட்டு ஏன் நாம் ஒரு கதை எழுதக்கூடாது என்று ஒரு நாள் எழுத உட்கார்ந்தேன். உண்மையில் முதல் கதையை ஒரு வாரம் எழுதினேன்.

திருத்தி திருத்தி எழுதினேன். தப்பு தப்பாய் எழுதினேன். வெறும் ஒன்றரை பக்கம் தான் எழுத முடிந்தது. கதையில் விபத்துக்குள்ளாகும் ஒரு விமானம், எரியும் ஒரு ஊர், ஒரு அப்பாவி குழந்தை, நிறைய பணக்காரர்கள் என இத்தனை பிரமாண்டம். ஆனால் என்னால் எழுத முடிந்ததோ ஒன்றரை பக்கம். வார்த்தை கான்ஸ்டிபேஷன். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது. குழப்பம்.......

ஒன்றரை பக்கம் தான் எழுதினேன். விபத்து எப்படி நடந்ததென்று சொன்னால் விவரணையாக வாய்வார்த்தையாக விளக்கிவிடலாம். அதையே எழுதிக்காட்ட சொன்னால்....விபத்து நடந்த இடத்தில் நான் இல்லவே இல்லை என்று ஓடி வந்துவிடுவேன்.

இதனால் வாசக கோகோகோடிகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என்னவென்றால் சார் கதை எழுதுறதுங்குறது ரொம்ப கஷ்டமான அதே சமயம் யூஸ்லெஸ் ஜாப்.

---------------------

வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுத அழைப்பு வந்தபோது குபீர் என்று வியர்த்தது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி. ஏழு நாள் ஏழு பதிவு. அதுவும் புதிய ஸ்வாரஸ்யமான பதிவர் பதிவுகளை அறிமுகப்படுத்தவேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே சவாலான எனக்கு ஒரு நாளைகு ஒரு பதிவு என்பது சவாலுக்கே சவால்.

எப்படி சமாளிக்கிறேன் என்று பாருங்கள்

ஆசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் என் நன்றிகள்.

என் வலை பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில இடுகைகளை இங்கே திரட்டியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.

முதலிரவில் முதல் கொலை
அதிஷாவால் உதை வாங்கிய உ.உ.

இப்படிக்கு நிஷா
சாவுகிராக்கி
திரிஷாவும் நானும் - தமன்னாவும் நானும்
மீண்டும் மீண்டும் அவன்பார்வை
உதடுகள்

இப்போதைக்கு இது போதும். நாளை சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது